வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள பல்வேறு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், முகாம்களிலே குடிநீர், உணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக முகாம்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் தங்கவைக்கப்படுகிற நிலைமை இல்லை என்றும் முகாமில் உள்ளவர்கள் தமது உறவுகளை தொடர்புகொள்வது இயலாத காரியமாக உள்ளது என்றும் முகாம் வாசிகள் தெரிவிக்கின்றனர்.