செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பாடசாலைகளுக்கு செல்லாமல் வீதிகளில் யாசகம் எடுக்கும் இலங்கையின் 30000 சிறுவர்கள்!

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இந்நிலைமை எதிர்காலத்தையும் பாதிக்கலாம்.

இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் வீதியில் யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

 

இந்த சிறுவர்களில் சிலர் தங்களது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினால் யாசகம் பெறுவதற்கும் பணம் சம்பாதிக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் தள்ளப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.

 

4 முதல் 15 வயதுக்கு உட்பபட்ட பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீதிகளிலும் புனிதத் தலங்களிலும் சன நெரிசல்மிக்க இடங்களிலும் யாசகம் பெறுகின்றனர்.

 

சில பெற்றோர்கள் இந்த சிறுவர்களை கூலி வேலைகளுக்காகவும் வீதியோர வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த சிறுவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனைக்கும் பல்வேறு குற்றச்செயல்களுக்கும் அடிமையாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன், தவறணை உரிமையாளர் ரரின் கொன்ஸ்ரன்ரைன் பெண்களது சிறுமிகளது படங்களை சமூவலைத்தளத்தில் பதிவிடுவதையும் துஸ்பிரயோகம் செய்வதையும் நிறுத்த வேண்டும்!!!

சமூக வலைத்தளங்களில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டுவந்த ஜெய் – கொன்ஸ் இரட்டையர்கள் பயன்படுத்திய வட்ஸ்அப் குறூப் மார்ச் 25 தேசம்நெற் – தேசம்திரையில் சாட்சியங்களோடு வெளியான பதிவைத் தொடர்ந்து, அதன் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளரான ஜெய் என்ற பெயரில் எழுதி வந்த ஆர் ஜெயதேவன் மற்றும் தவறணை மில்லியனெயர் ரரின் கொன்ஸ்ரன்ரைன் ஆகிய இரட்டையரே இந்த வட்ஸ்அப் குறூப்பில் சமூக விழுமியங்களுக்குப் புறம்பாக பெண்களின் படங்களை, பதினெட்டுவயதுக்கும் குறைந்த இளம் பெண்களின் படங்களை சிறுவர்களின் படங்களைப் பதிவேற்றி பாலியல் உறுப்புகள், மன்மதக்குஞ்சுகள் என்றெல்லாம் சம்பாசித்து வந்துள்ளனர்.

இவ்வாறாக ஆண்கள் மட்டுமே உள்ள சமூக வலைத்தளத்தில் பெண்களை, இளம்பெண்களை, சிறுவர் சிறுமிகளைப் பதிவேற்றிய இந்த இரட்டையர்கள் அறுபது வயதைத் தாண்டியவர்கள். ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் திருமண வயதில் உள்ள இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று பிள்ளைகளின் தந்தை. இரண்டாயிரமாம் ஆண்டு நடுப்பகுதிகளில் இவருக்கும் நோர்வேயில் இருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக அறியப்பட்ட ‘ஊத்தை’ சேதுவுக்கும் நடந்த சமூக வலைத்தள மோதலில் ஆர் ஜெயதேவனின் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தது. இப்போது ஆர் ஜெயதேவனும் கொன்ஸ்ரன்ரைனும் சேர்ந்து பெண்கள், இளம்பெண்கள், சிறுவர் சிறுமிகளின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரெஸ்ரெஸ்திரோஜன் பம்பண்ணுவதாக சல்லாபிக்கின்றனர். ரரின் கொன்ஸ்ரன்ரைனுக்கும் திருமண வயதில் ஒரு பெண் பிள்ளையுட்பட இரு பிள்ளைகள் உள்ளனர்.

பகலில் ஈழபதீஸ்வரர் மற்றும் ஆலயங்களின் பூஜைகளை, மட்டக்களப்பில் தங்கள் ஆலயம் வீடுகட்டிக்கொடுப்பதைப் பதிவிடும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர், இருள ஆரம்பித்ததும் ரரின் கொன்ஸ்ரன்ரைன் பெண்களின், சிறுமிகளின் படங்களைப் பதிவேற்றி தங்கள் வக்கிரத்தைக்கொட்டும் வகையில் சில வசனங்களைப் பதிவேற்றுவார். அதனைத் தொடர்ந்து அதற்கு பொழிப்புரை எழுத வரும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் அந்தப் பெண்களின், சிறுமிகளின் படங்களின் கீழ் பாலியல் உறுப்புகள், மன்மதக் குஞ்சுகள் என்று சிலாகிப்பார். இதன் உச்சமாக மார்ச் 23இல் இளம்பெண்களின் படத்தைப் பதிவேற்றி பாலியல்தூண்டலை ஏற்படுத்தும் ரெஸ்ரெஸ்திரோன் பம் பண்ணுவது பற்றி சல்லாபித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே தேசம்நெற் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக குறித்த வட்ஸ்அப் குறூப் கலைக்கப்பட்டது.

இந்த சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட சிறுமிகள் வேறுயாருமல்ல ரரின் கொன்ஸ்ரன்ரைனது வைத்தியரும் ரரின் கொன்ஸ்ரன்ரைனின் மகனுக்கு கற்பித்த ஆசிரியரதும் பெண் பிள்ளைகளும் மகனும். அதைவிடவும் அவர்கள் ஈழபதீஸ்வரரையும் நம்புபவர்கள். மேலும் இவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டவர்களில் ஈழபதீஸ்வரர் மீது நம்பிக்கை கொண்டவர்களும் இருந்தனர். கடந்த சில மாதங்களாகவே பெண்களைத் துஸ்பிரயோகம் செய்யும் வகையிலும் இப்பெண்கள் இரண்டாவது, மூன்றாவது, ஐந்தாவது நபராக திருமணமாவதாக ஏளனம் செய்யும் வகையில் குரங்குகளோடு இணைத்தும் பல பதிவுகளை இந்த ஜெய் – கொன்ஸ் இரட்டையர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்தக் கீழ்த்தரமான பதிவுகளைப் பதிவிட்ட இந்த இரட்டையர்கள் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு பெண்ணின் படத்தை மஹிந்த ராஜபக்ச ஒரு பெண்ணுடன் ஒட்டுறவாக இருக்கும் படத்தோடு ஒப்பிட்டு இப்பெண்ணும் சிங்கள இரத்தம் கலந்த ஒருவரை பிடித்துள்ளார் என்ற தோரணையில் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் எழுதியுள்ளார். ஆர் ஜெயதேவன் – ரரின் கொஸ்ஸ்ரன்ரைன் இரட்டையர்கள் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே நான் முந்தி நீ முந்தி என்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விருந்து சாப்பிட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகிந்த ராஜபக்சவுடன் விருதுண்ண முன்பிருந்தே புலனாய்வுத்துறையோடும் நெருக்கமாக இருந்த இவர்கள் தற்போது தஞ்சம் கோரிய பெண்ணொருவரது படத்தை வெளியிட்டு அவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையில் இருந்ததாக காட்டிக்கொடுக்கிறார்களாம்.

இவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், “இந்த அயோக்கியர்களை கோயில்களுக்குள் விடவே கூடாது. ஆனால் எப்பிடி ஈஸபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளராக இருக்கின்றான்?” என்று கேள்வி எழுப்பினார். “இந்தக் கோயில்களை யார் நடத்தலாம் என்றில்லாமல் மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் கோயில் நடத்தினால், இவன்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் கொடுமால் சமூக சேவையா செய்வான்கள் என்றும் அவர் கொதித்தெழுந்ததார். ஓம் சரவணபவ வட்பேடில் காமக்குத்து அடித்த குற்றச்சாட்டுக்கு வெள்ளையடிக்க தாயகத்தில் வீடு கட்டிக்கொடுகிறார். இங்க ஈழபதீஸ்வவர் ஆலய உரிமையாளர் ஜெயதேவன் மட்டும் என்ன செய்கிறார் ? தன்னுடைய சீர்கெட்ட பழக்கவழக்கங்களை மறைக்க கோயில், வீடு கட்டுகிறேன் என்று வைற் வோஸ் அடிக்கின்றார்” என்கிறார்.

இவர்களால் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு பாதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணின் கணவர், தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் “இந்த பார் மில்லியனெயர் ரரின் கொன்ஸ்ரன்ரைனும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவனும் இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ அல்ல. இவர்கள் மனிதப் பிறப்புகளே இல்லை” என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இவ்வாறான அயோக்கியர்களாலேயே பெண்கள் முன்னுக்கு வரப் பின்நிற்கின்றனர். இந்தப் படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் இவ்வளவு க்குப் பரப்பப்பட்டால் எந்தப் பெண் தான் சமூக நோக்கத்தோடு முன்வந்து செயற்பட முன்வருவாள்” எனக் கேள்வி எழுப்பினார்.

இணைப்பை அழுத்தி, கொன்ஸ்ரன்ரைன் பெண்ணொருவரை விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று காட்டிக்குடுக்கிறாராம் என்ற அவர் சமூக வலைத்தளத்தில் அப்பெண்ணின் படத்தோடு பரவவிட்ட அவதூறைப் பார்க்கலாம்.

Constantine_T_LTTE_Harasment_01

இது பற்றி தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த வெம்பிளியில் வாழும் ஈழபதீஸ்வரர் ஆலய அடியார் சிவா மயில்வாகனம், தான் ஈழபதீஸ்வரர் ஆலயம் புலி ஆதரவாளர்களால் நடத்தப்படும் போது இருந்தே சென்று வருவதாகவும் பல கொலைகளுக்கும் காரணமான கிருஷ்ணன் இருக்கும் போதும் ஆலயத்துக்கு சென்று வந்ததாகவும் தெரிவிக்கும் அவர் கள்ளனாகப் பார்த்து திருந்தாவிட்டால் சராசரி மனுசர் நாங்கள் என்ன செய்ய முடியும் எனத் தெரிவித்தார். நாளைக்கு நாங்கள் ஏதாவது கேட்டால் என்னுடைய மனைவி பிள்ளைகளின் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் இறுதியாகக் குறிப்பிடுகையில் “அவனொருதன் இருந்து எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்” எனத் தெரிவித்தார்.

“இவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே? ஏன் இவர்கள் இப்படி நடந்துகொள்கின்றனர்?” என்று கேள்வி எழுப்பிய பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி, “இவர்கள் வயோதிபப் பெண்களையும் விட்டுவைக்கவில்லை. அவர் இளமையாக இருக்கும் போது விபச்சாரம் செய்தார்” என்று வேறு எழுதுகின்றனர். இவர்களுடைய வீட்டில் உள்ள மனைவி, பெண் பிள்ளைகள், ஏனைய உறவுப் பெண்கள் இவர்களால் என்னபாடு படுவார்கள்” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “ஈழபதீஸ்வரர் ஆலயக் குருக்கள், பக்தர்கள் மற்றும் ஆர் ஜெயதேவனின், ரரின் கொன்ஸ்ரன்ரைனின் குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், இவர்கள், பொதுவெளியில் பெண்களுக்கு ஆபத்தானவர்களாக மாறியிருப்பதையும் குடிபோதையில் சாமம் சாமமாக படங்களைப் பதிவேற்றி வக்கிரங்களைக் கொட்டுவதையும் தடுக்க முன்வர வேண்டும். முடிந்தால் இவர்களுக்கு பெண்ணிய வாதியும் மனித உரிமைவாதியுமான நளினி ரட்ணராஜா குறிப்பிடுவது போல் உளவியல் ஆலோசணைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அப்பெண் மேலும் தெரிவிக்கையில், “இது ஒரு சில பெண்களது பிரச்சினைமட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தினதும் பிரச்சினை. இவ்வாறானவர்களை சமூகமும் அவரது நட்புகளும் உறவுகளும் களையெடுக்க வேண்டும். அப்போது தான், பாரதி கண்ட புதுமைப் பெண்ணால் சமூகவலைத்தளத்திற்கு வர முடியும். இல்லாவிட்டால் அவளையும் பொதுத்தளத்தில் இந்தக் காமுகர்கள் ஒரு பாலியல் தொழிலாளியாக்கி விடுவார்கள்” என்று தெரிவித்தார்.

இவ்விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுடன் தொடர்புடைய பலரும் தேசம் ஊடகவியலாளர் தன்னுயிர் தொடர்பிலும் கவனமெடுக்குமாறு ஆலோசணை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இலங்கைக்குச் சென்றுவருவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கின்றனர். இது தொடர்பில் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கீழே இவ்வாறு ஆண்கள் ஏன் நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றி மனித உரிமைவாதி நளினி ரட்ணராஜாவுடனான நேர்காணலைக் காணலாம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்ப கடவுச்சீட்டு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்புவதற்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மூவரும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ் நாட்டு அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

தமிழ் நாட்டு சட்டத்தரணி புகழேந்தி தொலைப்பேசி ஊடாக ஆதவனின் செய்திப் பிரிவுக்கு இதனை தெரிவித்திருந்தார்

 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணைக்குட்படுத்தப்படம்டு 30 ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி ரொபர்ட் பயஸ் ஜெயக்குமார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் 2022ஆம் ஆண்டு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

 

விடுவிக்கப்பட்டவர்களில்; நளினியின் கணவர் முருகன் உட்பட சாந்தன் ஜெயக்குமார் ரொபர்ட் பயஸ் ஆகிய நால்வர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் குறித்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இதன்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சாந்தன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

 

குறித்த வழக்குசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது முருகன் ஜெயக்குமார் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு செல்வதற்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் – இரு சகோதரர்களை தேடும் பொலிஸார்!

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

 

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சகோதரர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள்,சிறுமியுடன் முகநூல் மூலம் அறிமுகமானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைவிடப்பட்டது கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி !

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

 

கீரிமலை, ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று (26) வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் சற்றுநேரம் பதற்றநிலை ஏற்பட்டது.

 

பின்னர் காணி உரிமையாளர்களின் நீண்ட நேர எதிர்ப்பினை அடுத்து, காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதிக் கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – சாகல ரத்நாயக்க

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

 

எத்தனை கல்விச் சீர்திருத்தங்களைச் தயார் செய்தாலும், அதற்கேற்ப மனித வளங்களை முகாமைத்துவம் செய்யாவிட்டால், கல்விச் சீர்திருத்தங்கள் பலனளிக்காது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

 

மாத்தறை கொடபொல இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் திங்கட்கிழமை (25) கலந்துகொண்டபோது, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

 

கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 குழுவின் முழுமையான நிதி உதவியுடனும் 12ஆவது இராணுவப் பொறியியலாளர் சேவைப் படைப்பிரிவின் பங்களிப்புடனும் இந்தப் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலைக்குச் சென்ற சாகல ரத்நாயக்கவுக்கு மாணவர்களால் அமோக வரவேற்பளிக்கட்டது.

 

மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் பல கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றும் சாகல ரத்நாயக்க மேலும் கூறியதாவது,

 

”இரண்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு ஆறு மாத காலமே சென்றது. இப்பாடசாலையின் பௌதீக வளங்கள் மட்டுமன்றி மாணவர்களின் கல்வியிலும் தற்போது முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளில் அதிபரின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இக்கட்டடத்தை நிர்மாணிப்பதில் இராணுவம் பாரிய பங்களிப்பு வழங்கியது.

 

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது. கல்வித் திட்டங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மனித வளத்தை நிர்வகிக்க வேண்டும். கடந்த காலங்களில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வரிசைகள் ஏற்பட்டன. அந்த நிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்நாட்டின் பொருளாதார நிலைமையை குறிப்பிடத்தக்க நிலைக்குக் கொண்டு வர பாடுபட்டார்.

அதற்கு அப்பால் இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய வேலைத் திட்டம் அவசியம். அதற்காக ஜனாதிபதி தற்போது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இலங்கை மத்திய வங்கி சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கி விவகாரங்களில் இனி அரசியல்வாதிகள் தலையிட முடியாது என்பதே இதன் பொருள். மத்திய வங்கி நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும், ஒவ்வொரு நிறுவனமும் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அதற்குத் தேவையான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செயற்படாத நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

 

அத்துடன், நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார வேலைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்துவமான முறைகளின் மூலம் அந்தப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் தெனியாயவுக்கும் விசேட இடம் உண்டு. சுற்றுலாத் துறையிலும் தேயிலைத் தோட்டத் தொழிலிலும் தெனியாயவுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. அதற்கேற்ப இப்பகுதி மக்களுக்கும் செலவுக்கு ஏற்ற வருமானம் பெறும் பின்னணியை தயார் செய்து வருகிறோம்” என சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

 

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான அமநடா வீரசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் ஏ.ஜி.என்.சி. லக்மால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கில் 12 மாதங்களில் 50ற்கும் மேற்பட்ட படுகொலைகள் – 129 பேர் கைது !

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட பகுதிகளில் 14 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 44 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 11 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 05 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

மன்னார் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 04 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 06 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 04 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 07 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 13 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 37 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் மருத்துவமனைகளை முற்றுகையிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தும் இஸ்ரேல் !

காசாவில் இஸ்ரேலிய படையினர் மேலும் இரண்டு மருத்துவமனைகளைமுற்றுகையிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  சர்வதேச செம்பிறை குழு கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

எங்கள் குழுக்கள் கடும் ஆபத்தில் சிக்குண்டுள்ளன முற்றாக செயல் இழந்துள்ளன என செம்பிறை சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது.

கான் யூனிசில் நாசெர் அல்அமால் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் திடீரென டாங்கிகளுடன் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் தங்களின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல உடல்களை காணமுடிந்துள்ளது என தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் சர்வதேச ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள் அவ்வப்போது எறிகணை வீச்சில் ஈடுபடும் என மருத்துவமனையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள ஐந்துமாடிக்கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் சர்வதேச செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார் எங்களை அச்சுறுத்தவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதுகெலும்புள்ள தலைவர்களே முதலாளித்துவ சக்திகளின் எதிரி – ஜே.வி.பி பலமான சக்தியாக எழுச்சியடைகிறதா ?

இலங்கையின் அண்மைய கால பொருளாதார நிலை தொடர்பிலும் – அதன் வீழ்ச்சியில் காலனித்துவ காலம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பிலும் – முதலாளித்துவ சிந்தனையுடைய மேலைத்தேய நாடுகள் விடுதலை புலிகளுடன் எவ்வாறான போக்கினை பின்பற்றினர் என்பது தொடர்பிலும் – பொருளாதார நெருக்கடிக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் ஜே.வி.பி எவ்வாறு உருமாறியுள்ளது என்பது தொடர்பிலும் சமகால உலக அரசியல் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதன் பின்னுள்ள அரசியல் போக்கு மற்றும் இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடன் பரபரப்பான ஓர் அரசியல் கலந்துரையாடல் .

 

இது தொடர்பான மேலதிக தகவலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவமு்.. !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். – உதய கம்மன்பில

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவரை நாங்கள் நன்கு அறிவோம். உண்மைகளை ஒருபோதும் பகிரங்கப்படுத்தமாட்டார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதனை மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என நாங்கள் குறிப்பிட்டது அடிப்படையற்றது,நடைமுறைக்கு சாத்தியமற்றது என பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகிறார்.சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு முடியாது.மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணைகளை முன்னெடுத்தததன் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று குறிப்பிடுவது தவறு,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைனகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகத்துக்கிடமானதாக காணப்படுகிறது.குண்டுத்தாக்குதலை யார் நடத்தியது என்பதை தான் நன்கு அறிவதாக மைத்திரிபால சிறிசேன மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் அந்த தகவலை இரகசியமான அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு குற்றம் தொடர்பிலோ அல்லது குற்றத்துடன் தொடர்புடைய தகவல் தெரிந்தால் அதனை பொலிஸுக்கு  அறிவிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்திடம் குறிப்பிட முடியாது.நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தும் சந்தேகநபர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதனை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

1979 பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5 ஆவது உறுப்புரையில் ‘ பயங்கரவாத செயற்பாடு தொடர்பான தகவல் அல்லது அது தொடர்பான தகவல்களை அறிந்த நபர் அதனை பொலிஸிற்கு அறிவிக்காமல் இருப்பது  7 வருடகால கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதனை மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்கவில்லை.ஆகவே இவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் ஏழு ஆண்டுகால கடூழிய சிறைதண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். ஆகவே சட்டம் தெளிவாக உள்ளது. மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும்.

மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர் ஒருபோதும் உண்மையை குறிப்பிட மாட்டார்.அமைச்சரவை  அந்தஸ்த்துள்ள அமைச்சரை கைது செய்து பொலிஸ் தனது சுயாதீனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.அதே போல் முன்னாள் ஜனாதிபதியையும் கைது செய்து தனது சுயாதீனத்தை பொலிஸ் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை கொண்டு பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், தகவல்கள் தெரிந்தால் அதனை பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுகிறார். குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் ஆகவே மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.