June

June

வருண்காந்தியின் சி.டி. பேச்சு உண்மையானது: தடயவியல் சோதனையில் முடிவு

21varun.jpgநாடாளு மன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வருண்காந்தி பேசிய விடயங்களை உள்ளடக்கிய சி.டி. ஆதாரம் போலியானதல்ல என தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பிலிபிட் மக்களவைத் தொகுதி பா.ஜ. வேட்பாளராக வருண்காந்தி போட்டியிட்டார். பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய போது அவர், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக குற்றசாற்று எழுந்தது.

இதனை வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்தார். இதன் பின்னர் அவரது பேச்சுகள் அடங்கிய சி.டி. வெளியானது. எனினும், அந்த சி.டி. போலியானது; ஜோடிக்கப்பட்டது என வருண் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சி.டி. ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வருண்காந்தி பேச்சுகள் அடங்கிய சி.டி. உண்மையானதுதான்; ஜோடிக்கப்பட்டது அல்ல என தெரிய வந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் இத்தகவலை பிலிபிட் மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பித்து உள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து வெளியிட்டதைக் கண்டித்து பிலிபித் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கைதான வருண் காந்தி, பிணையில் விடுதலை செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

நாங்கள் தோற்றதில் வருத்தமில்லை;புலிகள் தோற்றதுதான் கவலையாக இருக்கிறது: வைகோ பேச்சு

12vaiko000.jpg’மதி முகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில்
 
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க 50கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம். நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது’’என்று பேசினார்.

கச்சதீவில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் இல்லை – இந்தியாவுக்கு இலங்கை உறுதியளிப்பு

கச்சதீவில் கண்காணிப்புக் கோபுரத்தையோ அல்லது இராணுவ பிரசன்னத்தையோ இலங்கை அரசாங்கம் கொண்டிருக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளை அரசாங்கம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது. கச்சதீவில் கண்காணிப்புக் கோபுரத்தை நிர்மாணிக்கவும் இராணுவத் தளம் அமைக்கவும் இலங்கை அரசாங்கம் திட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

“இவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட பின் இலங்கைக் கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இவை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்து வரும் நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மேற்கொள்ளப்படும் தரக்குறைவான குற்றச் சாட்டுகள், என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராமநாதபுரத்தில் இந்தியக் கடற்படையின் கரையோரக் காவல்படையும் மறுத்துள்ளதாக “இந்து’ பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.

1974 இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவில் கலங்கரை விளக்கம் போன்றதொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்ட சபையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உண்மையைக் கண்டறிவதற்கு கரையோரக் காவல் படைக் கப்பல் ஒன்று பாக்கு நீரிணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. சர்வதேச கடல் பரப்பிற்கு அருகே இந்திய கடல் பக்கத்தில் இந்தப் படகு நங்கூரமிட்டிருந்தது. அங்கிருந்தவாறு கச்சதீவின் ஏதாவது கோபுரம் கட்டப்படுகின்றதா என்பதை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். சர்வதேச கடற்பரப்பிலிருந்து 2 கடல்மைல் தூரத்தில் உள்ள கச்சதீவை அவர்கள் பார்வையிட்டனர். பைனாகுலர் மூலமும் அவர்கள் கச்சதீவை பார்வையிட்டனர். ஆயினும் அவர்களால் அங்கு கோபுரம் எதனையும் பார்க்க முடியவில்லை. அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர அங்கு வேறெந்தக் கட்டிடமும் இல்லையென கரையோர காவல்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் “இந்து’வுக்குக் கூறியுள்ளார். கச்சதீவிலுள்ள அந்தோனியார் ஆலயம் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

இலங்கைத் தமிழர்களது எதிர்காலம் – ரவி சுந்தரலிங்கம்

SL_Tamils_Stop_&_Search - Photo_London Metroபாகம் 1
வன்னியன் பிரபாகரன்
புலிகளின் ஆட்சிக் காலம்

இலங்கையின் சரித்திரத்தில் 13ம் நூற்றாண்டு முக்கிய பாகத்தை வகிக்கின்றது என்றால் மிகையாகாது. 11ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில் உருவாகி சுமார் 150 வருடங்களாக இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்ட பொலநறுவ இராட்சியம் கலிங்க மன்னன் மாஹாவின் படையெடுப்புடன் முற்றுக்கு வந்த காலம் இது. இனிமேல் தென்புலம் தம்பலேனியா என்றும், இதுவரை “உத்தரதேச” என்றழைக்கப்பட்டு வந்த வடக்குப் பிரதேசம் யாழ்அரசாகவும் உருவெடுக்க மத்திய பகுதியில் ‘வன்னி’ என்ற பெயருடன் பல சிற்றரசுகள் (principalities) தோன்றின. அவற்றை ஆண்டவர்கள் பொதுவாக தமிழ் பேசுவோராக இருந்தமையும் “வன்னியர்” என்ற பொதுப் பெயரும் ஒரு இனத்தவர் என்ற தோற்றத்தைக் கொடுப்பினும் அவர்களது பாரம்பரிய தொடர்புகள் வேறுபட்டவையாகவே இருந்தன. மட்டக்களப்பு புத்தள வன்னியரகள் கேரளப் பிரதேசத்தின் முக்குவருடனும், திருகோணமலை யாப்பாணப்பட்டின வன்னியர்கள் தமிழ்நாட்டு சைவத்-தமிழர்களுடனும் தொடர்பானவர்களாக அமைய வடமத்திய பிரதேசத்து வன்னியர்கள் வேடர்களாகவும் சிங்களவர்களாகவும் இருந்தனர்.

16ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெள்ளையர்களது காலனித்துவத்தை சந்திக்கும்வரை சிங்களத் தேசத்தில் தமிழ்நாட்டு மன்னர்களது உதவிகளுடன் ஆட்சிகள் கைமாறியபடி இருந்தபோதும் யாழ்அரசும் வன்னி இராட்சியங்களும் பொதுவாக தாக்குபிடித்தபடி இருந்தன. பின்னர் காலனித்துவத்தில் 250 வருடங்களைக் கடந்தபின் அரசமைப்பு ரீதியில் இலங்கைத் தீவு ஒருங்கிணைக்கப்பட்டபோது உடமைகள் உரித்துகள் பற்றிய சர்ச்சைகள் எழுவது எதிர்பார்க்க வேண்டியதே. இவ்வாறான பண்டைய போர்வழியில் தமிழரின் இராசதானிகளை மீட்டெடுப்பதே அரசியற் போராட்டம் என்ற கருத்துடன் 30 ஆண்டுகளாக போர்புரிந்த புதிய வன்னியத்தின் தலைவன் பிரபாகரன் என்று கூறவதில் யாரும் பொறாமையோ ஆத்திரமோ கொள்ளமாட்டார்கள் என்பது கணிப்பு. ஏனெனில், அதே வழியில்தான் இன்று யாழ் பிரதேசத்தையும் திருமலையையும் மட்டக்களப்பையும் வன்னிப் பிரதேசத்தையும் தமதெனப் கோரி கொலைகளைச் செய்து அரசஅநுசரணைக்காக தம்மிடையேயும் போரிடுகிறார்கள் புதியவன்னியர்கள். இவ்வாறு எமது உபதலைப்புக்கான விளக்கம் அமைய நாம் தொடர வேண்டிய விடயங்கள் வேறு.

இதேவேளை, தமிழர்கள் என்றோர் இனம் இலங்கையில் உண்டா? இல்லை வன்னியர்கள் மட்டக்களப்பார் வடமராட்சியார் தென்மாராட்சியார் என்றென்ன சாதியத்தால் ஒடுக்கப்பட்டோர் எல்லோரையும் உள்ளடக்கிய “டாய்லித்துகள்” என்றும் ஒரு புதிய இனம் கூட உண்டா என்றெல்லாம் விசாரித்து எமது 30 வருட போராட்டத்தில் தமிழர்கள் என்ற இனத்திற்கு என்னானது என்று அங்கலாய்ப்பவர் பலர். இவற்றைவிட மூன்று இலட்சத்துக்கு மேலான எமது மக்கள் அரச முகாங்களுள் அடைக்கப்பட்டு அவஸ்தையில் வாழாதுவாழ்ந்து இறந்தும் கொண்டுள்ளனரே அவர்கள் கதி என்னாவது? மற்றவர் விலங்குகளில்லாத கைதிகளாக வாழ்கிறார்களே அவர்கள் நிலை வேறுபட்டதா, அல்லது முகாங்களில் இருப்பவர்களின் எதிர்கால மாதிரிகளா? இப்படி மக்களையும் அவர்களது எதிர்காலம் பற்றியும் ஏங்குபவர் கேள்விகள் ஒருபுறம் அமைய ‘தமிழீழப் போர்’ என்னாது என்ற கேள்வி மற்றும் சிலரை இன்னமும் ஐயத்தில் உள்ளாக்குகிறது.

சிறீ லங்காவுக்கு எதிராக போரில் ரைத்தானிக் (Titanic) போன்ற புலிகளால் முன்நின்று நடத்தப்பட்ட போர் முடிந்துவிட்டதா திரும்பவும் தொடருமா? அல்லது இவ்வளவுகாலமும் புலிகளால் தந்த விளக்கங்களின் கடற்பரப்பில் பனிமலைகளாய் தெரிய அகச் சூழல்களின் மனத்தாக்கங்கள் கப்பலின் நங்கூரம் போலாக எமது மக்களது எதிர்காலம் பனிச்சூழலில் சிக்குண்டே போய்விடுமா? என்றவாறு “இலங்கையில் தமிழர்கள் எதிர்காலம் என்ன?” என்பது பலத்த கேள்வியாக எழுவது நியாயமானதே. இக்கேள்வியின் அடித் தளத்தில் புதைந்து கிடக்கின்றன மேலும் எத்தனையோ கேள்விகள் சந்தேகங்கள்.

மிகவும் துன்பங்கள் தோய்ந்த மனங்களுடன் நேற்றைய உணர்வுடனே வாழும் எமக்கு ஆதங்கங்களோ பல, ஆனால் விளக்கங்களை தரக்கூடய தகவல்களோ சில. ஆதலால் ஐம்புலன்களில் கொண்டுள்ள நம்பிக்கையிலும் பார்க்க ஆறாவதைக் கொண்டே கணிப்புகள் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாது போகிறது. அரைகுறைத் தகவல்களுடன் ஆரோக்கியமான பதில்களைத் தருவது சாத்தியமானதல்ல. அப்போது முன்கூட்டியே கூறியவை சரியாக பரிணமிக்கும்போது ஞானிகளாகிடும் நாம் பின் வரப்போவதெல்லாம் சரியாக அமைந்திடும் என் திடத்தினை ஏற்றுவிடுவோமாகின் ஏமாற்றத்திலேயே மிதப்போம்.

எனவே, இக்கட்டுரை பிரயோகமானதாகவும் வாசகர்களது மனப்பூர்வமான பங்கும் இருக்க வேணடுமாயின் இன்று மக்களது மனதில் உறைத்தபடி உள்ள சில கேள்விகளுக்கு குறுகிய பதில்கள் சொல்ல வேண்டி உள்ளது. அதேவேளை, அவற்றிக்கான விளக்கங்கள் இல்லாது போகின் பதில்களின் பலன் மழுங்கி விடும் என்பதனால் விளக்கங்களை குறிப்புகளாகத் தருகிறோம்.

இவற்றின் பின்னடியிலேயே கட்டுரையின் பேரிலான ஆய்வுகளைத் தரமுடியும் என்பது எமது கருத்து.

கே: புலிகள் இராணுவ ரீதியில் தோற்று விட்டார்களா?
ப: இதுவரை காலமும் புலிகள் நடத்திய போர் இனிமேலும், ஒரு கணிசமான காலத்திற்கு தொடர முடியாதது.

(குறிப்பு 1: ஆயுதப் போராட்டம், மக்கள் போர், இராணுவ ரீதியில் அமைந்த போராட்டம், மக்கள் போராட்டம் என்பவற்கிடையே பாரிய வேறுபாடுகள் உண்டு.)

(குறிப்பு 2: புலிகளின் தோல்வி எனும்போது எதனை குறிக்கின்றோம்? புலிகளது போராட்டத் திட்டமும், அரசியற் சாணக்கியமும், உலக-அதிகார-அரசியலின் அறிவும், அவர்களது ஆலோசகர்களது ஆற்றலும் எவ்வகைப்பட்டவை என்பது அவர்களது முடிவிலிருந்தே யாரும் ஊகித்துக் கொள்ளலாம். எனவே, அந்நிலைக்கு ஏன் வந்து சேர்ந்தார்கள் என்ற கேள்வியையும் விட்டுவிடுவோம். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி புலி எதிரப்புத் தன்மைகளையும் கடந்து கேட்கப்பட வேண்டியவையும் உள்ளன. (1) ஒருவனை பன்மடங்கு பலம் கொண்டவன் தோற்கடிப்பது ‘போர்’ என்ற வழியில் பெரும் விடயம் அல்ல. (2) அதிலும் பிராந்திய பலவானின் அனுசரிப்புகளுடன் மண்ணிலும் விண்ணிலும் பெறக்கூடிய துப்பறிவுத் தென்புடன் தோற்கடிப்பது ஆச்சரியமுமல்ல. (3) மேலும் சகல வல்லரசுகளின் கூட்டு அனுசரணையும் இராணுவ உதவிகளும் வழங்கப்பட்டும் உள்ளன என்ற அறிவும் கிட்டும்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்பதிலும் பார்க்க “ஒரு சின்ன-மனிதனின் தோல்வி என்பதன் பொருள் என்ன?” என்ற கேள்வியே மீதமாகிறது.)

கே: புலிகளது தோல்வி தமிழ் மக்களுக்குமான தோல்வியா?
ப: ஒரு சொல்லில்: இல்லை!

(குறிப்பு 3: வெற்றி தோல்விகளை எடைபோடுவதும் அவற்றைக் கொண்டு மக்களது எதிர்காலம்பற்றி கணிப்புகள் செய்வதும் சுலபமான காரியமல்ல. அதற்கென்ற பக்குவமும் அறிவும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கமாட்டாத மனப்பாங்கும் அவசியம். மேலும், வெற்றிகள் தோல்விகளால் ஏற்படும் (1) உடனடித் தாக்கங்கள் என்ன? (2) அவற்றின் அடிப்படையில் தொடரக் கூடிய நீண்ட காலத் தாக்கங்கள் என்ன? என்பவற்றை சேர்த்தே பார்திடுவதற்கு அவை அனைத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய, ஏற்கனவே உருவாகிவரும் தொலை நோக்கும் அதற்கான விருட்சமும் அவசியம்.)

(குறிப்பு 4: மக்களின் தோல்வி என்பதற்கும் அவர்களது அதிபதிகளது தோல்வி என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்று கூறு கூட பொருளற்ற கருத்து.

அமரிக்க இந்தியர்கள் பூரணமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாரும்தான் ஒத்துக் கொள்வர். ஏன்? அவர்களது சமூகத் தலைவர்கள் ஒவ்வொருவராக இராணுவரீதியில் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதாலா? இல்லை, வடதுருவத்திலிருந்து மெக்ஸிக்கோ வரை உள்ள பிராந்தியத்தியத்தை வெள்ளையர்களிடம் இழந்து விட்டார்கள் என்பதாலா? அதேவேளை மத்திய அமரிக்காவில் இருந்து தென் துருவம்வரை வெள்ளையர் வருகையுடன் அடங்கி ஒதுங்கி வாழ்ந்த அவர்களது சகலர்கள் தம்மை மீளார்த்தனம் செய்து கொள்வதை என்னென்று சொல்வது? அவர்களும் தோற்கடிக்கப்பட்டவரகள் அல்லவா?

வடக்கில் சரி கிழக்கில் சரி அமரிக்காவின் உரிமையாளர்கள் போர்களில் தம்மிலும் பல்மடங்கு பலம் வாய்ந்த எதிரிகளிடம் தோல்வி கண்டார்கள் தமது சொத்துகள் அனைத்தையும் இழந்தார்கள். ஆனால் கிழக்கில்மட்டும் தம்மை அதிகாரத்தில் மீழமைப்பு செய்யக் கூடியவர்களாக உள்ளனர் அது எப்படி?

இலங்கையில் இன்று இடம்பெற்றுள்ள இராணுவத் தோல்வி தமிழர்களது சரித்திரத்தில் புதியதல்ல. முழுத் தீவினையும் ஒரு அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்திட வேண்டும் என்பதற்கான போர்களின் வரிசையில் இன்று ஒப்பேறியது கடைசியாவதும் அல்ல. பொலநறுவா இராசதானியின் விழுக்காட்டின் பின்னடியில் (14ம் நூற்றாண்டு) யாழ் இராசதானி தோற்கடிக்கப்பட்டதும் மக்கள் தமது தமிழ் அடையாளத்தை அதற்கு ஏற்றவாறு கையாண்டமையும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சகல தமிழ் மக்களையும் ஒன்றிணைக்க போரிட்டதும் சரித்திரம். அப் போரில் இன்று தோற்கடிக்கப்பட்டதும் சரித்திரம். ஆனால் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்களா?

மக்கள் ஒருபோதும் போர்களினால் தோற்பதில்லை. ஒரு இனமாகத் தங்குவதற்கு அத்தியாவசியமான சமூகக் கட்டுகளை இழந்து போகும்போது, அல்லது இழந்து போய்விட்டதாக ஏற்றுக் கொள்ளும்போதே அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். மற்றய வேளைகளில் அவர்கள் முற்றாக நிர்முலம் செய்யப்படுகிறார்கள். ஆகவேதான், எம்மைப் பொறுத்தவரை மக்கள் முற்றாக ஒழிக்கப்படுவதையே மக்களது தோல்வி எனக் கருதுகிறோம்.)

கே: புலிகளது தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் உள்ளாரா?
ப: இல்லை.

(குறிப்பு 5: நாமோ புலிகளது அங்கத்தவர் அல்லது ஆதரவாளர் என்ற நிலையில் ஒருபோதும் இருந்திராத போது ஒரு-இயக்கத்தின்-தலைவர் என்பதன் பிரகாரம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கில்லை. அவர்கள் தம்முள் வாக்குவாதப் படுகிறார்கள் என்பதனால் அதற்கும் ஒரு கருத்துச் சொல்லிட வேண்டும் என்ற அவாவோ அவசரமோ எமக்கு இல்லை.

அப்படியானால், பிரபாகரன் என்பவர் தமிழர்களுடைய ஏகபோகப் பிரதிநிதிகள் என்கிற அமைப்பின் தலைவர் அதாவது தமிழ் தேசியத் தலைவர் என்ற அழுத்தத்தின் கீழ் வாழ்ந்த தமிழ் பிரஜைகள் என்ற ஒரேஒரு காரணத்தாலேயே எமது பதிலைக் காண வேண்டும்.

எனவே, (1) தமது போரின் நிலைபற்றி, இறந்த தனது இராணுவ வீரர்கள்பற்றி அறிவிக்க முடியாது, (2) மக்கள், அதுவும் புலிகளையே நம்பி அண்டி வாழ்ந்தவர்கள், சிறீ லங்காவின் இராணுவ முகாங்களில் அவஸ்த்தைப் படுவதைக் கண்டும் ஆறுதல் கூட சொல்ல முடியாது, (3) சிங்கள சோவனிசவாதிகளது தமிழ்பிம்பங்களாக, சிங்கக் கொடியின் எதிர்மாறான புலிக் கொடியின் அதிபதியாக வெற்றிகளுடன் இருந்துவிட்டு இன்று சிங்களச் சோவனிசவாதிகள் மீண்டும் எக்கதாளம் போடுவதை கண்டும் புலிகளின் பாணியில் பதில் கூறாது (4) எமது மக்களது வாழ்வில் தலை போடும் உலக நாடுகள் அனைத்தும் “புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள்” என்ற கருத்தை எமக்கே கூறி அடுத்த நகர்வுகள் பற்றி தாமே முடிவுகள் எடுக்கும் போது, ஒரு தேசியத்தின் தலைவர் எக்காரணத்தாலும் ஒளிந்து வாழ்வது பொறுப்பான காரியம் அல்ல. அதனை மட்டுமே கண்ணியமான நிலைப்பாடாகக் கொண்ட நாம் பிரபாகரன் உயிர் இழந்து போய்விட்டாரா இருக்கிறாரா என்பதற்கு பதில் காண வேண்டிய அவஸ்தையில் இல்லை. ஆனால், தலைவர் அவர்தான் அவரைவிட்டால் வேறொருவரும் உதவாது என்ற நம்பிக்கையில் காலத்தை விரையம் செய்த புலிகளகளின் ஆதரவாளர்களுக்கு அவர்கள் மீது தமது அன்பைக் கொட்டியே வாழ்ந்தவர்களுக்கு ஒரு திடமான பதிலைத் தர மிகவும் கட்டுப்பாடான அமைப்பு என்று கூறியவர்கள் இயலாது போனது மிகுந்த கவலைக்குரியது. மேலும், எமது மக்களது போராட்டத்தை தானாகவே தனியச் சுமக்க முயன்ற மனிதனுக்கு, மற்ற எந்தத் தமிழ் தலைவனிலும் பார்க்க பாரிய இராணுவ வெற்றிகளை ஈட்டிய தந்திரோபாரத் தளபதிக்கு இறுதி வணக்கத்தை செலுத்த முடியாது போய்விட்டதே என்பது புலிகளது போக்கிற்கு எப்போதும் எதிர்ப்பினைக் காட்டிவந்த எமக்கே வேதனை என்றால்? இது முதலைக் கண்ணீரோ மாற்றார் மனதைக் கவர எமது முயற்சியோ அல்ல.)

கே: புலிகளது அழிவை உலகநாடுகள் விரும்பியது ஏன்?
ப: முதலாவதாக, (1) புலிகள் ஒருபோதும் தகுந்த அரசியற் தீர்வை ஏற்கப் போவதில்லை (2) அதற்கான அரசியற் சாணக்கியமோ அதன் தலைமையின் அமைப்பில் வளைவு-சுழிவுகளிலான வாயில்கள் இல்லை (3) புலிகளது தலைமையால் பிராந்திய பூகோள ரீதியிலான அரசியற்-கேந்திர நிலைப்பாடுகளை புரிந்து கொள்ளவோ அவற்றை ஏற்றுக் கொள்ளவோ முடியாது (4) பிரபாகரனிடம் இருந்து பெறாத புலிகளது வாக்குறுதிகள் ஒப்பந்தங்கள் செல்லா கடுதாசிகள் (5) புலிகள் தனிமனிதப் பயங்கரவாத நடை முறையை தமிழரிடையேயும் இலங்கையின் மற்றய சமூகங்களிடையேயும் சர்வ தேசிய ரீதியிலும் பாவனத்தில் கொண்டவர்கள். என்ற காரணங்களைக் கூறலாம்.

இரண்டாவதாக, (1) எந்த நாட்டின் இறைமையை தேசியவாத அடிப்படையில் ஆயுத ரீதியில் புரட்டிடுவதை வல்லரசுகளும் பிராந்தியப் பலவான்களும் அநுமதிக்க முடியாது. (2) ஒரு புதிய நாட்டின் பிறப்பு வல்லரசுகளடையே அல்லது பிராந்திய பலவான்களிடையே ஏற்ப்படும் இயங்கியல் நியதிகளில் மட்டிலுமே தங்கி இருக்க முடியும். (3) மூன்றாவது உலக நாடுகளின் சமூக-மாற்றங்கள் (social transformation) வளர்ந்த நாடுகளின் தேசியத்துவங்களுடன் ஒப்பீடு செய்ய முடியாதது.

மூன்றாவதாக, இந்தியா சீனா ஆகிய பிராந்திய வல்லரசுகள், இருதுருவ சர்வதேசிய அரசியல் சிதைந்து போனதிலிருந்து, (1) தம்மிடையேயான போட்டிகள் எவ்வகையாயினும் தமது பிராந்தியங்களில் மூன்றாம் பகுதியினரின் தலையீட்டை தவிர்ப்பதிலும் மிஞ்சினால் அவற்றின் தாக்கத்தை குறைப்பதிலும் கருத்தாக இருக்கின்றன. (2) தத்தமது நடவடிக்கைகள் காலப்போக்கில் “ஆசியக்-கேந்திர” நிலைப்பாடு ஒன்று உருவாகுவதற்கு ஏதுவாக அல்லது குந்தகம் இல்லாததாக அமைவதை விரும்புகின்றன.

(குறிப்பு 6: உலக நாடுகள் எல்லாம் எல்லா விடயங்களிலும் எப்போதும் தலைபோடுவது கிடையாது. நாடுகளின் தலையீடுகள் யாதார்த்த ரீதியில், (1) எமது தீவில் இடம்பெறும் போரினால் தமக்கு சார்பான-எதிரான விளைவுகள் (2); தமது கருமங்களின் பட்டியலின் ஒழுங்கில் அக்கணிப்புகளின் பிரகாரம் தாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையின் அத்தியாவசியம் (3) தமது நடவடிக்கையின் விளைவுகள், என்பவற்றில் தங்கி இருக்கும். அவை இலட்சியக் காரணிகள் என்ற ரீதியில், (1) பிராந்தியப் பலவான்களின் தேவைகள், அவற்றின் அவசியங்கள் (2) பிராந்தியப் பலவான்கள்-வல்லரசுகளின் நடை முறைப் போட்டிகள் (3) சகலரும் இணங்கிக் கொள்ளும் விடயங்கள் என்பவற்றில் தங்கி இருக்கும்.)

(குறிப்பு 7: அமரிக்கா ஒரு சுதந்திர நாடாக ஆங்கிலேயரிடமிருந்து விடுபட்டு, பிராந்தியப் பலவானாகி, வல்லரசுமாகி, இன்று தான் மட்டுமே ஒரேஒரு வல்லரசு என்ற நிலைப்பட்டிற்கு 200 வருடங்களில் வந்துசேர்ந்துள்ளது. அங்கிருந்த பூர்வீகக் குடிகளை முற்றாக அழித்தொழிந்திருந்தும் கறுப்பு இனமக்களை பிரஜைகளாகவல்ல ஏன் மனிதர்களாகவே ஏற்க முடியாது என்ற சட்டங்களை 1960கள் வரை கொண்டிருந்த அமரிக்கா இன்று தன்னை மனிதாபிமானத்தின் பிரதிநிதியாக நியமித்துள்ளது. தனது பாதுகாப்பு கேந்திர அபிலாசைகள் என்றவாறு தனது சுற்றாடலில் மட்டுமல்ல அகிலத்தின் நான்கு கோடிகளிலும் பயங்கரவாதிகளை அரசேற்றியும் பயங்கரவாதத்தை பரப்பியும் வைத்த அதே அமரிக்கா இன்று ஜனநாயகம் என்ற தனது புதிய ஆங்கில-ஷாக்ஸன் சித்தாந்தத்தை, காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவத்தை பரப்பியது போல, கலாச்சாரப்-போர் ஒன்றினை முன்நின்று நடத்துகிறது. அதற்காக நாடுகளை ஆக்கிரமித்து கைப்பற்றி சமூகங்களை மனிதர்களை கூட்டோடு அழித்திடவும் தயாராக உள்ளது. ஆனால் 9-11 என்பதை உலக அரசியலின் எல்லைக் கல்லாக்கி “பயங்கரவாதத்திற்கு” எதராக பெரும் போர்களையும் நடத்துகிறது. நாடுகளின் இறைமை என்று பிறருக்கு அளந்திடும் போதிலும் தனது நீண்டகால நண்பனான பாக்கிஸ்தானின் பிரதேசத்துள் கூட இராணுவ நடவடிக்கைகள் எடுக்கிறது. முதலாளித்துவத்தின் பாதுகாவல்-வீரனாக(champaion) தன்னை முன்வைத்திடும் அமரிக்கா அதன் பேரில் உலகெலாம் தனது வீச்சை வளர்த்து பாதுகாப்பதை கடமையாகக் கொண்டுள்ளது. அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் தலையீடுகளுக்கும் எதிரானவர்கள் கூட அதனது வீச்சை, அது ஏற்படுத்தும் இயங்கியற் நியதிகளை அவற்றின் இருப்பை நிராகரித்திட முடியாது. கண்களை மூடியபடி மந்திரங்களை உச்சரிப்பது போல அமரிக்க எதிர்ப்புக் கோஸங்களுடன் மட்டும் காலம் கடத்திட முடியாது.)

அமரிக்கா போலவே பிராந்திய பலவானாகவும் இன்று பிராந்திய வல்லரசாகவும் வளரும் இந்தியா, தன்னைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இடம் பெறும் சர்ச்சைகள் யாவற்றையும் குறைந்தபட்சம் தனது கவனத்தில் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான காரணங்களாக, (1) வெளியார் பிரச்சனைகள், உறவுகள் (உ. ம்: தமிழர், காஸ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்ற உறவுகள்), உணர்வுகள் (உ. ம்: போராட வேண்டும், மக்கள் அமைப்புகள், மாற்று அதிகாரக் கட்டுகள் வேண்டும் என்ற உந்தல்கள் போன்ற உணர்வுகள்), புதிய சித்தாந்த அல்லது நடைமுறைக் கருத்துக்களால் (உ. ம்: தேசியம், வர்க்கம், மனித உரிமைகள் என்பவை அவற்றின் கலப்புப் பிறப்புகள் போன்ற கருத்துக்கள்) தொற்று நோய்களாக உள்வருவதை தடுப்பது (2) தனது பிராந்தியத்தில் இடம்பெறும் விடயங்களின் வீச்சையும் ஆழத்தையும் நிச்சயம் செய்வதில் தானே கூடிய பங்கினை வைத்திருப்பது (3) தனது பிராந்தியத்தில் பிறத்தியாரின் தலையீட்டை மட்டுப் படுத்துவது (4) தனது உலகளாவிய செல்வாக்கை மேம்படுத்திடுவது (5) தனது கருவிகள் இயலுமைகள் ஆற்றல்கள் தொழில் நுட்பத் துறைகளின் முன்னேற்றத்திற்கான தருணம் என பாவித்துக் கொள்வது என்பவற்றை முதற்கண் குறிப்பிடலாம்.)

(குறிப்பு 8: ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரிகளுக்கும் எதிராக எத்தனையோ கோஸங்களை தொண்டை கிழிய கத்துவதென்று முடிவு செய்துவிட்டாலும், குறைந்தபட்சம் இப்பாதையில் எவற்றினை அடைவது என்ற மைல்கற்கள் இல்லாவிடில் எப்படி எமது அடிகளை முன்வைப்பது? இந்தியா ஒரு நாடா? நாடென்றால் அது முன்னேற்றமானதா? அது உண்மையாக ஜனநாயகம் கொண்டதா? அங்குள்ள மக்கள் இனங்களாகவும், வர்க்கங்களாகவும் சுதந்திரமானவர்களா? இந்தியா இலஞ்சத்தின் தலைநகர் அல்லவா? அங்குள்ள அரசியல்வாதிகள் கொலைகாரர்களும் கள்ளர்களும் பொய் சொல்பவர்களுமல்லவா? இப்படியாக ஆயிரம் கேள்விகேட்டு காரியங்கள் எதுவுமே செய்யாது வாயடித்து வாழ்பவர்கள் சுவருடன் மோதுவது போல காரியம் ஆற்ற முயன்று மடிந்த புலிகளை வையாதிருப்பர் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. இலங்கைத் தீவை அடியோடு வெட்டி சீனாவிற்கு அல்லது அமரிக்காவிற்கு அருகில் இழுத்துச் செல்லும் வரை இந்தியாவின் தலையீட்டினை தவிர்த்துக் கொள்ள முடியாது என்பதையும் ஆகவே, அத் தலையீடுகளின் எதிர்மாறான அல்லது சாதகமற்ற விளைவுகளை எப்படி குறைத்துக் கொள்வது என்பதில் கவனம் செலுத்துவதும்தான் இன்று ஒரே வழி என்பதையும் ஏற்றாகத்தான் வேண்டும். வெற்றுச் சித்தாந்தங்களும் மக்கள் அமைப்புகளும் மட்டும் போதுமாகின் புலிகளுக்கென்ன ஜே.வி.பியினருக்கும்தான் நடந்ததை நாம் மீளாய்வு செய்ய வேண்டும்.)

கே: புலிகளின் போர் முற்றிலும் விரையமானதா?
ப: இல்லை!

முதலாவதாக, (1) சின்ன மனிதராலும் பாரிய இராணுவ வசதிகள் கொண்ட நாட்டுடன் “போரிட” முடியும் (2) அப்போரின் வெற்றிகளால் சில அரசியல் நிலைப்பாடுகளைக் கூட ஏற்படுத்த முடியும் (3) சிறு தொகையினராகினும் பிழையான வழிமுறைகளைக் கொண்டாவது அவர்களுள் கணிசமான விகிதாசாரத்தில் இளைஞர்களை “போரில்” ஈடுபடுத்த முடியும் (4) “சரி” என்ற நம்பிகை இருப்பின் சின்ன மனிதர்கள் இந்தியா போன்னற வல்லரசையும் கையாளலாம். இவ்வாறான சமூக-மனோவியல் ரீதியான தாக்கங்களைக் கூறலாம்.

இரண்டாவதாக, (1) பிராந்திய தமிழ் மக்களது அபிலாசைகளின் எழுச்சி (2) தமிழர்களது சமூக-மாற்றம் (3) தமிழர்களது தேசியவாதத்தை சர்வதேசியமயப் படுத்தியமை (4) இஸ்லாமியர்களது தனித்துவம் முன்னிறுத்தப் பட்டமை. என தமிழர்களிடையேயும் தமிழ் பேசும் சமூகங்களிடையேயும் ஏற்பட்டுள்ள அரசியல் மேலும் அவற்றினூடான பொருளாதாரத் தாக்கங்களைக் குறிப்பிடலாம்.

மூன்றாவதாக, (1) MOU-2002 (2) ஒஸ்லோ ஒப்பந்தம் என்பவற்றாலான சிறீலங்கா அரசியற் அமைப்பு மீதான தாக்கங்களைக் குறிப்பிடலாம்.

(குறிப்பு 9: இன்று பெரிய இனங்களாகத் திரண்டு காண்பவை அன்று, குடியானவர் சமூகங்களின் ஆரம்பக் காலங்களின் முன்னர், தாமாகவே ஒன்று சேர வேண்டிய அல்லது அதன் பின்பு ஒன்று சேர்க்கப் பட்ட சின்ன இனங்களின் கூட்டுகள். தேசியஇனங்கள் இனங்கள் என்பவற்றை நாம் எப்படிக் கணிப்பது என்பது தர்க்கத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய பாரிய கேள்வி. எம்மைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்பதை என்றென்றும் கூறிவந்துள்ளோம். மேலும், வடஐரோப்பிய (மேற்கத்திய) உற்பத்தி முறையில் (mode of production) உருவான தேசியம் என்ற வரையறுப்புகளுக்கும் ஆசிய-உற்பத்தி முறையில் கிராமிய அமைப்பு வடிவத்தில் உருவாகி காலனித்துவத்தூடாக வலுக்கட்டாய சமுதாய-மாற்றங்கள+டாக 200 வருடங்களைக் கடந்து வலுக்கட்டாயங்கள+டாக “நாடுகளாக” பரிணமித்த மக்கள் பிரதேசத்தில் இக் கேள்விகளை எப்படி முன்வைக்க வேண்டும் என்பதே முக்கியமான விடயம்.)

(குறிப்பு 10: ஆனால் தேசிய இனங்களோ இல்லையோ தன்னுணர்வு கொண்ட அல்லது எமது நிலைமை போல புறத் தேசியத்தின் வலுவால் தன்னுணர்வு ஊட்டப்பட்ட சமுதாயங்கள் “வளரும்” “நாடுகளில்” மிகப் பல. இன்று அவை யாவுமே அரச- பலாத்தகாரத்தினூடாக ஒரு பொதுத்-தேசியத்துள் ஒன்றுபடுத்துவதற்காக தாக்கப்படுகின்றன, பயங்கரவாதத்திகு உள்ளாக்கப் படுகின்றன. அதற்கான காரணம் பொதுவாக அவர்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள இயற்கை தந்த செல்வங்களே என்பது உண்மை. பெருவின் (Peru) மலைக்காடுகளை பணமாக்குவதற்கு வெளிநாட்டு பெரும்-முதலாளிதுவத்துடன் கூட்டாக உள்நாட்டில் காலனித்துவத்தின் எச்சச்-சமூகங்கள் துணைபோவதும் அத்தேச இந்தியர்கள் தாக்கப்படுவதும், அல்லது பிரேஸிலின் காட்டுவளங்களை அந்நிலங்களின் கீழ் புதைந்துகாணும் தாதுப் பொருட்களை மண்-நெய்யை பெறுவதற்காக அந்நாட்டு இந்தியர்கள் கொல்லப்படுவதும் அப் பிரதேசங்களிலிருந்து அகற்றப் படுவதும், இதுபோல ஆயிரம் அன்றாட நிகழ்வுகளை உலகெங்கும் குறிக்கலாம். ஆனால், பாக்கிஸ்தானின் ஸ்சுவாட் மலைச் சாரல் பிரதேசங்களில், பர்மாவின் கரன் மக்களது கிராமங்களில் அவர் பிரதேசத்தில், இலங்கையில் தமிழரது பாரம்பரிய பிரதேசங்களில் அஷபஸானில் (Azerbagan) உள்ள நகூனகரபாஷின் ஆமீனியர் (Armenia) மீது நடத்தப்படும் தாக்குதல்கள் போன்றவை வௌ;வேறு காரணிகளைக் கொண்டவை. ஆனால் சின்ன மனிதர்களது எதிர்காலம் என்பதில் ஒன்றுபடுத்தப் படுபவை.)

(குறிப்பு 11: சின்ன மனிதர்ளைச் சேர்த்ததுதான் பெரிய இனங்கள் என்றால், சின்ன மனிதர்கள் ஏன்தான் போராடிட வேண்டும்? அவ்வாறான சமூக-மாற்றங்கள் இயற்கையின் ஓட்டமாயின் ஏன்தான் எதிர் நீச்சல் போட வேண்டும்?
மனிதனோ வெறும் பொருளாதார ஓட்டங்களில் மட்டுமே தங்கிய காலம் போய், அவற்றின் நியதிகளைத்; தாண்டி, தனிமனித வாழ்வுகளுடன் ஒட்டி மீண்டும் பொதுமனித உணர்வுகளின் பெறுமதியை தனது நுகர்வுகளால் பெற்றபின் உணர்வு ரீதியில் தாமாகவே ஒன்றென்பதும் அவ்வொருமையை நாடி அதனைப் பேண முயல்வதும் இ;யற்கையின் சமூகவியல் நியதிகளே. அவர்கள் சின்ன மனிதர்கள் என்பதால் மட்டும் அவர்களது அந்த-உணர்வை தடுத்துவிட முடியாது. இதுவொரு காரணியே போதும் பல நூறு காரணங்களை காலாகாலத்தில் வாதங்களாகத் முன்வைப்பதற்கு.

ஏன் எமது போராட்டத்தில் ஒரு பொது-அடையாளத்தை வலக்கட்டாயமாக கொடுக்க முனைந்ததின் விளைவை நாம் காணவில்லையா? தமிழீழம் என்பது எவ்வளவுதான் சிங்கள-பெரும்-தேசியவாதத்திற்கு தர்க்க பூர்வமான பதிலாகத் தோன்றினும், அதனது போர்வைக்குள் தமிழர்களது ஒவ்வொரு சமூகத்தையும் அணைத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், தமிழீழம் என்ற வரைவுக்கு பூர்வீகநிலம் என்ற உரித்து உத்தரவாதமாக இருக்க வேண்டியதால் அப்பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுடன் உறவுகளை பேணிடும் அரசியற் கட்டுகளையும் கொண்டிருக்க முடியவில்லை.

தமிழீழப் பிரதேசத்துள் வாழும் இஸ்லாமியரை ஏற்றுக் கொள்ள முடியுமாயின், அவர்களது இருப்பை, நில உரித்தில்லாத அந்தப் பிறஇனத்தின் குடியேற்றத்தை ஏற்றுக்;கொள்ள முடியுமாயின், சிங்களவரது குடியேற்றங்களை எப்படிக் கணிப்பது? இஸ்லாமியரகள் தமிழ் பேசுபவர்களாக இருப்பதாலா, அப்படியாயின் அவர்களது சிங்களம் பேசும் உறவினர்களது உரித்து என்னாவது? சிங்களவரது இருப்பை திட்டமிட்ட அரசக் குடியேற்றம் என்றதால் நிராகரிப்பதாயின், இஸ்லாமியர்கள் அங்கு இருந்துவிட்டதால் பெற்ற உரித்து என்ற ரீதியில் ஏற்பதாயின் நிலங்களை சட்டபூர்வமாக சிங்களவர் வாங்கிக் குடியேறிவிட்டால் எப்படிக் கணிப்பது? இவை விளக்கங்கள் பெறக்கூடிய விடயங்களா? அல்லது தமிழீழுக் கோரிக்கையால் தீர்க்க முடியாத உள்முரண்பாடுகளா?

அவை எவையாகினும் தமிழீழம் எனும் பொது-அடையாளத்துள் யாவரும் அடங்கவிலை என்பது திண்ணம். அதிலும் சின்ன மனிதர்களாக கிழக்கிலும் ஏன் இன்று வடக்கிலும்தான் தமது அடையாளங்களை சில சமூகங்கள் தேடுகின்றன என்பதே ஆதாரங்கள் நாம் தொடுத்த வாததிற்கு.

எனவே சின்ன மனிதர்கள் தமது அடையாளங்களை வெறும் இனம் என்பதன் அடிப்படையிலேயே கோரிடும் உரிமை யாரும் வழங்காமலே அவர்களுக்கு உண்டு. தேசியம் என்பது அவர்கள் அனைவரும் வௌ;வேறு சமூகளாக தமது அடையாளங்கள் என்பவற்றைத் தாண்டி, பொருளாதார சமூக-மாற்றங்களில் மேலும் ஓருபடி உயர்வதற்கு பொது அடையாளத்தின் பாதுகாப்பையும் அநுசரணையையும் தேடும்போதே சகல சமூகங்களையும் ஆட்கொள்ளும் தர்க்கீகமாகிறது.)

(குறிப்பு 12: சின்ன மனிதர்களது இருப்பு உலகிற்கு ஏன் தேவை என்பதற்கு அவர்களது சுயநிலை வாதத்திலும் பார்க்க மாற்றார்களது அவசியங்களோ அதிகம். அந்தமான் தீவிலுள்ள ஆதிவாசிகள் பாவிக்கும் மூலிகைகள் நாகரிக உலகத்தின் புதிய வியாதிகளுக்கே மருத்துவமானது என்பது வியப்பானதாக இருக்கவேண்டுமா? அல்லது பாரம்பரிய வாழ்க்கை முறையில் தங்கி இருப்பவர்கள் தமது உடலால் ஆன இயல்புகளில் மேம்பட்டவர்கள் என்பதும், நாகரீக மனிதர்களாகிய நாம் ஒருகால் களைந்தெறிந்துவிட்டு இன்னொருகால் தேடுவதும் அவை என்பதையும் நாம் உணர்ந்துள்ளோமா? கலாச்சார நாகரீகம் எவ்வளவுதான் இயற்றுமையின் புதிய-உருவாக்கங்களின் எல்லைகளைத் தேடி அடையினும் சின்ன மனிதர்களது பிரத்தியேக அறிவுகளும் ஆற்றல்களும் அவற்றினை மெருகூட்டும் என்பதை புரிந்துள்ளோம் அல்லவா? ஒவ்வொரு விலங்கினமும், ஏன் நுண்ணுயிர்கள் கூட அழிந்து போகும்போது நாமும் ஒருபடி அழிந்து போகிறோம் என்பதை உணர்ந்துள்ளோமா இல்லையா? இவ்வாறான நுகர்வுத் தன்மைகளை அவற்றினை எட்டிடும் ஆறறிவினை கொண்டவர்களாயின் சின்ன மனிதர்களது இருப்பின் அவசியத்தை எவ்வாறு சர்ச்சையாக்கிட முடியும்?)

புலிகளது அதிகாரக்காலத்தின் ஒருபகுதியையே இங்கு தந்துள்ளோம். இன்னுமொரு தருணத்தில் மற்றும் சில பகுதிகளை எமது பார்வைக்கு உட்படுத்த வேண்டி உள்ளோம். அவற்றின் அடிப்படையிலேயே எமது மக்களது எதிர்காலம் பற்றிய சில கருத்துகளை திடமாக முன்வைக்க முடியும் என்பது எமது கணிப்பு.

-நன்றி.

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary(ASATiC)
20 ஆனி 2009

இன்று 21 ஆனி 2009 தேசம்நெற்றினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தமிழர்களின் அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் கூட்டத்திற்காக ரவி சுந்தரலிங்கத்தினால் எழுதப்பட்ட கட்டுரை இது.

தொண்டமானாறு நீர்த்தடுப்பணையின் மீள் நிர்மாண பணிகள் ஆரம்பம்

jaffna-000.jpgகுடா நாட்டின் முக்கியமான நீர் அணைக் கட்டுகளில் ஒன்றான தொண்டமனாறில் ஆரம்பமாகவுள்ள பாரிய புனர் நிர்மாண நடவடிக்கைகளை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பார்வையிட்டனர்.

குடாநாட்டின் பிரதேசங்களான வலிகாமத்தையும் வடமராட்சியையும் இணைக்கும் பகுதியான தொண்டமானாறு, உப்பாறு பிரதேசத்தில் உள்ள நீர்த் தடுப்பணைத் திட்டம் பாரியளவில் புனர் நிர்மாணத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டினூடாக கடல்நீர் உட்புகுவது தடுக்கப்படுவதுடன் அதன் தென்பகுதியில் மழை நீரைத் தேக்கி நிலத்தடி நீரை நன்னீராக்கும் பாரிய திட்டம் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாக திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும், நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் காரணமாக இத்திட்டம் சீர்குலைந்ததுடன் முழுமையடையவில்லை.

எனினும், மஹிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் செயற் திட்டத்திற்கமைய தொண்டமானாறு தடுப்பணைத் திட்டமானது பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் குடாநாட்டில் நிலத்தடி நன்னீரை பாதுகாக்கும் பாரிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி திட்டத்தையும், உயரதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைபுகளையும் பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் தொடர்ச்சியாக பிரசித்திபெற்ற தொண்டமானாறு செல்வச் சந்நிதி தேவஸ்தான பகுதிக்கும் சென்ற பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கு திரண்டிருந்த மக்களையும் சந்தித்து கலந்துரையா டினார்கள்.

ஈராக்கில் ‘டிரக்’ குண்டு வெடி – 72 பேர் பலி

21-iraq.jpgஈராக்கில் இன்று டிரக் குண்டு வெடித்ததில் சுமார் 72 பேர் வரை பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சுமார் 200 பேருக்கு மேல் பலத்த காயமடைந்துள்ளனர். ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய நாளில் இருந்தே அங்கு அடிக்கடி தற்கொலை படை தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த மாதம் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக படைகளை ஈராக்கில் இருந்து வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்க ராணுவம்  முழுமையாக திரும்ப பெறப்படும் என தெரிகிறது.

இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஈராக்கில் மேலும் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்கூக்கிற்கு தெற்கே சுமார் 16 கிமீ., தூரத்தில் இருக்கும் தாஷா என்ற பகுதியில் இருக்கும் மசூதியில் டிரக் வெடிகுண்டு வெடித்தது. இதில் மசூதியில் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி கொண்டிருந்த ஏராளமானவர்கள் பலியானார்கள். அந்த மசூதி மற்றும் அருகில் இருந்த பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் சுமார் 72க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என தெரிகிறது. 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பெறுப்பேற்கவில்லை.

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

Thesam Logoஅண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஓர் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறையுடைய ஒவ்வொருவரையும் இந்த சடுதியான அரசியல் இராணுவச் சுனாமி பாதித்துள்ளது. பல்வேறு கசப்புணர்வுகளையும் வலிகளையும் கடந்து அடுத்த கட்டம் நோக்கி நாம் பயணிக்க  வேண்டியுள்ளோம். நாம் கடந்து வந்த பாதைகள் மிகக் கரடுமுரடானதாகவும் மிக மோசமானதாகவும் இருந்தள்ளது. ஆதலால் எமது அடுத்த நகர்வு பற்றி மிகவும் கவனமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் பன்மைத்துவ அரசியல் பின்னணியுடைய புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்தவதற்கு முன் தங்களிடையே ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தவது அவசியமாகும். பரஸ்பரம் புரிந்துணர்வுடன் இக்கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு உங்களை அழைக்கின்றோம். இக்கலந்துரையாடலில் பங்கேற்று நிகழ்வை ஆரோக்கியம் உள்ளதாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தேசம் சஞ்சிகை ஒரு பொது ஊடகம் என்ற வகையில், இன்றைய காலத்துடன் தொடர்புபட்ட விடயங்களை விவாதிப்பதற்கான ஒரு தளமாக இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் இக்கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு  பலரும் வலியுறுத்தியதால்  இந்த உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தித் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

நீங்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்வதன் மூலம் கலந்துரையாடப்படும் விடயங்களை தவறவிடாது தொடர முடியும். மேலும் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மீண்டும் மீண்டும் பேசுவதையும் தவிர்க்க முடியும்.

இக்கலந்டதுரையாடல் ஆக்கபூர்வமானதாக அமைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இக்கலந்துரையாடல் ஒரு பொதுக் கூட்டம் அல்ல. அழைக்கப்படுபவர்களுக்கு மட்டுமாக மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அழைப்பிதல் கிடைக்காதவர்கள் கலந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

காலம் :
21 யூன் 2009,  ஞாயிறு மாலை

தொடர்பு :
த ஜெயபாலன்: 07800 596 786     ரி கொன்ஸ்ரன்ரைன்:  0208 905 0452   ரி சோதிலிங்கம்  07846 322 369

இங்ஙனம்
தேசம்.

‘தந்தையர் தினம்’ – புன்னியாமீன்

fathers-day.jpgஇன்று ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. பொதுவாக ஜுன்மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடுவர். நாட்டுக்கு நாடு,  இத்தினம் வேறு வேறு நாட்களில் கொண்டாடப்படும். குறிப்பிட்ட தினத்தில் தான் கொண்டாட வேண்டும் என்று ஒரு விதிமுறை இல்லை. நவீன யுகத்தில் வேலைப்பழுகள் அதிகரித்த இக்கால கட்டத்தில் அன்னையர், தந்தையர் தினங்களை வைத்துத்தான் இன்றைய பிள்ளைகள் அம்மாவையும் அப்பாவையும் நினைவு வைத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பிள்ளைகளுக்காகவாவது இத்தினத்தை நினைவு கூரவேண்டியுள்ளது.  பெற்றோர்களை மறக்காமல் இருக்க இப்படியான தினங்கள் கட்டாயம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்ற அளவிற்கு இந்நினைவு தினங்கள் மாறி விட்டன. எவ்வாறாயினும் ‘தந்தையர் தினம்’ என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான,  அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.

தந்தையர் தினம் அவசியம் கொண்டாடப்பட வேண்டியதொன்று என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.ஏனெனில் சர்வதேசதினமாக நினைவு கூரப்படுகிறது என்றால் சமூகத்தில் அதற்கான அந்தஸ்து குறைந்து விட்டது  என்பதுதானே பொருள்? தந்தைக்குரிய அந்தஸ்தை இந்த சமூகம் வழங்க மறுக்கும் பட்சத்தில் அதனை நினைவுகூருவது கடமையல்லவா என்பது இன்னும் சிலரின் வாதம். ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் தாயுடன் ஒப்பிடுகையில் தந்தைக்கு அந்த வீட்டில் வழங்கப்படும் அந்தஸ்து மிகவும் குறைவுதான். வயோதிபர் மடங்களில் கூட பெண்களைவிட ஆண்களின் சதவீதமே அதிகமாக காணப்படுகிறது. காரணம் குடும்பங்களில் தாய்க்கு வழங்கும் அந்தஸ்து தந்தைக்கு வழங்கப்படுவதில்லை.

த‌ன்னை வ‌ள‌ர்த்த‌ த‌ந்தை,  என்ற‌ பாச‌மிகுதியால் ம‌ன‌ம் கோணாம‌ல் க‌வ‌னித்துக் கொள்கிற‌ பிள்ளைகள் இருக்கும்வ‌ரை  த‌ந்தைய‌ர்க‌ளுக்கு எத்தினமும் சுப‌தின‌ம்தான்! எல்லா அப்பாக்களுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை; பிள்ளைகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு ஒரு தினம் மாத்திரம் சுபதினமாக வருவதில் என்ன இலாபம் உண்டு என்பதும் கேள்விக்குறியே.

அன்னையர் தினம் வரும்,  பின்னே….. தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை,  தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் இத்தினங்கள் இருக்கவில்லை. அப்படியாயின் இத்தினத்தின் உருவாக்கம் பற்றி சற்றேனும் தெரிந்து கொள்ள வேண்டும். தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு,  பலவிதமான பதில்கள் கூறப்படுகின்றன. அமெரிக்கா நாட்டின்,  மேற்கு வேர்ஜினியாவில் 1908 ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று ஒரு சிலரும்,  வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்று சிலரும் சொல்வதுண்டு. சிக்காகோ நகரின் ‘லயன்ஸ் கழகத்தின்’ தலைவரான ஹாரிமீக் என்பவர் தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும்,  அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு ‘தந்தையர் தின நிறுவனர்’,  என்று பட்டமளித்ததாகவும் சில வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும்,  ‘தந்தையர் தினம்’ என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது ஓர் ஆணின் கடமையால்,  நன்றி கொண்ட ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு செய்து நிற்கிறது.

வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர்! 1862ல் நடந்த போரில் கலந்துகொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனேவுக்கு குடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16 வயதாகும்போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார். தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்தார். அவரை மறுமணம் செய்துகொள்ள சிலர் முன்வந்தபோது மறுத்துவிட்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வாலிபம் வீணாகிறது என்று செல்லமாகச் சொல்லி வளைத்துப் போடப் பார்த்த பெண்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகிவிடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியாமல் ,  சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே, என்பதாக‌ பிள்ளைகளை வளர்த்து வாலிபமாக்கினார். தம் தந்தையின் வாழ்க்கையை மிகப்பெரிய தியாக வாழ்க்கையாகக் கருதினார் – மகள் ஸொனோரா ஸ்மார்ட் டோட். அதுமட்டுமல்ல தமக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையை கெளரவிக்கவேண்டும் என்று எண்ணினார்.
அந்தக் கெளரவமும் தம் தந்தையோடு நின்றுவிடாமல் தந்தையர் ஒவ்வொருவருக்கும் அந்தக் கெளரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி.டோட் கருதினார்.

சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19ம் தேதியை தந்தையர் தினமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை 1909ம் ஆண்டு எழுப்பினார். கிறிஸ்தவ தேவாலயத்தின் ஊடாக,  மதகுருமார்கள் ஊடாக,  திருமதி. டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை,  பரப்புரையை ஆரம்பித்தார். ஏற்கனவே,  தாய்மார்கள் தினத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகைகள்,  திருமதி சொனாரா டொட்டின்,  தந்தையர் தினத்தை வரவேற்றுச் செய்திகளை வௌயிட ஆரம்பித்தன. ஸ்போக்கேன் நகர பிதாவும்,  கவர்னரும்,  திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள். 1916 ஆம் ஆண்டளவில் அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் இந்த தந்தையர் தினக் கருத்தை ஏற்றுக் கொண்ட போதும் அது,  தேசிய மயமாக்கப்படவில்லை.

1924 ஆம் ஆண்டு,  ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் தந்தையர் தினத்தை,  ஒரு தேசிய நிகழ்வாக பிரகடனம் செய்தார். 1926ல் நியூயார்க் நகரில் தேசிய தந்தையர் தினக்கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதன் பின் அந்த விசயம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டுதந்தையர் தினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது. அதன் பிறகும் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை. 1966 ஆம் ஆண்டு, அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த லின்டன் ஜோன்சன்,  யூன் மாதத்து 3 ஆவது ஞாயிற்றுக்கிழமையை அமெரிக்காவின் தந்தையர் தினமாக பிரகடனம் செய்தார்.

அதற்குப்பின் சில வருடங்கள் கழித்து ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் “தந்தையர் தினம்” அனுசரிக்க ஆணை பிறப்பித்தார். ஆயினும்,  உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு மாத தினங்களில்,  தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றதனை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக அவுஸ்திரேலியாவிலும்,  நியுசிலாந்திலும் செப்டெம்பர் மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம்.

தனது கோரிக்கைக் கனவு பலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி. டோட்,  அவரின் கனவு நனவானபோது அதைப்பார்த்து சந்தோஷப்பட அவர்உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் “தந்தையர் தினம்” என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை அவரின் முயற்சிக்குக் கிடைத்தவெற்றி என்றே சொல்லலாம்.

தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவதும்,  பிள்ளைகள் சிவப்புரோஜாவை தங்கள்சட்டையில் அல்லது தலையில் செருகிக்கொள்வதையும் வழக்கில் கொண்டுள்ளனர்! அப்பா இயற்கை எய்திவிட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிக்கொள்வது வழக்கம்! கடந்த ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினத்தன்று 150 மில்லியன் வாழ்த்தட்டைகள் விற்பனையானது; தந்தையர் தினத்தில் 95 மில்லியன் வாழ்த்தட்டைகள்! அன்னையர் தினத்தில் அன்னையர்களை வாழ்த்திய தொலைபேசி அழைப்புகள் 150 மில்லியன்! தந்தையர் தினத்தில் 140 மில்லியன்!அன்னையர் தினத்தில் அன்னையர் விரும்பும் துணிகள் பரிசுபொருட்களாகவும் தந்தையர்க்கு பரிசுப் பொருளாக “டை” யையும் அளித்திருக்கின்றனர்! அன்று விற்பனையான டைகள் எட்டு மில்லியன்! தந்தையர் தினத்தில் 23 விழுக்காடு தந்தையர்கள் உணவுவிடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக புள்ளிவிபரங்கள் புள்ளிகூறுகின்றன!

மறுபுறமாக தந்தையர்கள் தனது குடும்பத்திற்காக ஆற்றும் பணிகளையும் சற்று சிந்தித்தல் வேண்டும்

இந்திய உபகண்ட பிராந்தியத்திலும் சரி,  இலங்கையிலும் சரி தாய்க்குத் தான் சகல கெளரவங்களும்,  அம்மாதான் தியாகி,  பாசத்தில் இலக்கணம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்,  தெய்வத்தின் அளவுக்கு தூக்கி வைக்கிறார்கள். எனினும் குடும்பத்துக்காக மெளனமாக ஏகப்பட்ட தியாகங்களைச் செய்யும் தந்தையர் பற்றி நாம் அலட்டிக் கொள்வதேயில்லை. அம்மாவை வாங்க முடியுமா? என்ற ஒரு பாடல் இருக்கிறது. ஏனோ அப்பாவை வாங்க முடியுமா? என்று எழுதுவதில்லை.

எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்துவிடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள்! இராத்தூக்கம் பகல்தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த,  புரியும் தந்தையர்கள்! பற்றி எழுதுவதில்லை.

அப்பா என்பவர் ஒரு குடும்பத்தின் தியாகச் சுடர். குடும்ப த்தில் அவரது பங்களிப்பு ஐம்பது சதவீதமாக இருக்கின்ற போதிலும் நமது சமூகம் தாயையே முன்நிலைப்படுத்துவதால் தந்தை வகிக்கும் அந்த மிக முக்கியமான பகுதி மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஒன்றே. இந்த மதிப்பீட்டை வருடத்துக்கு ஒருமுறையேனும் செய்வதற்கும் விவாதிப்பதற்கு ஒரு தினம் அவசியம். இவ்வகையில் தந்தையர் தினம் இன்றியமையாதது

தந்தை தான் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். பொருளாதாரம்,  கல்வி,  கெளரவம்,  சுற்றம்,  வாழ்க்கைத்தரம் என்பனவற்றை பெற்றுத் தந்து பாதுகாப்பது தந்தையே. தனது தியாகத்தின் மூலம் குடும்பத்துக்கு பெறுமதியைத் தருகிறார். தந்தையின் இந்த நடவடிக்கைகளின் போது அவர் குடும்பத்தின் மத்தியில் சில அபிப்பிராயங்களையும் தோற்றுவித்து விடுகின்றார்.

கண்டிப்பானவர்,  வளைந்து கொடுக்காதவர்,  கர்வம் கொண்டவர் என்றெல்லாம் பெயர்களை அவர் சம்பாதித்துக்கொள்ள வேண்டியதாகிறது. இவற்றையும் கூட தியாகம் என்றுதான் கூறவேண்டும். அப்பா வின் இந்த நிலையை அம்மாதான் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இவை புரிந்து கொள்ளப்படாத விளக்கப் படாத நிலையிலேயே அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பிணக்குகள் தோன்றுகின்றன.

தியாகங்கள் பலவற்றை எதிர்பார்ப்பின்றி செய்யும் தந்தை மார் தன் வயதான காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்பை விரும்புவது இயற்கையே. தனது குறைந்தபட்ச தேவைக ளையாவது பிள்ளைகள் நிவர்த்தி செய்யலாமே என எண்ணுவார்கள். ஆனால் வாய் திறந்து கேட்பதில்லை. எனவே எதிர்காலத்தில் இதே நிலைக்கு ஆளாகவுள்ள பிள்ளைகள் தந்தைமாரின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது அவர்களது கடமை.

இதேசமயம் தந்தைமாரும் ஒரு காலக்கட்டத்தின் பின்னர் தனது ‘குழந்தை வளர்ப்பு கால’ தன்மைகளை,  விட்டுக் கொடுக்காத நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தான் தலைவனாகவும் நிர்வகிப்பவனாகவும் இருந்ததால் இப் போதும் அப்படித்தான் இருப்பேன் எனப் பிடிவாதம் பிடிப்பது அவருக்கு சாதகமாக அமையாது.

இது இப்படி இருக்க,  பெரும்பாலான தந்தைமார் தமது பிள்ளைகளின் தயவை அல்லது கவனிப்பை எதிர்பார்க்கின்ற பருவத்தில் அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து அவர்களது குடும்பங்களை நடத்துவதில் மிகுந்த நாட்டம் கொண்ட வர்களாகி விடுகின்றார்கள். இதனாலும் தந்தைமார் கவனிப்பின்றி கஷ்டப்பட நேர்ந்துவிடுகின்றது. பல தந்தைமார் வயதான காலத்தில் தமது கவச குண்டலங்களை இழந்து பேரப்பிள்ளைகளைக் கவனிப்பதில் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதைக் காணும்போது பரிதாபமாகத் தான் இருக்கிறது. தந்தையர் தினத்தில் இவர்களைப் பற்றி நாம் அதா வது பிள்ளைகள் சிந்திக்கத்தான் வேண்டும்.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். “

என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க நாம் இனியாவது செயல்பட்டு,  தன் த‌ந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக்கொள்வோம் என்று இந்த‌ ந‌ன்னாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக‌!!

அகதிகள் என்போர் வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல

21unhcr_.jpgஉல கெங்கும் யுத்தம் காரணமாகவும், துன்புறுத்தல்கள் காரணமாகவும் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர நேர்ந்துள்ள லட்சக்கணக்கான அகதிகள் சொல்லொனா சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நலனுக்கான உயர்ஸ்தானிகர் அண்டோனியோ குட்டெரெஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

உலகில் பெரிய அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் தற்போதைய தருணத்தில், மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் இடம்பெயர்ந்துள்ளவர்களும் அகதிகளும்தான் என ஐ.நா.மன்ற அகதிகள் நலன் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் காரணமாகவும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட தண்டனைகள் காரணமாகவும் உலக அளவில் இடம்பெயர நேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 4 கோடியே இருபது லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது.

ஆனால் அகதிகள் என்போர் வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல என்பதை ஐ.நா. அகதிகள் நலன் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஐ.நா.வின் உள்ளூர் ஊழியர்கள் இருவர் கைது

arrest.jpgஇலங் கையில் ஐ.நா. தொண்டு நிறுவன ஊழியர்கள் இரண்டு பேர் அரச அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த ஊழியர்கள் காணாமல் போனதாகத் தகவல் வந்து சில நாட்கள் கழிந்த பின்னரே அவர்கள் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமக்குத் தெரியவந்துள்ளதாக ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்த ஊழியர்கள் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன எதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது தொடர்பில் தங்களிடம் விபரம் இல்லை என்று ஐ.நா.அலுவலம் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும், வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் பணியாற்றி வந்த தமிழர்கள் என்று இலங்கையில் ஐ.நா. சார்பாகப் பேசவல்லர் ஒருவர் தெரிவித்துள்ளார்.