பஞ்சாப் மக்களுக்கு மன்மோகன்சிங் வேண்டுகோள்

punjab1.jpgமருத்துவ மனையில் சீக்கிய மதத்தின் இரண்டு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தின் எதிரொலியாக, பஞ்சாப் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. ஆஸ்திரியா மோதல் சம்பவத்தில் அந்நாட்டின் தேரா சச்கந்த் என்ற அமைப்பின் தலைவர் நிரஞ்சன் தாஸ் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்நிலையில் அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு பஞ்சாப் மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர், ’’ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த சம்பவங்களை தொடர்ந்து பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். சகிப்புதன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றையே சீக்கிய மதம் போதிக்கிறது. அனைத்து சீக்கிய மத குருக்களும் சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றையே போதிக்கின்றனர்.

பஞ்சாபில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், சீக்கிய மதகுருக்களின் போதனைகளை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குள் இருப்பது அவசியம்.  சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என்னுடைய இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பஞ்சாப் மக்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’’தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *