ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம்

unp_logo.jpgஅப்துல் காதர், மனுஷா நாணயக்கார, உபேக்சா ஸ்வர்ணமாலி, நில்வலா விஜியசிங்க ஆகியோரினை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்ட மாற்றுக்கட்சிகளின் பி.திகாம்பரம், ஜே.ஸ்ரீரங்கா மற்றும் பிரபா கணேசன் ஆகியோருடன் எவ்வித தொடர்புகளையும் கட்சி கொண்டிருக்க போவதில்லை என்றும கட்சியின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

அதேவேளை நீதி நடவடிக்கைகளை நாடியுள்ள, அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்ட ஏர்ல் குணசேகர, லச்மன் செனவிரட்ன ஆகியோர் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *