நட்சத்திரன் செவ்விந்தியன்

நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

UoJ_Signboardஆசியாவின் முதலாவது உயர்தர தங்கிப்படிக்கும் பெண்கள் பாடசாலை (1824 இல் உடுவிலில்) ஆரம்பிக்கப்பட்டது யாழ்ப்பாணத்தில்தான். 1848 ம் ஆண்டிலேயே பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரிக்கு சமனான மேலைத்தேய மருத்துவக் கல்லூரி சாமுவேல் கிறீன் என்பவரால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியும் இதுதான்.

1864 ம் ஆண்டிலிருந்து இம்மருத்துவக் கல்லூரியில் தமிழ்மொழியை மருத்துவக் கற்கைக்கான ஊடக மொழியாக்கிய மகத்தான புரட்சியையும் அமெரிக்கரான சாமுவேல் கிறீன் சாதித்தார். 1823 ம் ஆண்டு வட்டுக்கோட்டை குருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக்குருத்துவக் கல்லூரியின் தரம் பல ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு ஈடாக இருந்ததை தான் கண்டதாக அக்கல்லூரிக்கு 1848 ம் ஆண்டு விஜயம் செய்த சிறந்த பயண எழுத்தாளரும் பிரித்தானிய உயர் சிவில் அதிகாரியுமான ஜேம்ஸ் எமர்சன் ரெநன்ற் எழுதியிருக்கிறார்.

இக்குருத்துவக் கல்லூரியின் சிறப்பான மாணவர்தான் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியும் தமிழ் பதிப்புத்துறையின் தந்தையும் சிறந்த தமிழறிஞருமான சி.வை.தாமோதரம்பிள்ளை. (சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 1857 ம் ஆண்டில் கலைமாணிக்கான (B.A) இறுதியாண்டுப்பரீட்சை எழுதிய சீ.வை. தாமோதரம்பிள்ளை டீ.வை.விசுவநாதபிள்ளை ஆகிய இருவரே. இருவரும் வட்டுக்கோட்டை குருத்துவக்கல்லூரி மாணவர்கள். இருவருமே சித்தியடைந்தனர். தாமோதரம்பிள்ளை அதிக புள்ளிகள் எடுத்தமையால் முதலாவதாக குறிப்பிடப்பட்டு அதனால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்) யாழ்ப்பாணத்தின் மேற்கூறிய எல்லா சாதனைகளுக்கும் உரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களான கிறிஸ்தவ அமெரிக்க தொண்டூழியச் சபையினருக்கே (American Missionaries) யாழ்ப்பாணம் கடமைப்பட்டது.

இவ்வளவு சிறப்பான கல்வி வரலாற்றையுடைய யாழ்ப்பாணத்தில் உருவான பல்கலைக்கழகம் சீரழிந்து போனமைக்கான காரணங்கள் என்ன? பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்பபாணத்தில் இரண்டாம்தர மூன்றாம் தர (Secondary and tertiary education) கல்விக்கான சிறப்பான நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் உருவானபோதும் முழுமையான பல்கலைக்கழகம் இலங்கையில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானிய சாம்ராச்சியத்தின் முத்தாகவும் முடியாகவும் இந்தியா இருந்ததாலும் அன்று உலகின் இரண்டாவது பெரிய நகரமாக கல்கத்தா இருந்ததாலும் கல்கத்தா மும்பாய் சென்னை ஆகிய நகரங்களிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 1974 ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவே யாழ் வளாகம் உருவாக்கப்பட்ட போதும் 1978 ம் ஆண்டிலிருந்து தனிப்பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. 1978 ம் ஆண்டிலிருந்து தனிப்பல்கலைக்கழகமாக இயங்கிவரும் ஏனைய இலங்கைப் பல்கலைக்கழகங்ளோடு ஒப்பிடுகிறபோது மிகப்பின்தங்கிய சீரழிந்த பல்கலைக்கழகமாக இருப்பது யாழ் பல்கலைக்கழகம்தான்.

பின்தங்கலுக்கும் சீரழிவுக்குமான காரணங்களை பகுத்தாராய்ந்து அறிவதற்கு இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றை பின்வரும் இரண்டு காலங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது.
புலிப்பாசிசத்திற்கு முற்பட்ட காலம் (1974 இலிருந்து 1986 வரை)
புலிப்பாசிச காலம்(1986 இலிருந்து இன்றுவரை)

புலிப்பாசிசத்திற்கு முற்பட்ட காலம் (1974 இலிருந்து 1986 வரை)

1974 ம் ஆண்டிலிருந்து 1977 ம் ஆண்டுவரை யாழ் வளாகத்தின் தலைவராக இருந்தவர் க.கைலாசபதி. தனது முதலாவது கட்டுரையில் த.ஜெயபாலன் பின்வருமாறு கூறுகிறார்.

Kailasapathy_K_Prof“யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி. இவரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளையும் உருவாக்கி ஆசியாவில் சிறந்ததொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஆக்க வேண்டும் என்ற விரிந்த பார்வையைக் கொண்டு இருந்ததுடன் அதனை நோக்கியும் செயற்பட்டார். பேராசிரியர் கைலாசபதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தை எனக் கூறுவது மிகப்பொருத்தமானது. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கம்பஸ்கள் கொழும்பு கண்டி நகரங்களை மையப்படுத்தியே இயங்கி வந்தன. இந்தச் சூழலிலேயே பேராசிரியர் கைலாசபதி தமிழ் பிரதேசம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். கொழும்பு, கண்டி ஆகிய பாரம்பரிய பல்கலைக்கழக நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இக்காலகட்டத்தில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்பதனை பேராசிரியர் கைலாசபதி உறுதிப்படுத்தி இருந்தார்.”

கைலாசபதியைப் பற்றி ஜெயபாலன் எழுதியவைகள் எல்லாம் அதீதமான மிகை மதிப்பீடுகள். மிகத் தவறானவைகள். சனத்தொகை பெருகுகிறபோது பல்கலைக்கழக வளாகங்களை விரிவாக்குகிற வழமையான கல்வி அமைச்சின் நடவடிக்கை காரணமாகவே யாழ் வளாகம் நிறுவப்பட்டது. இலங்கையின் மூன்றாவது பெரிய நகரமாக யாழ்ப்பாணம் இருந்ததால் அங்கு ஒரு வளாகம் நிறுவவேண்டிய தேவை நீண்டகாலமாகவே இருந்துவந்தது. யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதியின் தரிசனத்தில் உருவானது என்பதும் அதனை அவரே நிறுவினார் என்பதும் வேடிக்கைக்குரிய கூற்றுக்கள். கைலாசபதி வளாகத்தலைவர் மட்டுமே என்பதால் அவரது அதிகாரம் மிக மட்டுப்படுத்தப்பட்டது. யாழ் வளாகத்தில் உருவாக்க வேண்டிய துறைகளை தீர்மானித்தது அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக துணைவேந்தரும் யுனிவேசிட்டி செனட் சபையும் கல்வி அமைச்சுமே. எல்லா வளாகங்களிலும் மூவின மாணவர்களும் கற்கும்படி இருப்பது அன்றைய கல்விகொள்கை வகுப்பாளாகளின் நடைமுறையே தவிர அது கைலாசபதியின் நடவடிக்கை அல்ல.

நியாயப்படி பார்த்தால் கைலாசபதிக்கு அன்றைய யாழ் வளாக தலைவர் பதவி கிடைத்திருக்கவே முடியாது. சிரேஷ்ட அடிப்படையிலும் அறிவு மற்றும் திறன் அடிப்படையிலும் கைலாசபதி கடைசியிலேயே இருந்தார். தனிநாயகம் அடிகளார் (1913-1980). சீ.ஜே.எலியேசர் (1918-2001). சின்னப்பா அரசரட்ணம்.(1930- 1998) ஜெயரட்ணம் வில்சன் (1928-2000) போன்றவர்களின் திறமைகளோடும் சாதனைகளோடும் ஒப்பிடுகிறபோது கைலாசபதியினுடையவை மிகச் சாமானியமானவை. மேற்கூறிய பேராசிரியர்கள் சர்வதேச ரீதியாக தங்களை நிலை நிறுத்தியவர்கள். மிகச்சிறப்பான அமெரிக்க கனேடிய ஆஸ்திரேலிய மலாய பல்கலைக்கழகங்கள் மேற்கூறியவர்களின் திறமைகளை இனங்கண்டு மேற்கூறியவர்களை தங்கள் பல்கலைக்கழக பேராசியர்களாக்கின. துறைத்தலைவர்களாக்கின. துறைசார்ந்த நூல்களை எழுதுமாறு அவர்களைப் பணித்தன. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று பாரதி பாடியது இதனைத்தான். இன்றும் இப்பேராசிரியர்கள் எழுதிய நூல்கள் மிகச்சிறப்பானவையாக இருக்கின்றன. கைலாசபதி எழுதிய நூல்கள் அவர் வாழ்நாட்காலத்திலேயே நிராகரிக்கப்பட்டன. Literary cognition இல்லாத இலக்கிய விமர்சகராக இருந்ததும் காய்தல் உவத்தல் இல்லாத புலமையாளராக இருப்பதற்குப்பதில் மார்க்ஸிய சித்தாந்த ஓதுகைக்கு(Marxist indoctrination) ஆட்கொள்ளப்பட்டவராக இருந்ததும் கைலாசபதி ஒரு academic ஆக தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்.

சு. வித்தியானந்தன் கைலாசபதியின் பல்கலைக்கழக ஆசிரியரும் கைலாசபதியைவிட சீனியரும். இருந்தும் கைலாசபதி குருவை விஞ்சிய சீடப்பிள்ளையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் பதவிக்கு வித்தியானந்துடனேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கைலாசபதிக்கே தனக்கு நியாயப்படி யாழ் வளாகத்துக்கான தலைவர் பதவி கிடைக்காது என்பது நன்கு தெரிந்திருந்தது. ஆனால் கைலாசபதி குதிரை வியாபாரத்திலும் (Horse trading) அரசியல் காய் நகர்த்தல்களிலும் மிக வல்லவராக இருந்தார். இடதுசாரி கூட்டு சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்த போது இடதுசாரித் தொடர்புகள் மற்றும் அமைச்சர் குமாரசூரியர் என்பவர்களைப் பயன்படுத்தி புகுந்து விளையாடலானார். 1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கைலாசபதியும் சிவத்தம்பியும் புறக்கணித்தனர். ஜனநாய அடிப்படையில் மாநாட்டுக் குழுவினர் அதனை யாழ்ப்பாணத்தில் நடாத்துவது என்று தீர்மானித்தனர். அதனைப் புறக்கணித்து தான் கலந்து கொள்ளாததையெல்லாம் ஒரு துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தி அதேயாண்டு ஆகஸ்டில் யாழ் வளாகம் திறக்கப்பட்டபோது தலைவர் பதவியை அடித்துப்பறித்தார்.

Thaninayagam_Adikalதொலைதூரப் பார்வையும் புலமையும் மிக்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைவர்களும் அமுக்கக் குழுக்களும் தமிழர் மத்தியில் அன்றிருந்திருந்தால் நான் மேலே குறிப்பிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கடைமையாற்றிய, கடமையாற்றிக் கொண்டிருந்த நான்கு பேராசிரியர்மாரை அணுகி அவர்களிலொருவரை வளாகத்தலைவராக்க முயற்சித்திருக்கலாம். 1974 ம் ஆண்டு தனிநாயகம் அடிகளாருக்கு 61 வயது. தமிழாராய்ச்சி மாநாடுகளை சர்வதேச மயப்படுத்தியதிலும், தமிழையும் தமிழியலையும் உலகப் பல்கலைக்கழகங்களில் பாடநெறியாக்கியதிலும், தமிழை செம்மொழியாக்கியதிலும் அடிகளாரின் பங்கு அளப்பரியது. அவர் 1974 யாழ் வளாக தலைவருக்கு பொருத்தமானவர்களில் ஒருவரல்லவா.

கைலாசபதி வெளிப்பூச்சுக்குத்தான் மார்க்ஸிஸ்ட். உள்ளுக்குள் தடித்த சைவ வெள்ளாளர் என்பதையும் யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து வந்தவர் என்பதையும் பயன்படுத்தி அரசியல் செய்தவர். 2006 ம் ஆண்டுக்கு முதல் சைவ வேளாளர் அல்லாத எவரையும் பல்கலைக்கழக கவுன்சில் துணைவேந்தராக சிபாரிசு செய்ததில்லை.

முதற்கோணல் முற்றும்கோணல் என்ற அடிப்படையில் முற்றிலும் ஒரு அரசியல் நியமனமான கைலாசபதியின் வளாகத் தலைவர் பதவியிலிருந்தே யாழ் பல்கலைக்கழக சீர்கேடு ஆரம்பிக்கிறது. கைலாசபதி ஒரு நன்கு அறியப்பட்ட ஸ்திரி லோலர்(womanizer) அவரது மாணவிகளாக இருந்து பின்னாட்களில் விரிவுரையாளர் பேராசிரியர் ஆன பெண்களோடு அவருக்கு இருந்த உறவுகளையும் பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்தே இருக்கிறது. இங்கு பாலுறவு காரணமாக விரிவுரையாளர் தெரிவில் பாரபட்சங்கள் காட்டப்படடிருக்க அதிக வாய்ப்புண்டு. மேலும் மேலிடத்தில் உள்ளவரே இவ்வாறு நடந்துகொள்ளும்போது கீழிடத்தில் உள்ளவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்ய அவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையேற்படும்.

மாணவியொருவரின் சம்மதத்தோடு பல்கலைக்கழக அதிகாரி அல்லது விரிவுரையாளர் பாலுறவில் ஈடுபட்டாலும் இதனைப் பணயமாக வைத்து ஊழல்கள் இருதரப்பிலிருந்தும் புரியப்பட்டு கல்வித் தராதரங்கள் சமரசம் செய்யப்பட வாய்ப்புள்ளதால்தான் இவை பாரிய குற்றச்செயல்களாகக் கருதப்படுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காணப்படுகிற ஒரு முக்கியமான கொடூரமான அநீதி என்னவென்றால் ஒரு மாணவன் அல்லது மாணவி தான் எழுதிய பரீட்சைக்கு தனக்கு வழங்கப்பட்ட புள்ளிகளில் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது என்றால் தனது விடைத்தாளை பெற்றுப் பார்ப்பதற்கோ அல்லது அதனை மீளத்திருத்துமாறு கேட்பதற்கோ உரிமையற்றிருப்பதுதான். 25 புள்ளி எடுத்து ஒருவருக்கு 75 புள்ளி வழங்குவதற்கும் இதன் மறுதலையைச் செய்வதற்கான அதிகாரமும் விரிவுரையாளர்களிடம் உண்டு. Transparency, freedom of information என்பன ஏறத்தாள முற்றாகவே பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. பாலுறவையும் இதனோடு இணைக்கிறபோது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எவ்வளவு மோசமான நரகங்களாக இருக்கமுடியும் என்பது புரிகிறதல்லவா.

UoJ_Sivathamby_K_Profகைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழ்ச்சூழலில் மிகவும் உயர்த்தி மதிப்பிடப்பட்ட (Over estimated) புலமையாளர்கள் (Academics). இலங்கை போன்ற மூன்றாம் உலநாடுகளில் காலனியாதிக்கத்திற்கு பிற்பட்ட சுதந்திர எழுச்சிக்காலத்தில் மார்க்சிசம் ஒரு சர்வ நிவாரணியாகக் கருதப்பட்டதோடு மிகப்பிரபல்யமான தத்துவமாகவும் மோஸ்தராகவும் இருந்தது. மார்க்ஸிய பேராசிரியராக தன்னை அடையாளப்படுத்துகவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மேதைகளாக கருதப்பட அதில் வெற்றிகரமாக கப்பலோட்டியவர்கள்தான் பதியும் சிவமும். அவர்களுடைய எழுத்துக்களுக்கூடாகவும் அவர்கள் உருவாக்கிய மாணவர்கள் ஊடாகவும் அவர்களை மதிப்பிடுகிறபோது மிஞ்சுவது ஏமாற்றம்தான்.

Vithiyanandan_S_Prof1977ம் ஆண்டு யாழ் வளாக தலைவராக சு. வித்தியானந்தன் ஆக்கப்பட்டதும் ஒரு அரசியல் நியமனந்தான். பல்கலைக்கழகம் இரண்டு பிரிவுகள் இருக்கிற ஒரு அரசியல் கட்சிபோல ஆக்கப்பட்டது. இரு தரப்பினருமே தங்கள் அணிக்கு விரிவுரையாள் தெரிவுகள் மூலம் ஆட்சேர்த்தார்களே தவிர பொது நன்மைக்காக பல்கலைக்கழகம் நடத்தவில்லை. இவர்களுடைய அரசியலுக்கு வெளியிலிருந்துதான் பல்கலைக்கழகத்தில் நடந்த சாதனைகள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தினுடைய கல்விப்புரட்சி கிறிஸ்தவ அமெரிக்க தொண்டூழியச் சபையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையாலும் கிறிஸ்தவ குருத்துவக் குல்லூரிகள் ஊடாகவே அக்காலத்தில் மூன்றாந்தரக் கல்வி பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தமையாலும் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிலும் குறிப்பாக உரோமன் கத்தோலிக்கர் அல்லாத அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் கல்வியில் சாதித்தது அதிகம். இம்மரபில் வந்த கிறிஸ்தவ கல்வியாளர்களான சீலன் கதிர்காமர், நிர்மலா ராஜசிங்கம், ராஜினி திராணகம, சுரேஷ் கனகராஜா, தயா சோமசுந்தரம் போன்றவர்கள்தான் கைலாசபதி மற்றும் வித்தியானந்தன் மரபுக்கு அப்பால் நின்று சாதித்தவர்கள் அல்லது சாதிக்க முயன்றவர்கள். ஏ.ஜே.கனகரட்னா கைலாசபதியைவிடத் திறமையானவர். ஆனால் அவரிடம் கைலாசபதியிடமிருந்த சுறுசுறுப்பும் சாதிக்கவேண்டும் என்றவெறியும் இருந்ததில்லை. இருந்தும் ஏ.ஜே.கனகரட்னா நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கிய மாணவர்களாக நிர்மலா ராஜசிங்கம், சுரேஷ் கனகராஜா ராஜன் ஹ_ல் முதலியவர்களைச் சொல்லலாம். நோம் சொம்ஸிக்கு ஒரு Tanya Reinhart மாதிரி கனகரட்னாவுக்கு மூன்று versatile academics மாணவர்களாக கிடைத்தது பெருங்காரியம்தான். இந்திரபாலா ஒரு விதிவிலக்கு. ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவரல்ல.

புலிப்பாசிச காலம் (1986 இலிருந்து இன்றுவரை)

1986 ஏப்ரல் மேயில் ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்தே புலிகளின் பாசிசத்தன்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

பாசிசம் எப்படி செயற்படுகிறது என்பதைக் கண்டடைவதற்டகான ஒரு அருமையான case study ஆக இக்காலத்து யாழ் பல்கலைக் கழகத்தைக் கொள்ளலாம். பாசிச காலத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை. நல்லவர்கள் நீதி நியாயம் கேட்பதற்காக பாசிஸ்டுகளால் கொல்லப்படுவார்கள். இருக்கிற நல்லவர்கள் எங்காவது தப்பி ஓடுவார்கள்.

1986 நவம்பரில் விஜிதரன் புலிகளால் கடத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டதோடேயே புலிப்பாசிசம் பல்கலைக்கழக ஆட்சிக்கு வரவில்லை. 1986 நவம்பரிலிருந்து 1989 டிசம்பர் வரை பல்கலைக்கழகம் தன் சுயாதீனத்தை பேணுவதற்கு கடுமையாகப் போராடியது. பலமான சுயாதீனமான பல்கலைக்கழகத்துக்கு பலமாக மாணவர் சங்கம் அவசியம். பாசிசம் தொழிலாளர் சங்கங்கள் மாணவர் சங்கங்கள் என்பவற்றிலேயே முதலில் கைவைத்து அவற்றை அடித்து முறித்து ஆட்சி எடுக்கும். 1988 ஜூலையில் யாழ் பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனைக் கொலை செய்த புலிகள் 1989 செப்டம்பரில் விரிவுரையாளர் ராஜினி திராணகமவைக் கொலை செய்தார்கள். இவைகளுக்கப்பாலும் 1989 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அன்ரன் வின்ஸ்லஸ் என்கிற மாணவரும், மாணவர் சங்கமும் பல்கலைக்கழக சுயாதீனத்தை பேணுவதற்காகக் கடுமையாகப் போராடினார்கள்.

1990 ம் ஆண்டு ஜூனில் விடுதலைப் புலிகளால் போர் தொடங்கப்பட்டதும் புலிகள் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை நெருங்கி “ இலங்கை அரசாங்கம் ஒரு இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கெதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் போரை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படும் படியும் மக்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் பின் ஒருங்கிணையுமாறும் வேண்டி” ஒரு தீர்மானத்தை மாணவர் சங்கத்தால் நிறைவேற்றுமாறு கேட்டார்கள். இத்தீர்மானம் நிறைவேற்றப் படாவிட்டால் மாணவர் சங்கம் கலைக்கப்படும் என்று மிரட்டவும் செய்தார்கள். சங்கத்தலைவர் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விட்டார். பிரேரணை 145 க்கும் 115 இடைப்பட்ட வாக்குவித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. புலிகள் இதனை மீண்டும் வாக்குக்கு விடுமாறு கேட்டனர். இரண்டாவது தடவையும் புலிகளின் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. இரண்டு நாட்களின் பின்னர் புலிகள் அன்ரன் வின்ஸ்லஸ்ஸை அணுகி தாங்கள் வேண்டியபடி தயாரித்த தீர்மானத்தில் பலாத்காரமாக அவரது கையெழுத்தை வைப்பித்தனர். இதன்பின்னர் வின்ஸ்லஸ் மற்றும் அவரது மாணவர் சங்க கூட்டாளிகளும் மாணவர் சங்கத்திலிருந்து ராஜினாமாச் செய்தனர். (அன்ரன் வின்ஸ்லஸ் இப்போது ரொறன்ரோ நகரில் வசிக்கிறார்) இதற்குப்பிறகு மாணவர் சங்கம் புலிகளுக்குச் சேவகம் செய்யும் பொம்மை அமைப்பாக்கப்பட்டது.

ராஜன் ஹூல் சிறிதரன் முதலிய விரிவுரையாளர்கள் புலிகளால் கொல்லப்பட இருந்ததால் கொழும்புக்குத் தப்பிச்சென்றார்கள். செல்வி மனோகரன் போன்ற பல யாழ் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கையாளர்களும் மனச்சாட்சியின் கைதிகளும் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.

பாசிச காலத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை. நல்லவர்கள் நீதி நியாயம் கேட்பதற்காக பாசிஸ்டுகளால் கொல்லப்படுவார்கள். இருக்கிற நல்லவர்கள் எங்காவது தப்பி ஓடுவார்கள். அயோக்கியர்களும் சாமானிய தரத்திலுள்ளவர்களுமே (Mediocrity) பாசிசம் பரவும் நிலத்தில் ஓங்கித் தழைப்பார்கள். அயோக்கியர்களின் பாலியல் முதலிய குற்றச்செயல்களை பணயமாக வைத்து அவர்களிடமிருந்து நிபந்தனைகளற்ற சேவகத்தை பாசிசம் பெற்றுக்கொள்ளும். திறமையானவர்களும் நல்லவர்களும் ஒதுங்கியோ ஓடியோ கொல்லப்பட்டோ விடுவதால் திறமையும் தரமுமற்ற சாமானியர்கள் பாசிசத்தை அண்டி நக்கிப்பிழைத்து அடிமைச்சேவகம் செய்து தழைப்பார்கள்.

திறமையான ஒருவரை புலிக்குப் “போட்டுக்கொடுப்பதன்” மூலம் அவரின் இடத்தை எடுக்கலாம். க.சிதம்பரநாதன் செல்வியை புலிக்குக் காட்டிக் கொடுத்துத்தான் செல்விக்கு கிடைக்கவிருந்த விரிவுரையாளர் பதவியை தான் எடுத்தார். ஸ்டாலினின் பாசிச ஆட்சிக்குச் சேவகம் செய்த மைக்கல் கலினின் மற்றும் லவ்றென்ரி பெரியா ஆகிய இருவரும் பாலியல் கொடூரங்களைச்செய்த இரண்டு பெண் பித்தர்கள். ஸ்டாலின் இக்குற்றங்களைச் செய்ய அனுமதித்து அவற்றை அவர்களுக்கெதிரான பணயமாக வைத்திருந்தார். நடராஜா முரளிதரன (சுவிஸ் – கனடா) குமரன் பத்மநாதன் மற்றும் கேணல் கருணா ஆகியோர் இயக்கத்திலிருந்து விலக்கப்பட அல்லது விலக்கப்பட்ட பின்னர்தான் அவர்களது பாலியல் லீலைகளை புலிகள் பகிரங்கப்படுத்தினார்கள் அல்லவா. யாழ் பல்கலைக்கழகத்தில் என் சண்முகலிங்கம் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதையும் இதே பின்னணியில்தான் அணுகமுடியும். 1995 ம் ஆண்டு குடாநாடு இராணுவத்தால் கைப்பற்றப்படும்வரை புலிகளுக்கு தீவிரமான சேவகம் செய்தவர் சண்முகலிங்கம். விஜிதரனை சித்திரவதை செய்து கொன்ற கிட்டு கடலில் இறந்தபோது “ கடலம்மா எங்களுக்கு நீதி சொல்ல எவருமே இல்லையா” என்ற அஞ்சலிக் கவிதையை கிட்டுவுக்கு எழுதியவர்தான் சண்முகலிங்கம் (பார்க்க : தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு)

UoJ_Posterஇவ்வாண்டு ஜூன் மாதம் மேலுள்ள துண்டுப்பிரசுரத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வெளியிட்டனர். புலிகள் அழிக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப்பிறகே மாணவர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் இயங்கக்கூடிய சூழல்வருகிறபோது இது வெளிவருவது குறிப்படத்தக்கது. இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் செல்லையா இளங்குமரன், கிருஸ்ணபிள்ளை விசாகரூபன், என்.வீ.எம். நவரத்தினம், கே. அருந்தாகரன் ஆகியோர்.

UoJ_Elankumaran_C_Drசெல்லையா இளங்குமரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்தவர் என்பதால் புள்ளிவிபரவியல் பயிலும் கலைத்துறை மாணவிகள் பலரையே இவர் இலக்கு வைத்து பாலியல் வதைகளும் பாலியல் பலாத்காரங்களும் தொடர்ச்சியாகவும் அதிகளவிலும் புரிபவர். இவருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய பட்டப்பெயர் கரும்புடையன். இவரது குடுப்ப உறுப்பினர்கள் அல்லது சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள் என்பதையும் தனது பலமாக குற்றங்கள் புரியும்போது உபயோகிப்பவர். இவரது குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்ததால் 1995 ம் ஆண்டளவில் மாணவர்கள் துணைவேந்தரிடமும் விடுதலைப் புலிகளிடமும் முறையிட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கும் வேறு வழியின்றி இளங்குமரனைத் “தூக்க”வேண்டியதாயிற்று. எனினும் அவ்வாண்டே யாழ் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றியதால் புலிகள் இவரை விடவேண்டியதானது. பின்னர் பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தராக வந்தபின்னர் புலிகளோடு கள்ள ஒப்பந்தமும் செய்துகொண்டுவந்த இளங்குமரன் யாழ் பல்கலைக்கழகத்துள் உள்வாங்கப்பட்டார். முதலில் கணிதத்துறையிலிருந்த இளங்குமரனை பாலசுந்தரம்பிள்ளை இம்முறை பொருளியல்துறைக்குள் விரிவுரையாளராக்கினார். இக்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நிறுவனமயப்பட்டு விட இளங்குமரனும் தொடர்ந்தார்.

UoJ_Arundaharan_Kதமிழ் விரிவுரையாளர் க.அருந்தாகரன் முள்ளியவளையைச் சேர்ந்தவர். இவரது பல சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள். இவர் இரண்டாந்தரக் கல்வி கற்றுக் கொண்டிருக்குப்போதே பாலியல் குற்றம் ஒன்றை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டவர். அருந்தாகரனின் சக மாணவியான முள்ளியவளை செங்குந்தா வீதியைச் சேர்ந்த புலேந்திரன் என்பவரின் மகள் கர்ப்பிணியானாள். அவளது கற்பத்திற்கு காரணம் யார் என்று கேட்கப்பட்டபோது அப்பெண் அருந்தாகரனையே அடையாளங் காட்டினாள். அருந்தாகரன் இதனை முற்றாக மறுத்துவிடவே அப்பெண் கர்ப்பிணியாகவே தற்கொலை செய்துகொண்டாள். பல முள்ளியவளை வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

கிருஸ்ணபிள்ளை விசாகரூபன் தமிழ் விரிவுரையாளர். நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவரும் விடுதலைப்புலிகள் சார்பானவராகத் தம்மைக் காட்டிக்கொண்டவர்.

சங்கீதபூசன் என்.வீ.எம்.நவரத்தினம் இசைத்துறையைச் சேர்ந்தவர். குறிப்பட்டவர்களில் வயது அதிகமானவரும் இவரே.

UoJ_Ganeshalingam_K_Tயாழ் பல்கலைக்கழகம் அயோக்கியர்கள் கள்ளர்கள் பொறுக்கிகள் என்போரின் கடைசிப்புகலிடமானது புலிப்பாசிச காலத்தில்தான். பரஸ்பரம் பாலியல் மற்றும் வேறு குற்றங்கள் பணயமாக வைக்கப்பட இரண்டு தரப்பும் சமரசம் செய்துகொள்கிறது. ஒருவருடைய குற்றத்தை மற்றவர் மறைக்க இதற்குப் பிரதியுபகாரமாக வேறு உதவி எதிர்பார்க்கப்படுகிறது. என். சண்முகலிங்கத்தின் பாலியல் குற்றத்தை பணயமாக வைத்து இதே குற்றச் செயலைச் செய்த கே.ரீ. கணேசலிங்கம் மறுபடியும் சமூகவியல் துறைக்கூடாக மறுபடி உள்வாங்கப்படுகிறார். இவ்வாறே இளங்குமரனும் உள்ளே வந்தார்.

செங்கை ஆழியான் எனப்படுகிற க. குணராசா இலங்கை நிர்வாக சேவையிலிருந்தபோது செய்த மரக்கடத்தல் ஊழலுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதோடு இலங்கை நிர்வாக சேவையிலிருந்து விலக்கப்பட்டவர். இத்தகைய குற்ற வரலாற்றையுடைய செங்கை ஆழியானுக்கு பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி வழங்கப்பட்டது. இவர்களில் சிலரின் குற்றங்களை பணயமாகவைத்து புலிகள் பல்கலைக்கழகத்திற்குள் இருந்துகொண்டு இவர்களை இரகசியமாக தங்களுக்கான புலனாய்வு இராணுவம் மற்றும் அரசியல் வேலைகளை செய்துதருமாறு பணிக்கிறார்கள். இந்த கோலங்கள் தொடர்ந்துதான் யாழ்பல்கலைக்கழகம் சீரழிந்திருக்கிறது

UoJ_Visakaruban_K_Drஇதிலும் மேலுங் கொடூரத்திற்குரியது என்னவென்றால் பாலியல் குற்றங்களைச்செய்கிற குற்றவாளிகளான விசாகரூபனும், கே.ரீ கணேசலிங்கமும் மாணவர்களின் உளவள ஆலோசகராக (Counsellor) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செல்லையா இளங்குமரன் உள்வாங்கப்பட்டது மட்டுமின்றி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

என்.சண்முகலிங்கத்தின் பாலியல் தொல்லைகள் பல. யாழ்பல்கலைக்கழக மாணவியொருவர் சண்முகலிங்கத்தின பாலியல் தொல்லை தாங்காது யாழ் பல்கலைக்கழகத்தை விட்டு விலகி தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று தன் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். இப்போதைய துணைவேந்தரின் உண்மையான பெயர் சண்முகலிங்கம். ‘ம்’ இல் முடிகிறது. உத்தியோக பதிவுகளிலிருப்பது அப்படித்தான். தன் வயதைக் குறைத்துக் காட்டவேண்டும் என்பதற்காக பலவித உளச்சிக்கல் குறைபாடுகளுள்ள இவர் சண்முகலிங்கன் என்றே ‘ன்’ போட்டு தன்னுடைய நூல்களிலெல்லாம் தன்பெயரை எழுதுகிறார். சடைமயிர் வளர்த்து இருப்பது இவரின் இன்னுமொரு இளமையாகும் பிரயத்தனம்.

நல்லவரும் வல்லவருமான ஒரு துணைவேந்தரையே வேண்டிநிற்கிறது யாழ் பல்கலைக்கழகம்.

“திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்யவேண்டும்”

– பாரதி

இம்முறை துணைவேந்தர் பதவிக்கு என்.சண்முகலிங்கம் என். ஞானகுமாரன் எஸ்.சத்தியசீலன் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள். யாழ் பல்கலைக்கழகத்தை சீரழித்ததிலும் அங்கு இடம்பெற்ற குற்றச் செயல்களிலும் ஹூல் தவிர்ந்த மூவருக்குமே பங்குண்டு.

UoJ_Gnanakumaran_N_Profஞானகுமாரன் கலைப்பீடாதிபதி. கலைப்பீடத்தில்தான் அதிகளவு பாலியல் குற்றங்கள் இடம்பெறுகின்றன. இக்குற்றங்களுக்கான பொறுப்பை பீட அதிபர் என்ற வகையில் ஞான குமாரனும்தான் பொறுப்பேற்க வேண்டும். ஞானகுமாரன் துணைவேந்தராக வந்தால் பாலியல் குற்றங்கள் மேலும் தொடர்ந்து நடக்க அனுமதியளிக்கப்படும் என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. ஞானகுமாரனுடைய சகோதரர் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் என்பதால் அவரூடாக ஜி.எல்.பீரிசிடமும் மேலும் ஜனாதிபதியிடமும் கெஞ்சி மண்டாடியாவது துணைவேந்தராக வர கடும் பிரயத்தனம் செய்கிறார் ஞானகுமாரன். ஞானகுமாரன் சண்முகலிங்கம் சத்தியசீலன் ஆகிய மூவருமே திறமை அடிப்படையில் மிகவும் சாமானிய சூனியங்கள். இன்று பல்கலைக்கழகம் ஒரு பாலியல் வதைமுகாமாகி விட்டது. ஒரு யாழ் பல்கலைக்கழக பேராசிரியருடைய மனைவி இப்போது இளைப்பாறிவிட்ட இன்னொரு பேராசிரியருடன் பாலியல் தொடுப்பிலிருந்தே தனது பல்கலைக்கழக பதவியை தங்கவைத்துக் கொண்டார். கணவனுக்கு மட்டுமல்ல முழு பல்கலைக்கழக சமூகத்திற்கும் தெரிந்த பரகசியம் அது. இன்னொரு தமிழ்ப்பேராசிரியர் பழைய நிலமானிய சமூக ஸ்டைலில் பல்கலைக்கழக மாணவியை வைப்பாட்டியாக வைத்திருக்கிறார். சண்முகலிங்கமும், சத்தியசீலனும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள். தரமான பல்கலைக்கழகம் எதிலுமே கலாநிதிப்பட்டம் பெறுமளவுக்கு திறமையற்றவர்கள் இருவரும். இந்தியாவில் பெறப்பட்ட ஞானகுமாரனின் கலாநிதி பட்டமும் மிகச் சாமானியமானதுதான். லிங்கமும் குமாரனும் சீலனும் யாழ் பல்கலைக் கழகத்திலிருக்கும்வரை திறமையானவர்கள் எவரையுமே யாழ் பல்கலைக்கழகத்தினுள் அனுமதிக்கப் போவதில்லை. இவர்களுடைய காலத்தில் பல்கலைக்கழகம் மேலும் சீரழியப்போவது உறுதி.

இன்று நாம் ஒரு கால்நூற்றாண்டு கொடும்போர் முடிந்த யுக சந்தியில் நிற்கிறோம். நல்லவரும் வல்லவருமான ஒருவர் அதுவும் வெளிநாட்டார் அவர்தம் திறமையை வணக்கம் செய்த ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலில் சீ.வை.தாமோதரம்பிள்ளை தொடக்கிவைத்த செழுமையான பாரம்பரியத்தின் சிறப்புக்களையெல்லாம் கொண்டுள்ள ஒருவர் விஞ்ஞானத்திலும் (Engineering) மெய்ஞானத்திலும் (Humanities) பாண்டித்தியம் உடைய ஒருவர் ஆதியில் இந்து முதாதையரிலிருந்து வந்த ஆதித்தமிழனின் கருப்புத்தோலையுடைய ஒருவர் நம் கல்வி சமூகத்திற்கு சேவை செய்ய வந்திருப்பது நாம் முன்செய்த தவத்தின் பயனாலல்லவா? ஒரு வாழ்நாள் காலத்தில் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்கும் இவ்வாறானதொரு அரும் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடுவோமாயின் ஈழ தமிழ் சமூகம் கற்காலத்திற்கு திரும்பிப் போவது உறுதி.

பேராசிரியர் ரட்ணஜீவன் துணைவேந்தராக வருவதால் கிடைக்கும் பெருநன்மைகள்.

1. குற்றச்செயல்களும் சீரழிவுகளும் மிகுந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து வருபவர் கண்ணியமானவர் என்பதால் யாழ் பல்கலைக்கழகத்துக்கு புனர்வாழ்வழித்து அதனை முன்னேற்றுவார்.
2. எந்திரவியல் பேராசிரியர் என்பதால் எந்திரவியல்துறை முதல்முறையாக யாழ் பல்கலைக்கழகத்தில் தழைத்தோங்கும்.
3. சர்வதேச ரீதியாக நன்கு அறியப்பட்ட புலமையாளர் சாதனையாளர் என்பதால் சர்வதேசரீதியாக புகழ்வாய்ந்த தரமான தமிழர் தமிழரல்லாத துறைசார் அறிஞர்களை யாழ்பல்கலைக் கழகத்துக்குள் கொண்டுவருவார்.
4. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிக அளவில் புலமைப் பரிசில்களை வெளிநாடுகளில் பெற்றுக் கொடுக்குமளவுக்கு சர்வதேச ரீதியில் செல்வாக்கான பெயரையும் தகுதிகளையுமுடையவர்.
5. யாழ் பல்கலைக்கழகத்துக்கு வெளிநாட்டு உதவிகளை அதிக அளவில் பெற்றுக்கொடுக்கக் கூடியவர்.
6. சமூகவிஞ்ஞானத்திலும் பாண்டித்தியம் உடையவர் என்பதால் விஞ்ஞான சமூகவிஞ்ஞான துறைகளிடையே நிதி பங்கிடப்படும்போது சமநிலையைப் பேணுவதோடு கலை மற்றும் சமுகவிஞ்ஞானவியல் துறைகளையும் முன்னேற்றுவார்.
7. யாழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச ரீதியான தராதரத்துக்கு உயர்த்துவார்.
8. புதிய கற்கை நெறிகளை யாழ் பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவரக்கூடியவர்.
9. கல்விசார் சுதந்திரத்தை(Academic freedom) அதிகளவில் மதிக்கக்கூடியவர்

UoJ_Shanmugalingan_N_Profலிங்கமோ குமாரனோ சீலனோ துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்டால் வரப்போகிற இன்னொரு ஆபத்து ஒரு பெரும் மாணவர் கிளர்ச்சி வெடிக்கலாம் என்பதே. புலிப்பாசிசம் பல்கலைக்கழக வட்டத்துக்குள் இப்போது இல்லை என்பதால் மாணவர் சுயாதீனமாக இயங்குகிறார்கள். இன்றைய இணைய யுகத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு அநீதி உடனேயே இணையம்மூலம் உலகம்பூராகவுள்ள பல்லாயிரம் பேருக்கு தெரியவர வாய்ப்புண்டு. சுவாமி நித்தியானந்தாவின் பாலியல் லீலை சண் ரீவியிலும் யூரியூப்பிலும் வெளிவந்தமாதிரி யாழ் விரிவுரையாளரின் அக்கிரமும் வெளிவராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது செல்வாக்கை நல்ல காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும். ஒரு காலத்தில் புலியின் காலில் விழுந்த இவர்கள் இப்போது அமைச்சரின் காலில் விழுகிறபோது அதனால் அமைச்சர் கிறங்கக்கூடாது. பிரபாகரனைப்போல வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட ஒரு கொடுங்கோலனாக வருவதா அல்லது வரலாற்றில் நிலைக்கும் தலைவராக வருவதா என்பது அமைச்சரின் முடிவுகளிலேயே தங்கியிருக்கிறது. யாழ் பல்கலைக்கழகத்து யார் துணை வேந்தராக வருவதை அமைச்சர் விரும்புகிறார் என்பதைப் பொறுத்தது. மக்கள் எல்லாவற்றையும் மிக அவதானமாக் கவனித்து வருகிறார்கள். சண்முகலிங்கம், சத்தியசீலன், நந்தகுமாரன் போன்றவர்கள் துணைவேந்தராக தெரிவு செய்யப்படுவதற்கு அமைச்சர் தேவானந்தாவின் உதவி இருக்குமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதயன் பத்திரிகை போன்றவைகள் அமைச்சருக்கெதிரான வலுவான பிரச்சாரமாக இதனை உபயோகிக்கலாம். அமைச்சரின் செல்வாக்கும் மாணவர் மற்றும் அவர்தம் பெற்றோரின் மத்தியில் வலுவாகக் குறையலாம்.

அன்று ஆசியாவின் முதலாவது உயர்தரப்பெண்கள் பாடசாலை உருவான யாழ்ப்பாணத்தில் இன்று துணைவேந்தராம் என். சண்முகலிங்கம் என்கிறவர் ஒரு மாணவியை பல்கலைக்கழக மொட்டை மாடியில் பட்டப்பகலில் வல்லுறவு செய்ய கேட்க நாதியற்றிருக்கிறது யாழ் சமூகம்.

இனியொரு விதிசெய்வோம்
அதை என்னாளும் காப்போம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyமுருகையன் இறந்து ஏறத்தாழ நான்கு மாதங்களில் நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் புலிப் பாசிஸத்தை அறிந்து அறியாமலோ அல்லது தங்களது தனிப்பட்ட சந்தர்ப்பவாத நலன்களுக்காகவோ ஆதரித்து வரும் எழுத்தாளர்கள் வலைப்பதிவாளர்கள் முருகையனை ஒருபக்கச் சார்போடு விதந்துரைத்து அதிகளவில் முருகையனுக்கு அஞ்சலிக்குறிப்புக்களை எழுதியிருக்கிறார்கள். முருகையனும் புலிப்பாசிஸத்தை நியாயப்படுத்தி அதனது பிரச்சாரத்துக்கு உதவியவர் என்பதால் இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

தான் வாழ்ந்த சமூகத்தின் விமர்சகராக தன் காலத்தின் மனச்சாட்சியின் குரலாக முருகையன் இருந்தாரா? அவரது சமகாலத்து ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் முருகையனின் இடம் என்ன?

1986ம் ஆண்டு முருகையன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணை பதிவாளராகப் பணியாற்ற வருகின்றபோது தான் புலிப் பாஸிசத்திலிருந்து தனது சுயாதீனத்தை பேணிக்கொள்வதற்காக பல்கலைக்கழகம் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதே ஆண்டுதான் யாழ் பல்கலைக்கழக மாணவரான விஜிதரனை புலிகள் கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதன் மூலமாக பல்கலைக்கழகம் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி ஓட வேண்டியிருந்தது.

Dr Rajani Thiranagamaஅடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தமிழ் சூழலின் நிலமையினை விமர்சித்து “முறிந்த பனை” எழுதிய நான்கு  யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் முதன்மையானவரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட மீதிப்பேர் ஒதுங்க வேண்டியிருந்தது அல்லது தென்னிலங்கைக்கு தப்பிச்செல்ல வேண்டியிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவியும் கவிஞையும் நாடகவியலாளரும் பெண்ணியவாதியுமான செல்வி புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் கவிஞரும் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு முருகையனிடமிருந்து முன்னுரையைப் பெற்றவருமான எம்.ஏ. நுஃமான் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் கலைக்கப்பட்டார். நிலமை இவ்வாறு இருக்கும்போது நமது கவிஞர் முருகையனோ சற்றும் மனம் தளராது புலிப்பாசிச அரசியலுக்கு வெற்றுப்பிரச்சாரம் செய்யும் கவிதைகளையும் நாடகங்களையும் எழுதினார்.

‘தற்கொடை’ என்ற முருகையனின் கவிதையில் வள்ளுவரை கவிதைசொல்லி தெருவில் சந்தித்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். வீட்டிலோ வள்ளுவர் தான் இயற்றிய புதிய அதிகாரத்தை கொடுக்கிறார். கவிதையின் இரண்டாவது பகுதி பின்வருமாறு

தற்கொடை என்ப தமிழீழ
மைந்தர்கள்
நிற்கும் புதிய நிலை.

தன்னுயிரை தான் ஈயும்
சான்றாண்மை தற்கொடையாம்
ஏன்ன நிகர் ஆகும் இதற்கு?

ஓர்ம உரமும் துறவும்
உறுதியுமே
கூர்மதியோர் ஆவிக் கொடை

கற்கண் டினிது பழங் கள் இனிதே
என்பார்கள்
தற்கொடையின் தன்மை தெரியார்.

ஆவி கொடுக்கும் அசையாத்
திடம் கொண்ட
வாலிபர்கள் வாழ்வதிந்த மண்.

சொந்த மண் மீளச் சுடுகலன்கள்
ஏந்திடுவோர்
தந்திடுவார் தங்களுயிர் தாம்.

நஞ்சைக் கழுத்தில் நகையாய்
அணிவோரின்
நெஞ்சம் நிரம்ப நெருப்பு.

வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக்
கூடமாம்
பொங்கு சினம் கொண்ட புலிக்கு.

அச்சம் அறியார்: அடங்கார்:
அவர்க்குயிரோ
துச்சம்: எதிரி வெறுந்தூள்.

கொல்வோரை மோதிக் கொடுபட்ட
இன்னுயிரை
ஏல்லா உலகும் தொழும்.

இதைவிட நல்ல பிரச்சார முத்து புலிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. இப்பிரச்சாரத்தின் முன் புலிகளின் ஆஸ்தானக் கவிஞரான புதுவை ரத்தின துரையே பிச்சைதான் வாங்கவேண்டும்.

மேற்கூறிய கவித்துவச் சிறப்பு எதுவுமில்லை. திருக்குறளின் வடிவத்தை பிரதிபண்ணி கவிதை பண்ணும் இவ்வுக்தி மிகவும் மலினமானதும் இலகுவானதுமான முயற்சி. வழமையாக பாடசாலை மாணவர்கள் பாலியல் வசை மொழிகளை இதே யுத்தியைப் பயன்படுத்தி உருவாக்குவதுண்டு. இதற்கு நல்ல உதாரணம்:

ஏவ்வோழ் ஓழ்த்தார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை
கள்ளோழ் ஓழ்த்தாருக்கு

எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான தமிழ்ப் புலமையுள்ள எந்தவொரு மாணவருமே இந்த வகையில் கவிதை கட்டமுடியும். இப்பருவ மாணவர்களையே புலிகளும் தங்களது ஆட்சேர்ப்புக்கு இலக்கு வைப்பதால்தான் முருகையனின் தற்கொடை கவிதை புலிகளுக்கு அற்புதமான பிரச்சார முத்து.

முருகையன் யாழ்ப்பாண சனத்தொகையில் 50 வீதமான ஆதிக்க வேளாள சாதியைச் சேர்ந்தவர். அதிலும் சைவ உணவு மட்டுமே உண்ணும் சாதியின் உட்பிரிவைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரின் அதியுச்ச கல்வி கலாச்சார நிறுவனமான  யாழ் பல்கலைக்கழகத்தின் முது துணைப்பதிவாளராக இருந்துகொண்டு தன்னுடைய ஐம்பதுகளின் இறுதியில் பாதி நரைத்த தாடி மீதி கவிஞன் நாடகாசிரியன் என்கிற படிமங்களோடும் யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகாரத்திலிருக்கிற பெரும்பாலானோர் மாணவன் மாணவிகளுடன் ஈடுபடுகின்ற பாலியல் லீலைகளில் சம்பந்தப்படாத நல்ல மனிதர் என்ற பெயரோடும் ‘தற்கொடை’ எழுதுகிறபோது இக்கவிதையின் உச்ச பிரச்சார பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

Selviபுலிகளுக்காக முருகையன் எழுதிய இன்னொரு பிரச்சாரப் படைப்பு உயிர்த்த மனிதர் கூத்து என்கிற நாடகம். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனான க. சிதம்பரநாதனோடு சேர்ந்து கூட்டு முயற்சியாக இதனை எழுதினார். நாடகத்துறையில் தனக்குப் போட்டியாக இருந்த செல்வி புலிகளால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது. சிதம்பரநாதனுடைய முன்னைநாள் மேலாளரான அதிபர் ஆனந்தராஜா புலிகளாலால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்ததான ஒரு குற்றச்சாட்டும் உண்டு. உயிர்த்த மனிதரின் கூத்து பிரதியை வாசித்துப் பார்த்தால் பிரச்சார அம்சம் மட்டும் மேலோங்கும் மிகச்சுமாரானது என்பது புரியும். விடுதலைப் புலிகளின் ஆணைப்பிரகாரம் (Commissioned to)    எழுதப்பட்ட நாடகம் போலவேயுள்ளது.

ஸ்ராலின் போன்ற ஒரு கொடுங்கோலனை மிகச் சரியாகவே வெறுத்த மகத்தான ரூஷ்ய பெண்கவிக்குக்கூட அவருடைய மகன் “குலாக்” கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போது ஸ்ராலினைப் போற்றிப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டியிருந்தது. ஆனால் புலிகளுக்குச் சேவகம் செய்ய வேண்டிய எந்த நெருக்கடிகளும் முருகையனுக்கு இருந்ததில்லை. ஏ. ஜே.கனகரட்னா போன்ற உன்னத மனிதர்கள் புலிகள் பற்றிய மிகத்தெளிவான விமர்சனங்களையும் சிந்தனைகளையும் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடமே பகிர்ந்து கொண்டு இதே யாழ்ப்பாணத்தில் கௌரவம் அறம்சார் வீரம் நேர்மையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

“ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கல்லடி கண்ணே” என்பதற்கிணங்க ஒரு Hypocrite ஆக இயங்கி புலிகளின் பாசிசத்தை நியாயப்படுத்தி புலிகளின் அனுதாபிகளாகவும் புலிகளின் பிரச்சாரகர்களாகவும் செயற்பட்ட பேரா. சிவத்தம்பி மு. பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் போன்றவர்களின் அணியிலேயே முருகையனும் வருகிறார். முருகையனுக்கும் மேற்கூறியவர்களுக்கும் பிரபாகரனுடைய போராட்டத்திற்குப் “பதமான” பதின்ம வயதுக் குழந்தைகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே புலிகளின் பிரச்சாரத்துக்கு ஆட்பட்டு தங்களது குழந்தைகள் புலிகளில் இணையக்கூடாது என்பதற்காக அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து கூட்டிவந்து கொழும்பு சென்னை முதலிய இடங்களில் வைத்து வளர்த்து சிறந்த பல்கலைக்கழக கல்வி பெறுவதை உறுதிப்படுத்தினார்கள். முருகையனுடைய பெண் திருமணமாகி கொழும்பில் சந்தோசமான குடும்ப வாழ்விலிருக்கிறார். முருகையனுடைய பையன் நிரந்தரமான ஒரு உளநோயாளி. ஆம் இது “போராட்டத்தில்” விலக்குப்பெறுவதற்கான நியாயத்தை வழங்குகிறது.

ஆனால் மறுபக்கத்தில் ஒரு உளப்பாதிப்புள்ள மகனின் தந்தையான முருகையனுக்கு என்ன குறைபாடுகள் இருந்தாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வளவு அருமை பெருமையாகச் சீராட்டி வளர்ப்பார்கள் என்பது சொல்லிக்கொடுத்துத் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட முருகையன் மற்றவர்களுடைய குழந்தைகளை ஒரு தனி மனிதனின் நலனுக்காக நடத்தப்பட்ட பாசிசப் போராட்டத்திற்கு தாரை வார்த்துக் கொடுபடுவதற்காக பிரச்சாரம் செய்ததை புரிந்துகொள்வது எவ்வாறு? (முருகையனும் ஒரு உளநோயாளி. அவ்வப்போது நோய் முற்றுகிறபோது சிகிச்சை இளைப்பாறலுக்குச் சென்றுவிட்டு மீளவும் தேறி சித்த சுவாதீனமுள்ள மனிதராக மீண்டு வருகின்ற அளவில் தன் நோயை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்)

இந்த இடத்தில்தான் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் முருகையனைப் போன்ற hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமான பண்டிதர் பரந்தாமன் வருகிறார். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு.  ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” re enact பண்ணப்படுவதாக  ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். இவ்வாண்டில் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான இறுதிச் சமரொன்றின் போது பண்டிதர் புதுக்குடியிருப்பில் தள்ளாத வயதிலும் போரிட்டு மடிந்தார். அவருக்கு நெற்றியிலோ நெஞ்சிலோதான் சன்னம் பாய்ந்திருக்கும் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.

பின்வருவது பண்டிதரின் நல்ல கவிதையொன்று.

நல்லையல்லை நெடுவெண்ணிலவே

இல்லும் இழந்தனம் ஊரும் இழந்தனம்
ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம்
வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல்
போற்றெருவோரம் புளியோ வேம்போ
ஆலோ அரசோ அருநிழல் தேடி
ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை
ஒழியுநாள் வருமோ?
முன்னாள் எம்மூர் உழுது வித்திய பழனச் செந்நெல்
அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு
ஆர உண்டே மூரல் முறுவலர்
சேர இருந்து
திங்கள் சொரிந்த
பாலொழிப் பரப்பில்
மாலைத் தென்றல்
முல்லை நறுமணம் முகந்து வீச
மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த
எழில் வாழ்வு கழிந்தது மாதோ
இன்னாள் ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன
வாரியிடையே வலைஞர் செல்லார்
குயிலும் கோழியும் கூவல் மறந்தன
கிள்ளை மழலையும் கேளா நல் ஆன்
கன்று துள்ளா கறவை சுரவா
எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல்
புல்லென்றாகிப் போன
யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி
கான விறகு கட்டி விற்கும்
அல்லல் வாழ்க்கையே ஆனோம்
இங்ஙன் சிறுவர் மகிழார் இளையோர் நயவார்
பாடுநர் நோக்கார் பகையறக் களத்தில்
ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி
மெல்ல வானில் வருகுவை
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

பண்டிதரோடு முருகையன் வகையறாக்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

முருகையன் யூன் 27 ல் கொழும்பில் இறந்தபோது உடனடியயாக அவரைப் போற்றிப் புகழ்ந்து அஞ்சலி அறிக்கை விட்டவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். தேவானந்தாவை பல தடவைகள் கொல்ல முயன்ற புலிகள் குறைந்த பட்சம் இரு தடவைகளேனும் பெண் தற்கொலைதாரிகளைப் பயன்படுத்தி அவரைக்கொல்ல முயன்றுள்ளனர். தேவானந்தாவோ தற்கொலைக் குண்டுதாரிகளை நியாயப்படுத்தியும் பிரச்சாரப்படுத்தியும் கவிதை எழுதிய முருகையனை போற்றிப் புகழ்ந்ததானது பெருந்தன்மையாலோ அறியாமையாலோ அல்ல. முருகையன் இறந்து சரியாக ஆறு நாட்களின் பின் புலிக் காய்ச்சலிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் யாழ் பல்கலைக்கழகத்துள் சண்டை சச்சரவு இல்லாமல் நுழைவதற்கு தேவானந்தாவுக்கு முருகையனை போற்ற வேண்டியிருந்தது. மேலும் இது வாக்குப்பெறுவதற்கான ஒரு மலினமான அரசியல் நடவடிக்கையும் கூட. மறைத்தும் மறந்தும் கடந்து செல்லுதல் அல்ல reconciliation என்பதை தேவானந்தா உணரவேண்டும்.

40 களில் ஈழத்து நவீன கவிதை மஹாகவியுடன் தொடங்கியது. மஹாகவி முதல் தலைமுறைக்கவிஞர். 50 களிலிருந்து கவிதை எழுதிவரும் நீலாவணனும் முருகையனும் இரண்டாவது தலைமுறைக் கவிஞர்கள். (பார்க்க: பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலின் முன்னுரை). நவீன ஈழத்துக் கவிதையின் பிதாமகரான மஹாகவியின் கவிதைகள் அசலானவையும் தரத்தில் மிக உயர்வானவையும் ஆகும். இவருக்குப் பின்னர் வந்த நீலாவணனும் முருகையனும் பல சுமாரான கவிதைகளை எழுதியுள்ள போதும் நீலாவணனின் சிறந்த கவிதைகள் முருகையனின் சிறந்த கவிதைகளைவிட தரத்தில் உயர்வானவைகள். முருகையனில் அசலைவிட நகல்தான் அதிகமாக இருக்கிறது.

Arnold_Weskerமுருகையனின் படைப்புக்களில் வேறொருவரின் படைப்பை தழுவி அல்லது மொழிபெயர்த்து அல்லது வடிவம் மாற்றி எழுதியiவைதான் சிறப்பாக இருக்கின்றன. ஆனோல்ட் வெஸ்கர் என்ற பிரித்தானிய நாடகாசிரியரின் உருவகக்கதையொன்றை தழுவியே ஆதி பகவன் என்ற நெடுங்கவிதையை எழுதியுள்ளார். ஆதிக் கிரேக்க நாடகாசிரியரான Sophocles இனது நாடகங்களான  Antigone, Oedipus Rex  என்பவற்றை  தழுவி குனிந்த தலை தந்தையின் கூற்றுவன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். Bertolt Brecht  இன் Life of Galileo வை தழுவி கலிலியோவை எழுதியுள்ளார். அன்ரன் செக்கோவின் Enemies என்ற சிறுகதையைத்தழுவி இருதுருவங்கள் என்ற நாடகத்தை எழுதியுள்ளார். Terry Eagleton எழுதிய The Illusions of Post Modernism என்ற கட்டுரையை முருகையன் முதலாளியத்தின் மறுபக்கம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துவிட்டு  “பின் நவீனத்துவம் மாயைகளைக் கட்டவிழ்த்தல்” என்ற புத்தகத்தில் தனது கட்டுரையாகப் போடுகிறார். 

தான் சுயமாக எழுதிய நாடகங்களோடு தான் மொழிபெயர்த்த நாடகங்களையும்  தான் எழுதிய நாடகம் போன்ற மாயையோடு சேர்த்துத் தொகுக்கிறார். முருகையனுடைய அகராதியில் தழுவலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் வித்தியாசமில்லை. மொழிபெயர்ப்பு சரியாக செய்ய முடியாவிட்டால் தழுவல் என்றும் தழுவல் திருட்டல்லவா என்ற குற்றச்சாட்டு வந்தால் மொழிபெயர்ப்புத்தான் என்றும் சொல்லித்தப்பலாம். உண்மையில் இவை அப்பட்டமான இலக்கியத் திருட்டுக்கள். ஐரோப்பிய மொழியொன்றில் இந்தத்திருவிளையாடல்களை முருகையன் செய்திருப்பாராயின் ரெறி ஈகிள்ரனின் பதிப்பாளர் முருகையன் மீது வழக்குத்தாக்கல் செய்திருப்பார்.

முருகையனின் சொந்த நாடகங்கள் மிகச்சுமாரானவையாக இருக்கின்றன. அதிலும் ‘வந்துசேர்ந்தன’ போன்ற நாடகங்கள் வேடிக்கைக்குரிய வகையில் பாடசாலை மாணவர்கள் எழுதுகின்ற தரத்தில் இருக்கின்றன. செய்யுளில் (Verse)  எழுதிவிட்டால் மட்டும் அது நல்ல நாடகமாகிவிடாது. ஆனால் நல்ல நாடகம் நாடகப்பிரதி பற்றிய புரிதல் இல்லாத ஒருவருக்கு செய்யுளில் எழுதப்பட்டது நல்ல நாடகப்பிரதி என்ற பிரமையைக் கொடுக்கக் கூடியது. முருகையனின் கவிதைத் தொகுதிகளிலுள்ள 80 வீதமான கவிதைகள் மிகச் சுமாரானவைவும் தனித்தன்மை இல்லாதவையும். ‘அகிலத்தின் மையங்கள்’ எழுதிய முருகையனால்தான் மேற்கூறிய 80 வீதமான கவிதைகளும் எழுதப்பட வேண்டுமல்ல.  மேமன் கவி அப்துல் ரகுமான் போன்ற மூன்றாந்தரமான ஒரு கவிஞராலோ சாதாரணமான தமிழ்ப் புலமையுள்ள ஒருவராலோ மேற்கூறிய 80 வீதமான கவிதைகளை எழுதமுடியும்.  முருகையனிடம் சொந்தச் சரக்கு இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

துரதிஸ்ட வசமாக மஹாகவியும் நீலாவணனும் தங்களுடைய 44 ம் வயதிலேயே மரணமடைந்துவிட்டதால் மூத்த கவிஞர் என்ற பதவி முருகையனுக்கு போட்டியின்றிக் கிடைத்தது. அவரது கவிதைகளின் தரத்தின் அடிப்படையிலன்றி வயது ஆங்கில மொழிப்புலமை அதிகாரம் மிக்க பதவிகளிலிருந்தமை என்பனவே முன்னணிக் கவிஞர் என்ற அடைமொழியை முருகையன் அடையக்காரணமாக இருந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் தங்களின் உக்கிப்போன கோவணங்களின் நாறல் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதால் ‘ஒறிஜினல்’  பேராசிரியர்களான சிவத்தம்பியும் சிவசேகரமும் முருகையனுக்கு எழுதிய அஞ்சலிகளில் மகா பொய்கள் சொல்லியுள்ளனர். சிவத்தம்பி கைலாசபதியோடு சேர்ந்து மஹாகவியை இருட்டடிப்புச் செய்தவர். சிவசேகரம் மஹாகவியை இருட்டடிப்புச் செய்த கைலாசபதிக்கு வக்காலத்து வாங்கியவர்.

எந்தவொரு அசலான கலைஞனும் ஒரு சித்தாந்துத்துக்குள் (Doctrine) சிறைப்பட்டுப் போகமாட்டான். மார்க்ஸியம் ஒரு சித்தாந்தம். இதன் காரணமாகத்தான் மஹாகவியும் நீலாவணனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற பிரச்சார இலக்கியத்தை முதன்மைப்படுத்திய கிளப் (club)களில் தங்களை இணைக்கவில்லை. மேலும் அசலான கலைஞர்கள் என்பதால் கைலாசபதி சிவத்தம்பி போன்ற Literary cognition  (இலக்கிய ஞானம்) ஐ  அரிதாக உடையவர்களிடம் சேவகம் செய்து இலக்கிய அந்தஸ்து பெறவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை.

அடிப்படையில் மஹாகவியும் நீலாவணனும் முற்போக்காளராய் இருந்தார்களே தவிர பிற்போக்காளராயும் வலதுசாரிகளாயும் இருக்கவில்லை. நகல் கவிஞரான முருகையனோ கைலாசபதி சிவத்தம்பிக்கு சேவகம் செய்தார். மார்க்ஸியக் கிளப்பின் சீன சார்பு chapter ஆன தேசிய கலை இலக்கியப்பேரவையின் உறுப்பினர் முருகையன். இந்த மார்க்ஸியக் கிளப் களுக்கும் சாயிபாபா கிளப் மற்றும் மோட்டார் வண்டிக் கிளப்புக்களுக்கும் (Bikie clubs) பெரிய வித்தியாசங்களில்லை. இவ்வகையான இலக்கிய மார்க்ஸிய கிளப்புக்கள்தாம் குழுமனப்பான்மை முதுகுசொறிதல் காரணமாக உண்மையான இலக்கியத்தை சீரளிப்பவர்கள்.

இந்த அடிப்படையிலேயே சிவத்த தம்பியும் சிவத்த சேகரமும் முருகையனுக்கு எழுதிய புனைவுசார் அஞ்சலிகளை புரிந்துகொள்ள முடியும். சிவத்த சேகரத்தார் “குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்கு பலியாகாமல் அவரால் முழுமையான ஒரு மனிதநேயவாதியாக விருத்தியடைய முடிந்தது.“ என்று முருகையனைச் சொல்கிறார். தேசிய கலை இலக்கியப்பேரவை பதிப்பித்த முருகையனின் கவிதை தொகுப்பில் “தற்கொடை” என்ற அவரது கவிதையும் முருகையனின் நாடகங்களின் தொகுப்பு நூலில் “உயிர்த்த மனிதர் கூத்து” என்ற புலிப்பிரச்சார நாடகமும் தவிர்க்கப்பட்டு உத்தியோக பூர்வமாக சுயதணிக்கை செய்யப்பட்ட பின்னர் சேகரத்தார் நம் காதில் பூச்சுற்றுகிறார். முருகையன் குறுகிய தமிழ்த் தேசியவாதத்துக்குப் பலியாகியிருந்தாலும் மன்னிக்கலாம். முருகையன் அதைவிடக் கேவலமாகிப்போய் புலிப் பாசிஸத்துக்கல்லவா பலியாகியிருக்கிறார். சேகரத்தார் மேலும் உன்மத்தம் கொண்டு “முருகையனுடைய கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை தனது உச்சங்களை எட்டிய காலப் பகுதியில் எழுதப்பட்டவை. ஈழத்துக் கவிதையை அதன் உச்சங்கட்குக் கொண்டு சென்றவற்றுள் அவரது கவிதைகளுக்கு ஒரு பெரும் பங்குண்டு. அவற்றின் சிறப்பை அறிந்ததனாலேயே பேராசிரியர் கைலாசபதி அவரைக் கவிஞர்கட்குக் கவிஞர் என்று கூற முற்பட்டார். அக்கூற்று இன்று வரையுங் கூட செல்லுபடியானது”  என்கிறார். இதைவிட தம்பியும் சேகரமும் முருகையனை பாரதிதாசனுக்கு ஒத்தவராக அல்லது அவரையும் மீறியவராகக்காட்ட முற்பட தம்பியோ முருகையனைக் கொண்டுபோய் மஹாகவிக்கு அருகில் வைக்க முற்பட்டிருக்கிறார். நவீன தமிழிலக்கியத்தில் மஹாகவி ஒரு இரத்தினக்கல் என்றால் முருகையன் ஒரு கூழாங்கல்.

Sergei_Mikhalkovஇந்த ஆகஸ்டு 27 ம் திகதி சேர்ஜி மிகல்கோவ் என்ற ரூஷ்ய கவிஞர் இறந்தார். அவர் கிரெம்ளினில் ஆயுட்கால ஆஸ்தான கவி. முதலில் அவர் சோவியத் தேசிய கீதத்துக்கு இரண்டு வகையான பாடல்களை எழுதினார். ஸ்ராலின் உயிரோடு இருந்த போது ஸ்ராலினை மகிமைப்படுத்தி எழுதியது ஒன்று. ஸ்ராலின் இறந்தபின்னர் ஸ்ராலினை புறக்கணித்து எழுதியது மற்றது. சோவியத் உடைந்த பின்னரும் ரூஷ்ய அதிபர் பூட்டினின் கட்டளைக்கிணங்க அதே பழைய சோவியத் இசைக்கு மூன்றாவது முறையாகவும் ரூஷ்ய தேசிய கீதத்துக்கான பாடலை எழுதினார். அவர் சேவகம் செய்த எல்லா ஆட்சிகளும் அவருக்கு பதக்கங்களை வழங்கின. மிகல்கோவ் இறப்பதற்கு சரியாக 2 மாதங்களுக்கு முதல் யூன் 27 ல் இறந்த முருகையனோ மிகல்கோவையே விஞ்சிய சேவக்காரன். ருஷ்ய ஆட்சிகளுக்கு சேவகம் செய்த மிகல்கோவ் ஒருபோதும் ரூஷ்யர்களின் எதிரிகளான ஜெர்மானிய நாசிகளுக்கு சேவகம் செய்யவில்லை. முருகையன் அதற்கொப்பானதை செய்திருக்கிறார்.

முருகையன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முதலே பிரபாகரன் மண்டையில் போடப்பட்டு விட்டதால் முருகையனுக்கு மாமனிதர் பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கை அரசின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (இடது சாரிக்கட்சிகள் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது முருகையனின் இடதுசாரித் தொடர்பாலேயே இவ்விருது)  முருகையனுக்கு 2007 ல் வழங்கப்பட்டபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளையும் நியாயப்படுத்தி ‘தற்கொடை’ எழுதிய முருகையனுக்கு இலங்கை அரசு இவ்விருதைக் கொடுத்திருக்கிறது. (இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் 9 மணியிலிருந்து 5 மணி வரையான பகல்வேளைகளில் மட்டுமே தொழில் செய்வார்கள் என்று சக கவிஞர் ஒருவர் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். சிங்களவர்களுக்கு மேல் வீடு இல்லை என்று பிரபாகரனின் மதியுரைஞர் இலண்டன் சீமையில் பேசியிருக்கிறார்.)

2009 ம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு தமிழர்களான ராஜன் கூல் சிறிதரனுக்கு? : நட்சத்திரன் செவ்விந்தியன்

Rajan_Hoole_UTHRSritharan_K_UTHR2009 ம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய ஜி.எம்.ரி நேரம் காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையைச் சேர்ந்தவருக்கு அதிலும் குறிப்பாக தமிழர் ஒருவருக்கு இம்முறை இவ்விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதே. இவ்வகையில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களான ராஜன் கூல்லுக்கும் கோ.சிறிதரனுக்கும் இவ்வருட சமாதான நோபல் பரிசு பெறும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.

நோபல் பரிசுகளில் அதிகம் சர்ச்சைக்குரியது சமாதானத்துக்கான பரிசுகளே. ஏனைய பரிசுகள் துறைசார்ந்த அறிஞர்களால் தெரிவுசெய்யப்பட சமாதானத்துக்கான பரிசோ நோர்வே பாராளுமன்ற அரசியல்வாதிகளாலும் அவர்களை ஏய்க்கும் அமெரிக்க அரசாலுமே உண்மையில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த வகையில் அரசியல் மயப்படுத்தப்பட்ட விருது சமாதானத்துக்கான நோபல் பரிசு. இதனுடைய அர்த்தம் பரிசு பெற்ற அனைவருமே தகுதியற்றவர்கள் என்பதல்ல. ஹென்றி கிசிங்கர் சில இஸ்ரேலிய அரசுத்தலைவர்கள் சில அமெரிக்க அரசுத் தலைவர்கள் அன்வர் சதாத் முதலியவர்களுக்கு வழங்கப்பட்ட சமாதானப் பரிசுகள் ஏளனத்துக்கும் சர்ச்சைக்கும் உரியது என்றால் முகமட் யூனுஸ் வங்கரி மாதாய் கொபர்ச்சேவ் ஆங் சாங் சூ கீ போன்றவர்களுக்கு வழ்ஙகப்பட்டவைகள் மிகப்பொருத்தமானவைகள்.

சமாதானத்துக்கான நோபல் பரிசுகளில் தகுதி தகுதியின்மை மட்டுமன்றி வழங்கப்படுகின்ற கால நேரங்களும் மிகுந்த சர்ச்சைக்குரியவை. தலாய் லாமாவுக்கான விருது 1988 ம் ஆண்டுக்கு முதலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சீன மாணவர் எழுச்சியை அடுத்து நடந்த தியனமென் சதுக்கப்படுகொலைகள் நடந்த 1989 ம் ஆண்டிலேயே தலாய் லாமாவுக்கு விருது வழங்கப்படுகிறது. கிழக்கு தீமோர் பாதிரியார் கார்லோஸ் பெலோ விடுதலைப் போராளி ராமோஸ் ஹோட்டா போன்றவர்களுக்கும் 1996 ம் ஆண்டுக்கு முதலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். மறுதலையாக கிளின்ரன் நிர்வாகத்தில் இந்தோனேசியா தொடர்பான கொள்கை மாற்றத்தை நாடி பிடித்துப் பார்த்த பின்னரே தீமோர்க்காரர்களுக்கு வழங்கப்பட்டது. ராப்லோயிட் பத்திரிகைகளுக்குரிய சூடு சுவாரசியம் பரபரப்பு என்பனவும் இப்பரிசுத்தெரிவில் உண்டு.  ஒரு பெரும் போர் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட இரு தரப்பிலிருந்தும் ஆட்களை தெரிவு செய்து “வஞ்சகமில்லாமல்”; பரிசு கொடுப்பார்கள். உதாரணம் வியட்னாம் போரை அடுத்து கிசிங்கருக்கும் வியட்னாமிய தலைவர் டக் தோவுக்கும் வழங்கப்பட்ட விருது. விவசாய மரபணு விஞ்ஞானி நோமன் போர்லோக் 1956 ம் ஆண்டிலேயே மெக்ஸிக்கோவில் பெரு விளைச்சலை நிறுவி சாதித்து விட்டார். ஆனால் 1965 இலிருந்து 1970 வரை அவர் “பஞ்சம் பிழைக்கும் பரதேசமாம்” இந்திய துணைக்கண்டத்துக்கு வந்து “படங்காட்டும்” வரை நோபல் மன்று அவரை கணக்கெடுத்துப் பார்க்கவில்லை.

இத்தகைய நோபல் சமாதானப் பரிசின் வரலாற்றை கூர்ந்து நோக்குகிற போதுதான் இம்முறை நம்மவர்க்களுக்கான முறை என்பது தெரிகிறது. அதிக அளவில் இவ்வாண்டில் உலகப் பத்திரிகைகளில் அடிபட்ட செய்தி இலங்கை அரசு வெல்ல முடியாது என்று நம்பப்பட்ட மரபு சாரா போர்க்காரர்களான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது. தென்னாசியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற எட்டு இலட்சம் தமிழர்களில் பெரும்பாலானோர் செம்மறி ஆடுகளாக விடுதலைப் புலிகளின் மந்திரத்தை ஓதி உலக நாடுகளில் ஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என தப்பாட்டம் ஆடியும் உலக ஊடகங்களின் கவனத்துக்கு வந்தார்கள். போதாக்குறைக்கு நோர்வேக்காரர்களும் சமாதான ஒப்பந்த மத்தியஸ்தர்களாக இங்கு சிக்குப்பட்டிருக்கிறார்கள். நோபல் மன்றத்திற்கு இது உத்தமமான பொருத்தம்.

உலக நாகரிகத்தின் முக்கியமான யூத முஸ்லீம் கிறிஸ்தவ மதங்கள் தோன்றிய பலஸ்தீனத்தின் பிரச்சனையே “தீர்த்துவைத்தோம்” என்று நோர்வேக்காரர்கள் 1994 ம் ஆண்டில் அரபாத்துக்கும் அப்போதைய இரு இஸ்ரேலியத் தலைவர்களுக்கும் நோபல் பரிசு கொடுத்து உலகத்தின் சமாதான மொத்த வியாபாரிகள் தாங்களே என்று உலகின் காதில் பூச்சுற்றினார்கள். ஆனானப்பட்ட அவர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் முகத்தில் கரிபூசியது மட்டுமின்றி கன்னத்தில் அறைந்தும் அனுப்பியிருக்கிறது. மிகவும் நொந்து போயிருக்கிறார்கள் எரிக் சொல்கைம் போன்ற சர்வதேச சமாதான யாவாரிகள். இப்போதைக்கு அவர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தாங்களும் பதிலுக்கு கரிபூச வேண்டும். அதற்கு ராஜபக்ஷவை அம்பலப்படுத்தி அவமானப்படுத்தும் ஒருவருக்கு நோபல் விருது கொடுக்க வேண்டும்.

மேலும் ராஜபக்ஷ பிறப்பால் அமெரிக்கரோ அல்லது யூதரோ இல்லை என்பதால் வியட்னாம் போர் முடிவு போல இரு தரப்பினருக்கும் பரிசு கொடுக்க முடியாது. எனவே இங்கு “போரில் தோற்ற” தமிழர் பிரதிநிதிகளான  மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 2002 ம் ஆண்டு அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தில் நோர்வேக்காரர்களான தங்களது மத்தியஸ்தத்தை அதிகம் விமர்சித்தது அதே யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே. அதிஸ்ரவசமாக புலிகளின் மங்கு சனி காலத்திலிருந்து புலிகள் மடிந்ததுவரை மேற்குறித்த சங்கத்தின் அறிக்கைகள் அதிகமாக ராஜபக்ஷ அரசாங்கத்தையே விமர்சித்து வந்துள்ளன.

உண்மையைச் சொல்லப்போனால் 2005 ம் ஆண்டிறுதியில் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்குகளை உலகுக்கு அம்பலப்படுத்தியது மேற்கூறிய மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கைகளே. திருமலையில் 5 மாணவர் மற்றும் 17 பிரெஞ்சு தொண்டர் நிறுவன உறுப்பினர் படுகொலை என்பனவற்றை நிகழ்த்திய இலங்கை இராணுவத்தினரை அம்பலப்படுத்தியது யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே. புலிகள் துவம்சம் செய்யப்பட்ட பின்னர் யாழ் சங்கக்காரர் ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்தே உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். இதன் காரணமாகவே இவர்கள் இப்போது வெளிநாடுகளிலிருந்து இயங்குகிறார்கள். மேற்கூறிய காரணங்கள் காரணமாகவே நோர்வே மன்றின் கடைக்கண் பார்வை சங்கத்தின் மீது விழுந்துள்ளது.

பிறப்பால் ஒரு தமிழர் என்றாலும் ராஜன் கூல்லின் எழுத்துக்களுக்கூடாகவும் வாதங்களுக்கூடாகவும் வெளிப்படுவது ஒரு சமாதான இலங்கைக்கான சாத்தியமான திட்ட வரைவே. (பார்க்க அவரின் ஆங்கில நூலான The arrogance of power)

மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது. இவ்விருது உண்மையிலேயே இவர்களுக்கு வழங்கப்பட்டடால் ஒரு மோசமான பாழாட்சியை நோக்கி இலங்கையை ஓட்டிச்செல்லும் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு இது பேரிடியாக அமையும். காலத்தின் தேவையும் அதுதான்.

‘நியாயம் சொல்கிறார்கள். நியாயம்!’ சேரனின் எதிர்வினைக்கு பதில் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Cheran._._._._._.
க.மகாதேவன் என்கிற புனைபெயரில் தேனீ இணையத்தளத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய முதல் கட்டுரை (சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு) சேரன் மீதான விமர்சனமாக அமைகிறது. இரண்டாவது கட்டுரை முதல் கட்டுரைக்கு சேரன் எழுதிய பதில். ( Cheran’s_reply_for_Nadchathiran_Sevindian ) மேற்கூறிய இரண்டு கட்டுரைகளும் 2006 ம் ஆண்டு தேனீ இணையத்தில் பிரசுரமானவை. இக்கட்டுரை சேரனின் பதிலுக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய எதிர்வினை. இது இப்போது தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படுகிறது.
._._._._._.          

Successful seductions rarely begin with an obvious maneuver or strategic device. That is certain to arouse suspicion. Successful seductions begin with your character, your ability to radiate some quality that attracts people and stirs their emotions in a way that is beyond their control. Hypnotized by your seductive character, your victims will not notice your subsequent manipulations. It will then be child’s play to mislead and seduce them.

From ‘The Art of seduction’ by Robert Greene.

வசியப்படுத்த வைக்கிற சூழ்ச்சிகரமான மாயத்திறமைகளைப் பயன்படுத்தியும் சூழ்ச்சிகளைக் கொண்டும் எழுதப்பட்டதே சேரன் எனது கட்டுரைக்கு எழுதிய பதிலாகும். சேரன் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு மனிதனை வசியப்படுத்த வேண்டும் என்பதற்கு பயன்படுத்துகிற வசிய மொழியும் (Language of Seduction) உண்மையைக் கண்டடைய வேண்டும் என்பதற்காக நடாத்தப்படுகிற ஒரு அரசியல் பெருங்கதையாடலுக்கான மொழியும் (Language of Political Discourse) ஒன்று அல்ல என்பதைத்தான். முன்னையதில் பொய்களும் திரிக்கப்பட்ட உண்மையும் குதர்க்கங்களும் சூழ்ச்சியும் இருக்கும். பின்னையதில் உண்மையும் தர்க்கமும் இருக்கும்.

சேரனைப் பற்றி நான் எழுதிய கட்டுரை உறுதியான ஆதாரங்களுடன் எழுதப்பட்ட உண்மைகளின் தொகுப்பு. அதற்கு சேரன் எழுதிய பதிலில் இருக்கிற பொய்களையும் திரிக்கப்பட்ட உண்மைகளையும் குதர்க்கங்களையும் சூழ்ச்சிகளையும் பின்வரும் பகுதிகளில் தெளிவுற விளக்குகிறேன்.

1. வின்சர் பல்கலைக்கழகத்தில் சேரனின் உண்மையான பதவி tenure நிரந்தரத் தகுதி இல்லாத ஆரம்ப விரிவுரையாளர் என்பதே. ஆரம்ப விரிவுரையாளர்களை வட அமெரிக்கப்பல்கலைக் கழகங்களில் Assistant Professor என்று குறிப்பிடுவதே வழக்கம். என்னுடைய கட்டுரையில் மிகத் தெளிவாகவும் விரிவாகவும்  இப்பதவிகள் சம்பந்தமான சொற்களையும் அவற்றின் வேறுபாடுகளையும் விளங்கப்படுத்தியுள்ளேன். இவ்வளவு செய்த பின்னரும் சேரன் தான் நிரந்தரமான ஒரு பேராசிரியராக வின்சர் இல் இருப்பதாகவும் கூகிளில் தன் பெயரைப்போட்டுத் தேடினால் தன்னைப் பற்றிய எல்லா விவரமும் வருகிறது என்று மொட்டையாகவும் தந்திரமாகவும் படுபொய் சொல்லிவிட்டு நழுவுகிறார். இன்றைக்கு யாருமே பிழையான தகவல்களைக் கொண்டு ஒரு இணைவலையை ஆரம்பிக்கலாம். இதற்கு நல்ல ஒரு உதாரணம் புலிகளின் நிதர்சனம் டொட் கொம். முதலில் நாங்கள் ஒரு தகவல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த அது நம்பகரமான அதிகாரபூர்வமான மூலத்தூடாக வருகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வட அமெரிக்கப்பல்கலைக் கழகங்களில் Professor  என்ற பதம் பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கின்ற அனைவரையும் கௌரவமாக விளிப்பதற்கும் (அதாவது இலங்கைப் பல்கலைக் கழகங்களில் படிப்பிக்கின்ற அனைவரையும் பல்கலைக்கழக மாணவர்கள் “சேர்” என்று விளிப்பதைப் போல) பயன்படுத்தப்படுகிறது. விளிப்பதற்கு மட்டுமே அவ்வாறு பயன்படுத்தப்படுவதே தவிர அவ்வாறு விளிக்கப்படுகிற எல்லோருமே பேராசிரியர் அல்ல. இது பற்றிய விரிவான விளக்கத்துக்கு பார்க்க : http://en.wikipedia.org/wiki/Professor

ஆனால் வட அமெரிக்காவில் இருக்கிற எந்தவொரு நேர்மையான விரிவுரையாளரும் இந்த மயக்கத்தைப் பயன்படுத்தி தன்னை ஒரு பேராசிரியர் என்று வேணுமென்றே அறிமுகப்படுத்தி புழுகி மோசடி செய்யமாட்டார்கள். அல்லது எந்த ஒரு அமெரிக்கப் பதிப்பகமும் ஒரு விரிவுரையாளரால் எழுதப்பட்ட புத்தகத்தில் அவரைப் பற்றி அறிமுகப்படுத்துகிறபோது அவரை பேராசிரியர் என்று தவறாக அறிமுகப்படுத்த  மாட்டாது. இந்த சொல் மயக்கத்தினால் வெகுஜன ஊடகங்களில் சில தடவைகள் பேராசிரியர் பதவிக்கும் கதிரைக்கும் சொந்தமில்லாத பலர் பேராசிரியர் என்று தவறுதாலாக எழுதப்படுவது உண்டு. கூகிள் இணையத்தளத்தில் சேரனின் பேரைப்போட்டுத் தேடினால் முதலில் வருவது மேலே கூறியமாதிரியான தவறான அர்த்தத்தில் சேரன் பேராசிரியர் என்று எழுதப்பட்ட பக்கங்களே. சேரனே தன்னை பேராசிரியர் என்று எழுதி பல   இணைய பக்கங்களை ஆரம்பிக்கலாம். உண்மையிலேயே சேரன் முதலியவர்களால் அண்மையில் கனடாவில் நடாத்தப்பட்ட மாநாட்டுக்காக சேரன் முதலியவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்ட பின்வரும் இணையத்தளத்தில் சேரன் தன்னைத்தானே பேராசிரியர் என்றே புழுகி எழுதியுள்ளார். பார்க்க http://www.chass.utoronto.ca/~tamils/tsc2006/about/committee.html

ஆகவே நாங்கள் சேரனின் உண்மையான தகுதியை அறிய அவர் பணியாற்றுகிற வின்சர் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வமான பின்வரும் இணையத்தளத்துக்கே சென்று பார்க்க வேண்டும். www.uwindsor.ca/units/socanth/sociology.nsf/831fc2c71873e46285256d6e006c367a/b09aaaab44a4671885256c750064ec58!OpenDocument

இதில் சேரன் Assistant Professor (விரிவுரையாளர்) என்றே மிகத்தெளிவாக உள்ளது. இதைவிட Assistant Professor இல் இருக்கிற  Professor என்ற சொல்லைக்கொண்டு ஒருவர் தான் Professor என்பாராயின் அது ஒரு இராணுவ மேஜர் ஜெனரல் தன்னை ஒரு ஜெனரல் என்று சொல்வதற்கு ஒப்பானது. கூகிளின் தேடும் இயந்திரத்தை பயன்படுத்தி சேரன் எப்படி சுத்துகிறார் என்பது இப்போது யாவருக்கும் புரிந்திருக்கும். மேலும் சேரனின் (விரிவுரையாளர்) Assistant professor பதவி நிரந்தரமான Tenure தகுதி இல்லாதது. காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தமிழினி 2000 மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பிலும் ‘மீண்டும் கடலுக்கு’ நூலிலும் சேரன் ஒரு சமூகவியல் மானுடவியல் பேராசிரியர் என்று அறிமுகம் தரப்படுவதும் சேரன் தன்னை ஒரு பேராசிரியர் என்று திசைகள் பேட்டியில் கூறுவதும் சந்தேகத்துக்கிடமின்றி  அறிவுத்துறை சார்ந்த மோசடிகள்.

2. Tigers of Lanka என்ற நூலின் மூன்றாவது பதிப்பில் (1995) 28 ஆவது பக்கத்தில் வருபவை இவைதான்.

“He was a restless character” added Rudramoorthy Cheran, a former Jaffna university student who had moved closely with Sivakumaran in 1973 – 1974. “He would discuss all night, emphasising the need for an armed struggle”

அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு.

“அவர் ஒரு அமைதியற்ற பிறவி ” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் மாணவரும் 1973 – 1974 காலப்பகுதிகளில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியவருமான உருத்திரமூர்த்தி சேரன் கூறினார். “அவர் (சிவகுமாரன்) ஒரு இரவு முழுவதுமே ஆயுதப் போராட்டம் ஒன்றின் தேவையை வலியுறுத்தி விவாதித்துக் கொண்டிருப்பார்” என்று மேலும் தொடர்ந்து சொன்னார் சேரன்.

இங்கே மிகத்தெளிவாகவே சேரனின் மோசடி வெளிப்படுகிறது. அதாவது சேரன் ஆசிரியர் நாராயணசாமியிடம் 1973 -1974 காலப்பகுதியில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியதாகப் பொய் சொல்லியிருக்கிறார். இங்கு சேரனின் மோசடிகள் இரண்டு.

(1) 1973 -1974 காலப்பகுதியில் அதாவது 2 வருடங்கள் சிவகுமாரனுடன் தான் நெருங்கிப் பழகியதாக பொய் சொன்னது
 
(2) மேற்கூறிய பொய்யின் அடிப்படையில் சிவகுமாரனைப் பற்றி சான்றிதழ் பத்திரம் (character certificate) வழங்கக்கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாக காட்டிக் கொண்டமையும் அப்போலி அதிகாரத்தை மோசடியாக பிரயோகித்தமையும்.

உண்மை மேற்கூறியவாறு இருக்க சேரன் தனது பதிலில்

சிவகுமாரனோடு நடந்த ஒரு சந்திப்பை அடிப்படையாகக்கொண்டே சிவகுமாரனைப் பற்றி தான் நாராயண்சுவாமியின் புத்தகத்தில் கருத்துச் சொன்னதாக கயிறு திரிக்கிறார்.  சேரன் ஆதவனோடு நெருங்கிப் பழகியவர் என்பதில் எமக்கு எதிர்க்கருத்து இல்லை. அதுதான் ஆதவனின் குணம் சேரனிலும் வந்திருக்கிறதே.

சேரன் தனது இரண்டாந்தரக் கல்வியை தமிழ் மொழிமூலமே கற்றவர். அவர் Saturday Review பத்திரிகையில் வேலை செய்தகாகக் கூறுகிற 1984 – 1987 காலப்பகுதியில் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய அளவுக்கு அவருக்கு ஆங்கிலப் புலமை இருக்கவில்லை. 1987 ம் ஆண்டுக்குப் பின்னர் ஆங்கில மொழிமூலம் அரசியல் விஞ்ஞானம் கற்றபின்னரே தனக்கு ஆங்கிலத்தில் எழுதும் புலமை வந்ததாக அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். எம்முடைய வாதம் என்னவென்றால் தனக்கு இல்லாத தகுதியான Deputy editor of Saturday Review என்பதை டொரண்டோ எங்கும் வெகு சகஜமாகச்  சொல்லி வருவதுதான் தவறு என்கிறோம். சேரனே தன்னைப் பற்றி எழுதிய பின்வரும் http://www.cheran.net/english.html

சேரனின் இணையத்திலும்   கனேடிய யோர்க் பல்கலைக்கழக இணையமான பின்வரும் http://www.yorku.ca/hdrnet/images/uploaded/cheran_tsunamimemorial.pdf

இணையத்திலும் சேரன் தானே Saturday review பத்திரிகையின் Deputy Editor ஆக இருந்ததாக முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற மகா பொய் சொல்லியுள்ளார். Deputy Editor என்றால் அதன் அர்த்தம் பத்திரிகையின் ஆசிரியர் தற்காலிகமாக இல்லாதபோது தற்காலிகமாக ஆசிரியர் பொறுப்பை எடுப்பவர். ஆங்கிலத்தில் எழுதக்கூடிய அளவுக்கு புலமை இல்லாத ஒருவரை ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் Deputy Editor ஆக்குவதானது துவிச்சக்கர வண்டியே ஓட்டத் தெரியாதவனை Harley Davidson motor bike ஓட்டும்படி கேட்பதற்கு சமனானது. எனது கட்டுரையின் பின்னரே சேரன் 1984 இல் தான் Saturday Review இல் வேலைக்குச்சேர்ந்தபோது தனக்கு ஆசிரியர் பகுதி உதவியாள் (இன்னொரு வகையில் சொன்னால் ஆசிரியர் பகுதி எடுபிடி)  என்ற பொறுப்பு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். சேரனே மேலும் 1987 ஜூலையில்தான் தனது பொறுப்பு இணை ஆசிரியர் (இணை ஆசிரியருக்கான ஆங்கிலம் Associate Editor என்பதே.) ஆனது என்கிறார்.அவர் சொல்வது சரி என்று கொண்டாலும் அவர் ஆக ஒரே ஒரு மாதம் மட்டுமே இணை ஆசிரியராக இருந்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதுகிற அளவுக்கு ஆங்கிலத்தில் முழுப்புலமை இலலாத ஒருவர் இணை ஆசிரியர் ஆகக் கூட வருவது என்பது நகைப்புக்குரிய விடயமே.
     
1958 இல் பிறந்த சேரன் தான் 1960 இல் பிறந்ததாக பிற்பாடு கூறிவரும் மோசடியை ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தோம். இதற்கு சேரன் கொங்கு தேர் வாழ்க்கை 2 ம் தொகுதியில் தனது பிறந்த ஆண்டு 1954 என்று தரப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் சேரன் விவாதத்தை  பொறுக்கித்தனமாக  திசை திருப்புகிறார். அதாவது பொறுப்பற்ற கவலையீனமான அச்சுப்பிழைகளே தனது வயது மோசடிகளுக்கான காரணம் என்ற மறைக்கப்பட்ட செய்தியினை செருகுகிறார். சேரன் ஒரு ஒழுங்கான மனிதன் என்றால் தான் பிறந்த ஆண்டு எது என்பதை தெரிவித்திருக்க வேண்டும். அவ்விதம் சேரனால் செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் அவர் தனது வயது மோசடியில் கையும் களவுமாக வசமாக மாட்டுப்பட்டமையே. காலச்சுவடு வெளியீடாக 2000 ஆம் ஆண்டுக்குப்பிறகு வந்த சேரனின் புத்தகங்களில் எல்லாம் சேரன் பிறந்தது 1960 என்றே சேரனால் கண்ணனிடம் சொல்லப்பட்டே அறிமுகத்தில் எழுதப்படுகிறது. மேலும் சேரன் எம்மிடம் தனது கடவுச்சீட்டையும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையும் பார்வைக்கு தர வேண்டும் என்று கேட்பதுதான் மிக வேடிக்கையானது. இதற்கூடாக ஒரு திசைதிருப்புகிற  வாதத்தை  வைக்கிறார். சேரன் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மேற்கூறிய ஆவணங்கள் எவற்றையுமே பிழையான வயதுகளுடன் பெயர்களுடன் மோசடியாக (Identity fraud) எவருமே தயாரிக்க முடியும். ஆவணங்களை வைத்து யாருமே உண்மைகளை நிறுவ முடியாது. சேரனின் மூத்த சகோதரத்தினதும் இளைய சகோதரத்தினதும் வயதை சேரனின் வயதுடன் ஒப்பீட்டுச் சரிபார்ப்பதன் மூலமும் சேரன் படித்த வகுப்பை சேர்ந்த சக மாணவர்களின் வயதுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதன் மூலமுமே உண்மையை நிறுவ முடியும். கல்லூரியில்  சேரனோடு சேர்ந்து படித்த மாணவர்கள் எல்லோருக்குமே சேரன் பிறந்தது 1958 என்பது மிகத் தெளிவாகவே தெரியுமே. இவர்களிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி சேரன் தான் பிறந்தது 1960 தான் என்றால் அவர்கள் நம்புவார்களா? அல்லாவிடில் சேரன் தனது தம்பியான சோழனிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி  “இதன்படி நான் உன்னைவிட இரண்டு ஆண்டுகள் கழித்தே பிறந்தேன். ஆகவே இனிமேல் நான் உனக்கு தம்பி, நீ எனக்கு அண்ணன்” என்று சொல்லி உறவு முறைகளைகளையும் உண்மையையும் மாற்ற முடியுமா? கொங்குதேர் வாழ்க்கை 2 இல் தனது பிறந்த ஆண்டு 1954 (பிரபாகரனும் பிறந்த ஆண்டு 1954) என்று தரப்பட்டிருக்கிறது என்று சேரன் சொல்வதற்குப் பின்னால் இன்னொரு கிரிமினல் ஐடியாவும் இருக்கிறது. இனி அடுத்து சேரன் வழங்கப்போகும்  பேட்டியில் தேசியத்தலைவரும் தானும் ஒரே வயதினர் என்றும் பாலசிங்கத்துக்கு முதலே தான் தேசியத் தலைவருக்கு ஆலோசகராக இருந்தேன் என்றும் தனது ஆலோசனைப்படியே துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக்கொன்றார் என்றும் சேரன் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தான் முன்னர் சொன்ன எழுதிய விடயங்களை தான் சொல்லவில்லை என்றும் நாங்கள் அவற்றைத் திரிக்கிறோம் என்றும் பச்சை பச்சையாக அழாப்புகிற மகா மோசடிக்காரன் சேரன். சேரன் ஒரு Demagogue. அதாவது உணர்ச்சிகரமானதும் நியாயமற்றதுமான வாதங்கள் மூலம் மக்களின் ஆதரவைப்பெறுகிற ஒரு மூன்றாந்தரமான அரசியல்வாதி. தீராநதி குமுதத்தினால் வெளியிடப்பட்டு கணிசமான பிரதிகள் விலைப்படுகின்ற இலக்கிய இதழாகும். அதில் சேரன் கூறியவைகள் எதனையும் நாங்கள் திரிக்கவில்லை என்பதையும் சேரனின் பொய் புரட்டல்களையும் நீங்கள் அதில் ஐயம் திரிபுறக்காணலாம். தமிழ் கூறும் நல்லுலகம் எங்குமே எவருமே மேற்சொன்ன பழைய தீராநதி இதழை எடுத்து சரிபார்க்கலாம்.  சேரன் சொல்கிறார் தீராநதி கிடைக்கிற இணையத்தளத்தை நாங்கள் தந்திருக்க வேண்டுமாம். சேரனைப் பொறுத்தவரையில் இணையத்தளத்தில் வந்தால் தான் அது உண்மையாம். மேற்கூறிய சேரனின் பேட்டி இப்போது இணையத்தளத்தில் இல்லை என்பதுபோக நாங்கள்தான் அச்சில் வந்த தீராநதியை ஆதாரமாகக் காட்டியிருந்தோமே. மேலும் இதே தீராநதிப்பேட்டி 2006 ம் ஆண்டு காலச்சுவடு வெளியிட்ட சேரன் நேர்காணல்கள் என்ற நூலிலும் இணைக்கப்பட்டுள்ளது. சேரன் தன்னுடைய சூழ்ச்சிகரமான வாதத்துக்கு ஆதாரமாக பின்னர் திசைகளில் வெளிவந்த தன்னுடைய பேட்டியைக் காட்டுகிறார். திசைகள் பேட்டியில் சேரன் தான் நடுநிலமையாளர் என்று சொல்கிறாரே தவிர அவர் நடுநிலமையாளர் அல்ல புலிகளுக்கு உண்மையான நடுநிலமையாளர்கள் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள். உண்மையான நடுநிலமையாளர்கள் புலிகளால் கொல்லப்பட்டும் கொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். நடுநிலமையாளரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட்டது போக நடுநிலமையாளர்களான ராஜன் கூலும் சிறீதரனும் புலிகளால் ஆபத்தை எதிர்நோக்கியிருக்க, வன்னிக்குள் கால்வைக்க முடியாமல் இருக்க சேரன்  மட்டும் வன்னிக்குள் போய் உயிரோடு திரும்பி வரமுடிந்தது எப்படி? (மேலும் கசிகின்ற நம்பகரமான வட்டாரங்களின் செய்திப்படி விடுதலைப் புலிகளின் ஆயுட்கால நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தியின் “தரிசனத்தில்” வன்னியில் கட்டப்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தனக்கு ஏதாவது. போட்டுத்தருமாறு கேட்டு வழிந்திருக்கிறார் சேரன்.) உண்மையில் சேரன் நடுநிலமையாளர் அல்ல. அவர் ஒரு நழுவுநிலமையாளர். பொய்யை பலமுறை சொல்வதன் மூலம் அதனை உண்மை ஆக்கலாம் என்பதே சேரனின் கணிப்பு.

தீராநதிப் பேட்டி பற்றி நாங்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்குமே பதிலளிக்காமல் அவ்வாறான ஒரு பேட்டியே இருக்கவில்லை என்று மறைக்க முயல்கிறார் சேரன். உண்மையில் சேரனால் அவற்றுக்குப் பதிலளிக்க முடியாது என்பதுபோக நாங்கள் மேலும் செய்த கடுமையான ஆராய்ச்சி, விசாரணைகளின் பின்னர் சேரன் குடும்பத்தினரின் ஊழல்கள் வெளியேவரத் தொடங்கியுள்ளன. இலங்கை அரசு தமிழர்களின் கல்வி வாய்ப்பைப் பாதிக்கிற வகையில் “தரப்படுத்தல்” சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் தன்னுடைய தமையன் கூடுதலான புள்ளிகள் எடுத்தும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முடியாமல் வெளிநாடு போனார் என்றும் தன்னுடைய தம்பி தங்கையும் மேலும் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் வெளிநாட்டுக்குப் போனார்கள் என்றும் சேரன் தீராநதிப் பேட்டியில சொல்கிறார். சேரன் இதில் சொல்லாமல் விட்டது என்னவென்றால் சேரனின் சகோதரர்கள் எவ்வாறு வெளிநாடு போனார்கள் என்பதைத்தான். சேரன் சொல்வது போல சேரனின் வெளிநாடு போன சகோதரர்கள் கூடுதலான புள்ளிகள் எடுக்கவில்லை. அவர்கள் mediocre ஆன மாணவர்களாகவே உயர்கல்வி படிக்கும்போது இருந்தார்கள். அவ்வாறு இருக்க 2 சகோதரனும் ஒரு சகோதரியும் புலமைப்பரிசில் பெற்று முன்னைய சோவியத் ஒன்றியத்துக்கு படிக்கச்சென்றது எவ்வாறு? இலங்கையில்  வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களை வழங்கத் தீர்மனிக்கிற முறையில் நீதியும் Transparency ம் இருப்பதில்லை. ஊழல், இலஞ்சம், செல்வாக்கு என்பனவே புகுந்து விளையாடும். 1971 இல் அரச உயர் அதிகாரியாகவிருந்த சேரனின் தந்தையார் மகாகவி இறந்தார். இக்காலத்தில் சுதந்திரக்கட்சி, இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியில் இருந்தது. மகாகவியின் நண்பர்களாக இருந்த சில அரச அதிகாரிகளினதும் சில இடதுசாரி மற்றும் TULF அரசியவாதிகளின் செல்வாக்கினாலுமே நியாயப்படி சேரனின் சகோதரர்களுக்கு வழங்கப்பட முடியாத புலமைப்பரிசில் (அதுவும் ஒரே குடும்பத்தில் மூவருக்கு) வழங்கப்பட்ட்டது. சேரன் குடும்பம் ஒரு மத்தியதரவர்க்கக் குடும்பம். இவர்களை விட எவ்வளவோ திறமையான மிகவும் வறிய சில தலித் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமதர்ம நாட்டுப் புலமைப் பரிசில் சேரன் குடும்பத்துக்கு மொத்த வியாபாரமாக வழங்கப்பட்டது மிகப்பெரிய அநீதி.

சேரன் சொல்வதுபோல நாங்கள் எதனையும் திரிக்கவில்லை. சேரன் மிகத்தெளிவாகவே “மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (யாழ்) [UTHR(J)] சொல்வதுபோல புலிகளை பாசிஸ்டுகள் (fascists) என்று முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய முத்திரையிடல்களுக்கு பின்னால் பலமான அரசியல் காரணங்களும் உள்ளன” என்று கூறியுள்ளார். அதாவது சேரன் புலிகள் பாசிஸ்டுகள் இல்லை என்கிறார். அதுகாலவரையும் புலிகளை மிகச்சரியாகவே கடுமையாக விமர்சித்து வந்த சேரன் இக்கட்டுரையில் புலிகளின் பக்கம் சாய்வதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்கிறார். புலிகளை கடுமையாக விமர்சிக்கிறவர் திடீரென்று புலி ஆதரவாளராக மாறமுடியாதல்லவா. அவ்விதம் திடீரென்று அவர் மாறுவாராயின் அவரைத் தெரிந்தவர்களுக்கு அவரின் சித்த சுவாதீனம் மீது சந்தேகம் ஏற்படும். படிப்படியாகத்தான் மாறமுடியும். 1999 ம் ஆண்டு  ஜூன் ஆகஸ்டு மூன்றாவது மனிதன் இதழில் “85 இன் பிற்பாடு தமது சிறப்பான ‘இயக்க விதி’ யின் பயனாக எல்லா இயக்கங்களையும் புலிகள் பலாத்காரமாக ஒழித்து மேலாதிக்கத்துக்கு வந்தபின் தேசியவிடுதலைப் போராட்டம் என்ற கருத்து பின்னுக்கு போய் தேச விடுதலை, இன விடுதலை என்று வருகிறது. அதில் வெறும் இனத்துவமும் தமிழர் அடையாளமும் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படிப்பார்க்கிற போது ஒரு உன்னதமான, நியாயமான இலட்சியங்களில் இருந்து இப்போது ஒரு வகையான பின்னடைவு இன்னும் உரத்துச் சொல்வதானால் சீரழிவே நடந்திருக்கிறது.  தமிழ் தேசியவாதம் ஒரு காலத்தில் முஸ்லிம் சிங்கள மலையக மக்களைப் பற்றிப் பேசியிருக்கிறது. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வெறும் தமிழன் என்ற உணர்ச்சியைத்தான் இப்போது மேலாட்சி பெற்றிருக்கிற தேசியவாதம் பேசுகிறது. அந்தத் தேசியவாதம் தான் யார் தமிழன்( ஆண்பால்) என்பதைத் தீர்மானிக்கிறது. வெளியில் இருந்து யார் வந்தாலும் தள்ளிவிடும். இது தேசியவாதம் இல்லை. நான் முன்பே சொல்லியதுபோல் இது ஒருவகையான பேரினவாதமும் ஆபத்தானதுக் கூட. இது ஆரோக்கியமானதல்ல. இவ்வகையான தேசியவாத்திற்கும் எனக்குமிடையே ஒரு வகையான உறவும் கிடையாது.”

என்று கூறிய சேரன் 2002, பெப்பிரவரி 17 நிகரி இதழில்

“சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் மீது ‘பயங்கரவாத’ முத்திரை குத்தப்படுவதற்கு சர்வதேச அரசியலில் தாரளமாகவே விரவியிருக்கும் நாடுகளின் சுயநலம், பூகோள அரசியல் போன்றவை மட்டுமே காரணம் அல்ல. Amnesty International, Human Rights Watch ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமை மீறல்களைப் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வந்த அறிக்கைகளும் காரணம் தான். இந்தக் காரணத்தை விடுதலைப் புலிகள் அசட்டை செய்வதோ அல்லது ஒதுக்கி விடுவதோ எமது அரசியல் நலன்களுக்கு உதவாது.” என்கிறார்.

கவனித்துப் பாருங்கள். முன்னையதில் தனக்கு எவ்வகையான உறவும் கிடையாது என்ற சேரன் பின்னையதில் “எமது” என்று கூறுவதன் மூலம் புலிகளின் தேசியவாதத்தின் பங்காளியாகிறார். மேலும் இதே நிகரி கட்டுரையில் UTHR(J) இன் தலையில் ஒரு குட்டுவைப்பதன் மூலம் தனது பகுதியளவிலான புலிச்சார்பை அறிவிக்கிறார்.

இவ்வாறாக படிப்படியாக தனது வண்ணங்களை சூழலுக்கேற்ப மாற்றி வந்த பச்சோந்தியான சேரன் தீராநதிப் (2002 செப்) பேட்டியில்

“விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் இருக்கிற மக்களின் அனுபவங்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல இயலாது. நான் அந்தப் பகுதிகளுக்குப் போய் வரவில்லை. சமூகவியலாளர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்றால் “தேர்தல்நடைபெறாமல் ஒரு இயக்கம் நீண்ட காலமாக ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்றால் பயங்கரத்தைப் பாவித்து இருக்க முடியாது” என்று சொல்கிறார்கள். அடக்குமுறை ஏதாவது ஒரு விதத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களின் ஆதரவில்லாமல் நீண்ட காலத்துக்கு ஒரு நிலப்பரப்பைத் தங்களது ஆட்சிக்குக்கீழ் வைத்து வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது சாத்தியப்படாது. வியட்னாம் உட்பட பல நாடுகளில் இத்தகைய நிலமையைப் பர்த்திருக்கிறோம். அந்த வகையில் வடக்கு கிழக்கில் புலிகளுக்குட்பட்ட பிரதேசங்களில் ஏராளமான மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றுதான் நம்புகிறேன். அதே சமயத்தில் புலிகள் சில மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று சொல்லமுடியாது. அம்மாதிரி தவறுகள் நடப்பதாக அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் அடிப்படையான ஜனநாயக, மனித உரிமைகள் சார்ந்து அரசாங்கம் அமைக்கப்படப்போகிறது என்பதில்தானிருக்கிறது எதிர்காலம். ”

என்று கூறியதன் மூலம் தான் 100% புலி வண்ணங்களைப் பெற்றதை அறிவிக்கிறார். 2006 ல் கனடா ஈழநாடு இதழில்

“தெளிவும் செறிவும் சாரமும் காரமும் பொருந்தியதாக அமைந்திருந்தது பிரபாகரன் அவர்களின் உரை. தளராத படைத்திறன், போர்வலு என்பவற்றின் மீது உறுதியாகக் கட்டப்பட்ட நம்பிக்கையும் பெருமிதமும் அவருடைய பேச்சினூடக வெளிப்பட்டன. அவருடைய கருத்துக்கள், நெறிமுறைகளோடு உடன்படாத பல சிங்கள ஆங்கில ஊடகவியலாளர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் கூட அவருடைய உரையின் தர்க்கத்தையும் பொருத்தப்பாட்டையும் சுட்டிக் காட்டி எழுதிய குறிப்புக்களும் கட்டுரைகளும் ஆங்காங்கே வெளியாயின”

என்று தலைவருக்கு சொக்குப்பொடி போட்டுப் புகழ்ந்த சேரன் தானும் தலைவருக்கு கழுவ “ரெடி” என்று அறிவித்தார். இதன் மூலம் சேரன் தான் 200% புலியாக மாறி விட்டதை அறிவித்தார். (கிட்லரின் உரையொன்றை தலைசிறந்த சிந்தனையாளரும் யூதருமான நோம் சோம்ஸ்கி அதிசிறந்ததாக இருந்ததாகப் புகழ்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது சேரன் பிரபாகரனின் உரையை புகழ்வது)

ஆனந்த சங்கரியின் கடந்தகால கூட்டணி அரசியலில் எங்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஆனந்தசங்கரி முழு இலங்கையினதும் மனச்சாட்சியின் கைதியாக  இருக்கிறார். ஆனால் சேரனோ வெட்கமின்றி “ஆனந்த சங்கரி அவர்களின் கண்மூடித்தனமான எதிர் அரசியலைப் பற்றி எனக்குத் தீவிரமான விமர்சனம் இருக்கிறது” என்று மேற்குறிப்பிட்ட அதே கட்டுரையில் சங்கரிக்கு தலையில் குட்டு வைத்து எழுதுகிறார். வன்னிப் புலிகளுக்கு தனது புதிய புலிவிசுவாசத்தில் சிறிது கூட சந்தேகம்  வரக்கூடாது என்பதற்காக புலிகளுக்குப் புரிகிற மொழியிலேயே சேரன் எழுதியதுதான் அது.

இதே சேரன் தான் காலச்சுவடு பேட்டியில் (1999) கனடாவில் இருந்து வருகிற விடுதலைப் புலிகளின் பத்திரிகையான “உலகத் தமிழரையும்” இன்னொரு புலி ஆதரவுப் பத்திரிகையான “முழக்கத்தையும்” அவற்றினுடைய குறுகிய தேசியவாத மற்றும் stereo type ஆன கட்டுரைகளுக்காக அவற்றை கடுமையாக விமர்சித்திருந்தார். இன்று அதே பத்திரிகைகளில் சேரனே (சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும்) தலைவரை பப்பாசி மரத்தில் ஏற்றுகிறமாதிரி புகழ்ந்தும் புலிப்பாசிசத்தை ஆதரித்தும் கட்டுரைகள் எழுதுகிறார்.

ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை என்றானாம். அதே போலத்தான் சேரன் தனது புலமை மோசடிகளை மறைக்க UTHR(J) மீது ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளை சகட்டு மேனிக்கு வைக்கிறார். UTHR(J) இன் உறுப்பினர்களாக ராஜன் கூலும் சிறீதரனுமே இருந்தார்கள்.  மனோரஞ்சனும் ராம் மாணிக்கலிங்கமும் UTHR(J) ன் உறுப்பினர்களாக இருக்கவில்லை. மனோரஞ்சனும் மாணிக்கலிங்கமும் கூல் முதலியவர்களின் நண்பர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான். மேற்கூறிய இருவரையும் UTHR(J) உடன் தொடுப்பதன் மூலம் அதற்கு சேறு பூசலாம் என்பது சேரனின் பரிதாபத்துக்குரிய முயற்சி. மனோரஞ்சன் மாணிக்கலிங்கம் இருவருமே நல்ல நோக்கம், நல்விசுவாசம் (Good intentions and Good faith) என்பவற்றின் அடிப்படையிலேயே சந்திரிகா அரசில்  நம்பிக்கை வைத்திருந்தார்கள். உண்மையிலேயே சந்திரிகா நம்பிக்கை ஊட்டுபவராகவே இருந்தார். சேரனே தன்னுடைய காலச்சுவடு பேட்டியில் சந்திரிகாவைப் பற்றி நன்றாகவே சொல்லியுள்ளார். பக்கச்சார்பற்ற எவருமே சந்திரிக்கா ஆட்சிக்கு வந்திருந்தபோது கூடவே கொணர்ந்த நல்ல நோக்கங்களை (Good intentions)  சந்தேகிக்க மாட்டார்கள். கொலைகாரர்களான கிட்டு, சந்தோசம் முதலியவர்களோடு ஒப்பிடுகிறபோது மனோரஞ்சனும் மாணிக்கலிங்கமும் ஒரு கொலையுமே செய்யாதவர்கள். கொலைகாரர்களான கிட்டுவோடும் சந்தோசத்தோடும் நட்பு பேணியதாகக் கூறுபவர் சேரன். கூலும் சிறீதரனும் ரஞ்சனுடனும் மாணிக்கலிங்கத்துடனும் நட்பு பேணியதில் என்ன தப்பு.

புலிகளின் குரலில், புலிகளின் வேலைத் திட்டங்களின் (Agenda) அடிப்படையில் சந்திரிகா மீது சேரன்  குற்றஞ்சாட்டுவது சரியான மதிப்பீடு அல்ல. சந்திரிகா ஊழல் நிறைந்த அரசியல் வாதியாக இருந்தும் குமார் பொன்னம்பலம் பத்திரிகையாளர் றோகண குமார போன்றவர்களின் கொலைக்கு பொறுப்பானவர்களின் மேலாளராக இருந்தது உண்மை என்றாலும் ஜெயவர்த்தனா, பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் மீது Crimes against humanity என்ற குற்றச்சாட்டை சுமத்துவதுபோல சந்திரிகாமீது மீது Crimes against humanity என்ற குற்றச்சாட்டை யாருமே சுமத்த முடியாது என்பதோடு ஒப்பீட்டு அடிப்படையில் முன்னையவர்களைவிட ஜனநாயகத்தில் சந்திரிகா அதிகம் நம்பிக்கை உடையவராக இருந்தார். ஜெயவர்த்தனா, பிரேமதாச, விக்கிரமசிங்க முதலியோர் திட்டமிட்டு தமிழ் மக்களை அழித்தவர்கள் (1983 ஜூலை படுகொலைகள்) என்பது போக ஜெயவர்த்தனாவும் பிரேமதாசவும் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்பதை அவர்களது அரசியல் வாழ்வு சொல்லும். சந்திரிகா அரசாங்கத்தின் மீது 1995 ஏப்பிரிலில் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து புலிகளால்தான் போர் தொடுக்கப்பட்டது. அதே காலப்பகுதியில்தான் சந்திரிகா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் நீலன் திருச்செல்வமும் பீரிசும் இணைந்து இந்திய மாநில சுயாட்சியை ஒத்த அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. கொடுமையான போர் ஒன்று இலங்கை அரசின் மீது தொடுக்கப்பட்டு விட்டதால் சந்திரிக்கா அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிகளைப் பற்றி சிந்திப்பதற்கே சந்தர்ப்பம் சந்திரிக்காவிற்குக் கிடைக்கவில்லை. இவ்வளவு நெருக்கடி இருந்தும் கிருசாந்தி படுகொலை, செம்மணிப்படுகொலைகள் முதலியன மீது குறைந்தபட்சமேனும் ஒரு சுயாதீனமான நீதிவிசாரணைகள் சந்திரிகா ஆட்சியின்போது நடத்தப்பட்டது. (நீதி முழுமையாக வழங்கப்படாவிட்டாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும்) ஜயவர்த்தன மற்றும் பிரேமதாச ஆட்சிகளின் போது இந்தளவுக்கு எந்தவொரு சுதந்திரமான நீதி விசாரணையுமே நடத்தப்பட்டதில்லை. மேலும் 2004 ஏப்பிரலில் கருணா புலிகளைவிட்டுப் பிரிந்தபோது சந்திரிகா நடந்து கொண்டமுறையும் (போர் நிறுத்தத்தைக் கருத்தில் கொண்டு கருணா அணியினருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி வன்னிப்புலிகள் பெரியவெள்ளி தினத்தன்று கருணா அணிமீது தாக்குதல் தொடுத்தார்கள்) தன்னுடைய ஆட்சியின் இறுதிக்காலத்தில் பலருடைய எதிர்ப்புக்கு மத்தியில் வட கிழக்கின் சுனாமி மீள்கட்டுமானப் பணியை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க முன்வந்தமையும் அவரது ஜனநாயக நடத்தைகளுக்கான உதாரணங்கள்.

UTHR(J) சந்திரிகா ஆட்சிக்கு வந்தபோது சந்திரிகா அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது என்றும் 1995 இல் யுத்தம் ஆரம்பித்த போது அதனை வழிமொழிந்து ஒரு அறிக்கையை UTHR(J) வெளியிட்டது என்றும் UTHR(J) நடுநிலமை தவறிய அமைப்பு என்றும் சேரன் சொல்வது சேரனின் திரிப்புக்கள். சேரன் புலிப்பினாமிகளின் பாணியில் UTHR(J) மீது தாக்குகிறார். UTHR(J) ஒருபோதுமே சந்திரிகா அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. UTHR(J) ஒரு மனித உரிமை அமைப்பே தவிர அரசாங்கங்களின் மீது ஆதரவு நிலைப்பாடு எடுக்கிற அரசியல் கட்சியல்ல. எப்பொதுமே சுயாதீனத்தைப்பேணுகிற அமைப்பு அது. மேலும் ஒருபோதுமே 1995 இல் ஆரம்பித்த யுத்தத்தை UTHR(J) வழிமொழியவில்லை என்பதை UTHR(J)இன் இணையத்தளத்துக்கு செல்வதன்மூலம் யாரும் கண்டுகொள்ளலாம். மறுதலையாக குறித்த யுத்தத்தில் இராணுவத்தால் மீறப்பட்ட மனித உரிமைகளை எல்லாம் விலாவாரியாக ஆவணப்படுத்தியது UTHR(J) அறிக்கைகளே.

சேரன் கிழக்கு மாகாணத்தில் நடந்த கட்டாய (குழந்தைகள்) இராணுவ ஆட்சேர்ப்பு, முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறை படுகொலைகள் என்பவற்றுக்கு கேணல் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். இதன் மூலம்  புலிகளில் இருந்து கருணா வெளியேறிய பின்னர் முழுத்தவறுகளையும் கருணாவின்மீது புலிகள் சுமத்தியதைப்போல தானும் சுமத்துகிறார்.

யூதர் எதிர்ப்பு இனவாதம் (Anti-Semitism) என்பது ஒரு மத்திய கிழக்கு கருத்துருவாக்கம் அல்ல. அது ஒரு ஐரோப்பிய கருத்துருவாக்கமாகும். அதே போலவே இலங்கையிலும் முஸ்லீம் எதிர்ப்பு இனவாதம் என்பது ஒரு யாழ்ப்பாணியக் கருத்துருவாக்கமே தவிர அது ஒரு கிழக்கு மாகாண கருத்துருவாக்கமல்ல. மூவின மக்களும் வாழ்கிற கிழக்கு மாகாணத்தில் இன சகிப்புத்தன்மை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. கிழக்கில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் குழல் புட்டும் தேங்காய்ப்பூவும் போலப் பின்னிப் பிணைந்திருந்தன. முஸ்லிம் எதிர்ப்பு இனவாதத்தை தமது பாசிச அரசியலுக்காகக் கிழக்கு தமிழர்களிடையே பரப்பியது புலிகளின் யாழ்ப்பாணத் தலைமையே. இங்கு நாங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் டெலோ மீது தாக்குதல் தொடுத்து அதன் உறுப்பினர்களைக் கொன்றபோது புலிகளின் இதே கொள்கையை கிழக்கு மாகாணத்திலும் அமுல்படுத்த கிழக்கு மாகாண புலித்தலைவரான “கடவுள்” ஒத்துழைக்கவில்லை. இதன் பின்னர் பிரபாகரன் குமரப்பாவையும் பொட்டரையும் அனுப்பியே டெலோ உறுப்பினர்களின் மீதான படுகொலைகளை ஒப்பேற்றினார். பிரபாகரன் 1987 ம் ஆண்டுவரையும் வடமாகாணத்தவர்களையே புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளாக நியமித்து கிழக்கு மாகாண புலி உறுப்பினர்களிடமும் புலிப்பாசிச மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு இனவாத அரசியல் ஊட்டப்பட்டது. கருணா பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலராக இருந்தவர். பொன்னம்மான், ராதா ஆகிய இருவரின் தலைமையின் கீழ் இராணுவப்பயிற்சி பெற்றவர். இதனைவிட கருணா மட்டக்களப்பு தளபதியாக வருவதற்கு முதல் பசீர் காக்கா, அருணா, குமரப்பா, பொட்டம்மான் ஆகிய யாழ்ப்பாண புலித்தலைவர்களின் கீழ் மட்டக்களப்பில் இயங்கியவர். இவைகள் அனைத்தும் போதுமே  17 வயதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளோடு இணைந்த உலகம் அறியாத அப்பாவி வாலிபனான கருணாவிடம் புலிப் பாஸிச வெறியைப் புகுத்துவதற்கு. இந்தப் பின்னணியிலேயே நாங்கள் கருணாவைப் புரிந்து கொள்கிறோம்.   சேரன் சொல்வது போல நாங்கள் அப்பழுக்கற்ற தூயவிடுதலைப் போராளி என்ற விம்பத்தை கருணா மீது கட்டவில்லை.

UTHR(J) க்கு தேனீ உத்தியோகபூர்வமாகவே இணைப்புக்கொடுத்துள்ளது. சேரன் குறிப்பிட்ட UTHR(J) இன் கிழக்கு மாகாண அறிக்கையை மறைக்க வேண்டிய எந்த தேவையும் தேனீக்கு இருந்ததில்லை.

சேரன் 2003 இல் யாழ்ப்பாணத்துக்குப் போய் யாழ் பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் பதவிக்கு கண் வைத்து யாழ் திருநெல்வேலிப்பகுதியைச் சுற்றிச் சுற்றி நாய் பேயாய் அலைந்தது. இதற்கு ஆதரவு தேடி யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் Manoeuvring செய்தது எல்லாம் உண்மை. யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் எல்லோருக்கும் இது தெரியுமே. சேரன் யாழ்ப்பாணத்தில் நின்ற இதே காலப்பகுதியில்தான்  EPRLF வரதரணி சுபத்திரன் உட்பட எண்ணற்ற மாற்று இயக்க காரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்கள். 1999 காலச்சுவடு பேட்டியில் சேரன் விடுதலைப் புலிகளுக்கும் தனக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடுகளின் விளைவாகவே தான் 1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது என்றும் யாழ்ப்பாணத்திலேயே தங்கி நின்ற தன்னுடைய நண்பர்களில் பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் கூறினார். நிலமை இவ்வாறு இருக்க சேரன் மட்டும் எவ்வாறு (வன்னிப் புலிகளுக்கும் சேரனுக்கும் இடையில் கள்ள ஒப்பந்தம் இலாமல்) கொல்லப்படாமல் திரும்பிவர முடிகிறது?

சேரனுக்கு கலாநிதிப் பட்டத்துக்கான புலமைப் பரிசிலைப் பெற்றுக்கொடுக்க காரணமாக (Instrumental) இருந்தவர் நீலன் திருச்செல்வம்தான். நீலன் திருச்செல்வத்தின் “அணைவோடு” தான் ஏ.ஜே. வில்சனினதும் குமாரி ஜெயவர்த்தனாவினதும் சிபார்சுக் கடிதங்களை சேரன் பெற்றார். பல வகைகளில் சேரனைவிடத் தகுதியான பலர் புலமைப்பரிசில் பெற இருந்தார்கள்.
 
1. சேரனின் முதல் B.Sc பட்டம் Honours ம் class ம் இல்லாத mediocre தரத்திலேயே இருந்தது.
2. சேரனின் இரண்டாவது M.Sc ம் Class எதுமில்லாத Mediocre பட்டம்தான்.

இந்த நிலையில் “செல்வாக்கு” இல்லாமல் நீதியான முறையில் யோர்க் பல்கலைக்கழகத்தில் சேரனால் புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டிருக்கவே முடியாது. நீலன் திருச்செல்வமும் ICESம் இலாவிடில் சேரன் ஒரு nobody. இதனைப் பல பல்கலைக்கழக அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சேரன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்திருந்த நேர்மையான விமர்சகர் என்ற விம்பமும் இப்போது வெளுத்து விட்டது.

1986 இல் டெலோ உறுப்பினர்களை புலிகள் வேட்டையாடிக் கொன்று கொண்டிருந்த போது நுPசுடுகு தங்கள் உயிரையே துச்சமாக மதித்து பெருமளவான டெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றினர். இது நடந்து சிறிது காலத்தின் பின்னர் தமிழ்நாட்டில் வரதராஜப் பெருமாளை சேரன் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பின்போது சேரன் பெருமாளிடம் கொள்ளை முதலியயவற்றைச் செய்த ரெலோ இயக்கத்துக்காக EPRLF ஏன் வக்காலத்து வாங்கி டெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றி தஞ்சமளித்தது என்று கேட்டாராம். இவற்றை வரதராஜப் பெருமாள் கண்ணோட்டம் இதழில் எழுதும் கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இதே சேரன் தான்  ‘மனித உரிமைப் போராளி’ என்ற முகமூடியை அணிந்துகொண்டு பின்னர் படம் காட்டியவர்.

1986 ம் ஆண்டு வெளிவந்து 106 நாட்கள் ஓடிய பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ ஈழத்தமிழரின் பிரச்சினையை சிறிது வெளிப்படுத்தியது. ஈழப் போராளிகளின் தமிழ்நாட்டு இருப்பிடம் ஒன்றை காட்டுகிற கட்டத்திலே சில மனிதர்கள் சித்திரவதை செய்யப்படுவது காட்டப்படுகிறது. இதனைப் பார்த்து “டென்சன்” ஆன சேரன் இக்காட்சி ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்துகிறது என்று ஈரோஸ் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட பாலம் இதழில் எழுதியிருந்தார். உண்மை என்னவென்றால் இதே காலப் பகுதியில்தான் புளட் இயக்கத்தினால் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட உட்கட்சி சித்திரவதை, கொலைகள் அம்பலமாகியிருந்தன. இதனைத்தான் பாலச்சந்தர் புன்னகை மன்னனில் வெளிப்படுத்தியிருந்தார். ஒரு வியாபார திரைக்கலைஞரே உண்மையை வெளிப்படுத்துகிறபோது சேரன் அதனை தணிக்கை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். புன்னகை மன்னன் படத்திலும் வில்லன் கமலஹாசனை “நான் ஆறடி இரண்டங்குலம், கோபுரம்” என்று மிரட்டுகிறான். சேரனும் தனது பதிலில் “மாடுமுட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” என்று நம்மை மிரட்டுகிறான். சேரன் மாடா, கோபுரமா என்பதை சமகாலமும் வரலாறும் முடிவு செய்யும்.

சேரன் இந்தப் பதிலிலும் கூசாமல் பொய்சொல்லி தன்னைப் பற்றிய பிரமைகளைக் கட்டமைக்கிறார். அதிலும் சேரனின் அண்டப்புழுகு என்னவென்றால்  தனக்கும் புலித் தளபதி கிட்டுவுக்கும் நட்பு இருந்தது என்று குறிப்பிடுவதுதான்.
கிட்டுவையும் சேரனையும் தெரிந்தவர்களுக்கு இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை என்பது தெரியும். நட்பு இருக்கவில்லை. ஆனால் சேரனுக்கு கிட்டுவில் எரிச்சல் இருந்தது. கிட்டுவைப்போல காதலோடு வீரத்தையும் அனுபவித்த பாக்கியசாலியாக தான் இல்லையே (பக்.188, உயிர் கொல்லும் வார்த்தைகள்) என்பதால் சேரனுக்கு எரிச்சல் இருந்தது.

NLFT இன் கூட்டங்களில் பெரும்பாலானவை அளவெட்டியில் சேரனின் வீடான “நிழல்” இல் தான் கூட்டப்பட்டன. NLFT தலைவரான விசுவானந்ததேவன், உருத்திரமூர்த்தி குடும்பத்தில் ஒரு குடும்ப நண்பராகவே கருதப்பட்டவர். சேரனின் தங்கையான அவ்வை NLFT இன் மகளிர் அணியில் இருந்தவர். NLFT தலைவர்களில் ஒருவரான எஸ்.கே விக்கினேஸ்வரனையே இக்காலப்பகுதியில் அவ்வை காதலித்து பின்னர் மணந்து கொண்டார். 1990 இலிருந்து வடக்கு கிழக்கில் தங்கியிருந்த NLFT இயக்க உறுப்பினர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட தப்பியோட முடிந்தவர்கள் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். சேரனும் எஸ்.கே விக்கினேஸ்வரனும் 1990 முற்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்கள். விக்கினேஸ்வரனின் மூத்த தம்பி NLFT உறுப்பினர் என்று யாழ்ப்பாணத்தில் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சேரன், எஸ்.கே.விக்கினேஸ்வரன் (இந்த விக்கினேஸ்வரன் தான் காலச்சுவட்டில், ஈழத்தின் இன்றைய உண்மை நிலவரங்களைத் திரிபுபடுத்தி புலிகளின் வேலைத் திட்டங்களுக்கிசைவாக கட்டுரைகள் எழுதி வருபவர்) ஆகியோர் 1990 க்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தால் புலிகளால் கொல்லப்பட்டிருப்பார்கள். இவ்விருவரும் 1990 இல் புலிகள் மாற்று இயக்க காரரை வேட்டையாடிய போது கொழும்புக்கு ஓடிவந்தவர்கள். இன்று இவர்கள் மனச்சாட்சியின்றி புலிகளால் கொல்லப்பட்ட தங்கள் நண்பர்களின் சடலங்களில் காலால் மிதித்து முன்னேறி தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளுக்காக வெட்கமின்றி விபச்சாரம் செய்கிறார்கள்.

சேரனும் சேரனைப் போலச் சார்ந்ததன் வண்ணமாக இயங்கும் பச்சோந்திகளுக்கும் சேரனே எழுதிய பின்வரும் கவிதை அச்சொட்டாய் பொருந்துகிறது.

                மனிதத்தை
                துப்பாக்கி முனையில்
                நடத்திச்சென்று
                புதைகுழி விளிம்பில்
                வைத்துச் சுட்டுப்
                புறங்காலால் மண்ணைத் தள்ளி
                மூடிவிட்டு வந்து
                தெருவோரச் சுவரில்
                குருதியறைந்து
                நியாயம் சொல்கிறார்கள்
                நியாயம்!

                யார் கேட்டார் உம்மிடத்தில்
                நியாயத்தை?