கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

முடிவுக்கு வருகிறது டிவில்லியர்சின் 17 வருட கிரிக்கெட் வாழ்க்கை !

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி.வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏ.பி.டி.யின் இந்த அறிவிப்பு மூலம் அவரது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது.

அவர் தென்னாபிரிக்க அணிக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலிய அணித்தலைவர் மீது பாலியர் புகார் – பதவி துறந்தார் டிம்பெய்ன் !

2017 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் பதவி பறிக்கப்பட்டு டிம் பெயினிடம் வழங்கப்பட்டது. அப்போது இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் மற்றும் விக்கெட் கீப்பராக டிம் பெயின் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும்  ஒரு முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் புகாரில் சிக்கி தனது கேப்டன் பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.
சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக டிம் பெயின் மீது பாலியல் புகார் எழுந்தது. இந்த நிலையில் இன்று காலை தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக  டிம் பெயின் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் டிம் பெயின் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
இது குறித்து டிம் பெயின் கூறியதாவது :
ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அப்போதைய பெண் சக ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். இந்த தனிப்பட்ட உரைப் பரிமாற்றம் பொது வெளியில்  வரப் போகிறது என்பதை நான் சமீபத்தில் அறிந்தேன்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பதற்கான தரத்தை 2017 ஆம் ஆண்டு நான் செய்த அந்த செயல்கள் பாதிக்கின்றன.
எனது மனைவிக்கும், எனது குடும்பத்தினருக்கும், மற்ற தரப்பினருக்கும் நான் ஏற்படுத்திய காயம் மற்றும் வலிக்காக ஆழ்ந்த வருந்துகிறேன். ஏதேனும் சேதம் ஏற்பட்டால் வருந்துகிறேன். இது எங்கள் விளையாட்டின் நற்பெயரைக் கெடுக்கும். மேலும் நான் தலைவர் பதவியில் இருந்து விலகுவது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன்.
ஆஷஸ் தொடருக்கு முன்னால் அணிக்கு விரும்பத்தகாத இடையூறாக மாறுவதை நான் விரும்பவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எனது பங்கை நான் விரும்பி செய்துள்ளேன். ஆஸ்திரேலிய  டெஸ்ட் அணியை வழிநடத்தியது எனது விளையாட்டு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
எனது அணியினரின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நாங்கள் ஒன்றாகச் சாதித்ததில் பெருமைப்படுகிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உறுதியான உறுப்பினராக எப்போதும்  நான் இருப்பேன். அடுத்து வரும் ஆஷஸ் சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் .
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

இக்கட்டுரைத் தொடரை எழுதுவது தொடர்பாக சில மாதங்களாகவே எனக்குள் போராடி, ஒரு முடிவுக்கு வந்து இதனை எழுத ஆரம்பிக்கின்றேன். அனுவம் அறிவு. சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்துகொள்வதனூடாக, அதனைப் புரிந்துகொள்வதனூடாக, சிலருடைய வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.

._._._._._.

மேற்கத்தைய ஜாஸ் இசையில் ஆர்வம் உள்ள பலரும் அமி வைன்ஹவுசை (படம்) அறிந்திருக்க முடியும். 1983 இல் இங்கிலாந்தில் பிறந்து 12 வயதிலேயே இசைத்துறையில் நுழைந்து 19 வயதில் தன் பெயரை மேற்கத்தைய இசையுலகை அறிய வைத்தவள். ‘தன்னுடைய இசையைக் கேட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் மக்கள் தங்கள் சோகத்தை மறக்க வேண்டும்’ என்று விரும்பியவள். ஆனால் 19வது வயதிலேயே மது, போதை, கூத்தும் கும்மாளமும் ஆனது அவள் வாழ்க்கை. புகழின் உச்சியில் இருந்த போதே அவள் வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தால். 20,000 ரசிகர்களுக்கு முன்னாள் எந்த நாட்டில் நிற்கின்றோம் என்பதையும் மறந்து பாடலின் சொற்களையும் மறந்து நிறைபோதையில் நின்றாள். யூலை 22, 2011 அவளுடைய மருத்துவருக்கு போன் செய்து “நான் சாக விரும்பவில்லை” என்றவள் அடுத்த 24 மணிநேரத்தில் யூலை 23, 2011இல் அதீத போதை விசமாக மரணித்தாள். தனியாகப்படுத்து இருந்த அவளுடைய கட்டிலில் காலியான வொட்காப் போத்தலும் கிடந்தது.

._._._._._.

அப்போது லண்டனில் பொறிபறக்கின்ற அரசியல் செய்தவர்களில் இவனும் ஒருவன். இந்துவின் மைந்தன். புலம்பெயர் அரசியில் கூட்டங்கள், நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள் என்று அறியப்பட்ட ஒருவன். ஒரு காலத்தில் இவனுக்கென்று ஒரு பெரும் குடும்ப வட்டம், ஊர் வட்டம், நட்பு வட்டம், பாடசாலை வட்டம், அரசியல் வட்டம், நாடக வட்டம் எல்லாம் இருந்தது.

எனக்கும் அவனில் கணிசமான மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவனை 1997 முதல் எனக்குத் தெரியும். நானும் அவனோடு அரசியலில் பயணித்துள்ளேன். நல்ல நண்பன். அவனது வீட்டிற்கு வெளியே யாருக்கும் எந்த தீங்கும் செய்ததாக நான் அறியவில்லை. என் பிளைகளுக்கும் சமைத்து சாப்பாடு தந்துவிடுகின்ற நல்ல மனிதன்.

இந்த கொரோனா பரவலுக்கு முன்னதாக 2019 பிற்பகுதியில் ஏதோ வீழ்ந்து மரணத்தின் வாயில்வரை சென்று மூன்று மாதங்களிற்கு மேலாக சிகிச்சை பெற்று மனைவியின் துணையால் மீண்டு வந்தான். அப்போது அவனை மருத்துவமனை சென்று பார்த்த போது அவனிருந்த கோலத்தைப் பார்த்து நான் மயக்கமாகிவிட்டேன்.

2020இல் ஒரு நாள் போன் அடித்து அழுதான். அப்போது தான் அவன் குடிப்பான் என்பதே எனக்குத் தெரியும். அவன் குடிக்கு அடிமையானவன் என்பது 2021இல் தான் தெரியும். அதற்குப் பிறகு நான் அறிந்தவை எதுவும் ஆரோக்கியமானவையல்ல. அவன் முன்னர் வீழ்ந்தது கூட விபத்து அல்ல. போதையால் வீழ்ந்து எழும்பியது என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.

கடந்த வாரமும் பார்த்தேன். எழுந்து நடக்கவே திரணியில்லாமல் நின்றான். அவன் அறையில் இருந்து வரும் மணம் சற்று கனதியாக இருந்தது. அவன் பெரிதாக உணவருந்தியதாக தெரியவில்லை. ஆனால் வயிறு சற்று வீங்கி இருந்தது. கட்டிலருகில் ஒரு போத்தல். ஜக் டானியல் அரைப் போத்தல் குடித்து முடித்த நிலையில் கிடந்தது. அவனுடைய கோலத்தைப் பார்த்து எனக்கு பேசுவதற்கோ திட்டுவதற்கோ மனம்வரவில்லை. அன்று காலையும் வெளியே போய் ஒரு போத்தல் ஜக் டானியல் 25 முதல் 30 பவுண் வரை வரும், வாங்கி வந்துள்ளான்.

“எமேர்ஜன்சிக்கு அடித்தியா?” என்று கேட்டால் நீண்ட இடைவெளிக்குப் பின் “அவங்கள் வர மாட்டாங்கள்” என்று புறுபுறுத்தான்.

“நான் அம்புலன்ஸ்க்கு அடிக்கிறன். நீ முதலில் உடுப்பை போடு” என்று உடம்பில் ஒட்டுத் துணியுமின்றி நின்றவனிடம் சொல்லிவிட்டு எமேர்ஜனசிக்கு போன் பண்ணினேன்.

வழமையான கேள்விகள். “சுவாசிக்கின்றாரா? வெப்பநிலை இருக்கின்றதா? இரத்தப்பெருக்கா?” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஆனால் அவனால் உடுப்பைக் கூட போட முடியவில்லை. உடுப்பைப் போட உதவி செய்து கட்டிலில் கிடத்தினேன்.

சிறிது நேரத்தில் முதலில் காரில் ஒரு பராமெடிக் வந்து உடலைச் செக் பண்ணினான். நல்ல காலத்திற்கு கோவிட் என்ற படியால் முகக்கவசம் கையுறை எல்லாம் அணிந்திருந்ததால் அந்த அறையின் மணம் அவருக்கு தெரிந்திராது.

வந்த பராமெடிக் மேலும் சில விசயங்களைக் கேட்டார்: “இரத்தம் சிவப்பாக போகிறதா கருப்பாக இருக்கா? மலம் என்ன நிறத்தில் உள்ளது? குறிப்பாக கருப்பாக தார் நிறத்தில் உள்ளதா?” “வாந்தியோடு சிவப்பாக வருகின்றது. மலம் தார் கருப்பில் இருந்தது” என்று சொன்னேன்.

இதை நானும் ஓரளவு கேட்டறிந்து இருந்தேன். உடம்பினுள் குருதிப் பெருக்கு இருந்தால் அது கருப்பாகி மலத்தோடு வெளியேறும் என்று. ஏற்கனவே ஈரலில் பிரச்சினை. உடம்பின் வடிகட்டல் செயல்முறைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு பலவீனப்பட்டு இருப்பதால் வயிறும் வீங்கியிருக்க வேண்டும். பரா மெடிக்கிற்கு மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. மேலும் நீரிழிவு நோயாளியுமான அவன் வாந்தி எடுப்பதும் சிக்கலானது என பராமெடிக் கூறி உடனடியாக இவரை மருத்துவமனைக்கு இட்டுச்செல்ல அம்புலன்ஸிற்கு அழைப்பு விட சில நிமிடங்களிலேயே அம்புலன்ஸ்ம் வந்து சேர்ந்தது. ஒரு ஆணும் இரு பெண்களுமாக மூவர் வந்திறங்கினர்.

எனக்கோ ஒரு வகையில் மக்கள் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்கின்றோம் என்ற குற்ற உணர்வு. வந்தவர்களிடம் சொன்னேன்: “என்னை மனித்துக்கொள்ளுங்கள். இவர் ஒரு பெரும் குடிமகன். இவரைச் சுற்றி இருந்த எல்லோருமே இவருடைய இந்தப் பழக்கத்தினால், இவரால் பாதிக்கப்பட்டு கைவிட்டுச் சென்றுவிட்டனர். இனி இவரை திருத்தலாம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் உங்களை அழைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை. கடந்த மாதமும் குடியை மறப்பதற்கான சிகிச்சையை குழப்பிவிட்டு வந்துவிட்டார்”, என்று புலம்பித் தள்ளினேன்.

அந்த பராமெடிக் மிக நிதானமாகவே, “அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் எப்போது தேவையானாலும் எங்களை அழையுங்கள். அதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோம்”, என்று சொல்லிய படியே “எத்தனை நாட்கள் மாதங்கள் வருடங்கள் குடிக்கின்றார்” என்று கேட்டார். “மூன்று தசாப்தங்களாகக் குடிக்கின்றார்” என்றேன். “அப்படியானால் நீங்கள் எங்களை அழைப்பது இது கடைசித் தடவையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு சில வேளை எங்களால் இவரைக் காப்பாற்றி அனுப்ப முடியும். அவர் திருப்பியும் குடிப்பார். நீங்களும் திருப்பி எங்களுக்கு போன் பண்ணுவீர்கள். அவராக திருந்தினாலேயொழிய வேறேதும் வழியில்லை”. என்றார் அப்பரா மெடிக். “அரசு ஏன் பலாத்காரமாக இவர்களுக்கு குடியை மறக்கும் சிகிச்சையைச் செய்யக் கூடாது?” என்று என் ஆதங்கத்தை கேட்டேன். புன்சிரிப்பினூடாக அவர்கள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டு, மிக அன்போடும் கனிவோடும் அவனை அழைத்துச் சென்றனர். அவன் சிலோமோசனிலும் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வீட்டுக்கு முன் நின்ற அம்புலன்ஸை அடைய பத்து நிமிடங்கள் எடுத்தது.

அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று நவம்பர் 18, 2021 ஒரு வாரமாகிவிட்டது. இன்று அவனுடைய வாழ்க்கை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்று கேள்விக்குறியாகி நிற்கின்றது. இன்று அவனைச் சுற்றி எந்த வட்டமும் கிடையாது. கடமைக்காக கட்டியவள் மட்டும் சென்று பார்த்து வருகின்றாள். இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

உளவியல் எடுகோளின்படி ஒன்பது பேரில் எட்டுப் பேர் வாழ்வா சாவா என்று மரணத்தின் விளிம்பில் நிற்கின்ற போதும் நிதானித்து, தீர்க்கமாக முடிவெடுப்பதில்லை. அசட்டுத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய நிலையை உணர்ந்துகொள்ள முடியாமல் தான் முடிவுகளை எடுக்கின்றனர். நாம் இயலுமானவர்களாக இருக்கின்ற போது எதிர்காலம் பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல், எஞ்சி இருக்கின்ற காலமும் இவ்வாறே இருந்துவிடலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் மிகப் பாரதூரமாக அமைந்துவிடுகின்றது.

கற்றறியும் வன்அறிவிலும் (hard skill) எமது இயல்புசார்ந்த மென்அறிவு (soft skill) மிக முக்கியமானது. தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய (ability to change) என்ற மென் அறிவு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. ஆனால் கணிசமான மனிதர்கள் மத்தியில் இது காணப்படுவதில்லை. அவர்கள் மிகத் திறமையானவர்களாக மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்த போதும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய இந்த மென்அறிவைக் கொண்டிராதவர்கள் ஒரு கட்டத்தில் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது.

மாற்றம் ஒன்றைத்தவிர எதுவுமே நிரந்தரமில்லை. அந்த அடிப்படையில் மாற்றங்களை உள்வாங்கி எம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. மனித நடத்தை கொள்கையாளர்களின் படி அறிவு என்பதே நாங்கள் எங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்வது தான். நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களானால் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டுள்ள புறச்சூழலில் வாழ்வதற்கான தகமையை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.

அவனும் அரசியல் பேசினான், சமூக விடுதலை பேசினான், பெண் விடுதலை பேசினான், முற்போக்கு பேசினான். எங்கும் எப்போதும் தன்னையும் ஒரு புள்ளியாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது எல்லாமே அவன் தன்னை மறைக்க போர்த்திக்கொண்ட போர்வைகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவன் பேசிய அரசியலுக்கும் அவன் வீட்டினுள் நடந்து கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு தான் எம்மத்தியில் பலர் உலாவருகின்றனர்.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வந்தோம்” என்று ஒருத்தி தன் சினேகிதியோடு குமுறி அழுதாள். ஐந்து மாதக் கர்பிணிப் பெண்ணாக தனது இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு; போதைக்கு அடிமையான கணவன் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் கட்டிலில் மலம்சலம் கழித்துக் கிடக்க, குழந்தையையும் சுமந்தபடி அதனைத் துப்பரவு செய்வது தான் அவளின் நாளாந்த கடமைகளில் ஒன்று. வயிற்றில் சுமந்த குழந்தையை அவள் பெற்றொடுத்த போது அவன் உயிருடன் இல்லை.

இவைகள் எதுவுமே கற்பனைகள் அல்ல. எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் சக மாந்தர்களின் இதயத்தை கனக்க வைக்கும் வாழ்க்கைப் பதிவுகள். உண்மைகளைப் புறக்கணித்து வாழ முடியாது. எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் தேட வேண்டும்.

(இன்னும் வரும்.)

ஐ.சி.சியின் மிகவும் மதிப்புமிக்க டி20 அணி விபரம் வெளியானது – இரண்டு இலங்கை வீரர்களுக்கு கிடைத்த கௌரவம் !

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த முறை டி20 சாம்பியனாக ஆஸ்திரேலிய அணி மகுடம் சூடியது. நியூசிலாந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சங்கம் சார்பில், மிகவும் மதிப்புமிக்க டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் மட்டுமே  இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இந்திய வீரர்கள் மேற்கு இந்தியத்தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.சி.சியின் மிகவும் மதிப்புமிக்க டி20 அணியின் வீரர்கள் விவரம் வருமாறு,
1.டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா)
2.ஜோஸ் பட்லர்-விக்கெட்கீப்பர்(இங்கிலாந்து)
3.பாபர் ஆசம்-கேப்டன்(பாகிஸ்தான்)
4.சரித் அசலங்கா(இலங்கை)
5.ஏடன் மார்க்ரம்(தென் ஆப்பிரிக்கா)
6.மொயின் அலி(இங்கிலாந்து)
7.வணின்டு ஹசரங்கா(இலங்கை)
8.ஆடம் ஸாம்பா(ஆஸ்திரேலியா)
9.ஜோஸ் ஹாசில்வுட்(ஆஸ்திரேலியா)
10.ட்ரெண்ட் பவுல்ட்(நியூசிலாந்து)
11.ஆன்ரிச் நார்ட்ஜே(தென் ஆப்பிரிக்கா)
12.சஹீன் அப்ரிடி(பாகிஸ்தான்)

இலங்கை பிரீமியர் லீக் வீரர்கள் தெரிவு தொடர்பில் மஹேல ஜெயவர்த்தன அதிருப்தி !

எல்.பி.எல் இற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்ட முறை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குசல் ஜனித் பெரேரா, சந்திமல், மத்தியுஸ், தனஞ்சய டிசில்வா போன்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே மஹேல தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்

எல்.பி.எல் 2021 இற்கு மிகவும் சுவாரசியமான தெரிவுகளும் தெரிவின்மைகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு அடி முன்னோக்கி சென்ற பின்னர் ஐந்து அடி பின்னோக்கி சென்றால் நாடு முன்னேற்றம் காணமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது உண்மையான திறமையை வளர்த்தெடுப்பதற்கான ஒரு களம் என்பதை இலங்கை கிரிக்கெட் சபை மறக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதியுயர் விருது பெறுவுள்ள இன்னுமொரு இலங்கை வீரர் !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென்னாப்பிரிக்காவின் ஷோன் பொலோக் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஹோல் ஒஃப் ஃபேம்க்கு தெரிவாகியுள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த பட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல ஜயவர்தன பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பங்காற்றிய சிறந்த வீரர்களுக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

After Kumar Sangakkara and Aravinda de Silva, Mahela Jayawardene questioned in Sri Lanka World Cup 2011 probe - Sports News

இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் 09 மாதக்குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது !

டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம்  தோல்வியடைந்தது.  இரண்டாவது ஆட்டத்தில்  நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.  இந்தியா அணி தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது.  இதுகுறித்து, இந்திய வீரர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில்  பலர் விமர்சனம் செய்து வந்தனர்.  இந்த விமர்சனங்களை கண்டித்து தலைவர் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில்  நபர் ஒருவர் கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து, தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையமும் இந்த மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தன. பின்னர், சம்பவம் குறித்து விசாரணை குறித்து நடத்தப்பட்டு வந்தது.
மேலும்.  மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர்.  இதனைத்தொடர்ந்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் இறங்கினர்.  விசாரணையில், தெலுங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த அகுபதினி ராம் நாகேஷ் (23) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.  மேற்கொண்ட விசாரணையில்,  வாலிபர் நாகேஷ்  சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  பணியாற்றி  வந்துள்ளார்.  தேடப்பட்ட நிலையில், மும்பை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.
மேலும், கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நாகேஷ் தனது ட்விட்டர் பெயரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளதைக் கண்டுபிடித்த போலீசார், வாலிபர் மீது ஐபிசி பிரிவு 374 (ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 மற்றும் 67 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் உலககிண்ண கனவை தகர்த்தார் டேரில் மிட்செல் – நியூசிலாந்து த்ரில் வெற்றி !

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் அடித்தது. தாவித் மாலன் 30 பந்தில் 41 ஓட்டங்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ஓட்டங்கள் சேர்த்தனர்.
3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர், 167 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்ட்டின் கப்தில் 3-வது பந்தில் வெளியேறினார். அடுத்த வந்த  கேன் வில்லியம்சன் 11 பந்துகளை சந்தித்து 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.
இதனால் நியூசிலாந்து 2.4 ஓவரில் 13 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன், டேவன் கான்வே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.
இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி நெருக்கடிக்குள்ளானது. இந்த ஜோடி 13.4 ஓவரில் 95 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. டேவன் கான்வே 38 பந்தில் 46 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுதது வந்த கிளென் பிலிப்ஸ் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 57 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதனால் இங்கிலாந்து வெற்றிபெறும் நிலை இருந்தது.
17-வது ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் ஜேம்ஸ் நீஷம் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 23 ஓட்டங்கள் கிடைத்தது. ஆகவே, ஒரே ஓவரில் ஆட்டம் நியூசிலாந்து கைக்குள் வந்தது.
கடைசி 3 ஓவரில் 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை அடில் ரஷித் வீசினார். இந்த ஓவரில் நீஷம் ஒரு சிக்ஸ் விளாச, மிட்செல் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இருந்தாலும் கடைசி பந்தில் ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ஓட்டங்கள் விளாசினார்.
டேரில் மிட்செல் அதிரடி ஆட்டம் - நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி!
கடைசி 2 ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய இந்த ஓவரில் டேரில் மிட்செல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டேரில் மிட்செல் 47 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

“கோலி ஆக்ரோஷமான வீரர். அவருடைய தலைமை இந்தியாவுக்கு அவசியம்.” – ஷேவாக் வலியுறுத்தல் !

இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) தலைவராக விராட் கோலி பணியாற்றி வந்தார்.தலைமை பொறுப்பு சுமையால் தனது துடுப்பாட்டத் திறன் பாதிக்கப்படுவதாக அவர் கருதினார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து மட்டும் அவர் விலகி உள்ளார்.

தற்போது முடிந்த 20 ஓவர் உலக கோப்பையோடு அவர் தலைவர் பதவியை துறந்தார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி தொடர்ந்து தலைவர்  பதவியில் நீடிப்பார்.

20 ஓவர் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதால் விராட் கோலியின் தலைமை பதவி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தலைமை பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் டெஸ்ட், ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தலைமை பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவரது முடிவை பொறுத்தது. அணியில் ஒரு வீரராக விளையாட கோலி விரும்பினாலும், அது அவரின் முடிவுதான்.

விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளது. தலைமை பதவியில் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். ஆக்ரோ‌ஷமாக இருந்து அணியை வழி நடத்தினார்.

ஐ.சி.சி. போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இருந்தது குறித்தும் இந்திய அணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்திய அணி கடைசியாக 2013 ஐ.சி.சி. போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன்பின் 8 ஆண்டுகளாக எதையும் வெல்லவில்லை. இதுகுறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்.

இரு நாடுகளிடையே போட்டிகளில் வென்றாலும், உலக அளவிலான போட்டியை வெல்லும்போதுதான் மக்கள் நினைவு வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் கடினமான இந்த கால கட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் சகலதுறைவீரர் ட்வெயின் பிராவோ !

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர் ட்வெயின் பிராவோ தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.

அவர் இதுவரை நடந்த ஏழு 20 உலக கோப்பை தொடரிலும் விளையாடி உள்ளார். இதில் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

38 வயதான பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டி, 164 ஒருநாள் போட்டி, 90 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து பிராவோ கூறியதாவது:-

ஓய்வு பெற நேரம் வந்து விட்டது என நான் நினைக்கிறேன். நான் கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை பெற்றுள்ளேன். 18 ஆண்டுகளாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடி இருக்கிறேன்.

இதில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் கரீபியன் மக்களையும், அந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தியதில் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது