தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உதவ விரும்புவோர் ஆணையாளரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை

p-devaaratna.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு அன்பளிப்பாக குழந்தைகள் பால் மா, உடு புடவைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்க விரும்பும் நலன்விரும்பிகள், வர்த்தகர்கள் இருப்பின் உடனடியாக தம்முடன் தொடர்புகொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு உறவினர்களின் வீட்டுக்கு செல்லல் என்ற பாரம்பரியத்தை பின்பற்றக்கூடியதாக ‘புதுமாத்தளனுக்கான உறவுப் பயணம்’ என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 20 ஆம் திகதி சுமார் 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் மேர்க்ஸ் டப்ளின் கப்பல் செல்லவுள்ளது.

இக்கப்பலில் அங்குள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்களையும், உடுபுடவைகளையும் அனுப்ப அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண ஏற்பாடுகளை செய்துள்ளார்.

 ஜனாதிபதியின் ஆலேசானைக்கு அமைய, இந்த ஏற்பாடுகள் செய் யப்படுவதுடன் அந்த மக்களுக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள், உடுபுடவைகள், பெண்களுக்கான உள்ளாடைகள், போன்றவற்றை அனுப்ப விரும்புபவர்கள் 011-2478322 அல்லது 0112478323, 0112478324, 0112478325 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *