அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபையொன்றை அமைக்க உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ள்ளது. இதற்கு பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
சகல இனங்களும் பிரதிநிதித்துவ மாகும் வகையில் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கும் உறுப்பினர்களை நீக்கும் வகையிலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் காலத்திலும் பாராளுமன்ற சபை இயங்கும் வகையிலும் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன எனவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், பிரதமரதும், எதிர்க்கட்சி தலைவரினதும் பிரதிநிதிகளாக எம்.பி. க்கள் இருவர் நியமிக்கப்படுவர்.
இதற்குத் தகுதியானவர்களின் பெயர்களை கட்சித் தலைவர்களால் சிபார்சு செய்ய முடியும். தற்போதைய அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர் ஒருவரை நியமித்தால் அவரை நீக்குவதற்கு தற்பொழுதுள்ள யாப்பின் படி முடியாது. ஆனால் பாராளுமன்ற சட்டத்தின் மூலமே ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தியோ உறுப்பினரை நீக்கும் வகையிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முன்மொழியப்படும் உறுப்பினர்களின் விபரங்கள் ஒருவாரத்தினுள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவேண்டும். இன்றேல் தேவையானவரை ஜனாதிபதியே நியமிப்பார்.
அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபையொன்றை அமைக்கும் வகையில் அரசியலமைப்பில் 41 (அ) என புதிதாக ஒரு ஷரத்து சேர்க்கப்பட வுள்ளது. உத்தேச அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் வழிகாட்டல்களின் படி சட்டபூர்வமாக யாப்பு திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். மூன்று பிரதான அம்சங்களே உத்தேச யாப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட் டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான 31 (2) சரத்து நீக்கப்பட் டுள்ளது. இதனூடாக ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில்