March

March

பாதுகாப்பு வலயத்துக்கு 1200 மெட்ரிக் தொன் உணவூப் பொருட்கள் – நாளை அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு!

green-ocean.jpgபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 1200 மெட்ரிக் தொன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நாளை ஏப்ரல் 01 திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படையத் தளபதிகள் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க இப்பொருட்களை பாதுகாப்பு வலயத்துக்கு அனுப்பி வைக்க ஜனாதிபதி பணிப்பரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் மேற்பாவையில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், இலங்கைக் கடற்படை உயர் அதிகாரிகள், திருகோணமலை அரச அதிபர், மற்றும் சர்வதேச செஞ்சிலுவை அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன்படி அத்தியாவசிய சேவைகள் ஆனைணாயர் நாயகத்தின் ஏற்பாட்டில் சிட்டி ஒவ் டப்ளின்| என்ற கப்பல் மூலம் 1200 மெட்ரிக் தொன் உணவவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் நாளை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசிää பருப்பு, சீனி, மரக்கறி எண்ணெய், கோதுமை மா, குழந்தைப் பாலுணவு, சரக்குத்தூள், சோயா,வெள்ளைப்பூடு, தேயிலை,  மரக்கறி வகைகள் மற்றும் சுகாதார உபகரணங்களும் சுகாதரா அமைச்சினால் வழங்கப்பட்ட 55 வகையான மருந்து வகைகளும் இன்று புறப்படும் கப்பலில் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

அத்துடன் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள பொருட்களும் இதில் அனுப்பிவைக்கப்படும். படுக்கை விரிப்புக்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள்,  நுளம்பு வலைகள்,  சமையலறைப் பயன்பாட்டுப் பொருட்கள்,  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள்,  துவாய்கள் மற்றும் சவர்க்காரம் என்பன இதில் அடங்கும்.

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் மேலும் ஒரு தொகை உணவுப் பொருட்களை இதே கப்பலில் மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

4பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் மீது வழக்கு

vijayakanth1.jpgசிவகங்கை மக்களவை  தொகுதியில் தேமுதிக, தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இத்தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுவதற்காக சில இடங்களில் போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

ஆனால் அவர் அனுமதி வழங்கப்படாத இடங்களான மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்ட், திருப்புவனத்தில் பிள்ளையார் கோவில், திருப்பாச்சேத்தி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் திறந்த வேனில் இருந்தவாறு பிரச்சாரம் செய்தார். அவரது வேனுடன் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதற்காக மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் போலீசாரால் விஜயகாந்த் மீது 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 180 (அனுமதியின்றி பேசுதல்), 188(தேர்தல் அதிகாரி உத்தரவை மீறுதல்), 71ஏ- போலீஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தியை சுட்டவர் தேர்தலில் போட்டியிடுகிறார்!

கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ராஜீவ்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
 
பாதுகாப்பு படையினர் கரம்ஜித்சிங் சுனத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக கரம்ஜித்சிங் சுனம் கூறினார். இந்த கொலை முயற்சி வழக்கில் சுனத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2000-ம் ஆண்டு மே மாதம் விடுதலையான அவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வக்கீலாக தொழில் செய்து வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பாட்டியாலா தொகுதியில் நிற்க ஏற்பாடு செய்து வருகிறார்.

குடும்பச் சண்டை-அமெரிக்காவில் 6 தமிழர்கள் சுட்டுக் கொலை

shootout-home.jpgநீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (42). யாஹூ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இவர் பணியாற்றியுள்ளார். மனைவி ஆபா (34) மற்றும் அகில் என்ற 11 வயது மகன், நேஹா என்ற 4 வயது மகளுடன் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வந்தார் தேவராஜன்.

ஆபாவின் சகோதரர் அசோகன் (35). இவரது மனைவி சுசித்ரா (25). இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. அசோகனும் என்ஜீனியர். அசோகன் குடும்பத்தினர் இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக அசோகனுக்கும், தேவராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந் நிலையில், புதிய பிளாட் வாங்கினார் தேவராஜன். இதற்கு அண்ணன் குடும்பத்தை அழைத்திருந்தார் ஆபா. இதற்காக அசோகன் தனது மனைவி, மகளுடன் சான்டா கிளாரா வந்திருந்தார்.

நேற்று இரவு நடந்த விருந்தின்போது திடீரென தேவராஜனுக்கும், அசோகனுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கைத் துப்பாக்கியை எடுத்து அசோகன் குடும்பத்தினரை சரமாரியாக சுட்டுத் தள்ளினார் தேவராஜன்.

இதில் அசோகன், அவரது மனைவி சுசித்ரா மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து விழுந்தனர். இதைப் பார்த்து ஆபா ஓடி வந்து தடுக்க முயன்றார்.அப்போது ஆபா, தனது இரு மகள்கள் ஆகியோரையும் சுட்டார் தேவராஜன். இதில் அவர்களும் படுகாயமடைந்தனர். பின்னர் தேவராஜன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரத்தம் கொட்டிய நிலையி்ல் ஆபா வீட்டுக்கு வெளியே வந்து உதவி கோர முயன்றார். ஆனால் முடியாமல் அப்படியே விழுந்து விட்டார். படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் தேவராஜன், சுசித்ரா, அசோகன், நேஹா, அகில் ஆகியோர் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்தனர். கைக்குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அக்குழந்தைக்கு டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர். ஆனால் அது சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தி்ல் மிதந்த ஆபா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சிறுமி வர்ஷா கொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் இருவர் இன்று சுட்டுக்கொலை

Regie_Varsa
திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் சாட்சியமொன்றிற்காக அழைத்துச் செல்லும் போது பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் இடையில்  அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்கின்  இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று கொலையுண்டவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்றுடன் சந்தேக நபர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேளரத்தில் புலிகள் ஊடுருவல்? பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து கேரள மாநிலத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொச்சிக்கு அருகே உள்ள தைக்கல் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று சீருடை அணிந்த 15க்கும் மேற்பட்டோர் படகுகளில் வந்திறங்கியதாக மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முறியடிப்பு : அமைச்சர் மஹிந்த சமரசிங்க

mahinda-samara.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு வானிலை அவதானிப்பு மையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்ககையில், “இலங்கையின் உண்மையான நிலவரம் குறித்தும், அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடடிக்கைகள் குறித்தும் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணையகத்தில் விளக்கமளித்தோம். வழமையாக ஒரு வாரகாலம் இடம்பெறும் இக்கூட்டம், இம்முறை உயர் மட்ட அமர்வுகள் காரணமாக ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. ஜெனீவா விஜயத்தின் போது அங்கு வருகை தந்த பிராந்திய, ஏனைய நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள், மனித உரிமை அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். மேற்கு பிராந்திய அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு நாம் அழைப்பு விடுத்த போதும்,அதற்கான வாய்ப்பினை அவர்கள் தரவில்லை.எனினும் டென்மார்க், சுவீடன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன் நாம் கலந்துரையாடினோம். இலங்கையின் உண்மை நிலவரம் குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தத் தயாராக இருப்பதாக அவர்களுக்கு தெரிவித்துள்ளோம்.அத்துடன் ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

“இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள், விவாதங்கள் மேற்கொள்ள பல அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தின. அத்துடன் இலங்கை விடயம்குறித்து மனித உரிமைகள் ஆணையகத்தில் விவாதத்திற்கு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எமது தோழமை நாடுகள் எனக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகள் ஆணையக தலைவருக்கு ‘இது இலங்கையின் உள்விவகாரம். இலங்கை அரசாங்கம் இது குறித்து விளக்கமளிக்கத் தயாராக உள்ளது’ என தெரிவித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இடமளிக்கவில்லை” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, இடம்பெயந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் நலன் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மனித உரிமைகள் அமைச்சர், “தற்போது நலன்புரி நிலையங்கள் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை மீள்குடியேற்ற அமைச்சும், அரசாங்க அதிபரும் மேற்கொண்டு வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்காக அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.இது வழங்கப்பட்டதும் இம்மக்கள் சுதந்திரமாக நடமாடலாம்.அத்துடன் இடம்பெயர்ந்து வந்த மக்களுள் ஆதரவற்ற முதியோர்கள் மன்னாரிலுள்ள முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படவுள்ளனர்” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும் வன்னியிலுள்ள மக்கள் நலன்கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தற்போது முல்லைத்தீவிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு 56,000 பேர் வெளியேறி வருகின்றனர். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. எனினும் அனுப்பப்படும் பொருட்களுள் 50 சதவீதமானவற்றை விடுதலைப் புலிகள் எடுக்கின்றனர். எனினும் புதுமாத்தளன் பகுதியில் உள்ள மக்களும் இலங்கை மக்களே. அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கம் தொடர்ந்து அனுப்பி வைக்கும்” என அமைச்சர் பதிலளித்தார்.

தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு; இன்று முதல் ஆர்ப்பாட்டம்

sri-lanka-universities.jpgஇலவசக் கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதன் ஒரு நடவடிக்கையே தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியெனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட மீண்டெழும் இலங்கை வேலைத்திட்டத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட கல்வித்துறையை தனியார் மயமாக்கும் செயற்பாட்டை இன்றைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல முனைகிறது. இதனடிப்படையில் பிலியந்தல மாலபே எனுமிடத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உந்துல் பிரேமரத்ன நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் நெவில் பெர்னாண்டோ கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் தமக்கிருந்த பங்குகளை விற்று அந்தப் பணத்தை முதலீடு செய்து இந்த தனியார் மருத்துவக் கல்லூரியை தொடங்கவிருப்பதாகவும், அதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டிப் போராடத் தயாராகி வருவதாகவும் பிரேமரத்ன செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். முதற்கட்டமாக தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க அனுமதியளித்துவிட்டு படிப்படியாக நாட்டில் தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களுக்கும் அங்கீகாரமளிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கமும், பிரதான எதிர்க் கட்சியும் புத்திஜீவிகள் எனத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சிலரும் திட்டமிட்டு இதனைச் சாதிக்க முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சில காலத்துக்கு முன்னர் இதனை முன்னெடுக்கத் தயாரான போது ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்ட வேளையில் அவ்வாறு நடக்காது எனக் கூறி விவகாரத்தை கிடப்பில் போட்டு காலம் தாழ்த்தி மீண்டும் அதனைக் கொண்டு வர அரசு தயாராகி வருவதாகவும் தெரிவித்தது.

அமைச்சர்கள் பேராசிரியர் விஸ்வ வர்ணபால, பந்துல குணவர்தன போன்றோரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினரும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர்.  இலவசக் கல்வித் திட்டத்தை பாதுகாப்பதாகவும், காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் கல்விக்குறைபாடுகளுக்கு எந்த விதமான தீர்வையும் மேற்கொள்ளவில்லை.

இந்த தனியார் மருத்துவக் கல்லூரி திட்டமானது மக்களின் நலன் கருதி மேற்கொள்வதல்ல. முற்று முழுதாக வர்த்தக நோக்கம் கொண்டதாகும். ஒரு மாணவர் தனியார் மருத்துவகல்லூரியில் படித்து பட்டம்பெறுவதற்கு 60 இலட்சம் ரூபாவை செலவிடவேண்டும். இது இந்த நாட்டின் கஷ்டப்படும் மக்களை சுரண்டும் ஒரு முறைகேடான வர்த்தக நடவடிக்கையாகும். இதனை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. எனவே நாம் இத்திட்டத்திற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கவிருக்கின்றோம். முதலாவது ஆர்ப்பாட்டப்பேரணி இன்று செவ்வாய்க்கிழமை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நடத்தப்படும்.

நாளை முதலாம் திகதி புதன்கிழமை றுகுணு பல்கலைக்கழகத்திலும் இரண்டாம் திகதி வியாழக்கிழமை பேராதனைப் பல்கலைக்கழகம் ,கொழும்பு பல்கலைக்கழகம் அழகியல் பீடத்துக்கு முன்பாகவும் நடத்தப்படும். இதற்கு சாதகமான பதில்கிட்டாது போனால் அடுத்த கட்டப்போராட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும். இலவசக் கல்வித்திட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான அனைவரதும் ஒத்துழைப்பை நாம் கோருகின்றோம் எனவும் உந்துல பிரேமரத்ன தெரிவித்தார்.

கிறீன் ஓசியனில் மேலுமோர் பிரவசம்

green-ocean.jpgகடந்த 28 ம் திகதி புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட எம்வி கிறீன் ஓசியன் கப்பலில் மேலுமோர் பிரசவம் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிய யோகராசா மகேஸ்வரி என்ற பெண்ணே ஆண் குழந்தை ஒன்றை கப்பலில் பிரசவித்துள்ளார். இவரது பிரசவத்திற்கு கப்பலின் கப்டன் , பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மற்றும் அங்கிருந்த அனுபவம் மிக்க வயோதிபப் பெண்கள் உதவி புரிந்தாகவும் கப்பல் கரையை அடைந்ததும் தாயும் சேயும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏ9 வீதியில் புளியங்குளத்தில் இரண்டாவது பொலிஸ் நிலையம்

sri-lanka-police.jpg“ஏ9′ வீதியில் விரைவில் இரண்டாவது பொலிஸ் நிலையம் திறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி யாழ்ப்பாணம் (ஏ9) வீதியில் ஏற்கனவே ஓமந்தையில் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது புளியங்குளம் பகுதியில் 2 ஆவது பொலிஸ் நிலையத்தை திறக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், புளியங்குளத்திற்கு வடக்கே கனகராயன் குளம் பகுதியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் (எஸ்.எஸ்.பி.) காரியாலயம் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் “ஏ9′ வீதியூடாகச் செல்லும் இராணுவ வாகனங்களின் பாதுகாப்பு கருதி அந்த வீதியின் இரு மருங்கிலும் படையினர் பாதுகாப்பு அரண்களையும் பதுங்குக்குழிகளை அமைத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியை அண்டிய பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் வெகு விரைவில் இந்த வீதி ஊடாக பொது மக்கள் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுவரெனவும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.