::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

உலகக் கிண்ண லீக் சுற்றுக்கான தலைசிறந்த நடுவர் பட்டியலில் குமார தர்மசேனா !

இந்தியாவில் நடைபெறும் ஆடவர் உலகக் கிண்ண லீக் சுற்றுக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் சபை ( ஐ.சி.சி) அறிவித்துள்ள அதேவேளை இலங்கையரான அனுபவம் மிக்க ஒருவர் பட்டியலுக்குள் இடம்பித்துள்ளார்.

ஐசிசி நடுவர்களின் எமிரேட்ஸ் எலைட் குழுவின் அனைத்து 12 பேர் மற்றும் ஐசிசி வளர்ந்து வரும் நடுவர் குழுவின் நான்கு உறுப்பினர்கள் உட்பட 16 பேர் நடுவர்களாக இருப்பார்கள்.

லோட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியமிக்கப்பட்ட நான்கு நடுவர்களில் குமார தர்மசேனா, எராஸ்மஸ் , டக்கர் ஆகிய மூன்று பேர் அனுபவம் வாய்ந்த பட்டியலில் உள்ளனர் – இந்த ஆண்டு மார்ச் மாதம் எலைட் பேனலில் இருந்து விலகிய அலீம் தார் மட்டும் இல்லை.

கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிறிஸ் கஃபனே, மைக்கேல் கோஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, நிதின் மேனன், அஹ்சன் ராசா, பால் ரீஃபெல், ஷர்ஃபுத்தூலா இப்னே ஷெய்ட், ராட் டக்கர், அலெக்ஸ் வில்சன், ஜோல் வில்சன், ஜோல் வால்சன் மற்றும் ஜோயல் வார்ஃப்,ஜெஃப் குரோவ், ஆண்டி பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் ,ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் நடுவர்களாக மட்டும் நடுவர்களாக பணியாற்றுவார்கள்.

கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் !

ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

 

விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவின் சரணடைந்த நிலையில் அதன் அதிகாரிகளால் இன்று (06) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

அதன் பின்னர், சசித்ர சேனாநாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து புதிய சாதனை !

சர்வதேச கிரிக்கட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் துடுப்பாட்ட வீராங்கனை பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.

 

6 இடங்கள் முன்னேறி அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

 

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சமரி அத்தபத்து இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

 

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் 83 பந்துகளில் 108 ஓட்டங்களை குவித்தார்.

 

ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சமரி அத்தபத்து 80 பந்துகளில் 140 ஓட்டங்களை விரைவாக குவித்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு இன்னிங்சிலும் அவர் ஆட்டமிழக்காமல் ஆடியமை சிறப்பம்சமாகும்.

கிரிக்கட் தரவரிசையில் இலங்கை வீராங்கனை ஒருவர் முதலிடத்தை அடைவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனானது அவுஸ்திரேலியா  அணி !

உலக டெஸ்ட் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா  அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணியை பணித்திருந்தது.

அந்தவகையில், தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

173 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்பின்னர், 443 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா அணி போட்டியின் இறுதி நாளான இன்று ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 49 ஓட்டங்களையும், ரஹானே 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் நாதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், ஸ்கொட் போலன்ட் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டது.

முதலாவது உலக டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியிருந்தது.

இரண்டு தடவைகளும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வந்து உலகக்கிண்ணத்தை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊக்கமருந்து குற்றச்சாட்டு – இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனைக்கு இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை !

ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனைவிதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி உட்பட பல போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதநிலானி ரத்நாயக்க, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண !

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு – இலங்கை சர்வதேச ரக்பி அணியிலிருந்து இடைநிறுத்தம் !

இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பன உலக ரக்பி விதிகளை மீறும் நிலையில், உலக ரக்பி பேரவை, இலங்கை ரக்பியை உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியுள்ளது.

உலக ரக்பி பேரவை மற்றும் ஆசிய ரக்பி, சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் என்பன இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளதாக சர்வதேச ரக்பி பேரவை தெரிவித்துள்ளது.

நிர்வாக சிக்கல்களை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே உடனடி முன்னுரிமையாகும்.

எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியும் என ரக்பி பேரவை குறிப்பிட்டுள்ளது.

உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி ஆகியன அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து அவசரமாக செயற்பட்டு தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையுடன் கூட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தை அமைக்கும் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.

இதே நேரம் இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அண்மையில் ஐ.சி.சி அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக 2023. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.

“6 போட்டிகளில் 50 விக்கெட்டுகள்” – பிரபாத் ஜயசூரிய புதிய சாதனை !

குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய உலகின் முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பிரபாத் ஜயசூரிய இன்று தனதாக்கியுள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்று  வரும் போட்டியில் போல் ஸ்டேர்லினை ஆட்டமிழக்கச் செய்தபோது  தனது 50 ஆவது விக்கெட்டினை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையையும் இவர் புரிந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை சேர்ந்த தோமஸ் டர்னர் 06 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தனதாக்கியிருந்தார்.

எனினும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிரபாத் ஜயசூரிய தனதாக்கிக்கொண்டுள்ளார்.

அயர்லாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை !

சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் நான்கு வீரர்கள் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி மூன்றாவது நாளான இன்று 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இதில், இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 52 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

448 ஓட்டங்கள் அயர்லாந்து அணிக்கு மேலதிகமாக தேவைப்பட்ட நிலையில், ஃப்ளோ வன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 42 ஓட்டங்களை அணிசார்பில் அதிகபடியாக பெற்றார்.

பந்துவீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.

இந்தநிலையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.

வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் – குமார் சங்கக்கார நம்பிக்கை !

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இலங்கையின் இளம் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் அளித்த ஆதரவிற்காக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார பாராட்டு தெரிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் லைக்காவின் ஜப்னா கிங்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்த், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளர்களாக உள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து விஜயகாந்த் வியாஸ்காந்த், விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.

இளம் கிரிக்கெட் வீரரான விஜஸ்காந்த் சிறப்பாக பந்துவீசியதாகவும், அவர் பல விடயங்களை இதன்போது கற்றுக்கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் என தான் நம்புவதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்கார செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.