விடுவிக் கப்படாத பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்காக விசேட அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டைகள் மூலம் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும், தங்களது உறவினர்களை நேரடியாகச் சந்திப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. மேலும் இங்கு தங்கியுள்ளவர்கள் தமது உறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களுடனோ தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை,வவுனியாவில் வேறு நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த 60 வயதைத் தாண்டிய சுமார் 400க்கும் மேற்பட்டோரை அவர்களின் நிலைமையக் கருத்திற்கொண்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமது குடும்ப உறவுகளைப் பிரிந்து வௌ;வேறு முகாம்களில் வாழ்ந்து வந்த சுமார் 600 குடும்பங்களை ஒரே முகாமில் குடும்பம் குடும்பமாக ஒன்றிணைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.