செய்திகள்

செய்திகள்

செய்திகள்

லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் இளம் சிறுமிகளின் படங்கள் ஆண்கள் மட்டுமே உரையாடும் சமூகவலைத் தளங்களில்!!!

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் இளம்சிறுமிகளின் படங்கள் சமூகவலைத் தளங்களில் பரவவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு 22 இரவு அதாவது மார்ச் 23 அதிகாலை 00:27 மணி முதல் கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் பல பெண்களின் படங்கள் சமூக வலைத் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. ‘கோபால் நைஸ் மசேஜ் ஒன்லி’ என்ற வட்ஸ்அப் தளத்தினூடாகவே இப்படங்கள் பரப்பப்பட்டுள்ளது. லண்டனில் சைவ ஆலயங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்று வருகின்ற இக்காலகட்டத்தில் பதினெட்டு வயது நிரம்பாத இளம் குழந்தைகளின் படங்களை சமூகவலைத்தளங்களில் ஏற்றி ரெஸ்ரெஸ்ரிரோன் சுரப்பி பற்றி அறுபதுக்களைத் தாண்டிய ஆண்கள் கூட்டம் சிற்றின்பம் காண்கின்றது.

பெண்களின் சருமத்தை விரைவாக வெண்மையாக்கும் கிறீம்களால் புற்றுநோய்கள் ஏற்படுவது உறுதி !

கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களின் விநியோகங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

பெண்களின் சருமத்தை விரைவாக வெண்மையாக்கும் என கூறி குறித்த கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும்,இதனால் புற்றுநோய்கள் ஏற்படுவது உறுதி என்றும் தெரிவித்திருந்தார்.

இணைய சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது, அவர் பெயர் குறிப்பிட்டே ‘chandhani’ எனும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் முகத்தினை வெண்மையாக்கும் க்ரீம் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த க்ரீமினை பாவிக்க வேண்டாம் என்றும், இதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தோம். இதில் ஈயம் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதரசத்தின் அளவும் அதிகம், கென்டியம் எனும் மூலப்பொருளும் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை. மேற்கூறப்பட்ட க்ரீமினால் நிச்சயமாக புற்றுநோய் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இதன்போது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இலங்கை சந்தையில் சூட்சமமாக பயன்படுத்தப்படுகின்றது.

சில கிரீம்கள் இலங்கையின் பிரபல அழகுக்கலை பார்லர்களில் விற்பனைக்கு கூட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மொஸ்கோ இசைநிகழ்ச்சியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு – உக்ரைனை சாடும் புடின் !

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கி;ல் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஸ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது. அரங்கில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கி;ல் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஸ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அரங்கில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை  ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.

டெலிகிராமில் ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது எனினும் இந்த தாக்குதலைதான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.

இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

ஐஎஸ் அமைப்பு ரஸ்யாவில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல்கள் நவம்பர் மாதம் முதல் கிடைத்தன என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் பாதி;க்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஐஎஸ்தாக்குதல் குறித்த எச்சரிக்கையை ரஸ்யாவிடம் பகிர்ந்துகொண்டன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கத்தில் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் உக்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இசைநிகழ்ச்சி அரங்க தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள புட்டின் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரனை நோக்கி தப்பிச்சென்றுகொண்டிருந்தவேளை கைதுசெய்யபட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உக்ரைன் புட்டின் தெரிவித்திருப்பதை  தகவலை நிராகரித்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரைனிற்கு சென்றுகொண்டிருந்தார்கள் என தெரிவிப்பது அவர்கள் முட்டாள்கள் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிப்பதை போன்றது என உக்ரைனின் புலனாய்வு பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலிற்கு உக்ரைன் காரணம் என தெரிவி;ப்பதற்கு ரஸ்ய ஜனாதிபதி முயல்வதை உக்ரைன ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.

மீண்டும் சிக்கிக்கொண்ட மைத்திரிபால சிறிசேன – வாக்குமூலம் பெற தயாராகும் குற்றப் புலனாய்வு திணைக்களம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், நாளையத்தினம் (25) இது குறித்த அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்கியதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும். – ஈஸ்டர்படுகொலை நூல் வெளியீட்டு விழாவில் பிள்ளையான் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை அவர் வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை என பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

Thinakkural.lk

மட்க்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர்படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (23) அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியவர்களை தெரியும் என தெரிவித்த கருத்தை நான் ஊடகங்களில் பார்த்தேன்.

ஒரு சாதாரண மனிதனைப்போல  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசுகின்றார். இந்த குண்டு வெடிப்பு இடம்பெறுகின்ற போது அவர் நாட்டின் தலைவராக இருந்தார். தலைவருடைய பொறுப்பு யாராக இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதே.

ஆனால் அவர் அதைவிட்டுவிட்டு இப்போது இரகசிய வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை சொல்லுகின்றார். எனவே ஒருவேடிக்கையான மனிதரை இந்த நாட்டு அரசியலுக்கு கொண்டுவந்துள்ளோம்  என்பதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும்.

ஏன் அவர் இரகசிய வாக்குமூலம் தேவை என்கின்றார். எதற்கு?  யாருக்கு ?  அச்சப்படுகின்றார். அப்படியென்றால் இந்த குண்டு வெடிப்பிற்கு அவரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு  உண்டு ஆகவே அவர் ஒரு துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தற்துணிவுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடும் ஜனாதிபதி பேவட்பாளருக்கே ஆதரவு – தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் !

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், சாதகமான தீர்வு எதனையும் முன்வைக்காதவிடத்து தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு இப்போதே அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எவையும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இதுவரையில் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு உத்தேசித்திருக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாடு என்னவென்பதை தற்றுணிவுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்தவேண்டுமென சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தீர்வானது இணைந்த வட, கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடியவாறான சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அத்தீர்வினை வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் ஊடாக அதனை சிங்கள மக்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாட்டை வெளியிடும் பட்சத்தில் அதுகுறித்து தமிழர்கள் பரிசீலிக்க முடியும் எனவும், இல்லாவிடின் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் நாட்டின் பொருளாதாரம் சரி உயரும் – இரா.சாணக்கியன்

நேற்று (22) பாராளுமன்றத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரேரணையின் போது, சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் விவசாயம் சம்பந்தமான பிரச்சனைகளான சந்தைப்படுத்தல், பரிந்துக்கப்பட்ட நெல்வகை தொடர்பான பிரச்சனைகள், உர விநியோகம், யானைத் தாக்கம், மானியம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் நஷ்டத்துக்கான இழப்பு.

 

விவசாயிகளுடன் தொடர்புடைய ஒரு முக்கிய பிரேரணை இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை, மீன்பிடியினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.

 

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை உதாரணமாக வைத்து நான் சில விடயங்களை கூறுகின்றேன். இது வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் ஒரு பிரச்சனை ஆகும். அந்த வகையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன ஒன்றாக பயணிக்கும் துறைகளாக காணப்படுகின்றன. ஆகவே விவசாயிகளுக்கு கடந்த போகத்திலே மிக முக்கிய பிரச்சனையாக காணப்பட்டது மேய்ச்சல் தரை நிலப் பிரச்சனை. மயிலத்தமடுவிலிருந்து 150 நாட்களுக்கும் மேலதிகமாக போராட்டங்கள் நடை பெறுகின்றன.

 

ஆனால் அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல் பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வெருகல், திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களிலும் இப் பிரச்சனைகள் நிலவுகின்றன. ஆகவே இப் பிரச்சனைகளுக்கு விவசாய அமைச்சரும் சரியான தீர்மானத்தை பெற்றுத் தர வேண்டும்.

 

“2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்போர் மகாவலி கங்கை B வலயத்தினுள் உள்ளடக்கப்படமாட்டார்கள்” எனக் கூறியும் அத்துமீறிய குடியேற்றங்களை அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதற்கான தீர்வினை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாகவலிக்குரிய அமைச்சர் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பெற்றுத் தர வேண்டும்.

 

நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் முதலாவது போகத்தினை முதலில் ஆரம்பிப்பது கிழக்கு மாகாணத்தில் ஆகும். கிழக்கில் விவசாயிகள் தமது நிலத்தை தயார்படுத்தி; விதைப்பை ஆரம்பிக்கும் போது பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் ஆரம்பிக்க மாட்டார்கள். விவசாய ஆரம்ப திகதியை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறி நான் அமைச்சராகிய 4 வருடங்களாக கோரிக்கை முன்வைத்துள்ளேன்.

 

கடந்த போகத்திலும் அறுவடையின் பின்னரே விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நெற்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கும் திகதியிலேயே திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கப்படுகின்றது. விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கியே விவசாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 

இந்தப் போகத்திலாவது உரிய நேரத்தில் மானியங்கள் வழங்காவிட்டால் எமது விவசாயிகள் கடனாளிகளாகவே மாறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படும். இதற்குரிய தீர்வினை விவசாய அமைச்சர் பெற்றுத் தராவிட்டால் அமைச்சராக இருந்தும் தீர்வுகளை பெற்றுத்தரவில்லை என என்றும் பழி சுமத்துவோம்.

 

எமது மக்கள் கஷ்டத்தின் மத்தியில் தமது தங்க நகைகளை அடகு வைத்து உரத்தினை கொள்வனவு செய்தாலும் விவசாயிகள் அறுவடை செய்யும் காலப்பகுதி காணப்படுகின்ற போது யானைகளின் தொல்லை காணப்படுகின்றது. உயிரிழப்பும் காணப்படுகின்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கௌரவ அதாவுல்லா அவர்களும் இருக்கும் போது இவ் யானைப் பிரச்சனைகளைப் பற்றி கூறினேன். யானை வேலிகளை அமைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வரை 10 Km யானை வேலியை கூட அமைக்கவில்லை. இராப்பகலாக கண்விழித்து யானைகளிலிருந்து நிலத்தினைப் பாதுகாத்தால் இயற்கை அனர்த்தங்களின் பிரச்சனை காணப்படுகின்றது.

இதற்கு மக்களும், அரசாங்கமும் எதுவும் செய்ய முடியாது. கடந்த போகத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து இப் பிரச்சனை தொடர்பில் தரவுகளை மேற்கொள்ள வந்த Insurance Co-operation ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை பார்த்துவிட்டு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனக் கூறி சென்றுவிட்டனர்.

 

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படும் மாவட்டத்தில் ஒரு நாளினுள் எவ்வாறு மதிப்பீடு செய்ய முடியும்? மட்டக்களப்பில் வெல்லாவெளி, போரதீவுப்பற்றினை நோக்கினால் அங்குள்ள ஒரு சில நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு Insurance Co-operation நஷ்டஈடு வழங்கவில்லை.

 

இது விவசாயிகளை தொடர்ந்து கடனாளிகளாக்கும் செயன்முறையாகும். இவ்வாறு கஷ்டத்துக்கு மத்தியிலும் எமது விவசாயிகள் நெல்லைப் பெற்றாலும் அதனை உரிய விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த அரசாங்கம் ஒரு வக்கில்லாத அரசாங்கமாக உள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லை எமது மக்களுக்கு நீங்கள் தெரிவித்தால் அந்த இன நெல்லை எமது மக்கள் உற்பத்தி செய்வர்.

 

நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கத்திடம் பணமில்லை என்றால் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கியுள்ள ஆடம்பர செலவுகளை குறைத்தால் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டிய பகுதியளவு பணத்தினை பெற முடியும்.

 

சுதந்திரமற்ற இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாட செலவழிக்கப்பட்ட பணத்தினை வைத்து நெல் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்க முடியும். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல் கொள்வனவிற்காக சில உத்திகள் கையாளப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் எமது மாவட்டத்தில் எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்

எந்த இனத்தவராக இருந்தாலும் சட்ட ரீதியான காணி உரிமை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

காணி உரிமை வழங்கும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தை’ ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எந்த இனத்தவராக இருந்தாலும் சட்ட ரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து பிரஜைகளினதும் கனவாகும் என்ற வகையில், அவ்வாறான உரிமை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணம் –  ஒட்டகப்புலம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற “உறுமய” காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 408 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாள ரீதியாக காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

 

இதற்கு இணையாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழிருந்த காணிகளை விவசாயிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று (22) பலாலி விமானப்படை தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவினால் காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவற்றை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தார்.

 

அதற்கமைய வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு சொந்தமான 235 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதோடு, இந்த காணிகள் அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விதை பொருட்களும் வழங்கப்பட்டன.

 

அதனையடுத்து, காணி உரிமை பெற்றவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில், இந்த சந்திப்பின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

 

காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் மேலும் குறிப்பிடுகையில்,

அரச காலத்தில் காணி உரிமை மக்களிடமே காணப்பட்டது. பிரித்தானியர் காலத்தில் தரிசு நிலச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் காணிகள் அபகரிக்கப்பட்டன. அதன்படி நாட்டின் 80% காணிகள் அரசாங்கத்துக்கு சொந்தமானது. அந்த காணிகளுக்கான அனுமதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தாலும் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால் மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளின் உறுதிகளை மக்களிடம் மீளக் கையளிக்க எதிர்பார்க்கிறோம். அதனால் அனைவருக்கும் காணி உரிமம் வழங்க தீர்மானித்தோம்.

எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் காணி உரிமை கிடைக்க வேண்டும். அதற்காக உறுமய வேலைத்திட்டம் அண்மையில் தம்புளையில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஒரு சிலருக்கு மாத்திரம் அதன் பலன் கிடைத்திருந்தாலும், ஜூன் மாதமளவில் அந்த வேலைத்திட்டத்தினை முழுமையாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

 

மேலும், விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேச செயலகத்தை தெரிவு செய்துள்ளோம். இது யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த மாகாணம் நவீன விவசாயத்தைப் பெறுகிறது. அதே சமயம் வருமானமும் அதிகரிக்கிறது.

யுத்தத்தின் பின்னர் பெருமளவிலான காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்பட வேண்டியிருந்தது. இதுவரை 31,000 ஏக்கர் அரச காணிகளையும், 24,000 ஏக்கர் தனியார் காணிகளையும் அரசாங்கம் விடுவித்துள்ளது. மொத்தம் 63,000 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 1800 ஏக்கர் அரச காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 856 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

2600 ஏக்கர் அரச காணிகளையும் 68 ஏக்கர் தனியார் காணிகளையும் விமானப்படை விடுவித்துள்ளது. மொத்தம் 2600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சில நாட்களுக்கு முன்னர், 101 ஏக்கர் காணி மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இன்று 234 ஏக்கர் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பல கிராமங்களைச் சேர்ந்த நிலங்களுக்கு வனப் பாதுகாப்புத் துறையினர் வனப் பாதுகாப்புப் பகுதிகள் என பெயரிட்டிருந்தனர். 1985 வரைபடத்தின்படி, செயற்பாடுகளைத் தொடர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

 

முன்னதாக இந்த இடத்தின் காணி உரிமையாளர்களும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து பலாலி ஸ்மார்ட் விவசாய வேலைத்திட்டத்தை (Palali Smart Agriculture) ஆரம்பித்து வைத்தனர்.

 

இந்த காணிகள் அனைத்தும் நவீன விவசாயத் திட்டத்தில் மீண்டும் உரிமையாளர்களால் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இதை அவர்களால் தனியாக செய்ய முடியாது என்பதால், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க முப்படைகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

மேலும், அவர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக உயர்தர நிறுவனங்களின் பங்களிப்பும் வழங்கப்படுகிறது. மேலும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவும் பெறப்படுகிறது.

 

இந்த காணிகளை ஒதுக்குவதற்கும் அதே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த பண்ணை இந்த இடத்தில் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், முழு இலங்கைக்கும் முன்மாதிரி பண்ணையாக அது இருக்க வேண்டும்.

 

அத்துடன், வடக்கில் புதிய வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கின்றோம். யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை நாம் தற்போது தீர்த்து வருகின்றோம்.

நாங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஆரம்பித்தோம். அதனுடன் நாம் மட்டுப்படுத்தவில்லை. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும். மேலும் அவர்களின் வருமான மூலங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, இந்த மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம்.

 

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இந்த மாகாணத்தில் உள்ள பாரிய சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தியை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இதன் மூலம் சுற்றுலாத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலையும் ஊக்குவிக்க முடிகிறது. மேலும், முதலீட்டு வலயங்களுக்கும் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் ஐந்து பத்து வருடங்களில் இந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வடக்கிற்கு வலுவான பொருளாதாரத்தை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற நான் அனைவரையும் அழைக்கிறேன் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க எதிர்பார்க்கும் மைத்திரிபால சிறிசேன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாக செய்தது யார் என்பது தமக்கு தெரியும் என தாம் கூறியது, மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

இன்று (23) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களை தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

பகிரங்கமாக நீதிமன்றத்தில் சாட்சி வழங்கினால் தனது உயிருக்கும் தனது குடும்பத்தவர்களின் உயிருக்கும் அது அச்சுறுத்தலாக அமையும்.

 

இந்த தகவலை அரசியலுக்காக அல்லாமல், மிகவும் நேர்மையுடன் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் !

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.

 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

 

மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

 

மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.