செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் !

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிவேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் டெங்கு நோய்ப்  பரவலை  கட்டுப்படுத்தும் விதமாக நேற்றைய தினம் வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படத்த சுகாதார திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவம் ஆகியோரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்கள் மீதும் கடுமையா  நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது.” – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச 

2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தலை இலக்காகக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுவருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு  நேற்று (01) நீதி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதை நாம் அறிவோம். அடுத்து எந்த மாதிரியான தேர்தல் வந்தாலும் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது. ஜனநாயக சமூகத்தில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை அமைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரச ஊழியர்கள் என்றவகையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் உறுதிப்பிரமாணம் வழங்கினாலும் அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை.

எனினும் நீதி அமைச்சின் அதிகாரிகளாக நாங்கள் நாட்டில் இருக்கும் முன்மாதிரியான அமைச்சு என்பதை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தி இருக்கிறோம். அத்துடன் உலகில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும்போது இந்தளவு குறுகிய காலத்துக்குள் ஸ்திரநிலைக்கு வந்த வேறு நாடு இல்லை.

எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. நாங்கள் தற்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 2023ஆம் ஆண்டும் ஜீ.எஸ்பி பிளஸ் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்ள தேவையான முக்கியமான அளவுகோல்களை பூரணப்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டது நீதி அமைச்சாகும்.

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் நாங்கள் நாடவடிக்கை எடுத்தோம்.

மேலும் 2024ஆம் ஆண்டுக்குள் 60 புதிய சட்ட மூலங்களை அனுமதித்துக்கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியலமைப்பு புரட்சி 21ஆம் அரசியலமைப்பு திருத்தமாகும். ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல புதிய சட்டங்களை அனுமதித்துக்கொண்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.

அதனால் மதம், மொழி, இன வர்க்கமாக பிளவுபட்டு செயற்பட்டால் நாடு என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கும் இலக்குக்கு செல்ல முடியாது. அதனால் 2024 ஆம் ஆண்டின் முதல் வாரத்துக்குள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்வோம்” என தெரிவித்தார்.

வரி செலுத்துவோர் நிகர வரி ஏய்ப்பவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

வரி செலுத்துவோர் நிகர வரி ஏய்ப்பவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

வரி செலுத்துவதைத் தவிர்க்க முயற்சிப்பவர்கள் குறித்து வரி செலுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறையில் வரி தளத்தை விரிவுபடுத்துவது தனிநபர் வரிச்சுமையை குறைக்க மட்டுமே உதவும் என்றார்.

பொருளாதார அடிப்படைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 2022 ஆம் ஆண்டை விட நேர்மறையான குறிப்பில் இலங்கை 2023 இல் அடியெடுத்து வைத்தது என்றும், இந்த ஆண்டு நனவாகும் சிறந்த வாய்ப்புகள் நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்ற பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேறு எந்த நாட்டையும் விட இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை மிக விரைவாக மீட்டெடுத்தது என வலியுறுத்துகிறது. அர்ஜென்டினா, ஜிம்பாப்வே மற்றும் லெபனான் போன்ற நாடுகளை அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு மூன்று சதவீத வளர்ச்சியை நாடு எதிர்பார்க்கிறது என்றும் பணவீக்கம் ஐந்து சதவீதமாக நிலைபெறும் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 முதல் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரமே VAT வரி – நுகர்வோர் விவகார அதிகாரசபை

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் வரியின் (VAT) சமீபத்திய அதிகரிப்பு ஜனவரி 1 முதல் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் பொருட்களுக்கு மாத்திரமே உயர்த்தப்பட்ட VAT விகிதங்கள் பொருந்தும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெளிவுபடுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் சந்தையில் வெளியிடப்பட்ட பொருட்களுக்கான VAT அடிப்படையிலான விலை மாற்றங்கள் பொருந்தாது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தையை ஆய்வு செய்து வருவதாகவும், தன்னிச்சையாக விலையை உயர்த்தும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் பொருட்கள் விலை உள்ளிட்ட அச்சிடப்பட்ட VAT வரியுடன் ஜனவரி 1 ஆம் திகதி சந்தைக்கு வெளியிடப்பட வேண்டும்.

“நுகர்வோர் பொருட்களின் விலையை ஒருதலைப்பட்சமாக தங்கள் விருப்பப்படி உயர்த்தும் அதிகாரம் வர்த்தகர்களுக்கு இல்லை என அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நுகர்வோர் பொருட்களின் மீது தன்னிச்சையாக விலைகளை உயர்த்துவதற்கு வர்த்தகர்களுக்கு அதிகாரம் இல்லை என அதிகாரசபை வலியுறுத்துகிறது. மீறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”

குறிப்பிட்ட சில நுகர்வோர் பொருட்கள் 18 சதவீத வெட் வரிக்கு உட்பட்டவை, ஏனையவை ஏற்கனவே 15% VAT வரி விதிக்கப்பட்டிருந்தால், இப்போது மூன்று சதவீத VAT வரிக்கு மட்டுமே பொருந்தும்.”

இலங்கையர்களுக்கு ஜப்பானில் நான்கு துறைகளில் வேலைவாய்ப்பு !

ஜப்பானிய அரசாங்கம் நான்கு துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான திறன் பரீட்சையை இலங்கைக்கு திறந்து வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

ஒரு அறிவிப்பை வெளியிட்டு, SLBFE 2024/25 ஆம் ஆண்டிற்கான திறன் தேர்வு ஜப்பானில் குறிப்பிட்ட திறன் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

கட்டுமானம், தங்குமிடம் மற்றும் வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் துறைகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் வேலைகளுக்கான திறன் தேர்வு திறக்கப்பட்டுள்ளது.

திறன் பரீட்சை இலங்கையில் நடத்தப்படும் எனவும் ஜப்பானிய மொழியில் மாத்திரம் நடத்தப்படும் எனவும் SLBFE மேலும் தெரிவித்துள்ளது.

இறைவரித் திணைக்களத்தின் பதிவு இல்லாத இலங்கையர்களுக்கு 50,000 வரை அபராதம் – பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்..?

இம்மாதம் முதலாம் திகதி முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும். வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும்திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வருடத்தில் (ஒரு வருடத்தின் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை) 1,200,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் வருமான வரிக் கோப்பை திறக்க வேண்டும்.

இதனை, பொது மக்கள் www.ird.gov.lk என்ற இணையத்தில் பதிவு செய்யலாம், தபால் மூலம் பதிவு செய்யலாம் அல்லது இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் நேரில் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்’ – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய அரசை வலியுறுத்திருக்கிறார்.

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டுகள் நிறைவடைந்ததை  நினைவு கூறும் வகையில் புதுதில்லியில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதற்குரிய பிரத்யேக அஞ்சல் தலையை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே. பி. நட்டா வெளியிட, இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,   தமிழக பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். மேலும் இந்நிகழ்விற்கு பார்வையாளராகவும், சிறப்பு அதிதிகளாகவும் இலங்கையிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் புது தில்லிக்கு வருகை தந்திருந்தனர்.‌

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது,

”இலங்கையிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த ஐந்து முதல் ஆறு லட்சம் வரையிலான தமிழர்களுக்கு முறையான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகள் தரப்பட்டன. அவை உடனடியாகவும், சிறப்பாகவும் நிறைவேற்றப்பட வேண்டும்.

வெவ்வேறு காலகட்டங்களில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இந்திய வம்சாவளி தமிழர்கள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அவர்களில் பலரும் இங்கு குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் சட்டவிரோதமாகவும் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பலர் இங்கு குழந்தை பெற்றிருக்கிறார்கள். வேறு சிலருக்கோ. இலங்கையிலும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. இங்கும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் இருக்கிறது. ஆகையால் அப்படிப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக முகாம்களில் பிறந்தவர்களுக்கும், தீவிர குற்ற பின்னணி இல்லாதவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இதற்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

 

இந்தியாவை மீள அச்சுறுத்தும் கொரோனா !

இந்தியா  முழுவதும்  கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 841 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாமுழுவதும் 4309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா கர்நாடகா பிஹார் மாநிலங்களில் தலா ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒரே நாளில் 831 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை தமிழகம் முழுவதும் 175 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 29 பேர் குணமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

இலங்கையில் VAT அதிகரிப்பு – உயர்வடையும் பொருட்களின் விலை !

இந்த  (01) புத்தாண்டானது அனைத்து இலங்கையர்களுக்கும் அதிக வரிச்சுமையுடன் கூடிய புதிய ஆண்டாக அமையவுள்ளது.

வெட் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல், அதாவது நாளை (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வெட் வரி அமுலாகியுள்ளது.

எல்பி கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை புதிய VATக்கு உட்பட்டதுடன் அனைத்து கையடக்க தொலைபேசிகள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் எம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கும் வெட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களும் வெட் வரிக்கு உட்பட்டவை.

சோலார் பேனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகளுக்கும் வெட் வரி விதிக்கப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பால் ஆகியவையும் வெட் வரியை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், காலணி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முடிக்கப்பட்ட தோல் மீது வெட் வரி விதிக்கப்படுகிறது.

கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலை விற்பனையின் போதும் வெட் வரி அறவிடப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் வழங்கப்படும் சேவைகளுக்கு, பயண முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொடர்புடைய சேவைகளுக்கு வெட் வரி வசூலிக்கப்படுகிறது.

திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் தயாரிப்பின் போது ஆய்வக வசதிகள் மீதும் வெட் வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தானியங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி அதிபோசனை உணவுகள் மற்றும் தேசிய தேங்காய் எண்ணெய்க்கும் வெட் வரி விதிக்கப்படவுள்ளது.

வெட் வரிக்கு உட்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளையும் அரசாங்கம் அறிவித்தது.

சிறப்பு வணிக வரிக்கு உட்பட்ட பொருட்களுகள் வெட் வரி இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், VAT அதிகரிப்பால் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல தொலைபேசி வலையமைப்பு சேவைகள் தமது கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சியும் (Distilleries Company of Sri Lanka PLC)  தனது மதுபானங்களின் விலைகளை நாளை முதல் திருத்தியமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

375 மில்லி பாட்டில் 50 ரூபாவினாலும் 180 மில்லி மதுபான போத்தல் 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அரியணையை துறக்கிறார் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் !

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் அரியணையை துறப்பதாக அறிவித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு அரியணை ஏறிய 83 வயதான ராணி 52 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இதன்மூலம்  ராணி ஐரோப்பாவில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நேரடி தொலைக்காட்சியில் ஆற்றிய பாரம்பரிய புத்தாண்டு உரையில்,

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெற்றிகரமாக முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், “அறுவைசிகிச்சை இயல்பாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது எனவும், அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

“இதுதான் சரியான நேரம் என்று நான் முடிவு செய்துள்ளேன். பதவியேற்ற 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 14 ஆம் திகதி டென்மார்க் ராணி பதவியில் இருந்து விலகுவேன்.

“தனது அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் பிரடெரிக்கிடம் விட்டுச்செல்கின்றேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.