மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை

paddy.jpgவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அதிக நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவது எதிர்வரும் பெரும் போகத்தின் போதேயாகும், என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார, வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் இருந்து கிடைத்த 6500 மில்லியன் ரூபா நிதி விவசாயத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன்படி இப்போது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நெற் செய்கைக்கான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேற்படி 5 மாவட்டங்களிலும் சிறிய நீர்ப்பாசன வசதிகள் திருத்தப்பட் டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இம்முறை நெற் செய்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் 900 ஏக்கர் நெற் செய்கைக்கு தயார் நிலையில் உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *