May

May

சனல் 4 செய்தி தொடர்பாக பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கை

இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முழுமையாக நிராகரித்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை மீட்கும் நோக்கத்துடன் மனிதாபிமான நடவடிக்கையில் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டிருந்ததாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் உட்பட பல நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். மனிதாபிமான நடவடிக்கைகளானவை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் பிரகாரம் இடம்பெற்றது. பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்பும் ஏற்படக்கூடாது என்ற கடுமையான உத்தரவின் பிரகாரம் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை அரசாங்கம் இப்போது மீளக்கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இலங்கையின் சகல இனக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாண்புமிக்கோர் உறுப்பினர்கள் கொண்டதாக அக்குழு அமைந்துள்ளது. அத்தகைய கவலைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. அத்துடன், தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் சகல சமூகங்கள் மத்தியிலும் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது.

ஒளிநாடாவைப் பார்க்காமல் அதில் கூறப்பட்டிருக்கின்ற விசேட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துகளைத் தெரிவிப்பதற்கான நிலைப்பாட்டில் உயர்ஸ்தானிகராலயம் இல்லை. ஆதலால், கூறப்படும் ஒளிநாடாவை பார்வையிட அனுப்பிவைக்க முடியும். ஒளிபரப்புவதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மை குறித்து பரிசீலிப்பதற்காக அதனை பார்வையிட அனுப்பிவைக்க முடியும்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின்போது இடம்பெற்ற நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனைகள் உயர்மட்ட உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியில் வெளிநாட்டு நிருபர் ஜொநாதன் மில்லரின் செய்தி இணையத்தளங்களில் வெளியாகியிருந்தன. 18 மே 2010 இல் இந்த அறிக்கை பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் வெளியிடப்பட்டதாக அத தெரண இணையத்தளம் நேற்று தெரிவித்திருந்தது.

5 இலட்சம் பேர் பாதிப்பு; உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு

coio.jpgமேல் மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் தொகை சுமார் 5 இலட்சம் என இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1734 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ளத்தினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, குருநாகல், திருகோணமலை, மாத்தறை, அநுராதபுரம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.
coio.jpgகடும் காற்றுடன் கூடிய மழையை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியது. வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள சூறாவளி இலங்கையை தாண்டி நகர்வதால் இலங்கைக்கு சூறாவளி அபாயம் ஏற்படாது என அவதான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்தத் தாக்கத்தினால் எதிர்வரும் தினங்களிலும் கடும் காற்று வீசும் எனவும் இதனால், எதிர்வரும் தினங்களிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மேல், மத்திய, தென்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது. கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில், நேற்று ஓரளவு குறைவாக மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிற போதிலும் ஜின் கங்கை மற்றும் களுகங்கை நீர் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பிரதான வீதிகளில் நேற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ராகம, ஹுணுப்பிட்டிய, வல்பொல ரயில் பாதைகளில் நீர் நிறைந்திருந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பாணந்துறை பகுதியில் ரயில் பாதையில் நீர் நிறைந்திருந்ததால் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்திருந்தன. பாரிய மண் திட்டு விழுந்ததால் காலி- மாத்தறை இடையிலான ரயில் சேவை நேற்றும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சில பகுதிகளில் 4-5 அடி உயரத்திற்கு வெள்ளம் காணப்படுவதால் உலர் உணவு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாதுகாப்புப்படையினரும் பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

முன்னாள் புலி உறுப்பினர்களில் 20 ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிலருக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுவதாக அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பாக இருக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் சுமார் 20 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார்.

அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் வாய் மூல உறுதிமொழி மூலம் திருமணம் செய்திருந்ததாகவும் ஆனால், உத்தியோகபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அநேகமானோர் தமது ஜோடிகளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் ஆயினும் இருதரப்பினரதும் பெற்றோர்களினதும் இணக்கத்தை அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயினும், சில ஜோடிகளின் நிலைமை மாற்றமடைந்திருக்கலாமெனவும் பெண்ணொருவர் இனிமேலும் அந்த மனிதரை நான் விரும்பவில்லையெனக் கூறக்கூடுமெனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ஆண்களும் அவ்வாறு கூறக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகள் முகாம்கள் அல்லது புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டனர். ஜோடிகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கிழமைக்கு ஒருதடவை ஒருவரையொருவர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிரிகேடியர் ரணசிங்க கூறியுள்ளார். அவர்கள் சட்டரீதியாகத் திருமணம் செய்த பின் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து குடும்பங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்ல முடியும். அவர்களில் சிலருக்குப் பிள்ளைகள் உள்ளனர். சிறியளவு தொகையினரே தற்போது வழக்கு விசாரணைக்காக வைக்கப்படுவார்களெனவும் அநேகமானோர் ஒருவருடத்தின் பின் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சபையில் இன்று விசேட அறிக்கை

parliament2.jpgதொடர்ச் சியான மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் இன்று சபையில் விசேட அறிக்கையொன்று வெளியிடப்படுமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ச்சியான மழை வெள்ளம் காரணமாக பெரும்பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்பதை சபையில் தெரிவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

அதன் போது அவர் தமது கூற்றை நீட்டிச் செல்ல முற்பட்ட போது, இதனை ஒரு விவாதமாக்கிக் கொள்ள வேண்டாமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். இதன் போது குறிப்பிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, இன்று அது தொடர்பில் அரசாங்கத்தின் கூற்று வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

‘லைலா’ இன்று ஆந்திராவை தாக்கும் அபாயம்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த ‘லைலா’ புயல் சின்னம் இந்தியாவின் தெற்குக் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்தது.

இந்தியாவை நோக்கி நகரும் இந்தப் புயல் இன்று அதிகாலை ஆந்திராவைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும் இந்தியாவிலும் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சுமார் 600 கி. மீற்றர் தொலைவிலும் சென்னை நகருக்குக் கிழக்கே 185 கிலோ மீற்றர் தொலைவிலும் ‘லைலா’ நிலை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முசலி மினி சூறாவளியால் 87 குடும்பங்கள் பாதிப்பு – 2 பாடசாலைகள் தரைமட்டம்

rain.jpgமன்னார் முசலி பிரதேசத்தில் நேற்றிரவு வீசிய மினி சூறாவ ளியால் 87 தற்காலிக கூடாரங்கள் முற்றாக சேதமானதோடு, இரண்டு பாடசாலைகளின் கொட்டில்களும் தரைமட்டமாகியுள்ளன.

கூடாரங்களில் வசித்த 87 குடும்பங்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும், வன்னி மாவட்ட எம்.பி.பாரூக் ஹுனைஸ் எடுத்துக் கொண்ட துரித முயற்சியால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ப்பட்டுள்ளன. பொற்கேணி மற்றும் வேப்பங்குளம் வித்தி யாலயங்களே மினி சூறாவளி யால் தரை மட்டமாகியுள்ளன.

முசலி பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹுனைஸ் எம்.பி. செய்து கொடுத்துள்ளார்.

முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!

Musical_Instrumentபுனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 125 பேர் உட்பட 495 பேர் நேற்று (May 17 2010) அவர்களது பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இவர்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஏ.சந்திரசிறி, அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ரி.நீக்கிலாப்பிள்ளை, உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமானது. வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வு, பனர்வாழ்வளிக்கபட்டு இரத்மலானை இந்தக் கல்லாரியில் தற்போது கல்வி கற்று வரும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் என்பனவும் இதன் போது இடம் பெற்றன.  இரத்மலானை இந்துக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள முன்னால் குழந்தைப் போராளிகளுக்கு லிற்றில் எய்ட் இசைக் கருவிகளை வழங்கி அவர்களுக்கு இசை பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தது.  லிற்றில் எய்ட் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. http://littleaid.org.uk/ and http://littleaid.org.uk/gallery/musical-instruments-to-ambepusse-24th-july-2009

பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 495பேர் அவர்களின் பெற்றொர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக போரில் இணைக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 198 பேரும், பல்கலைக்கழக மாணவர்கள் 72 பேரும், கனரக வாகன சாரதிப் பயிற்சி பெற்றிருந்த 100 பேரும் மற்றும், முன்னாள் போராளிகள் 125 பேரும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்குடா நாட்டில் திடீரெனப் பெய்த கடும் மழையினால் மக்கள் பாதிப்பு!

May 17 2010  யாழ்.குடாநாட்டில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன. சில வீடுகளின் கூரைகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமாகின். மின்சாரமும் முழுவதுமாக குடாநாட்டில் தடைப்பட்டது.  இன்று (May 18 2010) காலையிலேயே மின்சார விநியோகம் யாழ்ப்பாணத்தில் சீர்செய்யப்பட்டது.

இதேவேளை, கொழும்பு உட்பட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். தெற்கில் 2இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கொழும்பு, களுத்துறை, கம்பகா, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரற்ற இக் காலநிலை சில நாட்களுக்குத் தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

கோழிக்கூட்டு கூடாரத்தில் வன்னி மக்கள், யுத்த நாயகன் பொன்சேகா சிறைக்கூண்டில் – ரணில்

ranil.jpgயுத்த வெற்றியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பெரும் செலவில் தேசிய வைபவம் நடைபெறவுள்ள நிலையில், வன்னியிலுள்ள மக்கள் வீடுகளின்றி கோழிக் கூடுகளிலும், யுத்த வெற்றிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜெனரல் சரத் பொன்சேகா சிறைக் கூண்டிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்தது. மக்களின் சுதந்திரத்தை குறைத்து வருகிறது. பாராளுமன்ற அனுமதி இல்லாமல் எப்படி செலவினங்களை அரசாங்கத்தால் குறைக்க முடியுமென்பதே எமது கேள்வியாக இருக்கிறது. மக்களின் உரிமைகளை முடக்கியே இவற்றை செய்கின்றனர்.

இதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எதிர்க்கட்சியினருடன் பேசினார் என்று குற்றஞ்சுமத்தியே ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தனர். எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஓய்வு பெற்றுச் செல்ல ஜனாதிபதியே அவருக்கு அனுமதி வழங்கியிருந்தார். இவ்வாறான நிலையில் எப்படி இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவை கைது செய்ய முடியும்?

வாக்களிப்பதற்கும் வாக்கு கேட்பதற்கும் அரசியலமைப்பில் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை சரத் பொன்சேகாவின் இந்த கைதின் மூலம் மீறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தை மீறுவதாகவும் இந்த செயற்பாடு அமைந்திருக்கிறது.

இதேநேரம், யுத்த வெற்றியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு படை அணிவகுப்பு நிகழ்வை பெரும் செலவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். எனினும், பெருந் தொகை செலவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் யுத்த வெற்றிக்கு பொறுப்பு கூற வேண்டிய சரத் பொன்சேகா ஏன் அங்கு இல்லை. எதற்காக அவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

யுத்தத்தை வென்றவரை சிறையில் வைத்து கொண்டு பெருந்தொகையை செலவிடுகிறீர்கள். இயற்கையும் அதனுடன் இணைந்து விட்டது. யுத்தம் முடிவடைந்த ஒரு வருடம் பூர்த்தியடைந்து விட்ட போதிலும் வன்னியில் மக்களுக்கு வீடுகள் இல்லை. கோழி கூடுகள் போன்ற சிறு கூடாரங்களிலேயே இருக்கின்றனர். யுத்தத்தை வென்ற சரத் பொன்சேகா சிறை கூண்டிலும் வன்னி மக்கள் கோழி கூடுகளிலும் வைக்கப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாது கொழும்பு கொம்பனி வீதி பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினால் நிரந்தர உறுதி பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகள் இடித்தழிக்கப்பட்டுள்ளன. இது சட்ட விரோதமாகும். ஏனெனில், இந்த வீடுகளை அகற்ற வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்க வேண்டும். நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எனினும், இதில் எதுவும் அங்கு நடக்கவில்லை. வீடமைப்பு அமைச்சருக்கு கூட என்ன நடந்ததென தெரியாது. எதற்காக இந்த வீடுகள் உடைக்கப்பட்டன என்பது எமக்கு தெரியும். அந்த இடத்தில் 15 மாடிகள் கொண்ட சொகுசு மாடி கட்டிடங்களை நிர்மாணித்து 4,5 கோடிகளுக்கு விற்பதற்கு பேசியுள்ளனர்.

இதேநேரம், கடந்த இரு நாட்களாக கொழும்பு மாநகரின் பல பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து நகர அபிவிருத்தி அதிகாரசபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

அடைமழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்; தாழமுக்கம் நகர்வு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

lightning.jpgவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் யாழ்ப்பாணத்திற்கு 600 கிலோ மீற்றர் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இத்தாழமுக்கம் இந்தியாவின் ஒரிஸா மாநிலப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் தற்போதைய மழை காலநிலை அடுத்துவரும் இரண்டொரு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது இந்தத் தாழமுக்கம் நாளுக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடலில் கொந்தளிப்பு நிலைமை காணப்படுகின்றது. அதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40-60 கிலோ மீற்றர்களாகக் காணப்பட்டா லும் அது சில வேளைகளில் 90 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரி க்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேநேரம் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியால மழை வீழ்ச்சிப் பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி காலி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இம்மழை வீழ்ச்சி பதிவுப்படி காலியில் 283.8 மி.மீ., களுத்துறையில் 278.6 மி.மீ., இரத்மலானை 177.1 மி.மீ., கொழும்பில் 133.1 மி.மீ., புறக்கோட்டையில் 147.3 மி.மீ., மாலிம்பொடவில் 106.8 மி.மீ. என்ற படி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றார்.