பிரபல எழுத்தாளர் ரூபராணி ஜோசப் காலமானார்

இலங்கையின் பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் ரூபராணி ஜோசப் நேற்று முன்தினம் காலமானார். இவர் இறக்கும் போது வயது 79.

50 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய சமூக, நாடக, அரசியல் தொழிற்சங்கத்துறைகளில் சேவையாற்றிய இவர் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது எழுத்துப்பணிகளுக்காக வடகிழக்கு மத்திய மாகாண மற்றும் தேசிய சாகித்திய விழாக்களில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுமுள்ளார். இவருக்கு சொல்லின் செவ்வி, கலையரசி, கலாரூபி, கலாஜோதி, நடிப்பரசி, கலாபூஷணம் போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஏணியும் தோணியும், இல்லை இல்லை, ஒரு வித்தியாசமான விளம்பரம், ஒரு தாயின் மடியில் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரியில் கால்நூற்றாண்டு காலமாக ஆசிரியராக கடமையாற்றி தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *