April

April

தனக்கு அபூர்வ ஆற்றல் இருப்பதாக கூறி அழகான பக்தைகளை கவர்ந்திழுத்து பாலியல் வல்லுறவு! லண்டன் போலிச் சாமியார் கைது

mohana-sing.jpgதனக்கு அபூர்வ மந்திர ஆற்றல் இருப்பதாகக் கூறி பெருந்தொகையான பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்து, அவர்களில் அழகிய யுவதிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் போலிச் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் வட லண்டனில் இடம்பெற்றது.

மோகன்சிங் என தன்னைக் கூறிக் கொண்ட மைக்கல் லயன்ஸ் (51 வயது) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, லண்டனிலுள்ள வூட் கிறீன் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

மேற்படி நபர் தனக்கு திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவுடன் தொடர்பிருப்பதாகவும் அதீத ஆற்றல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறி, பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அவர்களில் 7 பேரை கடந்த 10 வருட காலமாக அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மேற்படி பெண்களில் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், தனக்கு ஆன்மிக சக்தியை வழங்குவதாகக் கூறி சாமியார் தன்னை நிர்வாணமாக்கி தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறினார்.

மற்றொரு பெண் சாட்சியமளிக்கையில், மேற்படி சாமியார் மாடிக்குடியிருப்பில் இருந்த அவரது இல்லத்திற்கு தன்னை அழைத்து சென்றதாகவும் தன் மீது நறுமண தெளிப்பான் ஒன்றைத் தெளித்து புரியாத வார்த்தைகளைக் கூறி முணுமுணுத்தபடி தனது கழுத்தை நெரித்துப் பிடித்து குற்றச் செயலை புரிந்ததாகவும் தெரிவித்தார்.

வட லண்டனில் பெல்சைஸ் பார்க் எனும் இடத்தில் வசிக்கும் மைக்கல் லையன்ஸ் என்ற இந்த போலிச் சாமியார், தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்நிலையில், அவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணியான பிலிப் சாட்ஸ் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கு எதிராக வழக்கு

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 1.9 பில்லியன் டொலர் உதவி   வழங்கப்படுவதை ஆட்சேபித்து கொலம்பியா நீதி மன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் படுகொலைக்கெதிரான அமெரிக்கக் குழு, அமெரிக்க திறைசேரிச் செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேசயத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக்லாண்டாசாகர் ஆகியோருக்கு எதிராகவே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 84 பக்கங்களைக் கொண்ட இந்த மனுவில் சர்வதேச நாணய நிதியத்தின்  ஆளுநர் உட்பட்டவர்களும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலங்கையில் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்டு வருகின்றன. தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டு வருகின்ற நிலையில்  இலங்கைக்கு 19கோடி டொலர்கள் வழங்கப்படுவது அமெரிக்க அரசியலமைப்பை மீறும் செயலென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணாமல் போதல் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்துவது ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானதாகும்.

அத்துடன், பாலியன் வன்புணர்வுகள், மனிதநேயமற்ற செயல்கள், நீதியற்ற முறையில் ஆட்கள் தடுத்து வைக்கப்படுதல், கைதுகள், வைத்திய  வசதிகள்  வழங்கப்படாமை, பட்டினி, அரசியல் பிரதிநிதித்துவம் மறுப்பு, பேச்சுச் சுதந்திரமின்மை, சித்திரைவதைகள் என்பன இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கின் பிரதிகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், திறைசேரி போன்றவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தமிழர்கள் படுகொலைக்கெதிரான அமைப்பின் ஆலோசகர் புருஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகம்: கொள்கலன் சோதனைகளில் கடற்படையினரும்

கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் சகல கொள்கலன்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்கத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் கொள்கலன்களைச் சோதனையிடும் பணியில் கடற்படையினரையும் ஈடுபடுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறையினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதி இதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொடுத்ததாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதுடன், பாதுகாப்பை வலுப்படுத்தவும், வினைத்திறன் மிக்க சேவையை வழங்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கப்பல் இறக்குமதி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் திணைக்களம், துறைமுக அதிகார சபை, இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றை இணைத்த வலையமைப்பொன்றை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதேவேளை சுங்கத் திணைக்களத்திற்குப் புறம்பாக வெளியில் கொள்கலன்களைச் சோதனையிடுவதற்கு பொதுவான ஓர் இடத்தை இனங்காணவும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புதுமாத்தளனிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் புல்மோட்டை வருகை

green-ocean.jpgமுல் லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடற்படையினரின் வழித்துணையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘கிரீன் ஓஷன்’ கப்பல் மூலம் இதுவரை 16 தடவைகள் பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு இந்தக் கப்பல் புல்மோட்டையை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படையினரால் அழைத்து வரப்பட்ட 540 பொதுமக்களில் 229 பெண்கள், 167 ஆண்கள் மற்றும் 144 சிறுவர்களும் அடங்கு வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அழைத்துவரப்பட்டவர்களில் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு கடற்படையினர் அவசர முதலுதவி வழங்கிய பின்னர் புல்மோட்டை யிலுள்ள இந்திய மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘இரு நாள் மோதல்களில் 282 பேர் காயம்’- மருத்துவ அதிகாரி

puthukkudi.gifஇலங் கையின் வடக்கே மோதல்கள் நடக்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குகின்ற புதுமாத்தளன் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் மாத்திரம் எறிகணை வீச்சுக்களால் காயமடைந்த 282 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சந்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதுமாத்தளன் மருத்துவமனையில் 600க்கும் அதிகமான நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புதுமாத்தளனில் இருந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக்கு காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடனான கப்பலில் பயணித்த காயமடைந்தவர்கள் 5 பேர் வழியிலேயே மரணமடைந்ததாக திருகோணமலையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் மூன்று பெண்களும், ஒரு ஆணும் ஒரு குழந்தையும் அடங்குகின்றனர்.

கிழக்கு மாகாணசபை 1,242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கியுள்ளது

கிழக்கு மாகாணம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இன்றுவரை 1,242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் 269 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மட்டக்களப்பு கச்சேரியில் சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

முதலமைச்சரின் செயலாளர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில், போர்ச் சூழலினால் அழிந்து சிதைவுற்றிருக்கும் இம் மாகாணத்தினை விரைவாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பினை முழுமையாக செய்து உதவுதல் வேண்டும்.

இம் மாகாணத்தில் 1,000 வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஐ.ஓ.எம்.நிறுவனத்தின் அனுசரணையில் தொழிற் பயிற்சியினை வழங்கி வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணசபை ஸ்தாபிக்கப்பட்டு 10 மாதங்களே ஆகின்றன. அதற்குள் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ்வரும் 1,000 கிலோ மீற்றர் வீதி 1,760 மில்லியன் ரூபா செலவில் ஜெய்கா உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கையும் அபிவிருத்தி கண்டுள்ளது. 2008-2009 காலப்பகுதியில் பெரும்போக நெல்செய்கையாக இம் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் நெற் பயிரிடப்பட்டு அறுவடையும் முடிவடைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 200 மில்லியன் நெக்டெப் திட்ட உதவி இதற்கென பெறப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருந்தகங்கள் இப்பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்டிருப்பதுடன் கணிசமானோருக்கு இதில் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் மீன்பிடித்துறையினை முன்னேற்றும் வகையில் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏ5 வீதி திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தமது போக்குவரத்தினை இலகுவாக மேற்கொள்ளவும் வழிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொப்பிகலை, வாகரை பகுதியிலுள்ள 15 கோயில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையின் வேண்டுகோளின்பேரில் 1,000 கணினிகளை இந்திய அரசாங்கம் இப் பிரதேசப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கினியாகல மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ; 4 மின்மாற்றிகள் நாசம்

அம்பாறை, இங்கினியாகல பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திங்கட் கிழமை காலை ஏற்பட்ட பாரிய தீயினால் நான்கு பாரிய மின்மாற்றிகள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளன.  இதனால் பாரிய நஷ்ட மேற்பட்டுள்ளதுடன், அம்பாறையின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.

இங்கினியாகலயில் நீர் மின் உற்பத்தி நிலையமொன்றுள்ளது. இந்த உற்பத்தி நிலையத்திலேயே  தீவிபத்து ஏற்பட்டது.  இதையடுத்து விமானப்படை, பொலிஸார் மற்றும் இராணுவ தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

மின் நிலையத்திலுள்ள தீயணைப்பு பிரிவால் பாரிய தீயை உடனடியாக அணைக்க முடியாது போகவே தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டெரியத் தொடங்கியது.  வெளியிலிருந்து தீயணைப்பு பிரிவுகள் அங்கு வந்து சேருவதற்கிடையில் பாரிய தீ பரவி மின் நிலையதிலுள்ள, குறைந்தது நான்கு பிரதான மின்மாற்றிகளை முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது.

இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த விமானப்படையினர் தீயணைப்பு பிரிவு காலை முதல் பலமணி நேரமாக தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்தது. பொலிஸ் தீயணைப்புப் பிரிவும் இணைந்து இந்த தீயணைப்பு முயற்சியில் நீண்ட நேரம் போராடின. எனினும் அதற்கிடையில் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை தீ முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது. இதனால் பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

இங்கு ஏற்பட்ட தீயை அடுத்து அம்பாறை மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன்  பின்னரே அக்கரைப்பற்று, திருக்கோவில், கோமாரி பகுதிக்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.

எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் (30) மாலை வரை மின்விநியோகம் தடைப்பட்டே இருந்தது. மின் உற்பத்திநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தப் பாரிய தீ பரவி மிகப் பெரும் நஷ்டத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக மின்சார சபையும், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

army-refg.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் உக்கிரமாக மோதல்கள் நடைபெறுகின்ற போர்ப்பிரதேசத்தில் இருந்து கடந்த சில தினங்களாக மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இதுவரையில் இவ்வாறு 61 ஆயிரம் பேர் வந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, வவுனியா நகரம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கிடையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்குச் செல்லும் முக்கிய வீதியான ஏ9 வீதியில் படையினரும், யாழ்ப்பாணத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், இராணுவ வாகனத் தொடரணிகள் செல்லும் போது, இந்த வீதியின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது

வரி விலக்களிப்பின் மூலம் அரசுக்கு ரூ.8 பில். நஷ்டம்

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக 2008ஆம் ஆண்டு வரிவிலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரச வருவாய்த்துறை அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருள்களுக்கான வரி நீக்கப்பட்டு வர்த்தக பண்டங்களுக்கான வரி மட்டுமே விதிக்கப்பட்டதாக அமைச்சர் நேற்று (31) நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு 24% ஆக இருந்த பணவீக்கம், தற்போது 7% ஆகக் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் தொடர்ந்தும் அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

‘A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள் : த சோதிலிங்கம்

Arundhati_RoyCWI_21Mar09_Audienceஇலங்கையில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் இனப்படுகொலைகளுக்கு எதிரான சர்வதேச அளவிலான பிரச்சாரம் ஒன்றை for Workers International – CWI ஆரம்பித்துள்ளனர். இதன் ஆரம்பக் கூட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது தேசம்நெற் வாசகர்கள் அறிந்ததே. ஜக்கிய சோசலிசக் கட்சியின் செயலாளரும் சிறீலங்கா மொனிற்றரிங் குறுப் தலைவரமான சிறீதுங்கா ஜெயசூரியா தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டின் தொடர்ச்சியாகவே மார்ச் 21 லண்டன் சந்திப்பு கொன்வே மண்டபத்தில் இடம்பெற்றது. தி சோசலிஸ்ற் பத்திரிகையின் ஆசிரயர் குழு உறுப்பினரான சாராவின் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இங்கிலாந்தின் வேறுவேறு பகுதிகளைச் சேர்ந்த CWI ன் பிரதிநிதிகள் போராட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் மாணவர் அமைப்பு பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டமை இதற்கு ஒரு சர்வதேச பரிமாணத்தை ஏற்படுத்தி இருந்தது. விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரைத்தவிர ஏனையவர்கள் தமிழரல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரல்லாதவர்களால் வன்னி மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற குறிப்பான போராட்டமாக இது அமைந்துள்ளது.

Sera_21Mar09சாரா தனது தலைமை உரையில் ‘நாம் ஏன் கூடி இருக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இலங்கை என்றதும் தமிழ் மக்கள் கேடயமாக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவம் எல்லோருக்கும் அறியப்பட்ட விடயமாகி விட்டது. மனிதக் கேடயங்களாக்கப்பட்டு உள்ள 200,000 மக்களை மனிதாபமற்ற முறையில் இலங்கை அரசு குண்டுகள் போட்டு அழித்துக் கொண்டிருக்கிறது.’ என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில் ‘உடனடியாக யுத்தத்தை நிறுத்தும் படியும், ஜனநாகத்தை அமுல்படுத்தும் படியும் கோரியும் பிரச்சாரங்களை உலகளாவிய ரீதியில் நடாத்த இன்று இந்த கூட்டத்தை கூடியுள்ளோம். நாமும் தமிழ் மக்களுடன் சேர்ந்து இயங்கவும் அவர்கள் நடாத்தும் பல ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் ஒத்துழைக்கவும் இந்த யுத்தத்திற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஆரம்பித்துள்ளோம். இந்த பிரச்சாரத்தை ஒரு சர்வதேச பிரச்சாரமாக உருமாற்றி செயற்ப்படுத்தவே இங்கு கூடியுள்ளோம்.’ என்று சந்திப்பின் நோக்கத்தை விளக்கினார்.

சாராவின் தலைமை உரையை அடுத்து போராட்டத்தின் சர்வதேச இணைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட சேனன் இலங்கையின் இன்றைய நிலவரம் தொடர்பாக உரையாற்றினார். (இவ்வுரையின் சாரம்சம் : தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும். : சேனன்) அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் சில ….

இலங்கை அரசு புலிகளை அழிப்பதன் மூலம் எல்லாவிதமான போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் இதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வையும் முன்வைக்கத் தேவையில்லை என்ற நிலைக்கு வரலாம் என்றுமே கருதி இந்த போரில் மிகுந்த அக்கறை காட்டுவதாயும் இந்த அரசுக்கு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கொடுப்பதில் அக்கறையில்லை என்றே தெரிகிறது.

இந்திய வலதுசாரி ஆளும் வர்க்கமும் இலங்கை வலதுசாரி ஆளும் வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து தமது நலன்களைப் பேணுவதிலேயே அக்கறையுடன் இருக்கிறார்கள். மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளை மறைக்கவும் போரைப் பயன்படுத்துகின்றனர். தமது வர்க்கநலனை பேணவே அரசுகள் முயல்கிறது. அதனால் இந்த முதலாளித்துவ அரசுகளிடம் இருந்து தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது.

லண்டனில் வாழும் தமிழர்களில் அரைவாசிக்கு மேல் தெருக்களில் இறங்கி போராடிய போதும் தொழிற் சங்கங்கள்  இதில் அக்கறை காட்டாமல் இருப்பது மிகவும் கடினமானதாக இருப்பதாயும் லண்டன் தமிழர்கள் தொழில்ச்சங்கங்களுடன் இணைந்து செயலாற்ற ஆரம்பிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது மக்கள் மத்தியில் எப்படி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகிறது என்பதில் கவனம் எடுக்க வேண்டும். ஜேவிபியினர் சிங்கள சோசலிஸ்ட்டுக்கள் தம்மை மாக்சிஸ்ட்டுக்கள் என்று சொல்லபவர்கள். இந்த போரை தவறாக பார்ப்பதும் இந்த இனப்படுகொலையை கண்டும் காணாமல் இருப்பதும் கண்டிக்கப்பட வேண்டும்.
தமிழ் பூர்ஜுவாக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் வெற்றியடைவது மிக கடினமானது. சிங்கள தமிழ் தொழிலாளர்கள், சோசலிஸ்ட்டுக்கள் ஒன்றுபட்டு இந்த தமிழ் மக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்கப் போராடுவதே ஒரே வழி.

தமிழ் மக்களுக்கான தீர்வு சுயநிர்ணய உரிமையே. இது தான் சோசலிஸ்ட்டுக்ளால் முன்வைக்கப்படும் தீர்வு. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஜக்கிய சோசலிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கிறது. ஆனால் இப்போதுள்ளது மனிதாபிமானப் பிரச்சினை இது. உடனடியாக போராட்டம் நடாத்தப்பட்டு முடிவு கட்டப்பட வேண்டும்.

இப்போதுள்ள தேவை யுத்தம் நிறுத்தப்பட்டு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுதலே முக்கியமானது.

அரசியல் உரிமை அந்த மக்களுக்கு உண்டு. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழீழம் தனிநாடு என்றெல்லாம் சொல்லலாம் ஆனால் அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் தமது அரசியலைத் தீர்மானிக்க வேண்டும். அப்படி அவர்கள் தீர்மானிக்கக்க கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்காகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழர் உரிமைப் போராட்டத்தில் சிங்கள மக்கள் தொழிலாளர் சங்கங்கள் பலர் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் வட – கிழக்கு மக்களுக்கு தொழிலாளர் சங்கங்களைத் தெரியாது. இப்படியான சங்கங்களை எல்ரிரிஈ இல்லாது ஒழித்து விட்டனர்.

மக்களை சாதாரண வாழ் நிலைக்கு கொண்டுவருவதன் மூலமே தொடர்ந்து இம்மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை தொடரரும் தன்மையை வளர்க்கலாம்.

அந்த யுத்த பிராந்தியத்திலுள்ள 2000 புலிகளைக் காப்பாற்றி என்றாலும் 200000 மக்களையும் காப்பாற்றியாக வேண்டும்.

இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் அங்கு பரிமாறிக் கொள்ளப்பட்டது. நிகழ்வின் இறுதியாக இப்போராட்டங்களை லண்டனில் முன்னெடுப்பதற்கான தெரிவுக்குழுவொன்று உருவாக்கப்பட்டது. மலேசியா, கிறீக், பாக்கிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இப்போராட்ட நிகழ்வுகளுக்கூடாக மாணவர் அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புக்கள் தொடர்புபடுத்தப்படும் என்றும் அங்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டங்களை பலவீனப்படுத்த இந்தியா தொடர்ந்தும் முயன்று கொண்டிருப்பதாயும் இந்திய அரசு மட்டுமல்ல இந்திய நிறுவனங்ககள் சிலவும் இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாலும் ஏப்பிரல் 8ம் திகதி போராட்டம் இந்திய தூதரகங்களுக்கு முன்பாகவும் இந்திய நிறுவனங்களுக்கு முன்பாகவும் நடத்தப்பட இருப்பதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு செய்யப்பட்ட உள்ள போராட்டங்களில் பின்வரும் கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் அச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

1 உடனடியாக யுத்தத்தை நிறுத்து : இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்தித் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டுக் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.

2 தடுப்பு முகாம்களை மூடு : தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.

3 போர் வெறி பிடித்த இராஜபக்ச அரசுக்கு ஒரு சதமோ ஒரு துப்பாக்கி குண்டோ வழங்காதே :
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான், யப்பான், மற்றும் இதர நாடுகள் இலங்கை அரசுக்கு வர்த்தக, இராணுவ உதவிகள் வழங்குவதை உடனடியாக நிறுத்து. இந்நாடுகளின் இராணுவப் பங்களிப்புக்கு எதிராக அந்நாட்டுத் தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிப்போம்.

4 அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து : பேச்சுரிமை, ஊடக உரிமை,சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.
 
5 ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம் : கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.

6 சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து : (நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.

._._._._._.

இப்போராட்ட முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக சென்னை லொயோலா கல்லூரியில் மார்ச் 30ல் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மனிதஉரிமைவாதியும் முன்னணி எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றுவதாக இருந்தது. ஆயினும் துரதிஸ்டவசமாக அவர் சமூகமளிக்கவில்லை. ஆயினும் வன்னி மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக வன்மையான தனது கண்டனத்தை அவர் எழுத்தில் வழங்கி இருந்தார். அதனை கீழே காணலாம்.

இக்கூட்டத்தில் இலங்கை ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய டெல்லி ஊடகவியலாளர் சத்திய சிவராம் தமிழீழ விடுதலைக் கூட்டமைப்பின் இணைப்பாளர் பவநீதன் ஈழத் தமிழ் மாணவர் போராட்டக் குழு சுதா காந்தி ஆகியொர் உரையாற்றுவதாக இருந்தது.

அருந்ததி ராய் வழங்கிய கண்டனக் கட்டுரை:

A RACIST WAR IN SRILANKA

Arundhati_RoyThe horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media—or indeed in the international press—about what is happening there. Why this should be so is a matter of serious concern.

From the little information that is filtering through it looks as though the Sri Lankan Government is using the propaganda of ‘the war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, hospitals and shelters are being bombed and turned into a war zone. Reliable estimates put the number of civilians trapped at over 200,000. The Sri Lankan Army is advancing, armed with tanks and aircraft.

Meanwhile, there are official reports that several “welfare villages” have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in The Daily Telegraph (14 Feb 2009), these villages “will be compulsory holding centres for all civilians fleeing the fighting”. Is this a euphemism for concentration camps? The former foreign minister of Sri Lanka, Mangala Samaraveera, told The Daily Telegraph: “A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.”

Given its stated objective of “wiping out” the LTTE, this malevolent collapse of civilians and “terrorists” does seem to signal that the Government of Sri Lanka is on the verge of committing what could end up being genocide. According to a UN estimate several thousand people have already been killed. Thousands more are critically wounded. The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell. What we are witnessing, or should we say, what is happening in Sri Lanka and is being so effectively hidden from public scrutiny, is a brazen, openly racist war. The impunity with which the Sri Lankan government is being able to commit these crimes actually unveils the deeply ingrained racist prejudice, which is precisely what led to the marginalization and alienation of the Tamils of Sri Lanka in the first place. That racism has a long history, of social ostracisation, economic blockades, pogroms and torture. The brutal nature of the decades long civil war, which started as a peaceful, non-violent protest, has its roots in this.

Why the silence? In another interview Mangala Samaraveera says, “A free media is virtually non-existent in Sri Lanka today.” He goes on to talk about death squads and ‘white van abductions’, which have made society “freeze with fear”. Voices of dissent, including those of several journalists, have been abducted and assassinated. The International Federation of Journalists accuses the Government of Sri Lanka of using a combination of anti-terrorism laws, disappearances and assassinations to silence journalists.

There are disturbing but unconfirmed reports that the Indian government is lending material and logistical support to the Sri Lankan government in these crimes against humanity. If this is true, it is outrageous. What of the governments of other countries? Pakistan? China? What are they doing to help, or harm the situation?

In Tamil Nadu the war in Sri Lanka has fueled passions that have led to more than ten people immolating themselves. The public anger and anguish, much of it genuine, some of it obviously cynical political manipulation, has become an election issue.

It is extraordinary that this concern has not traveled to the rest of India. Why is there silence here? There are no ‘white van abductions’—at least not on this issue. Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian Government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war.

So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than two hundred thousand face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country.

It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late.

Arundhati Roy
29th March 2009