May

May

இதுவரை பெருமளவான மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வருகை

mahinda-samarasinha.jpgபுலிகளின் பிடியில் இருந்து இதுவரை 1,88,535 மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் 12,393 பொதுமக்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பிரமுகர்களின் விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் மாநாடு நேற்று (30.04.2009) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்குள்ள மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. இடம் பெயாந்து வந்தமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பல முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரண்

ltte_.jpgபுலி உறுப்பினர்கள் 58 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. 14 வயது தொடக்கம் 18 வயதையுடைய 38 ஆண்களும், 20 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் படையினரால் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களை அம்பேபுஸ்ஸவில் உள்ள சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனி நபர் ஒருவரை அழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் யுத்தம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது

waroooo.jpgதனி நபர் ஒருவரை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பிரபாகரனை பிடிப்பதனை மட்டுமே இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் பயனளிக்கப் போவதில்லை என அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர்ந்த ஏனையோருக்கு பொது மன்னிப்பு வழங்க யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர் பிரச்சினைகளுக்கு செவிமடுக்க கொழும்பு அரசாங்கங்கள் காட்டி வரும் தயக்கமே ஆயுதப் போராட்டத்திற்கு வழி கோலியதாக தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இரு தரப்பு செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்கா தெரிவிப்பு

usa-flag.jpgஅப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவது மற்றும் விடுதலைப் புலிகள், பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவது ஆகிய இரண்டுமே முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்ஸிலில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சூசன் ரைஸ் உரையாற்றினார். அப்போது அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவதற்கு ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

போர் பகுதிக்குச் செல்ல ஐ.நா. மனிதநேய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் அப்பாவி மக்களை போர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் – கோத்தபாய ராஜபக்ஷ

gotabaya-rajapakasa.jpgபிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த விசேட பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

கூட்டத்தின்போது பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் பல தடவைகள் இடையூறுகளை விளைவித்தார். அது அவருடைய போக்காக இருக்கலாம். எனக்கு அவரது நடத்தையோ அல்லது அவரது போக்கோ குறித்து ஆட்சேபனை இல்லை. எனது விடயம் என்னவெனில் தற்போதைய நிலைமையில் எதற்காக அவர் இதில் தலையிட வேண்டும் என்பதேயாகும். இந்த நாட்டின் மக்கள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை அங்கீகரித்துள்ளனர்.

நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் நாட்டு மக்கள் கூறுவதையே செவிமடுக்கவேண்டும். அதனைவிடுத்து பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கூறுவதையல்ல. இதனைத்தான் நான் அவருக்கு கூறினேன் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேற்குல நாடுகளில் வசித்துவரும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் ஐரோப்பிய தலைவர்கள் தேவையற்ற வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களை எவ்வாறு பாதுகாப்பதென்பதனை படையினர் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியல் தலைவர்களையும் பொது மக்களையும் படுகொலை செய்தபோது இந்த டேவிட் மிலிபான்ட் எங்கு சென்றார்? உறங்கிக்கொண்டிருந்தாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே ஐரோப்பிய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விரைவதாகவும் தமிழ் மக்கள் மீதான கரிசனை எதுவும் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் பொது மக்கள் மீது எறிகணை தாக்குதல் நடத்தவதாக பி.பி.சீ.யை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சர் மிலிபான்ட் வெளியிட்ட கருத்தின் காரணமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் மிலிபான்டுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பி.பி.சி. உலக சேவை புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதாக கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் பிரதமர் கோர்டவுன் பிறவுன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மற்றும் ஜீ. 8 நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இலங்கை தமிழர்கள் தொடர்பில் காட்டும் கரிசனை வெறும் அரசியல் நோக்கங்களை கொண்டது எனவும் மக்கள் தொடர்பான உண்மையான கரிசனை எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்போம்: வைகோ

vaiko00001.jpgதேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு ஆதரவாக பேசிய வைகோ,

இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு காரணம் இந்திய அரசு தான். உலகமே போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி வரும் வேளையில், சோனியாவும், மன்மோகன் சிங்கும் மௌனம் காக்கின்றனர். மேலும், முதல்வர் கருணாநிதியோ அண்ணா சமாதியில் படுத்துக்கொண்டு உண்ணாவிரத நாடகமாடுகிறார்.

அடுத்த மாதம் மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா சொன்னது போல் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்றார்.

ஈழத்தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி மானியம்: ஜெ. உறுதி

j-j-j.jpgஇடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து கீழவீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியா அமைதிப்பூங்காவாக மாறி பொருளாதார வளர்ச்சி பெறும்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வழி செய்யப்படும். தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு ரூ. 10 ஆயிரம் கோடி மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மட்டு நகரில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டமை கவலை அளிக்கிறது -மட்டக்களப்பு சர்வ மத சமாதான ஒன்றியம்

thinu.jpgமட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் பாடசாலை சென்றிருந்த மாணவியொருவர் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சததையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு சர்வ மத சமாதான ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

திருகோணமலையில் 6 வயது மாணவியொருவர் சில வாரங்களுக்கு முன்பு கடத்தப்டட்டு படுகொலை செய்யப்பட சம்பவத்தையும் சுட்டிக் காட்டி சர்வமத சமாதான ஒன்றியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான சதீஸ்குமார் தினுஷிக்கா மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஒரு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பை தங்கள் வசம் ஒப்படைக்க ஜே.வி.பி. கோரிக்கை

sri-lankan-jvp.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களிடம் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது உறுப்பினர்களையும் முற்றாக அழிக்கும் வரை யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு கூறமுடியாதெனவும் தெரிவித்துள்ள ஜே.வி.பி., அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அரசு தனது அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெருமளவான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புலிகளிடமிருந்து அம்மக்களை எமது இராணுவத்தினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், இம்மக்களின் தேவைகளை தொடர்ந்து அவர்களால் செய்வது சிரமமென்ற முறையில் அரசாங்கம் அம்மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வருகின்றது. இதில் சிக்கலையும் அது எதிர்கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் கண்ணுக்கெட்டிய அல்லது தெரிகின்ற பிரச்சினைகளை தேவைகளை நிறைவு செய்தால் போதாது. அவர்களது உளப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்நிலையில் இதனை செய்வதற்கு சிறந்த முகாமைத்துவம் கொண்ட கட்டமைப்புத் தேவை. அதனை எமது செந்தாரகை நிவாரண இயக்கம் செய்யத் தயாராகவுள்ளது.

எனவே, இம்முகாம்களை அவ்வியக்கத்திடம் கையளிக்குமாறு நாம் கேட்கின்றோம். யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அரசு கூறுகின்றது. உண்மையில் புலிகளின் தலைவரையும் அவர்களது உறுப்பினர்கள் அனைவரையும் அழிப்பதன் மூலமே யுத்த வெற்றியை ஈட்ட முடியுமே தவிர நிலப்பரப்பை விடுவிப்பதனால் வெற்றி வந்துவிடாது. இவ்வாறு தலைவரையும் உறுப்பினர்களையும் அழியாதுவிட்டால் அவர்கள் கெரில்லா வழிமுறைக்கு சென்றுவிடுவர்.

அரசாங்கம் மக்களுக்கு, சர்வதேச அழுத்தத்துக்கு கட்டுப்பட வில்லையென காட்ட சுவிடன் தூதுவரின் விஜயத்தை தடுத்ததாக காண்பித்தது. சுவிடனிலுள்ள இலங்கை தூதர், அவர் இதற்காக விஸா விண்ணப்பிக்கவில்லையென தெரிவிக்கின்ற அதேநேரத்தில் ஒரே நேரத்தில் பல தூதர்களை கவனிப்பது சிரமம், எனவே, வேறு ஒரு தடவை சந்தர்ப்பமளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை பத்திரிகைகள் தெரிவித்தன. தாம் தேசப்பற்றாளர்களென காட்ட முற்படுகின்றனர்.  யுத்தத்தின் போது கனரக ஆயுதம் பாவிப்பதா இல்லையா என்பதை படை நடவடிக்கையை மேற்கொள்பவரான தளபதியே தீர்மானிப்பார். இந்நிலையில் கனரக ஆயுதம் பாவிக்கப்பட மாட்டாதென அரசு கூறுகின்றது. இவ்வாறு செல்வதற்கு சர்வதேச அழுத்தமே காரணம்.

ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை; ஆனால் பயமாக இருக்கிறது: கமலஹாசன்

kamal-hassan.jpgஉலக நாயகன் கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து அசத்தும் படமான உன்னைப் போல் ஒருவன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவின் போது  செய்தியாளர்கள் கமலிடம், இலங்கை பிரச்னையை மையமாக வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டதற்கு,  ’’ஆசை இருக்கிறது; ஆனால் அதை விட பயம் அதிகமாக இருக்கிறது’’ என்றார்.

எதற்காக என நிருபர்கள் கேட்டதற்கு,  ’’ஏன் பயம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்று புன்னகையுடன் கூறினார்.