September

September

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்

Lessons_Learnt_And_Reconciliation_Commissionகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 18,19,20ஆம் திகதிகளில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இவ்வறிக்கைகள் அவரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சாட்சியங்களையும் விசாரணைகளையும் பதிவு செய்த நல்லிணக்க ஆணைக்குழு கடந்த 18.19.20 ஆம் திகதிகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சாட்சியங்களையும் விசாரணைகளையும் பதிவு செய்தது.

Lessons_Learnt_And_Reconciliation_Commissionஎதிர்வரும் மாதம் 9.10,11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இவ்வாணைக்குழுவினர் சாட்சியங்களையும் பதிவுகளையும் மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் சாட்சியங்கள் விசாரணைகள் குறித்த அறிக்கைகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு பின்னர் அனைத்தையும் ஒன்றிணைத்து இறுதி அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் எனவும், அது ஊடகங்களுக்கும் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

”வன்னியில் படையினர் பயன்படுத்திய பொதுமக்களின் வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு” இராணுவப் பேச்சாளர்

வன்னியில் பொதுமக்களின் வீடுகளை தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்த படையினர் அவற்றைக் கட்டம் கட்டமாக பொது மக்களிடம் ஒப்படைத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல வீடுகளிலிருந்து படையினர் வெளியேறி அவற்றை அதன் உரிமையாளர்களிடம்  கையளித்து விட்டதாகவும். தொடர்ந்தும் படையினரின் வசமிருந்த விடுகள் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படையினர் இருந்து வரும் விட்டு உரிமையாளர்களுக்கு வாடகை வழங்கி வருவதாகவும் விடுகள் சம்பந்தப்பட்ட பிரிச்சினைகளை குறிப்பிட்ட பிராந்தியத்தின் சிவில் இணைப்பதிகாரியிடம் அல்லது, பொதுநிர்வாகப்பிரிவிடம் தொடர்பு கொண்டு பொது மக்கள் திர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாரதிப் பயிற்சிபெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இ.போ.ச.வில் வேலை வாய்ப்பு!

CTB_Logoபுனர் வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சாரதிப் பயிற்சி பெற்றவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் நியமனம் வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் நூறு விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களுக்கு யாழ். கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்து டிப்போவில் சாரதிப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் உரிய சாரதி அனுமதிப்பத்திரங்களும் பெற்றிருப்பதால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு யாழ். டிப்போவினால் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இவர்களுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத்  தெரிவித்துள்ளார். இலங்கைப் போக்கவரத்து சபையில் வடமாகாணத்தில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

”கிராம அலுவலர்கள் மக்களை அலைக்கழிக்காமல் கடமை புரிய வேண்டும்” யாழ் அரசஅதிபர்

Imelda_Sugumar_GA_Jaffnaகிராம அலுவலர்கள் மக்களை அலைக்கழிக்காது அவர்களுக்கான கடமைகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். கிராம அலுவலர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”கிராம அலுவலர்கள் தங்கள் கடமைகளை புறந்தள்ளாமல் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு பரிகாரம் காண முயற்சிக்க வேண்டும். யாழ்.குடாநாட்டில் தற்போது அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான பங்களிப்பினை கிராம அலவலர்கள் வழங்க வேண்டும. மது போதை, இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.  கிராம அலுவலர்கள் குறித்து நாளொன்றிற்கு ஐம்பது முறைப்பாடுகள் வருகின்றன. சில சமயங்களில் பாராட்டியும் கடிதங்கள் வருகின்றன. பொதுச்சேவை அலுவலர்களாகவம் அரசாங்க உழியராகவும் கிராம அலுவலர்கள் இருப்பதால் கவனமாக பொறுப்புணர்வுடன் அவர்கள் செயற்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

நயவஞ்சக அரசியலின் நாயகர்கள்! : யூட் ரட்ணசிங்கம்.

Sambanthan_R_TNA MPMavai_Senathirajah TNA MPSuresh_Premachandran_TNA MPஅறிக்கைப் புரட்சி நடாத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சம்பந்தமான பல செய்திகள் அண்மையில் வெளிவந்த போதும் குறிப்பாக இரு வேறு செய்திகள் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.

1) த. தே கூட்டமைப்பின் வேட்பாளரும் வவுனியா நகரசபைத் தலைவருமான திரு நாதன் வவுனியா நகரை சுத்தம் செய்யும் தொழிலாளரை வெளியில போங்கடா சக்கிலிய நாயளே என்று திட்டியதான  செய்தி தேசம் நெற்றில் வெளியாகி இருந்தது.

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

த தே கூட்டமைப்பு இது சம்பந்தமான எந்தக் கருத்தையும் கூறாது மௌனம் காத்தது.

அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன

2) 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக த தே கூட்டமைப்பின் பா உறுப்பினர் பியசேன வாக்களித்தார் என்ற செய்தி வெளிவந்தவுடனேயே பியசேன மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரேமச்சந்திரன் அறிக்கை விட்டார்.

முதலாவது செய்தி பற்றி அறிவதற்காக வவுனியாவிலுள்ள சில நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். யார் இந்த நாதன் என்று அறிய வேண்டும் என்பது எனது ஆவல்.

இவரது சொந்த இடம் யாழ்ப்பாணம். 1975ம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக வவுனியா வந்துள்ளார். பின் பதவி உயர்வு பெற்று பொலிஸ் அதிகாரியாக இருந்துள்ளார். இந்த பொறுப்பான பதவியில் இருந்தபோது சில குடும்பங்களின் அமைதி குலைந்து போனதற்கு காரணமானவராக இருந்துள்ளார்.

போலிஸ் தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

தென் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு செல்ல மறுத்து தொழிலை இழந்துள்ளார்.

1977ம் ஆண்டு தமிழர்கள் மீது இனப்படுகொலை நடந்தபோது  வவுனியா நகரம் அரச படைகளால் எரியூட்டப்பட்டது. அதன்பின் அன்றைய அரசால் உருவாக்கப்பட்ட சன்சோனிக் கமிசனில் ஓர் முக்கியமான சாட்சியாக இருந்துள்ளார்.

இவர் அன்று தொட்டு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். TNA மும்மூர்திகளில் ஒருவரான சேனாதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பர். இதுதான் இவரது அரசியல் பின்புலம்.

பின் வவுனியா நகரசபை பற்றி வினவியபோது, புளட் வவனியா நகரசபையை கட்டுப்படுத்திய காலப்பகுதியில் அமைப்பின் ஒரு பகுதியினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டபோதும் புளட்டில் சிலர் குறிப்பாக லிங்கநாதன் போன்றோர் வவுனியா நகரின் அபிவிருத்திக்காக அரிய பாடுபட்டார்கள் என்றும் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்ட புங்காவும் நூல் நிலையமும் முன் உதாரணங்கள் என்றார்கள்.

நாதன் பதவியேற்ற பின்பு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்த நகர்புற அபிவிருத்திகளும் நடக்கவில்லை என்றும் சில குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வவுனியா MP யாக இருந்த காலத்தைப்போல் இப்போது வவுனியா நகரசபை இருப்பதாக வேறுசிலர் கூறுகிறார்கள்.

வவுனியாவுக்கு இவர்களால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் தவறுகள் நடக்கின்ற போது வவுனியாவினுடைய பெயர் முன் நிறுத்தப்பட்டு அத்தனை விமர்சனங்களும் பழிகளும் அவதூறுகளும் வவனியா மீது போய்ச் சேருவதாக இன்னுமொரு சாரார் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவ்வளவு பாரதூரமான குற்றச்சாட்டுகள் இவர்மீது வந்தும் TNA இதுவரை மௌனம் காப்பது ஏன்?

எந்த செய்தி வந்தாலும் உடனடியாக இரண்டு மூன்று தலைமுறை பின் சென்று ஆய்வு செய்யும் தேசம்நெற் ஆசிரியர்குழு இந்த விடயத்தில் அசட்டையாக இருந்ததின் காரணம் என்னவோ?

மேலும் இரண்டாவது செய்தியின் பிண்ணணியில் பியசேன கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்று இந்த TNA MPக்கள் எவராவது இதுவரை அம்பாறை மாவட்டத்திற்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறியவில்லை என்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் மனிதப் படுகொலை நடந்த பின்பு உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருந்து மக்கள் தம்மாலான உதவிகளை அந்த மக்களுக்கு வழங்கி வந்த வேளையிலும் கூப்பிடு தொலைவில் நிற்கதியாக நின்ற வன்னி மக்களை ஏறெடுத்தும் பார்க்காத இந்த TNA எவ்வாறு அம்பாறை மக்களின் குறைகளைத் தீர்க்கப் போகிறது? 

“அரசு அனுமதி மறுக்கிறது அங்கே செல்வதற்கு” என்று அடிக்கடி அறிக்கை விட்டுக்கொண்டார்கள்

அண்மையில் இவர்கள் வன்னிக்குச் சென்று அந்த மக்களை பார்வையிட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இந்திய அரசியல்வாதிகள் போல் நெற்றியிலே திருநீறும் மடிப்புக் குலையாத வெள்ளை உடையுமாக சென்று வந்துள்ளார்கள்.

எதை அந்த மக்களுக்கு கொடுத்தாலும் உடனே படம் எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை அம்பாறைக்கு வந்து மக்களின் குறைகளைக் காணுங்கள் என்று கேட்கும் MP பியசேனக்கு தமிழரசுக் கட்சியின் நயவஞ்சக அரசியலைப் புரிந்துகொள்ளும் வல்லமை இல்லை என்றே தெரிகிறது.

‘அண்ணன் எப்போ சாவான் திண்ணையைப் பிடிக்கலாம்’ என்று காத்துக்கிடக்கும் பிரேமச்சந்திரனுக்கு, பியசேனக்கு எதிராக அறிக்கை விட காட்டிய ஆர்வமும் அவசரமும் வவுனியா நகரத் தொழிலாளர்களை ‘வெளியிலே போங்கடா சக்கிலிய நாய்களே’ என்ற நாதனுக்கு எதிராக அறிக்கைவிடவோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை. இன்றுவரை மௌனம் காக்கும் அந்த நயவஞ்சக தமிழ் அரசியலின் வயது அரை நூற்றாண்டைத் தாண்டிவிட்டது.

அண்மையில் தமிழ்தேசிய ஆவணச் சுவடிகளில் பதிவாகியுள்ள 1984ம் ஆண்டு வெளியான புதியபாதை பத்திரிகையில் ஓர் துணுக்கைப் படித்தேன். தேசம்நெற் வாசகர்களும் MPபியசேனவும் படிக்கவேண்டும் என்பதற்காக இதைத் தருகிறேன். 

Puthiyapathai_June1984

(நன்றி tamilarangam.net)

மேலே கொடுக்கப்பட்டுள்ள புதியபாதையின் செய்தியைப் படித்தீர்களானால் அவர்களின் ‘மக்கள்’ யார் என்பது புரியும்.

1977 ம் ஆண்டு தேர்தல் முடிந்ததும் திரு தொண்டமான் இப்படிப்பட்ட காரணங்களைக் கூறியே அன்று TULFல் இருந்து பிரிந்து JR அரசுடன் சேர்ந்து கொண்டார். அன்றய தொண்டமானிலிருந்து இன்றய பியசேன வரை ஒரே குற்றச்சாட்டு

ஈழத்தமிழரின் அடிப்படைச் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை அவர்களின் அரசியலில் என்றுமே நேர்மை இருக்கப்போவதில்லை.
 
முப்படைகளையும் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் முடித்தது அவர்களின் நயவஞ்சக அரசியலே என்பதை தமிழ் அறியாவிட்டாலும் உலகறியும். 

விதி என்பது பொதுவானது. இதற்கென்றோ இவர்களுக்கென்றோ உருவாவதல்ல. இந்தப் பொது விதிக்குள் சடப்பொருள் மட்டுமல்ல சாதாரண வாழ்வும் அகப்படும் என்பதை இந்த TNA இன்னுமா உணரவில்லை?

வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:

ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

TWDF Conference: Post-War Challenges facing women in Sri Lanka – war widows, broken communities and the displaced.

From: TWDF [mailto:twdf.ccd@sangu.org]
Sent: 17 August 2010 13:14

Dear Friends

TWDF Conference: Post-War Challenges facing women in Sri Lanka – war widows, broken communities and the displaced.

We are pleased to inform you that our third conference will be held on Saturday, 23 October 2010

at the Tolworth Girls School, Fullers Way North, Kingston KT2. See leaflet enclosed.

The conference has become an important event on Women, providing a regular forum to discuss issues affecting Women, particularly the Tamil speaking women in Sri Lanka.

The conference is organized around plenary sessions as well as workshops dedicated to specific themes. Some of the themes for the panels and workshops include: Post War Reconstruction: New Roles for Women; Advancing Women’s Economic Rights and Empowerment; Post-war childhoods/new generations; Developing Partnerships and Co-operation: Strengthening Civil Society and Diaspora; Guarding Refugee Protection; Better Health: Women, Children, War and Health; and Women and Violence.

It has been one of the main objectives of this conference is to create gender awareness and build links between organizations and activists who are involved in post-war initiatives targeting women in Sri Lanka. We see this conference as an opportunity for us to speak with many of those involved in gender matters and discuss collaborations, or other initiatives of collective interest.

The conference is entirely self-financed and we will depend on your registration and voluntary donations and where possible sponsorships to support the event. The details are provided in the leaflet. If you need any further information or ideas that you have on the conference, please do not hesitate to contact me on 0208 287 6303 or Sathiya, Conference Coordinator on 0208 391 0861 or the office on 0208 546 1560. We also would like to ask you to help us introduce the conference to others whom you think would be interested.

To register, please fill in the attached form with your details & send it with the fee to the address below. We look forward to receiving your registration & Fee early.

With kind regards

Shyla

Tamil Women Development Forum
c/o
Centre For Community Development
Thulasi
Bridge End Close
Kingston Upon Thames KT2 6PZ
(United Kingdom)
Telephone: +44 (0)20 8546 1560
Fax: +44 (0)20 8546 5701
E-mail: twdf.ccd@sangu.org

சினிபுவத் குறுந்திரைப்படம் நேற்று வெளியீடு

cini.jpgதகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் 56 வது பிறந்த தினத்தையொட்டி “சினி புவத்” குறுந்திரைப்படம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இத்திரைப்படத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். அதற்கான இருவட்டுத்தொகுதியை திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் குமார் அபேசிங்கவிடம் கையளித்தார். தகவல் திணைக்களத்தின் திரைப்படப் பிரிவு திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகலவின் வழிகாட்டலில் மேற்படி குறுந்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக இக்குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் சகல சினிமாத் தியேட்டர்களிலும் இதனைத் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல;

30 வருட கால யுத்தம் நீங்கி நாட்டில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகியுள்ளது. இத்தகைய தருணத்தில் பழைய சம்பிரதாயங்களை நாம் மீட்டிப்பார்க்க ‘சினிபுவத்’ போன்ற குறுந்திரைப்படங்கள் உறுதுணையாகின்றன. மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ள தருணம் இது. சுவிற்சர்லாந்தைப் போல இலங்கையை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுகளை 40 வருடகால யுத்தம் பின்னடையச் செய்து விட்டது. அதற்குப் பின்னர் இன்று சிறந்த எதிர்காலமொன்றை எம்மால் சிந்திக்க முடிந்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துவது சிறப்பான செயலாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அணுமின் உற்பத்தியை நாட இலங்கை முடிவு – அமெரிக்கா, இந்தியா பூரண ஒத்துழைப்பு

அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது. இதற்காக இலங்கையில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூற்றை ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2020ற்கு முன் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.

சர்வதேச அணுசக்தி முகவர் அதிகார சபையின் 54 ஆவது அமர்வு வியன்னாவில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது:- இலங்கையை குறைந்த காபன் அளவுடைய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகவர் அதிகாரசபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

இலங்கையில் எரிசக்தி தேவைகளை குறைந்த செலவினூடாக பூர்த்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான சிறந்த வழி அணு சக்தி உற்பத்தியை நோக்கிச் செல்வது என அரசாங்கம் உணர்ந்துள்ளது. இதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

மற்றவர்களுக்கு பாதிப்பில்லாதவாறே அணுசக்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். நாம் ஒருபோதும் ஏனைய நாடுகளை ஆக்கிரமித்ததும் கிடையாது அதற்காக முயன்றதுமில்லை. இலங்கையில் அணுசக்தி நிலையம் அமைப்பதால் எந்த நாட்டுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.

மின்கம்பத்துடன் தனியார் பஸ் மோதி நால்வர் ஸ்தலத்தில் பலி; 16 பேர் காயம்

ஆனமடுவ- சிலாபம் வீதியிலுள்ள முதலிக்குளம் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆனமடுவ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி நேற்று அதிகாலை 4.00 மணியளவில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்திலும் மரத்திலும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்

தமிழகத்தில் தொடரும் கட்டப் பஞ்சாயத்துக்கள் – ஈழத் தமிழரை இழிவு படுத்தி பணம் பண்ணும் நக்கீரன்! : ENDLF

Nakeeran_ENDLF_Coverநக்கீரன் என்ற அருமையான தமிழ்ப்புலவரின் பெயரைப் பயன்படுத்தி வம்புச் செய்திகளும், ஒட்டுச்செய்திகளும், பட்டுப்பட்ங்களும், கட்டுக்கதைகளும் வெளியிட்டு பிழைப்பு நடத்தும் கேவலமான கூட்டம் இன்று சமூகத்தில் அந்தஸ்துடன் உலவுகிறது.

நாங்கள் ஈழத்தமிழர்கள். இந்த நக்கீரன் என்ற விசமப்பத்திரிகை பற்றிக் கருத்துச் சொல்லவேண்டிய தேவை எமக்கில்லை. ஏனெனில் தமிழகத் தமிழர்கள் சினிமா பார்ப்பது, கதை கேட்பது என்று இத்துறையில் தங்கள் வாழ்வை இணைத்துள்ளனர். எனவே நக்கீரன் என்ற பத்திரிகை கதை சொல்லப் புறப்பட்டு தமிழர்களுக்கு வாராவாரம் இரண்டு முறை கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரே கதையை பலவாரங்களுக்கு பல வடிவங்களில் சொல்வார்கள். வாரம் இருமுரை புதுக்கதைகளும் சொல்லவேண்டும். அப்போதுதான் வியாபாரம்நன்கு நடக்கும். இப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஈழத்தமிழர்கதை. ஈழத்தமிழரும் விடுதலைப்புலிகளும் பற்றிய கதை சொல்ல இந்தப் பத்திரிகை ஆரம்பித்து கொழுத்த பணம் ஈட்டியது.

Pirabaharan_Still_Alive_Nakeeranஆட்டோசங்கர் கதை, வீரப்பன் கதை, டாக்டர் பிரசாத் கதை பின்னர் விடுதலைப்புலிகள் கதை இவைகள் மூலம் பணம் பார்த்த ஒரே வார வெளியீடு இந்த நக்கீரன்தான். இவர்களது கதைகளைப் படித்த விடுதலைப் புலிகள் இவர்கள் அல்லவா (நக்கீரன் நபர்களை) எங்களை விடச் சிறப்பான போராளிகள் என்று நினைத்தனர். நாங்கள் நினைக்காததை, செய்யாததை எல்லாம் திடடமிட்டோம், செயல் படுத்தினோம் என்று எங்களுக்குப் புகழ் சேர்க்கிறார்கள் என்று வியந்து இவர்களிடம் செய்தி சொல்லப் புறப்பட்டனர் புலிகள். நக்கீரனுக்கு வருவாய் கழுத்தைத் தாண்டியது. தாங்கள் எதை எழுதினாலும் மடமக்கள் நம்புகின்றனர் என்று கண்டு கட்டுக்கதைகளில் கரைகண்டனர் இந்த நபர்கள்.

வழக்கம் போன்றே ஓர் அதிர்ச்சித் தகவலையும் கட்டுக்கதைகளையும் வெளியிட்டனர், செப்டம்பர் 11-14, 2010 தேதியிட்ட அவர்களது அவதூற்றுப் பத்திரிகையான நக்கீரனில். எங்கள் இயக்கப் பெயரைக் கெடுக்கும் வகையில் கதைவசனம் எழுதியுள்ளனர் இந்த வம்படி நபர்கள். எனவேதான் இவர்கள் பற்றி நாம் எழுதவேண்டி ஏற்பட்டது. அதற்காக வருந்துகிறோம். ஏனெனில் இவர்கள் ஒன்றும் தியாகிகளோ, போராளிகளோ அல்ல. வெறும் வேசதாரிகள். ஒருவரின் நற்பெயரைக் கெடுத்து அதில் பிழைப்பு நடத்துபவர்கள். ஆயினும் தொடர்ந்து இந்த நபர்கள் எங்கள் விடயத்தில் தலையிடாமல் இருக்கவே இதனை எழுதுகிறோம்.

இவர்கள் வடித்த தலைப்பு ‘கடத்தல், சித்திரவதை, கொள்ளை, தமிழகத்தில்
ராஜபக்சேயின் வெள்ளைவேன், அலறும் ஈழத்தமிழர்கள்’ இவைதான் அந்த வாரத்தின் வெடிச்செய்தி! இவர்கள் பின்னிய இந்த வெடிக்கதையின் முக்கியமானவற்றை கீழே தருகிறோம்!

ஈழத் தமிழரை இழிவுபடுத்தி பணம் பண்ணும் நக்கீரன் கடந்த வாரம் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஈழத்தமிழ் இளைஞர் சிவபாலன். வெள்ளைவேன் வந்தது. விடுதலைப் புலியா என்று கேட்டனர். அவர் மறுக்கிறார். அப்படியானால் குவாலிஸ் வேனில் இருக்கும் இந்திய அதிகாரியிடம் விளக்கிச் சொல்லிவிட்டுப் போங்கள் என்று கட்டாயப் படுத்துகின்றனர். அவரும் சம்மதித்து வர, அவரைத் தூக்கிக் கொண்டு இரண்டு வேன்களும் கிழக்குக் கடற்கரைசாலை சவுக்குத்தோப்புக்கு பறந்தன. அடி, உதை என்று அவர் சித்திரவதைப் படுகிறார். இறுதியில் பணம் நான்கு லட்சத்தைக் கண்டதும் அடிப்பதை நிறுத்திவிட்டு சிவபாலனை சவுக்குத்தோப்பில் தள்ளிவிட்டுப் பறந்து விட்டனர். சிவபாலனுக்கு மரணபயம் அவரது கண்களை விட்டு அகலாமல் நடனமாடுகிறது என்று நக்கீரன் கோவாலு எழுதியுள்ளார்.

பிறகு மடிப்பாக்கத்தில் இலங்கைத் தமிழ் குடும்பமாம், உறவினர் சிங்கள ராணுவமுகாமிலாம், அவர்களை வெளியில் எடுத்துவிடுவது என்று கூறி 25 இலட்சம் ரூபாயை அடித்து உதைத்து பறித்துச் சென்றனர். அதிலும் தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு வரச்சொல்லி பறித்துச் சென்றனர்.

பிறகு கியூபிராஞ்ச் ஈழத்தமிழர் ஒருவரை பிடித்துச் சென்று விட்டது. அவரை விடுவிக்க அந்த அப்பாவியிடமிருந்து பத்து லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இவை எல்லாவற்றையும் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை ஆதரித்த அமைப்பான ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னனி என்ற அமைப்பைச் சேர்ந்த மோகனும் ரஜனியும் செய்கின்றனர் என்று ரஜனியின் புகைப்படத்தை வெளியிட்டு எங்களது இயக்கத்தின் பெயரை கெடுக்க நக்கீரன் கோபாலும் பிரகாஷ் என்ற நபரும் சேர்ந்து கதைவிட்டு வசனம் எழுதி பெற்றுக்கொண்ட பணத்துக்கு விசுவாசமாக செயல்பட்டுள்ளனர். அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் என்ற கட்சியைச் சேர்ந்த வன்னிஅரசு என்பவர்தான்  இந்தக் கதையைச் சொன்னதாகவும் அவர்கள் எழுதியுள்ளனர். இவர்களது கட்டுக்கதையில் பணம், பேருந்து நிலையம் இவைபற்றி அடிக்கடி வருகிறது. கோபாலும் அருப்புக் கோட்டையிலிருந்து பஸ் ஏறி வயிற்றுப்பிழைப்பிற்காக சென்னை வந்ததை இன்றுவரை மறக்கவில்லை என்பது நல்ல விடயம்தான்.

”ஈழத்தமிழன் ஒருவன் நான்கு இலட்சம் பணத்துடன் திருவான்மியூர் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார்”

இலங்கைத்தமிழர் ஒருவர் இலட்சக்கணக்கான பணத்துடன் திருவான்மியூர் லோக்கல் பஸ் நிலையத்தில் அடையாறு போவதற்காக காத்துக் கொண்டு நிற்கமாட்டார். ஐம்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்று விடுவார். இந்தப் பேருந்துக் கதை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் சொல்ல வேண்டும்.

அடுத்து, இந்திய அதிகாரிகள் என்று சொன்னதும் அவர் மதிப்பு கொடுத்து போலீஸ் வேனுக்கு சென்றதாக கூறுகிறார்கள். இந்த நபர்கள். அடி, உதை, சித்திரவதை செய்தபின்னர் பணம் நான்கு இலட்சத்தை கண்ட பின்னர்தான் அடிப்பதை நிறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளனர். தம்பி கோபாலு, பணத்தைக் கண்டால் வாயைப்பிளப்பது உங்களைப் போல பிழைப்புத்தேடி சென்னைக்கு வந்தவர்கள்தான். ஈழத்தமிழர்கள் பணத்தைத் தேடி சென்னைக்கு வந்தவர்கள் அல்ல!!

நீங்கள் வீரப்பன் தூதராகி எவ்வளவு பணம் சுருட்டினீர்கள் என்பது அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தெரியும். போலீஸ் மற்றும் உளவுத் துறையினருக்கும் தெரியும். நாங்கள் பிழைப்புக்காக விடுதலைப் போராட்டத்துக்கு வரவில்லை. எங்கள் விடுதலை இயக்கங்கள் பற்றி விமர்சிக்கவோ, விளக்கவுரை கொடுக்கவோ உங்கள் யாருக்கும் தகுதி கிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

”அமைதிப்படையை வரவேற்ற ராஜன்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.”

இப்போதும் சொல்கிறோம், இந்திய அமைதிப்படை மீண்டும் ஈழத்திற்கு வந்தால் நாங்கள் முன்னின்று ஆதரவு வழங்குவோம். வரவேற்ப்புக் கொடுப்போம். இதற்கான காரணங்கள் என்ன என்று மீசையை மட்டும் வளர்த்த கோவாலுக்குத் தெரியாது, தெரியவும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஒப்பந்தமும் அமைதிப்படையும் நிகழ்ந்த காலங்களில் நீங்கள் தராசு பத்திரிகையில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட். படங்கள் வரைந்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தீர்கள். இப்போது கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நீங்கள் எங்களுக்கும் பட்டம் சூட்டப் புறப்பட்டு விட்டீர்கள்.

அமைதிப்படையை வைத்துக்கெர்ண்டு எங்கள் உரிமைப் பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான ஓர் வாய்ப்பினைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிய பெருமை தமிழகத்துப் புலி ஆதரவாளர்களையே சாரும். இன்றைய நிலையில் ஓர் படை ஈழத்துக்குச் செல்லாமல் எந்தவித உரிமைகளையும் நாங்கள் சிங்கள அரசிடமிருந்து பெற முடியாது. ஈழத்தமிழர்கள் எந்த நிலையை அடைந்தாலும் உங்களுக்கு இழப்பு ஏதுமில்லை. தொடர்ந்து பணவரவுதான். சில சமயங்களில் குறையலாம். இப்போதும் வீரவசனம் பேசி பணம் பறிக்கும் முயற்சியால்தான் தங்களைப்போன்ற பணவிரும்பிகள் ஈழத்தமிழருக்கு கதைகள் சொல்கின்றனர். அவர்களும் அவற்றை நம்பி இப்போதும் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். அதற்கு விசுவாசமாக நீங்களும் ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பட்டம் சூட்டி, விளம்பரம் செய்து மகிழ்ந்து வாழ்ந்து வருகிறீர்கள்.

ராஜபக்சேயுடன் இணைந்து வெள்ளைவேனில் கொள்ளை அடிக்கின்றனர், அதனைப் பார்த்து வன்னிய அரசு என்று பெயர் சூட்டிக் கொண்ட ஜெயராஜ் என்பவர் வேதனைப்படுகிறாராம். இந்த ஜெயராஜ் – வன்னியஅரசு பற்றி பின்னர் நாம் சொல்கிறோம். கவலைப்பட இவரென்ன ராஜபக்சயால் விரட்டப்பட்டு அகதியாக தமிழகம்வந்தவரா? இலங்கைத் தமிழரது பணத்திலல்லவா இவர் வாழ்வை நடத்தி வருகிறார்!

நான்கு லட்சத்தை பறிகொடுத்த சிவபாலன் என்பவர் ‘இந்திய அதிகாரிகளிடம் வந்து கூறிவிட்டுச் செல்லவும்” என்று சொன்னதைக் கேட்டு மதிப்பு கொடுத்து வேன் நின்ற இடத்துக்கு வந்தவர் அடி, உதைபட்டுப் பணத்தைப் பறி கொடுத்ததும் நேராக போலீஸ் நிலையத்துக்குச் சென்று முறையீடு கொடுத்திருந்தால் உடனே அந்தத்திருடர்களை பிடித்திருக்கலாமே!

அவரது முகத்திலிருந்த மரணபயத்தை நக்கீரன் கோவாலுதான் கண்டுபிடித்து கதை எழுத முற்பட்டாரா? பணத்தைப் பறிகொடுத்த சிவபாலன் கோவாலுவையா சந்திக்கச் சென்றார்? அல்லது ஜெயராஜ் என்ற வன்னிய அரசிடமா சென்றார்? ஏன் தமிழ்நாட்டில் போலீஸ், சட்டம், ஒழுங்கு என்று எதுவுமே கிடையாதா? கோவாலுவும் வன்னியஅரசுமா தமிழ்நாட்டை நிர்வகிப்பவர்கள்?

அடுத்து இலங்கையில் இருக்கும் கைதி ஒருவரை மீட்க பணம் ரூ25 லட்சம் கேட்டு, பின் பஸ்’ நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து பறித்துச் சென்றனர் என்று வர்ணனை செய்து வருத்தப்படுகிறார். இந்தியப் பணத்தில் 25 லட்சம் என்றால் இலங்கைப் பணத்தில் 75 லட்சம். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வெளியே வர ஒரு நபர் முயற்சிக்கிறார் என்றால் அவர் என்ன பொட்டு அம்மானின் ஸ்தானத்திலா இருந்தார் வன்னியில்?

அட மடப்பயல்களா! நாங்கள் இந்தத் தரகர் வேலை எதுவும் செய்வது கிடையாது. இப்போதும் புலிகளின் நபர்கள்தான் இந்தத் தரகுவழி பணப்பறிப்பைச் செய்கின்றனர். இன்றைய நிலையில் புலிகளின் முப்பது சதவீத நபர்கள் இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுகின்றனர். கொழும்பு விமானநிலையத்தில் உளவு வேலை பார்ப்பவர்கள் புலிகளின் அங்கத்தினர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பது உண்மைதான். வன்னிப்பகுதியில் புதைக்கப்பட்ட பணம், நகைகளை, சிங்களஇராணுவத்துடன் இணைந்து காட்டிக் கொடுத்துப் பங்குபோடுகின்றனர் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியினர்.

புலிகள் புனிதமானவர்கள், ஏனைய அனைவரும் அயோக்கியர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்தால் உங்களுக்குப் பணம் குவியும், புலிகள் வாரி வழங்குவார்கள் என்பதைக்கண்ட உங்களைப் போன்ற பலரும் இதுபோன்ற விசமப் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். நாங்கள் துரோகிகள் என்றால் பிரபாகரன் பிரேமதாசாவுடன் இணைந்தது போன்று நாங்களும் ராஜபக்சேயுடன் இணைந்திருப்போம். டக்கிளஸ், கருணா, பத்மநாதன் போன்று நாமும் வாழலாமே இலங்கையில்!

அடுத்து இன்னுமோர் புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். கியூ பிராஞ்ச் பிடித்துச் சென்ற ஒருவரை விடுவிக்க 10 லட்சம் பேசி பறித்துக் சென்றனர். பத்து லட்சம் கொடுத்து தப்பிச்செல்லும் அளவுக்கு அந்த நபர் கொடூரப்புலிப் பயங்கரவாதியா? புலிப் பயங்கரவாதியாக இருந்தால் தான் இப்படி பத்து லட்சம் கொடுக்க வேண்டும். அப்பாவி ஈழத்தமிழருக்கு பத்து லட்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்துடன் புலிப் பயங்கரவாதி என்றால் ENDLF அங்கத்தினரை ஏன் அணுகவேண்டும்? புலி ஆதரவாளர்களை அல்லவா அணுகி இருப்பார்கள்? நக்கீரன் கோவாலு, கதை எழுதினால் அதை எழுதிய உங்களுக்கு என்றாலும் புரியவேண்டும்.

நோர்வேயிலிருந்து நெடியவன் எதையாவது சொல்ல நீங்கள் பெற்றுக் கொண்ட பணத்துக்காக ஏனைய இயக்கத்தவர்கள் மீது உங்களது பாணியில் சேற்றை வாரி வீசக்கூடாது.

ராஜீவ்காந்தி அவர்களைப் படுகொலை செய்தது போன்ற இன்னுமோர் நிகழ்வைச் செய்ய ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனுமதிக்கக்கூடாது. ராஜபக்சேயுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமான புலிகள் இன்று கைகோர்த்து செயல்படுகின்றனர். ராஜீவ் அவர்களைப் போன்ற இன்னொரு சம்பவம் நிகழ்த்தப்பட்டால் ஈழத்தமிழர்கள் இலங்கையை விட்டு முற்றாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஓர் நிகழ்வை ராஜபக்சே எதிர்பார்த்து இருக்கிறார். அதிலும் புலிகளை வைத்தே இந்தச் செயலை மீண்டும் செய்விக்க அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். புலிகளில் பலபேர்களைக் கூலிகளாக்கி நாச வேலை செய்ய சிங்களஅரசுடன் இணைந்துள்ளனர்.

அப்படி ஓர் சம்பவம் நடந்தால் அதற்கும் விளக்கக்கூட்டம் போட புலிகளின் ஆதரவாளர்கள் தயாராக இருக்கின்றனர். இழப்பு தமிழகப் புலி ஆதரவாளருக்கோ, தலைவர்களுக்கோ தீவிர வாய்வீச்சாளர்களுக்கோ அல்ல! வீழ்வதும் பாதிக்கப்படுவதும் ஈழத்தமிழர்கள்தான்!

நோர்வே நெடியவன் தூண்டுதலால் அப்படியோர் நிகழ்வு ஏற்பட இருந்ததை நாம் தடுத்து நிறுத்தியுள்ளோம். அது பற்றியெல்லாம் கோவாலுவுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய தேவையில்லை. அதற்குப் பழிவாங்கவே நெடியவனின் தூண்டுதலில் ஜெயராஜூம் (வன்னியரசு) நக்கீரன் கோவாலுவும்.

எங்களைக் கேவலப்படுத்தி கதை விட்டுள்ளீர்கள். ‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்” என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள்.  ஈழத்தமிழர் மத்தியில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பிழைப்பு நடத்தும் வன்னியஅரசு உமக்கு தமிழகப் போலீஸாகத் தெரிகிறார். ஏனெனில் நீங்கள் அனைவரும் குறுக்கு வழியில் சென்று பணத்தை நாடும் பண்பாளர்கள் தானே! தமிழ் நாட்டில் உள்ள புலி ஆதரவுப் பத்திரிகைகள் சில எங்களைக் கேவலமாக விமர்சித்து செய்தி வெளியிடுவதன் மூலம் புலிகளிடத்து நற்பெயரும் பணமும் பெற்றுள்ளார்கள். இப்படி இலாபம் சம்பாதிக்கும் சிறந்த குறுக்கு வழிதான் இந்தக் கட்டுக் கதையிலும் அடங்கியிருக்கிறது.

விடுதலை என்ற சொல்லைக் கேள்விப்பட்டும், புலிகளின் பணத்தைப் பார்த்த பின்னரும்தான் நீங்கள் ஈழவிவகாரத்தில் புகுந்தீர்கள். நாங்கள் வாழ்க்கையை விடுதலைக்காக இழந்து அகதிகளாகவும் அடக்கப்பட்டவர்களாகவும் நாடற்றவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் எங்களுக்குப் பட்டம் சூட்டும் பணியைச் செய்யாதீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள். நக்கீரன் என்ற பெயரைப் பயன்படுத்தி அவதூறும் பொய்யும் கட்டுக்கதையும் எழுதி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் செயல் கேவலத்திலும் கேவலமான பிழைப்பு.

தெருவோரத்தில் நின்று கூச்சல் போடுவோராலும் காதுகள் கிழிய மேடையில் முழங்குவோராலும் கற்பனையில் கதை எழுதி பிழைப்பு நடத்தும் தங்களைப் போன்றோராலும் ஈழத்தமிழரின் ஒருபகுதியினர் ஏமாந்தது மட்டுமல்ல, அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அப்படியிருந்தும் இன்னமும் விடுவதாகயில்லை. உங்களது வருவாய்க்காக எங்கள் மக்களை கூறுபோட்டு பணம் பண்ணப் பார்க்கிறீர்கள். பேராசைக்கு அளவு ஏது? ஆயினும் எங்களது இனப்பிரச்சினையில் இனியாவது பணம் சேர்ப்பதை நிறுத்தி ஒருவருக்கொருவர் சிண்டுமுடியும் வேலையைத் தவிர்த்தாலே நீங்கள் தமிழினத்திற்குச் செய்யும் பெரும்சேiவாக அது அமையும். வீரப்பனுக்காக கண்ணீர் விட்ட கோபாலு ஈழத்தமிழருக்காக நொந்து கண்ணீர் விடவேண்டாம். அவர்களிடமிருக்கும் பணத்தைப் பறிக்க வீரப்பன் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Pirabaharan_Still_Aliveகடந்த ஆண்டு மே மாதம் 18ந் தேதியுடன் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பகுதியையும் கைப்பற்றி விடுதலைப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தது. அதன் பின்னர் 23-5-2009 அன்று பிரபாகரன் தனது படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற இந்தப் படத்தினை நக்கீரன் வெளியிட்டு பெருமை பெற்றது. இது ஒரு ஒட்டுப்படமோசடி என்பது அப்பாவித் தமிழர்களுக்குத் தெரியாது.

Pirbaharan_Still_Alive_Notஇந்த ஒட்டுப்படத்தின் உண்மையான படம் இதுதான். இது பாலசிங்கத்திடம் உரையாடிக் கொண்டிருக்கும் பிரபாகரனின் பழைய படத்தை இவ்விதம் ஒட்டு வேலை செய்து மொத்தத் தமிழினத்தையும் துணிந்து ஏமாற்றியது இந்த நக்கீரன். இப்படி ஓர் அழிவைச் சந்தித்த இனத்தின் முக்கியமான ஒருவர் புன்னகைக்ககூடிய காலகட்டமா அது! நக்கீரனின் ஒட்டுவேலை அவரை இழிவுபடுத்தியது என்பதுதான் உண்மை.

நக்கீரன் இதழின் வழக்கமான மோசடிதான் இது என்று தெரியாமல் இந்த மோசடிக்காரருக்கு வாழ்த்து சொன்ன அப்பாவி இளிச்சவாய்த் தமிழர்கள்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(E.N.D.L.F) வெளியீடு !!!