வாகரைப் பகுதி மக்கள் நான்கு வருடங்களின் பின் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் இடம்பெயர்ந்திருந்த 70 குடும்பங்கள் சுமார் நான்கு வருடங்களின் பின்னர் நேற்று (29-07-2010) மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு நடபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது, வாகரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கதிரவெளி, சித்தாக்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான், முதலான பகுதிகளில் பெரும் சிரமங்களுடன் உறவினர் நண்பர்களின் காணிகளில் தங்கியிருந்தனர். இவர்களே தற்போது மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை இவர்கள் கதிரவெளியிருந்து அழைத்துச்செல்லபட்டு வாகரைப் பிரதேசச்செயலர் பிரிவிலுள்ள அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *