அவுஸ்திரேலியா தனது வீசா வழங்கும் நடைமுறைகளின் போது இலங்கைத் தமிழர்கள் மற்றும் வடக்கு கிழக்கு வாழ் அகதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாதென அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை திணைக்களம் தெரிவித்துள்ளது.
யுத்த சூழ்நிலை காரணமாக அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியா வீசா வழங்கும் என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.எனினும், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இவ்வாறான விசேட சலுகைகளை வழங்கும் எவ்விதத் திட்டமும் இல்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.