June

June

வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்தவாரம்

chals_.jpgவவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும் மூன்றாம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை மற்றும் பூவரசங்குளம் பிரதேசங்கள் உட்பட 25 கிராமங்களில் முதற்கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .

மீள்குடியமர்த்துவதற்காக சுமார் 800 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நலன்புரி முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள இறுதித் திட்ட அறிக்கை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பமாகுமென்று வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் நேற்று பிற்பகல் கூட்டமொன்றும் நடைபெற்றது. வடக்கு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் மன்னார் முசலி பகுதியில் மக்கள் தமது சொந்த வாழ் விடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தற்போது வவுனியா மாவட்டத்திலும் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது என்று அரச அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் உள்ள நலன் புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை நிவாரணக் கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .

வவுனியா மாவட்ட கல்வி வலயத்தின் 17 பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் நலன்புரி நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த நிலையங்களில் இருந்த மக்கள் நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ள ப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் ஓரிரண்டு பாடசாலைகளே விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டம், எலிக் காய்ச்சல் டெங்கு அதிகரிப்பு * டெங்கு – மூவர் பலி; 515 பாதிப்பு * எலிக் காய்ச்சல் – இருவர் பலி; 263 பாதிப்பு

aedes_aegypti.jpgமாத்தளை மாவட்டத்தில் டெங்கு, மற்றும் எலிக் காய் ச்சல் நோய்கள் தீவிரமடைந்துள்ளன. இது வரை டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட மூவரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட இருவரும் உயிரிழந்துள்ளதாக மாத் தளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இம்மாவட்டத் தில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 515 பேரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட 263 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் உக்குவளை பிரதே சத்திலேயே மிகக் கூடுதலான எண்ணிக் கையானோர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இது வரைக்கும் 161 பேர் இந் நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். அதே சம யம் எலிக் காய்ச்சல் இம் மாவட்டத்தில் இறத்தோட்டை, பள்ளேபொள, யடவத்த, தம்புள்ள, ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமாக பரவி வருகின்றது.

தற்போது இம்மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் மேற்படி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் காமினி செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

‘பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன்’ – சோதிடர் நாலாம் மாடியில் தடுத்து வைப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் மீதான விவகாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:- பிரபல சோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை. சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்தவின் அரசு விரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கூறியிருக்கின்றார். அச்சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஐபிசி மற்றும் புலி ஊடக ‘அரசியல் ஆய்வாளர்கள்’ : ஆர் யூட்

ibc_logoஅண்மைக் காலமாக ஐபிசி அரசியல் ஆய்வாளர்கள் புதிய அரசியல் கண்டுபிடிப்பொன்றைச் செய்துள்ளனர். அதுதான் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் மூளப் போகிறதாம். இந்தப் போரைத் தடுப்பதாயின் இந்தியா இலங்கைத் தமிழரோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏதோ இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்துவிட்டதாகவும் இதை ஈழத் தமிழர்களே தடுக்க முடியும் என்பது போல ஓர் புரளியை கிளப்பிய வண்ணம் உள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இந்த உடன்படிக்கை இந்திய நலன்சார்ந்த ஒன்று என்றும் இதில் ஈழத் தமிழர்களின் நலன் முற்றாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்றும் இவர்கள் போன்ற புலி ஆய்வாளர்கள் அன்று கூறினார்கள். அதில் ஓரளவு உண்மையும் உண்டு. அப்படியானால் தமிழ் மக்களுக்கு அதனிலும் சிறந்த தீர்வை வென்றெடுக்கும் அரசியல் தகுதி புலிகளிடம் இருந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக சிறிலங்கா நீதிமன்றம் முடிவெடுத்து விட்டது என்று இதே புலி ஆய்வாளர்கள் ஒப்பாரி வைத்தார்கள். இலங்கை நீதிமன்றம் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வடக்கு கிழக்கை யார் இணைத்தது?

1987ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமே வடக்கு கிழக்கு இணைவுக்கு வழி அமைத்தது. இதே ஒப்பந்தத்தைத்தானே ஈழத்தமிழருக்கு ஒன்றுமில்லாத ஒப்பந்தம் என்று அன்று சொன்னார்கள். இன்று அதே ஆய்வாளர்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூழப்போகிறது என்று புதுக்கதை விடுகிறார்கள்.

13 ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் கடந்த ஆண்டு ஆட்சியையும் கைப்பற்றி நாட்டையே ஆட்சி செய்தார்கள். அதில் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக இன்னும் போராடுகிறார்கள். வேறுபட்ட வழிகளில். அவர்களுடைய போராட்டத்திற்கு அமெரிக்க – இந்திய – சீன ஆகிய நாடுகளின் நலன்கள் தடையாக இருக்கவில்லையா? ஈழப்போராட்டத்திற்கு மட்டும் தான் இவைகள் எல்லாம் தடைகளா? அல்லது நேபாளம் என்ன அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலா இருக்கின்றது?

கொலம்பியாவில் எத்தனை ஆண்டுகள் FARC எனும் கொரில்லா அமைப்பு அந்த அரசுக்கு எதிராக போராடி வருகின்றது. அவர்களை ஏன் எந்த ஏகாதிபத்தியமும் அழிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு அந்த அமைப்பின் பிரதித் தலைவரை கொலம்பிய இராணுவம் எல்லை கடந்து சென்று பொலிவிய மண்ணில் வைத்துக் கொலை செய்த போது தென் அமெரிக்கப் பிராந்தியமே கொலம்பிய நாட்டுக்கு எதிராக அணி திரண்டதைப் பார்க்கவில்லையா? அதற்கு என்ன காரணம்?

புலிகளின் உண்மையான அரசியல் வங்குரோத்தை மூடிமறைத்தக் கொண்டு ஈழத்தமிழர்களின் போராட்டம் தோற்றுப் போனதற்கு ஏதோ வல்லரசுகளின் சதி என்றும் பிராந்திய நலன்சார்ந்த அரசியல் பொருளாதார காரணிகளே காரணம் என்றும் இன்றும் கூட உண்மையை மறைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்லி இந்திய மண்ணில் கால் பதித்த போதே பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் அவர்களுக்கு பின்னால் நின்றவர்களும் ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி சுட்டுக்கொண்டு தான் அந்த மண்ணுக்கு அறிமுகமானார்கள். அன்றே எம்முடைய அரசியல் உலகுக்கு தெரியவந்துவிட்டது. அன்றே எமது உரிமைப் போர் காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டது. அத்துடன் ஈழத்தமிழர்களுடைய அரசியல் வங்குரோத்து வெளிச்சத்திற்கு வந்தது. அன்றிலிருந்து வெள்ளை முள்ளிவாய்க்கால் வரை ஒன்றா இரண்டா எத்தனை சகோதரப் படுகொலைகளும் துரோகங்களும் இந்தப் போராட்டத்தில் நடந்தேறின. எதிரியால் அல்லவே.

இலட்சக்கணக்காண இந்திய இராணுவம் நிலைகொண்டுள்ள இந்திய மண்ணில் இன்றும் எத்தனை போராடுகின்ற அமைப்புகள் ஆயுதப் போரட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழிக்க முடியாத இந்திய அரசும் அந்த இராணுவ இயந்திரமும் கடல் கடந்து வந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழித்து விட்டதாம். இது இந்திய பலத்தைக் காட்டுகிறதா? அல்லது புலிகளின் அரசியல் வங்குரோத்தைக் காட்டுகிறதா?

கொலை செய்வதும் பணம் சேர்ப்பதும் தான் போராட்டம் என்றும் உண்மையான போராட்டத்தை வியாபார மயப்படுத்தி (பல போராளிகளைப் பலிகொடுத்து நிலங்களைப் பிடிப்பதும். பின் தேர்தல் காலங்களில் கொழும்பு பண மூட்டைக்காக பிடித்த நிலத்தை இராணுவத்திடம் விட்டுக்கொடுப்பதும் நாம் அறியாத ஒன்றல்ல.) கடந்த 30 ஆண்டுகாலம் தர்பார் ஆட்சி நடத்திய புலிகளையும் அவர்கள் செய்து முடித்த விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தின் உண்மையான காரணங்களையும் கண்டறியாது மீண்டும் மீண்டும் ஆய்வாளர் அரசியல் நிபுணர் என்று ஏதேதோ பெயர்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களையும் இந்த ஊடகங்களையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தவது உண்மையாக மக்களை நேசிப்பவர்களுடைய கடமையாகும்.

எந்தவொரு நாடும் குறிப்பாக வல்லரசுகள் தமது நலன்சார்ந்த அரசியலையே முன்னெடுக்கிறார்கள் என்பதை அறிய அரசியல் வல்லுனராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜோர்ஜியா மீது ரஸ்யா படையெடுத்ததும் பின் சவுத் ஒசெற்றியா அப்ஹாசியாவை தனி நாடாக அங்கிகரித்ததும் அந்த இரு நாட்டு மக்களின் நலன்சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மேற்கு நாடுகள் கொசோவோவை தனிநாடாக அங்கிகரிக்க முடிவெடுக்கப்பட்டதும் கொசோவோவின் நலன்சார்ந்து அல்ல. (ஆனால் அங்கு சவுத் ஒசெற்றியா, அப்ஹாசியா, கொசோவோ மக்கள் நலன் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை.)

சீனாவினுடைய பொருளாதார விஸ்தரிப்பு வாதம் இந்திய பொருளாதாரத்தில் ஆளுமையுள்ள அமெரிக்காவையே விழுங்கிவிடுவது போன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக இந்தியாவும் சீனாவும் இந்து சமுத்திரத்தில் போர் தொடுக்கப் போகிறார்கள் என்று ஆய்வுசெய்வது சரியான ரூமச். இலங்கையிலே உருவாகி உள்ள சீனாவினுடைய ஆளுமை இந்திய நலனுக்கு ஆபத்தாக இருந்தால் அதை இந்தியாவும் றோவும் பார்த்துக் கொள்ளட்டும். தங்களது சொந்த மக்களையும் புலிகளின் தலைமையையும் ஆய்வு செய்தே கொன்றொழித்த இந்த ஐபிசி ஆய்வாளர்கள் இந்தியாவிற்காக ஆய்வு செய்து இந்தியாவை அழித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. புலிகளின் புலனாய்வு அளவிற்கு றோவை குறைத்து மதிப்பிட முடியாது. நடந்த சம்பவங்கள் அப்படி இருக்கிறது.

எத்தினை பெரிய தியாகங்களைச் செய்து வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டத்தை காப்பாற்ற வக்கில்லாத புலிகளுக்கும் புலி ஆய்வாளர்களுக்கும் இந்திய நலன்களை எப்படிக் காப்பாற்றுவது என்று ராஜதந்திரம் தெரித்திருக்கிறது என்றால் அது எவ்வளவு நகைப்பிற்குரியது. இதற்குள் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஐபிசியில் அட்வைஸ் வேறு. புலிகளிடமும் இந்த ஆய்வாளர்களிடமும் ஒரு தடவை இந்தியாவை ஆட்சி செய்யுங்கள் என்று ஆட்சியை ஒப்படைத்திருந்தால் ஆறு மாதத்தில் அந்த மண்ணில் சிறுபான்மை இனங்களே இருந்திராது. அத்தனை சிறுபான்மையினரும் சீனாவில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பார்கள். முஸ்லிம்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கும் பங்களாதேசுக்கும் விரட்டி அடிக்கப்பட்டு இருப்பார்கள். இதற்குள் ராஜதந்திர ஆய்வு செய்கிறார்கள்.

அமெரிக்கா சத்தம் போடாமல் இருக்கவே ஒபாமாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய புலிகளும் அவர்களின் பக்த கோடிகளும் ஒரு பேச்சுக்கு தமிழீழத்துக்கு நாங்கள் ஆதரவு என்று யாராவது ஒரு அமெரிக்க அதிகாரி சொல்லியிருந்தாலே அமெரிக்கா போலந்திலும் செக்குடியரசிலும் நிறுவவுள்ள ஏவுகணை எதிர்ப்பு ராடர்கருவிகளை காங்கேசந்துறையில் பூட்டி இந்தியாவை மட்டுமல்ல அதற்கு மேலேயள்ள சீனாவையும் ஒரு கை பாருங்கள் என்று வெள்ளைத் தாளில் கையொப்பமிட்டு கொடுத்திருப்பார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுடைய ஆய்வும் ஆவியும்.

யாழ். இரவுநேர பஸ் சேவையில் மாற்றம்

jaffna_town.jpgயாழ்ப் பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்ட நேரத்தில் இப்போது  மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து யாழ். குடா நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான இறுதி பஸ் சேவை நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய நேரப்படி இந்த பஸ் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் என வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் பதில் பொது முகாமையாளர் எஸ். சிவனேந்திரன் அறிவித்தள்ளார்.

இரவு 9.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுவந்த ஊரடங்குச் சட்டம் தற்போது 11.00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.   இதனால், யாழ்ப்பாணத்தில் கடந்த பல வருடங்களாக இரவில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்த நிலைமை மாறி,பொது மக்கள் இரவு நேரத்திலும் படிப்படியாக நடமாடத் தொடங்கியுள்ளனர்.

வர்த்தக நிலையங்களும் இரவு 7.00 மணிவரை திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தக் கூடிய நிலையும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 2ஆவது சர்வதேச விமான நிலையம் திஸ்ஸ மஹாராமயில் நிர்மானம்

இலங்கையின் இரண்டாவது  சர்வதேச விமான நிலையம் திஸ்ஸ மஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த உடமத்தலாவப் பகுதியில் நிர்மானிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தின் பெயர் தகஷின் லங்கா சர்வதேச விமான நிலையம்  என்பதாகும்

இதன் நிர்மானப்பணிகள் இரண்டு கட்டமாக இடம் பெறவுள்ளதுடன் 3ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  முதலாம் கட்ட நிர்மானப் பணிகளுக்காக 2000 கோடி செலவிடப்படவிருக்கிறது.

கோரம் இன்றி சபை ஒத்திவைப்பு

26parliament.jpgகோரம் இன்மையால் இன்று பிற்பகல் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுக்கான குறை மதிப்பீட்டு விவாதம் சபையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை சபையில் போதிய கோரம் இல்லை என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை சபைக்கு அழைக்கும் மணி ஒலிக்கப்பட்டது.

02:05 மணி முதல் 02:10 மணிவiரை மணி ஒலித்தபோதும் மொத்தம் 8 உறுப்பினர்களே அங்கு ஒன்று கூடினர். சபையை தொடர்ந்து நடத்துவதற்கு குறைந்தது 21 உறுப்பினர்கள் தேவை என்பதால் கோரமின்றி சபை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி நிருவாகத் தலைவர் அறிவித்தார்.

கிழக்கு மாகாணக் கட்டடங்களில் புலிகளின் பெயர்கள் : உடன் அகற்றுமாறு உத்தரவு

கிழக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பெயர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யூ.கே. வீரவர்தனா சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த உத்தரவை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்,

“இதனை அமுல்படுத்த தவறும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் தெரிவித்துள்ளார். ‘பாடசாலை மற்றும் கட்டிடங்களுக்கு தனி நபர் பெயர் சூட்டப்படல்’என்னும் தலைப்பிலான அந்த சுற்றறிக்கையில்,

“கடந்த காலங்களில் அரசாங்க பாடசாலைக் கட்டிடங்களுக்கு பயங்கரவாத அமைப்பின் பிரதேச தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை அண்மையில் மூதூர் மற்றும் சம்பூர் பிரதேச பாடசாலைகளுக்கு சென்றிருந்த போது அவதானிக்க முடிந்தது.

பாடசாலைகள் ஆரம்பத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டதோ அந்த பெயரே அமுல் படுத்தப்பட வேண்டும்.பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இருந்த பெயர்,வலயம் மற்றும் தற்போதைய பெயர் ஆகிய விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஒரு பாடசாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடனும் மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடனும் எனது அனுமதிக்காக முன் வைக்கப்பட வேண்டும்.

பிரதேச பயங்கரவாத தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும்.வலய கல்விப் பணிப்பாளர்கள் மேற்பார்வை செய்து இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இந்தத் தவறை திருத்தம் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் எனக்கு அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையால் உலகையே ஆட்டிப் படைத்த மைக்கல் ஜாக்ஸன் இன்று காலமானார்!

25michael_jackson.jpg
பிரபல பொப் இசை நட்சத்திரமான மைக்கேல் ஜக்சன் லொஸ் ஏஞ்சலில் இன்று தனது 50வது வயதில் காலமானார்.

ஜக்சனின் சுவாசம் நிறுத்தப்பட்டவிட்டதாக வியாழன் நள்ளிரவு அவசர மருத்துவப்பிரிவினர் லொஸ் ஏஞ்சலில் உள்ள அவருடைய பெவர்ல் கில் இல்லத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரு மணித்தியாலங்களின் பின்னர் இவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் தொடர் இசைநிகழ்வுகளை நடத்ததுவதற்காக யூலை 13ல் லண்டனுக்கு வருவதாக ஏற்பாடாகியிருந்ததது.

Michael Jackson’s Website/Blog:
http://www.michaeljackson.com/

ஜூன்:26, சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), – புன்னியாமீன்

international-day-in-support-of-torture-victims.jpg

மனித உரிமைகள் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் அதிகமாகக் கதைக்கப்பட்டு வரும் இந்த மிலேனிய யுகத்தில் இதுபோன்ற ஒரு தினம் பற்றி சிந்திக்க வேண்டியிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விடயமே. மனிதன் எவ்வளவு முன்னேறிவிட்டாலும் ‘மனிதனை மனிதன் வதைப்படுத்தும்” காட்டுமிராண்டித்தனத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை. மாறாக நாகரிகம் வளர வளர மனிதனை வதைப்படுத்தும் உத்திகளும் நாளுக்குநாள் நவீனத்துவமடைந்து கொண்டு போவதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியுமோ முடியாதோ – ஏற்றுத் தான் ஆக வேண்டியுள்ளமை மனித குலத்தின் ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது ஐக்கிய நாடுகள் பொதுசபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலும், ஆறுதல் தெரிவுக்கும் வகையிலும், மனோரீதியான முறையில் அவர்களுக்கு விமோசனமளிக்கும் ஏற்பாடுகளை செய்யும் அடிப்படையில் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் படி சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் உலகில் விடுதலை, நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் இத்தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. இன்று உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவு நல்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படை நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சித்திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயற்படுகின்றன.

சித்திரவதை என்பது “உடலால், உளத்தால் நோவினையும் வேதனையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது” என்று பொருள் கொள்ளப்படுகின்றது. சித்திரவதை தொடர்பாக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையிலும் மேற்படி வாக்கியமே வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

சித்திரவதைபற்றி நாங்கள் சமயபுராணக் கதைகளில் இருந்தே நாம் கற்றிருக்கின்றோம். இவ்வுலகத்தில் தீமைபுரிவோர் நரகலோகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு வேதனைப்படுத்தப்படுவர் என்று அக் கதைகள் கூறுகின்றன. இந்துக்களின் சைவ சமய பாடக்கதைகளிற் சமயகுரவரான அப்பர் சமணர்களால் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றித்தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சமணர் அதிகாரமிழந்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றியும் அறியக்கிடைக்கிறது. இயேசுபிரான் தலையிற் முட்கிரீடம் சூட்டப்பட்டுப் பாரச்சிலுவை சுமத்தப்பட்டுப் பின் அதன்மீதே ஆணிகளால் அறையப்பட்டார் என வேதாகமம் சொல்கிறது. சித்திரவதை என்னும் எண்ணத்தின் தோற்றுவாய் சமயப்புராதண கதைகளிலும் சமய சித்தாந்தங்களிலும் ஆரம்பமாகி விடுகின்றது. உலக வரலாற்றில் இருண்ட காலத்திலும் மத்திய காலத்திலும் அடிமை முறையின் கீழும் சமய முறையின் கீழும் சித்திரவதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. எனவே சித்திரவதைகள் என்ற எண்ணக்கரு மனிதனின் ஆரம்ப காலங்களில் இருந்தே தோன்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

வரலாற்று சம்பவங்களை ஆராயும்போது மத்திய காலத்திற் குறிப்பாக 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிற் சித்திரவதை மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இக்காலம்வரை நீடித்து வருகின்றது. முன்னைய காலங்களைவிட நவீன காலத்தில் சித்திரவதைகள் மிகவும் அதிகரித்திருப்பதை போல தென்படுவதற்கு ஊடகங்களின் வளர்ச்சியையும் வெளிப்படையாகக் கூறலாம். இரண்டாம் உலக யுத்த காலத்தில் மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய அநாகரிகமான வரலாறு எழுதப்பட்டது. ஜேர்மனிய நாசிகளால் யுதர்கள் மீது புரியப்பட்ட சித்திரவதைகளும் கொலைகளும் உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்று ஆராயும் போது மனிதர்களின் பரம்பரை அலகுகளை ஆராய்ந்த மருத்துவர்கள் ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய நிறமூர்த்தஅலகுச்சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள். ஆனால் சித்திரவதை எனும் செயல் முறை புறநடையான தனிமனித இயல்பினாற் மேற்கொள்ளப்படும் ஒரு சிறுநிகழ்வாகக் கருதப்படமுடியாது. ஏனெனில் இது திட்டமிடப்பட்ட செயல்வடிவமாகவும், தத்தமது நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு ஆயுதமாகவும் கையாளப்பட்டு வருவதினால் நிறமூர்த்த அலகுகளுக்கும் இங்கு ஈடுபடும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்குமென கருத முடியாது. ஜனநாயக ரீதியிலும்சரி தீவிரவாத அடிப்படையிலும்சரி உலகத்திலுள்ள எல்லாவகையான அதிகார சக்திகளும் தமது இருப்பைப் பேணவே சித்திரவதையைச் செய்கின்றன. சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்கி அரசாங்கம்-மக்கள் உறவு வரை இதையே அவதானிக்க முடிகிறது.

நவீன காலத்தில் சித்திரவதையின் நோக்கங்களாக செய்த குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்தல், தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல் அல்லது தமக்கு சாதகமான தகவலையறிய தூண்டுதல். கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல், தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களைத் துன்புறுத்துவதற் கூடாகத் தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல், தனது கொள்கைகளை முன்வைத்தல் எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக்கொண்டதாக உள்ளன. எனவே நோக்கங்களை வகைப்படுத்துவதென்பது இங்கு கடினமான ஒன்றாகும். இன்றைய கால கட்டங்களில் குற்றம் ஒன்றை நிரூபிப்பதற்கு வேறுபல வழிகள் இருக்கின்ற போதும், தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ளபோதும், அல்லது அத்தகவல்களைப் பெற்றபின்னரும் கூடச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மனிதனின் அநாகரிகத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

சாட்சி ஒருவரைச் சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் அவரது உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அழித்துவிடச் சித்திரவதை செய்பவர்கள் விரும்புகிறார்கள். சாட்சி ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை அழிக்கப்படுவது அதிகார சக்திகளுக்கு மிகவும் தேவையானதாகும். ஏனெனில் அரச அமைப்பை எதிர்த்துப் புரட்சி செய்பவர்கள், பிழையான தலைமையை எதிர்ப்பவர்கள் அவற்றுக்கெதிரான கருத்தியலையும் நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களது கருத்தியலும் நடத்தைகளும் இன்னும் பலரையும் தொற்றிகொள்வது தமது அதிகாரத்தைப் பேணவிரும்புகிற அரசாங்கத்திற்கோ தலைமைக்கோ ஏற்புடையதல்ல. எனவே இத்தகையவர்களின் மன உறுதியை உடைத்துவிடுவது அதிகார சக்திகளுக்கு அவசியமானதாகும்.

சர்வதேசமன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றன எனப்பட்டிருந்தது. உலகம்முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10 இல் இருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சித்திரவதையானது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிகழ்த்தப்படுகின்றது. உடலியல் ரீதியான சித்திரவதைகள் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு வழிவகுக்கின்றன. சித்திரவதையானது இராணுவம் பொலிஸ் முதலாளிகளது அடியாட்கள் அல்லது போராளிகளின் ஆயுதக்குழுக்கள் சாட்சியினை கைதுசெய்வதுடன் ஆரம்பிக்கிறது.

சித்திரவதை என்பது ஒரே முறையைக் கொண்டதல்ல. இது ஒவ்வொரு அமைப்புகளுக்கேற்ப வேறுபடும். இருப்பினும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் பின்வரும் அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ளன.

தாறுமாறான தாக்குதல்: தடி, இடுப்புப்பட்டி, மண்நிரப்பிய எஸ்லோன் குழாய், போன்றவற்றினால் மிருகத்தனமாக உடலெங்கும் தாக்குதல் போன்றவை இதனுள்ளடங்கும்.

திட்டமிட்ட தாக்குதல்: தடிகளால் பாதங்களில் தாக்குதல், ஒரே நேரத்தில் இரு காதுகளிலும் அறைதல், முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல், போன்றவை இதனுள் அடங்கும்.

மின்சாரச் சித்திரவதை : மின்சாரம் பாய்ச்சப்படும் போது உடலில் கடும் நோவுடன் கூடிய வலிப்பு தோற்றுவிக்கப்படுகிறது.

மூச்சுத்திணற வைத்தல்: இவ்வகையான சித்திரவதைகளின் நோக்கம் சாட்சியை மிகக்கடுமையான திணறலுக்கு உட்படுத்துவதாகும். இவ்வகைச் சித்திரவதையின் போது சாட்சி மரணமடைந்துவிடாதபடி கைதியின் நாடித் துடிப்பை சித்திரவதைசெய்பவர் கணித்தபடி இருப்பார். இந்நிலையில் மரணங்கள் ஏற்படுவதும் உண்டு.

எரிகாயங்களை உண்டாக்குதல்: எரிகின்ற சிகரட்டினால் உடலின் மென்மையான பாகங்களில் சுடுதல். தீயில் நன்கு எரிக்கப்பட்ட கம்பிகளால் சுடுதல்.

கட்டித்தொங்கவிடுதல்: இருகைகளையும் முறுக்கிக் கட்டி தொங்கவிடுதல், இருகால்களையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுதல், ஒருகை அல்லது ஒருகாலில் மாத்திரம் கட்டித் தொங்கவிடுதல் போன்றவை இதனுள் அடங்கும்.

உடற் பாகங்களைப் பிடுங்குதல்: தலைமயிர், நகங்கள், நாக்கு, விதைகள், பற்கள் என்பவற்றைப் பிடுங்குதல் அல்லது உடைத்தல் அல்லது நசுக்குதல்.

பாலியல் ரீதியான சித்திரவதைகள்: உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை உண்டுபண்ணுகிற ஒரு சித்திரவதையாகும்.

உளவியல் ரீதியான முறைகள்: தனிமைப்படுத்தி வெறுமையை உண்டாக்கி மன அழுத்தத்திற்கு உட்படுத்தல்:

அதீதிமான பயமுறுத்தல்கள்:

இப்போது சில நாடுகள் பயன்படுத்தும் சித்திரவதை முறைகள்
இவற்றைவிட அதிகக் கொடுமையாக இருக்கிறதாக மனித உரிமை அறிக்கைகள் கூறுகின்றன. இதற்காக வேண்டி விதம் விதமான கருவிகளும், ஐயறிவுஜீவிகளும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. இன்று சித்திரவதை என்பது தொழில் முறையாகவும் கலைநுணுக்கம் நிறைந்ததாகவும் நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுவதாகவும் மாறியுள்ளது. சித்திரவதை செய்வோர் சித்திரவதைக்குள்ளாகி உயிர் வாழ்பவர்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து கைதியை மரணமடையச் செய்யாமல் அதே நேரத்தில் எவ்வளவு கடுமையாகச் சித்திரவதைகளைச் செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். Frederic Forsythe எழுதிய ‘Fist of God’, எனும் நூலில் அவர் வித விதமான சித்திரவதை முறைகளை விலாவாரியாக விவரித்திருக்கிறார்.

இவ்வாறு சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்ட பின்பு சாட்சியானவர் சித்திரவதை செய்யப்படவில்லையென மருத்துவரொருவர் சான்றிதழை வழங்குவார். அல்லது சாட்சி தான் சித்திரவதை செய்யப்படவில்லை என ஒப்பதல்வாக்குமூலமொன்றில் கையொப்பமொன்றை அல்லது விரலடையாளமொன்றை இடவேண்டியிருக்கும். இந்த நடவடிக்கைகள் அரசாங்கங்கள் தமது தூய்மைத்தன்மையைப் பேணிக்கொள்ள கடைபிடிக்கும் வழிமுறையாகும்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), இன்று என்ற அடிப்படையில் சித்திரவதைக்கு ஆளானவர்கள் நிலை பற்றி நோக்குதல் அவசியமானதாகும். சித்திரவதையின் விளைவுகள் சடுதியாக அல்லது நீண்டகால அடிப்படையில் வெளிப்படுபவையாக இருக்கலாம். அதேபோல சிகிச்சையின்போது உடனடியாகவும் குணமடையலாம். சிலதாக்குதல்களுக்கு நீண்டகால சிகிச்சையும் தேவைப்படலாம். சிலசந்தர்ப்பங்களில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்நாள் உள்ளவரை தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக உடல் அங்கவீனம், இனப்பெருக்க ஆற்றல் இழப்பு போன்றவற்றை நிரந்தர விளைவுகளாகக் குறிப்பிடலாம்.

சித்திரவதைக்குட்பட்டவர் தாக்கப்பட்ட நிலையில் வெளிப்படையான காயங்கள், இரத்தக்கண்டல்காயங்கள், சிறிய பாரிய எலும்பு முறிவுகள் என்பனவும் ஏற்பட்டிருக்கலாம். பற்கள் உடைதல் பற்கள் இல்லாது போதல் முழுப் பற்களும் காலப்போக்கில் உதிர்தல் போன்றனவும் அவதானிக்கப்படுகிறது. மூட்டுக்களில் நோ, மூட்டுக்கள் வீங்குதல், நீண்ட தூரம் நடக்கமுடியாமை போன்ற தசை, வன்கூட்டுத் தொகுதிகளுடன் தொடர்புடைய விளைவுகளும் ஏற்பட இடமுண்டு.
மூச்சுத் திணறவைக்கும் சித்திரவதை முறைகளால் சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். அதேநேரம், வயிற்றழர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. இது தவிர இழைய வீக்கம், தசைத் தொழிற்பாடு மந்தமடைதல் போன்ற நோய்களும் தோன்றுகின்றன. சித்திரவதைக்குள்ளான அனேகமானவர்கள் இருதயம், சுவாசப்பை, உணவுக்கால்வாய் தொகுதி, மூளை ஆகியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்களைக் கொண்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உடலியல் ரீதியான சித்திரவதையின் விளைவுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படின் அவற்றிலிருந்து ஓரளவுக்காவது மீள முடியும். ஆயினும் சித்திரவதையினால் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு சிகிச்சைகளை மேற்கொள்வதே உடலியல் சிகிச்சையை விட முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதற்காக வேண்டி இன்று பல்வேறுபட்ட கவுன்சிலின் நடவடிக்கைகள் நிறுவன மட்டங்களிலும் தனியார் மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சித்திரவதை செய்யப்பட்டவர் தான் மாற்றப்பட்டுவிட்டதாக, தனது அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதாக ஏற்படும் உணர்வினை கலைவது கடினம். சித்திரவதைக்கு முன்பு உறுதியானவராகவும்

பலமுடையவராகவும் இருந்த அவர் சித்திரவதையின் பின் உறுதியை இழந்தவராக களைப்படைந்தவராக மாறிவிடுகிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப அஞ்சுகிறார். மன அமைதியை இழந்து போகிறார். இது இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கின்றது.

சித்திரவதைக்குள்ளாகி உயிர்வாழும் அரசியல் கைதிகளின் நிலை மிகப் பரிதாபகரமானதே. ஏனெனில் இவர்கள் தாம் எதற்காககாகத் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பவற்றைக்கூட பிறருடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலையில் மாற்றப்பட்டு விடுகின்றார். மறுபுறமாக அவர்கள் எந்த அரசியல் சமூக வாழ்க்கை முறைகளை புரட்சிகரமானதாக கருதினார்களோ அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

பொதுவாக கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி, உறக்கமின்மை என்பன பொது நோய்களாக அமைந்துவிடுகின்றன. எனவே, சித்திரவதைக்குள்ளானோர் சமூகத்தில் அதிகமாக சிந்திக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்காக வேண்டி ஒரு தினத்தை மாத்திரம் உருவாக்கி இவர்கள் பற்றி சிந்திப்பதைவிட தினந்தோறும் பராமறிக்கக் கூடிய ஒரு குழுவினர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும். விசேடமாக மானசீகமான முறையில் இவர்களின் உளத்தாக்கங்கள் கலைய விளைய வேண்டியது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.