கொன்ஸ்ரன்ரைன் ரி

கொன்ஸ்ரன்ரைன் ரி

டென்மார்க் குளோபல் மெடிகல் எய்ட் உடனான சந்திப்பை முடித்துக் கொண்டு முதலமைச்சர் சந்திரகாந்தன் புறப்பட்டார்.

CM_East_Mathi_K_and_GMA_Hansடென்மார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் குளோபல் மெடிக்கல் எய்ட் உடனான சந்திப்புக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்த்திரகாந்தன் மற்றும் அவருடைய செயலாளர் அசாட் மெளலானா ஆகியோர் வந்திருந்தனர். எதியோப்பியாவில் இடம்பெற்ற மாநாட்டுக்குச் சென்றிருந்த முதலமைச்சர் சந்திரகாந்தன் ஐரோப்பிய பயணத்தையும் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் சந்திரகாந்தன் டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (Dec 23, 2010) ஹோபன்ஹேகனில் இருந்து  புறப்பட்டார்.

CM_East_Mathi_K_and_GMA_Hansகுளோபல் மெடிகல் எய்ட் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மூன்று மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மருந்துப் பொருட்களை வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்த மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தது. மேலும் இவ்விநியோகமும் பின்பற்றப்பட்ட நடைமுறைகளும் சர்வதேச தரத்தில் இருந்ததால் தொடர்ந்தும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப குளோபல் மெடிகல் எய்ட் முன்வந்தது. மருந்துப் பொருட்களின் விநியோகத்தை கிழக்கு மாகாண சபையின் ஆதரவுடனும் அரசாங்கத்தின் உதவியுடனும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வினியோகிப்பதற்கு குளோபல் மெடிகல் எய்ட் தீர்மானித்தது.

குளோபல் மெடிக்கல் ஊடாக பெறப்படும் மருந்துப் பொருட்கள் வடக்கு, கிழக்கில் 30 வருடங்களாக கடுமையான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும்.

CM_East_with_Sec_Azad_and_GMA_Hansஇந்த மருந்துப் பொருட்களை இலங்கையில் பொறுப்பேற்று கிழக்கு மாகாணத்தில் விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பான உடன்பாட்டை மேற்கொள்ளவே முதலமைச்சர் சந்திரகாந்தனும் அவரது செயலாளரும் டிசம்பர் 22ந் திகதி டென்மார்க் வந்திருந்தனர். மேற்படி விடயங்களை நிறைவுசெய்த பின்னர் அவரது டென்மார்க்கிலுள்ள ஆதரவாளர்களை சந்தித்த அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் சம கால அரசியல்நிலை தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் அவர்களினது ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு  தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு  சுவிஸ் புறப்பட்டு சென்றனர்.

முதலமைச்சர் சந்திரகாந்தன் டென்மார்க் வருவது வெளிவந்ததும் அவர்மீது மனித உரிமை மீறல் வழக்குகளைப் பதிவு செய்யப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் எச்சரித்தன. மேலும் முதலமைச்சர் சந்திரகாந்தனை தாக்குவதற்கும் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலித்தோல் போர்த்திய பச்சோந்திகளும் புலி வியாபாரமும் – புலி ஊடகங்கள் (1) ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Orupaper_Titleஇடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந்த தகைமை யவர்
                       (குறள் 447)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சியும் அழிவும் பல்வேறு காலகட்டங்களில் நியாயமான விமர்சனங்கள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டு வந்ததுடன் எவ்வாறான அணுகுறைகள் தவறானவை என்பதும் எவ்வாறான அணுகுமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மிகத் தெளிவாகவே சுட்டிகாட்டப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்களை எல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது என்றும் அவ்வாறான விமர்சனங்களை வைத்தவர்களை எல்லாம் துரோகிகளாக முத்திரை குத்தி ஒதுக்குவதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் முன்நின்றன.

இந்த ஊடகங்கள் என்றைக்குமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கையை எந்தச் சந்தர்ப்பத்திலும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதற்குக் காரணம் அவர்களிடம் கேள்வியோ விமர்சனமோ இல்லை என்பதல்ல. ஆனால் கேள்வியை எழுப்பினால், விமர்சனத்தை முன் வைத்தால், எங்கே தங்களை ‘கழற்றி’ விடுவார்கள், தங்கள் பிழைப்பு படுத்துவிடும் என்ற பயம். இந்த ஊடகங்களும் கட்டுரையாளர்களும் செய்தது முற்று முழுதான ஊடக விபச்சாரம். இந்த ஊடகங்களின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் வாழ்வை வளம்படுத்திக்கொண்ட இவர்கள், தாயக மக்களின் பெருமூச்சில் குளிர்காய்ந்தனர். அங்கு நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றையும் காசாக்கிக் கொண்டனர். அதற்காக தங்களை புலியாக்கிய பச்சோந்திகள் இவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் ஆயுதம் ஏந்திய அல்லது ஆயுதம் ஏந்தாத எந்தவொரு அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கு எதிரான அல்ல ஆதரவு இல்லாத எந்தவொரு அமைப்பையும் அவர்கள் இயங்க அனுமதிக்கவில்லை. தங்களுக்கு ஆதரவான அமைப்புகளையும் அவர்கள் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கவில்லை. தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இந்த நிலை இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் உருவாக்கப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர்கள், ஆயுதம் தரிக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும். ஒரு பேப்பர், ஈழமுரசு, தமிழ் கார்டியன், ரிரிஎன் (ஜிரிவி), ஐபிசி (ஐஎல்சி) போன்றனவும் இணையங்களும் இதில் முன்னின்றன.

தங்களுக்கு எதிரானதும் ஆதரவு இல்லாததுமான அமைப்புகளை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகளும் வெகுவிரைவிலேயே, அதே அமைப்பைச் சார்ந்தவர்களாலேயே வீழ்ச்சி அடைந்து. அதன் தலைமைகள் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட உடனேயே புலம்பெயர் நாடுகளில் 300 மில்லியன் டொலர்கள் வரை ஆண்டு வருமானத்தைக் கொண்ட 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்கள் மே 18 2009ல் காணாமல் போனது. இதற்கு மேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பில் எப்படியானவர்கள் இருந்தனர், உள்வாங்கப்பட்டனர் எனபதற்கு விளக்கம் அவசியமில்லை. (லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி விடயங்களுடன் தொடர்பு உடையவர்களின் பட்டியல் தயாராகிக் கொண்டு உள்ளது. மேலதிக தகவல் வைத்துள்ளவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும். வெகுவிரைவில் தேசம்நெற் இல் இப்பட்டியலைக் காணலாம்.)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சிக்கு மாத்தையா, கருணா பிளவு மட்டும் காரணமல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுக்குப் புலம்பெயர்ந்த பல பச்சோந்திகள் தங்கள் சுயலாப நோக்கங்களுக்காக, புலித்தோல் அணிந்துகொண்டு உள்ளே சென்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு கட்டமைப்புகளிலும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறான கட்டமைப்புகளில் இந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் முக்கியமானவை. இந்த ஊடக ஒட்டுண்ணிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவான அத்தனை சிந்தனைகளையும் விவாதங்களையும் ஓரம்கட்டி ‘ஜிஞ்சா’ கலாச்சாரத்தை உருவாக்கி வளர்த்து, உடுக்கடித்து உடுக்கடித்து புலியை முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டனர்.

இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் உணர்வாளர்களோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் உணர்வாளர்களோ அல்ல. தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தங்கள் சொந்த லாபங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியிலும், அழிவிலும், வன்னி மக்களுடைய அழிவிலும் இவர்களுடைய கரங்கள் இரத்தம் தோய்ந்தவை. இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய எதிரி. ஆனால் அவர்களுடன் கூட இருந்த புலித்தோல் போர்த்திய இப்பச்சோந்திகள் கூட இருந்தே குழி பறித்த மோசடியாளர்கள்.

இவர்களைப் பற்றி தொண்ணூறுக்களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.  கேணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதிலும் வேறுபல படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் நன்கு அறியப்பட்டவர். பெண்கள் தொடர்பில் அவருக்கு இருந்த பலவீனமே அவருடைய கால் கைக்குண்டில் பறிபோனதற்குக் காரணம். லண்டன் வந்திருந்த வேளையில் அவருடைய மரணத்துக்கு அண்மையாக சில மாற்றங்கள் அவரிடம் இருந்தது. கிட்டு லண்டனில் உள்ள தமிழர் தகவல் நடுவத்தில் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் கூட்டி ஒரு கூட்டம் வைத்தார். அதற்கு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். கிட்டுவினால் சித்திரவதைக்கு உட்பட்டவர்களும் வந்திருந்தனர்.

கிட்டுவின் கவனத்தை ஈர்க்க பலர், சிலரை தமிழினத் துரோகிகள், புலிகளுக்கு எதிரானவர்கள் என முண்டியடித்துக் கொண்டு வசைபாடிக் கொண்டிருந்தனர். கிட்டு அனைத்தையும் செவிமடுத்துவிட்டுச் சொன்னார் “ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக எழுதினால் அதில் எமக்கு பெரிய பிரச்சினையில்லை. ஏனெனில் சம்பந்தப்பட்டவரின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று எமக்கு தெட்டத்தெளிவாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை யார் ஆபத்தானவர்கள் என்றால் எம்மைத் துதிபாடிக்கொண்டு, எமக்கு விசுவாசமானவர்கள் போல் நடித்துக் கொண்டு தமது சொந்த அபிலாசைகளை எம்மை வைத்துக் கொண்டு நிறைவேற்றுபவர்கள் தான் எனக்கு கவலை அளிக்கின்றது” எனக் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அன்று கிட்டு கூறியது இன்றும் பலருக்கும் பொருத்தமாக இருக்கிறது. புலி ஊடகங்களுக்கு குறிப்பாக ஒரு பேப்பர் கோஸ்டிக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
                      (குறள் 448)

ஆட்சி அதிகாரத்தில் உள்ளோருக்கு இடித்துக் கூறும் குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டி வழிபடுத்துவோர் அவசியம். அவ்வாறான ஆலோசனையைப் பெற்று திருத்திக் கொள்ளும்போது அவர்கள் நல்லமுறையில் நிர்வாகத்தை ஆட்சியை நடத்த முடியும். ஆனால் அவ்வாறு இடித்துரைப்பவர்கள் இல்லையாயின் பகைவரின்றியே அரசு கெடும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலும் மேலேயும் குறிப்பிடப்பட்டுள்ள இரு குறள்களும் இதனையே விளக்குகின்றன.

இலங்கையின் வடக்கு கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடிப்பாரையாக இருந்து குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் தாங்களும் இடிப்பாரையாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிப்படுத்தவில்லை. இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நல்ல நண்பர்களாக இருந்திருந்தால் புலிகளுக்கு கசப்பான விடயங்களையும் சுட்டிக்காட்டி அவர்களை வழிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் இவர்கள் அவ்வாறு வழிப்படுத்த முயன்றவர்களையும் அதனைச் செய்ய விடவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஊடகங்களால் அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட மாயைக்குள் சிக்கி வீழ்ச்சி அடைந்து அழித்தொழிக்கப்பட்டனர். இந்தப் புலி ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே இருந்த உறவு ஊடக விபச்சாரமே.

11 – 17 டிசம்பர் ஈழமுரசு பத்திரிகையில் இருந்து: ”….. அண்மையில் பிரித்தானிய வெளியிட்ட காணொளி ஆவணத்தில் காணப்படும் மட்டக்களப்பு கட்டளைத் தளபதி ரமேஸ்க்கு கொடுக்கப்பட்ட பணியும் அதுதான். அதாவது இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய உத்திகள் என்பது ஸ்ரீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்க வைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது…..

தான் அவமானப்படுத்தப்பட்டு கோரமாகக் கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார்.

….. நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப் போர் எனவும் அதில் 50000ற்கும் மேற்பட்ட மக்களை ஸ்ரீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப் புலிகள் முன்னரே எதிர்வு கூறி இருந்தனர். ஆனால் அவர்களின் கணிப்புகள் இதுதான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை.”

ஈழமுரசு என்ன சொல்ல வருகிறது. தேசியத் தலைவரின் போரியல் வழிகாட்டலில் போரிட்டோம். தலைவரின் இராணுவத் தந்திரோபாய வழிகாட்டலில் பின்வாங்கினோம். தலைவரின் வியூகத்தில் உள்ளுக்கு விட்டு அடித்தோம். பிறகு தலைவனின் கட்டளையை ஏற்று கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றோம்.

ஈழமுரசு ஒரு பேப்பர் மற்றும் புலி மீடியா,
ஐயாமாரே அண்ணாமாரே அக்காமாரே தம்பிமாரே தங்கச்சிமாரே உந்தத் தலைவன் உதை ஒரு மாசத்துக்கு முதல் தன்னும் சொல்லி இருந்தா எத்தினை ஆயிரம் உயிர்கள் பிழைச்சு இருக்கும். நாங்கள் சொன்னம் துரோகிகள் நீங்கள் கேக்கமாட்டியல். நீங்கள் உங்கட மீடியாக்கள் எல்லாம் காவடி எடுத்தியளே சிவாஜிலிங்கம் அந்தாள் மூன்று மாதத்துக்கு முதல் சொல்லிச்சே. கேட்டியளோ. நாசமாய் போவாரே உங்கட சொந்தப் பிள்ளையளா இருந்தால் இப்பிடியா செய்வியல்? அந்த வன்னிச் சனம் எல்லாம் வெள்ளைக் கொடியோட புலிகளைத் தாண்டிப் போக சுட்டுக் கொன்றான்கள். தப்பிப் போக நிண்ட சனத்தை செல் அடிச்சு கொன்றியளே. அப்பிடிப் போன சனத்தை கூச்சமில்லாமல் துரோகி என்றியள். சிங்கள இராணுவத்தை எதிரிப்படை என்று சனத்துக்கு தெரியும். ஆனால் 300 000 வன்னி மக்களை மந்தைகளாக அடைத்து வைத்து எதிரியை வைச்சு 50 000 சனத்தை கொன்று அதை வைச்சு மனித உரிமை அரசியல் செய்கிறம் என்று சொல்லுறியளே இதைவிட ஒரு பொறுக்கி அரசியல் உலகத்தில எங்கேயும் நடகேல்லை.

தளபதி ரமேஸ் மட்டுமல்ல தலைவரும் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றது காணொளியாக உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தில் சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை இந்தியா இலங்கையிடமே விட்டுவிட, வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்.

இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றி மாயைவலை கட்டமைத்து அவர்களே தங்கள் பலம், பலவீனங்களை அறிய முடியாத அளவுக்கு அவர்களை உசுப்பேத்திய ஜம்பவான்கள் இந்த ஒரு பேப்பர் மற்றும் புலித்தோல் போர்த்திய பச்சோந்திகள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் அழிக்கவில்லை அவர்களுக்காக வன்னி மக்களையும் அழித்து, தங்கள் சுய இருப்பையும், சுயலாபத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் மே 18 2009 வரை எழுதி வந்த பொய், புரட்டுக்கள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்து, அவர்களுடைய ஒவ்வொரு செய்தியும் கட்டுரைகளுமே அம்மணமாகி உள்ளது. ஆனாலும் தங்கள் சுய இருப்பையும் எதிர்கால சுயலாபத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்து தொடர்ந்தும் மாயைகளையே கட்டமைக்கின்றனர்.

மற்றையவர்களை ‘பொறுக்கிகள்’, ‘நக்குபவர்கள்’ என்றும் விமர்சிக்கும் இவர்கள், தங்கள் ‘மேதகு தேசியத் தலைவர்’ இலங்கை இராணுவத்தின் பூட்ஸ்களை நக்குகின்ற நிலைக்கு தள்ளியவர்கள் என்பதனை வரலாறு குறித்துக் கொள்ளும்.

இன்னும் தொடரும்…..

(அடுத்த பாகத்தில்: ஒரு பேப்பர் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதரன் ஸ்ரீபார்த்தீபன் (பார்த்தீபன்), பொறுப்பாசிரியர் கோபால் தேவதாசஸன் கோபிரட்ணம் (கோபி), ஆசிரியர் குழு மன்மதக்குஞ்சு இரவி அருணாச்சலம், சாந்தி வவுனியன், சுகிர்தகலா கோபிரட்ணம், தமிழ் உணர்வாளரும் சீலை வியாபார நிபுணருமான சிவானந்த சோதி ஆகியோருடைய அரசியல் பற்றி அலசி ஆராயப்படும்.)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Prof_Hooleகடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் இருந்து இலங்கைத் தமிழ் மக்கள் சுமுகமான வாழ்நிலைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் கல்விச் சமூகத்தின் கல்விநிலையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அச்சமூகத்தின் அதி உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக மோசமான சீரழிவை நோக்கிச் சென்று கொண்டு உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்நிலையை மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது. தமிழ் கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், விரைவில் இடம்பெறவுள்ள உபவேந்தருக்கான தேர்தலில் பல்கலைக்கழகத்தை இலங்கையின் தரமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றக் கூடிய தகுதியும் ஆளுமையும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த நியமனத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கூடிய சமூகப் பொறுப்பு இருப்பதால் அவரை நோக்கி இக் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களும் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இம்மடலின் இறுதியில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பில் பெயர்களைப் பதிவு செய்து இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்கவும். இம்முயற்சிக்கு உங்கள் நண்பர்கள் உறகளின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
._._._._._.

மதிப்பிற்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு,

பல்கலைக்கழகங்களே தெளிவான பார்வையையும் தலைமைத்துவத்தையும் சமூகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கள் தலைமைத்துவம் இல்லாததால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.

தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை புதிய திசைவழி முன்னேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என நாங்கள் நினைக்கின்றோம். மேலும் தமிழ் கல்விச் சமூகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வழங்கவும் இது வாய்ப்பாகி உள்ளது.

இதன் கீழ் கையெழுத்திட்ட எங்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களினது நல்வாழ்விலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மிகுந்த அக்கறையுண்டு. பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தேர்வில் போட்டியிட உள்ளார். நீங்கள் அவரை அப்பதவிக்கு கொண்டுவருவதற்கு வேண்டியனவற்றை செய்ய வேண்டும் என நாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக வரவேண்டும் என்று கோருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இலங்கையில் கூடிய தேர்ச்சியுடைய கல்வியியலாளர். சர்வதேச பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் கற்பித்த அனுபவம் உடையவர். இவரினால் உபவேந்தர் பதவி மதிப்படையும்.

2. University Grand Commissionஇல் 15 பல்கலைக்கழகங்களை நிர்வகித்தமை அவருக்கு இந்த பல்கலைக்கழகங்கள் இயக்கப்படுகின்ற முறை அதனை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் சட்டங்கள் என்பனவற்றில் மிகுந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. அதனால் இவரினால் உயர்ந்த அளவு தரத்தில் நிர்வாகத்தை திறம்படச் செயற்படுத்த முடியும்.

3. இவர் இலங்கையின் தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டவராதலால், பல்கலைக்கழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத்தர முடியும்.

4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தை அமைக்க உள்ள நிலையில் பொறியிலாளரான இவரின் தனிப்பட்ட தொடர்புகள் பொறியியல்துறையை அமைப்பதற்கு மிக அவசியமானது. மேலும் இவர் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபம்மா ராவோ உடன் பணியாற்றியவர் என்பதால் இந்தியவில் இருந்து நிதி உதவிகளையும் இவரால் பெற்றுக்கொள்ள முடியும்.

5. அமெரிக்காவில் தனக்கு இருந்த பதவியைத் துறந்து யாழ்ப்பாணம் வந்ததன் மூலம் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தியில் தனது பொறுப்புணர்வை வெறும் வார்த்தைகளில் அல்லாமல் செயலில் காட்டி உள்ளார்.

மேலுள்ள ஐந்து விடயங்களிலும் போராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு சமனான தகுதியுடைய ஒருவரை காண்பது கடினமாகவே உள்ளது. இவர் முன்னர் 2006ல் உபவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் சில அரசியற் சக்திகளால் தனது கடமையைச் செய்யவிடாது தடுக்கப்பட்டார். அப்போது முடியாமற் போன பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் முயற்சிக்கு இப்போது சந்தர்ப்பம் வழங்கப்படுவதே நியாயமானது.

நீங்கள் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று இதயபூர்வமாக விரும்பும் ஒருவர் என்பதாலும் அமைச்சராக இந்த விடயத்தில் உங்களுடைய வார்த்தைக்கு ஒரு இடம் இருப்பதாலும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் அவர்களுக்கு வெளிப்படையான உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பு:

http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm

திரு ராரின் கொன்ஸ்ரன்ரைன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

அருட்தந்தை S J இம்மானுவேல் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவு! – ‘பாவிகளையும் யேசு மன்னித்து வரவேற்பாராக’: ரி கொன்ஸ்ரன்ரைன்

Emmanuel_S_J_Rev_Frநான் முதலில் தமிழன் – பின்னர்தான் கிறிஸ்தவன்”, “பிரபாகரனை யேசுநாதருடன் ஒப்பிடலாம்” என வேத வாசகங்களைப் பொழிந்த (வணபிதா) பேராசிரியர் டாக்டர். S J இம்மானுவேல் அடிகளார் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவதை தற்போது பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

1950 க்களில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ‘இறையியல்’ ஒரு புரட்சிகர வடிவத்தை எடுக்க ஆரம்பித்தது. ‘விடுதலை இறையியல்’ என்ற கருத்தாக்கம் உருவானது. இது காலப்போக்கில் லத்தீன் அமெரிக்காவையும் தாண்டிய சர்வதேச கருத்தாக்கமானது. ”கிறிஸ்தவ மத நம்பிக்கையை ஏழைகளின் துன்பம், அவர்களின் போராட்டம், நம்பிக்கை, சமூகத்தை விமர்சனப் பார்வையுடன் அணுகுவது என்ற அடிப்படையில் ஏழைகளின் கண்களினூடாக கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் பார்ப்பதுவே ‘விடுதலை இறையியல் ‘எனப்படுகின்றது.”

சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு உள்ளுணர்வாக இந்த இறையியல் பலம்பெற்றது. இது லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியது. இந்த ‘விடுதலை இறையியல்’ அடிப்படையில் இலங்கையின் தமிழ் பகுதிகளில் இருந்த கத்தோலிக்க மத நிறுவனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலையை எடுத்தது.

Catholic_Fr_Carry_Piraba_Playcardஆனால் பின்னான காலகட்டத்தில் விடுதலை அமைப்புகளே மக்களது துன்பங்களுக்கும் கொலைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்குக் காரணமாக இருந்த போதும் இந்த மத நிறுவனத்தினால் முழுமையாக தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. விரும்பியும் விரும்பாமலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ் கத்தோலிக்க மத நிறுவனம் நெருங்கி நின்றதற்கு இதுவே காரணம்.

ஆனால் S J இமானுவல் அடிகளார் அருட்தந்தை கஸ்பார் போன்றவர்கள் தங்களது சொந்த விருப்பம் காரணமாக தங்களையும் தாங்கள் சார்ந்த மத நிறுவனத்தையும் தம் சொந்த நலன்சார்ந்து பயன்படுத்திக் கொண்டனர். 

கடந்த சில வருடங்களாக புலம்பெயர் தமிழர்களின் புலன்பெயர்வை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி லண்டன் பாரிஸ் ஜேர்மன் நகரங்களில் நடுறோட்டில் படுக்கவைத்து ஆட்டம் ஆடி கூத்தாடி தாம் வாழும் தமக்கு தஞ்சம் கொடுத்த நாடுகளுக்கே இடைஞ்சலாக இருந்த சம்பவங்களில் S J இம்மானுவேலின் பங்கு முக்கியமானது.
 
கடந்த பல வருடங்களாக ஜேர்மனியில் இருந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார சக்கரத்தைச் சுற்றியவர் S J இம்மானுவேல் அடிகளார். பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து எவ்வித அரசியல் அறிவோ சாணக்கியமோ அல்லது மொழித்திறனோ அற்ற புலம்பெயர் புலி வால்களுக்கு உயர் கல்வித் தகைமையும் அதீத பேச்சாற்றலும் பலமொழித் திறமையும் கொண்ட அதிலும் குறிப்பாக ஒரு கத்தோலிக்க உயர் குருவானவர் கிடைக்கப்பெற்றது ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்டது. வணபிதா S J இம்மானுவேலின் தகமையுடனும் அனுபவத்துடனும் எந்த புலி பிரமுகரும் ஈடாக இருக்கவில்லை. இதனால் Global Tamil Forum (GTF) (உலக தமிழ் பேரவை) இன் தலைமை S J இம்மானுவேலுக்கு பொன் தகட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டது.

Emannuel_S_J_Group_With_Gordon_BrownGTF பிரித்தானியாவில் இயங்கிவரும் British Tamil Forum,  Tamils For Conservative,  Tamils For Labour போன்ற அமைப்புக்கள் போன்றதொரு விடுதலைப் புலி ஆதரவு அமைப்பே. ஆக மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வணபிதா இம்மானுவேல் புலன்பெயர் தமிழர்களின் தேசியத்தலைவர். இம்மானுவேல் அடிகளார் Global Tamil Forum (GTF) என்ற நெடியவன் குழுவின் தலைவர் என South Asia Intelligence Review இதழில் குறிப்பு உள்ளது.

Nediyavan_Sivaparan_Perinbanayakamதமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவரே நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன். தற்போது இவரும் இவரைச் சார்ந்த குழுவினருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும்பான்யையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே S J இமானுவலின் பின்னிருந்து உலகத் தமிழர் பேரவையை இயக்குகின்றனர். இவர்கள் இலங்கையில் மீண்டும் குண்டுகளை வெடிக்க வைத்து ‘பனை மரத்தில வெளவாலா தலைவருக்கே சவாலா! தலைவர் வந்துவிட்டார். பராக்! பராக்!!’ என்று பறைசாற்ற நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உலகத் தமிழ் பேரவையின் கீழ் இணைந்துள்ள அமைப்புகள்: Australian Tamil Congress, British Tamils Forum, Canadian Tamil Congress, Danish Federation of Tamil Associations, House of Eelam Tamils, Norwegian Council of Eelam Tamils, New Zealand Tamil Society, Wellington Tamil Society, Swedish Tamil Forum, Malaysia – Tamils Relief Fund, United States Tamil Political Action Council, European Tamil Union, Tamil Cultural Centre.

S J இம்மானுவேல் 18 மே 2009 ற்க்கு பின்னால் உத்தியோகபுர்வ விடுதலைப் புலிகளின் பிரிவு ஒன்றுக்கு தலைவர் என்பது ஆதாரத்தடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. S J இம்மானுவேல் தலைமை தாங்கும் GTF, ‘Protest Sri Lankan Goods’, ‘Protest Sri Lankan Airways’ என்ற மண் கவ்விய பிரச்சாரங்கள் நடாத்தியது என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

Vanni_Missionஅதுமட்டமல்லாமல் புலம்பெயர் சமூகத்தின் பெரிய மோசடிகளில் ஒன்றான வணங்காமண் செயற்குழுவிற்க்கு பின் பலமாக British Tamil Forum – BTF இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது, BTF, GTF என்பன ஒரே அமைப்புகள். மேலும் GTFஇன் தலைவராக நியமிக்கப்பட இருந்த எதிர்வீரசிங்கம் வணங்கா மண் முக்கியஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வணங்கா மண் கொள்ளைக்கு பின்னணியில் S J இம்மானுவேல் அடிகளார் இருப்பது நிரூபணம்.

S J இம்மானுவேல், அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமார் கூட்டாகவே  Trasnational Government  அமைக்க, இதன் முதற் கருவின் கதாநாயகன் கேபி. கே பி கைது செய்யப்பட்டதன் பின்னால் S J இம்மானுவேல் உருத்திரகுமார் கூட்டே இன்றய விடுதலைப் புலிகளின் சுழியோடிகள். இன்னொரு வகையில் கூறப்போனால் S J இம்மானுவேல், உருத்திரகுமார், நெடியவன் கைகளிலேயே புலிகளின் பெருவாரியான பணம் தங்கிப்போயுள்ளது.

எனவே இன்றைய யாழ்-மன்னார் கத்தோலிக்க பீடமும் தம்மை S J இம்மானுவேலுடன் இணைத்துக்கொள்வது ஊகிக்கக் கூடியதே.

Emmanuel_S_J_Rev_Frவன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் செய்த கொடுமைகளை அப்பட்டமாக மறைத்தது மட்டுமல்ல அவற்றை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்த முக்கிய நபர்களில் S J இம்மானுவேல் முக்கியமானவர். உலகில் உள்ள சகல அரசசார்பற்ற பெரும் ஸ்தாபனங்களும், முக்கிய நாடுகளும், விடுதலைப் புலிகளை கண்டித்தபோது “மக்களோடு புலிகள், மக்களே புலிகள்” என புலம்பெயர்ந்து நாடகளிலிருந்து உசுப்பேத்திய பல ஆயிரம் தமிழ் மக்களை கொல்வதில் S J இம்மானுவேலுக்கு பாரிய பங்கு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில் ராஜபக்ச சகோதரர்கள் கையில் உள்ள இரத்தக்கறையைவிட இவரின் கையில்தான் அதிக இரத்தகறை இருக்கிறது.

போரின் உச்சக் கட்டத்தில் சென்ற வருடம் மார்ச் மாதம் வவனியா கிளிநொச்சி பகுதியில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த மக்களை நேரடியாக சந்தித்தவுடன், நான் அவர்கள் தப்பி ஓடும்போது (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் பிரதேசத்திற்குள்) புலிகள் செய்த அட்டூழியங்களை நேரடியாக விபரிக்க கேட்டவன். விடுதலைப் புலிகள் தப்பி ஓடும்போது மக்களை நோக்கி சுட்டதையும் அடித்ததையும் வடுக்களுடன் பார்த்த எனக்கு S J இம்மானுவேல் போன்றோர் புலிகளின் வக்கிரத்தை நியாயப்படுத்துவது புலிகளின் பயங்கரவாதத்தைவிட அகோரமானது.

மனிதப் படுகொலைகள் உக்கிரமாக நடந்து கொண்ட கடைசி நாட்களிலாவது பிரகாரனின் விசுவாசிகளாக இருந்த S J இம்மானுவேல் போன்றோர் சற்று நேர்மையான முறையில் பிரச்சினைகளை அணுகி இருக்கலாம்.

Emmanuel_S_J_Rev_Frஅண்மையில் லண்டனில் யாழ்புனித பற்றியரசர் கல்லுரி அதிபருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருந்தோன்பிலும் மற்றும் அண்மையில் காலம் சென்ற மூத்த குருவானவர் வணபிதா மதுரநாயகம் அவர்களின் மறைவை ஒட்டி இடம்பெற்ற இரு வைபவங்களிலும் S J இம்மானுவேல் முக்கிய பிரதிநிதியாக வந்திருந்தார். இவ்வாறான மதச்சடங்குகளில் நான் S J இம்மானுவேலை கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த மண்ணில் காணவில்லை. நான் இவரை கண்டது எல்லாம் அரசியல் கூட்டங்களில் தான்.

“பாவிகளையும் யேசு மன்னித்து இரட்சிப்பார்” என்ற வேதவாக்கை நம்பித்தான் S J இம்மானுவேல் அடிகளார் கத்தோலிக் மதத்துடன் இணைந்து கொண்டால் நல்ல விடயம் தான். அதற்கு மாறாக எஞ்சியுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து செல்லத்தான் வந்துள்ளாரோ என்பதற்க்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

யதார்த்தமும் இயலாமையும் – கொன்ஸின் பதில் பின்னூட்டம் : ரி கொன்ஸ்டன்ரைன்

Toilet_Cleaning_Brushஅண்மையில் மதங்களைப் பற்றியும் நம்முடைய நீண்ட நாள் நண்பர்கள் மன்னிக்கவும் தோழர்களை ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என வர்ணித்ததும் எழுத்துலகில் மாபெரும் புயலைக் கிழப்பிவிட்டதை நான் நன்குணர்ந்தேன். உண்மையில் இந்த ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என்ற சொல்லை நான் உபயோகிக்கவில்லை. இது என் சக நண்பர்களின் திட்டமிட்ட சதி அல்லது அதற்கு பின்ணணியில் ரஷ்ய உளவுப்படை இருந்திருக்க வேண்டும். நான் உபயோகித்த சொல் ‘டொட் கொம் மார்க்சிஸ்டுக்கள்’. என்னுடைய இந்தக் கருத்து சில பிற்போக்கு திரிபுவாதிகளால் மாற்றப்பட்டு என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது நிற்க.

இந்த டொட் .com எனப்படுகின்ற பதம் எங்கிருந்து வந்தது? இது commercial என்பதன் சுருக்கம் தான் இந்த .com. இனியாவது எமது தோழர்கள் இந்த வரலாற்றுத் தவறை தொடர்ந்தும் இழைக்காமல் தமது web siteகளுக்கு டொட் .marx, டொட் .len, டொட் .sta, டொட் .mao என்று பெயரிடட்டும். யாருக்காவது என்னில் பேரன்பு இருந்தால் டொட் .cons என்று வைக்கலாம்.

இனி நம்முடைய தோழர் பாண்டியன் விடயத்திற்கு வருவோம். ஏதோ சிலர் (நான் உட்பட) பெரிய முதலாளி, நாட்டிலுள்ள ஏழை மக்களை சுரண்டப் புறப்பட்ட புறம்போக்குகள் என்று தொடங்கிவிட்டார். நாமும் தோழர் பாண்டியன் போல் வெறுங்கையுடன் இந்த நாட்டிற்கு வந்தவர்கள்தான். கக்கூஸ் கழுவுவது தொடக்கம், கோழி பொரிப்பது, பாண் சுடுவது வரை வேலை செய்தவர்கள் தான். ஒரு வித்தியாசம் சில வேளைகளில் இருக்கலாம். நாங்கள் என்ன வேலை செய்தாலும் எமக்கு வேலை கொடுப்பவனுக்கு சற்று நன்றியுள்ளவனாக இருந்து, நாம் ஏற்றுக் கொண்ட வேலையை முழுதார செய்வது முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். (நீங்கள் எனது நிலையை உயர்வாகக் கருதினால்) அல்லது இன்னொரு காரணம், உங்களது தாழ்வு மனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.

அல்லது நானும் இந்த நாசமாய்ப் போன முதலாளி எனக்கு இரண்டு பவுண்தானே சம்பளம் தாறான் என்று எனக்குள் எண்ணிக்கொண்டு, மொபைல் போனில் கார்ல் மார்க்ஸ் இறக்கும்போது யாரையாவது வைத்திருந்தாரா? வைத்திருந்தால் அதனை தனது மனைவிக்கு தெரிந்து வைத்திருந்தாரா? அல்லது தெரியாமல் வைத்திருந்தாரா? அவர்களுக்கு பிள்ளை இருக்கிறதா? என விவாதித்துக் கொண்டிருந்தால் கோழியும் கருகிப் போயிருக்கும், முதலாளி வேலையிலிருந்தும் கலைத்திருப்பான். ஏதோ காரணத்திற்காக நான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். இதுதான் எனது சம்பளம் என்ற யதார்த்த உண்மையை மனதார ஏற்றுக் கொண்டு, ஒழுங்காகக் கக்கூஸ் கழுவியததால்தான் பின் அந்த நிலையத்திற்கு மனேஜராகி பின் அதற்கும் மேலாகப் போக வாய்ப்புக் கிடைத்தது. (சில படிப்பும் கொஞ்சம் உதவும்தான்).

அன்றைக்கு உந்த வேலையெல்லாம் செய்ய மாட்டேன் மார்க்ஸிய கொள்கைப்படி தான் வேலைசெய்வேன் என்று அடம்பிடித்து இருந்தால் நானும் என்னவோ ஆகியிருப்பேன். நைஜீரியாவில் எண்ணை எடுக்கின்ற கொம்பனிகள் எல்லாம் தொழிலாளரை வாட்டுகின்றது, அந்த ஊர் மக்களை வதைக்கின்றனர் என்பதே உண்மை. அதற்காக பிரித்தானியாவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்க முடியுமா?

மேற்கு நாடுகள் அனைத்துமே முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்கின்ற நாடுகளே. எனக்கு முதலாளியாக வேண்டும் என்று சின்னச் சின்ன ஆசைகள் இருந்தது, இங்கு வந்தேன். ஆனால் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழ் மக்கள் எதற்காக முதலாளித்துவ நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர். மக்கள் சரி படையெடுக்கட்டும். நம்மடை கீபோர் மார்க்ஸிஸ்டுக்கள் மன்னிக்கவும் டொட் கொம் மார்க்ஸிஸ்ட்டுக்கள் ஏன் முதலாளித்துவ நாடுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

நான் செய்யும் தொழில் hotel, உல்லாசப் பயணம் தொடர்பான தொழில். கடந்த 10 வருடங்களாக எனக்கு இந்தத் தொழில் மூலமாகத்தான் சில அமைச்சர்களின் நேரடித் தொடர்பு கிடைத்தது. சிறீலங்காவில் எனக்கு ஒரு சதம்கூட மூலதனமும் இல்லை, ஒரு சதம் நயமும் இல்லை. நான் எனது அரசியல் நம்பிக்கைகளையும், பொது வேலையையும், தொழிலையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நீங்கள் உங்களது அனுபவத்தையும் புத்தியையும் மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு சேறடிப்பது உங்களுடைய இயலாமையைத்தான் காட்டுகின்றது.

இந்த கம்மியூனிச பலஸ்தீன அடக்குமுறை கதையெல்லாம் அங்கு போய்ப் பார்த்தால் நீங்கள் பேசமாட்டீர்கள். அறியான்மையில் பெரிதுபடுத்திக் கதைப்பதில் பிரயோசனம் இல்லை. சீனாவின் கிராமப் புறங்கள் எல்லாம் சென்று வந்திருக்கிறேன். சீன கம்மியூனிசத்தைப் பற்றி நான் யாரிடமும் கதை கேட்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் பாலஸ்தீன மக்களின் எதிரி இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல அல்ல, ஏனைய முஸ்லிம் அரபு நாடுகளும்தான்.

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சோசலித்திற்கும் முதலாளித்துவத்திற்கும் வின்சன்ட் சர்ச்சில் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு வீதம் சரி. ‘‘முதலாளித்துவத்தில் தீமை என்னவென்றால் செல்வங்களை சரியாக பங்கிட்டு கொள்ளாதது. சோசலிசத்தின் நன்மை என்னவென்றால் கஷ்ட துன்பங்களை சரியாக பங்கிடுவது.’’

எங்களுடைய மனத்திருப்திக்கு பிடித்தவற்றை, தத்துவங்களை வாரி வழங்கலாம். ஆனால் யதார்த்தம் என்று ஒன்றிருக்கின்றது. அதை புரியாத போதும், ஏற்றுக்கொள்ள முடியாதபோதும் தான் காழ்ப்புணர்வு மேலோங்குகிறது.

பின்னோட்டம் விட்ட பல பேரும் நண்பர் பாண்டியனும் நான் சிறீலங்காவில் கலந்துகொண்ட மகாநாடுகளைப் பற்றி பல கொன்ஸ்பிரசி தியரிகளை கூறுகிறார்கள். சென்ற வருடம் மார்ச் 9ல் நடந்த மகாநாட்டிற்கு திருமதி ராஜேஸ்பாலா லண்டனில் இருந்து ஆட்களை சேர்த்தார். அதன்படி என்னையும் வருமாறு கேட்டதால் இணைந்து கொண்டேன்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற மகாநாட்டிற்கு கலந்து கொள்ள விருப்பமானவர்கள் என்னை அல்லது டாக்டர் நடேசனை தொடர்புகொள்ளும்படி எமது முழு தொடர்பிலக்கங்களுடன் கட்டுரை வெளியிடப்பட்டது. இக்கட்டுரைகள் இன்றும் ‘தேனீ’, ‘Sri Lanka Guardian’, ‘Daily Mirror’ இணைய ஊடகங்களில் இருக்கின்றது. ஒருவர்கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதுபற்றி விசாரிக்கக்கூட இல்லை. உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது ‘இவர்கள் யார்?’, ‘இவர்கள் எப்படித் தெரிவு செய்யப்படுகிறார்கள்?’, ‘இவர்கள் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்?’, ‘இவர்கள் பணம் கொடுத்து முக்கியத்துவம் பெறுகிறார்கள்’ என்று கூறுவது உங்கள் அற்பத்தனத்தையும் இயலான்மையையும் கூட படம் இட்டுக் காட்டுகிறது. மீண்டும் அடித்துச் சொல்கிறேன் இங்கு சுத்துமாத்து ஒன்றும் இல்லை. உங்களுடைய இயலான்மையையும் சோம்பேறித் தனத்தையும் தவிர வேறென்ன.

Religious_Conflictஅடுத்து நான் இந்து மதத்தைப் பற்றி எழுதிய குறிப்பு பலரை ஆத்திரப்படுத்தி இருப்பதை நன்குணர்வேன். சில வேளைகளில் சில உண்மைகள் கசப்பாக இருந்தாலும் அதை சொல்லித்தான் ஆக வேண்டும். மதங்கள் அனைத்தும் மக்களின் மூட நம்பிக்கைகளையும், பயத்தையும், பலவீனங்களையும் மூலதனமாகக் கொண்டு கட்டப்பட்ட விடயம்தான். இதில் சந்தேகம் இல்லை. இந்து மதம் குறிப்பிட்ட பிரதேசத்தின் கலை, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை மெருகூட்டி வளர்த்தது எல்லாம் உண்மைதான். அதேநேரம் இந்து மதத்தில் புரையோடிக் கிடந்த பல விடயங்கள்தான் ஏனைய மதங்கள் வளர உரமிட்டன என்ற வாதத்தையும் மறுக்க முடியாது. நிர்வாகத்திலும் புதிய அம்சங்களை உள்வாங்குவதிலும் கிறிஸ்தவமதம் ஒருபடி முன்நிற்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

கத்தோலிக்க மதமாக இருந்தால் என்ன அல்லது சக கிறிஸ்தவ அமைப்புக்களாக இருந்தால் என்ன (மெத்தடிஸ்ட், Church of England, Evangelical, Sevenday Appostits, Jevokah witness), அவ் அமைப்புக்களிடம் ஒரு பலமான கட்டுமானத் திட்டம் இருக்கின்றது. அடிப்படை வரையறைகள் இருக்கின்றன. யார் என்ன செய்யலாம் என்ற அடிப்படை உடன்பாடு இருக்கின்றது. அதுதான் இந்த மதங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

சிக்காக்கோ தொடக்கம் சாவகச்சேரி வரை உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் பதியப்பட்டு அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் பூஜைப்பலியில் பங்கு கொள்கிறார்கள் என பதியப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு தனிப்பட்டவர் எந்தவொரு கிறிஸ்தவ ஆலயத்தையும் தொடக்கவும் முடியாது. அவ்வாறு தொடர்ந்தால் அது நிலைக்கவும் முடியாது. அவ் அமைப்பின் கட்டுமானம் அப்படி. அது மட்டுமல்லாமல் ஆலயத்தின் பெயரால் சேர்க்கப்படுகின்ற பணம் முழுவதும் மீண்டும் அமைப்புக்குள் உள்வாங்கி பின்னர் அதன் பெரும்பகுதி சமூகத்திற்கு அல்லது குறிப்பிட்ட மதத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கப்படுகிறது. இந்த விடயங்கள் உணரப்படாமல் அவன் கள்வன், இவன் கள்வன், போப் ஒரு நாஜி, வண பிதா ஜேம்ஸ் பக்திநாதர் ஒரு புலி என கதை அளப்பது இயலாமையின் வெளிப்பாடும், காழ்ப்புணர்ச்சியின் உச்சக் கட்டமும் தவிர வேறொன்றும் இல்லை.

சரி இப்படியெல்லாம் feel பண்ணுபவர்கள் இந்துமத வளர்ச்சிக்கு என்ன வேலையை ஆணித்தரமாக செய்துள்ளனர் அல்லது செய்து கொண்டிருக்கின்றனர்? ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் நாங்கள் எல்லோரும் பட்டம் விட்டோம்’ என்ற கதையெல்லாம் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில்…..’ என்ற கூட்டணி சென்ரிமென்டைவிட வேடிக்கையானது. குறைவான வாடகைக்கு பலகாலம் மூடிக்கிடந்த தவறனையை (Pub), பலசரக்குக் கடையை வாங்கி அதை ஏதோவொரு ஆலயம் என்று பெயரிட்டு வருடாவருடம் இந்தியாவிலிருந்து சுகிசிவத்தை வரவழைத்து அவருடைய அலம்பலை குந்தியிருந்து கேட்டுவிட்டுப் போவதால் மட்டும் மதம் வளர்ந்து விடாது.

கிறிஸ்தவம் உட்பட மதங்கள் அனைத்தும் ஒரு பேய்க்காட்டு மாய வித்தைதான். அது அழியவும் மாட்டாது. அழிக்கப்படவும் முடியாது. ஆனால் இந்த மத நிறுவனங்கள் எவ்வாறு சமூகத்திற்கு அதிக பலனைக் கொடுக்கும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படல் வேண்டுமே தவிர, வேறொன்றும் பயனைத் தராது.

சிலருக்கு தண்ணி அடிப்பதில் ஒரு சந்தோசம், ஒரு மனநிறைவு! சிலருக்கு மார்க்சிசம் கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி! இன்னும் சிலருக்கு தண்ணி அடித்து மார்க்சிசம் கதைப்பதில் பரமதிருப்தி! ஆனால் பலருக்கோ கோயில் சென்று தரிசிப்பதில் உள மகிழ்ச்சி, நிறைவு. இருந்துவிட்டு போகட்டும் பிரச்சினையில்லை. மனிதம் என்றாலே பலவீனம்தானே. இதில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

300 வருடங்களுக்கு முன் பாதிரி வந்து எங்களை சுத்திப் போட்டார்கள் என்ற வாதத்தில் உண்மை இருக்கலாம். அதே கதையை இப்போதும் அளப்பது கிறிஸ்தவ மதங்களின் கெட்டித்தனத்தை காட்டுவதைவிட மற்றைய மதங்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. இந்து மதத்தினர் எல்லாம் சரியான ‘இனசன்ட்’ என்று ஜோக் அடித்துவிட வேண்டாம்.

300 வருடத்திற்கு முன் போவானேன். இன்று லண்டனிலுள்ள இந்து ஆலயங்கள் என்ன செய்கின்றது. ‘உயர்வாசக் குன்று’ என்று அழகாக அழைக்கப்படும் ஆச்சுவே முருகன் ஆலயம் ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடைகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளது. நாகபூசனி அம்மன் ஆலயம் புலிகளின் வருமானத்திற்காகக் கட்டப்பட்டது. . ரூட்டிங் சீவரத்தினம் ஐயாவின் முத்துமாரி அம்மன் ஆலயம் புலிகளை வளர்ப்பதாக என்று கூறிக்கொண்டாலும் சீவரத்தினம் ஐயா தன்னையும் சேர்த்து வளர்த்துக் கொண்டார். இல்பேர்ட் தூள் விநாயகர் சொல்லவே வெண்டாம். இலண்டனில் உள்ள ஆலயங்களின் வருமானத்தில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயக மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னெடுக்கின்றது. ஏனையவை தங்கள் வருமானத்தில் எத்தனை சதவீத வீதத்தை திரும்பவும் அந்த மக்களின் நலனுக்காக செலவிடுகின்றன.

கிறீஸ்தவ மதம் ஒன்றும் புனிதமான மதம் கிடையாது. அவர்களும் ஆயுதக் கொம்பனிகளில் முதலீட்டை வைத்துள்ளனர். இங்கு நான் எந்த மதத்திற்கும் நற்சான்றிதழ் வழங்க கட்டுரை எழுதவில்லை. கிறிஸ்தவ மதம் கள்வர் காடையரின் மதம் என்பதுபோல் பின்னூட்டம் விட்ட நண்பர்களின் கருத்தை கவனத்தில் எடுத்தால் என் மனைவி பத்தினிதான் ஆனால் சூனியக்காரன்தான் வசியம் செய்துபோட்டான் என்ற மடமையான கருத்துக்கு ஒப்பானது. அதனையே இங்கு சுட்டிக்காட்டினேன்.

வடக்கு கிழக்கில் உல்லாசப் பயணத்துறையின் எதிர்காலம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Jaffna_Mayorதமிழ் பிரதேசங்களின் மீள் புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு குறித்து 12.01.2010 அன்று உயர்மட்ட மாநாடு யாழ். புல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ மற்றும் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Shanmugalingam_Profபேராசிரியர் என் சண்முகலிங்கன், பேராசிரியர் எஸ் சத்தியசீலன், கலாநிதி நொயல் நடேசன் (அவுஸ்திரேலியா), கலாநிதி என் நரேந்திரன் (அவுஸ்திரேலியா), பேராசிரியர் எம் சின்னத்தம்பி, திரு ரி கொன்ஸ்ரன்ரைன் (ஜக்கிய இராட்சியம்), திரு எம் இராமதாசன், பேராசிரியர் வி பி சிவநாதன் ஆகியோர் விஷேட உரைகளை ஆற்றினர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் உல்லாச விடுதிகள் பயணத்துறை தொடர்பாக ரி கொன்ஸ்ரன்ரைனின் உரையும் அதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் www.dailymirror.lk/print/index.php/opinion1/3405

Jaffna_Univercity_Templeவடக்கு கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத் துறையையும் அதனை சந்தைப்படுத்தும் விதி முறைகளையும் எடுத்துக் கொண்டால் அவை வடக்கு மாகாணம் அல்லது கிழக்கு மாகாணம் அல்லது வட-கிழக்கு மாகாணம் என்று ஒரு தனி அலகாகப் பிரித்தெடுத்து சந்தைப்படுத்தவோ இயக்கவோ முடியாது. அதற்குரிய பாரிய தனிப்பட்ட சந்தை இல்லை என்பதே எனது அபிப்பிராயம். எனவே உல்லாசப் பயணத்துறையைப் பொறுத்தவரை தமிழ்ப் பிரதேசங்களின் வியாபாரத் திட்டங்கள் சந்தைப்படுத்தும் திட்டங்கள் முழுவதும் முழுமையான சிறீலங்காவையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

கடந்த வருடம் மட்டும் சிறீலங்காவிற்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளின் தொகை 439 000 ஆக இருந்தது. சிறீலங்காவின் உல்லாசப் பயணத்துறை வரலாற்றில் 2004ம் ஆண்டே அதிகமான உல்லாசப் பயணிகள் வருகை தந்தனர். இத்தொகை 5666 202 ஆக இருந்தது. இதன்மூலம் 2004ம் ஆண்டு நாட்டிற்கு 416 மில்லியன் USடொலர்கள் வருவாயாகக் கிடைத்தது.

அத்துடன் 2004ம் ஆண்டு 112 000 பேர் உல்லாசப் பயணத்துறை தொடர்பான தொழில்வாய்ப்பை பெற்றிருந்தனர். இலங்கை உல்லாசப் பயணத்துறை அமைச்சின் திட்டத்தின்படி 2011ம் ஆண்டு 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் நாட்டிற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இக்கணிப்பு எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்றொரு கேள்வி எழுகின்றபோதிலும் World Tourist Organisation போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் கணிப்பின்படி சிறீலங்காவின் பயணத்துறை பெரிய வளர்ச்சியை வருங்காலங்களில் அடையும் என திட்டவட்டமாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதாவது ஒரு விடயத்தை நாம் சந்தைப் படுத்தும்போது அல்லது தூரநோக்கான வழிமுறைத் திட்டங்களை வகுக்கும்போது அதன் பலம் – பலவீனங்களை ஆராய்வது முக்கிய விடயமாக அமைகின்றது. உலகிலுள்ள பல நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறீலங்காவிற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

North_and_Eastசிறீலங்கா தனது 65 525 சதுர கிலோமீற்ரர் குறுகிய நிலப்பரப்பினுள் சகலவிதமான இயற்கை வழங்களையும் வெப்ப நிலைகளையும் உள்ளடக்கி இருக்கின்றது. மலைப்பிரதேசம், குளிர் பிரதேசம், உலர் பிரதேசம், வனவிலங்குகள் பிரதேசம், மலைப்பிரதேசம், காடுகள், சிற்ப ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள், குளங்கள், ஆறுகள் என பல தரப்பட்ட வித்தியாசமான விடயங்களை ஒரு குறுகிய நிலப்பரப்பினுள் உள்வாங்கி அமைந்துள்ளது. எனவே வடகிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறை வியாபார சந்தைப்படுத்தும் அணுகுமுறைகள் சகல விடயங்களையும் உள்வாங்கி அதன் சிறப்புக்களை ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சந்தைப்படுத்துதல் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. சிறீலங்காவின் உல்லாசப் பயணத்துறை படத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணம் ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கின்றது. இக்கால கட்டத்தில் இச்சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் உல்லாசப் பயணத்துறையை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்களின் கலை, கலாச்சாரம், இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதற்குரிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டு அமைக்கப்படல் வேண்டும்.

சிங்களப் பிரதேசங்களின் உல்லாசப் பயணத்துறை 1966ம் ஆண்டிலிருந்து திட்டமிட்ட முறையில் முன்னேற்றப் பட்டுள்ளது. எசல பெரகரா, Navam Perhera, Kelenyia Duruthu Perhera, New Year Celebration, Vesak, Sri Lanka Pilgremade, போயா தினங்கள் உலக உல்லாசப் பயணத்துறை சந்தைகளில் முதன்மை படுத்திக்கொண்டன.

சிறீலங்காவின் ஏனைய பிரதேசங்களைப்போல வடக்கு கிழக்கு மாகாணமும் உல்லாசப் பயணத்துறையில் ஒரு முக்கிய இடமாக திகழ இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது: புலம்பெயர்ந்த தமிழர்களில் அதிலும் குறிப்பாக இரண்டாவது தலைமுறை தமிழர்களின் பிரயாணமும் அதன் மூலமாக உள்வாங்கப்படும் அந்நிய செலவாணியும்.

இரண்டாவது: இன்று சிறீலங்காவின் அதிகூடிய உல்லாசப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தருகின்றனர். எனவே இந்திய உல்லாசப் பயணிகளை தமிழ்ப் பிரதேசங்களுக்கு வரவழைப்பதற்கு வரலாறு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அதிக வழிமுறைகள் இருக்கின்றன.

தமிழ்ப் பிரதேசங்களின் உல்லாசப்பயண வளர்ச்சியைப் பொறுத்தவரை இப்பகுதியின் அரசியல்வாதிகளும் கல்விமான்களும் ஆரம்பத்திலேயே இருந்து மத்தியுடன் முழுமையாகப் பங்கெடுத்து இப்பிதேசங்கள் சர்வதேச சந்தையில் முக்கியப்படுத்த அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எமது பிரதேசங்களின் இயற்கை வளங்கள் இயற்கைக் காட்சிகள் எம்மவருக்குத்தான் அதிகம் தெரியும்.

இன்று சிறீலங்காவிற்கு வருகை தருபவர்களில் 99.9 வீதமானோர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகவே நாட்டினுள் வருகின்றனர். அமைச்சின் திட்டத்தின்படி வருகின்ற 6 வருடங்களில் உல்லாசப் பயணிகளின் வருகை 8.2 மடங்காக அதிகரிக்க திட்டங்கள் உள்ளது. இத்திட்டம் யதார்த்தமாகக் கருதுமிடத்து 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் விமானம் ஊடாக மட்டும் நாட்டிற்குள் வரமுடியாது. எனவே கடல் மார்க்கமாக போக்குவரத்துகள் விஸ்தரிப்பது இன்றியமையாது.

கடற்பரப்பிலான போக்குவரத்து விஸ்தரிக்கப்படும் போது முதலில் தமிழ்ப் பிரதேசங்கள்தான் இதன்மூலம் பயனடையப் போகின்றது. இலங்கை ஒரு தீவாக இருக்கின்ற போதிலும் 99.9 வீதமான மக்கள் விமானம் மூலம் நாட்டிற்குள் வருவது வழமைக்கு மாறானது.

இந்த நிலைமை அரசியல் காரணங்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் இந்நிலைமை வருங்காலங்களில் மாறுவதற்கு அதிக சந்தர்ப்பம் இருப்பதையும் நாம் முற்றாக உணர வேண்டும்.

உல்லாசப் பயணத்துறையில் உள்ள நன்மைகளை நாம் ஆராயும்போது அதன் பின்னடைவுகளையும் தீமைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். இன்று சிறுவர்களின் பாலியல் செயற்பாடுகளில் சிறீலங்காவின் பெயர் முன்னிலையில் இருக்கின்றது.

போதைவஸ்து விபச்சாரம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள் உலக உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சியின் கடுமையான விளைவுகள். சட்டங்கள் ஆயிரம்தான் ஏற்படுத்தினாலும் மக்களின் பூரண ஒத்துழைப்பு இன்றி இவற்றைத் தடுக்க முடியாது.

அண்மையில் வெளிவந்த கணிப்பின்படி சிறீலங்காவில் 10 000க்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவை மூர்க்கத்தனமாகக் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

Tourist_Map_of_SLஎந்தவொரு வளர்ச்சியும் நாட்டு மக்களின் சுபீட்சத்திற்கு வழிசமைக்க வேண்டுமே தவிர அந்த நாட்டில் அரசியல் பொருளாதார நிலைமையை தகாத முறையில் பாவிக்க இடமளிக்கக் கூடாது. இவ்வாறான குற்றச் செயல்கள் பல நாடுகளை தொடர்புபடுத்தி கூட்டாக செயற்படுவதினால் இவற்றைத் தடுப்பதிலும் நாம் ஏனைய நாடுகளுடன் கூட்டாக செயற்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்வதில் இங்கு தொடர்ச்சியாக வாழ்ந்த மக்களுக்குத்தான் பூரண உரிமை இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்த பணத்தை முதலீடு செய்பவர்கள் இங்குள்ள சட்ட திட்டங்களுக்கும் வழிமுறைகளுக்கும் அமைவாகவே செயற்பட வேண்டுமே தவிர பொருளாதாரத்தின் பலத்தால் அவர்கள் முதன்மை அடையக்கூடாது. எனவே இங்கு வாழும் மக்களும் அதன் கல்விமான்களும் உத்தியோகத்தர்களும் அரசியல்வாதிகளும் கூட்டாக அமைக்கும் திட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாம் எமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கீ போட் மார்க்ஸிஸ்டுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள தூரம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Conference_in_Jaffna_Univercityயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமானவை. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து பட்டதாரியாகிய மாணவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தாலும் அவர்களிடம் ஏதும் ஒழுங்கமைக்கப்பட்ட சங்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்க மாணியங்களால் ஒதுக்கப்படுகின்ற பணம் அடிப்படை வசதிகளைக்கூட பராமரிக்கக்கூடிய நிலமையில் இல்லை. உதாரணமாக இங்குள்ள வியாபார நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் தமது பெயரில் அல்லது தமது குடும்பப் பெயரில் தமது வசதிகளுக்கு ஏற்றாற்போல் உதவிகளைச் செய்யலாம்.

உதாரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு 1987ம் ஆண்டு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு பழைய வாகனம் மட்டுமே இன்றுவரை பாவனையில் உள்ளது. வேறு ஒன்றும் இல்லை. யாழ்ப்பாண கல்வி பாரம்பரியத்தை மார்தட்டிச் சொல்லும் சமூகத்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு இந்த நிலமை.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறுகின்ற அரசியலுக்கும் அங்குள்ள யதார்த்த நிலமைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு புலியின் அட்டூழியங்களை மட்டும் கதைத்து கொம்பியூட்டர் ஊடாக புரட்சிசெய்த keyboard மார்க்ஸிட் அனைவரும் இப்போது புலம் போய் உங்கள் மாபெரும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்த ஒரு தடையும் இல்லை.

சாமம் 2 மணிக்குக்கூட வட்டுக்கோட்டைச் சந்தியில் சைக்கிளில் போனால் அங்கு கடமையில் உள்ள ஆமிக்காரன் நிற்பாட்டி சேவை கேட்கும் நோக்கம் இல்லை. இந்த நிலமை வருங்காலங்கிலும் தொடருமோ தெரியாது. ஆனால் இன்றைய நிலமை இதுதான்.

Tilko_HotelTilko_Hotelஇன்று இலண்டனில் இயங்கிவந்த புலிகளின் பெரிய ஆதரவாளராகிய Tilko ஸ்தாபனம் பெரிய Hotel ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிர்ணயிக்கிறது. பழைய கதைகளைப் பேசி மக்களை இன்னும் துன்புறுத்தாமல் இவ்வாறான வேலைத் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தமிழ் நிறுவனங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்குச் சென்று தமது நிறுவனங்களை நிறுவி வேலைத்திட்டங்களையும் பயிற்சிகளையும் மேற்கொள்ள உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

10 பவுண்களுக்கு பூ வாங்கி ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பின்னால் வரிசையில் சென்று 5 பவுண்களுக்கு விளக்கு வாங்கி அதை வரிசையாக கொழுத்தி வைத்து பின்னர் தமிழ் ஈழத்தின் தேசிய உணவான கொத்து ரொட்டியும், மட்டின் ரோலும் உண்டு வீடு திரும்பும் எமது புலம்பெயர்ந்த விழிப்புப் போராட்டங்கள் முடிவிற்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.

ஜந்து சதவிகித மக்கள் இருந்து கொண்ட 33 சதவிகித பகுதி நிலத்தை எமது பாரம்பரிய பிரதேசம் என்று கட்டிப்பிடித்து கதறியழும் யதார்த்தமற்ற முட்டாள்தனமான வரட்டு அரசியலுக்கு சாவு மணி அடிக்கப்படல் வேண்டும். தமிழ்பேசும் மக்களின் அரசியல் யதார்த்த நிலைமையை பிரதிபலிக்காவிட்டால் எமது சமுதாயமும் பாலஸ்தீனம் போல் Gaza Strip (ஈழத்து முள்ளிவாய்க்கால்) போன்ற ஒரு பிரதேசத்தில் முடுக்கி வைக்கப்பட்டு காலாகாலமாக மேற்கத்தைய நாடுகளை கையேந்தி வாழும் நிலைமைக்கு கொண்டு செல்லப்படும்.

இந்தியாவை மையப்படுத்தி “மோட்டு சிங்களவனுக்கு” பாடம் படிப்பிக்கும் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இன்று இந்தியாவின் வெளிநாட்டு பாதுகாப்பு கொள்கைகள் எல்லாம் பொருளாதாரத்தையும் பிராந்திய செல்வாக்கையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர் தமிழ் மக்கள் வேண்டும் என்றால் பொய் கூறி புலமை பெற்று, கொழுத்துப்போய் இருக்கும் வெறும் புஸ்வாணங்களாகிய சீமான், வைகோவை அழைத்து மட்டின் ரோல் கொடுத்து விழா நடத்தலாம். இல்லாவிடில் இன்னும் நான்கு அப்பாவித் தமிழர்களை தீக்குளிக்க வைத்து இங்கு குளிர் காயலாம். இவை ஒன்றும் மண்ணில் வாழும் மக்களுக்கு எவ்வித சுபீட்சத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

யாழ்பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம்இன்றைய அரசியல் பொருளாதாரத்தையும் வாக்குப் பலத்தையும் அடிப்படையாக கொண்டது. யதார்த்தத்திற்கு அப்பாற்ப்பட்ட அரசியல்கள் மக்களின் அவலங்களை அதிகரிக்கும். 1980 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய யாழ்  சனத்தொகை 50 விகிதம் குறைவாக இருக்கின்றது யாழ்ப்பாண வைத்தியசாலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்கு விளம்பரங்கள் பிரசுரிக்கப்படும்போது சிங்களவர்களின் விண்ணப்பங்களே தரமானவையாக இருப்பதாயும், இதனால் தாம் சிங்களவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலைமையில் இருப்பதாக யாழ் வைத்திய அதிகாரி டாக்டர் தேவதாஸன் மற்றும் யாழ் பல்கலைக்கழக் துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் அவர்களும் தெரிவிக்கின்றார்கள். யதார்த்தம் இதுதான்.

வவுனியாவில் தனிமையில் வாடும் புத்தர்30 வருடங்களுக்கு முன்பு ரூட்டிங் வந்த நாங்கள் மூலைக்கு மூலை கோயில் வைத்து நடு சமர் காலங்களில் நடுரோட்டில் வெறுமனே நின்று தேங்காயை உடைத்து (Health and safety hazard) வீதியெல்லாம் குத்துக்கரணம் அடித்து எமது மதச்சடங்குகளை பின்பற்ற வேண்டும். நடு அநுராதபுரச் சந்தியில் பிள்ளையார் மிகவும் சந்தோசமாக இருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் கல்லாக உள்ள புத்தர் எங்களுக்கு என்ன கெடுதியை கொண்டுவரப் போகிறார்? Traffic Jam கொண்டு வருகிறாரா? அல்லது Health and safety issue …?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத எழுச்சிக்கும், பழைமையை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற அரசியலுக்கும் சாவு மணி அடிக்கப்படும் வரை தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு கிடையாது. இன்று சிறுபான்மையான தமிழினம் இன்னும் சிறுபான்மையாகி விட்டது. பாரம்பரிய தமிழ்பிரதேசம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு போன்ற அரசியல்வாதங்கள் செயலற்றதாகப் போயுள்ளது. இன்று ஜக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும் செழுமையாகவும் வாழ்வது காலத்தின் ஒரு கட்டாயத் தேவை.

Future of Tourism and Hospitality Industry in North and East : Tarrin Constantine

Tourist_Map_of_SLConference on Rehabilitation, Reconstruction & Development of the Tamil Areas and the Role of Diaspora By Tarrin Constantine

Venue: Jaffna University Library Auditorium            Tuesday, 12th January 2010

Objective – Future of Tourism & Hospitality Industry in North & East of Sri Lanka

The objective of this paper is to explore the future of tourism industry in Sri Lanka with particular focus on how to reactivate it in the North & East of the country. Any master plan for development of tourism for each of the provinces in Sri Lanka should be worked out within the wider framework of the tourism network of the country. For example, Jaffna alone cannot be the desired destination of a tourism development programme; instead it should fit within the market strategy of the tourist industry as a whole or for that matter The Sri Lanka Tourism Development Authority and The Sri Lanka Tourism Promotions Bureau (successors to The Sri Lanka Tourist Board)

Organised tourism was institutionalised in Sri Lanka in 1966 and since then it has seen a rapid growth. This growth is in spite of 40 years of violence and communal unrest in the country, at certain time reaching its peak level. Further, the industry has gonethrough a setback in the aftermath of the Tsunami (2004) in the year 2005; however it got recouped within a short span of time. The year 2004 has witnessed the highest tourist arrivals of 566,202 and contributing USD 416 million to the economy. At that time the industry had direct and indirect employment of 112,000 people. In the years 2007 and 2008 there has been a sharp decline in arrival of 494,008 and 438,475 respectively. The decline is mainly due to the internal war in the country and the Global economic slump. Total arrivals of the year 2009 are expected to be around 439,000. 

Tourist_Map_of_SLYear – Tourist arrivals
1995 – 403,101
1996 – 302,265
1997 – 366,165
1998 – 381,063
1999 – 436,440
2000 – 400,414
2001 – 336,440
2002 – 393,171
2003 – 500,642
2004 – 566,202
2005 – 549,308
2006 – 559,603
2007 – 494,008
2008 – 438,475
2009 – (Dec estimated ) 439,000

However, as would be evident from the above Table, the decline of 11.2% in tourist arrival during 2008/ 2009 in spite of Global economic downtrend and the country in a war footing is a positive sign. 

On the basis of research carried out by the Sri Lanka Tourism Promotions Bureau and the World Tourism Organisation (WTO), it is very clear that Sri Lanka has a long way to go to tap its full potential. Therefore it is vital that politicians and academics from the North East area should give the utmost priority in developing the area into a desired destination for tourists.

What we have to offer

Sri Lanka, apart from being gifted with diversity of attraction which only a few countries could match with its uniqueness, is one of the very few which can fit in the ‘attraction diversity criterion’ with 65,525 sq km.

With regards to North and East it should specifically initiate some programmes to attract the tourists. For instance, vast areas of desert in major countries were turned in desired destinations for tourists (e.g.: Tunisia, Egypt). Tourists travel hundred of miles to arrive at some destinations. I do not have much knowledge about the Eastern province, hence explored some concepts for the other provinces. When a concept is developed it is always better to schedule during holidays and other major events of the country such as:

• Nallur Temple festival
• Establishing shop points for day tour operators (Keerimalai, Jaffna town, Nallur Temple etc)
• Thellippalai Thukai Amman festival
• Tamil New Year

It is also important to take into consideration that any tourism and hospitality industry will not succeed without well trained and motivated staff in the industry. Provincial bodies should encourage private investment to open hotels in Northern and Eastern provinces. Government help can also be sought to start tourist related courses in these provinces. Sri Lanka Institute of Tourism & Hotel Management can venture into such activities.

Small provinces like Jaffna and Batticaloa will have two kind of visiting:
• Day visits
• Long time visits

Market should be developed to capture both kinds of customers.

In the South, Esala Perahara, Navam Perahara, Kelenyia Duruthu Perehara, Singhala New Year, Vesak Poya Celebration and Sri Pada Pilgrimage are some cultural activities that attract tourists and promotions in that respect is carried out Worldwide. It is important that we identify such events and carryout promotion in order to attract tourist. It will also help us to preserve our cultural identity. It will also project as a show case for our cultural enhancement.

Currently Sri Lankan visitors stay is as follows:

Period of stay – 2008

Period 2008
1-3 nights 26.4%
4-7 nights 28.7%
8-14 nights 33.2%
15-21 nights 8.7%
22-30 nights 1.8%
31 nights & over 1.2%

For example we cannot expect the pleasure tourists to stay in Jaffna over 7 days. Therefore 4-7 night guests are a vital market.  Therefore stay plan should be developed keeping this duration of stay in mind.

Market Segment- Where we stand

The following are the top ten countries generating markets in this sector for Sri Lanka. As would be seen from the Table, India has overtaken UK as the major market for Sri Lanka over the past 3/ 4 years.

Top ten market- 2008 (Pleasure Tourist 73.2%)

Rank Country Tourists
1 India 85,238
2 UK 81,331
3 Germany 31,564
4 Maldives 30,625
5 Australia 19,536
6 Netherlands 15,797
7 USA 14,053
8 Japan 13,030
9 Russia 10,594
10 China 10,258

North and East have a unique advantage of attracting Diaspora community, as their desired tourist destination. This can be an easy market if it could be tapped. It is important that any marketing has to be completely out of any political or any other influence.

Provincial councils in North and East should have strong representation in The Sri Lanka Tourism Development Authority (SLTDA) and The Sri Lanka Tourism Promotions Bureau (SLTPB) representing the interest of North & East. It should ensure that North & East have appropriate representation in SLTPB and in its overall marketing plan.

At present North and East have no representation at all and it is completely understandable. However, future should be different.

Institutional Structure

History of SLTDA

In 1966, the Government decided to develop tourism in a planned and a systematic manner, after identifying the need to set up an institutional framework. The Ceylon Tourist Board (created by the Ceylon Tourist Board Act No 10 of 1966) and the Ceylon Hotels Corporation (created by Ceylon Hotels Corporation Act of 1966) were set up duly.

Created to promote rapid economic development, through the development of foreign tourism, the Ceylon Tourist Board (CTB) was a statutory body that allowed greater freedom in decision making and flexibility in financial management.

The Ceylon Hotels Corporation was a Joint Stock Company with public and private sector involvement. It was intended to be the commercial arm of the Government for the purpose of developing accommodation and other facilities for tourists.

The Tourist Development Act, enacted in 1968, allowed the Ceylon Tourist Board to obtain prime land and private land (through compensation) for development purposes. Lending institutions advancing money for tourist development and construction programmes were given guarantees for securing their credits. The legislation also covered the establishment of a national holiday resort company, which planned various types of accommodation and resort areas. Moreover it included the setting up of an authority under the Tourist Board to mange and administer each resort. The Act conferred powers for the Protection of Highways and Places of Scenic Beauty and vested authority in the Ceylon Tourist Board for the Registration and Classification of Tourist Hotels and all other tourist services including travel agencies. The Tourist Development Act of 1968 provided the Ceylon Tourist Board with the statutory authority to develop tourism on a planned and controlled basis.

With the new Tourism Act number 38 of 2005. which came into effect from the 1st October 2007 the following bodies became as successors to the Sri Lanka Tourist Board. 
1. The Sri Lanka Tourism Development Authority
2. The Sri Lanka Tourism Promotions Bureau
3. Sri Lanka Institute of Tourism & Hotel Management
4. Sri Lanka Convention Bureau

Within these structures The Sri Lanka Tourism Development Authority (SLTDA) is the most operational aspect. Within SLTDA there are important projects where North and Eastern provinces should actively participate. These projects are as follows:

• Tourism Infrastructure projects
• New Product Development
• Domestic Tourism Projects
• Destination Management System
• Sustainable Tourism Developing project
• Regional Tourism project

It is important that provincial administrators and politicians are getting involved to make sure that the North and East interests are well represented by experienced and capable professionals.

Infrastructure

Tourism requires a good infrastructure. There are so many examples in the world where countries are suffering without proper infrastructure to attract the tourists.  When the destination becomes popular more people want to visit the country. In return demand for travel will increase resulting in higher airfare. Then this will resent in catch 22 situations, whereby visitors demand increases and the flights decline. This is more common in small islands (e.g: Cyprus, Sri Lanka). Currently 99.9% of the people visiting Sri Lanka get into the country by air travel. SLTDA has set a target of reaching 2.5 Million tourists by the year 2016. This is 8.6 times over the current capacity. On the other hand environmental policies are getting stretched day by day resulting in more restriction on air travel. Therefore Sri Lankan target of 2.5 Million will become impossible as days go by. In such a situation, sea points have to be open up to meet such targets. 
   
With India in the top of the market for tourists in Sri Lanka, the possibility of opening sea points- in the North and East will be one option for consideration. Therefore it is important that Tamil areas should take the full advantage of this new trend

Balancing the Market Economy & Social/ Cultural Framework

It is very important to make a balance of market economy with the social and the cultural environment of the region. Market should not be allowed to dictate the inhabitants of the land. There are many countries in the world where tourists exploit the natives beyond anyone could imagine. It is all covered up by the instructions in order to maintain the reputation of the country. Tourism is the industry that offers service. In many countries the concept of service is extended to child sex, prostitution, drugs and other inhuman activities.

 Sri Lanka is not an exception. In Sri Lanka an estimated 36,000 children are believed to be victims of prostitution, according to a study by UNICEF in 1998. An NGO, PEACE operating in Sri Lanka, estimates that 10,000 children, especially boys, may be involved in child sex tourism. Sri Lanka has a number of laws on child protection and the prevention of child abuse, including having ratified the United Nations Convention on the Rights of the Child (CRC) in 1991. In 2002, the Optional Protocol to the CRC on the Sale of Children, Child Prostitution and Child Pornography was signed and the ILO Convention 182 on the Worst Forms of Child Labour ratified. Economical reality and day to day hardship had overtaken the implementation of it in the land. Therefore it is important that tourists and hospitality industry should grow under closer cooperation and network with several organisations. Tourism industry dictated by market will distract the community.

Conclusion

The future economy of Sri Lanka is dependent on tourism for many resources unique to Sri Lanka. Potentials still remain to be explored. Reconstructing Tourism industry would be crucial to uplift the Sri Lankan economy. As the Sri Lanka government seeks foreign investment, foreign entrepreneurs should invest in major projects including tourist industry.

Sri Lanka has named 2011 as “Visit Sri Lanka Year” by doubling the number of foreign tourists to one million. President Mahinda Rajapaksa has given his personal utmost to this project. Therefore it is vital that government takes into full advantage the potential of tourist industry in Sri Lanka, formulate and implement a comprehensive and coordinated programme which will be resistant to all political stereotypes and enhance the life of natives.

 (Extacts from paper submitted by Mr Tarrin Fellow Member of British Association 0f Hospitality Accountants & Member of Institute of Hospitality. Currently working as the Group Financial Director of Desilu Group (owners & operators of Hotels & Properties) based in United Kingdom and Cyprus,)

Courtesy:  www.dailymirror.lk/print/index.php/opinion1/3405

“ஆய்போவாங்…… யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது” : ரி கொன்ஸ்ரன்ரைன்

யாழ்கோட்டைக்கு அருகாமையில் ஆழ்ந்த உறக்கத்திலுள்ள இராணுவம்30 வருட ஆயுதப் போராட்டமும் அதனுடன்கூடிய விடுதலைப் புலிகளின் ‘DisneyLand’ கனவும் ஒட்டுமொத்தமாக மண்கௌவிய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஏதோ எஞ்சி இருந்தவற்றை சுதாகரித்துக்கொண்டு முன்னேறத் துடிக்கின்றது.

வடக்கு மாகாணத்துக்கு சிங்கள மக்கள் பஸ்வாரியாக படையெடுக்கின்றனர். பண்ணைப் பாலம் முழுவதும் சிங்களப் பகுதிகளில் இருந்துவரும் உல்லாசப் பயணிகளின் பஸ் வண்டிகள் ஆக்கிரமித்து நிக்கின்றன. மக்கள் வெட்டவெளிகளில் தாம் கொண்டுவந்த உணவை நிலத்தில் இருந்து புசிக்கின்றனர். இராணுவ காப்பரண்களில் துப்பாக்கிகளை வைத்துவிட்டு இராணுவத்தினர் நித்திரை கொள்கின்றனர். பாண் பேக்கரி வைத்திருக்கும் சிங்களக் குடும்பத்தைத் தவிர எதுவித சிங்கள குடிசன வாடையே இல்லாத பண்டத்தரிப்பு, சில்லாலை, சண்டிலிப்பாய்ப் பகுதிகளில் இரவில் பலர் சிங்களத்தில் கதைத்துக் கொண்டு திரிகின்றனர்.

ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு மதுபானக் கடைகள் சிங்களவர்களால் நடாத்தப்படுகின்றது. வீதி வீதியாக சிங்கள வியாபாரிகள் பிளாஸ்ரிக் கதிரைகளையும் ஏனைய சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். வீதிகளில் நிற்கும் இராணுவமும் பொலிசாரும் தங்களின்பாடு. ஏறக்குறைய நூற்றுக்கு நூறுவீதமான காவற்படையினர் சிங்கள அல்லது முஸ்லிம் இனத்தவர்.

Advertising_in_Jaffnaமுழத்திற்கு முழம் காவற்படையினரை வைத்துக்கொண்டு நாடு எப்படி முன்னேறப் போகின்றது என்பது ஒருபுறம் இருக்க இந்த “சிங்கள ஆக்கிரமிப்பை” யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. 1980களில் நான் கண்ட யாழ்ப்பாணத்தை இன்று துளிகூட காணமுடியவில்லை. ஆயுதப் போராட்டம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு தூஷண வார்த்தைபோல் உணரப்படுகின்றது. 1980ம் ஆண்டுகளில் நாங்கள் தொடங்கியதுபோல், மடியில் கைக்குண்டுடன் திரிந்து கிராமங்களில் அரசியல் வகுப்புக்கள் நடாத்தினால் மக்களே எம்மைக் கௌவிப் பிடித்து அடியும் போட்டு இராணுவத்திடம் கையளிப்பார்கள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகமும் இல்லை. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமை. சுருக்கமாகக் கூறின் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” நிலைமை.

A9 பாதையூடாக யாழ் செல்லும் பஸ் வண்டிகள் பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. ஒருவழிக் கட்டணமாக 1000 ரூபாய்கள் தொடக்கம் 2150 ரூபாய்வரை அறவிடப் படுகின்றது. ‘வடக்கின் நாதம்’ என பெயரிடப்பட்ட பஸ் வண்டிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திற்கு முன்பாக புறப்படுகின்றது. ’வடக்கின் நாதம்’ பஸ்சேவை அமைச்சர் டக்ளஸ்சின் சகோதரனிற்கு உரித்தானது என பலராலும் பேசப் படுகின்றது. இவ் பஸ்சேவை ‘வடக்கின் நாதம்’ என்பதைத் தவிர்த்து ‘டக்ளஸ்சின் பஸ்’ என மக்களால் பெயர் சூட்டப் பட்டுள்ளது. ‘டக்ளஸ்சின் பஸ்’ஸில் போனால் ”செக்கிங்” குறைவு என்று பரவலான நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் நிலைமை அப்படியில்லை. நான் 2150 ரூபாய் கட்டி டக்ளஸ்சின் பஸ்சிலும் சென்றேன். மறுதடவை 800 ரூபாயோடு ஒரு சிறிய ‘தட்டி வான்’ ஒன்றிலும் சென்றேன். இராணுவத்தின் கெடுபிடி ஒன்றிலும் இருக்கவில்லை.

விளம்பரங்கள் தெரிவிப்பது போல் இந்த பஸ் வண்டிகள் சொகுசு வாகனங்கள் அல்ல. 30 வருடங்களுக்கு முன் யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபட்ட K G குணரத்தினத்தின் வாகனங்கள் நூறு மடங்கு உயர்த்தியானது. பஸ் உள்ளே A/C யும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. வெளிச்சமும் இல்லை. 2000 ரூபாய்க்கு யாழ்ப்பாணம் போகவும் வேண்டும் அதேநேரம் பஸ்சில் குமாரி பத்மினியின் ஆட்டமும் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அதை விடுவோம்.

குறிப்பிட்டபடி இரவு 11 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் அதிகாலை 1.30 மணியளவில் புத்தளம் வந்தடைகிறது. ஓமந்தையில் சகலரும் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டு உடல்கள் முழுமையாக சோதிக்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான அறைகளில் ஒவ்வொருவராக தனித்தனியாக உடற் பரிசோதனை செய்யப்படுகிறது. அவயவங்கள்கூட கைகளால் அமத்திப் பார்க்கப் படுகின்றது. இந்த சோதிப்பு எனக்கு மாத்திரம் விஷேடமாக தரப்பட்டது என்றுதான் முதலில் எண்ணி பெருமை கொண்டேன். பஸ்ஸில் ஏறிய போதுதான் அனைவருக்கும் அந்த அனுபவம் கிடைத்ததாக அறிந்தேன். கையில் கொண்டு சென்ற பைகள் மட்டும் சாதாரணமாக சோதனை செய்யப்பட்டது. ஒருவரினதும் உடமைகள் கொட்டியோ கிளறியோ சோதனை செய்யப் படவில்லை. கடமையில் இருந்த இராணுவத்தினர் மிகவும் பொறுப்புடனும் மரியாதையுடனும் தமது கடமையைப் புரிந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி (MOD) இல்லாமல் பிறப்பிடம் இலங்கையாக இல்லாதவர் எவரும் வடமாகாணத்திற்குள் அனுமதிக்கப் படுவதில்லை. எனக்குத் தெரிந்த டென்மார்க்கைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்பெண் ஓமந்தையில் வைத்து (25.01.10) அவரை திருப்பி கொழும்பிற்கு அனுப்பி விட்டார்கள்.

Jaffna_RoadA9 பாதை கடும் பள்ளம் திட்டியான ஒற்றைப் பாதையாக இருந்தது. பெருவாரியான மதகுகள் பாலங்கள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில இடங்களில் இராணுவத்தினர் சுத்திகரிப்பு வேலைகள் செய்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பெருமளவில் இராணுவமும் பொலிசும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஏ9 பாதையில் புத்தர் அனாதரவாக தனிமையில் குந்திக் கொண்டிருந்தார்.

20 வருசத்திற்கு முதல் குடிபெயர்ந்த நாங்களே ஈஸ்ற்ஹாமிலும் ரூற்றிங்கிலும் அரை அம்மணத்துடன் நின்று தேங்காயும் உடைக்கலாம் நடுரோட்டில் நின்று கூத்தும் ஆடலாம் ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வந்த சிங்களவர்கள் ஒரு கல்லை வைத்து அதை புத்தர் என்றால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையோ?

முன்னர்போல் முறிகண்டி கோவிலடியில் பலர் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.

காலை 7.15 மணிக்கு பஸ் கிளிநொச்சியை அடைகிறது. சந்தி பொந்தெல்லாம் ராஜபக்ச சிரித்த முகத்துடன் வரவேற்றார். ஜெனரல் பொன்சேகாவின் போஸ்டர் ஒன்றுகூட எனக்குத் தென்படவில்லை. கிளிநொச்சிச் சந்தியில் பெரிய புத்த விகாரை ஒன்றிருந்தது. அருகே பல கோயில்களும் இருந்தது. ஆனையிறவு வாசலில் ‘ஆய்போவாங் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது’ என்ற பெரிய வாசகம் வரவேற்றது. முகமாலை பளை பகுதிகளில் மக்களைவிட இராணுவமே அதிகமாக வீதிகளில் நடமாடினர். சாவகச்சேரிப் பகுதியை அண்மித்ததும் மகிந்த ராஜபச்சேயின் போஸ்டர்களுடன் டக்ளஸ் தேவானந்தாவின் போஸ்டர்களும் தென்பட்டன. பொன்சேகாவின் போஸ்டர்கள் ஒன்றுகூட இருக்கவில்லை.

Jaffna_Clock_Towerஇரவு 11மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் வண்டிகள் காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியை சென்றடைந்தது. வீதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள் 20-30- MPH வேகத்திலேயே பிரயாணம் செய்கின்றது. பல இடங்களில் வீதிகள் திருத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணம் ஒரே பாழடைந்த கட்டிடங்களுடன் காணப்படுகின்றது. 1980களுடன் ஒப்பிடும்போது சன நெருக்கடி கால்வாசிக்குக் குறைவாகவே உள்ளது.

யாழ் மாவட்டத்தில் கள்வரின் நடவடிக்கை அறவே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னைய காலங்களில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் உதவியாளர்களே பெருமளவில் களவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டிற்கு முன்னால் வைக்கப்படும் பூச்சாடிகள் உட்பட அனைத்தும் களவாடப்படுவது வழமையாக இருந்தது. ஆயுதக் குழுக்கள் அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் வெளியேற்றத்தின் பின் யாழ் மாவட்டத்தில் களவுகள் இல்லாமல் போய்விட்டதாக பலராலும் தெரிவிக்கப்பட்டது. – களவு, கப்பம், வரி – புலிகளின் இந்த சமூகவிரோத செயல்களினால் மக்கள் விடுதலைப் போராட்டத்தை அறவே வெறுத்து நிற்கின்றனர். முச்சக்கர வண்டி ஓட்டுனர் தொடக்கம் விவசாயி, வியாபாரி உட்பட சகலரினதும் பொதுவான அபிப்பிராயம் இதுவாகத்தான் இருந்தது.

குடாநாட்டில் விடுதலைப் புலிகளும் சக ஆயுத குழுக்களும் காலத்திற்குக் காலம் செய்த அடாவடித்தனங்களால் பெருவாரியான மக்கள் தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதனையே அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அரசியற் கட்சிகளையும் வெறுத்தே நிற்கின்றனர். 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இருந்ததைப் போல் “ஆகா..ஓகோ..” என்ற வரவேற்பு எந்த தமிழ் கட்சிகளுக்கும் இல்லை

ஊர்காவற்துறையில் ஒரு மீனவக் குடும்பத்துடன் 2 மணித்தியாலங்கள் உணர்ந்த அரசியலை பேப்பர் மற்றும் கீபோட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மற்றும் TIC லண்டனில் 10 வருடங்களாக நடாத்தும் அரசியற் கூட்டங்களில் அறிந்ததைவிட செழுமையாக இருந்தது. யதார்த்தமாக இருந்தது. ஊர்காவற்துறை ஏன் டக்ளஸின் EPDP மையப்படுத்தியது. தாங்கள் என்ன காரணத்திற்காக ஈபிடிபியிற்கு வாக்களித்தோம் என்பதை மிகவும் யதார்த்தமாக மீனவ குடும்பத்தினர் விளக்கினர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஈபிடிபி யை ஆதரித்தால் தாங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கலாம், றோட்டு போடுவார்கள் என்ற கருத்தே கேட்கக் கூடியதாக இருந்ததே தவிர ஈபிடிபிதான் மக்களின் சுபீட்சம் டக்ளஸ்தான் எமது தலைவர் என யாரும் தமது நெஞ்சை அடித்துச் சொல்லவில்லை.

Kayts_Boysமக்கள் மிகவும் நொந்துபோய் அடியுண்டு இருக்கிறார்கள். தமிழ் குழுக்களை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்றால் சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் அவசியம் என்ற கருத்துத் தொனிக்கப் பெரும்பான்மையானவர்கள் பேசுகிறார்கள். “சிங்கள இராணுவம் இல்லாட்டி புலி வந்திடும், பிறகு ஈபிடிபியுடன் அடிபடும். அப்ப ஈபிடிபியுடன் ஆமிக்காரன் இருந்தால்த் தான் எமக்கு பாதுகாப்பு” என்ற கருத்து மேலோங்கி இருக்கின்றதே தவிர ஈபிடிபி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒருவர்கூட அடித்துச் சொல்லவில்லை.

வட மாகாணத்தில் அடிமட்டத்திலிருந்து சமூகரீதியாக வளர்ந்த அரசியல் தலைமை இல்லாத காரணத்தினாலும் மற்றும் சகல அரசியற் கட்சிகளும் முன்னைநாள் ஆயுதக் குழுக்களாக இருந்த காரணத்தினாலும் மக்கள் TNA பக்கம் சார்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. TNA கட்சியை பிரேமச்சந்திரன் போன்ற முன்னைநாள் ஆயுதக் குழுக்களின் முக்கிய புள்ளிகள் தலைமை வகித்திருந்தால் அதுவும் அடிபட்டுப் போயிருக்கும்.

மீண்டும் இடித்துக்கட்டப்படும் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார்புலம்பெயர் பக்தர்களின் “நன்கொடையால்” வீதிக்கு வந்துள்ள மருதடிப் பிள்ளையார்.பல கிராமங்களில் ஆலயங்கள் மீள மீள புணரமைக்கப்பட்டு பெருப்பிக்கப படுகிறது. உதாரணமாக மருதடிப் பிள்ளையார் கோவில் அல்லப்பிட்டி முருகன் ஆலயம் இதுகள் ஏன்?? ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என எமது மூதாதையோர் கூறினார்களே தவிர ஆளில்லா ஊரில் ஆலயம் கட்டுங்கள் என்று கூறவில்லையே!!

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி1980 ஆண்டுடன் ஒப்பிடும்போது வடமாகாண மற்றும் தீவுப்பகுதிப் பாடசாலைகள் மிகவும் தரமாக இயங்குகின்றன. கணிசமான நேரத்தை மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயம் மானிப்பாய் இந்துக் கல்லூரி சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரிகளில் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அனைத்துப் பாடசாலைகளிலும் வன்னியில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிப்பு பெருமளவில் தாக்கி இருக்கின்றது.

மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயத்தில் 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் 397 ஆக இருந்த மாணாக்கரின் எண்ணிக்கை இவ்வருட தொடக்கத்தில் 500ஜ எட்டியுள்ளது. 25வீதம் அதிகரிப்பு. இதனால் பாடசாலைக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வன்னியில் இருந்து புலம் பெயர்ந்த பிள்ளைகள் 38. இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லை.

IDP நிலையங்களில் உள்ளவர்களைவிட IDP நிலையங்களில் இருந்து வெளியேறி யாழ் மற்றும் வவுனியாப் பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவதைப் போலுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் பலர் மாதகல் தோமையர் வீதி -மாதகலில் சிறு குடிசை போட்டு வாழ்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

தாய் தந்தை சகோதரங்களை இழந்து தவிக்கும் மதுசாஇங்கு மதுசா சிவராசா என்ற 9 வயதுச் சிறுமி இருக்கிறாள். தகப்பன் இருக்குமிடம் தெரியாது. சகோதரர்களை காணவில்லை. 25.09.2009 அன்று புதுமாத்தளன் பகுதியிலிருந்து கடலினூடாகப் புறப்பட்டு சாலைப் பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்டு கைதடி அகதிமுகாமில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளாள். மதுசா தற்போது தன்னுடைய தகப்பனின் தகப்பனோடு ஒரு குடிசையில் வாழ்கிறாள். மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் 5ம் வகுப்புப் படிக்கிறாள். அதேபோல 8 வயதுடைய இன்னொரு சிறுமி இருக்கிறாள். குடும்பத்தில் இவளைத் தவிர அனைவரும் இறந்துவிட்டனர். தற்போது இதே கல்லூரிக்குச் சொந்தமான மடத்தில் வைத்து பராமரிக்கப் படுகிறாள். வன்னியில் நடந்த மனித அவலம் நூறுக்கு அதிகமான மைல்களுக்கு அபபபாலுள்ள மாதகல் கிராமத்தை இவ்வளவு தூரம் தாக்கியுள்ளது.

12 பிள்ளைகளுக்கு உடனடியாக சைக்கிள் உதவி தேவைப்படுகிறது. ஒரு சைக்கிளின் விலை 11 000 ரூபாய் (60 பவுண்கள்). சைக்கிள் இருந்தால் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன் பெற்றோர் வெளிக் கிராமத்திற்குச் சென்று வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.

இவ்வாறு தேவைப்படும் உதவிகளோ எண்ணற்றது. இந்த மக்களை இன்று கைவிட்டுவிட்டு மக்கள் பற்றி காகித அரசியல் பேசுவது யதார்த்தமாகாது. புரட்சிகரக் கனவுகள் மட்டும் மக்களுக்கு சோறுபோடாது.

சீருடையுடன் மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள்.Computer_Room_MHCமானிப்பாய் இந்துக் கல்லூரி, ஊர்காவற்துறை புனித அந்தோனியார் போன்ற கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் அவர்களின் நிலை வேறு கட்டத்தில் இருக்கின்றது. வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவ சங்கங்களின் உதவிகளினால் இக்கல்லூரிகள் தாக்குப் பிடித்துள்ளன. இங்குள்ள பழைய மாணவ சங்கங்கள் கணணி பயிற்சி /ITயில் உதவிகள் செய்ய வேண்டும்.

உதாரணமாக 1015 மாணவர்கள் படிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஒரு ஆசிரியர் பயிற்றுகிறார். இவர் IT மட்டுமல்ல கல்லூரியின் நூலகத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார். ஆக மொத்தத்தில் இவர் ITயும் படிப்பித்த பாடில்லை நூலகமும் ஒழுங்காக நடத்தவில்லை.

மானிப்பாய் இந்துக் கல்லூரி2005ம் ஆண்டு 430 ஆக இருந்த மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவர்களின் தொகை இவ்வருடம் 1015ஜ எட்டியுள்ளது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 82 மாணவர்களுக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2004 சமாதானக் காலங்களில் வெளிநாடுகளில் தடல்புடலாக இயங்கிய பழைய மாணவர் சங்கங்கள் தற்போது படுத்து விட்டன. உதவிகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்காத காரணத்தினால் இந்த பழைய மாணவ சங்கங்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மந்தகதியில் இயங்குகின்றன.

இனி தமிழர்கள் ஏதாவது ஒரு அழுத்தத்தை பெரும்பான்மை இனத்திற்கு கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அதை பொருளாதார ரீதியாகத்தான் கொண்டுவர முடியும். தமிழ் இனம் பிரபாகரனை நம்பி தமது பாரம்பரிய மண்ணையும் அதன் அரைவாசி மக்களையும் நாட்டைவிட்டு துரத்தியதுடன் பலரை மாழ வைத்தது. பின்னர் சம்பந்தனின் கிழட்டு தீர்க்கதரிசனம் பொன்சேகா என்ற நொண்டிக் குதிரைக்குப் பின்னால் ஓட வைத்து சிங்கள பெரும்பான்மையினத்தின் கோபத்துக்கு தமிழினத்தை மேலும் உள்ளாக்கியது. இப்போது புலம் பெயர் வெங்காயங்களின் சிறீலங்காவை புறக்கணிப்போம் கோஷசத்தினால் எமது இனத்திற்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பத்தையும் பாழாக்க நினைக்கின்றது.

துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Mohan_Rajயுத்தம் எப்போதுமே கொடுமையானது. இந்த யுத்தத்தில் தம்முயிரை இழந்தவர்கள் அங்கங்களை இழந்தவர்கள் என துயரங்கள் தாங்க முடியாதது. அதேசமயம் இந்த யுத்தத்தில் தம் குழந்தைப் பிராயத்தைப் பறிகொடுத்து குழந்தைப் படையினராக ஆயுதம் தரித்த இளையவர்களின் எதிர்காலத்தை மறந்துவிட முடியாது. இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி நின்ற போது இக்குழந்தைப் போராளிகள் விடயத்தில் உடனடியாக கவனமெடுத்த சில அமைப்புகில் லிற்றில் எய்ட் உம் ஒன்று. இக்குழந்தைப் போராளிகளின் புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று அவர்களுடைய தேவைகளையறிந்து லிற்றில் எய்ட் சிறு உதவிகளை மேற்கொண்டது.

அவ்வாறான ஒரு முயற்சியில் அங்கிருந்த  இளவயதினர் கேட்டுக்கொண்டபடி அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த அம்பேபுச புனர்வாழ்வு மையத்திற்கு அவர்களுக்கு இசைக்கருவிகைள வழங்கி லிற்றில் எய்ட் அன்பளிப்புச் செய்திருந்தது. இதன் முதற் பகுதி இசைக் கருவிகள் யூலை 22ல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பதிவுகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/2/JiIAZ8wqQwE

நவம்பர் 15ல் அவ்விளையவர்கள் சுமுகமாகத் தம் கல்வியைத் தொடர அவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு இடம் மாற்றப்பட்டனர். அங்கு இரண்டாவதும் இறுதியானதுமான இசைக் கருவிகளின் அன்பளிப்பு டிசம்பர் 22ல் வழங்கப்பட்டது. அப்போது அவ்விளயவர்களின் பங்குபற்றுதலை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/0/0UT-XfXcRHc

லிற்றில் எய்ட் உடைய உதவிகள் சிறியதாக அமைந்தாலும் அது குறித்த காலத்தில் அதன் தேவையை அறிந்து மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களுக்கு உதவுவதை ஒரு சிலர் கொச்சைப்படுத்திய போதும் இந்த இளயவர்களுக்கு உதவுவதை கொச்சைப்படுத்திய போதும் லிற்றில் எய்ட் தனது உதவி முயற்சியில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

தற்போது இலங்கையின் பிரபல பின்னணிப் பாடகர் மோகன் ராஜ் இந்த இளயவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களில் இருந்து சிலரை தன்னுடன் பொது மேடைக்கு கொண்டு செல்வதற்கு லிற்றில் எய்ட் முயற்சி எடுத்து உள்ளது. அவர்களில் ஒரு சிலர் இசைக் கச்சேரி ஒன்றிற்காக ஐரோப்பா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

லிற்றில் எய்ட் இன் ஏனைய உதவித்திட்டங்கள் விபரங்கள் கணக்குகளை அதன் இணையத்தில் காணலாம். http://littleaid.org.uk/

இசைக்கருவி அன்பளிப்புத் தொடர்பாக லிற்றில் எய்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

LITTLE AID : Press Release 1st January 10

Little Aid is pleased to confirm that it has successfully completed the music project that it started with the ex combatants (child soldiers), who were the victims of war in Sri Lanka. Little Aid initially met these children when they were kept in Ambepusse Rehabilitation Centre, in between Colombo and Kandy in Sri Lanka. During this visit some of the children were specifically asking to provide them with facilities to learn modern music and also religious education. Little Aid promised them to provide these facilities at the earliest convenient time.

Little Aid is one of the few charities who have access to most of the locations where the surrendered soldiers and the civilians were kept. Initial sets of musical instruments were handed over to the children on 22nd July 2009 in Ambepusse. On 15th November 09 this centre was moved to Ratmalana Hindu College in order for the children to commence their formal education. Due to their special needs, these children are kept in a separate location within Ratmalana Hindu College and looked after. Little Aid have been given full access to these children and we can confirm that they are happy and well looked after.

With the help of Commissioner of Rehabilitation, Major General Daya Rathnayaka, we supplied the second and final set of musical instruments on 22nd December 2009. Commissioner General Daya Rathnayaka was the guest of honour on that Little Aid event. Little Aid was represented by Mr. Mark Fernando and Dr. Nimal Kariyawasam. From the attached YouTube clip, you can see the progress of the children who are capable of playing the modern instruments to the reasonable standards within a very short period of time.

We are also in touch with the very well known Sri Lankan cinema musician, Mr. Mohan Raj. Mr. Mohan Raj has agreed to guide these children and select some of them and provide them with an opportunity to perform to a larger public. As you may know, Mr. Mohan Raj is the leading classical singer in Sri Lankan who is capable in singing in both Singhalese and Tamil languages.

We herewith attached the video clip of the event held on 22nd December 2009 at Ratmalana Hindu College. Total cost of this project is £3196. You can inspect the full up-to-date income and expenditure accounts on www.littleaid.org.uk. We sincerely thank all the people who have contributed to this project. We would be very grateful if you could give exposure in your publication for the Little Aid work in Sri Lanka.

We wish you all happy & Prosperous New Year

Thank you.

Tarrin Constantine
Chairman

http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/0/0UT-XfXcRHc