பொன்சேகா பக்கம் யாவரும் அணிதிரள்வது காலத்தின் தேவை ஆளும் தரப்பிலிருந்து வெளியேறிய அர்ஜுன

arjuna-ranatunga.jpgநாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழல், மோசடிகளை ஒழித்துக்கட்டி நல்லாட்சியை மலரச் செய்யும் பொருட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவின் பக்கம் எல்லோரும் அணிதிரளவேண்டியது காலத்தின் தேவையாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தான் இந்த முடிவை எடுக்காது விட்டால் அது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குச் செய்யும் துரோகமாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தரப்பிலிருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அர்ஜுன ரணதுங்க வியாழக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் கொழும்பிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அர்ஜுன ரணதுங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவதுநான் இந்த முடிவை அவசரப்பட்டு எடுக்கவில்லை. மிக நிதானமாக ஆராய்ந்த பின்னர் நாட்டின் நலன் கருதியே இந்த நிலைப்பாட்டை எடுத்தேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் நான் இந்த முடிவை எடுக்காது விட்டால் அது அக்கட்சிக்குச் செய்யும் துரோகமாகும்.”கடந்த கால நிலைமைகள் பற்றி நன்கு யோசித்த நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். இது எவரது அழுத்தத்தினாலும் எடுக்கப்பட்ட முடிவல்ல. நான் எப்போதும் எனது தேவைகளை விட தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கி செயற்பட்டிருக்கிறேன். நாட்டின் தேவைக்காக எனது தராதரங்களைக் கைவிட்டு கூட செயற்பட்டிருக்கிறேன்.

கடந்த காலங்களில் அரசில் இடம்பெற்ற விடயங்கள் பற்றி எனக்குத் தெரியும். யுத்த வெற்றிக்கு வழி நடத்தி செயற்பட்ட ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு இறங்கியதும் எவ்வளவு கீழ்த்தரமாகத் தூற்றினார்கள் என்பதை நான் அறிவேன். இதேபோல் நான் எனது தலைமையில் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய போது பாராட்டினார்கள். ஆனால், 1999 ஆம் ஆண்டு தோற்றதும் தூற்றினார்கள். அந்த நிலைமை தான் இன்று ஜெனரல் பொன்சேகாவுக்கும். இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்க முடியாது.

இன்று கிரிக்கெட்டில் மட்டுமல்லாது அனைத்து விளையாட்டுகளிலும் மோசடி நிலவுகிறது. அவற்றை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் விசாரணை கூட நடத்தப்படவில்லை. அரசுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியும் அவை அரசின் காதுகளில் நுழையவில்லை.நான் இன்று எடுத்துள்ள முடிவு தொடர்பில் ஜெனரல் பொன்சேகா மீது சேறு பூசுவது போல் நாளை என்மீது சேறு பூசுவர், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர், தேசத் துரோகி என்றெல்லாம் துற்றுவர்.

நான் இன்னமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இருக்கின்றேன். ஆனால், நாளை என்ன நடக்கும் என்பதை என்னால் எதுவும் கூற முடியாது. நாட்டின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்தேன் எனக் கூறினார். செய்தியாளர் ஒருவர் உங்கள் சகோதரர் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆதரவு உங்களுக்குக் கிட்டுமா எனக் கேட்டபோது பதிலளித்த அர்ஜுன ரணதுங்க கூறியதாவது அவர் எனது உடன் பிறந்த சகோதரர். அது குடும்ப உறவு அதனைப் பிரிக்க முடியாது, இதில் அரசியலை கலக்க விரும்பவில்லை. எனது அரசியல் நிலைப்பாட்டில் அவர் இருக்க வேண்டுமென்று நான் கட்டுப்படுத்தமாட்டேன். எனக்குச் சரியெனப்பட்டதை நான் செய்திருக்கின்றேன்.

நாட்டை சரிசெய்வதற்கு இது தான் இறுதிச் சந்தர்ப்பம். ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காகவே நாம் ஒன்றுபட்டுள்ளோம். வேறெந்த குரோதங்களும் எமக்குக் கிடையாது. ஊழல் மோசடியில்லாத நாடாக இலங்கை மலர வேண்டும் எனவும் அவர் கூறினார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவு உங்களுக்குக்கிட்டுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது குறுக்கிட்டு அதற்குப் பதிலளித்த ஜெனரல் சரத் பொன்சேகா அர்ஜுனவினதும் சந்திரிகாவினதும் உண்மையான சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களும் எனக்கு ஆதரவளிப்பர் என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply to Sunil Bouddhaya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Sunil Bouddhaya
    Sunil Bouddhaya

    Giving too much freedom to the religeous people.It is a shameful thing in an educated country like SL say,

    Monks (will) never let the people to be educated. Before make a such comment please go through our history. Sinhala people have been getting their education through Buddhist Piriven for over 2000 years.

    Reply