வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிவாரணப் பணிகளில் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ளலாம் என மீள் குடியேற்ற அமைச்சர் எம்.எம்.வீரக்கோன் தெரிவித்துள்ளார். வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும், யாழ்.குடாநாட்டிலும் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை சனிக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
மீள் குடியேற்ற அமைச்சர் விடுத்துள்ள இந்த அழைப்பினை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணப் பணிகளில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.