புன்னியாமீன் பி எம்

புன்னியாமீன் பி எம்

வன்முறைகளுடன் சூடுபிடித்துள்ள ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் – புன்னியாமீன்

sarath-jaffna.jpgmahinda_jaffna.jpgஆறாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 26ஆந் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களப் பரீட்சையில் இறங்கியுள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமிருக்கும் இந்நிலையில் (ஜனவரி 18 வரை) தேர்தல் தொடர்பில் 694 முறைப்பாடுகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாக குற்றவியல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்திருந்தார். இதில் சந்தேகநபர்கள் தெரியாத முறைப்பாடுகள் 387 உம் சந்தேகநபர்கள் தெரிந்த முறைப்பாடுகள் 307ம் அடங்கும். சந்தேகநபர்கள் தெரிந்த முறைப்பாடுகளில் 123 முறைப்பாடுகள் விசாரித்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு இதுவரை 4 பாரதூரமான சம்பவங்களாக உக்கம, புத்தளம், வாரியபொல குருநாகல், வெலகெர ஆகிய பகுதிகளில் 4 பேர் தேர்தல் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர். முதலாவது அரசியல் படுகொலை ஜனவரி 12ஆந் திகதி இலங்கையின் தென்மாகாணத்தில் தங்காலை பகுதியில்  இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிச் சு10டு நடத்தப்பட்டதால் குசுமாவதி என்பவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 8 பேர் காயமடைந்தனர். குசுமாவதியின் மரணம் குறித்து கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ குசுமாவதி தனது கட்சி ஆதரவாளர் என்றும்,  இக்கொலைச் சம்பவமானது மிலேச்சத்தனமான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த முதலாவது கொலையைப் புரிந்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் என குற்றஞ் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 17ஆந் திகதி இரண்டாவது அரசியல் தேர்தல் வன்முறை கொலையும் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றுக்கு சென்றுகொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆனந்த சமன்குமார என்ற 19 வயதுடைய இளைஞன்; கொல்லப்பட்டார். இந்த இளைஞன் ஆனமடுவ,  தெனிங்கலவைச் சேர்ந்தவராவார். இந்த இளைஞனுக்கு அஞ்சலிச் செலுத்த ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் வாரியபொலவில் ஜனவரி 18ஆம் திகதி அதிகாலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். தேர்தல் வன்முறையில் இது 3வது கொலையாகும். இச்சம்பவத்தில் எச். எம். தம்மிக்க ஹேரத் (33) என்பவரே கொல்லப்பட்டார். வாரியபொல பிரதேசத்தில் சம்பவ தினம் பத்து பேர் சேர்ந்து தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழுவினர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது தடிகளால் தாக்கியுள்ளனர் எனவும் இதன்போதே தம்மிக்க ஹேரத் என்பவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பலிக்குப் பலி வாங்கும் இத்தேர்தல் வன்முறைக் கலாசாரத்தில் 18ஆம் திகதி இரவு நேரத்தில் பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின் குருநாகல், வெலகதர பிரதேசத்திலுள்ள வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறாக நாளுக்குநாள் வன்முறைக் கலாசாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதுவரை நடந்த 4 கொலைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் இருவரும், பொதுவேட்பாளரின் ஆதரவாளர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும்,  இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான வாய்ப் பேச்சி மோதலாக மாத்திரம் அன்றி ஆயுதப் பிரயோகங்களாகவும் அதிகரித்து  வருகின்றன. கிரெனைட் வீச்சுக்கள், கைத்துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றனவும், கடந்த ஒரு வாரத்துக்குள் அதிகரித்து வருகின்றன. கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்படுதல்,  காரியாலயங்கள் தாக்கப்படுதல்,  என்பன சாதாரண நிகழ்வுகளாக இடம்பெறத் தொடங்கியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். வாகனங்கள்,  வீடுகள் போன்ற உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மக்களின் ஜனநாயக உரிமைகளில் வன்முறையும் ஒன்றா என்று ஐயப்படும் வகையில் இவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தேர்தல் காலங்களில் வன்முறை கலாசாரங்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு பொதுவானவை.  

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் தொடர்பான வன்முறை முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் பொலிஸார் கூறுகின்றனர். சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் 289 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் அதிகமானோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 164 பேர் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர். இதேநேரம், கடந்த 13 ஆம் திகதி பொலநறுவையில் ஆளும் தரப்பு,  எதிர்த் தரப்பு கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட வேண்டிய 21 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹக்கம பகுதியில் பிரசாரக் கூட்டமொன்றிற்கு சென்று கொண்டிருந்த பஸ்லொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. வாரியபொல பிரசார சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த ஒருவர் மீது 6 மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்கி அந்நபரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான 6 சந்தேகநபர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வன்முறைகள் உருவாகுவதை  எக்காரணத்தையிட்டும் எச்சமூகத்தாலும் அனுமதிக்க முடியாது. வன்முறைகள் தலைதூக்காத விதத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள்  வழங்கியுள்ள போதிலும் கூட அந்த அறிவுறுத்தல்கள் உறுதியானவையாக உள்ளனவா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்கு எவரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். தேர்தல் செயலகத்தில் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் உத்தரவுகள் உதாசீனப்படுத்தப்படுவதாகவும்,  இந்த நிலைமையின் கீழ் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊடகங்களை கண்காணிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியின் பணிப்புரைகளை குறித்த ஊடகங்கள் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகங்கள் தொடர்ந்தும் உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால் குறித்த அதிகாரியை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு அரச உத்தியோகத்தர்கள் 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என்ற போதிலும் எவரும் அதனைப் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் வன்முறையில் ஈடுபடுவோர் எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையாளர் விசேட அதிகாரங்களைக் கொண்டவராக விளங்குகிறார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு சுமுகமாக நடை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பணிப்புரைகளை வழங்கும் அதிகாரம் அவருக்குண்டு.

தேர்தல் தொடர்பான சிறு சிறு சம்பவங்களைக் கூட பெரிதுபடுத்தும் விதத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்குவதாக தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விடயத்தில பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதே அத்தகைய அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கும் அறிவுரை ஆகும். சிறு வன்முறைச் சம்பவங்களைப் பெரிதுபடுத்துவது ஊடகங்களுக்கும் அழகல்ல.

தேர்தல் கடமையைப் பொறுத்த வரை எமது தேர்தல் ஆணையாளர் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றவராக விளங்குகிறார். கூடுதலான தேர்தல்களை கச்சிதமாக நடத்தி முடித்த நிர்வாகத்திறன் மிகுந்தவர் அவர். எதுவித பக்கச்சார்புமற்ற விதத்தில் தேர்தல்களை நடத்துவதென்பது மிகுந்த பொறுப்பு மிக்கதாகும். இப்போது நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே அமைந்திருக்கும் என எதிர்பார்க்க முடியும்.

ஜனநாயக நாடொன்றில் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காக உரிமை  மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களது சுயசெயற்பாடுகளுக்குப் பங்கம் விளைவித்தல் என்பது ஜனநாயக உரிமை மீறலாகும். தெற்காசியாவிலே கல்வியறிவில் முன்னணியில் உள்ள எமது இலங்கை இவ்விடயத்தையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.  வன்முறைகள் வாயிலாக எதனையும் சாதித்துவிட முடியாதென்பது யதார்த்தமும் உண்மையாகும்.

மறுபுறமாக தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மீறிச் செயற்படுவதோ அல்லது வன்முறைகளில் ஈடுபடுவதோ ஆரோக்கியமான நடவடிக்கைகளல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் மத்தியில் வெறுப்பும் அதிருப்தியுமே உருவாகும். வன்முறையில் சம்பந்தப்படுவோர் இதனை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தினுள் எதுவிதமான மனமாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. அதற்கு மாறாக மக்களிடமிருந்து வெறுப்பையே சம்பாதித்துக் கொள்ள முடியும். தற்போது இலங்கையிலும் இதுவே ஏற்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் : 06 – புன்னியாமீன் –

sri-lanka.jpgதொடர்ச்சி….

13 அபேட்சகர்கள் போட்டியிட்ட நான்காவது ஜனாதிபதித் தேர்தல்

நான்காவது ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் 1994.11.10ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்திக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஆனால், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே 4வது ஜனாதிபதித் தேர்தலுக்குரிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. (ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை 4 ஆண்டுகள் பூரணப்படுத்திய பின்பு ஜனாதிபதி விரும்பின் இடைக்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு.

4வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1999.11.16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 199.12.21ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும்,  ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் படி பதில் தேர்தல் ஆணையாளர் அவர்களினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின்படி ஸ்ரீலங்கா ஜனநாயகக் குடியரசின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெப்பதற்கான 4வது ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

1. ஜனாப் அப்துல் ரஸ்ஸாக் அப்துல் றசூல்
சின்னம் : தாரசு
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி
2. திரு. அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தனா சின்னம்
சின்னம்: வண்ணத்திப்பூச்சி
கட்சி : மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி
3. திரு. ஆரியவங்ச திசாநாயக்க
சின்னம் : கழுகு
கட்சி : ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
4. திரு. மெஸ்டியகே தொன் நந்தன குணதிலக
சின்னம் : மணி
கட்சி : மக்கள் விடுதலை முன்னணி
5. திரு. கமல் கருணதாச
சின்னம் : லந்தர் விளக்கு
கட்சி : மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி
6. திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சின்னம் : நாற்காலி
கட்சி : பொதுஜன ஐக்கிய முன்னணி
7. திரு. டெனிசன் எதிரிசூரிய
சின்னம் : கத்தரிக்கோல்
கட்சி : சுயேட்டை
8. திரு. மஹிமன் ரஞ்சித்
சின்னம் : அலுமாரி
கட்சி : சுயேட்டை
9. திரு. ரணில் விக்கிரமசிங்க
சின்னம் : யானை
கட்சி : ஐக்கிய தேசியக்கட்சி
10. திரு. ராஜீவ விஜேசிங்க
சின்னம் : புத்தகம்
கட்சி : லிபரல் கட்சி
11. திரு. வாசுதேவ நாணயக்கார 
சின்னம் : மணிக்கூடு
கட்சி : இடதுசாரி ஜனநாயக முன்னணி
12. திரு. ஹட்சன் சமரசிங்க
சின்னம் : வானொலி
கட்சி : சுயேட்டை
13. திரு. விஜேதுங்க முதலிகே ஹரிச்சந்திர விஜேதுங்க
சின்னம் : விமானம்
கட்சி : சிங்களயே மகசம்மத பூமிபுத்திர கட்சி

நிமயனப் பத்திரம் தாக்கல் செய்ததை நோக்கும் போது 3 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட அதிகமான அபேட்சகர்கள் நியமனப்பத்திரம் தாக்கல் செய்தது இதுவே முதற்தடவை. இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மூலமாக 10 வேட்பாளர்களும், சுயேட்சையாக 3 வேட்பாளர்களும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். (முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் திரு. குமார் பொன்னம்பலம் வேட்பாளராக நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த அடிப்படையில் நோக்கும் போது ஜனாப் அப்துல் றசூல் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலொன்றில் போட்டியிட்ட 2வது சிறுபான்மை அபேட்சகராகின்றார்.

4வது ஜனாதிபதித் தேர்தலில் 13 அபேட்சகர்கள் போட்டியிட்ட போதிலும் கூட போட்டி மும்முனைப் போட்டியாகவே (பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி) இடம்பெறுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியால் பலத்த தாக்கமொன்றினை ஏற்படுத்த முடியவில்லை. முன்னணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான நேரடி மோதலாகவே இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அதேநேரத்தில் மேற்படி இரண்டு கட்சிகளும் தவிர ஏனைய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை இழக்கும் என்ற நிலை பரவலாகப் பேசப்பட்டது.

4வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்
மேல்மாகாணம்.

கொழும்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   474,310 (49.18%)
ரணில் விக்கிரமசிங்க    425,185 (44.08%)
நந்தன குணதிலக   44,009  (4.56%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    8,209  (0.85%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,319  (0.14%)
ராஜீவ விஜேசிங்க    1,376  (0.14%)
வாசுதேவ நாணயக்கார    5,000  (0.52%)
டெனிசன் எதிரிசூரிய    1,370  (0.14%)
அப்துல் ரசூல்     1,980  (0.21%)
கமல் கருணாதாச    783  (0.08%)
ஹட்சன் சமரசிங்க     355  (0.04%)
ஆரியவங்ஸ திசாநாயக்க    329  (0.03%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  309  (0.03%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 993,731 (74.32%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   29,197 (2.94%)
செல்லுபடியான வாக்குகள்  964,534 (97.06%)
மேலதிக வாக்குகள்  49,125       

கம்பஹா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   532,796 (56.58%)
ரணில் விக்கிரமசிங்க     353,969 (37.59%)
நந்தன குணதிலக   40,742  (4.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    4,753  (0.50%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,495  (0.16%)
ராஜீவ விஜேசிங்க    1,165  (0.12%)
வாசுதேவ நாணயக்கார    2,102  (0.22%)
டெனிசன் எதிரிசூரிய    1,549  (0.16%)
அப்துல் ரசூல்     1,354  (0.14%)
கமல் கருணாதாச    878  (0.09%)
ஹட்சன் சமரசிங்க     420  (0.04%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    386  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  280 (0.03%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 962,387 (78.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   20,768 (2.16%)
செல்லுபடியான வாக்குகள்  941,619 (97.84%)
மேலதிக வாக்குகள்  178,827      

களுத்துறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   281,217 (52.88%)
ரணில் விக்கிரமசிங்க     217,423 (40.88%)
நந்தன குணதிலக   23,770  (4.47%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    2,721  (0.51%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,279  (0.24%)
ராஜீவ விஜேசிங்க    1,028  (0.19%)
வாசுதேவ நாணயக்கார    1,003  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    1,133  (0.21%)
அப்துல் ரசூல்     796  (0.15%)
கமல் கருணாதாச    608  (0.11%)
ஹட்சன் சமரசிங்க     386  (0.07%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    216  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  229  (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 543,605 (79.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,796 (2.17%)
செல்லுபடியான வாக்குகள்  531,809 (97.83%)
மேலதிக வாக்குகள்  63,794      

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   308,187 (50.29%)
ரணில் விக்கிரமசிங்க     276,360 (45.10%)
நந்தன குணதிலக   15,512  (2.53%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    3,280  (0.54%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,775  (0.29%)
ராஜீவ விஜேசிங்க    1,614  (0.26%)
வாசுதேவ நாணயக்கார    1,065  (0.17%)
டெனிசன் எதிரிசூரிய    1,369  (0.22%)
அப்துல் ரசூல்     1,706  (0.28%)
கமல் கருணாதாச    749  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     639  (0.10%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    265  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  290 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 629,871 (79.28%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   17,060 (2.71%)
செல்லுபடியான வாக்குகள்  612,871 (97.29%)
மேலதிக வாக்குகள்  31,827

மாத்தளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    111,232  (51.42%)
ரணில் விக்கிரமசிங்க     91,944 (42.51%)
நந்தன குணதிலக   7,924  (3.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    902  (0.42%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   951  (0.44%)
ராஜீவ விஜேசிங்க   860  (0.40%)
வாசுதேவ நாணயக்கார   308  (0.14%)
டெனிசன் எதிரிசூரிய   747  (0.35%)
அப்துல் ரசூல்     550  (0.25%)
கமல் கருணாதாச    343  (0.16%)
ஹட்சன் சமரசிங்க     261  (0.12%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    139  (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 149 (0.07%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 222,482 (77.74%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,171 (2.77%)
செல்லுபடியான வாக்குகள்  216,310 (97.23%)
மேலதிக வாக்குகள்  19,288

நுவரெலியா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    147,210 (46.88%)
ரணில் விக்கிரமசிங்க     152,836 (48.88%)
நந்தன குணதிலக   5,879  (1.87%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,021  (0.33%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,698  (0.54%)
ராஜீவ விஜேசிங்க    1,567  (0.50%)
வாசுதேவ நாணயக்கார    812  (0.26%)
டெனிசன் எதிரிசூரிய    1,116  (0.36%)
அப்துல் ரசூல்     531  (0.17%)
கமல் கருணாதாச    555  (0.18%)
ஹட்சன் சமரசிங்க     413  (0.13%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    176  (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   176  (0.06%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 322,987 (81.21%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,997 (2.79%)
செல்லுபடியான வாக்குகள்  313,990 (97.21%)
மேலதிக வாக்குகள்  5,626

தென் மாகாணம்

காலி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    281,154 (54.91%)
ரணில் விக்கிரமசிங்க     195,906 (38.26%)
நந்தன குணதிலக   27,257  (5.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,592  (0.31%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,227  (0.24%)
ராஜீவ விஜேசிங்க    907  (0.18%)
வாசுதேவ நாணயக்கார    952  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    968  (0.19%)
அப்துல் ரசூல்     651  (0.13%)
கமல் கருணாதாச    663  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     357  (0.07%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    175  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  210  (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 521,735 (78.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   9,716 (1.86%)
செல்லுபடியான வாக்குகள்  512,019 (98.14%)
மேலதிக வாக்குகள்  85,248

மாத்தறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    205,685 (54.32%)
ரணில் விக்கிரமசிங்க     139,677 (36.89%)
நந்தன குணதிலக   26,229  (6.93%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,539  (0.41%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,042  (0.28%)
ராஜீவ விஜேசிங்க    997  (0.26%)
வாசுதேவ நாணயக்கார    670  (0.18%)
டெனிசன் எதிரிசூரிய    891  (0.24%)
அப்துல் ரசூல்     639  (0.17%)
கமல் கருணாதாச    543  (0.14%)
ஹட்சன் சமரசிங்க     332  (0.09%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    192  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  202 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 387,221 (75.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,583 (2.22%)
செல்லுபடியான வாக்குகள்  378,636 (97.78%)
மேலதிக வாக்குகள்  66,008

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    120,275 (47.41%)
ரணில் விக்கிரமசிங்க     95,088 (37.48%)
நந்தன குணதிலக   33,739  (13.30%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    733  (0.29%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   700  (0.28%)
ராஜீவ விஜேசிங்க    729  (0.29%)
வாசுதேவ நாணயக்கார    483  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    691  (0.27%)
அப்துல் ரசூல்     346  (0.14%)
கமல் கருணாதாச    421  (0.17%)
ஹட்சன் சமரசிங்க     192  (0.08%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    160  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   121  (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 259,053 (73.84%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,375 (2.07%)
செல்லுபடியான வாக்குகள்  253,678 (97.84%)
மேலதிக வாக்குகள்  25,187

வட மாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    52,043  (46.65%)
ரணில் விக்கிரமசிங்க     48,005 (43.03%)
நந்தன குணதிலக   413  (0.37%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    818  (0.73%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,873  (1.68%)
ராஜீவ விஜேசிங்க    1,368  (1.23%)
வாசுதேவ நாணயக்கார    3,394  (3.04%)
டெனிசன் எதிரிசூரிய    831  (0.74%)
அப்துல் ரசூல்     1,041  (0.93%)
கமல் கருணாதாச    487  (0.44%)
ஹட்சன் சமரசிங்க     552  (0.49%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    340  (0.30%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  403 (0.36%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 117,549 (19.18%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,981 (5.09%)
செல்லுபடியான வாக்குகள்  111,568  (94.91%)
மேலதிக வாக்குகள்  4,038

வன்னி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    16,202  (25.84%)
ரணில் விக்கிரமசிங்க     43,803 (69.87%)
நந்தன குணதிலக   482  (0.77%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    93  (0.15%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   420  (0.67%)
ராஜீவ விஜேசிங்க    456  (0.73%)
வாசுதேவ நாணயக்கார    444  (0.71%)
டெனிசன் எதிரிசூரிய    234  (0.37%)
அப்துல் ரசூல்     306  (0.49%)
கமல் கருணாதாச    83  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     69  (0.11%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    40  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  58  (0.09%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 64,180  (31.23%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,490 (2.32%)
செல்லுபடியான வாக்குகள்  62,690  (97.68%)
மேலதிக வாக்குகள்  27,601

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    58,975  (34.66%)
ரணில் விக்கிரமசிங்க     104,100 (61.19%)
நந்தன குணதிலக   290  (0.17%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    250  (0.15%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,528  (0.90%)
ராஜீவ விஜேசிங்க    1,838  (1.08%)
வாசுதேவ நாணயக்கார    884  (0.52%)
டெனிசன் எதிரிசூரிய    784  (0.46%)
அப்துல் ரசூல்     750  (0.44%)
கமல் கருணாதாச    331  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     234  (0.14%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    78  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  89  (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 173,878 (64.35%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,747 (2.15%)
செல்லுபடியான வாக்குகள்  170,131 (97.85%)
மேலதிக வாக்குகள்  45,125

திகாமடுல்லை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    149,593 (55.59%)
ரணில் விக்கிரமசிங்க     109,805 (40.80%)
நந்தன குணதிலக   4,068  (1.51%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    344  (0.13%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,275  (0.47%)
ராஜீவ விஜேசிங்க    1,193  (0.44%)
வாசுதேவ நாணயக்கார    473  (0.18%)
டெனிசன் எதிரிசூரிய    823  (0.31%)
அப்துல் ரசூல்     663  (0.25%)
கமல் கருணாதாச    519  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     171  (0.06%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    93  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  80 (0.03%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 273,649 (79.59%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,549 (1.66%)
செல்லுபடியான வாக்குகள்  269,100 (98.34%)
மேலதிக வாக்குகள்  39,788

திருகோணமலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    56,691  (44.96%)
ரணில் விக்கிரமசிங்க     63,351 (50.25%)
நந்தன குணதிலக   2,307  (1.83%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    218  (0.17%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   735  (0.58%)
ராஜீவ விஜேசிங்க    713  (0.57%)
வாசுதேவ நாணயக்கார    476  (0.38%)
டெனிசன் எதிரிசூரிய    477  (0.38%)
அப்துல் ரசூல்     599  (0.48%)
கமல் கருணாதாச    245  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     128  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    72  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  69  (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 128,723 (63.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,642 (2.05%)
செல்லுபடியான வாக்குகள்  126,081 (97.95%)
மேலதிக வாக்குகள்  6,660

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    377,483 (50.76%)
ரணில் விக்கிரமசிங்க     326,327 (43.88%)
நந்தன குணதிலக   27,354  (3.68%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    2,704  (0.36%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,889  (0.25%)
ராஜீவ விஜேசிங்க    1,660  (0.22%)
வாசுதேவ நாணயக்கார    1,011  (0.13%)
டெனிசன் எதிரிசூரிய    1,672  (0.22%)
அப்துல் ரசூல்     1,355  (0.18%)
கமல் கருணாதாச    872  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     578  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    314  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  301  (0.04%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 758,791 (77.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   15,272 (2.01%)
செல்லுபடியான வாக்குகள்  743,579 (97.99%)
மேலதிக வாக்குகள்  51,156

புத்தளம் மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    141,725 (51.47%)
ரணில் விக்கிரமசிங்க     121,615 (44.17%)
நந்தன குணதிலக   7,876  (2.86%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    614  (0.22%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   741  (0.27%)
ராஜீவ விஜேசிங்க    599  (0.22%)
வாசுதேவ நாணயக்கார    445  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    589  (0.21%)
அப்துல் ரசூல்     481  (0.17%)
கமல் கருணாதாச    308  (0.11%)
ஹட்சன் சமரசிங்க     164  (0.06%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    88  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  94 (0.03%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 281,117  (69.57%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,778 (2.06%)
செல்லுபடியான வாக்குகள்  275,339 (97.94%)
மேலதிக வாக்குகள்  20,110

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    189,073 (54.14%)
ரணில் விக்கிரமசிங்க     139,180 (39.86%)
நந்தன குணதிலக   14,612  (4.18%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    902  (0.26%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,176  (0.34%)
ராஜீவ விஜேசிங்க    1,065  (0.30%)
வாசுதேவ நாணயக்கார    394  (0.11%)
டெனிசன் எதிரிசூரிய    963  (0.28%)
அப்துல் ரசூல்     670  (0.19%)
கமல் கருணாதாச    600  (0.17%)
ஹட்சன் சமரசிங்க     271  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    166  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  129  (0.04%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 356,150 (77.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,949 (1.95%)
செல்லுபடியான வாக்குகள்  349,201 (98.50%)
மேலதிக வாக்குகள்  49,893

வடமத்திய மாகாணம்

பொலநறுவை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   88,663  (51.55%)
ரணில் விக்கிரமசிங்க     72,598 (42.21%)
நந்தன குணதிலக   8,020  (4.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    381  (0.22%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   541  (0.31%)
ராஜீவ விஜேசிங்க    542  (0.32%)
வாசுதேவ நாணயக்கார    165  (0.10%)
டெனிசன் எதிரிசூரிய    392  (0.23%)
அப்துல் ரசூல்     240  (0.14%)
கமல் கருணாதாச    247  (0.24%)
ஹட்சன் சமரசிங்க     116  (0.07%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    65  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  37 (0.02%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 175,158 (98.20%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,151 (1.80%)
செல்லுபடியான வாக்குகள்  172,007 (79.25%)
மேலதிக வாக்குகள்  16,065

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   167,000 (46.33%)
ரணில் விக்கிரமசிங்க     172,884 (47.97%)
நந்தன குணதிலக   12,023  (3.34%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,177  (0.14%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,499  (0.42%)
ராஜீவ விஜேசிங்க    1,652  (0.46%)
வாசுதேவ நாணயக்கார    589  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    1,254  (0.34%)
அப்துல் ரசூல்     915  (0.25%)
கமல் கருணாதாச    554  (0.15%)
ஹட்சன் சமரசிங்க     495  (0.14%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க   203  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  194 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 371,400 (80.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,979 (2.06%)
செல்லுபடியான வாக்குகள்  360,421 (97.04%)
மேலதிக வாக்குகள்  5,884

மொனராகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    92,049  (51.07%)
ரணில் விக்கிரமசிங்க     73,695 (40.89%)
நந்தன குணதிலக   10,456  (5.80%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    481  (0.27%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   816  (0.45%)
ராஜீவ விஜேசிங்க    860  (0.48%)
வாசுதேவ நாணயக்கார    288  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    678  (0.38%)
அப்துல் ரசூல்     215  (0.12%)
கமல் கருணாதாச    336  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     145  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    126  (0.07%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   100  (0.06%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 184,406 (79.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,161 (2.26%)
செல்லுபடியான வாக்குகள்  180,245 (97.74%)
மேலதிக வாக்குகள்  18,354

சப்ரகமுவ மாகாணம்

கேகாலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   210,185 (51.30%)
ரணில் விக்கிரமசிங்க     176,376 (43.05%)
நந்தன குணதிலக   14,997  (3.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,730  (0.42%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,262  (0.32%)
ராஜீவ விஜேசிங்க    1,209  (0.30%)
வாசுதேவ நாணயக்கார    703  (0.17%)
டெனிசன் எதிரிசூரிய    1,134  (0.28%)
அப்துல் ரசூல்     814  (0.17%)
கமல் கருணாதாச    481  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     416  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    169  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  204 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 417,816 (78.10%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,136 (1.95%)
செல்லுபடியான வாக்குகள்  409,680 (98.05%)
மேலதிக வாக்குகள்  33,809

இரத்தினபுரி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   250,409 (52.13%)
ரணில் விக்கிரமசிங்க     202,621 (42.28%)
நந்தன குணதிலக   16,482  (3.43%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,392  (0.29%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,811  (0.38%)
ராஜீவ விஜேசிங்க    1,687  (0.35%)
வாசுதேவ நாணயக்கார   2,007  (0.42%)
டெனிசன் எதிரிசூரிய    1,475  (0.31%)
அப்துல் ரசூல்     757  (0.16%)
கமல் கருணாதாச    727  (0.15%)
ஹட்சன் சமரசிங்க     490  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    247  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  259 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 489,402 (82.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   9,038 (1.85%)
செல்லுபடியான வாக்குகள்  480,364 (98.15%)
மேலதிக வாக்குகள்  47,788

இறுதித் தேர்தல் முடிவுகள்.

சந்திரிக்கா குமாரதுங்க   4,312,157 (51.12%)
ரணில் விக்கிரமசிங்க     3,602,748 (42.71%)
நந்தன குணதிலக   344,173  (4.08%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    35,854  (0.43%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   27,052  (0.32%)
ராஜீவ விஜேசிங்க    25,085  (0.30%)
வாசுதேவ நாணயக்கார   23,668  (0.28%)
டெனிசன் எதிரிசூரிய    21,119  (0.25%)
அப்துல் ரசூல்     17,359  (0.21%)
கமல் கருணாதாச    11,333  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     7,184  (0.09%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க     4,039  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன     3,983 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 8,635,290 (73.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  199,536 (2.31%)
செல்லுபடியான வாக்குகள்  8,435,754 (97.69%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

4,217,877

குறைந்த பட்ச வாக்குகளை விட திருமதி சந்திரிக்கா குமாரதுங்க  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    

94,280

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

709,409

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் :05 – புன்னியாமீன் –

sri-lankan-election.jpgதொடர்ச்சி….

பிரதான அபேட்சகர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட 3ஆவது ஜனாதிபதித் தேர்தல்

3வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1994 அக்டோபர் மாதம் 07ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 1994 நவம்பர் 09ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் ஜனாதிபதி திரு. விஜயதுங்க அவர்களின் பணிப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் திரு. ஆர். கே. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் 1994 செப்டெம்பர் 17ம் திகதி விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின்படி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸக் குடியரசின் 4வது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

1. திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி)
2. திரு. நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி)
3. திரு. காமினி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி)
4. திரு.ஏ.கே. ரணசிங்க (சுயேட்சை)
5. திரு.ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி)
6. திரு. ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை)

தேர்தலின்போது இவர்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்கள் முறையே

1. நாற்காலி
2. மலர்ச்செடி 
3. யானை
4. அன்னப்பறவை
5. விமானம்
6. மேசை

நியமனப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து தேர்தல் நடைபெறும் தினம் வரை முக்கிய நிகழ்வுகள்:

1. அபேட்சகர் கொலை

தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திரு. காமினி திசாநாயக்க அவர்கள் 1994 அக்டோபர் 23ம் திகதி நள்ளிரவு 12.17 அளவில் கொழும்பு தொட்டலங்க (பாலத்தோட்டை) நாகலம் வீதியில் அமைந்துள்ள பொதுச் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு தமது இருக்கையை நோக்கிச் செல்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் கொலை செய்யப்பட்டார்.

இக்குண்டு வெடிப்பின்போது 3 குழந்தைகளுக்குத் தந்தையான 52வயதுமிக்க திரு. காமினிதிசாநாயக்கவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் டாக்டர் காமினி விஜேசேகர, முன்னாள் அமைச்சர்களான திரு. வீரசிங்க மல்லிமாராட்சி, திரு. ஜி. எம். பிரேமச்சந்திர உட்பட சுமார் 62 மனித உயிர்கள் பலியாக்கப்பட்டன. (பலத்த காயங்களுக்கு உட்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற  2வது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டவரும்,  ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும், முன்னைய மேல்மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. ஒஸி அபேகுணவர்தனா அவர்கள் 1994 நவம்பர் 09ம் திகதி காலமானார்)

இத்துக்கரமான சம்பவத்தையடுத்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான 1981ம் ஆண்டு 15ம்  இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22ம் உறுப்புரையின் (1) (2) (3) உட்பிரிவுகளுக்கமைய 3 தினங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் 1994 ஒக்டோபர் 24ம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியைக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து 1994 ஒக்டோபர் 25ம் திகதி ஜனாதிபதி திரு. டீ.பீ. விஜயதுங்க தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான ‘சிரிகொத’ வில் அவசரக்கூட்டமொன்று கூட்டப்பட்டது.

கட்சியின் 42 பிரதானிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி அபேட்சகர்களாக திரு. காமினிதிசாநாயக்க அவர்களின் மனைவி திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களின் பெயரும், முன்னைய பிரதம மந்திரி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டன.

2 பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களையடுத்து ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒரு விசேட கமிட்டிக்கு விடப்பட்டது. இந்த விசேட கமிட்டியில் தலைவராக டீ.பீ. விஜேதுங்க மற்றும் உறுப்பினர்களாக திருவாளர்கள் விஜேபால மென்டிஸ், பெஸ்டஸ் பெரேரா,  எம்.எச்.மொகம்மட்,  டிரோன் பெர்னாண்டோ, ஏ.ஸீ.எஸ். ஹமீத், சுசில் முனசிங்க, தஹம் விமலசேன, அனுரபண்டாரநாயக்க, ஹெரல்ட் ஹேரத், ஹென்றி ஜயமஹ, கே.என். சொக்ஸி ஆகிய 12 உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.

இவ்விசேட குழு திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது எனத் தீர்மானித்தது. இத்தீர்மானத்தை கட்சியின் நிர்வாகக் குழு ஏகமனதாக அனுமதித்துள்ளதென கொழும்பு 7 ஸ்ரீமத் மாக்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுசில் முனசிங்க அவர்களினால் 1994.10.26ம் திகதி காலையில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இம்முடிவினை கட்சியின் தற்காலிக செயலாளர் திரு. தஹம் விமலசேன அவர்களினால் அதே தினத்தில் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22 (2) உறுப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் பெற்றுள்ள அதிகாரங்களுக்கமைய திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்கள் ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இந்த உத்தியோகபூர்வமான அறிவித்தல் 1994 ஒக்டோபர் 27ம் திகதி தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்டது. அத்துடன், திட்டமிட்டபடி 1994 நவம்பர் 09ம் திகதி நாடுபூராவும் காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை தேர்தல் நடத்தப்படுமெனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

2. அபேட்சகர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளல்

3வது ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டமை இத்தேர்தலின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.

நிறைவேற்று அதிகாரமிக்க அதாவது தனி அதிகாரமிக்க ஜனாதிபதிமுறை ஒழிக்கப்படமெனவும், அதேநேரம், தனிப்பட்ட ஒரு நபருக்கு அதிகாரம் வழங்கப்படுவதைத் தடுத்து பாராளுமன்றத்தக்கும் பூரணபொறுப்புச் சொல்லக்கூடிய ஒரு நிர்வாக முறை ஏற்படுத்தப்படுமெனவும் பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளரும், பிரதம மந்திரியுமான திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மக்களுக்கு உறுதியளித்து எழுத்து மூலமாக அறிவிப்பாராயின் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி வேட்பாளர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் 1994.10.20ம் திகதியன்று பொதுசனத் தொடர்பு சாதனங்களினூடாக பகிரங்கமாக அறிவித்தல் விடுத்தார்.

இந்த சவாலை திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொண்டார். 1995ம் ஆண்டு ஜுலை 15ம் திகதிக்கு தற்போதைய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுமெனவும், மாற்றியமைக்கப்படும் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம், கொண்ட ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்படுமெனவும் 1994.10.21ம் திகதி இலங்கை ரூபவாஹினியில் இடம்பெற்ற விசேட பேட்டியில் குறிப்பிட்டார். 1994.10.19ம் திகதி பதுளை சேனநாயக்கா விளையாட்டரங்கில் பொதுக்கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி நீக்கப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விரிவாக முறையில் இவர் ஏற்கனவே விளக்கியிருந்தார். சந்திரிக்கா குமாரதுங்கவின் இந்நிலைப்பாட்டால் திருப்தியடைந்த கலப்பதி அவர்கள் 1994.10.27ம் திகதியன்று தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

3வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்

மேல்மாகாணம்

கொழும்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   557,708 (64.82 %)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)    1,819  (0.21%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  288,741 (33.56%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 3,533  (0,41%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 6,059  (0.70%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2)  2,526  (0.29%)
  
பதியப்பட்ட வாக்குகள்  1,235,959 
செல்லுபடியான வாக்குகள்  860,386 (98.17 %) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   16,060 (1.83%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 876,446 (70.91%)

கம்பஹா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   550,654 (64.74%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,832  (0.22%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  288,608 (33.93%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 2,711  (0.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  3,694  (0.43%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,019  (0.35%)
  
பதியப்பட்ட வாக்குகள்  1,140,808 
செல்லுபடியான வாக்குகள்  850,518 (98.48%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   13,137 (1.52%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 863,655 (75.71%)

களுத்துறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   295,686 (61.47%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,388  (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  178,466 (37.10%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,398  (0.39%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,868  (0.39%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,213  (0.46%)
  
பதியப்பட்ட வாக்குகள்  646,199  
செல்லுபடியான வாக்குகள்  481,019 (98.50%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,309 (1.50%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,328 (75.57%)

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   320,110 (56.64%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,370  (0.24%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  235,519 (41.68%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,752  (0.31%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  2,618  (0.46%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,748  (0.66%)
  
பதியப்பட்ட வாக்குகள்  726,192   
செல்லுபடியான வாக்குகள்  565,117 (97.55%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   14,179 (2.45%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 579,296 (79.77%)

மாத்தளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   121,449 (60.98%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   680  (0.34%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  73,324  (36.82%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 608  (0.31%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  992  (0.50%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,111  (1.06%)
  
பதியப்பட்ட வாக்குகள்  250,816    
செல்லுபடியான வாக்குகள்  199,164 (97.40%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,317 (2.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 204,481 (81.53%)

நுவரெலியா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   168,929 (57.14%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,044  (0.35%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P)  116, 928  (39.55%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,083  (0.37%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,332  (0.45%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   6,314  (2.14%)
  
பதியப்பட்ட வாக்குகள்  386,668    
செல்லுபடியான வாக்குகள்  295,630 (96.15%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,840 (3.85%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 307,470 (79.52%)

தென் மாகாணம்

காலி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   285,398 (61.40%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,487  (0.32%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  173,282 (37.28%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,179  (0.25%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,584  (0.34%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,885  (0.41%)
  
பதியப்பட்ட வாக்குகள்  632,412     
செல்லுபடியான வாக்குகள்  464,815 (98.49%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,112 (1.51%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 471,927 (74.62%)

மாத்தறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   227,865 (64.69%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,397  (0.40%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  118,224 (33.56%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,134  (0.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,564  (0.44%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,055  (0.58%)

பதியப்பட்ட வாக்குகள்  503,470     
செல்லுபடியான வாக்குகள்  352,239 (98.40%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,731 (1.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 357,970 (71.10%)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   132,873 (61.52%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,685  (0.78%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  77,735  (35.99%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 750  (0.35%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,538  (0.71%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,414  (0.65%)

பதியப்பட்ட வாக்குகள்  326,913     
செல்லுபடியான வாக்குகள்  215,995 (98.18%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,013 (1.82%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 220,008 (67.30%)

வட மாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   16,934  (96.35%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   25  (0.14%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க   (U.N.P)  223  (1.27%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 16  (0.09%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  36  (0.20%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   341  (1.94%)
  
பதியப்பட்ட வாக்குகள்  596,366     
செல்லுபடியான வாக்குகள்  17,575  (99.20%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   141  (0.80%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 17,716  (2.97%)

வன்னி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   33,585  (85.30%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   118  (0.30%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  4,493  (11.41%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 77  (0.20%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  96  (0.24%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,003  (2.55%)

பதியப்பட்ட வாக்குகள்  178,697      
செல்லுபடியான வாக்குகள்  39,372  (98.30%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   681  (1.70%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 40,053  (22.41%)

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   144,275 (87.30%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   484  (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  14,812  (8.93%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 381  (0.23%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  349  (0.21%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   5,028  (3.03%)

பதியப்பட்ட வாக்குகள்  261,897     
செல்லுபடியான வாக்குகள்  165,779 (98.42%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,664 (1.58%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 168,443 (64.32%)

திகாமடுல்லை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   168,289 (72.36%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   574  (0.25%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  59,074  (25.40%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 496  (0.21%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  471  (0.20%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,677  (1.58%)

பதியப்பட்ட வாக்குகள்  312,006       
செல்லுபடியான வாக்குகள்  232,581 (98.47%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,621 (1.53%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 235,202 (75.70%)

திருகோணமலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   77,943  (71.62%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   324  (0.30%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  28,006  (25.74%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 195  (0.18%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  279  (0.26%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,074  (1.91%)

பதியப்பட்ட வாக்குகள்  184,090       
செல்லுபடியான வாக்குகள்  108,821 (98.44%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,726 (1.56%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 110,547 (60.05%)

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   403,838 (59.36%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,842  (0.27%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  266,740 (39.21%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,714  (0.25%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  2,211  (0.32%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,999  (0.59%)

பதியப்பட்ட வாக்குகள்  876,591       
செல்லுபடியான வாக்குகள்  680,344 (98.48%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,511 (1.52%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 690,855 (78.81%)

புத்தளம் மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   165,795 (62.65%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   625  (0.24%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  95,211  (35.98%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 591  (0.22%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  617  (0.23%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,796  (0.68%)

பதியப்பட்ட வாக்குகள்  380,872       
செல்லுபடியான வாக்குகள்  264,635 (98.26%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,689 (1.74%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 269,324 (70.71%)

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   200,146 (63.99%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,083  (0.35%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  107,342 (34.32%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 678  (0.22%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,014  (0.32%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,534  (0.81%)

பதியப்பட்ட வாக்குகள்  406,926       
செல்லுபடியான வாக்குகள்  321,797 (98.05%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,205 (1.95%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 319,002 (78.39%)

பொலநறுவை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   88,907  (59.08%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   469  (0.31%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  59,287  (39.40%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 258  (0.17%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  428  (0.28%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,126  (0.75%)

பதியப்பட்ட வாக்குகள்  200,192       
செல்லுபடியான வாக்குகள்  150,475 (97.43%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,966 (2.57%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 154,441 (77.15%)

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   182,810 (55.27%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,372  (0.41%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  139,611 (42.21%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,387  (0.42%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,745  (0.53%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,847  (1.16%)

பதியப்பட்ட வாக்குகள்  435,260       
செல்லுபடியான வாக்குகள்  330,772 (95.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   14,093 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 344,865 (79.23%)

மொனராகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   96,620  (63.20%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   824  (0.54%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  52,026  (34.03%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 556  (0.36%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  877  (0.57%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   1,966  (1.27%)

பதியப்பட்ட வாக்குகள்  199,391       
செல்லுபடியான வாக்குகள்  152,867 (97.46%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,977 (2.54%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 156,846 (78.66%)

சப்பிரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   257,265 (58.07%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,279  (0.29%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  177,924 (40.16%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,235  (0.28%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,877  (0.42%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   3,451  (0.78%)

பதியப்பட்ட வாக்குகள்  554,607       
செல்லுபடியான வாக்குகள்  443,031 (98.31%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,595 (1.69%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 450,626 (81.25%)

கேகாலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   211,676 (56.06%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   1,028  (0.27%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  159,707 (42.30%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 1,020  (0.27%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  1,402  (0.37%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   2,759  (0.73%)

பதியப்பட்ட வாக்குகள்  500,947       
செல்லுபடியான வாக்குகள்  377,592 (98.14%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,139 (1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 384,731 (76.80%)

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் 1994

இறுதித் தேர்தல் முடிவுகள்

சந்திரிக்கா குமாரதுங்க (P.A)   4,709,205 (62.28%)
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க  (U.N.P)  2,715,283 (35.91%)
ஹட்சன் சமரசிங்க   (Ind – 2))   58,886  (0.78%)
ஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P)  32,651  (0.43%)
ஏ.ஜே. ரணசிங்க  (Ind – 1) 22.752   (0.30%)
நிஹால் கலப்பதி   (S.L.P. F)   22,749 (0.30%)

பதியப்பட்ட வாக்குகள்  10,937,279       
செல்லுபடியான வாக்குகள்  7,561,526 (98.03%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   151,706 (1.97%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 7,713,232 (70.52%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   
 3,780,763

குறைந்த பட்ச வாக்குகளை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    

 928,442

இரண்டாம் இடத்தைப் பெற்ற வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
 
 1,993,922

தொடரும்…

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 04 – புன்னியாமீன்-

election_box.jpg(தொடர்ச்சி…..)

500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற  2ஆவது ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையின் 2வது ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

1. திரு. ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)
2. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)
3. திரு. ஒஸி அபயகுணவர்தனா (ஸ்ரீலங்கா மக்கள் கட்சி)

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த யுத்தத்தினாலும், தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்றுவந்ததெனலாம். இலங்கையின் 1வது ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது மிகவும் பிரச்சினைக்குரிய கால கட்டமாகவே இக்கால கட்டம் விளங்கியது.

பல ஆண்டுகளாக வடக்குப் பகுதியிலும், 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும், 1988ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்த முடிந்தமையினால் ஜனாதிபதித் தேர்தலையும், தொடர்ந்து பொதுத் தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி ஜனாதிபதியினதும்,  பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது)

1988ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிகமிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால், தந்தித் தொலைத் தொடர்புகள் சீர்குலைந்திருந்தன. அடிக்கடி தூண்டப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால் நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், தீவிரவாதிகளினாலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலைமையே காணமுடிந்தது.

1988 டிசம்பர் 19ம் திகதியன்று தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதிலும்கூட, தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியது. தேர்தல் அதிகாரிகளை சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பமுடியாத நிலைகூட ஏற்பட்டன. மறுபுறமாக பல பகுதிகளில் வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிக்கச் சென்றால் கொலை செய்யப்படுவர் என்ற பகிரங்க அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன.

பொலிஸ் அறிக்கையின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப்பத்திரம் கோரப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற திகதிவரை 500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவர்களுள் மாகாணசபை உறுப்பினர்கள் நால்வரும், அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும், 360க்கு மேற்பட்ட பொதுமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 100க்கும் மேற்பட்ட காவல், பாதுகாப்பு படையினரும் கொலை செய்யப்பட்டனர். இக்காலகட்டத்தில் நாளொன்றுக்குச் சரியாக 12 கொலைகள் இடம்பெற்றதாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியாயவது அனுப்பிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 49 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்நிலை ஏற்பட்டதுடன், வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் 50 வாக்கெடுப்பு நிலையங்களையும் இரத்துச் செய்யும் நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து சீர்குலைவு காரணங்களினால் 800 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நீண்டநேரம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது.

களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலறுவை,  மொனராகலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 207 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்காவது பதியப்படாததையும் களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலநறுவை, பதுளை,  மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 375 வாக்களிப்பு நிலையங்களில் 100க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதையும் தேர்தல் ஆணையாளரின் அறிக்கை மூலமாகக் காணமுடிகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற 2வது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 9,375,742 ஆகும். இவர்களுள் 5,186,223 (55.32%) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும் கூட 5,094,778 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக இருந்தன.

யாப்பு விதிகளுக்கு இணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 2,547,389 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். திரு. ஆர். பிரேமதாச அவர்கள் 2,569,199 வாக்குகளை அதாவது 50.43% வாக்குகளைப் பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1989.01.02ம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

1988 ஜனாதிபதித் தேர்தலில் 50% மான வாக்குகளைவிட (2,547,389) மேலதிகமாக 21,810 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை விட 279,339 மேலதிக வாக்குகளையும் திரு. பிரேமதாச பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணம் –

கொழும்பு மாவட்டம்

ஆர். பிரேமதாச  (U.N.P)  361,337  (49.14%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  339,958 (46.23%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   34,020 (4.63%)

பதியப்பட்ட வாக்குகள்  1,088,780
செல்லுபடியான வாக்குகள்  735,315 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,295  (1.51%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 746,610 (68.57%)

கம்பஹா மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  350,092 (48.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  355,553 (48.83%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   22,467 (3.09%)

பதியப்பட்ட வாக்குகள்  969,735
செல்லுபடியான வாக்குகள்  728,112 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,054 (1.36%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 738,166 (76.12%)

களுத்துறை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  169,510 (46.74%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  179,761 (49.57%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   13,375 (3.69%)

பதியப்பட்ட வாக்குகள்  570,118
செல்லுபடியான வாக்குகள்  362,646 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,537 (1.77%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 369,183 (64.76%)

மத்திய மாகாணம் –

கண்டி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  234,124 (54.88%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  186,187 (43.65%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,266  (1.47%)

பதியப்பட்ட வாக்குகள்  628,240
செல்லுபடியான வாக்குகள்  426,577 (98.57%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,167 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 432,744 (68.88%)

மாத்தளை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  37,007  (57.85%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  25,825  (40.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   1,135  (1.77%)

பதியப்பட்ட வாக்குகள்  214,938
செல்லுபடியான வாக்குகள்  63,967  (98.29%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,110  (17.1%)
அளிக்கப்பட்ட வாக்குகள்  65,077  (30.28%)

நுவரெலியா மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  112,135 (62.15%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  64,907  (35.98%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,371  (1.87%)

பதியப்பட்ட வாக்குகள்  229,769
செல்லுபடியான வாக்குகள்  180,413 (98.19%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,320 (1.81%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 183,733 (79.96%)

தென் மாகாணம்

காலி மாவட்டம்

ஆர். பிரேமதாச    (U.N.P)   124,912 (44.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  148,615 (53.09%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,417  (2.29%)

பதியப்பட்ட வாக்குகள்  571,303
செல்லுபடியான வாக்குகள்  279,944 (98.43%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,461 (1.57%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 284,405 (43.78%)

மாத்தறை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  45,399  (42.93%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  57,424  (54.30%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,922  (2.76%)

பதியப்பட்ட வாக்குகள்  451,934 
செல்லுபடியான வாக்குகள்  105,745 (98.14%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,003 (1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 107,748 (23.84%)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  41,198  (49.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (U.N.P)  39,343  (47.39%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,478  (2.98%)

பதியப்பட்ட வாக்குகள்  295,180 
செல்லுபடியான வாக்குகள்  83,019  (95.56%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,855 (4.44%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 86,874  (29.43%)

வடமாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  33,650  (28.03%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  44,197  (36.82%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   42,198 (35.15%)

பதியப்பட்ட வாக்குகள்  591,782 
செல்லுபடியான வாக்குகள்  120,045 (93.38%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,517 (6.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 128,562 (21.72%)

வன்னி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  10,580  (55.78%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  4,889  (25.77%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,500  (18.45%)

பதியப்பட்ட வாக்குகள்  142,723 
செல்லுபடியான வாக்குகள்  18,969  (96.40%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   708  (3.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,677  (13.79%)

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  61,657  (50.99%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  21,018  (17.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   38,243 (31.63%)

பதியப்பட்ட வாக்குகள்  215,585 
செல்லுபடியான வாக்குகள்  120,918 (95.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,163 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 126,081 (58.48%)

திகாமடுல்லை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  96,420  (50.77%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  83,137  (43.78%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   10,352 (5.45%)

பதியப்பட்ட வாக்குகள்  265,768 
செல்லுபடியான வாக்குகள்  189,909 (98.08%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,802 (1.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 193,711   (72.89%)

திருகோணமலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  36,841  (45.70%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  29,679  (36.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   14,103 (17.49%)

பதியப்பட்ட வாக்குகள்  152,289 
செல்லுபடியான வாக்குகள்  80,623  (98.38%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,326 (1.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 81,949  (53.81%)

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  198,662 (51.12%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  182,223 (46.89%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   7,717  (1.99%)

பதியப்பட்ட வாக்குகள்  784,986 
செல்லுபடியான வாக்குகள்  388,602 (98.91%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,281 (1.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 392,883 (50.05%)

புத்தளம் மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  125,339 (55.89%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  94,823  (42.28%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   4,093  (1.83%)

பதியப்பட்ட வாக்குகள்  319,003 
செல்லுபடியான வாக்குகள்  224,255 (98.70%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,965 (1.30%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 227,220 (71.23%)

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  56,951  (42.94%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  73,154  (55.15%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   2,529  (1.91%)

பதியப்பட்ட வாக்குகள்  334,074
செல்லுபடியான வாக்குகள்  132,634 (98.36%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,027 (1.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 134,841 (40.36%)

பொலநறுவை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  26,392  (55.54%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  20,173  (42.45%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   957  (2.01%)

பதியப்பட்ட வாக்குகள்  163,741
செல்லுபடியான வாக்குகள்  47,522  (97.62%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,157  (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 48,679  (29.73%)

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  80,779  (60.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  50,223  (37.36%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   3,440  (2.56%)

பதியப்பட்ட வாக்குகள்  329,462
செல்லுபடியான வாக்குகள்  134,442 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,276 (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 137,718 (41.80%)

மொனராகலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  16,872  (63.21%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  9,123  (34.18%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   697  (2.61%)

பதியப்பட்ட வாக்குகள்  161,927
செல்லுபடியான வாக்குகள்  26,692 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   851  (3.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 27,543  (17.01%)

சப்பிரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  180,622 (51.75%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  159,879 (45.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   8,516  (2.44%)

பதியப்பட்ட வாக்குகள்  457,224 
செல்லுபடியான வாக்குகள்  349,017 (98.84%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,113 (1.16%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 393,130 (77.23%)

கேகாலை மாவட்டம்

ஆர். பிரேமதாச   (U.N.P)  168,720 (57.11%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  119,769 (40.54%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,923  (2.34%)

பதியப்பட்ட வாக்குகள்  437,178 
செல்லுபடியான வாக்குகள்  295,412 (98.57%) 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,277 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 299,689 (68.55%)

இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988

இறுதித் தேர்தல் முடிவுகள்

ஆர். பிரேமதாச   (U.N.P)  2,569,199 (50.43%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  2,289,860 (44.94%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   235,719 (4.63%)

பதியப்பட்ட வாக்குகள்  9,375,742
செல்லுபடியான வாக்குகள்  5,094,778 (98.24%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   91,445 (1.76%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 5,186,223 (55.32%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   2,547,389

குறைந்த பட்ச வாக்குகளை விட ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    21,810

இரண்டாம் இடத்தைப் பெற்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை விட திரு ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
279,339

தொடரும்…

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 03 – புன்னியாமீன் –

sri-lanka.jpg(கடந்த வாரத் தொடர்ச்சி….)

1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

திரு. ஜே.ஆர். ஜயவர்தன  (ஐக்கிய தேசியக் கட்சி)  
திரு. ஹெக்டர் கொப்பேகடுவ  (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி)
திரு. ரோஹன விஜயவீர   (மக்கள் விடுதலை முன்னணி)
திரு. கொல்வின் ஆர்.டி. சில்வா (லங்கா சமசமாஜக் கட்சி)
திரு. வாசுதேவ நாணயக்கார  (நவ சமசமாஜக் கட்சி)
திரு. குமார் பொன்னம்பலம்   (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)

இத்தேர்தலில் 1) ஹேவாலயாகே கீர்த்திரத்தின 2) முதியான்சே தென்னகோன் 3) திருமதி நீனா கெதரின் ஏஞ்சலா பெரேரா விஜேசூரிய ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.
1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவியபோதிலும்கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது.

காரணம்:
1) இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பரிச்சயமற்றவராகவே இவர் இருந்தமை.

2) 1970-77க் கிடைப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சோஸலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும்,  1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வருமிடத்து 1970-1977க்கிடைப்பட்ட கால பஞ்சநிலை மீண்டும் தொடரலாம் என்ற மக்களின் பய உயர்வும்,  (1982 ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கைகளை திட்டவட்டமான முறையில் முன்வைக்காமையும் ஒரு குறையாகவே கூறல் வேண்டும்)

1982-10-20ம் திகதி நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8, 144, 995 ஆகும். (ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6, 602, 612 (81.06 %) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும்கூட,  6, 522, 147 (79.84  %) வாக்குகளே செல்லுடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3, 261, 074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். திரு. ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் 3, 450, 811 வாக்குகளை அதாவது 52.91 சதவீத வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1982 ஜனாதிபதித் தேர்தலில் 50சதவீதமான வாக்குகளை விட (3, 261, 074) மேலதிகமான 189, 737 வாக்குகளையும்,  தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற திரு. ஹெக்டர் கொப்பேகடுவையை விட 902, 373 மேலதிக வாக்குகளையும் திரு. ஜயவர்தனா அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மாகாண ரீதியில் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  436,290   (57.71%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  276,476   (36.57%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   28,580     (3.78%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     3,022    (0.40%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    9,655    (1.28%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    2,008    (0.26%)

பதியப்பட்ட வாக்குகள்  972,196
செல்லுபடியான வாக்குகள்  756,031  (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,990    (1.04%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 764,021  (78.59%)

கம்பஹா மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  365,838   (52.50%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  301,808   (43.31%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   23,701   (3.40%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     534      (0.88%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    3,835   (0.55%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    1,122   (0.16%)

பதியப்பட்ட வாக்குகள்  835,265
செல்லுபடியான வாக்குகள்  696,838  (99.15 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,992   (0.85 %)
அளிக்கப்பட்ட வாக்குகள் 702,830  (84.14 %)

களுத்துறை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  211,592   (50.15%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  185,874   (44.06%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   14,499    (3.44%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     443   (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    8,613   (2.04%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    871   (0.20%)

பதியப்பட்ட வாக்குகள்  499,215
செல்லுபடியான வாக்குகள்  421,892  (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,548   (1.07%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,440  (85.42%)

கண்டி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  289,621    (59.82%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  178,493    (36.87%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   12,493    (2.58%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     562       (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,256    (1.46%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    718       (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  564,767
செல்லுபடியான வாக்குகள்  484,143    (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,702   (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,845    (86.6%)

மாத்தளை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  94,031   (58.11%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  59,299   (36.66%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,169    (4.43%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     253   (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    866   (0.54%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    196   (0.12%)

பதியப்பட்ட வாக்குகள்  187,276
செல்லுபடியான வாக்குகள்  161,814    (99.13 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,414   (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,228    (87.1%)

நுவரெலியா மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  109,017   (63.10%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  57,093   (33.05%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   4,069    (2.35%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     558   (0.32%)
கொல்வின் ஆர்.டி. சில்வா   (L.S.S.P)    1,201   (0.70%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    831   (0.48%)

பதியப்பட்ட வாக்குகள்  201,878
செல்லுபடியான வாக்குகள்  172,769    (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,048   (1.17%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 174,817    (86.6%)

காலி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  211,544   (50.23%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  180,925   (42.96%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   20,962    (4.98%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     425      (0.10%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    6,301   (1.50%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    981      (0.23%)

பதியப்பட்ட வாக்குகள்  512,489
செல்லுபடியான வாக்குகள்  421,138    (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,198   (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,336    (83.19%)

மாத்தறை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  164,725  (49.32%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  144,587  (43.29%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   22,117  (6.63%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     474     (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,571  (0.47%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    509     (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  399,888
செல்லுபடியான வாக்குகள்  333,983 (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,091 (0.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 337,074 (84.29%)

அம்பாந்தோட்டை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  90,545       (45.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  76,402       (38.73%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   28,835     (14.62%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     275        (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    877        (0.44%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    344        (0.17%)

பதியப்பட்ட வாக்குகள்  241,956
செல்லுபடியான வாக்குகள்  197,278    (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,804   (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 199,082    (82.28%)

யாழ்ப்பாண மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  44,780   (20.54%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  77,300   (35.46%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   3,098   (1.42%)
குமார் பொன்னம்பலம்  (T.C)   87,263   (40.03%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    3,376  (1.55%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    2,186  (1.00%)
 
பதியப்பட்ட வாக்குகள்  493,705
செல்லுபடியான வாக்குகள்  218,003    (95.36%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,610  (4.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 228,613    (46.30%)

வன்னி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  32,834      (46.42%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  23,221      (32.83%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   2,286      (3.23%)
குமார் பொன்னம்பலம்  (T.C)   11,521      (16.29%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    584       (0.82%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    292       (0.41%)

பதியப்பட்ட வாக்குகள்  119,093
செல்லுபடியான வாக்குகள்  70,739     (96.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,447  (3.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 73,186     (61.5%)

மட்டக்களப்பு மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  48,094   (40.05%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  21,688  (18.06%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   1,287  (1.07%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     47,095 (39.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,294 (1.08%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    618  (0.52%)

பதியப்பட்ட வாக்குகள்  172,480
செல்லுபடியான வாக்குகள்  120,076 (97.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,876 (2.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 122,955 (71.29%)

திகாமடுல்லை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  90,772  (56.39%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  53,096  (32.98%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,679  (4.78%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     8,079 (5.02%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    967  (0.60%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    377  (0.23%)

பதியப்பட்ட வாக்குகள்  204,268
செல்லுபடியான வாக்குகள்  160,970 (98.71%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,101 (1.29%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,071 (79.83%)

திருகோணமலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  45,522  (48.63%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  31,700  (33.87%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   5,395  (5.76%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     10,068 (10.76%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    635  (0.69%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    276  (0.29%)

பதியப்பட்ட வாக்குகள்  133,646
செல்லுபடியான வாக்குகள்  93,596  (98.12%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,795 (1.88%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 95,391  (71.37%)

குருனாகலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  345,769 (55.77%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  248,479 (40.08%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   21,835 (3.52%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     509  (0.08%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,594 (0.42%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    792  (0.13%)

பதியப்பட்ட வாக்குகள்  717,505
செல்லுபடியான வாக்குகள்  619,978 (99.13%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,431 (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 625,409 (87.16%)

புத்தளம் மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  128,877 (59.12%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  80,006  (36.70%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,001  (3.22%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     817  (0.37%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,040 (0.48%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    239  (0.11%)

பதியப்பட்ட வாக்குகள்  267,675
செல்லுபடியான வாக்குகள்  217,980 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,995 (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 219,975 (82.18%)

அனுராதபுர மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  117,873 (49.84%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  102,973 (43.54%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   13,911 (5.88%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     222  (0.09%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,148 (0.48%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    396  (0.17%)

பதியப்பட்ட வாக்குகள்  278,594
செல்லுபடியான வாக்குகள்  236,523 (99.04%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,294 (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 238,817 (85.72%)

பொலநறுவை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  59,414  (56.24%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  37,243  (35.26%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   8,138  (7.70%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     228  (0.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    451  (0.43%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    141  (0.13%)

பதியப்பட்ட வாக்குகள்  127,624
செல்லுபடியான வாக்குகள்  105,615 (99.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,064 (1.00%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 106,679 (83.59%)

பதுளை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  141,062 (58.62%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  88,642  (36.84%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,713  (3.20%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     625  (0.26%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,115 (0.89%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    463  (0.19%)

பதியப்பட்ட வாக்குகள்  280,187
செல்லுபடியான வாக்குகள்  240,620 (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,802 (1.15%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 243,422 (86.88%)

மொனராகலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  51,264  (49.38%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  44,115  (42.49%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,171  (6.91%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     163  (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    882  (0.84%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    226  (0.22%)

பதியப்பட்ட வாக்குகள்  126,558
செல்லுபடியான வாக்குகள்  103,821 (98.53%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,553 (1.47%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 105,374 (83.26%)

இரத்தினபுரி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  175,903 (50.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  152,506 (44.13%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   11,283 (3.26%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     422  (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,996 (0.58%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    3,494 (1.01%)

பதியப்பட்ட வாக்குகள்  402,202
செல்லுபடியான வாக்குகள்  345,604 (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,407 (0.98%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 349,011 (86.8%)

கேகாலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  195,444 (57.02%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  126,538 (36.92%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   13,706 (4.00%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     376  (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    6,184 (1.80%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    514  (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  406,548
செல்லுபடியான வாக்குகள்  342,762 (98.69%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,537 (1.31%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 347,299 (85.4%)

முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982; இறுதித் தேர்தல் முடிவுகள்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  3,450,811 (52.91%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  2,548,438 (39.07%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   273,428 (4.19%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     173, 934 (2.67%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    58,531 (0.90%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    17,005 (0.26%)
பதியப்பட்ட வாக்குகள்  8, 144,995
செல்லுபடியான வாக்குகள்  6, 522,147 (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   80,470 (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 6,602,617 (81.06%)

இம்முடிவின்படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளின் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

3,261,074

குறைந்த பட்ச வாக்குகளை விட ஜே. ஆர். ஜயவர்தனா அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

189,737

இரண்டாம் இடத்தைப் பெற்ற திரு ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களைவிட திரு ஜே. ஆர் அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

902,373

தொடரும்……..

ஊடகங்களின் ஊகங்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : பி எம் புன்னியாமீன்

Commissioner of Elections Dayananda Dissanayakeஇலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 6ஆவது ஜனாதிபதித் தேர்தல் 2010 ஜனவரி 26ஆந் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இருந்தபோதிலும்கூட,  பிரதான வேட்பாளர்கள் இருவரே மக்கள் முன் சோபிக்கின்றனர். ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும்,  தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அடுத்தவர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா. இவர்கள் இருவரும் தவிர ஏனைய 20 வேட்பாளர்களும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 5%  வாக்குகளையாவது பெறுவார்களா என்பது சந்தேகத்திக்கிடமானதே.

இலங்கையில் காணப்படக்கூடிய அனைத்து அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு வேட்பாளர்களை பிரதானப்படுத்தியே தமது செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எந்தவொரு ஊடகமாவது ஏனைய 20 வேட்பாளர்களுள் ஒருவருக்காவது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது பிரதான வேட்பாளர்களை மையப்படுத்திய முக்கியத்துவமாகவே அமைந்திருக்கும். மறுபுறமாக இத்தேர்தலில் போட்டியிடும் ஏனைய 20 வேட்பாளர்களுள் சிலர் பிரதான வேட்பாளர்களுக்கு சார்பாளர்களாக போட்டியிடுவதும் இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும். எனவேதான் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று தேர்தல் ஆணையாளரின் உரையில் “ஒவ்வொரு வேட்பாளர்களும் தமக்காகவே பிரசாரம் செய்ய வேண்டு”மென்பதை வலியுறுத்தியிருந்தார். இருப்பினும்,  இந்த வேட்பாளர்கள் சிலர் மறைமுகமாக பிரதான வேட்பாளர்களுக்கு சார்பான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியமுடிகின்றது.

இன்று இலங்கையில் அச்சு ஊடகங்களை எடுத்து நோக்கும்போது 100க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நாளிதழ்களாகவும்,  வார இதழ்களாகவும் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமடைந்துள்ளன. தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது சிங்கள மொழியில் இதன் தாக்கம் மிகமிக அதிகம். குறிப்பாக 1994ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் சிங்கள ஊடகங்களின் பங்களிப்பு விசாலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருந்தன. இலங்கையில் சிங்கள மொழி மூலமாக லங்காதீப, திவயின,  லக்பிம,  தினமின போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் ராவய,  இருதின,  சிலுமின, சத்தின,  மவ்பிம,  ரிவிர, லங்கா போன்ற வாரப் பத்திரிகைகளும் தமிழ்மொழி மூலமாக தினகரன்,  தினக்குரல், சுடரொளி, வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களும்,  நவமணி போன்ற வாரப் பத்திரிகைகளும் ஆங்கில மொழி மூலம் டெய்லி நிவுஸ்,  த. ஐலன்ட், டெயிலி மிரர் போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் சன்டே ஒப்ஸேவர், சன்டே டைம்ஸ், சன்டே லீடர்  போன்ற வாரப் பத்திரிகைகளும் காணப்படுகின்றன. இந்த பத்திரிகைகளில் அனேகமானவை தாம் நடுநிலைமைப் போக்குடன் ஜனாதிபதி தேர்தலில் செயல்படுகின்றோம் என்று கூறிக் கொண்டாலும்கூட,  உண்மையான நடுநிலைமைப் போக்கினை அவதானிக்க முடிகின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளில் சில பத்திரிகைகள் அரசாங்கப் பத்திரிகைகளாகும். பெரும்பாலான பத்திரிகைகள் தனியாருக்கு சொந்தமானவையாகும்.   ஏதோவொரு வகையில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்~வுக்கு அல்லது சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு சேர்க்கும் பத்திரிகைகளாகவே இவைகள் காணப்படுகின்றன. அதேபோல வானொலியை எடுத்துக் கொண்டாலும் இன்று 70க்கு மேற்பட்ட வானொலி சேவைகள் மும்மொழியிலும் உள்ளன. இவைகள் செய்திகளை ஒலிபரப்புபவை. 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் இருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றன. இவைகளிலும் சில அரசாங்க வானொலி, தொலைக்காட்சிகளாகவும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சிகளாகவும் இருக்கின்றன.

இவ்விடத்தில் தனியார் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அவை தத்தமது உரிமையாளர்களின் கொள்கைகளுக்கிணங்க நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இங்கு சில ஊடகங்கள் ஐக்கிய தேசியக்கட்சியினால் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அல்லது மக்கள் விடுதலை முன்னணியினால் நேரடியாக நடத்தப்பட்டு வருபவை. அல்லது பிரதான கட்சியான முக்கியஸ்தர்களினால் மறைமுகமாக வழிநடத்தப்படுபவை. எனவே எவ்வளவு தான் நடுநிலைமைப் போக்கு எனக் காட்டினாலும்கூட அவற்றின் சார்பு நிலை ஏதோவொரு பக்கம் சரிந்திருப்பதை பொதுப்படையாகக் காணமுடிகின்றது. எனவே அரசாங்க ஊடகங்களில் மாத்திரமல்லாமல் தனியார் ஊடகங்களிலும் பக்க சார்பு நிலையிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்குமிடத்து அரசாங்க ஊடகங்களைவிட தனியார் ஊடகங்களில் மக்கள் மயமாக்கல் மிகைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஊடகங்கள் மக்கள் ஈர்க்கத்தக்க வகையில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை உள்வாங்கியிருப்பதினால் இத்தகைய பிரபல்யம் தவிர்க்க முடியாது ஆகிவிடுகின்றது. மேலும் தனியார் ஊடகங்கள் சர்வதேச ஊடகப் பின்னலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்திருப்பதினால் சர்வதேச சக்திகளுக்கும் உட்பட்டேவிடுகின்றன.

இத்தகைய பின்னணியை வைத்துக் கொண்டே இலங்கை ஊடகங்களை நோக்க வேண்டியுள்ளது.

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ஆழமாக ஆராயுமிடத்தும்,  பல ஆய்வு அறிக்கைகளிலிருந்தும் பின்வரும் முடிவு வெளிப்படுகின்றது. அதாவது,  இலங்கையிலுள்ள வாக்காளர்களுள் சுமார் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் யார் போட்டியிட்டாலும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள். அதேபோல 20 தொடக்கம் 23 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள். நிச்சயமாக இந்த வீதத்தினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமே செல்லக்கூடியவை. இதனைக் கிராமிய மட்டத்தில் பின்வருமாறு எளிமையாகச் சொல்வார்கள் “என் உடலில் ஓடுவது பச்சை இரத்தம்,  என் உடலில் ஓடுவது நீல இரத்தம்.” என்று. இந்த அளவிற்கு அந்த நிலை வலுவடைந்துள்ளது.

இவ்வாறே கட்சியுடன் ஐக்கியமானவர்களின் வாக்கு எத்தகைய நிலையிலும் அக்கட்சியையே சார்ந்திருக்கும். இதில் எத்தகைய மாற்றங்களும் ஏற்பட இடமில்லை. ஆனால் அரசாங்கத்தை கவிழ்ப்பதோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிப்பதோ சுமார் 40 தொடக்கம் 50 வரையிலான இடைப்பட்ட வாக்காளர்களே. பொதுவாக இவை மிதக்கும் வாக்குகள் எனக் கொள்ளப்படுகின்றன. ஒரு பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய அரசாங்கத்தின் கொள்கைகளிலோ அன்றேல் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்படக் கூடிய ஜனாதிபதியின் கொள்கைகளையோ விளங்கி வாக்களிக்கக்கூடிய இந்த மிதக்கும் வாக்காளர்கள் உள்ளனர். எனவே,  போட்டியிடும் பிரதானக் கட்சிகள் போட்டியின் பிரதான வேட்பாளர்களின் கொள்கையாக்கங்களை விளக்க வேண்டியர்களாக இத்தகைய மிதக்கும் வாக்கினரே உள்ளனர். எனவே இவர்கள் தான் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி.

தேர்தல் காலத்தில் ஊடகங்களின் பணியென்றுக் கூறும்போது இந்த மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையைத் தீர்மானிக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று ‘வாக்காளரின் மூளையை மழுங்கடிக்கும் விதத்தில் ஊடகங்கள் செயற்படக்கூடாது” என  தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்ததை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

அந்நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் “சட்டத்தின் பிரகாரம் அரச ஊடகங்களை மட்டும் கட்டுப்படுத்தும் அதிகாரங்களே தனக்கிருப்பதாகவும் இன்று பெருமளவில் தனியார் ஊடகங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் சில ஊடகங்கள் வாக்காளர்களின் அறிவுத் திறனை மழுங்கடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்தார். அரச ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் தான் சட்டத்தின் பிரகாரம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட பெயர் குறிப்பிடாமல் பொதுப்படையான நிலையில் இலங்கையில் அச்சு,  இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையை பிரதான வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கரிபூசிக்கொள்ளும் நிகழ்வுகளை மிகைப்படுத்தி பிரசுரிப்பதையும்,  ஒலி / ஒளிபரப்புவதையுமே காணமுடிகின்றது. ஆனால், ஒருவருக்கொருவர் குறைகூறும் செய்திகளை மக்கள் கவரும் வகையில் வெளியிட்டு வாசகர்களை கவர விளையும் அதேநேரத்தில் பிரதான வேட்பாளர்களை கொள்கையாக்கங்கள் குறித்து இவைகள் முக்கியத்துவப்படுத்த மறந்துவிடுகின்றன.

பிரதான வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தான் பதவிக்கு வரும் பட்சத்தில் தனது கொள்கையாக மஹிந்த சிந்தனை 02 அமைந்திருக்கும் என்றும் மஹிந்த சிந்தனை 02 தற்போதைய செயற்பாட்டின் தொடர்ச்சியாக அமையும் என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால்,  இதுவரை தாம் பதவிக்கு வரும் ஆறாண்டுகளைக் கொண்ட காலத்தில் தனது பொருளாதாரத் திட்டம் என்ன? தற்போதைய இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகள் மேற்கொள்ளப்படப் போகின்றன? என்ற விளக்கங்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தோன்றவில்லை.

அதேபோல பிரதான எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராக சரத்பொன்சேக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எத்தகைய உறுதிப்பாடுகளையும் வெளிப்படுத்தியதாகக் காணமுடியவில்லை. இது தொடர்பாக அவரிடம் நிலையான கொள்கைகள் இருப்பதாக தோன்றவுமில்லை. தான் பதவிக்கு வருமிடத்து நடைமுறைப்படுத்தவுள்ளதாக 10 அம்சங்கள் கொண்ட திட்டமொன்றினை 2009 டிசம்பர் 18ஆம் திகதி கண்டியில் வைத்து அவர் வெளியிட்டார். ஆனால்,  ஐக்கியத் தேசியக் கட்சியோ அன்றேல் சரத்பொன்சேக்காவை வேட்பாளராக அமர்த்தியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியோ சரத்பொன்சேக்காவின் ஆறாண்டு பதவிக்காலத்துக்கான நிலையான திட்டமொன்றை வெளிப்படுத்த தவறி வருகின்றது. தான் பதவிக்கு வருமிடத்து ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி இல்லாமலாக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புச் சொல்லும் மந்திரிசபை ஆட்சிமுறை மீண்டும் அமைக்கப்படும் என்றும் இதில் பிரதம மந்திரி நிறைவேற்று அதிகாரமிக்கவராக காணப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாம் கேட்கும் முக்கியமான வாக்குறுதி தான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவோம் என்பதாகும். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதிகாரத்தில் வரக்கூடிய எவரும் தனது அதிகாரத்தை இலகுவாக விட்டுக் கொடுத்ததற்கான வரலாறு உலகளாவிய ரீதியிலே உதாரணப்படுத்துவது கடினம். இத்தகைய நிலையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு அதிகாரம் கிடைக்குமிடத்து அவ்வதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கோருவதைப் போல இலகுவில் விட்டுக் கொடுத்துவிடுவாரா எனும் கேள்வியும் எழுகின்றது. தற்போதைய அரசியல் நிலைகளின் பிரகாரம் ஒரு பிரதான கட்சியற்ற பொன்சேகாவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எவ்வாறு பெற முடியும் என்பது மிதக்கும் வாக்காளர்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே,  இலங்கையில் காணப்படக்கூடிய அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியான மிதக்கும் வாக்காளர்களின் மனத்தெளிவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்தால் மாத்திரமே ஊடக தர்மம் நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும். மேலே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஐக்கியத் தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் நிலையான வாக்காளர்களை வைத்து ஊடகங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமிடத்து அதனால் பலன் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால்ää இரண்டு பிரதான வேட்பாளர்களையும் மையப்படுத்தி நடைபெறும் பொதுக்கூட்டங்கள் கட்சியின் நிலையான ஆதரவாளர்களைக் கொண்டே நிரம்புகின்றன.

மிதக்கும் வாக்காளரின் நிலை தேர்தல் நடைபெறும் வரை வெளிப்பட மாட்டாது. மிதக்கும் வாக்காளர்கள் பெரும்பாலானோர் படிப்பறிவுள்ளோர். எனவே, படிப்பறிவோருக்கும் விளக்கமளிக்கக்கூடிய விதத்தில் இத்தகைய ஊடகங்களின் பங்களிப்பு இடம்பெறுதல் அவசியமானதாகும். இலங்கைத் தேர்தல்களில் ஊடகங்களின் பங்களிப்பு என்று கூறும்போது நிலையான கட்சி ஆதரவாளர்களின் காட்சிப்படுத்தலைவிட மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பே தீர்மான சக்தியாக அமையும். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள இத்தருணத்தில் பிரதம வேட்பாளர்கள் தமது நிலையான திட்டத்தை தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும்ää யதார்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். இந்த தன்மையை 2010 ஜனவரி 26ஆந் திகதி தேர்தல் முடிவினை தீர்மானிக்கும் சக்தியாக அமையும். 

 ஊடகங்கள் பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடியாகக் கொள்ளலாம். கருத்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம்,  கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இந்த அடிப்படையில் கருத்துக்களைத் தெரிவிக்கவும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. எனவே ஊடகமானது சுதந்திரமாகவும் நடு நிலைமையுடனும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரத்தைக் குறிக்கும். சட்டமன்றம்,  நிர்வாகம்,  நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திர ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. அதே நேரம் நடு நிலைமை எனும் போது பக்க சார்பற்ற பொது நிலையை பொருள் படுத்துகின்றது.

ஒரு சம்பவம் அல்லது செய்தியை சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அல்லது சம்பவம் அல்லது செய்தியை சான்றுகளுடன் உறுதிப்படுத்திக்கொண்டு அதை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதே ஊடகத் தர்மமாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்வுகள் அனைத்துத் தகவல்களையும் செய்தித்தாள்,  வானொலி,  தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்கின்றனர். எனவே மக்களுக்கு உண்மைகளை ஆதாரப்பூர்வமாக அறியத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அதன் பொறுப்பை சரிவரச் செய்வதே ஊடகத் தர்மமாகும். அவ்வாறான நிலை காணப்படின் மாத்திரமே ஜனநாயக பண்பினை வெளிப்படுத்துவதாக அமையும்.

19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அச்சு ஊடகங்கள் வளர்ச்சியடையலாயிற்று. இக்காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவிப்போரும்,  அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களை அறிந்து கொள்ளவிளைவோரும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நிலவிய வாசிப்பறிவின்மை காரணமாக அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் நிலை மிகமிக குறுகிய வட்டத்துக்குள் மாத்திரமே முடக்கப்பட்டிருந்தது.

20ஆம் நூற்றாண்டில் ஊடகத்துறையின் வளர்ச்சியானது ஓர் உயரிய நிலையை அடைகின்றது. அச்சு ஊடகத்துடன் வானொலியின் அறிமுகமும், அதைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகமும் கருத்துப் பரிமாற்றத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இக்கட்டத்தில் மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாமல் தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் வானொலிப் பாவனை அதிகரித்தது. இங்கெல்லாம் ஆரம்பத்தில் அரசாங்கத்தினாலேயே வானொலி ஒலிபரப்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், கட்டுப்படுத்தவும்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை “இலங்கை வானொலி” வானொலித் துறையில் முன்னோடியாக திகழ்கின்றது.

வானொலியின் பரவலான அறிமுகத்துடன் தகவல்களை “ஒலி” வடிவில் மக்களால் கேட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவானதினால் வானொலியைக் கேட்பதற்கு வாசிப்பறிவற்றநிலை தடையாக அமையவில்லை. தகவல்களையும், செய்திகளையும் வழங்குவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது பொழுதுபோக்கு அம்சமாக இசையினையும் இது தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதினால் படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தன. இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததன் பின்பு “இலங்கையில் வானொலி” பிரதான ஊடகமாக மாறியதுடன், பாமர மக்களிடையேயும் பாவனைப்படுத்தப்படும் நிலை உருவெடுத்தது.

1926ஆம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைக்காட்சி என்பது ஒரு கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி,  ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது. பின்னர் இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும்,  கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தருகின்றன. இது கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆனால்,  தொலைக்காட்சிப் பாவனை 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பரவலாக்கம் அடையவில்லை. இதன் தாக்கம் வானொலியை விட பயன்மிக்கதாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் பாவனை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் அதிகரிக்கலாயிற்று.

மூன்றாம் உலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகம் 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களிலே ஏற்படுத்தப்பட்டன. அநேகமான மூன்றாம் உலக நாடுகளில் தொலைக் காட்சியின் அறிமுகத்தை அந்நாடுகளின் அரசாங்கங்களே ஏற்படுத்தின. இலங்கையில் 1978ஆம் ஆண்டு சுயாதீனத் தொலைக்காட்சிச் சேவை முதல் தொலைக்காட்சிச் சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூபவாஹினி தேசிய ரீதியில் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் காணப்படுகின்றன. இவைகளுள் அநேகமானவை தனியாருக்குச் சொந்தமானவை. தொலைக்காட்சியிலும் தகவல்கள், செய்திகளை அறிவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களும் மிகைத்திருப்பதினால் வானொலிப் பாவனையைவிட 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொலைக்காட்சிப் பாவனை கூடிய செல்வாக்கினை செலுத்த ஆரம்பித்தது.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுடன் இன்னும் பலவிதமான தொடர்பாடல் ஊடகங்கள் மக்கள் முன் அறிமுகமாகின. குறிப்பாக மேற்குறிப்பிடப்பட்ட சேவைகள் பல வடிவங்களில் நவீனத்துவப்படுத்தப்பட்டதுடன்,  இணையத்தின் அறிமுகத்துடன் இணையத்தளங்களும் ஒரு முக்கியமான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மாறலாயிற்று. இந்த இணைய ஊடகங்கள் 21ஆம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தம் நிறைவடையும் இக்காலகட்டத்தில் மேற்குலக நாடுகளில் வளர்ச்சி கண்ட அளவிற்கு மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சி காணாவிடினும்கூட தற்போதைய நிலையில் அவைகளும் வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து கொண்டே வருகின்றன.

எனவே, ஆரம்ப காலகட்டங்களை விட மிலேனியத்தில் வாழும் எமக்கு ஊடகங்களின் தாக்கம் பல வழிகளிலும் மிகைத்ததாகவே உள்ளன. இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் மாத்திமல்லாமல் வளர்முக நாடுகளிலும்கூட ஊடகங்கள் பாரிய தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மறுப்பதற்கு இயலாது. எனவேதான் ஜனநாயக விழுமியங்களை மக்கள் முன் வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு பிரதான இடத்தைப் பெறுகின்றன எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை,  வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து ஒன்றில் அவை அரசாங்க ஊடகமாக இருப்பின் அதிகார வர்க்கத்தின் தாக்கங்கள் காணப்படலாம். அன்றேல் தனியார் ஊடகமாக இருப்பின் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான உரிமையாளர் அல்லது அந்த ஊடகத்துக்கு நிதியுதவியை வழங்கும் தனிப்பட்டவர் அல்லது குழுவினரின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருக்கலாம். மறுபுறமாக தனியார் ஊடகங்கள் வர்த்தக நோக்கத்துடன் செயற்படுவதனால் செய்திகளையோ,  தகவல்களையோ தான் முந்தி ஒலி / ஒளிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் அவசரத்தன்மையுடன் ஒலி / ஒளிபரப்புவதுடன் சிலநேரங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு விடுகின்றன. இத்தகைய நிலைகளினால் ஊடக தர்மம் செயலிழந்து வருவதை பல சந்தர்ப்பங்களிலும் அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக மேற்குல நாடுகளின் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அந்த ஊடகங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கருத்துக்களை திணிப்பதில் கூடிய அக்கறை காட்டி வருகின்றன. அதுமாத்திரமல்ல மூன்றாம் உலக நாடுகளிலும் முதலாளித்துவம் சார்ந்த தனது மேலைத்தேய பண்புகளை நியாயப்படுத்தி அவற்றை ஏதோ ஒரு வகையில் திணிக்க உடந்தையாக இருந்து கொண்டிருக்கின்றன. இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் அமெரிக்கவாதத்தின் ஏகாதிபத்தியத்தை உலகில் நிலைநிறுத்தி உலகில் உயர்ந்த நிர்வாகமும், சட்டவாக்கமும்,  நீதித்துறையும் அமெரிக்காவிடமே உள்ளது என்பதை எடுத்துக் காட்டவே சர்வதேச ஊடகங்கள் முனைகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகத்தை உள்ளங் கைக்குள் சுருக்கிவிட்ட இந்த சக்திகளால் இவற்றை இலகுவாக கையாள முடிகின்றன.

இதே பின்னணியில் தான் 3ஆம் உலக ஊடகங்களும் இன்று மாறிவிட்டன. குறிப்பாக 3ஆம் உலக நாடுகளின் ஊடகங்களும் அதிகார வர்க்கத்தின் முகவர்களாக அன்றேல் அதிகாரத்துக்காகப் போராடுபவர்களின் முகவர்களாக மாறிவிட்டன. இதனால் ஜனநாயகம் எனும் போது அதிகார வர்த்தக்திற்குரிய ஒரு முகப்பூச்சாகவே உள்ளதே அன்றி உண்மை நிலையினை பிரதிபலிப்பதாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 02 -புன்னியாமீன் –

sri-lanka.jpg(கடந்த வாரத் தொடர்ச்சி….)

இலங்கையில் ஜனாதிபதிப் பதவி பதவிக்காலத்துக்கு முன் வறிதாகினால் (வெற்றிடமாகினால்)…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன் வறிதாகினால் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 37ம் உறுப்புரை,  40ஆம் உறுப்புரை போன்றவற்றிலும் 1981ஆம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 37ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தியில் ஜனாதிபதிக்குரிய தத்துவங்களும், கடமைகளும், பணிகளும் பிரதமரினால் பிரயோகிக்கப்படுதலும், புரியப்படுதலும், நிறைவேற்றப்படுதலும் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுகவீனம் காரணமாக,  இலங்கையில் இல்லாமை காரணமாக அல்லது வேறேதும் காரணமாகத் தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும்,  பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி என்ற பதவியில் பிரதமரை ஜனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அவர் (ஜனாதிபதி) நியமிக்கலாம் என்பதுடன்,  அத்தகைய காலத்தின்போது பிரதமர் என்ற பதவியில் பதிற்கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம். (இச்சந்தர்ப்பத்தில் பிரதமர், பதவி வறிதாகியிருப்பின் அல்லது செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலப்பகுதியின்போது ஜனாதிபதியின் பதவிக்கான தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும்,  புரிவதற்கும்,  நிறைவேற்றுவதற்கும் அவர் சபாநாயகரை நியமிக்கலாம்)

37ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் ஒரு தற்காலிக ஏற்படாகும்.

1993 மே 1ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் பதவி வெற்றிடமானது. (யாப்பின் 38ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தி பின்வரும் சூழ்நிலைகளில் ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ) அவர் இறப்பதன் மேல்
ஆ)அவர் இராஜினாமாச் செய்வதன் மேல்
இ) அவர் இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழக்கும்போது
ஈ) தமது பதவிக்காலம் தொடங்கியது முதல் ஒரு மாதத்துக்குள் பதவி ஏற்காவிடில்
உ) 38(2) படி பதவி நீக்கம் செய்யப்பட்டால்
ஊ) 130(அ) படி அவரது தெரிவு பிழையானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால்
 இந்நிலையில் ஜனாதிபதியின் பதவி வறிதாகும்.

இந்நிலையில் (ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அவரின் பதவி வறிதாகும் நிலையில்) நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினருள் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென அரசியலமைப்பின் 40ம் உறுப்புரையில் (1) அ,  ஆ,  இ பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதிப் பதவிக்கு அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் பதவி வறிதாகிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.

அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட பின் இயன்றளவு விரைவாகவும், எச் சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். நாடாளுமன்ற சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியதான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும், அளிக்கப்பட்ட வாக்குகளின் பூரணப் பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்.

அரசியலமைப்பின் 40(1) (இ) பிரிவு அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட காலத்திற்கும், புதிய ஜனாதிபதிப் பதவி ஏற்கின்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தின் போது ஜனாதிபதிப் பதவியில் பிரதமர்  பதிற் கடமையாற்ற வேண்டும் என்பதுடன், பிரதமர்  பதவி, வறிதாக இருக்குமெனின் அல்லது பிரதமர் பதிற் கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருப்பாரெனின் ஜனாதிபதி என்ற பதவியில் சபாநாயகர் பதிற் கடமையாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அவர்களின் மறைவையடுத்து மேற்படி ஏற்பாடுகளுக்கமைய (அரசியலமைப்பின் 37(2), 40 (1) (இ) 1993 மே 01ம் திகதி இலங்கையின் பிரதமர் திரு. டி.பி. விஜயதுங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின்படி பதில் ஜனாதிபதிக்கு 1 மாதம் மட்டுமே கடமையாற்ற முடியும். இதற்கிடையில் 40ம் உறுப்புரைப்படி நாடாளுமன்றம் தமது உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) நாடாளுமன்ற சட்ட மூலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிப்பதவி வெற்றிடமாகி 3 தினங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படல் வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் 48 மணிநேரத்திற்குள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் விசேட பிரகடனத்தின்படி ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை (நாடாளுமன்ற அங்கத்தவர்களிடமிருந்து) கோரப்படுவதுடன் வேட்புமனு பெறும் காலம்,  நேரம் என்பனவும் அறிவிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தினுள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடாத்துவதற்குப் பொறுப்பாக பாராளுமன்றச் செயலாளர் நாயகமே இருப்பார்.

இத்தகைய தேர்தலின்போது கடைபிடிக்கப்படும் ஒழுங்குமுறைகள் சாதாரண தேர்தல் முறைகளை ஒத்ததாகும். வேட்புமனு கோரப்படுதல் எனும்போது இங்கு வேட்பாளரின் அனுமதியுடன் ஒரு அங்கத்தவர் அவர் பெயரைப் பிரேரித்து மற்றொருவர் ஆமோதிக்க வேண்டும். எதிர்ப்போட்டிகள் இல்லாதிருப்பின் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் ஏகமனதாக இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவிப்பார். அதையடுத்து ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து ஏற்கனவே பதவி வறிதான ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்வார்.

இதன்படி 1993-05-07ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது பதில் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு (திரு. விஜயபால மென்டிஸ் முன்மொழிந்தார்.) வழிமொழியப்பட்டு (திரு. ஏ.ஸீ.எஸ். ஹமீட் வழிமொழிந்தார்) எதிரப்பிரேரணைகள் இல்லாதிருந்தமையால் ஜனாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். (இவரின் பதவிக்காலம் 1995-01-02 உடன் முடிவடையும். (1988-01-02ஆம் திகதியன்று ரணசிங்க பிரேமதாஸ பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையவது 1995-01-02 ஆகும்)

ஜனாதிபதிக்கெதிரான  குற்றப்பிரேரனை ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டு வரக் கூடிய சந்தர்ப்பங்கள்:

ஜனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் வழி முறைகளைப் பற்றி நோக்குமிடத்து,  யாப்பில் 38ம் உறுப்புரையின்படி பின்வரும் சந்தர்ப்பங்களில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

38(2)அ – பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் கடிதத்தின் மூலம் மனப் பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாக அவரது பதவிக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமாக இயலாதுள்ளார் எனச் சார்த்துகின்ற அல்லது ஜனாதிபதி பின்வருவனவற்றைப் புரிவதற்குக் குற்றவாளியாக உள்ளாரெனச் சார்த்துகின்ற தீர்மானம் பற்றி அறிவித்தல் ஒன்றைக் கொடுக்கலாம்.

1. அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம்
2. தேசத்துரோகம் புரிந்த குற்றம்
3. இலஞ்சம் பெற்ற குற்றம்
4. தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் து~;பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழல் குற்றம்
5. அல்லது ஒழுக்கக்கேட்டை உற்படுத்தும் ஏதேனும் சட்டத்தின் கீழான ஏதேனும் தவறு.

மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்தும்படி உயர்நீதிமன்றத்தைக் கோர நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியும். இச்சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுகள் எழுத்து மூலம் குறிக்கப்பட்டு நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 2/3 குறையாதோர் கையொப்பத்துடன் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கலாம். இக்கையொப்பம் 2 /3க்குக் குறைவாக இருப்பின் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் மறுக்கவும் முடியும். இருப்பினும் குறித்த பிரேரணைக்குப் நாடாளுமன்ற அங்கத்தவர்களுள் 1/2 பாதிப் பங்கினருக்கு மேல் கையொப்பமிடப்பட்டிருப்பின், நியாயங்கள் காணப்படுமிடத்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற முடியுமென கருதினால் குறித்த பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சபாநாயகரால் சேர்க்க முடியும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் முறை

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டிய தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியைக் குறித்து தேர்தலை நடாத்துவார். தேர்தல் ஆணையாளரின் அதிகாரப்படி ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி 2010 ஜனவரி 26ம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய அபேட்சகர்:-

1. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினூடாக அல்லது
2. ஒன்றில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராயிருப்பின் அல்லது இருப்பவராயிருப்பின் சுயேட்சை வேட்பாளராக நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் பின்வரும் தகைமையீனங்களுள் எதற்கேனும் உட்பட்டவராகயிருத்தலாகாது என்று யாப்பின் 92ம் உறுப்புரை எடுத்துக் கூறுகிறது.

தகைமையீனங்கள் 31(1)

அ)  முப்பது வயதையடையாதவராக இருத்தல்
ஆ)  91ம் உறுப்புரை (1)ம் பந்தியின் ஈ,  உ அல்லது எ எனும் உற்பத்தியின் கீழ்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமை அற்றவராக இருத்தல்
இ) ஜனாதிபதிப் பதவிக்கு மக்களினால் இரு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருத்தல்
ஈ) 38ம் உறுப்புரையின் 2ம் பந்தியின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருத்தல்

தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரம் கோரப்பட்டதும் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்தல் வேண்டும். கட்டுப்பணமாக அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாகப் போட்டியிடுவதாயின் 50, 000வும், சுயேட்சையாகப் போட்டியிடுவதாயின் 75, 000வும் செலுத்தல் வேண்டும்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 2010 ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு,  தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக வேட்பு மனுத்தாக்கல்; செய்யப்பட்ட தினமான 2009 டிசம்பர் 17ம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் குழுக்களின் ஊடாக 23 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

2009 டிசம்பர் 17ம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிடுவார். இதற்கிணங்க இம்முறை மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாக ஆட்சேப மனுவொன்று மற்றுமொரு வேட்பாளரான சரத் கொங்காஹே மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.  மேற்படி மனுவை சமர்ப்பித்தவர் “சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாதெனவும்” குறிப்பிட்டிருந்தார். உரிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையாளர் கோரினார். ஆதாரங்கள் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறித்த ஆட்சேபனை மனுவை நிராகரித்ததுடன் மனுதாரர் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில் அவர்களுக்கெதிரான ஆட்சேபனை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர்,  ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இம்முறையே முதற்தடவையாகும்.

சிறிதுங்க ஜயசுரிய (ஐக்கிய சோசலிசக் கட்சி)
எம்.பி.தெமினிமுல்ல (ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு)
சரத் மனமேந்திர (நவ சிஹல உறுமய)
அச்சல அசோக்க சுரவீர (தேசிய அபிவிருத்தி முன்னணி)
ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி)
பத்தரமுல்லே சீலரதன தேரர் (ஜனசெத முன்னணி )
ராஜபக்ஸ பேர்சி மஹிந்த (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)
விக்ரமபாகு கருணாரத்ன (இடதுசாரி முன்னணி)
ஐ.எம். இல்யாஸ் (சுயேச்சை)
விஜே டயஸ் (சோசலிச சமத்துவக் கட்சி)
கார்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா (புதிய ஜனநாயக முன்னணி)
சரத் கோன்கஹகே (ஐக்கிய தேசிய மாற்று முன்னணி)
கே.பி.ஆர்.எல்.பெரேரா (எமது தேசிய முன்னணி)
மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா (சுயேச்சை)
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (சுயேச்சை)
டபிள்யூ.எம்.யூ.பி. விஜேகோன் (சுயேச்சை)
எம்.சீ.எம்.இஸ்மாயில் (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி)
ஹித்தக ஒஸ்வல்ட் அருண த சொய்ஸா (ருகுணு மக்கள் கட்சி)
சனத் பின்னதுவ (தேசிய மக்கள் கட்சி)
எதுருகே சேனாரத்ன சில்வா (தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி)
சன்ன ஜானக சுகத்சிறி கமகே (ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி)
வேகட வித்தாரணகே மஹிமன் ரஞ்சித் (சுயேச்சை)

இலங்கை அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக நீளமான வாக்குச் சீட்டு இத்தேர்தலின் போது வழங்கப்படவுள்ளது. வாக்குச் சீட்டின் நீளம் 22 அங்குலமாகும். அதாவது 56 செ.மீற்றர்களாகும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்படும் வாக்குச் சீட்டில் அபேட்சகர்களின் பெயர்கள் சிங்கள அகர வரிசைக்கிணங்க மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும். அபேட்சகர்களின் பெயருடன் கட்சியின் சின்னம் அல்லது அபேட்சகருக்கு வழங்கப்பட்ட சின்னம் இரண்டாம் கட்டத்தில் அச்சிடப்பட்டிருக்கும். 3ம் கட்டத்தில் வாக்களிப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வாக்களிக்கும் போது ஏனைய தேர்தல்களைப் போல “புள்ளடி” ( X ) யிடத் தேவையில்லை. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளரின் விருப்பத்திற்கமைய 1ம்,  2ம்,  3ம்,  4ம்….. விருப்பங்களைப் பதியலாம். இத்தேர்தலில் பிரதம வேட்பாளராகளாகக் கருதப்படும் சரத் பொன்சேக்காவின் சின்னம் அன்னப் பறவையாகும். மஹிந்த ராஜபக்ஸவின்  சின்னம் வெற்றிலையாகும். வாக்குச் சீட்டின் நகல் அமைப்பின் பிரகாரம் சரத் பொன்சேக்காவின் பெயர் 9வது இடத்திலும், மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் 22வது இடத்திலும் அச்சாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. 

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது விருப்பத்தை ஒரு வேட்பாளருக்கும், 3 வேட்பாளர்கள் போட்டியிடின் 1ம்,  2ம் விருப்பங்களையும்,  மூவருக்கு மேல் போட்டியிடின் 3ம்,  4ம் விருப்பங்களையும் வழங்குமாறு வாக்காளர் கேட்கப்படுவர். வாக்களிக்கும் போது ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் புள்ளடி இட்டால் அந்தப் புள்ளடி உரிய வேட்பாளருக்கான விருப்பத் தெரிவாகக் கொள்ளப்படும். மாறாக ஒரே வாக்குப் பத்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு புள்ளடி இடப்பட்டிருப்பின் அந்த வாக்குப் பத்திரம் நிராகரிக்கப்படும்.

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்.

இலங்கைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

வேட்பாளர்கள் 3 அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50 சதவீத வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர் (அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

இவ்வாறு நீக்கப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு பதியப்படும். இக்கணிப்பீட்டின்படி பின்பும் 50 சதவீதம் பெறாவிடின் 3ம்,  (4ம்) விருப்ப வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 32ம் உறுப்புரையின் 1ம் பந்திக்கிணங்க பிரதம நீதியரசரின் முன்னிலையில் அல்லது அந்நீதிமன்றத்தின் வேறு எவரேனும் நீதிபதியின் முன்னிலையில் சத்தியம் செய்து கீழ் ஒப்பிடுவதன் மேல் பதவியேற்றுக் கொள்வார்.

அடுத்த வாரம் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான குறிப்புகள் இடம்பெறும்.

Dec 20 -இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் – 01 : பீ.எம். புன்னியாமீன்-

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் – 01 : பீ.எம். புன்னியாமீன்

sri-lanka.jpg1978ஆம் ஆண்டு 2ம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் இதுவரை ஜே.ஆர். ஜயவர்தனா,  ஆர். பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க , சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க,  மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதிகளாக பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2005 நவம்பர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும்,  மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது வேண்டுகோளை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31(3) (அ) (1) உறுப்புரை ஜனாதிபதிக்கு அதிகாரத்தை  அளிக்கிறது.  இதன்படி முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றியும்,  ஜனாதிபதி கடமைகள்,  அதிகாரங்கள் பற்றியும் இதுகால வரை இலங்கையில் 1982, 1988, 1994, 1999, 2005 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் பற்றியும் ஆராய்வது பயனள்ளதாக இருக்கும். இந்த அடிப்படையில் இக்கட்டுரைத் தொடர் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி ஆட்சி முறையும்,  மந்திரிசபை ஆட்சி முறையும்

இன்றைய ஜனநாயக உலகில் காணப்படும் ஆட்சி முறைகளைப் பிரதானமாகப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) சனாதிபதி ஆட்சிமுறை
2) மந்திரிசபை ஆட்சிமுறை (வெஸ்மினிஸ்டர் ஆட்சிமுறை)

ஒரு நாட்டின் நிர்வாகத்துறை சட்டத்துறையினின்றும் தெரிவு செய்யப்படாது சட்டத்துறையுடன் நெருங்கிய தொடர்பற்றுக் காணப்படுமாயின் அத்தகைய ஆட்சி முறையினை சனாதிபதி ஆட்சிமுறை என்று அழைக்கின்றோம். உதாரணமாக எமது இலங்கையில் 1978ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறும் ஆட்சி முறையைக் குறிப்பிடலாம்)

ஒரு நாட்டின் நிர்வாகத்துறை சட்டத்துறையோடு நெருங்கிய தொடர்பு கொண்டு சட்டத்துறையிலிருந்தே தெரிவு செய்யப்படுமாயின் அத்தகைய ஆட்சிமுறையி மந்திரிசபை ஆட்சி முறை  எனப்படுகின்றது. உதாரணமாக 1978ஆம் ஆண்டின் முன்னர் இலங்கையில் காணப்பட்ட ஆட்சிமுறையினைக் குறிப்பிடலாம்.

பொதுவாக இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டினதும் நிர்வாகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே அரசமுறை பெயரிட்டு அழைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஜனாதிபதி ஆட்சி முறைக்கும் மந்திரிசபை ஆட்சி முறைக்கும் இடையேயுள்ள பிரதான வேறுபாடுகளைப் பின்வரும் தலைப்புக்களின் கீழ் சுருக்கமாக நோக்கலாம்.

1. தெரிவுமுறை

மந்திரிசபை ஆட்சி முறையின் தெரிவானது சட்டத்துறைக்குள்ளே இருந்து இடம்பெறும். பொதுவாக மந்திரிசபையின் தலைவராக பிரதமமந்திரி சட்டத்துறையின் உறுப்பினர்களிடமிருந்தே தெரிவு செய்யப்படுவார். (அநேகமாக ஆளும் கட்சியின் தலைவர்) நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான இந்த மந்திரிசபை. சட்டத்துறையினுள்ளிருந்தே பிரதமரால் அமைக்கப்படும். எனவே மந்திரிசபை சட்டத்துறைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஆனால்,  ஜனாதிபதி ஆட்சிமுறையினை எடுத்து நோக்குகையில் நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான ஜனாதிபதி சட்டத்துறையிலில்லாமல் தனிப்பட்ட அலகாகவே தேர்ந்தெடுக்கப்படுவார். உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியை இலங்கை மக்கள் நேரடியாக வாக்கெடுப்பின் மூலமாகத் தேர்ந்தெடுப்பர். எனவே சட்டத்துறைக்கு இவர் எவ்விதத்திலும் பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை.

2. அதிகாரப் பிரிவினை

ஜனாதிபதி ஆட்சி முறைக்கும்,  மந்திரிசபை முறைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு மற்றுமொரு மூல காரணி ஜனாதிபதி ஆட்சிமுறை அதிகாரங்கள் பிரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதேயாகும்.  ஜனாதிபதி ஆட்சிமுறையில் நிர்வாகத்துறை, சட்டத்துறையில் இருந்து பிரிக்கப்படுவதால் நிர்வாகத்துறை தனி அலகாகப் பரிணமிக்கின்றது. ஆனால் மந்திரிசபை ஆட்சிமுறையில் நிர்வாகத்துறை சட்டத்துறைக்குள்ளே அமைந்திருப்பதனால் ஜனாதிபதி ஆட்சிமுறை போன்று தனி அலகாகப் பரிணமிப்பதில்லை. அதாவது மந்திரிசபை ஆட்சிமுறையில் நிர்வாகத்துறையின் வாழ்வும்,  சாவும் சட்டத்துறையினால் தீர்மாணிக்கப்படுகிறது. ஏனெனில், சட்டத்துறை கலைந்தால் நிர்வாகத்துறையும் கலைந்துவிடும். ஜனாதிபதி ஆட்சிமுறையில் சட்டத்துறை கலைந்தாலும் நிர்வாகத்துறை கலைய வேண்டும் எவ்வித கட்டாயப்பாடும் இல்லை.

3. சட்டங்களின் தன்மை

மந்திரிசபை ஆட்சிமுறையில் சட்டத்துறையும்,  நிர்வாகத்துறையும் இணைந்திருப்பதனால் சட்டம் ஓரிடத்திலிருந்தே (சட்டசபையிலிருந்தே) பிறப்பிக்கக்கூடிய நிகழ்தகவு உண்டு. ஆனால்,  ஜனாதிபதி ஆட்சிமுறையில் சட்டங்கள் பல திசைகளிலிருந்தும் பிறப்பிக்கப்படலாம். இத்தகைய சட்டங்கள் தொடர்பற்றதாகவும் இயல்பற்றதாகவும் காணப்படக் கூடிய நிகழ்தகழ்வுகள் அதிகம்.

4. நிர்வாகத்துறையின் ஆயுள்காலம்

இவ்விருவகையான ஆட்சி முறைகளிலுமுள்ள வேறுபாடு நிர்வாகத்துறையின் ஆயுங்காலம் சம்பந்தமாகவும் காணப்படுகிறது. ஜனாதிபதி தெரிந்தெடுக்கப்பட்ட காலஎல்லை வரை பதவி வகிக்கலாம். உதாரணமாக இலங்கையில் 6 ஆண்டுகள் கொண்ட பதவிக் காலத்திற்கென தெரிவு செய்யப்படுவார். ஆனால் மந்திரிசபை ஆட்சிமுறையில் சட்டசபையின் நம்பிக்கை இழந்ததும் பதவியிலிருந்து நீக்கப்படுவார். நிர்வாகத்துறை,  சட்டத்துறை என்பவற்றின் பதவிக்காலம் யாப்பளவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சட்டத்துறையின் நம்பிக்கையைப் பொறுத்தே நிர்வாகத்துறை உள்ளதென்பது புலனாகிறது. 

மேலும்,  ஜனாதிபதி ஆட்சி நிலவும் சில நாடுகளில் ஜனாதிபதி பதவி வகிக்கக் கூடிய கால எல்லைகள் அரசியலமைப்பினூடாக வரையறுக்கப்பட்டிருக்கும்.  உதாரணமாக இலங்கையில் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இதன்படி இலங்கை ஜனாதிபதியின் அதிகூடிய பதவிக்காலம்  12 ஆண்டுகளாகும். ஆனால், மந்திரிசபை ஆட்சிமுறையில் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்படுவதில்லை.

மேலும்,  ஜனாதிபதி அரசியல் திட்டத்தினால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் காரணமாக தனது பதவியின் உறுதி காரணமாகவும்ää தனது அமைச்சரவையின் எஜமானாகக் காணப்படுவார். ஆனால்ää பிரதமருக்கும்ää அமைச்சரவைக்குமிடையே பாரிய வேறுபாடு காணப்படுதில்லை. காரணம் மந்திரியும் அவரது சகாக்களும் மக்களிடமிருந்து ஒரே விதமான அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதனால் அவர்கள் அந்தஸ்துடையவர்களாகவே கருதப்படுவர்.

மந்திரிசபை ஆட்சிமுறையில்,   இலங்கையில் ஜனாதிபதிப் பதவி

பிரித்தானியர் ஆட்சியிலிருந்த எமது இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தது முதல் மந்திரிசபை ஆட்சிமுறையே பின்பற்றிவந்தது. 1948இல் டொமினியன் அந்தஸ்துடன் கூடிய சுதந்திரத்தைப் பெற்றமையால் இலங்கையின் தலைவராக பிரித்தானிய மகாராணி அல்லது மகாராஜா விளங்கினார். 1947 முதல் 1972 வரை மகாராணியின் நேரடிப் பிரதிநிதியாக மகாதேசாதிபதி எனும் பதவி அலங்காரத் தலைமையாக அமைக்கப்பட்டிருந்தது.

மகாதேசாதிபதி இலங்கைப் பிரதரின் ஆலோசனைப்படி பிரித்தானிய முடியால் நியமனம் வழங்கப்பட்ட போதிலும் இவரின் கடமைகளும், அதிகாரங்களும் பிரதமராலும்,  அமைச்சரவையினாலுமே தீர்மானிக்கப்பட்டன. எனவே மகாதேசாதிபதி எனும் பதவியானது இலங்கையில் பெயரளவு நிர்வாகமாகக் (நாம நிர்வாகம்) காணப்பட்டது.

1972ஆம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இலங்கைக் குடியரசின் அரசியல்திட்டம் முன்வைக்கப்பட்டது.  இப்புதிய அரசியல் திட்டம் முன்வைக்கப்பட்டது முதல் ஏற்கனவே காணப்பட்ட அரசியல்திட்டத்தில் கூறப்பட்டிருந்த பிரித்தானியருடனான யாப்பு ரீதியான தொடர்புகள் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டன.  இலங்கையின் தலைவராக இலங்கைப் பிரஜை ஒருவரே விளங்கினார். இவரே ஜனாதிபதியாவார். (பிரித்தானிய முடியின் சார்பில் செயல்பட்ட நாமநிர்வாகமான மகாதேசாதிபதிப் பதவிக்குப் பதிலாக முதலாம் குடியரசு அரசியல் அமைப்பில் நாமநிர்வாகமாக ஜனாதிபதிப் பதவி ஏற்படுத்தப்பட்டது) இவர் பூரண நிறைவேற்று அதிகாரமிக்கவரல்ல. ஜனாதிபதியின் கடமைகளும், அதிகாரங்களும் இலங்கையின் பிரதமராலும்,  அமைச்சரவையினாலுமே தீர்மானிக்கப்பட்டமையினால் – ஜனாதிபதி அலங்காரத் தலைவராக, பெயரளவு நிர்வாகியாகக் காணப்பட்டார்.

1972ஆம் ஆண்டு அரசியமைப்பின் கீழ் அலங்காரத் தலைவரான ஜனாதிபதியின் தகைமைகள்,  தத்துவங்கள் என்பன பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

அ)  7ம் அத்தியாயம் – 19ம் உறுப்புரை
இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின்  தலைவராவார்.

ஆ) 7ம் அத்தியாயம் – 20ம் உறுப்புரை
ஜனாதிபதி ஆட்சித்துறைத் தலைவரும்,  ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவருமாவார்.

இ) 7ம் அத்தியாயம் – 21ம் உறுப்புரை
 அவர் போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யவும்,  தேசிய அரசுப் பேரவையைக் கூட்டவும்,  கூட்டத்தொடர்களை நிறுத்தவும்,  கலைக்கவும் அதிகாரமிக்கவர். முதலமைச்சரையும், அமைச்சரவைக்கான ஏனைய அமைச்சர்களையும்,  பிரதியமைச்சர்களையும் அவரே நியமிப்பர். மேலும்,  இலங்கைக் குடியரசின் பகிரங்க இலச்சனையைக் காப்பில் வைத்திருப்பார்.

குடியரசின் ஜனாதிபதியின் நியமனம்,  அவர் பதவியேற்றலும்  

அரசியலமைப்பின் 25ஆவது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினரைத் தெரிவு செய்யும் நோக்கத்திக்கான தேர்தல் ஒன்றில் தேருனரொருவராவதற்குத் தகுதியுடைய பிரசை எவரும் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதிப் பதவிக்கு முதலமைச்சரால் பெயர் குறிப்பிடலாம். (இதன்படி ஜனாதிபதியைப் பிரதம மந்திரி தெரிவு செய்வார் என்பது புலனாகிறது. இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் திரு. வில்லியம் கொபல்லாவ அவர்களாவர்)

ஜனாதிபதியின் பதவிக்காலம் பற்றி அரசியமைப்பின் 26ம் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஆயினும் அக்கால எல்லை கழியினும் கூட அடுத்துவரும் ஜனாதிபதி அவரது பதவியை ஏற்கும்வரை தொடர்ந்து ஜனாதிபதி பதவியிலிருந்து வருதல் வேண்டும்.

தேசிய அரசுப் பேரவை ஆக்கும் சட்டங்களுக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டியதில்லை. அவர் நிறைவேற்றிய நிறைவேற்றாது விட்ட எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கேள்வி கேட்க முடியாது. இவரின் செயற்பாடு தொடர்பாக இவருக்கெதிராக வழக்குத் தொடரமுடியாது. இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயலாற்றுவதால் அமைச்சரவையே இறுதிப் பொறுப்புக் கூறும்.

1ம் குடியரசு ஜனாதிபதியின் கடமைகளையும்ää அதிகாரங்களையும் அ) சட்டத்துறை சார்ந்தவை ஆ) நிர்வாகத்துறை சார்ந்தவை இ) நீதித்துறை சார்ந்தவை என பிரித்து ஆராய்ந்தாலும் பிரதமரின் (கெபினட்டின்) ஆலோசனைப்படியே புரிய வேண்டியிருந்தமை அவதானிக்கத் தக்கதாகும். ஆகவேதான் ஜனாதிபதி பெயரளவுநிர்வாகியாகவே கருதப்படுவார்.

இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை

1977 ஜுலை 21ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 8ஆவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முன்னெப்போதும் இடம்பெறாத வகையில் 168 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 140 உறுப்பினர்களை வென்றெடுத்து ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் திரு. ஜுனியர் ரிச்சட் ஜயவர்தனா அவர்கள் இலங்கையின் 7ஆவது பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஜே.ஆர். அரசாங்கம் 1ம் குடியரசு (1972) அரசியலமைப்பினை மாற்றியமைத்து 1978 பெப்ரவரி 04ம் திகதி 2ஆவது குடியரசு அரசியலமைப்பினை முன்வைத்தது. இந்த அரசியலமைப்பில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

இதில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற அம்சமாவதுää இலங்கையில் 1947 முதல் காணப்பட்டுவந்த மந்திரிசபை (வெஸ்மினிஸ்டர்) ஆட்சிமுறை நீக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமையாகும்.

1977 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபத்தில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையினை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தைக் கோரியிருந்தது.

1994 செப்டெம்பர் மாதத்தில் ஸ்ரீலங்கா ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட காமினி திசாநாயக்கா அவர்கள் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறை 2ம் குடியரசு யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டமைக்குக் காரணத்தினை விளக்குகையில் 1970 – 1977 வரை அரசாஙகம் இலங்கையில் கடைபிடித்த அரசியல், பொருளாதாரக் கொள்கையினால் இலங்கையில் சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரு பலமான நிர்வாகம் தேவை என்பதையும் கருத்திற் கொண்டே ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதித்துவ முறைக்கான அனுமதி கோரப்பட்டது. என்ற கருத்துப்படக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்து நீண்டகாலங்களுக்கு முன்பே ஜே.ஆர். ஜயவர்தனா அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்ததை அவதானிக்க முடிகின்றது. 1966இல் இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றிய திரு. ஜே.ஆர். ஜயவர்தனா அவர்கள் விஞ்ஞான அபிவிருத்திற்கான இலங்கை சங்கத்தின் (Ceylon Association for the Advancement of Science) 22ஆவது வருடாந்த மகாநாட்டில் உரையாற்றுகையில் “மக்கள் வாக்குகளின் மூலம் நிர்வாகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கூடிய ஆட்சிமுறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். J.R. Jayawardana Hon. Minister of State. Inaugural Address; Ceylon Association for the Advancement of Science. Twenty Second Annual Session 14th December 1966. Annual Publication for 1966 Page 61)  இதன் அடிப்படை இலங்கை வெஸ்மனிஸ்டர் முறை மாற்றியமைக்கப்பட்டு,  ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதாகும்.

இது மாத்திரமன்றி 1972 இல் 1ம் குடியரசு யாப்பு விவாதத்தின் போது திரு. ஜயவர்தன அவர்களினால் இக்கருத்து பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம். மேலும்,  1973இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றபின்னர் இலங்கையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதித்துவ முறைக்கிணங்க அரசியமைப்பு மாற்றியமைக்கப்படல் வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததுடன்,  1977 ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபன்திலும் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1977ம் ஆண்டு ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பொன்றை (அரசியலமைப்புத் திருத்தம்) முன்வைக்கப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் மக்களின் அனுமதி கோரப்பட்டதுடன்,  மக்களின் விருப்பத்திற்கிணங்க அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு,  அதிகாரங்களை வழங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டிருந்தது.

1977 பொதுத் தேர்தலில் ஐ.தே.க (5/6) பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றமையினால் இலகுவான முறையில்,  குறுகிய காலத்தினுள் முதலாம் குடியரசு யாப்பினை மாற்றியமைத்து புதிய அரசியலமைப்பினை முன்வைத்தது. 1978.02.04ம் திகதி அமுலுக்கு வந்த இந்த புதிய அரசியலமைப்பின்படி (மக்களின் ஏற்கனவே பெற்ற அனுமதிக்கிணங்க) திரு. ஜே.ஆர். ஜயவர்தனா அவர்கள் 1978.02.04 திகதி முதல் இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

(தொடரும்.)

சர்வதேச மனித உரிமைகள் தினம்.- International Human Rights Day : புன்னியாமீன்

every-human-has-rightsசர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள்,  மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. . ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக்குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம்  ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும்,  செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.

இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும்,  மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான  தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
 
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப் பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.

மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட ‘நோக்கப் பிரகடனமும்,”  கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட ‘அசோகனின் ஆணையும்”; கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘மதீனாவின் அரசியல் சட்டமும்” விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்” (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்”, 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்”. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்”, 1789ம்ஆண்டு  பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்” அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் “லீபர் நெறிகள்” 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் ‘சர்வதேச சங்கம்” உருவானது.  இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது,  என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும்,  மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத  உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.

மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது.  இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு  வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

every-human-has-rightsசர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

உறுப்புரை 1
சமத்துவ உரிமை – சகல மனிதர்களும்   சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

உறுப்புரை 2
ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம்,  பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!

உறுப்புரை 3
வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

உறுப்புரை 4 
அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல ‘யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.

உறுப்புரை 5
சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

உறுப்புரை 6
சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு

உறுப்புரை 7
சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.

உறுப்புரை 8
ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

உறுப்புரை 9
சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.

உறுப்புரை 10
நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

உறுப்புரை 11
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.
2. தேசிய,  சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.

உறுப்புரை 12 .
அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.

உறுப்புரை 13
1. ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை 

உறுப்புரை 14
ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு
1. வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும்,  துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும்,  நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

உறுப்புரை 15
1. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

உறுப்புரை 16
விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை
1. பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும்,  ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.

உறுப்புரை 17
சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
1. தனியாகவும்,  கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.

உறுப்புரை 18
மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம்
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.

உறுப்புரை 19
கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும்,  பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.

உறுப்புரை 20
எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.
2. ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 21
அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 22 
சமூகப்  பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை –

உறுப்புரை 23
தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை
1. ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.
2. ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.
3. வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.

உறுப்புரை 24
இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை –
இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.

உறுப்புரை 25
நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
1. ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.

உறுப்புரை 26
கல்விக்கான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 27
தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும்
உரிமை –
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.

உறுப்புரை 28
மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.

உறுப்புரை 29
ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
1. எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.

உறுப்புரை 30
இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.

தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே. இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர்பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது ‘ சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய்,  சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப்பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்.”

1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும்,  பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது. இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற் போதல்,  தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.

வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் நிறைவுபெற்றது. : புன்னியாமீன்

images.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் கீழ் கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் 06 மாதிரி வினாத்தாள்களை வழங்கியுள்ளதுடன்,  தனது இவ்வருடத்துக்கான நிவாரண செயற்றிட்டத்தை நிறைவு செய்து கொண்டது. 

வன்னி மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்ற நீண்டகால அடிப்படையைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்ட செயற்பாடுகளை முன்னேடுக்கத் திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதற் கட்டமாக தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட கல்வி நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய எமது கல்வி நிவாரண செயற்றிட்ட உதவிகளைப் பெற்ற 507 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை எமக்கு மன நிறைவினையளித்தது. அதேநேரம்,  தரம் 5 மாணவர்களின் செயற்றிட்டத்தை ஆரம்பித்த வேளையில் 300 மாணவர்களை சித்தியடையச் செய்ய வைக்கும் இலக்கோடு தான் நாம் செயற்பட்டோம்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால்,  மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை பாதுகாக்கும் நோக்கில் எமது கல்வி நிவாரண செயற்றிட்டங்களை முன்னெடுத்தோம்.

இந்த அடிப்படையில் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள்,  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள்,  ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினைத் வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்திற் கொண்டோம்.

01.  நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02.  யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03.  சாதாரண தர பரீட்சை தரம் 10,  11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே,  பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாட அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04.  நிவாரணக் கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ, வசதிகளோ இல்லாதிருந்தமை.
 
05.  புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட,

யுத்த சுழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக்கூடிய கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக்கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம்.

எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட 5 பாடங்களுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் 5 ஐயும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.

அதேநேரம்,  மாதிரிவினாத்தாள்கள்,  அரசாங்க வினாத்தாள்கள், கையேடுகள் என 77 அலகுகளாக வகுத்து இவற்றின் அச்சீட்டுக்கான தனித்தனி அச்சீட்டு செலவு விபரங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினோம்.

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்களல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களில் ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால்,  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

எமது இத்திட்டத்துக்கு உதவிகள் வழங்கியவர்கள்

அகிலன் பவுண்டேஷன் (லண்டன்) 500 பவுண்கள்
கரன் சேவிர்ஸ் ஸ்ரேசன்ஸ்  (லண்டன்) 500 பவுண்கள்
திரு பொன் சிவசுப்ரமணியம் (லண்டன்) 500 பவுண்கள்
தேசம்நெற் (லண்டன்) 500 பவுண்கள்

லண்டனிலிருந்து மொத்தம் 2000 பவுண்கள் கிடைத்தன.

கனடாவிலிருந்து (கனடாவில் திரு. Ahilan Navaratnam   அவர்கள் எமது திட்டத்திற்கு தானாக முன்வந்து பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்.)                
Ahilan Navaratnam                   500.00.  CDN
Vijayakaran Thuraisingam       200.00. CDN
Jeyanandan Sinniah                  100.00   CDN
Seenivasagam Navaratnam     100.00. CDN
N.Visuvalingam                            50.00. CDN
Sriskandarajah Anandarajah      50.00.  CDN    
Velupillai Pramsothy                   50.00.  CDN
Aiyadurai Shanmuganathan       50.00.  CDN
P.Arunasalam                               50.00.  CDN
R.Chandrarajan                            20.00.  CDN
V.Joganathan                                20.00.  CDN
                               Total –          1190.00. CDN
அனுப்புதல் செலவு               10.00   CDN
இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்தத் தொகை 1180.00 CDN
இலங்கை நாணயப்படி 129, 210.00 ரூபாய்களாகும்.
பிரித்தானிய நாணய அலகுப்படி 680 பவுண்களாகும்.

இத்திட்டத்திற்கு லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் கிடைத்த மொத்தத் தொகை 2680 பவுண்களாகும்.

இப்பணத்தொகையைக் கொண்டே நாம் 6290 மாணவர்களுக்குமான அச்சீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

எம்மால் அனுப்பப்பட்ட 6 மாதிரி வினாத்தாள்களுக்கும் மொத்த அச்சீட்டுச் செலவு 2847 பவுண்கள்.

மீதமான 167 பவுண்களை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இச்செலவீனங்களுக்கு மேலாக போக்குவரத்து, பொதியிடல் போன்ற செலவுகளையும் சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இது குறித்த பூரணமான கணக்கறிக்கை எமது செயற்றிட்டத்துக்கு பங்களிப்பு செய்தோருக்கு புத்தக வடிவில் அனுப்பப்படும். அக்கணக்கறிக்கையைப் பெற விரும்புவோர்கள் பின்வரும் ஈமெயில் முகவரிக்கு தங்களது முகவரிகளை அனுப்புமிடத்து தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை 40
எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் நிறை 761 கிலோகிராம்கள். 

அதேநேரம்,  இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதங்களை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும், இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும்,  கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால், வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இதனால் பேராதனைப் பல்கலைக்கழக மற்றும்  கண்டி பிரதேச புகழ்பெற்ற ஆசிரியர்களிடமிருந்து மாதிரிவினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் பெற்றுக் கொண்டோம். குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை சிந்தனைவட்டமே பொறுப்பேற்றுக் கொண்டது.

இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த எம்மவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. விசேடமாக பணமாகவன்றி தாம் ஏற்கனவே தயாரித்த மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகளையும்கூட தருவதற்கு இவர்கள் முன்வராமை இவ்விடத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமே.

நாம் வழங்கிய மாதிரிவினாத்தாள்களை பின்வரும் பெருந்தகைகள் எமக்குத் தயாரித்துத் தந்தனர்.

ஜனாப் யூ.எல்.எம். பஷீர் – வரலாறு ஆசிரிய ஆலோசகர்
திருமதி மஸீதா புன்னியாமீன் – பயிற்றப்பட்ட கணித, விஞ்ஞான ஆசிரியர்
ஜனாப் ஏ.எம். பாயிஸ் – பயிற்றப்பட்ட கணித ஆசிரியர்
செல்வி தஸ்மின் ரியால் – தமிழ் பட்டதாரி ஆசிரியர்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு

மேலும், எம்மால் வழங்காமல் கைவசமுள்ள மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் தயாரித்துத் தந்த பெருந்தகைகள்.

ஜனாப் யூ.எல்.எம். பஷீர்;
திருமதி மஸீதா புன்னியாமீன்;
செல்வி தஸ்மின் ரியால
ஜனாப் ஏ.எம். பாயிஸ்
திரு. சிவநாதன் (கல்விப் பணிப்பாளர்)
திருமதி. எம்.ஐ. நளீமா
திருமதி. எம்.ஐ.எஸ்.மும்தாஜ்
திருமதி. சாபிரா நஸார்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு

இவர்களுக்கு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் வன்னி முகாம் அகதிகள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

எமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்:

1. ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாத இறுதியில் எம்மால் ஆரம்பிக்க முடியாமல் போனமை (இதற்கு மூல காரணம் ஆரம்பத்தில் எமக்கு நிதியுதவிகள் கிடைக்காமையே)

2. ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் முகாம்களில் இருந்த மாணவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டமை (இம்மாணவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டாலும்கூட எம்மால் அனுப்பப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் மீள்குடியேறிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.)

3. பிரதான காரணம் மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு எவ்விதமான நிதியுதவிகளும் எமக்குக் கிடைக்காமை.

எவ்வாறாயினும் ஓரளவுக்காகவது ஒரு சிறிய உதவியாவது வன்னி மாணவர்களுக்கு  செய்யக் கிடைத்தமையை ஒரு பேறாகவே கருதுகின்றோம். இத்திட்டத்திற்கு எம்மால் ஒரு மாணவனுக்கு வழங்க முடியுமாக இருந்த தொகை 45 பென்ஸ்கள் மாத்திரமே.

எதிர்கால ஆலோசனைகள்:

தற்போது அரசாங்கம் செயற்பட்டுவரும் முறையில் அரசாங்கம் 2010 ஜனவரி 31க்கு முன்பு முகாம்களிலுள்ள அனைத்து அகதிகளையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. (டிசம்பர் விடுமுறைக்கு முன்பாக கிளிநொச்சி முல்லைத் தீவு பிரதேசங்களில் மேலும் பல பாடசாலைகள் திறக்கப்படலாம்)

பாடசாலைகளைத் திறப்பதால் மாத்திரம் அல்லது திறந்த பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மாத்திரம் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துவிட மாட்டாது. விசேடமாக புலம்பெயர் தமிழர்களும்,  இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களும் வன்னி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவற்றையும் தமது செயற்றிட்டங்களில் சேர்த்துக்  கொள்ளல் வேண்டும்.

குறிப்பாக மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களிலுள்ள பாடசாலைகள் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதாகவுள்ளன. போதிய ஆசிரியர்கள் இல்லை. போதிய வளங்கள் இல்லை. உள்ள வளங்களைக் கொண்டே தற்போதைய கல்வி நிலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இத்தகைய மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியம். எமது அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து அகதிமுகாம்களில் வாழ்ந்த மாணவர்களுக்கு தரம் 05 பாடப்பரப்பை மையப்படுத்தி எம்மால் ஒரு நிறைவான வழிகாட்டலைக் காட்ட முடிந்தது. இதன் விளைவாக 507 மாணவர்கள் சித்தியடைந்தனர். 2010ஆம் ஆண்டில் நிவாரணக் கிராம மாணவர்கள் என்பதை விட மீள்குடியமர்த்தப்பட்ட மாணவர்கள் என்றடிப்படையில் தரம் 05 புலமைப்பரிசில்,  க.பொ.த.சாதாரண தரம்,  க.பொ.த. உயர்தரம் போன்ற மூன்று அரசாங்கப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துதல் வேண்டும். இது உங்கள் பொறுப்பு.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு. இது யதார்த்தம். எனவே பேசிப்பேசிக் காலத்தைக் கழிக்காமல் நிலையான திட்டமொன்றின் கீழ் இணையுமிடத்து வன்னி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியில்லாவிடில் அம்மாணவர்களின் கல்விநிலை இன்னும் சில ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்க முடியாததே.

அவ்வாறு ஏற்பட்டால் என்றோ ஒரு நாள் நாம் கைசேதப்பட வேண்டிய நிலை உருவாகும்.