June

June

20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் -மீதியான நேர அட்டவணை

t20-world-cup.jpgஜூன் 15, இங்கிலாந்து மேற்கிந்தியா, மாலை 6 மணி

ஜூன் 15, அயர்லாந்து பாகிஸ்தான், இரவு 10 மணி

ஜூன் 16, நியூஸிலாந்து இலங்கை, மாலை 6 மணி

ஜூன் 16, இந்தியா தென் ஆபிரிக்கா, இரவு 10 மணி

ஜூன் 18, முதலாவது அரையிறுதி , இரவு 10 மணி

ஜூன் 19, 2 வது அரையிறுதி, இரவு 10 மணி

ஜூன் 21, இறுதிப் போட்டி, இரவு 7.30 மணி

வடபகுதி விவசாயிகளின் கடன்களுக்கு இலவச காப்புறுதி

வடபகுதி விவசாயிகளுக்கு இலங்கை வங்கி வழங்கு கின்ற சகல கடன்களுக்கு இலவசமாக காப்புறுதி வழங்க அவ்வங்கி முடிவு செய்துள்ளது. வடபகுதி விவசாயிகளின் மேம்பாட்டுக்கு உதவும் நோக்கில் இந்த காப்புறுதித் திட்டத்தை நடை முறைப் படுத்துவதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்திருக் கிறது.

இலங்கை வங்கியும், விவசாய காப்புறுதி சபையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவிருக் கின்றன. விவசாய கடன் பெறுபவர்கள் வரட்சி, வெள்ளம், விவசாய பாதிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போகும் பட்சத்தில் இந்த காப்புறுதி மூலம் நிவாரணமளிக்கப்படும் என இலங்கை வங்கித் தலைவர் காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கண்டெடுப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மறைத்து வைக்கப்ப்ட்டுருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், திருகோணமலையில், சேருநுவர பொலிஸ் பகுதியில், பொலிஸார் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

T56 ரக துப்பாக்கிகள் 210, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தற்கொலை அங்கிகள் ஆகியவை அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடத்தில், ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகையான ஆயுதங்கள் இவையாகும் 

”பத்மநாதன் அண்ணரின் கரங்களைப் பலப்படுத்துவோம்.” – தயா மோகன் விடுதலைப் புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

lttelogo.jpgஅன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன்.

இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும் அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால் இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள் நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும்.

உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால் அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும் விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால் நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும் எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…
தயா மோகன்
விடுதலைப்புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

இலங்கையில் சுமார் 37 ஆயிரம் சட்டவிரோத வெளிநாட்டவர் – கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

இலங் கையில் சுமார் 37 ஆயிரம் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி. அபேகோன் நேற்று தெரிவித்தார். ஒரு மாதகால வீஸாவில் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் வீஸாக்காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் சட்டவிரோத மாக தங்கியுள்ள இவர்களில் பலர் இங்கு தொழில் புரிவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்களை கைது செய்ய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய உதவுமாறு திணைக்களம் பொதுமக்களையும் கோரியுள்ளது. ஒரு மாத வீஸா மூலம் இலங்கைக்கு இலகுவாக வர வாய்ப்பு உள்ளதாகவும் இவர்களில் பலர் ஆசிய நாட்டவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் மீன்பிடித் தடைகள் நீக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு

fishermen.jpgகிழக்கு மாகாணக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட அறிவுறுத்தலின் படி இம்மீன்பிடித் தடை நேற்று முதல் நீக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. மூதூர் மற்றும் திருமலை மீனவர்களை நேற்று நேரில் சந்தித்துக் கூறினார்.

சுமார் ஐந்து வருடங்கள் கிழக்கு கடலில் மீன்பிடிப்பது மட்டுப்படுத்தப்பட்டும், தடைவிதிக்கப்பட்டும் இருந்தது தெரிந்ததே. தற்போது அமைதி நிலைமை ஏற்பட்டிருப்பதால் மீனவர்களின் நலன் கருதி இத்தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். இதன்படி திருமலை துறைமுகத்திற்கு வெளியே கடலில் 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெப்பம் தவிர்ந்த படகுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.தெப்பங்களில் மீன்பிடிப்பவர்கள் அதிகாலை 4.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரையும் மீன்பிடிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

டிங்கி படகுகளுக்கு 15 குதிரை வலு கொண்ட இயந்திரங்களைப் பாவிப்பதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனுமதி 25 குதிரைவலு வரையான இயந்திரங்களைப் பாவிக்கவும் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.மீனவர்கள் திருமலைத் துறைமுகத்தின் ஊடாக கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவென கொரிடோரும் அமைக்கப்படவுள்ளது.

திருமலை துறைமுகத்தினுள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த மட்டப்படுத்தலை ஐந்து மடங்கு வரை தளர்த்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் பெரிய வலைகளைப் பாவித்து மீன்பிடிப்பதில் ஈடுபடுபவர்கள் இரவு 8.00 மணிக்குள் கரைக்கு திரும்பிவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இத்தீர்மானங்கள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அமைச்சர்கள் நஜீப் ஏ மஜீத், சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத் துரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா உட்பட்ட முக்கியஸ்தர்களால் திருமலை மூதூர் மீனவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

புலிகளின் மற்றொரு நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடலில் மீட்பு

தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை முல்லைத்தீவு, வெள்ளை முள்ளி வாய்க்கால் பகுதிக்கு அண்மித்த கடலில் புலிகளின் மற்றொரு நீர் மூழ்கியொன்றை கண்டெடுத்திருப்பதாக இரா ணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரி யொருவர் தெரிவித்தார்.

நான்கு அடிகள் உயரமும், 24 அடிகள் நீளமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தின் கரையிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கடலிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இராணுவத்தின் எட்டாவது விசேட படையணிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. இந்நீர்மூழ்கி ஏற்கனவே பாவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3 ஓட்டங்களால் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

t20-world-cup.jpgசுப்பர் 8 சுற்றில் இந்திய  மற்றும் இங்கிலாந்து  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய  இந்திய  அணி 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

கிழக்கு, தென் கிழக்கு, மன்னார் கடற் பரப்பில் கொந்தளிப்பு – இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

fishing_peoples.jpgகிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடற் பரப்புக்கள் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரித்திகா ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பிற்பகலில் பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு அடிக்கடி மழை பெய்யக் கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் காலப் பகுதியில் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30- 40 கிலோ மீட்டர் வேகத்தில் காணப்படும். அது சில சமயங்களில் 50 கிலோ மீட்டர் வரையும் அதிகரிக்க முடியும்.

இதன் காரணத்தினால் இப்பிரதேச கடல் பரப்பு கொந்தளிப்பாக இருக்கும். ஏனைய பிரதேச கடற்பரப்புக்கள் இடையிடையே கொந்தளிப்பு நிலையை அடையும். அதன் காரணத்தினால் இந்த நாட்களில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த முன் அவதானத்துடன் நடந்து கொள்ளுவது அவசியம். இதேவேளை நேற்றுக் காலையுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் லபுகமவிலேயே அதிக மழை பெய்துள்ளது என்றார்.

போராடி வென்றது இலங்கை அணி

t20-world-cup.jpgசுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து  அணி 135 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இப்போட்டியை  இலங்கை அணி போராடியே வென்றது.