மூன்று புதிய வெளிநாட்டு முதலீடுகளுக்கு இலங்கை முதலீட்டுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இம்மூன்று முதலீடுகளும் 171 மில்லியன் ரூபாவைக் கொண்டதாக உள்ளதுடன் இதில் ஒன்று ஆடை தயாரிக்கும தொழிற்சாலைக்கானதாக உள்ளது.
300 முதலீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இத்தொழிற்சாலை மூலம் 250 தொழில் வாய்ப்புகள் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இத்தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
இதேவேளை ஆடைஉற்பத்தி சார்ந்த மற்றுமொரு தொழிற்சாலை 57 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. போரளஸ்கமுவை பகுதியில் 69 மில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு தொழிற்சாலையை நிருவ இலங்கை முதலீட்டுச் சபை அனுமதியளித்துள்ளது. பொருட்கள் பொதி செய்யும் இதன் மூலம் மேலும் 100 பேருக்கு தொழில் வாய்ப்புக் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.