‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

Aru_ThirumuruganPon_Balasundarampillai_UoJShanmugalingam_N_UoJGanesh_K_GA_Jaffna‘Guillain-Barre’ Syndrome’ என்பது மனிதனின் நரம்புத் தொகுதியின் முடிவுப் புள்ளிகளைத் தாக்குகின்ற ஒருவகை நோயின் அறிகுறி. இது ஆரம்பத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி கால் கைகளில் ஆரம்பித்து உடலை முற்று முழுதாகச் செயலிழக்கச் செய்து மரணத்தையும் விளைவிக்கும். இதன் தாக்கம் வேகமானது. இது மருத்துவரீதியில் உடனடிச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. இந்நோயின் ஆபத்து என்னவெனில், உடலை நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கின்ற நீர்ப்பீடனத் தொகுதியே (Immune System) உடலின் நரம்புத் தொகுதியைத் (Nerve System) தாக்குகின்றது. இது ‘Guillain-Barre’ Syndrome’ பற்றிய மருத்துவக் கட்டுரை அல்ல. இது

‘Tamillain-Barre’ Syndrome’:

தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ பற்றியது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் இச்சமூக நோயை எவ்வாறு கையாளப் போகின்றன என்பது முக்கியமானது. குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. இக்கட்டுரையானது குறிப்பாக யாழ் மாவட்டத்தை மையப்படுத்தியே எழுதப்பட்ட போதும் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் சமூகத்தின் நிலையில் பாரிய மாற்றங்கள் இல்லையென்றே கருதலாம்.

தமிழ் சமூகத்தின் இயக்கத்தை அதன் உள்ளிருந்தே அழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ உடனடியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அல்லது இந்நோய் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் செயலிழக்கச் (Paralysed) செய்துவிடும்.

கடந்த பல ஆண்டுகளாக ஆட்கடத்தல் கொலை என்பன நாளாந்த வாழ்வின் ஒரு அங்கமாக, ஊடகங்களில் வெறும் சிறு செய்தியாக இருந்த நிலை போய், இப்போது அவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றதா என்பதை ஊடகங்கள் கண்ணில் எண்ணை விட்டு தேடிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான வெளிப்படையான குற்றச்செயல்களும் அரசியல் சலசலப்புகளும் ஏற்படுத்துகின்ற பரபரப்பிலும் ஆர்வத்திலும் சமூகத்தை மெல்ல மெல்ல சிதைக்கின்ற விடயங்கள் அடிபட்டுச் செல்கின்றது.

இன்று வடக்கு கிழக்கில் தமிழ் சமூகத்தை நிர்வகிக்கின்ற கட்டமைப்புகள் மிகமோசமான நிலையை அடைந்துள்ளன. கிராம சேவகர்கள் பற்றி மாதத்திற்கு 1500 (நாளொன்றுக்கு 50) முறைப்பாடுகள் வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இவ்வாரம் தெரிவித்துள்ளார். இதில் தங்கள் கடமைகளை சரிவரச் செய்யாமை, லஞ்சம், ஊழல், மதுபோதைக்கு அடிமையாதல் போன்ற முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இம்முறைப்பாடுகள் கிராம சேவகர்களிடம் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பரவலாக உள்ளது. ஆனால் இவற்றை எதிர்கொள்ள அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு உள்ள துணிச்சலும் நேர்மையும் ஏனைய துறைசார்ந்த பொறுப்பில் உள்ளவர்களிடம் பெரும்பாலும் இல்லை.

Imelda_Sugumar_GA_JaffnaCharles_Mrs_GA_VavuniyaRubavathy_Ketheeswaran_GAஇமெல்டா சுகுமாரைப் போன்றே வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி போன்றவர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கடமைகளைப் பொறுப்புடன் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஸ்ரீகாந்தலட்சுமி, இமெல்டா சுகுமார், ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் தங்கள் கடமையை மேற்கொண்டவர்கள்.

இலங்கையில் காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசு தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானது என்ற உணர்வு நிலையில் உள்ள தமிழ் சமூகம் அதன் நிர்வாகத்தை தம் கைகளில் கொண்டுள்ளவர்கள், தமக்கு கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராக தங்கள் சொந்த நலன்சார்ந்து செயற்படுகின்ற போக்கே இங்கு குறிப்பிடப்படும் ‘Tamillain-Barre’ Syndrome’ க்கு தற்போது காரணமாக உள்ளது.

இது விடயத்தில் 1994 முதல் யாழ் மாவட்டத்தின் அதிகாரத் தலைமையைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் மிக முக்கியமானது. வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பொறுப்பான பதவிகளை நிரப்புகின்ற விடயத்தில் அமைச்சர் தேவானந்தா அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அதனால் எவ்வாறான சமூக உருவாக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்த முனைகிறார் என்பதனை போரிற்குப் பின்னான அடுத்த சில ஆண்டுகள் நிரூபிக்கும். இதற்கிடையே இன்னும் சில வாரங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தேவானந்தாவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘Tamillain-Barre’ Syndrome’ இன் சில குணம்குறிகள்:

முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் கெ கணேஸ்:

Ganesh_GA_Jaffnaயாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸ், இவர் முன்னர் வவுனியா அரசாங்க அதிபராகவும் இருந்தவர். இவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி ஏ சந்திரசிறியின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்பது அவர் எப்படிப்பட்ட ஆளுமை உடையவர் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. ஒரு மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் என்பது இலங்கை ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி. அவ்வாறான ஒருவர் இராணுவ அதிகாரியின் பாதங்களில் வீழ்வது அவருடைய பதவியையும் அவமானப்படுத்துகின்ற ஒரு செயலே. அவர் அவ்வாறு இராணுவ அதிகாரியின் பாதங்களில் வீழ்ந்தமைக்குக் காரணம் தன்னுடைய பதவிக் காலத்தை ஆறுமாத காலத்திற்கு நீடிப்பதற்கே எனச் செய்திகள் தெரிவிக்கின்றது. இலங்கையில் ஓய்வுபெறுவதற்கான வயதெல்லை 65 வயதாக இருந்த போதும் இவர் எப்படியோ தனது பதவிக்காலத்தை 69 வயதுவரை தக்க வைத்து அதன்பின்பும் இன்னும் சிறிது காலம் வரை அதனை நீடித்துக் கொள்ள முற்பட்டு உள்ளார்.

அவர் தனது பதவிக் காலத்தை நீடித்துக்கொண்டது தமிழ் மக்களுக்கோ யாழ் மக்களுக்கோ தனது சேவையை வழங்குவதற்காகவா என்பது சந்தேகத்திற்குரியது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போதும் அரசாங்க அதிபராகப் பணியாற்றியவர். பகைமுரண் கொண்ட அரசியல் அந்தங்களிடையே பணியாற்றுவது என்பது இலகுவான விடயமல்ல. இந்த இந்நிலையில் மக்களின் நலன்கள் என்பதிலும் பார்க்க இந்த அரசியல் அந்தங்களில் உள்ளவர்களின் நலன்களையே இவர்கள் திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. இன்று அவ்வாறான நெருக்குவாரம் இல்லாத போதும் அவர்கள் மக்கள் நலன் சார்ந்து இயங்குகின்ற உணர்வு நிலையை மீளப் பெறமுடியாத (irreversible) வகையில் இழந்துபோய்விட்டனர்.

வன்னி யுத்தத்தின் முடிவில் நூற்றுக் கணக்காண சிறார்கள் அனாதரவாக்கப்பட்டனர். போரினால் பாதிக்கப்பட்ட இச்சிறார்களைப் பொறுப்பேற்று பராமரிக்க லண்டனில் உள்ள ஒரு ஆலயம் முன் வந்தது. அவர்களுக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பொது ஸ்தாபனம் ஒன்றும் உள்ளது. அப்பிள்ளைகளை ஒரு ஸ்தாபனம் பெறுப்பேற்கும் பட்சத்தில் அரசாங்க அதிபர் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அப்போது அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸிடம் 2010 ஏப்ரல் வரை இது தொடர்பாக பல தடவை முயற்சித்தும், அவர் அதனைத் தட்டிக்கழித்து வந்துள்ளார். முதற்தடவை இவ்விடயமாக பேசுவதற்கு லண்டன் ஆலயத்தின் – இலங்கையில் உள்ள ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர் சென்றிருந்தார். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பல முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதன் பின் லண்டனில் இருந்து நேரடியாகத் தொடர்பு கொண்ட போது, ‘முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி நீங்கள் மட்டகளப்பாள் ஒருத்தரையா அனுப்பி உள்ளீர்கள்’ என்று அரசாங்க அதிபர் கணேஸின் அலுவலகத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டது.

இது விடயமாக தேசம்நெற் உடன் தொடர்புகொண்ட அவ்வாலயம் அவர் ‘சம்திங்’ எதிர்பார்க்கிறார் என்று தாங்கள் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கே கணேஸ் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி ஏ சந்திரசிறியின் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கிய போதும் யூலை 01 2010ல் அவருக்கு வழங்கப்பட்ட பதவி நீடிப்பு யூலை 10 2010ல் முடிவுக்கு வந்தது.

இவ்வாறான ஒருவருக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்க இருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் கிராம சேவகர்களுக்கு எதிராக மாதம் 1500 குற்றச்சாட்டுகள் வருவதை மூன்று மாதங்களே அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கவனத்திற்கு எடுத்துள்ளார். ஆனால் இதுவரை அப்பொறுப்பில் இருந்த முன்னாள் அரசாங்க அதிபர் கே கணேஸ் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்துள்ளார். அல்லது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.  இவ்வாறானவர்களை கௌரவிப்பதன் மூலம் யாழ் பல்கலைக்கழகம் எவ்வாறானவர்களை முன்னுதாரணமாக சமூகத்தின் வரும்கால சந்ததியினருக்கு காட்ட முற்படுகிறது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

சைவத் தமிழ் சொற்பொழிவாளர் ஆறு திருமுருகன்:

Aru_Thirumuruganஆறு திருமுருகன் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தன் பேச்சாற்றலால் பிரபல்யம் அடைந்தவர். தன் பேச்சாற்றலுக்காக ‘செஞ்சொற்செல்வர்’ என்ற பட்டத்தைக் கொண்டவர். இவர் யாழ்ப்பாணத்தில் பல பொது ஸ்தாபனங்களிலும் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர். ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் தலைவராக உள்ளார். சிவபூமி அறக்கட்டளையிலும் தலைவராக உள்ளார். பெரும்பாலும் விழாக்களில் கலந்துகொண்டு கௌரவத்தை ஏற்றுக்கொள்வதுடன் இவர் தனது சமூகக் கடமையை முடித்துக் கொள்கின்றார். இவர் அனாதரவானவர்களை பராமரிக்கின்ற முயற்சியில் கூடிய கரிசனையைக் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆயினும் இவர் மீதான முழுமையான மதிப்பீடு சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அதிபராக இருக்கும் ஆறு திருமுருகன் மீது தற்போது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரியவருகின்றது.

1894ல் ஆரம்பிக்கப்பட்ட யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஒறேற்றர் சுப்பிரமணியம் அதிபராக இருந்த 1961 ஆம் ஆண்டில் 50 மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பியது. அன்றைய காலகட்டத்தில் ஒரே பாடசாலையில் அதிக மாணவர்கள் பல்கலைகழகம் சென்றமையால் யாழ் ஸ்கந்தாவரோதயாக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் 3 ஆவது இடமும் யாழ்ப்பாணத்தில் 1 ஆவது இடமும் பெற்று தரத்தின் உச்சியில் இருந்தது. இது ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பொற்காலமாக இருந்தது. கல்வித் தரத்தில் குறைந்த மாணவர்களையும் வயது கூடிய மாணவர்களையும் ஏனைய பாடசாலைகள் ஏற்க மறுப்பவர்களையும் கூட இக்கல்லூரி ஏற்றுக் கொண்டது. இது பற்றி அப்போதைய அதிபர் ஓறேற்றர் சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்து இருந்த போது “இத்தகைய மாணவர்களால் இக் கல்லூரியை மட்டுமே சிலவேளை சீர்குலைக்க முடியும். அனால் இவர்களை வெளியே விட்டால் சமுதாயமல்லவா அழிந்துவிடும்” என்று பதிலளித்து இருந்தார். ஏனைய பாடசாலைகளில் நிராகரிக்கப்பட்ட மாணவர்களையும் உள்வாங்கியே அவ்வதிபர் தனது சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

ஆனால் ஆறு திருமுருகன் அதிபராக வந்ததன் பின்னர் யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் சராசரி வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாணவர்கள் காலத்திற்குக் காலம் திறமையான சித்திகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது உண்மையானாலும் சராசரியாக பாடசாலையின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்து உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகின்றது.

பல்வேறு பொது அமைப்புகளிலும் தன்னை முன்னிலைப்படுத்துகின்ற ஆறு திருமுருகன் பாடசாலையில் கவனம் கொள்ளவில்லையென பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கருதுகின்றனர். ஆறு திருமுருகன் மீது வழக்குத் தொடுத்துள்ளவரும் இப்பாடசாலை சார்ந்த பெற்றோரில் ஒருவரே.

இதில் முக்கிய விடயம் என்னவெனில் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு அதிபராக வருபவர் அதிபர்களுக்கான தரப் பரீட்சையில் சித்தியடைந்து இருக்க வேண்டும். ஆனால் ஆறு திருமுருகன் தனது சேவைக்கால அடிப்படையில் தனக்கு இருந்த சமூக அந்தஸ்தைக் கொண்டு அரசியல் செல்வாக்குடன் அப்பதவியைப் பெற்றுள்ளார். அப்பதவியை ஏற்ற  பின்னும் இவர் அதிபர் பதவிக்கான பரீட்சையை எடுக்கவில்லை. அதனால் அதிபர்கள் மட்டத்தில் இவர் அதிபராகக் கணிக்கப்படுவதில்லை. இதனால் பதவியேற்றது முதல் பாடசாலை அதிபர்களுக்காக வைக்கப்படுகின்ற கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்களில் இவர் கலந்துகொள்வதில்லை. அதனால் பாடசாலை வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விடயங்களில் இவர் பின்தங்கியுள்ளார். ஒரு பாடசாலையை தரமான பாடசாலையாகக் கொண்டுவருவதற்கு அதிபருடைய பிரசித்தி மட்டும் போதாது என்பதனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்விடயம் சம்பந்தமாக தேசம்நெற் பல்வேறு பிரிவினர்களிடமும் விசாரித்ததில் இவ்வாறான அதிபர் நியமனங்கள் யாழ் மாவட்டத்தில் பொதுவாக இருப்பதனையும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பாடசாலைகளிலேயே இவ்வாறான அதிபர்கள் நியமிக்கப்பட்டு இருந்ததையும் அறிய முடிந்தது. அதேசமயம் அதிபருக்கான பரீட்சை எடுக்காமல் கூடிய சேவைக்காலத்தைக் கொண்டு அதிபரான சிலர் தங்கள் பாடசாலையை உயர்வான நிலைக்கு கொண்டுவந்தமையும் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும். அதனால் பரீட்சைகளிலும் பார்க்க அவர்கள் தங்கள் பதவியைக் கொண்டு எதனைச் சாதித்தனர் என்பது முக்கியமானது. ஆனால் அறு திருமுருகனின் நிலை இரண்டும் கெட்டானாகி உள்ளது.

மேலும் ஆறு திருமுருகனின் சர்ச்சை அதிபர் பதவியுடன் நிற்கவில்லை. ஆறு திருமுருகன் கதாப்பிரசங்கம் செய்வதற்கு யாழ் பல்கலைக்கழகம் ஒன்றும் சைவக் கோயிலும் அல்ல, யாழ் பல்கலைக்கழக கவுன்சில் கோவில் நிர்வாக சபையும் அல்ல. ஆனாலும் தனது அதிபர் பதவிக்கு தகமை பெறாத ஆறு திருமுருகன் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலின் உறுப்பினராகவும் ஆக்கப்பட்டு உள்ளார். ஆலயத்தின் அறங்காவல் தலைவர் என்ற அடிப்படையில் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம்.

உள்ளடக்கம் பற்றி மாறுப்பட்ட கருத்து இருக்கலாம், ஆனால் ஆறு திருமுருகன் ‘செஞ்சொற்செல்வர்’ சிறந்த சொற்பொழிவாளர். சிறந்த தமிழ் ஆசிரியராகவோ சைவசமய பாடத்திற்கான ஆசிரியராகவோ இருக்கலாம். அவை மட்டும் அவருடைய ஏனைய பொறுப்புகளுக்கான இலவச அனுமதியாக முடியாது. சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள் ‘அகலக் கால் வைக்காமல்’ தங்கள் பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பீடு செய்து ஏற்கும் பொறுப்புக்களை பொறுப்புடன் திறம்படச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதபட்சத்தில் அதிலிருந்து வெளியேற வேண்டும்.

‘உண்மையே உயர் அறம்’ என்ற யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் மகுட வாசகத்திற்கு ஒரு அதிபர் என்றளவில் மதிப்பளிக்க வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என் சண்முகலிங்கம்:

Shanmugalingam_N_UoJProf. N. Shanmugalingam B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2006 பிற்பகுதியில் நியமனம் பெற்ற இவர் இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை துணைவேந்தர்களாக இருந்தவர்களில் மிகக் குறைந்த அறிவியல் தரத்தைக் கொண்டிருப்பவராக உள்ளார். மேலும் நிர்வாகத் திறனும் செயற்திறனும் குறைந்த உபவேந்தராகவும் இவர் கணிக்கப்படுகின்றார். இவருடைய நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர், தனது கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக பிலிப்பைன்ஸிற்குச் சென்றிருந்தார். அங்கு ஒருதலைக் காதலில் மனமுடைந்து மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாத நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் தன் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்து பேராசிரியர் ஆனார்.

தனிமனித பலவீனங்களை ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்துவது ஆரோக்கியமல்ல. ஆனால் அதனையே சமூகத்தின் உயர்பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுக்கான மறைவிடமாக பயன்படுத்த முனையும் போது அப்பலவீனங்களை அம்பலத்திற்கு கொண்டு வருவது தவிர்க்க முடியாதது. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் பாலியல் சுரண்டல்கள் காணப்பட்ட போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதில் முன்நிற்கின்றது.

Sri_Pirasanthan_UoSJதற்போது ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் ஸ்ரீ பிரசாந்தன் 2003ல் ஞர்னம் சஞ்சிகையில் எழுதிய கவிதையில் விரிவுரையாளரின் பலவீனத்தை விரிவாகவே விபரிக்கிறார் அவர்.

ஆற்றல் விளைச்சல் ‘அறுப்பத’ற்கென்றே
அரியணை
வீற்றிருக்கின்ற விரிவுரையாளரே!

நேற்றொரு பரீட்சை நடந்தது.
நெளிந்த ‘பின்னலி’
கூற்றை ரெண்டு விழிகளில் கொண்டவள்
காற்று வாங்கும் சாட்டையொடு
உம்மிடம் கண்வீச்சு
நீட்டினாள்.
சொல்லுக, நீர் விழவில்லையா?

நேற்றொரு பரீட்சை நடந்தது.
எமக்கும்,
உம் மாற்றம் உறுகிற
மனச்சாட்சிக்குமே
நேற்றொரு பரீட்சை நடந்தது.

நீர் ஒடிந்த மனதினுள்
ஓங்கி வளர்கிற ஓர்மத்தில்
பிடித்த கூரிய பேனை இருந்தது.
நானும்,
பரீட்சை எழுதினேன், விரிவுரையாளரே!

இக்கவிதைக்கு ஸ்ரீ பிரசாந்தன் கொடுத்த விலை பெரியது. யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்த போது, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரிலும் அதிக திறமை இருந்தும் ஸ்ரீ பிரசாந்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ‘இவ்வளவு திறமையுள்ள உங்களை ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் நிராகரித்தனர்?’ என்ற ஆச்சரியக் கேள்வியுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது.

இவ்வாறான யாழ் பல்கலைக்கழகச் சூழலில் கற்பித்த என் சண்முகலிங்கம் இந்த ‘லீலைகளில்’ முன்னின்றார்.

அப்போது 2005 அக்காலப்பகுதி. பிரித்தானியாவில் வாழும் யாழ் பல்கலைக்கழகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த ஒருவரும் யாழ் சென்றிருந்தார். (தேசம்நெற் க்கு தகவல் அளித்த அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.) அவர் பல்கலைக்கழகம் சென்று பலரையும் சந்தித்து வந்தார். அவர் ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கத்தின் பாலியல் வல்லுறவு பற்றிய செய்தியை விசாரித்த போது ‘அது பழைய செய்தி. இப்ப நடந்த கூத்தைக் கேளுங்கள்’ என்று சொல்லி பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் கூறப்பட்டவையே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் ஒருநாள் என் சண்முகலிங்கம் மாணவி ஒருத்தியை அழைத்துக் கொண்டு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சிக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தனது வேலையில் விட்டுவந்த ஏதோ ஒன்றை எடுக்கச் சென்ற கட்டிடத் தொளிலாழி இவர்களைப் பார்த்தவுடன் சந்தேகம் கொண்டு தானும் மேலேறி என்ன நடைபெறுகிறது என்று அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அவர்கள் உறவில் ஈடுபட்டதையும் கண்டு கொண்டார். ஓடிச்சென்று பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் எஸ் மோகனதாஸிடம் முறையிட்டார். அவர் அதனை வேறு காரணங்களுக்காக மூடிமறைத்தார். ஆனாலும் அச்சம்பவம் பரகசியமானது.

இன்னுமொரு சம்பவத்தில் வெளிநாட்டுப் பெண் ஆய்வாளருடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்ட போது அப்பெண் என் சண்முகலிங்கத்தை அறைந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சமூக ஆய்வு ஒன்றுக்காக இப்பெண் யாழ் பல்கலைக்கழகம் அனுப்பப்பட்டார். இப்பெண் ஆய்வாளரை என் சண்முகலிங்கம் சமூகவியல்துறை சார்ந்தவர் என்பதால் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவரிடம் அனுப்பி வைத்தார். அப்பெண்ணை என் சண்முகலிங்கம் அணைக்க முற்பட்ட போது அப்பெண் சண்முகலிங்கத்தை அறைந்தே விட்டார். தன்னை அவரிடம் அனுப்பிய பாலசுந்தரம்பிள்ளையிடம் முறையிட்டு உள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்பெண் ஆய்வாளர் தனக்கு ஆபத்து நிகழலாம் என்ற அச்சத்தில் ஆய்வை மேற்கொள்ளாமலேயே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்.

இவ்விரு சம்பவங்களுமே என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வருவதற்கு முன்னர் இடம்பெற்றது. இவை தெரிந்து இருந்தும் என் சண்முகலிங்கம் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆக்கப்பட்டார். இதனால் அவர் உபவேந்தர் ஆனதன் பின்னர் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்ட நிலை உருவானது.

இந்த நிலையிலேயே சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழக மாணவர்கள் சில விரிவுரையாளர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மொட்டைப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட விரிவுரையாளர்(கள்) பொன் பாலசுந்தரம்பிள்ளை, எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோரால் உருவாக்கப்பட்டவர்கள். பல்கலைக்கழகத்தின் பாலியல் துஸ்பிரயோகம் எவ்வளவுக்கு ஸ்தாபனமயப்பட்டு உள்ளது என்பதனை இது வெளிப்படுத்துகிறது.

Kampavaruthy_Jeyarajஅதற்கும் முன்னதாக கம்பவாரிதி ஜெயராஜ் தனது பொன் விழா நூலிலும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீதான குற்றச்சாட்டை வைத்திருந்தார். அவர் வருமாறு குறிப்பிடுகிறார்

‘‘மாதுக் கோளாறுகளும் இருக்கவே செய்தன.
தம் கல்வி அதிகாரத்தைப் பயன்படுத்தி,
பட்டங்களுக்குப் பரிசாக,
மாணவிகளின் பண்பினை விலைபேசிய,
அவ் அழுக்குகளை,
இப்போதைக்கு இங்கு எழுதவிரும்பவில்லை.

ஒழுக்கநிலை இதுவென்றால்,
அறிவுநிலையைப் பொறுத்தவரை, …
தம் வெற்றிக்காய் ஒரு இனத்தின் புலமையைப் பலியிட்ட,
அவர்தம் வஞ்சனைச் செயல்கள்,
இன்றும் எம் கல்வியுலகைப் பாதித்து நிற்கின்றன.

ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 1 : கம்பவாருதி ஜெயராஜ்

இத்தோடு இவை நிற்கவில்லை. அண்மையில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் இணையம் ‘விரிவுரையாளர்களினால் விபச்சாரவிடுதியாக மாறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தட்டிக் கேட்பது யார்?’ தலைப்பிட்டு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. நவம்பர் 18 2009ல் பதிவு செய்யப்பட்ட இக்கட்டுரை துருவியன் என்பவரால் எழுதப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஒரு பகுதி,

‘‘மிகச் சில விரிவுரையாளர்கள் மட்டும் தம்மிடம் பாடரீதியாகச் சந்தேகங்களைத் தீர்க்க வரும் மாணவிகளைத் தனியேதான் வரவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு தனியே செல்லாமல் குழுவாகச் சென்றால் அவர்களைக் கண்டபடி திட்டுவதோடு பரீட்சைப் பெறுபேற்றின்போது அவர்கள் கவலைப்பட நேரிடுமென்று மறைமுக மிரட்டலையும் விடுத்துள்ளனர்.

இதனால் வேறுவழியின்றிக் குறித்த விரிவுரையாளரை இன்னமும் தனியே சென்றுதான் மாணவிகள் சந்தித்து வருகின்றனர். இதுபற்றி உரியவர்களிடம் முறையிட்டால் இன்னமும் தாங்கள் பழி வாங்கப்பட்டு விடுவோமோ? தம்முடைய பல்கலைக்கழக வாழ்க்கை இதனால் தடைப்பட்டு விடுமோ? என்ற பயத்தில் பல மாணவிகள் வாய்பேசா ஊமைகளாகி விடுகின்றனர். எனினும் நிலைமையின் உக்கிரம் தாங்க முடியாத சில மாணவிகள் வீடுகளில் தமது பெற்றோரிடம் இத்தகைய இழிவான செயலைச் சொல்லி அழுகின்றனர். பெற்றோரும் ஏதும் செய்ய முடியாத ஏதிலிகளாக அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே உள்ளனர்.’’

பெண்கள் மீதான என் சண்முகலிங்கத்தின் இப்போக்கினால் இவருக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ‘’உம்மா (முத்தம்) சண்முகலிங்கம்” என்ற பட்டப் பெயரை வைத்துள்ளனர். ‘பெண் விரிவுரையாளர்களே தனியாக இவருடைய அறைக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்’ என தேசம்நெற் உடன் யாழில் இருந்து தொடர்பு கொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் சிலர் தெரிவித்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக தனது மூன்றாண்டு கால ‘சேவை’யை இவ்வாண்டு டிசம்பருடன் நிறைவு செய்யும் பேராசிரியர் என் சண்முகலிங்கம் மற்றுமொரு மூன்றாண்டுக்கு தன் ‘சேவை’யை யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கத் தயாராகி வருகின்றார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை:

Pon_Balasundarampillai_UoJபேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை 1997 பெப்ரவரி முதல் 2003 ஏப்ரல் வரை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். இன்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். யாழ் பல்கலைக்கழகம் இன்றுள்ள கீழ்நிலைக்கு திடீரென வரவில்லை. காலம்காலமாக அப்பல்கலைக்கழகத்தை நிர்வகித்தவர்களின் பொறுப்பின்மையே அதனை இந்நிலைக்கு கொண்டு வந்தள்ளது. அதில் பொன் பாலசுந்தரம்பிள்ளையின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் மிக முக்கியமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளும் பாலியல் துஸ்பிரயோகங்களும் ஸ்தாபனமயப்பட்டது இவரது காலத்திலேயே. இவருக்குப் பின் வந்த உபவேந்தர்களான எஸ் மோகனதாஸ் என் சண்முகலிங்கம் ஆகியோருடன் ஒப்பிடுகையில் இவருக்கு ஆங்கிலப் புலமை இருந்த போதும் இவர் தனது அறிவுத்தரத்தால் அறியப்பட்ட ஒரு உபவேந்தரல்ல.

தற்போது லண்டனில் வாழ்கின்ற, பொன் பாலசுந்தரம்பிள்ளையின் காலத்தில் அங்கு கற்று துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய விரிவுரையாளர் ஒருவர் தேசம்நெற் உடன் இதுதொடர்பாக தொடர்பு கொண்டார். அவர் தகவல் தருகையில் ‘பொன் பாலசுந்தரம்பிள்ளை விரும்பாதவர்கள், அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், எவ்விதத்திலும் அவர்களுக்கு பதவி கிடைக்காமல் செய்துவிடுவார்’ என்கிறார். ‘தனக்கு உதவி விரிவுரையாளர் பதவியை வழங்காமல் தடுக்க எல்லா வழிகளையும் பயன்படுத்தினார்’ என்றார் அம்முன்னாள் விரிவுரையாளர். ‘ஆனால் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் அத்துறையை கற்பிக்க விரிவுரையாளர்களே இல்லையென்ற போது என்னையும் என் போன்ற சிலரையும் உள்ளெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என்றார் அவர். ‘யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கதையே தனிக்கதை’ என்றார் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத அம்முன்னாள் உதவி விரிவுரையாளர்.

கம்பவாருதி ஜெயராஜ் தனது கம்பன் கழக இளைஞர்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் எவ்வாறு பழிவாங்கப்பட்டனர் என்பதனை ‘பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 3’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். இக்கட்டுரை ‘ஜெயராஜ்ஜியம்’ என்ற கம்பவாருதியின் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

‘எங்களைப் (கம்பன் கழகத்தை) பிடிக்காத அவர்களுக்கு (யாழ் பல்கலைக்கழகத் தமிழ்துறைக்கு)
கழகத்தில் வளர்ந்த இளைஞர்கள் எவரையும் பிடிக்கவில்லை.
என்னென்னவோ காரணம் சொல்லி,
அறிவுலகில் புகாமல் அவர்களைத் தடுத்தார்கள்.
பொய், என்றேனும் உண்மையை வெல்லுமா?
கழகத்தில் வளர்ந்த
க இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன், ச முகுந்தன், த ஜெயசீலன், த சிவசஞ்கர் ஆகியோர்,
ஏதோ விதத்தில்,
தமிழுழகில் இன்று தம் பெயர் பதித்து நிற்கின்றனர்.’

கம்பவாருதி ஜெயராஜ் முன்வைக்கும் மற்றுமொரு குற்றச்சாட்டையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமானது என நினைக்கிறேன்.

‘எங்கள் பல்கலைக்கழகங்களுக்குள்,
பகிரங்கமாய் பிரதேசவாதம் பேசப்படுகின்றது.
யாழ் பல்கலைக்கழகத்திற்குள்,
தீவு, வடமராட்சி என இருபெரும் பிரிவுகள்.
மாணவர்களுக்குள் அல்ல,
விரிவுரையாளர்களுக்குள்.
இப்பிரிவுகள் பற்றியே,
பெரும் பதவிகள் தீர்மானிக்கப்படுகின்றனவாம்.
நம் இனமே தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடு.
தீவுப் பேராசிரியரின் துறைக்குள்,
தீவு மாணவர்கள் தலைதூக்குவதும்,
வடமராட்சிப் பேராசிரியரின் துறைக்குள்,
அவ்வூர் மாணவர்கள் தலைதூக்குவதும்,
யாழ் பல்கலைக்கழகத்துள் ஏற்றுக்கொள்ளப்பட்ட,
நியதியாய்ச் சொல்லப்படுகிறது..
கெட்டித்தனமாய்,
பேராசிரியர்களைத் தம் வலைக்குள் வீழ்த்தக்கூடிய,
ஒரு சில வேற்றூர் மாணவர்களும் வெல்வாராம்.
பல்கலைக்கழகத்தில்
அனைவருக்கும் பகிரங்கமாய்த் தெரிந்த இரகசியம் இது.
என்னே இழிவு.’

ஜெயராஜ்ஜியம் – பல்கலைக்கழகத் தமிழ்துறையினருக்கு பகிரங்கக் கடிதம் – 3 : கம்பவாருதி ஜெயராஜ்

யாழ் பல்கலைக்கழகம் மீதான இக்குற்றச்சாட்டுகளை அது தொடர்பாக யாழ் பத்திரிகைகளில் வெளியான சில செய்திக் கட்டுரைகளும் உறுதிப்படுத்தி இருந்தன.

விரிவுரையாளரிடம் கேள்வி கேட்டால் அல்லது அவருடன் விவாதித்தால் ‘கையில் தருவினம்’ (ஃபெயில்ஆக்குவீனம்) – மாணவர்கள் ஒரு அரங்க ஆய்வு ‘உதயன்’ யூன் 13 2004

‘பாகுபாடு பார்த்து புள்ளி போடுறது. மாக்ஸ் வெட்டுறது எல்லாம் ஒட்டுமொத்தமாகவே இங்கை இருக்குதெண்டு இப்பதான் தெரியுது.’ – மாணவர்கள் ஒரு அரங்க ஆய்வு ‘உதயன்’ யூன் 11 2004

‘விரிவுரையாளர்களைத் தட்டிக்கேட்கும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.’ – வலம்புரி மே 27 2004

தங்களை வரும்பாதவர்களை பழிவாங்க முற்படும் இப்பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை இப்படியும் கவனிக்கிறார்கள். பொன் பாலசுந்தரம்பிள்ளையின் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் இவ்வாண்டு ஜனவரியில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. தமிழ் பிரதேசங்களின் மீள்புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புப் பற்றிய ஒரு மாநாடு ஜனவரி 12 2010ல் இடம்பெற்றது. இதில் லண்டனில் இருந்து கலந்துகொண்ட ஒருவரை பொன் பாலசுந்தரம்பிள்ளை அணுகி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். லண்டனில் இருந்து சென்றவர் தன்னை அவருக்கு அறிமுகப்படுத்த முற்பட பாலசுந்தரம்பிள்ளை ‘உம்மைப் பற்றிய விபரம் எல்லாம் நான் ஒன்லைனில் செக் பண்ணிணனான்’ என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில் ‘என்னுடைய மகனும் லண்டனில் பினர் (ஒரு இடம்)இல் இருக்கிறார். நீர் அவரை கவனித்துக் கொள்ளும், நான் உம்மை யாழ்பாணத்தில் ராசா ஆக்குகிறன்’ என்று கூறி உள்ளார். யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் உச்சத்தில் உள்ள ஒருவர் முன் அறிமுகமில்லாத ‘ஒன்லைனில்” மட்டும் தகவல் அறிந்த ஒருவருடன் மேற்கொண்ட உரையாடல் இது. ‘‘பேராசிரியர் ஒன்லைனில் சரியாக ‘’செக் பண்ணி’ இருந்தால் எனக்குக் கிட்டக்கூட வந்திருக்க மாட்டார். என்னுடைய ஒரு பக்கத்தை மட்டும்தான் அவர் ஒன்லைனில் பார்த்திருக்கிறார்’’ என தேசம்நெற்க்குத் தெரிவித்த அவர், ‘‘இப்போதைக்குத் தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை’’ எனத் தெரிவித்தார்.

ஊடகங்களின் அச்சமும் மௌனமும்:

உபவேந்தர் என் சண்முகலிங்கம் உட்பட ஏனையவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிக மோசமானவையாக இருந்த போதும் ஒரு மிகப்பலமான நிறுவனத்தின் அதிகாரம் இவர்களது கையில் இருப்பதும் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் தயவு இவர்களுக்கு உள்ளதும் பாதிக்கப்பட்டவர்களை அச்சமூட்டுகின்றன. முதாலாளித்துவ சமூகமுறைக்கே வளர்ச்சியடையாத ஆண் ஆதிக்க சமூகம் ஒன்றில் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் முன்வைக்கப்படும் போது அது அப்பெண்ணின் மீதே திருப்பப்படுகின்றது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மீதான பாலியல் அதிகார துஸ்பிரயோகங்களை வெளிக்கொண்டு வர தயங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இக்குற்றச்சாட்டுக்களை வெளிக்கொணராத போது அதனை வெளிக்கொண்டு வர வேண்டிய ஊடகங்களும் எழுதப்படாத சமூக, அரசியல், சட்டக் காரணங்களுக்காக அவற்றை சுயதணிக்கை செய்கின்றன. அதனால் குற்றங்களை இழைப்பவர்கள் இப்போதும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடமாட முடிகின்றது.

அதுமட்டுமல்ல இலங்கைத் தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்த சமூக பாதுகாப்பிற்கான விழுமியங்கள் துர்ந்து போய் பிறழ்வான நடத்தைகளையும் பிறழ்வான மனிதர்களையும் அணுசரித்துப் போகின்ற சகிப்புத்தன்மை மேலோங்கி உள்ளது. மேலும் இப்படியானவர்கள் கல்வி, பதவி, நிதி வளம் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சுயரூபத்தை திரையிட்டு மறைக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும் தமிழ் சமூகம் மிக இறுக்கமான மூடிய சமூகமாக இருப்பதும் இவ்வாறானவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் : கூட்டும் கூத்தும்:

Balasundarampillai_Aruthirumurugan_Shanmugalingam_Friendshipஇது தமிழ் கல்விச் சமூகத்தின் மிக ஆபத்தான கூட்டு. இனவாரியான தரப்படுத்தல் ஓரிரு ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டது. அதனை அடுத்து பிரதேச ரீதியிலான தரப்படுத்தல் வந்தது. அதனையும் தமிழ் மக்களுக்கு  எதிரானது என்று முழங்கி ஆயுதம் ஏந்துவதற்கு வித்திட்ட காரணிகளில் இந்தப் பிரதேச ரீதியான தரப்படுத்தலும் ஒன்றானது. (ஆனால் உண்மையில் நூற்றுக்கும் குறைவான யாழப்பான மாணவர்களே இத்தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் யாழ் தவிர்ந்த ஏனைய மாவட்ட மாணர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பத்தை இது வழங்கி இருந்தது.)

ஆனால் அவ்வாறு கல்வித் தரத்தின் உச்சியில் இருந்த யாழ் மாவட்டம் அந்தத் தரப்படுத்தலை எதிர்த்து ஆயுதம் தாங்கிய மாணவர் சமூகம் கால்நூற்றாண்டுக்குப் பின் அதே தரப்படுத்தலினால் நன்மை பெறுகின்றது. இவ்வீழ்ச்சிக்கு தனியான ஒரு காரணத்தை சுட்டிக்காட்ட முடியாது. பல்வேறு அம்சங்கள் காரணமாக இருந்துள்ளது. ஆனால் ஏனைய தமிழ் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சி கணிசமானது. சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் போன்றவர்கள் கூட்டாக யாழ் கல்விச் சமூகத்தை வழிநடத்தும் போது இவ்வாறான கணிசமான வீழ்ச்சியில் மேற்குறிப்பிட்டவர்கள் போன்றோரின் பங்கினை நிராகரிக்க முடியாது.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் இடையே உள்ள இந்த நட்பு சாதாரண நட்புஅல்ல. விசுவாசம், நன்றிக் கடனுடன் கூடிய நட்பு. யாழ்ப்பாணத்தில் குறிப்பிடக் கூடிய விழாக்களில் இம்மூவரையும் காணலாம். ‘buy one get two free – பை வன் கெற் ரூ பிறி’ என்ற வகையில் ஒருவரை அழைத்தால் மூவரும் வந்து சேர்வார்கள்.

இந்த நட்பின் பின்னணி முக்கியமானது. கலாநிதிப் பட்டம் பெற வெளிநாடு சென்வர் வெறும்கையோடு வந்தார். அவர் ஆறு திருமுருகன் நெருக்கமாக இருந்த தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தை மையப்படுத்தி ‘சமய சமூகவியல் ஆய்வு’ ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வு அவ்வாலய மலரில் பிரசுரிக்கவும்பட்டது. இவ்வாறு அன்றைய யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பொன் பாலசுந்தரம்பிள்ளையால் பேராசிரியராக்கப்பட்டவர் தான் இன்றைய உபவேந்தர் என் சண்முகலிங்கம். சண்முகலிங்கத்திற்கு முன் உபவேந்தராக இருந்த எஸ் மோகனதாசும் பொன் பாலசுந்தரம்பிள்ளையால் உருவாக்கப்பட்டவரே.

இன்றைய இந்த உபவேந்தர் மீண்டும் உபவேந்தர் ஆக்கப்பட வேண்டும் என்பதில் தீவரமாக உள்ளவரும் பொன் பாலசுந்தரம்பிள்ளையே. ‘ஏன் பொன் பாலசுந்தரம்பிள்ளை என் சண்முகலிங்கத்தை உபவேந்தராக ஆக்க விரும்பிகிறார்?’ என்பதற்கான விடையை அவேரே அண்மையில் இடம்பெற்ற விழா ஒன்றின் போது தனக்கு நெருக்கமான ஒருவருக்குக் கூறியுள்ளார். ‘சண்முகலிங்கம் இருக்கிற வரைக்கும் நான் தான் விசி’ என்று பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து உள்ளார். காரணம் எஸ் மோகனதாஸ், என் சண்முகலிங்கம் ஆகியோர் செயற்திறன் அற்றவர்கள். முடிவெடுக்கும் ஆளுமையற்றவர்கள். வடக்குக்கு வெளியே இருந்து வருகின்ற ஆங்கிலக் கடிதங்களுக்கு பதிலளிக்க முடியாதவர். இவற்றுக்கெல்லாம் இவர்களுக்கு பொன் பாலசுந்தரம்பிள்ளை தேவை. குருவை மீஞ்ச முடியாத சிஸ்யர்கள். இவர்களின் இக்குறைபாடுகளால் இவர்களுக்கு பின்னால் சிலர் பலமானவர்களாக உள்ளனர். இவர்களது பலவீனங்கள் இவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு தக்க சூழலை வழங்குகிறது.

இந்த விசுவாசத்திற்கு மற்றுமொரு காரணம் பொன் பாலசுந்தரம்பிள்ளை பிலிப்பைன்ஸ் மாணவியின் விடயத்தில் என் சண்முகலிங்கத்தை கண்டும் காணாமல் விட்டது. அந்த நன்றிக்கடனும் என் சண்முகலிங்கத்திற்கு உண்டு.

Putin_Medvedev_Relationshipரஸ்ய ஆட்சித் தலைவர் (ஜனாதிபதி) டமிர்ரி மெட்வெடெவ் க்கும் ரஸ்யாவின் முன்னாள் ஆட்சித் தலைவர் விளாடிமீர் புட்டீனுக்கும் உள்ள உறவு உலகறிந்தது. அதுவே யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம் அவர்களுக்கும் முன்னாள் உபவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளைக்கும் உள்ள உறவு. என் சண்முகலிங்கத்தை யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் அரசனாக பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆக்கி உள்ளார். ஆட்டுவிக்கிறார்.

இப்போது ஆறு திருமுருகன் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவர் மட்டுமல்ல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினரும் கூட. என் சண்முகலிங்கம் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ஆவதற்கு பொன் பாலசுந்தரம்பிள்ளை மட்டும் போதாது, ஆறு திருமுருகன் அருள்பாலிக்க வேண்டும்.

சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – அறுதிருமுருகன் கூட்டினால் மட்டும் தமிழ் மக்களின் குறிப்பாக யாழ் கல்விச் சமூகத்தின் அறிவு மையமான யாழ் பல்கலைக்கழத்தை தம் வயப்படுத்த முடியாது. பல்கலைக்கழகத்தின் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் மூவரில் ஒருவராக இருக்க வேண்டும். பின் அந்த மூவரில் ஒருவராக என் சண்முகலிங்கம் வருவதற்கு அரசியல் செல்வாக்கு வேண்டும். அதற்கு விரிக்கப்பட்ட வலை,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கலாநிதிப் பட்டம்:

Douglas_DevanandaGraduation_Logoஓகஸ்ட் 6 2010ல் நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஓய்வுபெற்ற யாழ் அரசாங்க அதிபர் கெ கணேஸிற்கும் கலாநிதிப் பட்டங்களை வழங்க தற்போதைய யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் என் சண்முகலிங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பருடன் முடிவுக்கு வருவதால் ஒக்ரோபரில் இப்பதவிக்கான தேர்தலுக்கான விண்ணப்பம் கவுன்சிலால் கோரப்பட இருக்கின்றது. தேர்தல்கள் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்ற மூவரில் ஒருவரை (வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல) ஜனாதிபதி யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்வார்.

யாழ் பல்கலைக்கழக கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர்களே இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இவர்களில் 12 பேர் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். 13 பேர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து யுனிவர்சிற்றி கிரான்ட் கொமிஸனால் நியமிக்கப்பட்டவர்கள். இது யாழ் பல்கலைக்கழகமாதலால் இந்த நியமனங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சம்மதம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கவுன்சிலின் பல்கலைக்கழக அங்கத்தவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சமிஞ்சைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் மீறிச் செயற்படுவார்கள் என்றில்லை.

அவர்கள் சமிஞ்சையை மீறமாட்டார்கள் என்பது அவர்கள் கடத்தப்படுவார்கள் கொலை செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தில் அல்ல. அவ்வாறான ஒரு அச்சம் இல்லையென்பதும் செனட்சபை உறுப்பினர்களுக்கு மிகத்தெளிவாகவே தெரியும். கடத்தல், கொலை என்ற கதைகள் தங்களை நியாயப்படுத்தவும் மக்களை ஏமாற்றவும் மட்டுமே. அப்படி என்றால் எதற்காக அவர்கள் அமைச்சரின் சமிஞ்சையை மீறமாட்டார்கள் என்பதற்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வே சாட்சி. யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தேவானந்தா ஒரு சந்திப்பை ஏற்பபாடு செய்திருந்தார். அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் தேவானந்தா ‘என்னிடம் உதவிக்கு வராதவர்கள், உதவி பெறாதவர்கள் இருக்கிறீர்களா?’ எனக் கேட்டார். அங்கிருந்தவர்களில் அப்படி யாரும் இருக்கவில்லை. இதுவே அவர்கள் அமைச்சரின் சமிஞ்சைக்கு கட்டுப்பட வேண்டி இருப்பதற்குக் காரணம்.

இதே துருப்புச் சீட்டையே தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் அமைச்சர் தேவானந்தாவில் பயன்படுத்த முற்படுகிறார். அமைச்சருக்கு கலாநிதிப் பட்டத்தைக் கொடுத்து மீண்டும் தன்னை யாழ் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக்கும்படி கேட்கின்றார். இன்று அமைச்சர் முன்னுள்ள கேள்வி, அவர் இந்த வலையில் வீழ்வாரா? பட்டத்தைப் பெற்றதால் நா இழப்பாரா?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஒரு பார்வை

Douglas_Devanandaஅமைச்சர் டக்ளஸ் தேவானந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்பு நாடா பத்திரிகையின் ஆசிரியரான தோழர் கதிரவேலு – யாழ் மத்திய கல்லூரி ஆசிரியை மகேஸ்வரியின் நான்கு ஆண் பிள்ளைகளில் இரண்டாமவர். தனது ஆறு வயதிலேயே தாயை இழந்த இவர், உறவினரும் தொழிற்சங்கவாதியுமான கெ சி நித்தியானந்த வின் அரசியல் சிந்தனையில் வளர்ந்தவர். தந்தையினதும் தன்னை வழிநடத்திய தந்தையைப் போன்றவரினதும் வழியைத் தனயன் பின்பற்றி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தனது 13வாது வயதிலேயே குரல்கொடுக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்தவர், ஈழமாணவர் பொது மன்றத்திலும் அங்கம் வகித்தவர். 1975ல் தனது 18வது வயதில் ஈழப் புரட்சிகர அமைப்பை (ஈரோஸ்) உருவாக்கியவர்களில் ஒருவர். இவ்வமைப்பின் இராணுவப் பயிற்சிக்காக 1978ல் பாலஸ்தீனம் சென்று பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான அல் பற்றா அமைப்பில் பயிற்சி எடுத்தவர். அதன் பின் ஈரோஸ் பிளவுபட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை (ஈபிஆர்எல்எப்) பத்மநாபாவுடன் இணைந்து உருவாக்கினார். அதில் ஏற்பட்ட பிளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இல் இருந்து பிரிந்து வந்த பரந்தன் ராஜனுடன் இணைந்து ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எப்)யை உருவாக்கினார். இறுதியாக 1987ல் இப்போதுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) உருவாக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் பிரபல்யமான சிறைக்கூடங்களில் எல்லாம் அடைக்கப்பட்ட இவர் 1983 யூலை 25 – 27 வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளில் உயிர் தப்பியவர். ஆனால் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரருக்கு அவ்வாறு உயிர்தப்பிக்க முடியவில்லை. 1990களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தவின் சகோதரர் பிரோமானந்தா மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவரும் ஈபிடிபி உறுப்பினரே.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து அரசியல் நீரோட்டத்திற்கு வந்த ஈபிடிபி 1994 முதல் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்து வருகின்றது. 2000 ஆண்டு முதல் பெரும்பாலும் அமைச்சுப் பதவியில் இருந்து வருகின்றார் அமைச்சர் தேவானந்தா. இவ்வாண்டு ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் இவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டமே தடம்புரண்ட போது அமைச்சர் தேவானந்தாவால் தன் தந்தை வழியைத் தொடர முடியவில்லை. அனைத்து இயக்கங்களிலும் இடம்பெற்ற ஆயுதக்கலாச்சாரத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அவர் தலைமைதாங்கிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினையும் பாதிக்கவே செய்தது.

‘‘ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்ற ஆரம்பகால தலைவர்களில் நானும் ஒருவன். அன்றைய தவிர்க்க முடியாத காலச்சூழலே நாம் ஆயதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம்மீது பிறப்பித்திருந்தது.

எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக எமது கடந்தகால வரலாற்றை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை ….

….. தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.

சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப் பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப் பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.’’ எனக் கூறி அமைச்சர் தேவானந்த கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
(‘’கற்றுக் கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத் தரும்!” என்று அமைச்சர் தேவானந்தா கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன் செப்ரம்பர் 03 2010ல் அளித்த சாட்சியத்தில் இருந்து.)

அனைத்து ஆயுத அமைப்புகள் மீதும் அதன் தலைமைகள் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் ஈபிடிபி கட்சிக்கும் அதன் தலைமைக்கும் உண்டு. அதே போன்று ஆயுதம் ஏந்தாத அமைப்புகளும் இந்த ஆயுதக் கலாச்சாரத்தை ஆதரித்து, ஆயுத அமைப்புகள் மேற்கொண்ட அதே தவறை அவர்களும் செய்துள்ளனர். ஆனாலும் என்றுமே தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க முன்வராத பல தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் அமைச்சர் தேவானந்தாவின் சாட்சியம் வரவேற்பைப் பெற்றமைக்குக் காரணம் அவர் தன்னுடைய அரசியலுக்கு பகிரங்கமாக பொறுப்பெற்றுக் கொண்டது.

மே 18 2009ற்கு முன் மிகக் கூடுதலான தடவைகள் (13 தடவைகள்) தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிவைக்கப்பட்ட போதும் உயிர் தப்பிய தலைவர் என்ற பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு உரியது. ஆனால் அவருடைய நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு அவ்வாறு உயிர் தப்பிக்கும் வாய்ப்பு எட்டவல்லை. அதனால் மே 18 2009ற்கு முன்பாக ஈபிடிபி கட்சிக்கு ஆயுதம் ஏந்துவதற்கான – வன்முறையைப் பயன்படுத்தவதற்கான (அவை தவறாகவும் பயன்படுத்தப்பட்டு இருந்தன.) காரணங்கள் – தேவை இருந்ததுள்ளது. ஆனால் மே 18 2009ற்குப் பின்பாக அதற்கான அவசியம் இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

Douglas_in_IndianBusஇன்றைய இந்த அரசியல் மாற்றத்தை ஈபிடிபி யும் அதன் தலைமையும் விளங்கிக் கொண்டு புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம். அன்று தொடர முடியாது போன தந்தையின் வழித் தடங்களை தனயன் மீள்மதிப்பீடு செய்வதற்கான நேரம் இது. அன்றைய பல கொம்யூனிஸ்ட் தோழர்கள் மக்களுக்காக உழைத்து பென்சனும் இல்லாத நிலையில் இருந்த போது அமைச்சர் தேவானந்தாவின் உதவிக்கரம் அவர்களுக்கு வாழ்வழித்தது. இன்னும் அவ்வாறன சிலருக்கு வாழ்வழிப்பதாக தெரிகிறது.

இன்றும் இவர் மீதுள்ள நம்பிக்கைக்குக் காரணம் எளிமை, எப்போதும் மக்களால் அணுகக் கூடியவராக இருப்பது, எப்போதும் எந்நேரத்திலும், விவாதிக்க தயாராக இருப்பது, மற்றையவர்கள் கருத்தையும் ஏற்று பரசீலிக்கும் பண்பு.

பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் இன்றுள்ள தமிழ் அரசியல் தலைமைகளிடையே ஆளுமையுள்ள ஒரு அரசியல் தலைவராக இருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதிகப்படியான விருப்பு வாக்குகளை அவர் பெற்றுக் கொண்டமைக்கும் இதுவே காரணமாக அமைந்திருக்கலாம். ‘கற்றுக் கொண்ட பாடங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத்தரும்!” என்ற ஃபிடல் கஸ்ரோவின் வாக்கியத்தை அமைச்சர் தேவானந்தா நம்பினால் முன்னைய அரசியல் கலச்சாரத்தில் இருந்து தன்னையும் கட்சியையும் விடுவித்துக்கொள்ள வேண்டும். (பஸ் வண்டிகளையல்ல) தமிழ் சமூகத்தை புதிய அரசியல் கலாச்சாரம் நோக்கி ஓட்டிச் செல்கின்ற சாரதியாக அமைச்சர் தேவானந்த தன்னை மறுசீரமைக்க வேண்டும்.

வாங்காதே வாங்கவல்லாய்:

முன்னைய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதும் ஒருவகைப் போராட்டமே. இன்று அமைச்சர் தேவானந்தாவைச் சுற்றி வருபவர்கள் (கட்சித் தோழர்கள் அல்ல) தம் தேவைக்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டவர்கள். சுயலாபம் கருதிச் செயற்படுகின்றவர்கள். 13 தடவைகள் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இருந்து தப்பிய ஒருவருக்கு, இவர்களை இனம்காண்பதில் எவ்வித கஸ்டமும் இருக்காது. ஒருவருடைய நுண்ணிய அசைவுகளையும் கணித்து மதிப்பீடு செய்கின்ற ஆற்றல் அவருக்கு உண்டு. அதுவே அவரது உயிரையும் அரசியலையும் காப்பாற்றி வந்துள்ளது.

அதனாலேயே எதிர்காலத்தில் தம் வாழ்வை உய்விக்க வேண்டும் என்ற விருப்பில் ஆயிரம் ஆயிரம் விருப்பு வாக்குகளைத் தந்த மக்களுக்காக, கலாநிதி விருது ‘வாங்காதே வாங்கவல்லாய்’ என்று கூற வேண்டியுள்ளது. ‘கோயிற் சுண்டல் போல் பட்டங்களை அளிக்கொடுக்கின்றனர்’ என யாழ்பாணப் பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற காரணங்களாலேயே மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அளித்த பட்டத்தை நிராகரித்தார். பல்கலைக்கழகம் ஒன்று கலாநிதிப் பட்டம் வழங்குதற்கான ஆளுமையும் தகமையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உண்டு. ஆனால் உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஏன் இந்தப் பட்டத்தை வழங்குகிறார் என்று கணக்குப் பார்க்க ‘கல்குலேற்றர்’ தேவையில்லை.

இக்கலாநிதிப் பட்டத்தை அமைச்சர் தேவானந்தா ஏற்றுக் கொள்வாரானால் அது அவரையும் கேவலப்படுத்தி, யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தையும் கேவலப்படுத்துவதாக அமையும். அதனால் மக்கள் தலைவனாக மக்கள் தந்த கௌரவத்தை ஏற்று யாழ் பல்கலைக்கழகம் வழங்க முன்வரும் கலாநிதிப் பட்டத்தை அமைச்சர் தேவானந்த நிராகரிப்பதன் மூலம் இவ்வாறான சுயலாப கொடுக்கல் வாங்கல் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

‘Tamillain-Barre’ Syndrom’ ற்கு அவசர சிகிச்சை அவசியம்:

தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ இங்கு தெளிவாகவே அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் கெ கணேஸ், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என் சண்முகலிங்கம், முன்னாள் உபவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரின் நியமனங்களில் அமைச்சர் தேவானந்தாவின் சம்மதம் இருந்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அரச நியமனங்களுக்கு தம் அதிகாரத்தை பயன்படுத்துகின்ற முறை இலங்கை போன்ற நாடுகளில் வழமையாகி உள்ளது. ஆனால் அந்த நியமனங்களுக்கு நியமிக்கப்படுபவர்கள் அதற்கான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பாக மக்களின் அறிவியல் மையமான பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்படுபவர் தகுதியுடன் பொறுப்புணர்வு உடையவராக இருக்க வேண்டியதும் அவசியமானது. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தையே சீரழிக்கக் கூடியவர்களை சமூகப் பொறுப்பற்றவர்களை, ஆளுமையற்றவர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பதன் மூலம் தமிழ் சமூகத்திற்கு ‘தனது அரசியல் வாழ்வில் அமைச்சர் தேவானந்த எதனை விட்டுச் செல்ல விரும்புகின்றார்?’ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

அண்மைக் காலங்களில் சமூகரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உட்பட பலருக்கும் பெரும்பாலும் அவர்களின் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. இவ்வாறு வேலை வாய்ப்புப் பெற்றவர்கள் பலர் சமூகப் பொறுப்புணர்வோடு தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஈபிடிபி கட்சிக்கு நெருக்கமான ஒரு அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பொறுப்புணர்வற்றவர்கள் சார்பில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்று அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். அப்பொறுப்பற்ற அதிபர் சட்டப்படி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பொறுப்புள்ளவர்கள் தங்கள் கடமையைச் செய்ய அமைச்சர் தேவானந்த தடைவிதிப்பதில்லை என்பதனை யாழ்ப்பாணத்தின் காட்சியகமாகப் பேணப்பட்ட தொழில்நுட்ப பூங்காவிற்கு பொறுப்பாக இருந்த தற்போது லண்டனில் வாழும் எஸ் பாலச்சந்திரன் அப்போது தேசம் சஞ்சிகைக்குத் தெரிவித்து இருந்தார். ஈபிடிபி கட்சியுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த மார்க்ஸிய கருத்துடைய இவர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்கத்தில் முக்கிய பங்கேற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அமைச்சர் தேவானந்த தனது அரசியல் வாழ்வில் குறைந்தபட்சம் நம்பிக்கையான எதிர்காலத்தை தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது. அதனால் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது.

தகுதியற்ற, பொறுப்பற்ற, ஆளுமையற்றவர்கள் ‘கலாநிதிப் பட்டம் தந்தும்’, ‘நண்டுக் கறி தந்தும்’, ‘காலில் வீழ்ந்து ஆசீர்வாதம்’ பெற்றும் தம் காரியத்தைச் சாதிக்க முயல்வார்கள். ஆனால் அமைச்சர் தேவானந்தாவுக்கு விருப்பு வாக்கும் கட்சிக்கு வாக்கும் அளித்த அந்த மக்களை இவர்கள் மிதிக்கின்றனர். இவர்கள் மக்களுக்கு மட்டுமல்ல அமைச்சருக்குமே விசுவாசமற்றவர்கள்.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கும் அமைச்சர் தேவானந்தாவும் அழைக்கப்பட்டு இருந்தார். வந்திருந்தார். அவரின் பாதுகாப்பிற்காக சில தோழர்களும் வந்திருந்தனர். இவர்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அணிந்துவந்த ஆடைகளும் நடந்துகொண்ட முறைகளும் பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்ததாக தேசம்நெற் தொடர்புகொண்ட சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். தங்கள் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் இவ்வாறன குறைகளைக் கண்டிக்கவோ எடுத்துச் சொல்லவோ முன்வருவதில்லை. ஆனால் வெளியே புறமுதுகில் குற்றம் சொல்லவும் தயங்குவதில்லை. அண்மையில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு திறப்பு விழாவிற்கு அமைச்சரையும் அழையுங்கள் என்று கேட்கப்பட்ட போது சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் கூட்டு அதனை தடுத்து நிறுத்தியது. இவர்கள் பின் கதவால் செய்கின்ற நேர்மையற்ற அரசியல் மிக ஆபத்தானது. இது அமைச்சர் தேவானந்தாவுக்கு ஒரு அரசியல் முள்ளிவாய்க்காலுக்கே கொண்டு செல்லும்.

இலங்கையில் குறிப்பாக தேசிய சிறுபான்மை சமூகங்கள் இரட்டிப்பு ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றன. தேசிய சிறுபான்மை சமூகங்களில் குறிப்பாக தமிழ் சமூகம் இலங்கை அரசை எதிர்நிலை அரசாக உணர்ந்து ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுத்து இருந்தது. அதற்கு நியாயமான காரணங்களும் இருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்த போதும் தமிழ் மக்களின் உணர்வுநிலையில் இலங்கை அரசு எதிர்நிலையான அரசு என்பதிலும் அது சிங்கள அரசு என்பதிலும் பாரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. அதற்கான சூழலையும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தவில்லை. அவ்வாறான சூழல் ஏற்படுத்தப்படும் என்பதற்கான அறிகுறிகளும் குறிப்பிடப்படும்படியாக இல்லை. ஆனால் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து 30 மாதங்களும் ஆகாத நிலையில் உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என்ற வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்க முடியாது.

இன்றுள்ள சூழலில் தமிழ் சமூகம் தன்னைத் தானே மீள்கட்டமைக்க வேண்டியுள்ளது. அதற்கு தமிழ் சமூகத்தின் நிர்வாகத்தில் இருக்கின்ற குறிப்பாக தமிழர்கள் சுயநல, சுயலாப நோக்கங்களைக் கைவிட்டு சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் அவ்வாறு இல்லாதவர்களை அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. இது தமிழ் சமூகத்தின் நலன்சார்ந்தவர்களது கடமையும் ஆகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

Show More
Leave a Reply to P.V.Sri Rangan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

93 Comments

  • Sri vaishnavi
    Sri vaishnavi

    பாலசுந்தரம்பிள்ளை. ஜரோப்பாவுக்கு சென்றபோது, அங்குள்ள புலிகள் ஊர் ஊராக கூட்டம் கூட்டி இவரை அங்கு புலிகளின் எதிர்கால கல்வித் திட்டம், போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் பங்கு, புலம் பெயர்ந்தோர் புலிகளை ஆதரிக்க வேண்டியதன் நியாயப்பாடு பற்றி சொற்பொழிவாற்ற வைத்தார்கள். இது அவர் அங்கு ஆற்றிய உரையின் சிறு நறுக்கு:

    “…… தம்பிமார் என்கட தலைவர சும்மா நினைசிராதேயுங்கோ! கொஞ்சம் மெத்தப் படிச்சவயள் அவருக்கு இங்கிலீஷ் தெரியாது, எட்டாம் வகுப்புக்கு மேல படிக்கயில்ல, எண்டெல்லாம் மடக்கத பறைவினம். அவர் எல்லாத்தையும் அறிஞ்சு வைச்சிருக்கிறார். 88 இல இருந்து இண்டைக்கு வரைக்கும்; அவரட ஆலோசனையின் பேரில்தான் நாங்கள் இயங்கிறம் என்பது கவேர்மேன்டுக்கே தெரியும். ..

    ……இங்க நான் சந்திச்ச சிலபேர், பல்கலைக்கழகதின்ர ஆசிரியர்கள் சிலரும், மாணவர்களும் இயக்கத்தால சில வருடங்களுக்கு முன் கொல்லப்படதாக என்னட்ட கேட்டினம்……

    ….தம்பியவய, நான் ஒண்ட மட்டும் சொல்லிறன்,….. ”நல்லா இருந்துதாம் நன்னியர் சுட்ட பணியாரம்” எண்டு … இங்க இருந்து கொண்டு ஜனநாயகம் கதைக்கிறது நல்லாத் தான் இருக்கும். புல்லுபுடுங்காம விட்டா நெல்லு வளராது. அப்படிச் சில விசயங்கள் நடந்த படியால் தான், இண்டைக்கு நம்மட கொன்றோள்ள யுனிவெர்சிட்டி இருக்கு. இதட அர்த்தமாகப்பட்டது இயக்கம் தான் செய்ததெண்டு அர்த்தமில்ல. அந்த காலத்தில ஈ.பி.ஆர்.எல்.எவ், புளட், காத்தார், மூத்தார் எல்லாம் இந்தியனோட சேர்ந்து அட்டகாசம் பண்ணினவங்கள். அவங்கள் கூட செய்திருக்கலாம்.

    …..அதைவிடுவம். இங்க நான் வந்திருக்கிறது, தலைவரின் ஆலோசனையின்படி கடல்சார் பல்கலைக்கழக வளாகம் முல்லைத்தீவில் ஆரம்பிக்க, ஜரோப்பாவில பணமும், தொழில் நுட்பமும் பெறத்தான்……அதுக்குத்தான் சொல்லுறன் தலைவரின் கைய பலப்படுத்துங்கோ எண்டு…….. ”

    இது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முன்னால் நடந்த கூட்டம் ஒன்றில், ஆற்றிய உரையில் ஒரு பகுதி.

    ” கதைக்கப் படாதவை, கதைப்பதற்கு வழிசெய்தவர் நமது அமைச்சர். எமது பல்கலைக்கழகத்தின், இருபத்தி ஜந்து வருடகால அடிமைத்தனம் விலகுவதற்கு ஆவனசெய்து; கல்விச் சூரியனாகவும், சுதந்திரத்தின் நடமாடும் உதாரணமாகவும் திகழ்கிறார், தம்பி தேவா. நான் அவரை தம்பி என்று கூறுவதை பெருமையாக கருதுகிறேன். அவர் ஒரு முறையில் எனக்கு உறவுதான். அவரது பரம்பரையும் எனது பரம்பரையும் யாழ்ப்பாணத்தின் பெருமை சாற்றும் கல்வி சமூகத்தைச் சேர்ந்தது.

    படிப்பறியாதவன்; கண்டவன் நிண்டவன் எல்லாம், அரசியல் செய்ய வெளிக்கிட்டுத் தான் நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம். உங்களுக்குத் தெரியும், எமது மாணவர்கள், ஆசிரியர்கள் என்று எத்தினை பேரை இந்த மிருகங்கள் கொலை செய்ததென்று. தூரப்பார்வை இல்லாதவன், அண்டாடம் காச்சி எல்லாம் எமது தலைவிதியை தீர்மானிக்க வெளிக்கிட்டான். எங்கிருந்து வந்தானோ அங்கேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.

    ஆனல் தம்பி தேவா, தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவரது கையை நாம் பலப்படுத்த வேண்டும்…… .

    thankas :tamilcircle.net/

    Reply
  • Kanthan
    Kanthan

    Jeyabalan,

    “யாழ் பல்கலைக்கழக செனட் சபையில் உள்ள 25 உறுப்பினர்களே இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள்.”

    Not the Senate members, that is Council members. Senate members are so-called academics. The senate is control the academic programs only not the general administration. Do not confuse with the American system.

    Reply
  • Kanthan
    Kanthan

    “இவ்வளவு திறமையுள்ள உங்களை ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் நிராகரித்தனர்?’ என்ற ஆச்சரியக் கேள்வியுடன் மகிழ்ச்சியுன் ஏற்றுக்கொண்டது.”

    Here I would like to cite an extract from the Govt. Audit report for 2009 with regard to the University of Jaffna.

    “The regular failure of the University in filling the vacant posts of academic staff is in improper manner without giving an opportunity to compete those who have qualifications and expected employment in the University system. Although this has been pointed out in my reports for the last several years no action had been taken to rectify these deficiencies.”

    S.Swarnajothi
    Auditor General

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    //- திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.இவரை நான் 1980 களில்,அடையாற்றில் உள்ள வண்ணாந்துரையில்,சிவநேசனின் தமிழ் நேசன் பத்திரிக்கை அலுவலகத்தில் சந்தித்துள்ளேன்!./சண்முகலிங்கம் – பாலசுந்தரம்பிள்ளை – ஆறுதிருமுருகன் கூட்டு அதனை தடுத்து நிறுத்தியது. இவர்கள் பின் கதவால் செய்கின்ற நேர்மையற்ற அரசியல் மிக ஆபத்தானது(புலி வியாபாரம்?)/– இதன் அடிப்படையில்,/ஆனால் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து 30 மாதங்களும் ஆகாத நிலையில் உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என்ற வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்க முடியாது./– இதற்க்காக,/இன்றுள்ள சூழலில் தமிழ் சமூகம் தன்னைத் தானே மீள்கட்டமைக்க வேண்டியுள்ளது. அதற்கு தமிழ் சமூகத்தின் நிர்வாகத்தில் இருக்கின்ற குறிப்பாக தமிழர்கள் சுயநல, சுயலாப நோக்கங்களைக் கைவிட்டு சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் அவ்வாறு இல்லாதவர்களை அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. இது தமிழ் சமூகத்தின் நலன்சார்ந்தவர்களது கடமையும் ஆகும்./- இத்தகைய கடைமைகளில்,திரு.டக்ளஸ் அவர்களின் கடமை பொறுப்பு மிக்கது!.

    Reply
  • அனுஷா.B
    அனுஷா.B

    //ஆனால் உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஏன் இந்தப் பட்டத்தை வழங்குகிறார் என்று கணக்குப் பார்க்க ‘கல்குலேற்றர்’ தேவையில்லை.//

    இதே வழியில் தான் என். சண்முகலிங்கன் அவர்கள் வவுனியா வளாகத்தின் முதுபெரும் புல்லுருவிகளான ஆர். நந்தகுமாரன் (தற்போதைய வளாக முதல்வர்), மற்றும் உயிரியல் விஞ்ஞான துறைத் தலைவி புவனேஸ்வரி லோகநாதன் என்பவர்களின் பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    தன்னைப் போன்ற தகமையில்லாத, சமூகத்தை ஏய்த்துப் பிழைப்பவர்களை பதவியுயர்த்தினால் – தானும் அவர்களின் ஆதரவின் அடிப்படையில் குளிர் காயலாம் என்னும் நப்பாசையின் வெளிப்பாடே அதுவாகும்.

    நந்தகுமாரன் பொங்குதமிழ் காலத்தில் ‘பொங்கியெழுந்து’ லாபம் பல கண்டவர். தற்போது அரசாங்கத்துக்கு சார்பாக கதை பேசி லாபம் காண முயற்சிப்பவர். திறமை மிகுந்த பச்சோந்தியான அவருக்கு சுயலாபம் தவிர வேறொரு சிந்தனையும் இல்லை.

    புவனேஸ்வரி அவர்கள் வவுனியாவில் ஒரு மிகப்பெரிய வியாபாரப் புள்ளி மற்றும் நிழலுக செல்வாக்கு மிகுந்தவர். இவர்கள் தயவு கிட்டினால் சண்முகலிங்கனுக்கு லாபம்தானே?

    புவனேஸ்வரியின் விரிவுரையாளர் பதவி நியமனமே கேள்விக்குறிதான். அது மூடி மறைக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில், அவர் பேராசிரியர் பதவியும் வகிக்க நேரிட்டால்???

    புவனேஸ்வரியின் கைப்பாவையாக இயங்கும் வவுனியா வளாக பிரயோக பீடாதிபதி எஸ். குகனேசன் என்பவர் குழறுபடியின் இன்னொரு பரிமாணம். தனது 10-12 வருட சேவைக்காலத்தில் ஒருநாளுமே ஒரு வேலையும் செய்யாத இவர் விரும்புவது தனது டியூட்டரியில் அலுவலக நேரத்தில் வகுப்பெடுத்துப் பணம் பண்ணுவதையும், நந்தகுமாரனது அலுவலகத்தில் கதை பேசி மகிழ்வதையும் மட்டும்தான். தற்போது பிரயோக பீடம் மாபெரும் சிதில நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சேவைக்காக குகனேசனுக்கு டாக்டர் பட்டமே கொடுப்பார் சண்முகலிங்கன்!

    பரமார்த்த குருக்களுக்கும், மலைக்கள்ளர்களுக்கும் மட்டுமே யாழ் பல்கலைக்கழகம் முன்னுரிமை கொடுக்கின்றது.

    இந்த நிலையில் – எப்போதுதான் எமது சமூகம் முன்னேறுவது?

    Reply
  • Che. Yalpanan
    Che. Yalpanan

    I would like to quote the following statement from a previous debate…

    This is from முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன் (October, 22nd 2009, article in Thesamnet, http://thesamnet.co.uk/?p=17277 )
    A comment by Vannikkumaran on October 24, 2009 11:39 pm – as follows

    //குறிப்பாக ஈழத்தமிழர் அழிவில் குளிர்காய்ந்து ஆர்வமுடன் அறிவைத் தேடும் பசியில் யாழ் பல்கலைக் கழகத்தை நோக்கி வந்த ஆயிரமாயிரம் இளைஞர்களை அறுத்து அனியாயப்படுத்தி அவர்களின் அறிவுத் தேடலை அழித்த பெருமையும் அத்துடன் அறிவுள்ள பலர் அடியெடுத்துக் கூட யாழ் பல்கலைக்கழகத்தில் கால் பதிக்க விடாது தடுத்து தங்கள் பதவிகளைத் தக்க வைத்தது மட்டுமன்றி அறிவுயுகம் விரிந்த இந்தக்காலத்திலும் தங்கள் அறிவை விருத்தி செய்யாமல் தங்களுக்குள் தாங்களே பேராசிரியர் பட்டங்களை பகிர்ந்து கொண்டு தமிழ் சமுதாயத்தை ஏமாற்றியது மட்டுமல்ல இன்றைய அழிவில் புலிகளை மட்டுமல்ல அனைத்து விடுதலை இயக்கங்களும் ஆக்கபூர்வமான விடயங்களை செய்ய அணுகிய போதெல்லாம் இந்த குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக் பேராசிரியர்களின் அறிவு வரட்சியும் ஆளுமையற்ற தன்மையுமே அழிவுக்கு வழிவகுத்தது. இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் சில பின்பட்டப் படிப்பு நெறிகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திரும்பப் பெற்றுக்கொண்டது. காரணம் தகுதியற்ற பட்டங்களை வழங்குகிறது என்று.
    ஆகவே தங்களுக்குள்ளே பிரதேச வாதத்தை வளர்த்து தீவுப் பகுதி பெருமக்களும் வடமராச்சி பெருமக்களும் தங்களுக்குள் தாங்களே பேராசிரியர் பட்டங்களை சூட்டிக் கொள்ளும் ஓர் பள்ளிக் கூடமாகவுள்ளது. குறிப்பாக சிவத்தம்பி மட்டுமல்ல இந்த வரிசையில் வந்து போன இயக்கங்களுக் கெல்லாம் வாயல் வெட்டி வளமான ஆலோசனைகளை வழங்கி தனது பதவியைமட்டும் காக்க அரசியல் குறளிவித்தைகள் காட்டும் காக்க பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை ஒரு ஜீனியஸ். யாழ் பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு தீவிர தீவுப்பகுதி இரட்சகன். தீவுப் பகுதி தெருக் குப்பைக்கு கூட பட்டம் கொடுக்கும் ஓர் மாதன முத்தாஇவர்.
    யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்களின் கொடுமையில் இருந்து தமிழ மக்களையும் அவர்களின் அறிவு விருத்தியையும் இறைவன்தான் காக்க வேண்டும்.//

    The above statement summarizes everything that is negative about the UoJ very eloquently.

    Reply
  • Kumar
    Kumar

    பாலசுந்தரத்தின் துணைவேந்தர் பதவிக்காலத்தில் தீவகத்திலிருந்து வந்தவர்களுக்குத் தான் பதவிகள் வழங்கப்பட்டன. தோட்டக்காரன் முதல் விரிவுரையாளர்கள் வரை இத்தகுதி எதிர்பார்க்கப்பட்டது. பிரித்தாளும் சாதுர்யமாக அக்காலகட்டத்தில் இது கருதப்பட்டது. இதை சிலர் நிர்வாக இராஜதந்திரமாகவே பார்த்தார்கள்.
    அவர் புவியியல்துறை தலைவராக இருந்தகாலத்தில் மாணவர்களாக இருந்தவர்களுக்குத் தெரியும்- இந்திய இராணுவ காலகட்டத்தில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் செய்த கள ஆய்வுகள் பின்னாளில் எடுத்தாளப்பட்டு பாலசுந்தரத்தின் பெயரில் நூல்வடிவில் வெளியிடப்பட்டன.

    Reply
  • Suppan
    Suppan

    “இவ்விரு சம்பவங்களுமே என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வருவதற்கு முன்னர் இடம்பெற்றது.”

    Not only these, there are several incidents. In several occasion he had been hammered by the women as well. Calculator is just not enough to count these incidents. The way he should be punished as in Vithiyananthan case otherwise these persons will not change their attitudes.

    Reply
  • ssganendran
    ssganendran

    இது ஒரு நம்பகரமான கட்டுரை இல்லை என்பது மட்டுமல்ல இக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் பலவிடயங்களில் ஏன் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன என்ற ஒரு கேள்வியே இக்கட்டுரையின் பொறுப்பற்ற தன்மை என்கின்ற பதிலைத்தருகின்றது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    kumar, தீவகத்தில்லிருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது பிரச்சனையில்லை. அந்த பதவியில் அமர்ந்தவர் அதையுரிய முறையில் சேவையில் ஈடுபடுத்தினாரா என்பதையே கேள்விக்குள்ளாகப் படவேண்டும். நீங்கள் இனியாவது தோட்டக்காரன் தீவான் போன்ற வார்தைகளை கவனக்குறைவாகவும் பயன்படுத்த வேண்டாம். நோக்கிய இலக்கைவிட்டு எங்கோவோ கொண்டு சேர்த்துவிடும் இப்படியான வார்த்தை பிரயோகங்கள். இது ஆரோக்கியமான சிந்தனையுள்ளவர்களுக்கு உரியதல்ல.

    Reply
  • Sri vaishnavi
    Sri vaishnavi

    தமிழ் பிரதேசங்களின் மீள்புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புப் பற்றிய ஒரு மாநாடு ஜனவரி 12 2010ல் இடம்பெற்றது. இதில் லண்டனில் இருந்து கலந்துகொண்ட ஒருவரை, போல இஸ்கண்டேநேவிய நாடு ஒன்றில் இருந்தும் ஒருவர் பங்கு கொண்டர். ராஜஹரனின் நண்பரான அவர் பல்கலைகழகத்தில் இருந்த தொடர்புகள், வேறு சில தொடர்புகள், மூலமாக அக்கருதரங்கில் கலந்து கொண்டர். அவர் தான் வதியும் நாட்டில் அவருக்குள்ள அரசியல் தொடர்புகள், ஊயர்கல்வி நிறுவனங்களில் அவருக்கிருக்கும் தொடர்புகளை பயன்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கும், அவர் வதியும் நாட்டில் உள்ள பல்கலைகழகங்கள்/ உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் skills development and exchange agreement செய்ய முயற்சி எடுத்தார் . ஆனால் பொன் பாலசுந்தரம்பிள்ளையும் , துணைவேந்தர் சண்முகலிங்கமும் சில நிபந்தனைகளை விதித்ததுடன், (தாம் இருவரும் நேரடியாக அந் நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, ஒப்பந்தத்தை செய்வதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு அவரை விலகுமாறும் கேட்டு கொண்டனர். ) அவருடன் சரியாக ஒத்துளைகவில்லை. மனமுடைந்த அவர் முயர்சியை கைவிட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டார்.
    இஸ்கண்டேநேவிய நாட்டில் வாழும் அந்த நபரிடம் டக்லஸ் தேவானந்தாவின் உதவியுடன் skills development and exchange agreement செய்யலாம் என சிலர் ஆலோசனை கூறினார். ஆனால் தலைகனம் பிடித்த அந்த நபர் , அரசியல் பரிசுத்தவான் என தன்னை காட்டிக் கொள்வதர்காக டக்லஸ் தேவானந்தாவின் உதவியுடன் ஒப்பந்தத்தை செய்ய மறுத்து விட்டார் . ராஜஹரனுக்கு பயத்தில் அவர் அப்படி நடந்து கொண்டார் என நான் நினைக்கிறன். இப்போ சிங்கள பல்கலைகழகங்களுக்கு JVP ஊடாக உதவி செய்கிறார் என கேள்வி . எல்லோரும் சுயநலவாதிகள் .

    Reply
  • Kumar
    Kumar

    சந்திரன் ராஜா- நீங்கள்தான் நோக்கிய இலக்கைவிட்டு எங்கோ இழுக்கமுனைகிறீர்கள். நான் தீவான் என்ற சொற்பிரயோகத்தை எங்கும் பயன்படுத்தவில்லை. தீவகம் என்ற சொல் வரலாற்றுரீதியில் சப்த தீவுகளையும் குறிக்கும் சொல். பாலசுந்தரம்பிள்ளை தீவுப்பகுதியைச் சேர்ந்தவர். அவர் பிரதேசவாதத்தை பதவிகளை வழங்குவதில் தீவிரமாகக் கடைப்பிடித்தவர் என்றதொரு குற்றச்சாட்டு உள்ளது. இதையே நான் குறிப்பிட்டேன்.

    தோட்டக்காரன் என்ற பதம் பல்கலைக்கழகப் பூங்காவொன்றை பராமரிப்பதற்கு அவர் மேற்கொண்ட முறையற்ற தொழிலாளி ஒருவரின் நியமனம் சார்ந்தது. இதற்கும் மலையகத்தவரை நான் குறிப்பிடுவதாகத் தயவுசெய்து சிந்தனையை தடம்பிறள விடாதீர்கள். தொட்டதற்கும் பிழைபிடிப்பது கெட்டித்தனம் அல்ல. சொல்லப்பட்ட கருத்துக்களை மறுதலிப்பீர்களாயின் வரவேற்கிறேன். பதப்பிரயோகங்களை உரியவகையிலேயே பிரயோகிக்கவேண்டும் என்பதை நான் நன்றாகவே அறிவேன். நன்றி.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    பாலசுந்தரம்பிள்ளை குறித்துக் கருத்துக் கூறும் பின்னூட்டுக்காரர்கள், அவரைத் தீவுகத்து விசுவாசியென முன்தீர்ப்பு-லேபிளிட முனைவது விசமத்தனமானது. இதுள் எத்தனை கொம்பரும் ஈடுபடும்போது நாமும் பார்த்துக் “கம்”மென்று இருக்க விரும்பவில்லை!

    யாழ்ப் பல்கலைக் கழகத்திலேயே வடமாராட்சி மேட்டிமைக் கனவுகள் மற்றைய பிராந்தியத்தை ஓரங்கட்டியதன் விளைவே பாலசுந்தரம் பிள்ளை!

    எங்களுக்கும் வடமாராட்சியின் தெரிவில் காட்லியையும், மகாஜனவையும் முன் நிறுத்தி, யாழ்ப் பல்கலைக்கழகத்தில் மற்றைய பிராந்தியத்தை-குறிப்பாக தீவகத்தை வேட்டையாடிய “யாழ்பாணிய” கருத்தியலை நன்றாகவே இனங்காணமுடியும்.

    இன்று, தனிப்பட்ட நடாத்தையில் சிக்குப்படும் சண்முகலிங்கன் யாழ்ப்பாணத்தில் தனது கலாநிதிப்பட்ட ஆய்வைச் செய்தது, வழமைபோல யாழ் மேட்டுக்குடி மனதுக்குச் சின்ன விஷயமாக இருக்கு. பேராடும் இலன்டன் ஓக்ஸ்பேர்டிலோ அல்லது கேம்பிறிஜ்சிலோ அவர் தனது ஆய்வைச் செய்திருந்தால் இரத்தின ஜீவன் கூலுக்குக் கொடுக்கும் “மரியாதை” அவருக்கும் கிடைத்திருக்கலாம்.

    பன்னாடைத்தனமாக விமர்சிக்கும் நட்ஷத்திரன் செவ்விந்தியன் முதல் தேசம் ஜெயபாலன்வரை பிராந்தியவாதத்தை மெல்ல வடிவமைக்கும்போது “பாலியில்”சார் மதிப்பீடுகளால் சண்முகலிங்கம் தகுதி-பாலசுந்தரம் பிள்ளை தகுதியென எழுதுவதன் தொடரில் இப்போது தீவகத்தாருக்கு முன்னுரிமை… வடமாராட்சிக்காரர் எமக்குச் செய்த கொடுமைகளை நாம் யாரிடம் உரைப்பது?

    சும்மா கல்வித் “தகமை” கண்றாவியெனப் பகர்வதை விட்டு, உண்மைகளைக் கண்டயைவும். இது, வடமாராட்சி.-தீவகம் எனும் பிராந்திய வாதத்துக்குள் மூழ்கி முத்திடுப்பதென கழிவுகளை அரங்கேற்றாமல் ஆய்வுத் திறனுடன் அணுகவும். அது முடியாதுபோனால் வேறு துறைசார் புலமைகளுக்குள் உங்களது நேரத்தைச் செலவிடவும். இது, ஜெயபாலனுக்கு எனது பணிவான வேண்டுகோள்!

    சும்மா, “தீவகம்-வடமாராட்சி” என்று புண்ணில் வேல் பாச்சும்போது நாம் தீவகத்தார் தாமெனப் புரட்டுவதும் தொடரும்.கவனம்!

    Reply
  • Anton Chinnaiyah
    Anton Chinnaiyah

    //தொட்டதற்கும் பிழைபிடிப்பது கெட்டித்தனம் அல்ல. சொல்லப்பட்ட கருத்துக்களை மறுதலிப்பீர்களாயின் வரவேற்கிறேன். பதப்பிரயோகங்களை உரியவகையிலேயே பிரயோகிக்கவேண்டும் என்பதை நான் நன்றாகவே அறிவேன். நன்றி.//

    As usual the debate is getting off track towards initiating wasted arguments against each other i.e. Chandran.Raja’s comments on Kumar’s argument. Which is typical of what is happening inside the University of Jaffna. In these regards, I should congratulate Kumar – for he’s being point blank and straight forward with his arguments. This debate should be considered yet another positive effort taken up by T. Jeyapalan towards revitalizing the corrupted organizational system of the University of Jaffna.

    As such, it is nothing but logical to ask the question:

    “How can the disease/anomaly of the ‘Tamillain-Barre’ Syndrome’ be eradicated from the Tamil speaking community of Sri Lanka as well as in its diaspora”?

    Finding the answer to this question in-terms of ideology and practical-sociology would be the next step (in-fact the best step) towards social and educational upliftment of Tamilians in Sri Lanka.

    Reply
  • Sri vaishnavi
    Sri vaishnavi

    ஸ்ரீ ரங்கன் அவர்களுக்கு , நீங்கள் எழுதவதில் அநேகமானவை எனக்கு பிடிக்கும். சில நேர்மையான எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். அனால் இன்று நீங்கள் யாழ்-பல்கலைகழக பெருசாளிகளுக்கு வக்காலத்து வாங்க முயல்வது தவறு என்பது, எனது பணிவான கருத்து. தாங்கள் இந்த விடயத்தில் சரியான தகவல்களை தெரிந்து, புரிந்து எழுதாமல் உணர்ச்சி வசப்ப் பட்ட நிலையில் எழுத்துகிறீர்கள். நான் 2005 வரை யாழ்-பல்கலைகழகத்தில் பயின்றேன். நான் சமூகவியல் பிரிவில் கற்றதால், பொன் பாலசுந்தரம்பிள்ளையும் , துணைவேந்தர் சண்முகலிங்கமும் ஆகியோர் பற்றி நன்றாக தெரியும். அது மட்டுமல்ல பின்லாத்/Finland இல் படித்து அன் நாட்டினரை மணந்து அங்கு வாழும் சண்முகலிங்கத்தின் ஒரு நெருங்கிய உறவினர் எனது சக மாணவி. பாலசுந்தரம் பிள்ளையின் பாலியல் தொந்தரவுகள் பற்றி விபரமான கட்டுரை உங்கள் நண்பர் ராஜாவின் இணையத்தில் வந்தது வாசிக்கவும். அதில் உள்ள அனைத்தும் உண்மை.

    தீவகதினர் பலர் டக்லஸ் தேவாவின் வேண்டுகோளுக்கிணங்க வேலையில் அமர்தப்பட்டது உண்மை. ஆனால் அவர்களில் பலர் கூலி தொழிலாளர்களாகவே அமர்தப்பட்டனர். படித்த தீவகதார், உங்களை போன்று 80 -90 காலத்திலேயே புலம் பெயர்த்து விட்டனர். அதாவது அங்கிருந்த வெள்ளாளர்கள். ஆகவே பொன் பாலசுந்தரம்பிள்ளையும், தீவகதார்களை பதவியில் சேர்த்தார் என்பது சரியான தகவல் அல்ல. ஆனால் பொன் பாலசுந்தரம்பிள்ளையும், துணைவேந்தர் சண்முகலிங்கமும் புலிக்கு சலாம் போட்டபடி, தேவாவுக்கும் வால் பிடிப்பவர்கள் … ஸ்ரீ ரங்கன் தகவல்களை தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது .

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…‘இவ்வளவு திறமையுள்ள உங்களை ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் நிராகரித்தனர்?’ என்ற ஆச்சரியக் கேள்வியுடன் மகிழ்ச்சியுன் ஏற்றுக்கொண்டது…//
    இதேபோலவே ஸ்ரீலங்காவில் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மேற்குலகம் வந்து தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை விரிவுரையாளராக இருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அப்பல்கலைக்கழகம் சென்று அவரைச் சந்திக்க தேவை ஏற்பட்டது. அவரின் பீடத்தில் சேவையாற்றும் சக பேராசிரியர்கள் இவரைப்பற்றிச் சொல்லும்போது இவ்வளவு திறமையுள்ள ஒருவரை ஸ்ரீலங்கா நிராகரித்தது ஒருவகையில் தமக்கு மகிழ்ச்சி ஏனென்றால் இவர் தங்களுக்குக் கிடைத்து கொடை என்றார்கள்.
    (ஸ்ரீலங்கா அவரை தரப்படுத்தலால் பொறியியல் துறைக்கு நிராகரித்து அவர் கணிதத்துறைக்கு சென்று, நல்ல சித்தி பெற்றும் விரிவுரையாளர் பதவி கிடைக்காமல் இன்று இந்நிலைக்கு வந்தவர்) இவ்வாறு எண்ணுக்கணக்கற்ற தமிழர் இருக்கிறார்கள். ஆச்சரியக்கேள்வியுடன் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட ஜெயவர்த்தனபுர பேராசிரியர்களுக்கு தரப்படுத்தலால் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அமைசர் டக்லஸ் தேவானந்தாவுக்கு கெளரவ கலாநிதி பட்டம் என்பது அவரின் தலையெழுத்து. அதை யாராலும் தடுக்க முடியாது. இம்முறை (அது லஞ்சம் என்று கருதி) சண்முகத்தாரிடம் இருந்து வேண்டாம் என்றாலும், அடுத்த முறை அது (நன்றி கடன் அடிப்படையில்) பேராசிரியர் Hooleல் யிடமிருந்து கிடைக்கத்தானே செய்யும். 13 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பினாலும் இந்த கலாநிதி பட்டம் பெறுவதிலிருந்து தப்பவே முடியாது.
    அது சரி டக்லஸ் தேவானந்தாவின் மேற்பார்வையின் கீழ் அனைத்து ஏற்பாடுகளும் பூர்தியான நிலையில்தானே பேராசிரியரின் யாழ் பயணம் நிச்சயபடுத்தப்பட்டதாக கேள்வி. அப்படியிருக்க இப்போது வழஙகப்படும் கலாநிதி பட்டத்தை ஏற்பதால் அல்லது நிராகரிப்பதால் எந்த மாற்றமும் வராதல்லவா?, முந்தி அல்லது பிந்தி கிடைத்த பட்டம் என்பதைத் தவிர.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    Sri vaishnavi, நீங்கள் குறிப்பிடுவதன்படி, நான் உணர்ச்சிவசப்பட எழுதவில்லை! அல்லது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் “பெருச்சாளி”களையும் காப்பாற்றவில்லை! எனது கருத்து மிகச் சாதாரணமானது. அதாவது ,தீவார், தீவாருக்குப் பதவி, இடம் அளிப்பதெனும் அவதூறைச் சுட்டிக்காட்டுவதே.
    பாலசுந்தரம்பிள்ளை நிராகரிக்கப்பட்ட தீவாரது அறிவின் நேரடியான பாதிப்பிலிருந்து வந்தவர். அவர் அங்ஙனஞ் செயற்படுவதற்கான முகாந்திரம் யாழ்ப்பாணியத்தின் இருப்போடு சம்பந்தப்பட்டது. இதை உரைப்பதாகவிருந்தால் “தீவகம்-வடமாராட்சி” கருத்தியலுக்குள் செல்லவேண்டும்.

    அடுத்துப் பாலியல் ரீதியான நடாத்தை சம்பந்தப்பட்டது. இதற்கு நான் பதிலளிப்பது அவசியம். பாலசுந்தரம் பிள்ளை, சண்முகலிங்கம், கணேசலிங்கம், இவர்களைவிடச் சாமி நித்தியானந்தாவெனத் தொடரும் இந்தச் சமாச்சாரத்தில், நான் இஸ்லாத்தின் குரான் கூறும்(சரியா) நிலையைச் சிலவேளை நியாயமெனக் கொள்பவன். பெண்களைப் பார்த்தாவுக்குள் மறைப்பது ஒடுக்குமுறையெனச் சொல்வதில் பல சிக்கல்கள் இருக்கிறது. ஆண்கள், பாலியல் ரீதியாக எந்தப் பெண்ணையும் பயன்படுத்துவதில் மிகச் சாதாரணமாக விருப்புடையவர்கள் (நானும் அப்படியே). இன்றைய முதலாளியச் சமுதாயம் ஆண்பெண் உறவைப் பொருளாதார ரீதியாகப் பணமாக்கும் திசையில் பெண் உடல்சார் அனைத்தும் பண்டமாக மாற்றிய பொருளாதாரப் பொறிமுறைக்கு முன்னே, பெண்ணுக்கான பாதுகாப்பாகப் பார்த்தா வந்துவிடுகிறது. இங்கே, இஸ்லாம் இதை முன்கூட்டியே அறிகிறது. அது பிறிதொரு பிரச்சனையில் விவாதிக்கலாம்.
    பாலியல் நடாத்தையில் யாழ்ப்பாணப் பேராசியர்கள் மட்டுமல்ல உலகமே பிறழ்ந்துதாம் இருக்கு. அதனால்,அஃது சரியானதெனக் கூறேன். என்றபோதும், இவ்வளவு வளர்ச்சியடைந்த மேற்குலகத்தில் எத்தனை பாலியற் குற்றங்கள் நிகழ்கிறது தெரியுமா?
    denk-mit.info/kirche/kirchesexskandaleohneende.html
    spiegel.de/thema/sexueller_missbrauch_in_der_katholischen_kirche/
    morgenpost.de/printarchiv/politik/article1270038/Sex-Skandal-erreicht-den-Vatikan.html
    spiegel.de/panorama/justiz/0,1518,682024,00.html
    sueddeutsche.de/politik/rom-geistliches-gomorrha-1.979519
    bild.de/BILD/news/2010/01/07/sex-skandal-in-kirche-mutter-von-polizist/will-beichte-bei-pfarrer.html
    tz-online.de/nachrichten/muenchen/meta-kirche-sex-skandal-nimmt-kein-ende-683291.html

    பல்கலைக்கழகம், கத்தோலிகத் திருச்சபை, அரசியல், பாடசாலைகள் என மேற்குலக வளர்ச்சியடைந்த சமுதாயமே இவ்வளவு மோசமான நடாத்தைகுள் இருக்கும்போது, குறைவிருத்தியுடைய தமிழ்ச் சமுதாயத்தில் எப்படி?…
    இன்று, ஜேர்மனி, இத்தாலி, லுக்சம்பேர், நெதர்லாந்துத் திருச்சபகைள் கிட்டத்தட்ட 5000 க்கு மேற்பட்ட பாலியற் பலாத்தகாரத்துள் மாட்டுப்பட்டுள்ளது. இந்த ஆயிரக்கணக்கான குற்றங்கள் சுமார் முப்பது ஆண்டுகளுக்குள் நிகழ்ந்துள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்கள் பேசியதன் பயன். பேசாதது கோடி…
    இத்தகைய பாதிப்படைந்தவர்களுக்கு ஜேர்மனியப் பிஷ்சோப் வட்டாரமும், திருச்சபைகளும்-போப்பாண்டாவரும் தலா 5000 யூரோ நஷ்ட ஈடு தருவதாக இன்று 24.09.10 சம்மதித்திருக்கிறார்கள்.
    இந்த விசயத்தை ஏன் முன் வைக்கிறேன்? பாலியல் ரீதியான தேவையைப் பூர்த்தி செய்யுந் தகமை முதலாளியச் சமூகத்துக்குக் கிடையாது என்பதைத் தெரிவிக்கவே. இங்கேதாம், இஸ்லாமியத்தின் பார்த்தாவும், அவர்களது புரிதலும் கணக்கில் எடுக்கப்படுகிறது. எனினும், அங்கேயும் இதே நடாத்தைதாம்.

    பாலியற் பிறழ்வு மிக முக்கியமான சமூகப் பிரச்சனை. எனக்கும் பதவியும், அதிகாரமும் இருக்குமானால் எனது வட்டத்துள் பெண்களைச் சண்முகலிங்கன் பாணியில் அணுகுவதாகவே இருக்கும். இதுதாம் யதார்த்தம். இதை போக்குவது எப்படி? வளர்ச்சியடைந்த மேற்குலகமே இதிலிருந்து மோசமாகப் பாதிக்கப்படும்போது, நமது சமூகம்?

    இதை உணருங்கள். இந்தப் புள்ளியில் எவராவது தூய்மை வாதம் புரிவாரானால் அவர் பொய்யர்.

    பாலியல் ரீதியாக நான் எந்தப் பெண்ணையும் சேர விரும்புபவன். எனக்குள் இருக்கும் “மரியாதை-கட்டுப்பாடு, மானம்” என்பதே என்னை “அதை” செய்யாது தடுக்கிறது. இரகசியமாகத் தொடர முடியுமானால் நான் சண்முகலிங்கத்தைவிட மோசமானவனாகவே இருப்பேன். அதாவது, கத்தோலிக்கத் திருசபைப் பாதிரியார்கள் போல!
    எனவே, இதைக் குறித்துப் பெண்ணியவாதிகளது புரிதலும், தொடர் நடவடிக்கைகளுமே சில தற்காலிகத் தீர்வைத் தரலாம்- முழுமையான தீர்வானது சமூக மாற்றத்தில் புதிதாகப்படைக்கப்படும் மனித மாதிரிகளே இவற்றை இல்லாதாக்கும். அதுவரை நான் பாலியல் ரீதியாகச் சண்முகலிங்கனின் அண்ணாவே! எனவே, யாரை யார் காப்பாற்றுவது?

    Reply
  • sen
    sen

    சண்முகலிங்கத்தின் பல்கலைக்கழக பணியினை பற்றி சொல்வதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும் இந்த கட்டுரையில் சண்முகலிங்கம் தொடர்பாக எழுதியவை உண்மையாக இருக்க கூடிய சந்தர்ப்பம் ஒரே ஒரு நிபந்தனையுடன் இணைந்திருகின்றது. சண்முகலிங்கம் வெள்ளை வான் புகழ் டக்ளசிட்கு டாக்டர் பட்டம் வழங்கி தனது பதவியினை பாதுகாக்க முயன்றால் அது இந்த கட்டுரையில் எழுதப்பட்ட விடயங்களின் மகுடமாகும். ஒப்பீட்டு ரீதியில் சண்முகலிங்கம் செய்ததாக சொல்லப்படும் திருவிளையாடல்களில் இந்த பட்டம் சூட்டுதல் மிகவும் கேவலமானதாகும். இந்த தகுதிகளை கொண்ட ஒரு மனிதன் தான் டக்ளசிட்கு பட்டம் குடுக்க முடியும்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    இந்த நோயால் தமிழ் சமூகம் பாதிப்புக்குள்ளாவதற்கு ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்..சாதாரண மனிதர் முதல் படித்தாவர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தாம் சரியென்று நம்பிய கொள்கை ஏதோவொரு ஆயுதக் குழுவுக்கு பிடிக்காத காரணத்தால் (அல்லது அக்குழுக்களின் மெம்பர்கள் தம்மை ஜேம்ஸ் பாண்டின் அவதாரமாக நினைத்துக் கொண்டதால்) களையெடுக்கப்பட்டது தான் தமிழ் மக்களின் போராட்ட வரலாறு… முப்பது ஆண்டுகளாக இந்த சீரழிவு கலாசாரத்தை மக்கள் மீது ஆயுததாரிகள் திணித்த போது படமெடுத்தாடும் நாகங்களின் தலையில் நடனமிடும் வித்தையை சமூகத்தின் அனைத்து பிரிவினரும் கற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்ததிற்குள் தள்ளப்பட்டது தவிர்க்க முடியாததே… மே 18 வரை எவராவது தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என ஊகிக்க முடிந்ததா? எதிர்காலத்தின் மீது நம்பிக்கையிழந்து நடைப் பிணமாக மாறிப் போன ஒரு சமூகத்தின் சீர்குலைந்த மனநிலையை தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டவர்கள் இயக்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தார்கள்.. அத்தகையவர்களில் சிலரே நீங்கள் குறிப்பிடுபவர்கள்.. இவர்கள் தமது சுய கெளரவம், சமூக மதிப்பு என்பவற்றைக் காற்றில் பறக்கவிட்டதற்கு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்.. இயக்க உறுப்பினர்களுடன் லீலைகள் புரிவதை மிகப் பெருமைக்குரிய விஷயமாக இந்த சமூகம் கருதிய காலமும் இருந்தது..(இதற்காகவே எத்தனை பேர் இயக்கங்களில் சேர்ந்தார்கள்). எனவே இவற்றை தவறுகளாக நினைக்கும் கட்டத்தை சமூகம் தாண்டி விட்டது என்றே கருத வேண்டும்..

    முப்பது வருடங்களாக தவறில்லை என்று கருதிய மனநிலையுடன் ஒரு தலைமுறை உருவாகி விட்டது..புலம் பெயர்ந்த நாம் தான் பின் தங்கி நிற்கிறோம்..

    Reply
  • பல்லி
    பல்லி

    //பாலியல் ரீதியாக நான் எந்தப் பெண்ணையும் சேர விரும்புபவன். எனக்குள் இருக்கும் “மரியாதை-கட்டுப்பாடு, மானம்” என்பதே என்னை “அதை” செய்யாது தடுக்கிறது. இரகசியமாகத் தொடர முடியுமானால் நான் சண்முகலிங்கத்தைவிட மோசமானவனாகவே இருப்பேன்.//
    இதை புத்தகம் போட்டு விலைபடுத்துங்கள்? நமது வருங்கால சந்ததிகள் பார்த்து பலன்பெற வாய்ப்பாக இருக்கும்;

    //,தீவார், தீவாருக்குப் பதவி, இடம் அளிப்பதெனும் அவதூறைச் சுட்டிக்காட்டுவதே.//
    இதை தேசம்நிர்வாகம் எப்படி அனுமதித்தது, தீவு என்ன எமக்க அயல்நாடா??

    //இயக்க உறுப்பினர்களுடன் லீலைகள் புரிவதை மிகப் பெருமைக்குரிய விஷயமாக இந்த சமூகம் கருதிய காலமும் இருந்தது..(இதற்காகவே எத்தனை பேர் இயக்கங்களில் சேர்ந்தார்கள்). எனவே இவற்றை தவறுகளாக நினைக்கும் கட்டத்தை சமூகம் தாண்டி விட்டது என்றே கருத வேண்டும்:// ஆக எல்லோரும் கூட்டுகலாவிக்கு வாருங்கள் என ஒரு அழைப்பிதழையும் கொடுக்கலாம் அதுதானே வசதி;

    பட்டம்தானே யார் வேண்டுமானாலும் யாருக்கும் குடுக்கலாம் நம்ம வேலுப்பிள்ளையரின் மகன் மாமன் உட்பட பலருக்கு கொடுக்காத பட்டமா?? பிரபாகரனுக்கு கொடுத்த பட்டத்துக்கே விளக்கம் இதுவரை இல்லை, ஆனால் இந்த பட்டம் விடும் விளையாட்டில் தோழர் தோழராக நடப்பாரேயானால் தொடர்ந்தும் தோழராகவே வலம் வரலாம், இல்லை நான் டக்கிளஸ்தான் என அன்றய சூளைமேட்டைபோல் தவறன முடிவை எடுப்பாரேயானால் இவர் தோழர் என்னும் யாருமே வழங்காத பட்டத்தை சிலர் கொடுக்கும் பட்டத்துக்காய் இழக்கநேரிடும், பல்கலைகழகத்திலேயே இந்த குழப்பமெனில் நம்ம பாமரன் நிலைதான் என்ன??

    Reply
  • Sri vaishnavi
    Sri vaishnavi

    மதிப்புக்குரிய ஸ்ரீரங்கன் அவர்களே,
    நீங்கள் பல வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்து விட்டீர்கள். அதனால் தான் பாலியல் வக்கிரங்களை மிக சாதாரணமாக “புத்தி சீவித்தனமாக” பொதுமை படுத்தி ஆணாதிக்க தொனியில் பதில் எழுதியுளிர்கள். ஒரு நடுதர குடும்பத்தை சேர்ந்த எனக்கே குறைந்தது 12 மேற்பட்ட பாலியல் வன்முறைக்கு உட்பட்ட தமிழ் பெண்களை யாழ்ப்பாணத்திலும், பல்கலைகழகத்திலும் தெரியும். நீங்கள் ஐரோப்பிய தரவுகளை சொல்கிரீர்கள். ஆனால் நான் சொல்கிறேன்!! மூன்றாம் உலக நாடுகளான நாம் நாட்டிலும் மற்றும் தென் ஆசியாவில் பாலியல் வன்முறை பல பத்து மடங்கு ஐரோப்பாவை விட அதிகம். ஒரு நல்ல சிந்தனையாளராக நான் மதிக்கும் நீங்கள்; என் பல தோழிகளுக்கும்; சகோதரிகளுக்கும் யாழ் பல்கலைகழகத்தில் நடந்ததை, நடப்பதை பொதுமைபடுத்தி, மலினப்படுத்தி இங்கு எழுதியது கவலை அழிகிறது. நீங்கள் எப்போதாவது வன்முறையால் பாதிகப்பட்ட பெண்ணிடம் பேசி உள்ளீர்களா?? எல்லா பிரச்சனைகளையும் சமூகம் மட்டத்தில் சார்ந்து தான் சிந்திக்க வேண்டுமென்பது அவசியமில்லை. சில தடவைகளில் தனி மனித தவறுகளும், நடத்தைகளும் சமூகத்தில் மிக ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்றைய யாழ்-பல்கலைகழக தலைமை ஒரு உதாரணம்.
    “பாலசுந்தரம்பிள்ளை நிராகரிக்கப்பட்ட தீவாரது அறிவின் நேரடியான பாதிப்பிலிருந்து வந்தவர்.” என ஸ்ரீ ரங்கன் எழுதுகிறீர்கள். எனக்கு தெரிந்த மட்டில் காவலூர் முன்னாள் MP கா.போ.ரத்தினத்தின் உறவினர் இந்த பால சுந்தரம்பிள்ளை. இவருக்கு TULF பிரமுகர்கள் தான் கண்டி பிரதேனியா பல்கலைகழகத்தில், முதல் முதல் பதவி பெற்று கொடுத்தனர். அதை விட இவர் வேலணையை சேர்ந்த மேலாதிக்க வெறிபிடித்த வேளாள சமுகத்தை சேர்த்தவர். (இதன் அர்தம் எல்லா வெள்ளாளரும் அப்படி அல்ல) ஆனால் இவர் சாதி திமிர் பிடித்த மனிதர். இப்படி இருக்கையில் நீங்கள் எப்படி “பாலசுந்தரம்பிள்ளை நிராகரிக்கப்பட்ட” என்று எழுதுவீர்கள் ஸ்ரீரங்கன். யார் அவரை நிராகரித்தார்கள்??! எங்களுக்கும் தீவுபகுதியை பற்றி கொஞ்சமாவது தெரியும் திரு. ஸ்ரீ ரங்கன்

    Reply
  • BC
    BC

    // இரகசியமாகத் தொடர முடியுமானால் நான் சண்முகலிங்கத்தைவிட மோசமானவனாகவே இருப்பேன். அதாவது, கத்தோலிக்கத் திருசபைப் பாதிரியார்கள் போல! //ஸ்ரீ ரங்கன்
    இந்த மாக்ஸிய நித்தியானந்தா சாமி பாலசுந்தரம்பிள்ளையுடன் இருக்காமல் புலம் பெயர்த்து வெளியேறியது தமிழ் சமுதாயத்துக்கு கிடைத்த சில அதிஷ்டங்களில் ஒன்று.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //சண்முகலிங்கம் வெள்ளை வான் புகழ் டக்ளசிட்கு டாக்டர் பட்டம் வழங்கி தனது பதவியினை பாதுகாக்க முயன்றால் அது இந்த கட்டுரையில் எழுதப்பட்ட விடயங்களின் மகுடமாகும். ஒப்பீட்டு ரீதியில் சண்முகலிங்கம் செய்ததாக சொல்லப்படும் திருவிளையாடல்களில் இந்த பட்டம் சூட்டுதல் மிகவும் கேவலமானதாகும். இந்த தகுதிகளை கொண்ட ஒரு மனிதன் தான் டக்ளசிட்கு பட்டம் குடுக்க முடியும்.//-sen on September 24, 2010 7:31 pm

    யாழ்ப்பாணத்தில் ஓடித்திரிந்த “வெள்ளை வான்கள்” களுக்கும், மே 18 இற்கு முன்னர் யாழில் நடந்த கொலைகளுக்கும் “டக்களஸ்” மட்டும்தான் பொறுப்பென நீங்கள் கருதினால், அது வெறும் யாழ்- தமிழ்ப்பத்திரிகைச் செய்திகளையும், புலம்பெயர் தமிழர் செய்தித்தாபனங்களின் செய்திகளையும் வாசித்தும் கேட்டும் நுனிப்புல் மேய்ந்த வெள்ளாட்டின் கதை போலாகும் – இவைகள் பத்திரிகைகளில் அச்சிடப்படுவதனாலும் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் வெளிவருவதனாலும் – அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்ளெல்லாம் உண்மையைத்தான் சொல்கின்றன எனக்கருதி, அவற்றை எந்தக் கேள்விக்குமிடமில்லாமல் பாடமாக்கி ஏற்றுக்கொள்வது போல – அச்சிட்டதெல்லாம் உண்மையென நம்புவர்களின் பழக்கதோசம். உண்மை என்னவெனில், அரசு – புலிகள் பேச்சுவார்த்தைக் காலங்களில் அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, இலங்கைஅரசிற்கு விலைபோன புலிகளின் ஒருபகுதியினரே யாழில் இயங்கும் அன்றைய இன்றைய புலனாய்வுப்பிரிவினர்களின் பெரும்பாலானவர்கள். “பாம்பின்கால் பாம்பு அறியும்” என்ற பழமொழிக்கேற்ப, புலிகளின் இந்தபிரிவினரை வைத்தே அரசு, புலிகளின் ஆதரவாளர்கள் முதற்கொண்டு உளவாளிகள்வரை போட்டுத்தள்ளி யாழ்ப்பாணத்தை சுத்தப்படுத்தியது.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    ஸ்ரீ வைஷ்ணவி, நீங்கள் நான் குறிப்பிடும் சமூக உளவியலைக் குறுக்கிப் புரிகிறீர்கள். பல்லி-பீ.சி. போன்றோர் இந்தப் படியிலுள்ள பொய்மையின் காவலர்கள். தமிழ்ச் சமூகத்தின் எந்த ஆணையும் “தூய்மைக்குள்” காணலாம். ஆனால், அது வெளிவேசம்.

    பாலியற் பலாத்தகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களோடு பேசியதுண்டாவென வினாவியுள்ளீர்கள். பெண் மட்டும் பாலியல்ரீதியாகச் சுரண்டப்படுபவள் இல்லை. ஆணும்தாம் அதையும் புரியுங்கள். அந்த வகையில் நானும் பாலியல் வதைக்குட்பட்டவன். நான் யாரிடஞ் சொல்லி அழுவது?

    1984 இல் ஊர்காவற்றையில் ஞானப்பிரகாசத்தால் கைதாகி நாலாம் மாடிக்கு வந்தவன்நான். ஊர்காவற்றுறையில் என்னை வெளியில் எடுக்க முயற்சி செய்த எனது சித்தப்பர் பரஞ்சோதி (இன்விஸ்ரிக்கேஷன் ஓபிசர்) தோற்றது எதனாற் றெரியுமா?ஞானப்பிரகாசம் எனது வீட்டிற்கு ஒரு இரவு விருந்துக்கு வந்தால் விடுவதென்றானாம். பின் நாலாம் மாடியில் இருந்தபோது,எனது இன்னொரு சித்தப்பா பெருங்கோடீஸ்வரனாகக் கொழும்பில் இருந்தார்-பீப்பிள்ஸ் ரேட் அன் சைப்பிளையர்ஸ் முதலாளி சிவராசா அவர். அவரது முயற்சியால் லீலாக் கலண்டர் சின்னத்துரையின் மகன்கள் பாலேந்திரா-சுந்திரலிங்கம் (இருவரும் பிரேமதாசாவின் பேர்சனல் லோயர்கள்)மூலம் நான் விடுவிக்கப்பட்டேன்.அப்போது நான் நாலாம் மாடிக்குப் பக்கத்திலுள்ள வாழைத் தோப்புக்குள் வைத்தப் பலாத்தகாரப்படுத்தப்பட்டேன்.நான்கு பொலிசார் அடுத்தடுத்து எனது மலவாசலைச் சிதைத்தனர்.
    இது பலாத்தகாரமில்லையா?
    அல்லது,சைவப்பாட சபாரெட்னம் மாஸ்ரர் எனக்குப் பாடஞ்சொல்லித்தருவதற்குத் தனது வீட்டுக்கு வரும்படி சொல்லி என்னைப் பலாத்தகாரஞ் செய்தது பாலியற் துஷ்பிரயோகமில்லையா?

    இதுவொரு சமூகப் பிரச்சனை.அது ஆண்-பெண் இருசாரருக்குமே நிகழ்ந்தது-நிகழ்கிறது. இதை அணுகுவதன் புள்ளியையே நான் சுட்டினேன்.

    “நான்”எனும் குறியீடு சமூகத்தின் மொத்த எண்ணவோட்டத்தையும் குறிக்கும் பதம். இதைப் புரிவதென்பது சமூகத்தை எனக்குள் புரிந்துதாம் இயலுமென்ற சின்ன உளவியலைக்கூடப் பல்லியோ-பி.சி.யோ உள்வாங்கினதாகத் தெரியவில்லை!

    இதற்குள் நீங்க வேறு “பாதிப்பு-வதை” புரிகிறதென்கிறீர்கள்…

    அடுத்துக் கா.போ.பாலசுந்தரம் பிள்ளை, வேலணை-வேளாளர் எனச் சொல்வதைக்கடந்து, யாழ்ப்பாணியமென்ற கருத்தியலானதைப் புரியுங்கள் என்கிறேன். அது காலாகாலமாகத் தீவுப்பகுதியை அவமதித்து, அந்தப் பிராந்தியத்தில் கல்வியாளர்களைப் புறக்கணித்து-அவமிதித்து வருவது. அதன் சமூகவலி கொடியது. அதற்குப் பல நூற்றாண்டுத் தொடர்ச்சி இருக்கு. வடமாராட்சியின் மாட்சிமையே (பிரதேசவாதம்) இதன் எதிர்வினைக்கான காரணம். அதைச் சமூக ரீதியாக ஆய்பவருக்கே விட்டுவிடுகிறேன்.

    இதையெல்லாம் குறுக்கிப்பார்ப்பதும், வார்த்தைகளைப் புரட்டி வைத்து அர்த்தங்காண முனைவதும் ஆபத்து.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    கருத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி.

    சிறி வைஸ்ணவி – உங்களுடைய மேலதிக தகவல்களுக்கு நன்றி.

    காந்தன் – செனட்சபை மற்றும் கவுன்சில் களுக்கு இடையேயான வேறுபாட்டை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கட்டுரையில் கவுன்சில் என்றே வந்திருக்க வேண்டும். கட்டுரையில் இம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 2009 ஓடிற் ரிப்போர்ட் மிக முக்கிய தகவல்.

    அனுஸா பி – வவுனியா வளாகம் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான இவ்விவாதத்தைத் தொடர்ந்து கிழக்கு இலங்கைப் பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகங்கள் பற்றியும் எழுதுமாறு பல வேண்டுகோள்களும் தகவல்களும் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதிகளுடன் தொடர்புடைய கட்டுரையாளர்களை அணுகி உள்ளேனம்.

    எஸ் எஸ் கனேந்திரன் //இது ஒரு நம்பகரமான கட்டுரை இல்லை…//
    கட்டுரை நம்பகமானதா இல்லையா என்பதனை இவ்விவாதக் களத்தை வாசிக்கும் ஒருவர் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்வார்.
    //இக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் பலவிடயங்களில் ஏன் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன என்ற ஒரு கேள்வியே இக்கட்டுரையின் பொறுப்பற்ற தன்மை என்கின்ற பதிலைத்தருகின்றது.//
    ஏன் பல்கலைக்கழக மாணவிகள் மாணவர்கள் இதனைப் பற்றி முறையிடுவதில்லை என்பதனை கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளேன். தேசம்நெற் க்கு கருத்து வெளியிட்டவர்களில் சிலர் யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள். தான் வழங்கிய பட்டத்தை பறிக்கின்ற அதிகாரமும் பல்கலைக்கழகத்திற்கு இருப்பதால் சிலர் தங்கள் பெயர்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. ஒருசிலர் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் உள்ளவர்கள். தொடர்ந்தும் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் சட்டப்படி தங்கள் தகவல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்று உள்ளதுடன் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவும் தயாராக உள்ளனர்.

    சந்திரன் ராஜா – கட்டுரையின் பிரதான விடயத்தையொட்டி விவாதத்தை நகர்த்த உதவவும்.

    சாந்தன் – ஏனைய சமூகங்கள் மீது குற்றம் சுமத்துவதில் உள்ள ஆர்வம் எம் சமூகத்தில் உள்ள தவறுகளை திருத்துவதில் காண்பிக்கப்படவில்லை. பழியை யார் மீதும் சுமத்தி தப்பிக்கின்ற மனப்பானமையே உங்கள் போன்றவர்களிடம் வியாபித்து உள்ளது.

    மொகமட் நிஸ்தார் – //அது சரி டக்லஸ் தேவானந்தாவின் மேற்பார்வையின் கீழ் அனைத்து ஏற்பாடுகளும் பூர்தியான நிலையில்தானே பேராசிரியரின் யாழ் பயணம் நிச்சயபடுத்தப்பட்டதாக கேள்வி.//
    பல்கலைக்கழகம் சமூகமாற்றத்தை ஏற்படுத்தாது என்று தலைப்பிட்ட நீங்கள் பல்கலைக்கழகம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற உடன்பாட்டையே கட்டுரையில் வெளிப்படுத்தியதாக கருத்துப் பதிவுகள் பதிவு செய்கின்றன. நீங்கள் கருத்துப் பதிவு செய்யு முன் சற்று நிதானமாக தகவல்களை சரிபார்ப்பது நன்று.

    அந்த வகையில் மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல் ”தலைவர் நடுக்கடலில் சுற்றிக்கொண்டு திரிகிறார். சரியான நேரத்தில் வந்து தாக்குதல் நடத்துவது மட்டும் தான் பாக்கி.” என்று சொல்கின்ற பாணியில் தான் உள்ளது.

    நிஸ்தார் மொகமட் தவறான தகவல்களை வைத்துக் கொண்டு அவசரப்பட்டு பிழையான முடிவுகளுக்கு வரவேண்டாம். நிஸ்தார் மொகமட் தனக்குத் தானே ஒரு முள்ளிவாய்க்கால் வெட்டுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

    சென் – //ஒப்பீட்டு ரீதியில் சண்முகலிங்கம் செய்ததாக சொல்லப்படும் திருவிளையாடல்களில் இந்த பட்டம் சூட்டுதல் மிகவும் கேவலமானதாகும். இந்த தகுதிகளை கொண்ட ஒரு மனிதன் தான் டக்ளசிட்கு பட்டம் குடுக்க முடியும்.//

    இதற்குப் பல்லியின் பதில் பொருத்தமாக இருக்கும். //இந்த பட்டம் விடும் விளையாட்டில் தோழர் தோழராக நடப்பாரேயானால் தொடர்ந்தும் தோழராகவே வலம் வரலாம் இல்லை தவறன முடிவை எடுப்பாரேயானால் இவர் தோழர் என்னும் யாருமே வழங்காத பட்டத்தை சிலர் கொடுக்கும் பட்டத்துக்காய் இழக்கநேரிடும்.//

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு என் சண்முகலிங்கம் பட்டம் கொடுப்பது சண்முகலிங்கத்தைப் பொறுத்தவரை பெருமைக்குரிய விடயம். ஆனால் அதனைப் பெறுவது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னையே இழிவுபடுத்துகின்ற விடயம்.

    தாமிரா மீனாஷி – //எனவே இவற்றை தவறுகளாக நினைக்கும் கட்டத்தை சமூகம் தாண்டி விட்டது என்றே கருத வேண்டும்..//
    நீங்கள் குறிப்பிட்டது போல் கட்டுரையை எழுதி முடித்த போது எனக்கு அந்த உணர்வே ஏற்பட்டது. தமிழ் சமூகம் பல்வேறு தவறான அம்சங்களையும் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு அதனை நாளாந்த வாழ்வியல் அம்சமாக அங்கிகரித்துவிட்டது. அதனால் இவ்வாறான தவறான அம்சங்களைக் கொண்டவர்களும் சமூகத் தலைவர்காக மாலை மரியாதையுடன் இன்னமும் வலம் வருகின்றனர்.

    ப வி ஸ்ரீரங்கனுக்கு தொடரும்…

    Reply
  • Suppan
    Suppan

    “சண்முகலிங்கன் யாழ்ப்பாணத்தில் தனது கலாநிதிப்பட்ட ஆய்வைச் செய்தது, வழமைபோல யாழ் மேட்டுக்குடி மனதுக்குச் சின்ன விஷயமாக இருக்கு.”

    Not that. The fact is that what he had done in his research. Is there any new results or findings? In fact he had taken some photographs at temple and add some texts from other various resources, that’s all. Nothing more than that.

    His dissertation is titled as

    “The new face of Durga- Religion and Social Change in Sri Lanka”.

    From the title anybody (a lay man) infer that his effort was useless, since a single entity, i.e., Thellipalai Thurkai Amman, influencing the whole Sri Lankan cultural and social changes.

    His finding as fallows

    “In the district of Northern Sri Lanka, men are always the superiors and women’s location is considered next to them”

    Any body need to do research to come out with this finding? Can you believe do these people doing research? I do not spell out my conclusion, since a lay man can infer better conclusion from these facts.

    Not only Shanmugalingan is doing these, but also others as well say for example Illankumaran (he is also very good partner of Shanmugalingan in sexual harassment). His findings was earlier discussed by Rajathurai in previous article.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    //எல்லோரும் கூட்டுகலாவிக்கு வாருங்கள் என ஒரு அழைப்பிதழையும் கொடுக்கலாம் //palli

    இந்த மனநிலையை நமது சமூகம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதை அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை விடுதலைக்காக “உழைத்த” பல தமிழ் அமைப்புக்களில் நான் கண்டேன்…பல படித்த, வசதி படைத்த விடுதலை “விரும்பிகளும்”, வயதில் குறைந்த, வசதி குறைந்த விடுதலையை “முழு மூச்சாக”க் கொண்டவர்களும் கலாசார ஒழுக்கங்கள் என தமிழ் சமூகம் கருதிய விஷயங்களையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, காமமே தலையாய் அலைந்ததும் (இன்னும் அலைவதும்) அதெல்லாம் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதி எனத் தமக்குள்ளே நியாயப்படுத்திக் கொள்வதும் நமக்கு புதிய விஷயங்ளா என்ன?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் தன் மாணவியுடன் லேபில் உறவு கொண்டதை நேரில் பார்த்தவன் நான். நிர்வாணம் தப்பில்லை (ஆதாம் ஏவாள்), உடலுறவு இனப்பெருக்கத்திற்கே. தவறான பாலியல் உறவு “அளவுக்கு மீறிய அதிகாரம், பணம்” இவற்றாலேயே ஏற்படுவது. “பணம் மேற்குலகில் (வெள்ளைக்காரர்கள்)உள்ளது”!. மேற்குலகில் இதை உணர்ந்துள்ளனர், பல அதிகாரவர்கத்தினர் தங்களுடைய பாலியல் தவறுகளுக்கு “ராஜினாமா” செய்துள்ளனர். இத்தகைய “பண்பு” நம்மவர்களிடையே இல்லை, நியாயப்படுத்துகிறோம்! .தொழிற்ப்புரட்சி, ஏகாதிபத்திய சூழலுக்குத் தகுந்த மாதிரி நம்மை மாற்றிக்கொள்ளவில்லை. இன்னும் வெள்ளைக்காரர்களிடம் வேட்டைக்கு துப்பாக்கியையும், குடிக்க விஸ்கியையும் வாங்கி அனுபவிக்கும் “ஜமீந்தார் மனோநிலையிலேயே” உள்ளோம்.பொருள்களை முழுமைப்படுத்தி உற்ப்பத்தி செய்து,விலைப்படுத்தும் செயலை முழுமையாக செய்தால்,பாலியல் பற்றியான முழுமையான அறிவும் ஏற்ப்படும்.யாரோ உருவாக்கியதையெல்லாம் அனுபவிக்கும் ஒட்டுண்ணி போக்கே “பிறழ்வு பண்பாடு”.

    ராஜராஜ சோழனின் 1000 வது ஆண்டில்,இதை சொல்லுவது பொருந்தும். சிதம்பரம் கோயிலின் தாளாளாராக பிரிட்டிஷ் ராணியும் இருந்துள்ளார்(ஆராய்க), அதிகாரத்தின் உச்சியை அடைந்த அவரின் கிரீடத்தின் உச்சியில் “இந்திய கோகினூர் வைரம்” என்ன செண்டிமெண்ட்?!. ராஜராஜ சோழன், அவரின் மனைவியின் ஒரிஜினல் சிலைகள் இந்தியாவிலேயே பொருளாதாரத்தின் உச்சியில்? இருக்கும் “குஜராத்தில்” ஏன் வைக்கப்பட்டுள்ளது?. குஜராத்தின் பொருளாதாரத்திற்கு காரணம் தொழிற்ப்புரட்சியால் ஏற்ப்பட்ட “நூற்ப்பாலைகள்” ஆடை ஏற்றுமதி. இந்தியாவின் ஜீவாதாரப் பயிர்களை அழித்து “பருத்தி உற்பத்திக்கு மாற்றி” மண்ணின் வளங்களை அழித்து, மேற்குலகத்தின் ஆடைத் தேவைகளை பூர்த்தி செய்தார்கள், அதனால்தான் காந்தியடிகள் ராட்டையில் நூல் நூற்றார்.

    அதாவது, இந்தியாவும், இலங்கையும் இன்னமும் தன் சார்ந்த முழுமையை அடையவில்லை. அதனால்தான் தொழிற்புரட்சியினூடான பாலியல் பிறழ்வுகளை தான் சார்ந்த கோணத்தில் அணுக முடியவில்லை. இதில் ஓரளவுக்கு சீனா சார்ந்த “கன்பியூஷிய நாடுகளை” பாராட்டலாம், அவர்கள் தன்னிலை விளக்கத்தை இதன் சார்பாக வைக்கக் கூடியதாக இருக்கிறது!.

    அடுத்து ஸ்ரீரங்கன் – ஜெர்மனி!, இவர் அளித்துள்ள இணைப்புகளில் 99% “கத்தோலிக்க நிறுவனத்தின்” பாலியல் துஷ்பிரயோகங்களே!. இது தற்போது ஐரோப்பாவில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. மேலும் கத்தோலிக்க நிறுவனம் மத நிறுவனம் என்பதிலிருந்து பிழற்ந்து எப்போதோ தொழிற்ப்புரட்சியின் சகதிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது (உதா: நாசி காலம்). அதன் பல உலக முதலீடுகள் பல்தேசிய கம்பெனிகளை விட பெரியது. அதன் ஏகாதிபத்தியத்தை கட்டுப் படுத்துவதற்கு கிரிஸ்தவத்தில் ஆன்மீக அளவு கோள்கள் இல்லை!.

    Reply
  • palli
    palli

    //இந்த மனநிலையை நமது சமூகம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதை அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை விடுதலைக்காக “உழைத்த” பல தமிழ் அமைப்புக்களில் நான் கண்டேன்…//தாமிரா மீனாஷி
    இது சரியான தகவல் இல்லை என்பதே என் கருத்து; சமூகம் ஏற்று கொள்கிறது என சொல்லலாம், அதில் நீங்கள் சொன்னவர்கள் அடங்கலாம்; ஆனால் ஏற்று கொண்டுவிட்டது என யாவரையும் சேர்த்து சொல்லுவது சரிதானா?? அப்படியான ஈனசெயல்கள் தடுக்கபட வேண்டும் என்பதாலேயே நாம் இங்கு எழுதுகிறோம்; நடப்பதெல்லாம் சரியாயின் கட்டுரையும் பின்னோட்டமும் எதற்கு??
    விடுதலைக்கு புறப்பட்ட தறுதலைகளை வைத்து கொண்டு எமது சமூகத்தை கணக்கு பண்ணலாமா?? மேற்கத்தய நாடுகளின் ஒழுங்கங்களை அல்லது சீர்கேட்டை சிலரோ அல்லது உங்கள் வாதபடி பலரோ ஏற்றுகொள்ளலாம்; ஆனால் அது சரிதானா என்பதுதானே பிரச்சனை பெருண்பாண்மையினர் எடுக்கும் முடிவுகளோ அல்லது கல்வியாளர்கள் சொல்லும் கருத்துக்களோ சரியானவைதான் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது; அவர்கள் சிலவேளைகளில் தமக்கு சாதகமான வேலைகள் கருத்துக்களே சொல்லுவார்கள்? இதுகூடமைப்பிருந்து துணைவேந்தர்கள் வரை நாம் கண்ட காணுகிற உன்மை; சில காலத்துக்கு முன்பு ஜனாதிபதியின் அறிக்கை ஒன்றில் கல்வி சம்பந்தபட்ட விடயங்களில் அரசியல் இருக்ககூடாது, அதேபோல் அரசியல்வாதிகள் கல்வி விடயங்களில் தேவையின்றி தலயிடகூடாது என ஒரு செய்தி இதே தேசத்தில் படித்தேன்; அந்த செய்தியின் நடைமுறைக்கு இந்த பட்டமளிப்பு ஒரு சவாலாகவே அமையும்; பட்டத்தை கொடுத்தவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள் அதேபோல் வேண்டியவரும் முகத்துக்கு பயந்து நடக்கவேண்டிய சூழல் வரலாம், சங்கரியருக்கும் பட்டமும் பணமுடிச்சும் கொடுத்தார்கள். ஆனால் அவர் அந்த பட்டத்துக்குரியவராக பின்னாளில் இருந்தாரா என்றால் இல்லை என்பதுதானே விடை; ஆக ஏதோ மக்களுக்காய் சேவை செய்யும் ஒருவருக்கு இந்த கல்வியாளர்கள் பட்டம் என்னும் அன்பளிப்பை கொடுப்பது எதிர்கால நன்மை கருதியே; இது தோழருக்கும் கண்டிப்பாக தெரியவாய்ப்புகள் அதிகம்;

    //பல்லி-பீ.சி. போன்றோர் இந்தப் படியிலுள்ள பொய்மையின் காவலர்கள். //ஸ்ரீரங்கன்
    இது தப்புகிடையாது ஆனால் நீங்கள் காலபோக்கில் உடுப்புகடை பொம்மைகளை கூட தவறாக பார்ப்பது தப்பில்லை என சொல்லுவீர்கள்? அதையும் நாம் மூடியிட்டு கேக்க வேண்டும்; இதில் உன்மை சம்பவம் என ஒரு சமாசாரத்தை சொல்லி அதை இந்த சமூகத்துக்கு பரப்புரை செய்ய முயல்கிறீர்கள். ஏதாவது ஒரு சம்பவமோ அல்லது வலியோ ஏற்பட்டால் அதில் உள்ள குறைபாடு அது ஏன் நடக்கிறது என்னும் விழிப்பைதான் சமூகத்துக்கு சொல்லவேண்டும், அதைவிட்டு எனக்கு நடந்து போச்சு எல்லோரும் நிர்வாணமாய் ஆடுங்கள் என சொல்லுவது உங்கள் உன்மை சம்பவத்தையே சந்தேகிக்க வைக்கிறது, தொடரட்டும் உங்கள் அந்தரங்க அங்கலாய்ப்புக்கள்.

    Reply
  • Kanthan
    Kanthan

    Actually, this deteriorating situation should be handled by the students, but unfortunately students will not interfere in this matter. The reason is Honorable Minister Doglus Devantha, i.e., students are very much concerned about their personal security not about the social security, institutional benefits etc.,

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    …/ஃபிடல் கஸ்ரோவின் வாக்கியத்தை அமைச்சர் தேவானந்தா நம்பினால் முன்னைய அரசியல் கலச்சாரத்தில் இருந்து தன்னையும் கட்சியையும் விடுவித்துக்கொள்ள வேண்டும். (பஸ் வண்டிகளையல்ல) தமிழ் சமூகத்தை புதிய அரசியல் கலாச்சாரம் நோக்கி ஓட்டிச் செல்கின்ற சாரதியாக அமைச்சர் தேவானந்த தன்னை மறுசீரமைக்க வேண்டும்./- இங்கு “பஸ் வண்டி” என்று குறிப்பிடுவது, இந்திய கனரக தொழில்நுட்பத்தின் அணிசேரல்(டாட்டா பென்ஸ்,லைலேண்ட்)சாரதியாக இருப்பதாக கொள்ளலாம். நாம் எதையும் எதிர்க்கவில்லை, “டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கலின் குடுப்பதின்” பின்னாலும், “தமிழ் தேசிய புலம்பெயர் புலி வியாபாரிகளின்” பின்னாலும், யாருடனவாவது அணிசேர்ந்துக் கொள்ளுங்கள், எங்களை முன்னிலைப்படுத்தாமல், உங்கல் பின்னால் தொண்டர்களாக அணிதிரளுகிறோம், என்றுதான் வழிவிட்டு ஆதரித்தோம். ஆனால் அவர்கள், “கார்ப்பரேட் ராட்சஸ்தர்களுடன்” அணி சேர்ந்து தங்களை வளப்படுத்திக் கொண்டு, அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல், தமிழ் மக்களை “படுகொலைக்கு அழைத்துச் சென்று”, தற்போது, இரண்டாம் முள்ளியவாய்க்காலுக்கு தயாராகிறார்கள்!. இபோதாவது என்ன நடக்கிறது என்று எழும்பி கேள்வி கேட்க வேண்டியது கடமையாகிறது!. கிழக்கு மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தானை தாலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்கா ஒதுங்கப் போகிறது. இந்திய அணிசேரலில், ராட்சச பில்லினேயர் நிறுவனங்களிடம் தங்கள் நிகழ்ச்சி நிரலை ஒப்படைத்துவிட்டு, இதற்க்கான “அரசியல் பொறுப்பிலிருந்து” ஒதுங்குகிறார்கள். எதிர்ப்பு குரலுக்கான ஆதாரங்கள் ஏற்கனவே நசுக்கப்பட்டுள்ளன. பாலியல் முறைகேடுகள் என்பது உடலியல் தேவையல்ல, இது மனதின் “பெர்வர்ஷன்”, இது ஒரு இந்தியாவுக்கான “ஓப்பியம் போர்”, எதிர்ப்பு குரல்களை மயக்கி, அமுக்கி வைக்கும் “வெத்திலைப்பாக்கு பெட்டிகளின்” தந்திரம்!.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    //மேலும் கத்தோலிக்க நிறுவனம் மத நிறுவனம் என்பதிலிருந்து பிழற்ந்து எப்போதோ தொழிற்ப்புரட்சியின் சகதிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது (உதா: நாசி காலம்). அதன் பல உலக முதலீடுகள் பல்தேசிய கம்பெனிகளை விட பெரியது. அதன் ஏகாதிபத்தியத்தை கட்டுப் படுத்துவதற்கு கிரிஸ்தவத்தில் ஆன்மீக அளவு கோள்கள் இல்லை!.//

    அன்பு DEMOCRACY, உங்களது பின்னூட்டத்துள் முரண்பட வேண்டிய உங்கள் கருத்து நிலையைப் பின்தள்ளி விடலாமெனக் கருதுகிறேன். எனினும், உங்கள் எண்ணமானது, கத்தோலிக்கத் திருச்சபைகள் குறித்துப் புரிவதில், அவை மத நிறுவனமென்பதிலிருந்த பிறழ்ந்ததாலேயேதாம் பாலியற் துஷ்பிரோயாகத்தில் மூழ்குவதான அர்த்தம் சுட்டி நிற்கிறது.

    கத்தோலிக்கத்தையும், அதன் போலித் தனங்களையும் எதிர்த்து ஜேர்மனியன் மார்டின் லூதர் போரிட்டுப் எவாங்கிலியும் எனும் புரட்டஸ்தாந்து மதத்தைத் தோற்றுவித்தான். அன்றும், கத்தோலிக்கம் பிறவுணர்வைப் பூர்த்தி செய்யும் இயற்கைத் தகவமை எதிர்த்ததன் கண்றாவியில், இன்றுவரை அம் மத குருக்கள் இயற்கையான மனிதத் தேவையை நான்கு சுவருக்குள் அநுபவிப்பதில் முடிந்தது. அன்றும் இதே கதைதாம்.

    அடிப்படையில் கத்தோலிக்கம் மத நிறுவனத்திலிருந்து பிறழ்வதால் மட்டும் இது நிகழ்வதாகக் காட்டும் உங்கள் புரிதல் முற்றிலும் தப்பானது(உங்கள் பின்னூட்டம் இதே பாணியில் வாசகப் புரிதலைத் தொட்டு நிற்கிறது).

    இது பிரபாகரனது அடிமுட்டாள்த் தனமான “ஒழுங்கின்”படி காதலித்தவர்களுக்கு மரணத் தண்டனை கொடுத்துவிட்டுப் பிறகு தனக்கு ஒருத்திமீது எதிர்ப்பால் வினை முற்றியபோது அனைத்தையும் தலைகீழாக்கிய கிறுக்குத் தனத்தின் மாதிரிகளில் ஒன்றாகவே நான் புரிகிறேன்.

    கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறைத் திரும்பிப் பார்ப்போமானால் கத்தோலிக்கம் மட்டுமல்ல அனைத்து மதங்களும் மனித விரோதிகளோடு கூட்டுவைத்துத் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் அறிவோம்.
    இயற்கைக்கு மாற எந்த மண்ணையும் மனிதவுணர்களது தேவைக்குக் குறுக்க நின்று எதையும் பண்ணமுடியாது.அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரன் சுருட்டை அமுக்கி எடுத்துப் பத்தியதுபோல…

    எனவே,மதநிறுவனம் மதநிறுவனமாக இருக்கும்போது,தவறுகள் நிகழ முடியாதெனும் தர்க்கத்தை உங்கள் கருத்துச் செப்புவதை சுட்டுவது எனது கடமை.அங்ஙனங் செய்தேன்.

    நன்றி!
    ப.வி.ஸ்ரீரங்கன்

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    //பல்லி-பீ.சி. போன்றோர் இந்தப் படியிலுள்ள பொய்மையின் காவலர்கள். //ஸ்ரீரங்கன்
    இது தப்புகிடையாது ஆனால் நீங்கள் காலபோக்கில் உடுப்புகடை பொம்மைகளை கூட தவறாக பார்ப்பது தப்பில்லை என சொல்லுவீர்கள்? அதையும் நாம் மூடியிட்டு கேக்க வேண்டும்; இதில் உன்மை சம்பவம் என ஒரு சமாசாரத்தை சொல்லி அதை இந்த சமூகத்துக்கு பரப்புரை செய்ய முயல்கிறீர்கள். ஏதாவது ஒரு சம்பவமோ அல்லது வலியோ ஏற்பட்டால் அதில் உள்ள குறைபாடு அது ஏன் நடக்கிறது என்னும் விழிப்பைதான் சமூகத்துக்கு சொல்லவேண்டும், அதைவிட்டு எனக்கு நடந்து போச்சு எல்லோரும் நிர்வாணமாய் ஆடுங்கள் என சொல்லுவது உங்கள் உன்மை சம்பவத்தையே சந்தேகிக்க வைக்கிறது, தொடரட்டும் உங்கள் அந்தரங்க அங்கலாய்ப்புக்கள்.//பல்லி

    பல்லி உங்களுக்குத் தமிழ்ச் சமூகத்தில் நடந்தவையெல்லாம் சமூகப் பிரச்சனை என்பதை விளங்க முடியாதுபோனால் அது எனது தப்பில்லை! எனது பின்னூட்டத்தைப் புரியக்கூட உங்களால் முடியவில்லை. எனது வேண்டுகோள்>பின்னூட்டம் விடுவதற்கு முன் பல முறை பின்னூட்டாத்தைக் கருத்தைப் படியுங்கள். அது முடியாதுபோனால் எனது பின்னூட்டத்துக்குக் கருத்துக் கூறாதீர்கள். இது எனது பணிவான வேண்டுகோள். நான்>உமக்கெல்லாம் பதிலளித்து எனது நேரத்தை இனி வீணாக்க வீரும்பவில்லை! எது அங்கலாய்பு-எது அந்தரங்கம்…..

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.ஸ்ரீரங்கன், “PERVERSION” என்பது, ஒரு காரியத்தை அதற்கான அவசியமும், காரணமும் இல்லாமல், இயற்கைக்கு மாறாக செய்வது – இனப்பெருக்கம், உடலியல் தேவை இல்லாமல். ஒருவரை சுரண்டும் போது கிடைக்கும் இன்பம் என்பது “PERVERSION” ஊற்றுக்கண்!. இது ஏகாதிபத்திய சிந்தனைக்குள் பாதுகாப்பு பெறுகிறது. இதை அங்கீகரிக்க வேண்டுமென்றால் எப்படி. இறைச்சிக் கடையில் இறைச்சியை வெட்ட அனுமதிக்கும் சமூக சட்டம், கொலைக்கு கடுமையான தண்டனை விதிக்கிறது!. “கொலையை அங்கீகரிக்க முடியுமா?” அதுபோல்தான் பாலியியல் முறைகேடுகளும். பிரபாகரன் காதலித்தவர்களை மண்டையில் போட்டாரா என்பது எனக்கு தெரியாது, ஆனால், அவரின் கல்யாணம் அவருடைய உடல் தேவை!. “CELIBACY” என்ற கட்டுப்பாடு, “மதம்” சம்பந்தமானது அதை “THEOLOGY(from Greek theos = a God,+ Logic)” க்குள் அடக்கியது கத்தோலிக்கத்தின் பிழை. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்!.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சாந்தன் – ஏனைய சமூகங்கள் மீது குற்றம் சுமத்துவதில் உள்ள ஆர்வம் எம் சமூகத்தில் உள்ள தவறுகளை திருத்துவதில் காண்பிக்கப்படவில்லை. பழியை யார் மீதும் சுமத்தி தப்பிக்கின்ற மனப்பானமையே உங்கள் போன்றவர்களிடம் வியாபித்து உள்ளது…//

    நான் ‘பழியை’ யார்மீதும் சுமத்தவில்லையே. உண்மையையே எழுதி இருக்கிறேன். உங்களின் அனுபவத்தையோ அறிந்தவற்றையோ எழுதும் உங்களைக் கேள்வி கேட்டேனா? அல்லது பிழை கூறினேனா. நிகழ்ந்தவற்றையே நான் கூறினேன். பாலியல், ஆணாதிக்கம், குதிரைஓடல்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டி பல்கலைக்கழக பிழைகளை சமூகப்பிழைகளாக்கி திருத்த புறப்பட்டவர்கள் வரவேற்கப்பட வேண்டும் என புறப்பட்ட உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. ஆனால் எனது கருத்துகள் ஏன் ஏற்றுகொள்ளப்பட தேவையற்றது என விளக்கம் சொல்வது அழகு!

    மேலும் கடந்த விவாதத்தில் (ஹூலின் யாழ் மீழ்திரும்பல்) புரொபெசர் எழுதிய ஹூலின் எஃப்.பி.ஐ விடயம் பற்றி அவரிடம் கேட்டீர்களா? அவர் என்ன சொன்னார்? ஏனெனில் அதனை நானும் அறிந்தவன்!

    Reply
  • palli
    palli

    //எது அங்கலாய்பு-எது அந்தரங்கம்…..//ஸ்ரீரங்கன்
    அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது ஒருபாலியல் குற்றமும் அந்தரங்கமும்; ஆனால் அதை சொல்லி உங்கள் கருத்தை சொல்லி நியாய படுத்துவது அங்கலாய்ப்பு;
    //பின்னூட்டம் விடுவதற்கு முன் பல முறை பின்னூட்டாத்தைக் கருத்தைப் படியுங்கள். // ஒரு ஊடகத்தில் கருத்தெழுதும் போது அது சமூகத்துக்கு பலனளிக்குமா அல்லது சீர்கெடுக்குமா என ஒருதடவைக்கு பலதடவை தாங்கள் யோசித்து விட்டு எழுதினால் பல்லி பதில் வேண்டாம் என்னும் வன்முறை தோன்றாது;
    //அது முடியாதுபோனால் எனது பின்னூட்டத்துக்குக் கருத்துக் கூறாதீர்கள். இது எனது பணிவான வேண்டுகோள்.//
    இதுவே உங்கள் கருத்தின் ஏலாமை, ஏன் நீங்கள் பல்லியின் பின்னோட்டத்தை வாசிக்காமல் விடலாமே; அதுக்கூட தெரியாத நீங்கள் எனக்கு சான்றிதழா??
    //உமக்கெல்லாம் பதிலளித்து எனது நேரத்தை இனி வீணாக்க வீரும்பவில்லை!// பரவாயில்லை ஆனால் உங்கள் நேரத்தை பொன்னாக்கி சமூகத்தை சீரழிக்காதீர்கள் இது அன்பான வேண்டுகோளல்ல பல்லியின் கருத்து மட்டுமே;

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    வணக்கம் DEMOCRACY, உங்களோடு விவாதிப்பதை விரும்புகிறேன். நீங்கள் சுட்டிய PERVERSION குறித்த புரிதல் மனோவியல் ஆய்வில் அப்போது பயன் படுத்தப் பட்டாலும் இப்போது “ஓழுங்காண்மை” பிறழ்விலிருந்து அந்நியத் தொடர்பாடலில் ஏச்சு மொழியாக மாறிப்போய்விட்டது. பாலியல் -PERVERSION, sexueller Perversion“ ஆக இப்போது மதிப்பாந்த மொழியில் “Paraphilie”மாறிவிடுகிறதுதானே? அதன் அர்தம் பெரிதும் முதலாளியத்தின் சந்தைத் தொடர்பான(பெண் உடல்சார் சந்தைப்படுத்தல் நிலைப்பதற்கு)எண்ணக் கருவிலிருந்து பிரத்தியேகமாக மாற்றிக்கொள்ள அதற்கான தகுதி புறத்தியான எதிர் நிலைகளைத் தாக்கி வைத்து நடாத்தும் தார்ப்பாராக மாறிகிறது அதன் மொழி: Exhibitionismus,Fetischismus,Gerontophilie,Masochismus,Nekrophilie,Pädophilie,Sadismus,Salirophilie, Zoophilie / Sodomie,Voyeurismus, Koprophilie u.a. இங்ஙனம் உள்ள வார்த்தைத் தெரிவுகளது உச்ச துணையோடு பெண் உடலைச் சந்தைப்படுத்தும் இக் கவசங்களைக் கடந்தே நான் உரையாட விரும்புகிறேன். இது காலங்கடந்த மனோவியற் பகுபாய்வென்பதும், அதன் உள்ளார்ந்த கண்ணி பாலியல்ரீதியான தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத முதலாளிய அமைப்பில் அதைச் சந்தப் படுத்தும் பொது”ஓழுங்கு” இவற்றின் தயவில் தப்பிக்கிறதென்பது எனது தாழ்மையான கருத்து.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    ஸ்ரீரங்கன், குற்றவியல் ஆய்வுப்படி, நீங்கள் கொலை செய்துவிட்டு அதற்கான நியாயத்தை தேடுகிறீர்கள் (பார்க்க,”SILENCE OF THE LAMB” திரைப்படம்). பாலியியல் முறைகேடுகள், சட்டத்தின் தண்டனைகளிலிருந்து தப்பிவிடுகிறது என்பதற்காக முதலாலித்துவத்தின் மீது பழி போட்டு தப்பித்து விடமுடியாது!. நீங்கள் தந்திருக்கும் ஆங்கில சொற்றோடர்களும், ஏற்கனவே நடந்துக்கொண்டிருக்கும் விஷயங்களை அப்படியே நியாயப்படுத்தி, “பின்நவீனத்துவ பாணியில்” நியாயப்படுத்துகிறது.
    நான் கூறவருவது, சட்டங்களின் அடிப்படையில் குற்றங்களாக “வரையறுக்கப்படும்” செயல்களை, சட்ட வரம்புக்குள் கொண்டுவர முடியுமா என்பது (பெண்ணிலைவாதிகளின் ஆலோசனை தேவை)!. சுற்றுபுறசூழல் பாதிப்படைகிறது அதற்கு தகுந்தமாதிரி திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர மாற முடியாது, அதுபோல்தான், தற்போதைய முதலாலித்துவத்தின் கீழான பழக்க வழக்கங்களும்,”கலிகாலம்” என்று ஒழுக்கத்தை தப்பவிடுதல், இருட்டுக்குள், தனிப்பட்ட ரீதியில் எனக்கும் புளங்காகிதமானதே, நட்சத்திரங்களை அண்னாந்து பார்க்கும் போது, அவைகளைதான் நம்மால் எட்டமுடியவில்லை, நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தையாவது எட்டுவோம் என்ற நப்பாசைதான், ஏனென்றால் வெள்ளைக்காரன் நிலவையாவது எட்டி விட்டான்!.

    Reply
  • BC
    BC

    P.V.Sri Rangan //- பல்லி-பீ.சி. போன்றோர் இந்தப் படியிலுள்ள பொய்மையின் காவலர்கள். //
    உங்களை போன்றோரிடம் இப்படி பெயர் எடுப்பது பெருமைக்குரிய விடயயமாக கருதுகிறேன்.மதிப்புக்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பற்றி எவ்வளவும் எப்படியும் இங்கே சொல்ல முடியும். ஆனால் உங்களை பற்றி எழுத தேசம்நெற் அனுமதிக்குது இல்லை.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    அன்பு DEMOCRACY தங்கள் கருத்துக்கு நன்றி. நான் குறித்துக் கருத்தாடியதைச் சரியாகச் சுட்டியுள்ளீர்கள். இது காலத்துக்கு முந்தியதோ (தமிழ்ச் சமுகத்தில்) எதுவோ-நான் இனி எங்கும் பின்னூட்டுப் போடுவதில்லையென எண்ணுகிறேன். எனது நேரத்தை இது பாதுகாக்கும். தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் சில “ஒழுங்குகளை” நீங்களே மீற முடியாது >அதை பண்பாடாக ஏற்கும்போது நான் குறுக்க வரவில்லை! இன்று கத்தோலிகத் திருச் சபகைள் செய்த பாலியற் பலாத்தகாரத்தை வெளியில் கொண்டுவந்தவர்கள் பாதிக்கப்பட்ட அப்பாவிகளே! அவர்கள் சமூகத்தில் நிகழ்ந்த இந்த வன் கொடுமையை வெளியல் பகிர்ந்துகொள்ளாது தமக்குள் புதைத்திருப்பின் (சமூக ஒழுங்கை நிலைநாட்ட-பல்லிபோல…) கத்தோலிகத் திருச்சபை இன்னும் அதிகமாகப் பாலியற் பலாத்காரத்தைச் செய்திருக்கும்-செய்யும்.

    இதில் ஜேர்மனிய முன்ஸ்ரர் நகரத்திலுள்ள பாதிரியோ 45வயதுடையவன்>பதினான்கு வயதுப் பெண்ணைப் பாலியல் வல்லுறவைத்தபோது அவளைப் பயப்படுத்தி “இணங்காது போனால் சொற்கத்துக்குப் போகமாட்டாய்-நரகம் நிச்சியம்” என்றேய்த்து அனுபவித்தான். அந்த அவலைப் பெண்ணுக்கு இப்போது பதினெட்டு வயதாகிறது வெளியில் பேசுகிறாள். நாம் வெளியில் இவற்றைப் பேசாதிருக்கும்போது இத்தகைய கயவர்களை இன்னும் உலாவ விடுகிறோம்.
    நன்றி.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இதில் ஜேர்மனிய முன்ஸ்ரர் நகரத்திலுள்ள பாதிரியோ 45வயதுடையவன்>பதினான்கு வயதுப் பெண்ணைப் பாலியல் வல்லுறவைத்தபோது அவளைப் பயப்படுத்தி “இணங்காது போனால் சொற்கத்துக்குப் போகமாட்டாய்-நரகம் நிச்சியம்” என்றேய்த்து அனுபவித்தான். அந்த அவலைப் பெண்ணுக்கு இப்போது பதினெட்டு வயதாகிறது வெளியில் பேசுகிறாள்.//
    இவைகளை கணிப்பதே எமது பின்னோட்டம் அனைத்தும்; ஆனால் இதையே உங்களுக்கு சாதகமாய் பலபடுத்தும் உங்கள் நோக்கத்தையே நாம் விமர்சிக்கிறோம், இந்த பெண்ணின் நிலையில் உங்கள் உன்மை சம்பவத்தை பாருங்கள்? அங்கு பொலிஸார்; இங்கு பாதிரி, இருவருமே சமூக பாதுகாவலர்கள். ஆக வேலியே பயிரை மேயும் கொடுமையை அம்பலபடுத்த வேண்டாமா??
    ஸ்ரீரங்கனின் பின்னோட்டங்களில் உள்ள கருத்து முரன்பாடுகளை(முன்னுக்குபின்) நண்பர்கள் கவனிப்பது நல்லது;

    Reply
  • Sudha
    Sudha

    //இதைக் குறித்துப் பெண்ணியவாதிகளது புரிதலும் தொடர் நடவடிக்கைகளுமே சில தற்காலிகத் தீர்வைத் தரலாம்-//P.V.Sri Rangan

    இதைக் குறித்து ஆண்கள் ஒரு முடிவுக்கு வருவது மட்டுமே பாலியல் வன்முறைகளை நிறுத்த தேவைப்படுகிறது.

    //இங்கே தாம் இஸ்லாமியத்தின் பார்த்தாவும் அவர்களது புரிதலும் கணக்கில் எடுக்கப்படுகிறது//

    அதற்காகப் பெண்கள் முட்டாக்குப் போடுவதும் முழுக்க மூடுவதும் தீர்வென்று சொல்லி விட்டு- மதத்தின் சட்டத்தின் அனுசரணையுடன் ஆண்கள் ஆளுக்கு நாலைந்து பெண்களைப் பெண்டாட்டிகள் என்று சொல்லித் தங்களுக்கு வசதியாகப் பல பெண்களை பாலியல் ரீதியாக வதைப்பது சரியா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //எதுவோ-நான் இனி எங்கும் பின்னூட்டுப் போடுவதில்லையென எண்ணுகிறேன். //
    ஸ்ரீரங்கன் தப்பான எண்ணமிது; எமது கருத்து சரியோ அல்லது தவறோ அது புரியும்வரை நாம் முயற்சிக்க வேண்டும், நான் தேசத்தில் நூறு பின்னோட்டங்களுக்கு மேல்எழுதிவிட்டேன், ஆனாலும் என்னிடம் இருக்கும் எனது கருத்தையோ அல்லது மன அழுத்தத்தையோ இதுவரை சரியான முறையில் கொண்டுவரவில்லை என்பதுதான் உன்மை; எமது கருத்து சரியாக இருக்கும் என்பது நம்பிக்கை அல்லது தனம்பிக்கை; ஆனால் எனது கருத்து மட்டுமே சரி என்பது அவ நம்பிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டாமா?? நாம் பகைவர்கள் அல்ல பண்பானவர்கள் என்பதுக்கான முன்னோட்டமே எமது பின்னோட்டமாக அமையவேண்டும் அமையட்டும்,
    நட்புடனே பல்லி;

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    பொறுப்புணர்வுடனும் துணிவுடனும் எழுதப்பட்ட மிகச்சிறப்பான கட்டுரை. பாராட்டுக்கள் ஜெயபாலன். ஜனநாயகத்தின் நான்கு காவலர்களில் பத்திரிகையாளர்களும் ஒருவராவர் என்பதை நிரூபிக்கும் கட்டுரைக்கு நல்ல உதாரணமாகக் கொள்ளக்கூடிய கட்டுரை இது.

    நட்சத்திரன் செவ்விந்தியன்.

    Reply
  • Kanthan
    Kanthan

    “பாலசுந்தரம்பிள்ளை 1997 பெப்ரவரி முதல் 2003 ஏப்ரல் வரை துணைவேந்தராக இருந்தவர். பல்கலைக்கழகம் இன்றுள்ள கீழ்நிலைக்கு திடீரென வரவில்லை. காலம்காலமாக அப்பல்கலைக்கழகத்தை நிர்வகித்தவர்களின் பொறுப்பின்மையே அதனை இந்நிலைக்கு கொண்டு வந்தள்ளது. அதில் பொன் பாலசுந்தரம்பிள்ளையின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் மிக முக்கியமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளும் பாலியல் துஸ்பிரயோகங்களும் ஸ்தாபனமயப்பட்டது இவரது காலத்திலேயே. இவருக்கு ஆங்கிலப் புலமை இருந்த போதும் இவர் தனது அறிவுத்தரத்தால் அறியப்பட்ட ஒரு உபவேந்தரல்ல.”

    On the above statement I would like to bring your kind consideration of following facts. At the Council held on 25th September 2010 the following names were approved for Honorable Degree

    1. Prof. Balasuntharampillai,
    2. Prof. Saba Jeyarahah,
    3. Prof. Gobalakishna Iyer.

    The following names were approved for Honorable Ph.d

    1. Dr. Ganesharatnam,
    2. Ms. Sinathamby,
    3. Mr. Pachapikesan,
    4. Mr. Maria Xavier.

    Dr. Ganesharatnam could have been awarded with Honorable D.Sc. or Professorship, since he was good and committed teacher, very good surgeon and committed to server for poor people.

    But, Balasuntharmpillai profile is stated above.

    With the above facts one can come to a conclusion that whom they commit lot of anti social activities would be appreciated by awarding such degrees by these Institution. In particular, now the social structure of our Tamil community is molded as it is.

    Finally, what I would like say that as stated in the Article we need a immediate action to cure Tamillain-Barre’ Syndrome, otherwise entire social structures would be demolished by these culprits.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    //With the above facts one can come to a conclusion that whom they commit lot of anti social activities would be appreciated by awarding such degrees by these Institutions. In particular, now the social structure of our Tamil community is moulded as it is.//

    குட்டிச் சுவராகி விட்ட பல்கலைக்கழகத்தை மேலும் அதல பாதாளத்தில் தள்ளுவதெற்கென அடுத்த தலைமுறையும் தயாராகி வருகிறது என்பதை என்னால் அறியக் கூடியதாக உள்ளது. பல்கலக்கழகத்தில் விரைவில் பேராசிரியர் பதவியைப் பெறுவதற்காக இரு கலாநிதிகள் காத்திருக்கிறார்கள். ஒருவர் தமிழ் துறையை சேர்ந்த விசாகரூபன்.. இவர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பழைய நாட்டர் பாடல்களைப் பிரதியெடுத்துக் கொடுத்து ஒன்றரை வருடத்தில் கலாநிதிப் பட்டம் வாங்கி சாதனை படைத்தவர். ( உண்மையான ஆய்வு முயற்சிக்கு இரண்டரை வருடங்கள் தொடக்கம் மூன்று வருடங்களாவது தேவை.. சில ஆய்வுகள் அதற்கு மேலும் நீடிப்பதுண்டு)..( தற்போது தஞ்சாவூரில் பவுண் மோதிரம் வாங்கி கொடுத்து பட்டம் வாங்கியவரையும் எனக்கு தெரியும்) விசாகரூபன் ஒன்றரை வருட காலத்தில் கலாநிதிப் பட்டத்தை மட்டும் வாங்கவில்லை.. அவருடைய ஆய்வு முயற்சி தவிர்ந்த பிற பொழுதுகளைப் பயன்படுத்தி ஐந்தாறு டிப்ளோமா பட்டங்களையும் வாங்கிக் கொண்டுதான் அவர் யாழ்ப்பாணம் திரும்பினார்.. திரும்பிய கையுடன் ஒரே மாதத்தில் பன்னிரண்டு புத்தகங்களை (சுயமாக) எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனையும் நிகழ்த்தினார்.. விரிவுரையாளர் பதவி நிரந்தரமாவதற்கு இவருக்கு புள்ளிகள் இட்டு தூக்கிவிட்டவர்கள் இருவர்.. ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி..( விசாகரூபனின் 90 பக்கம் கொண்ட ஒரு ஆய்வு நூலில் சிவத்தம்பியின் முன்னுரை 50 பக்கங்கள்)..மற்றவர் கவிஞரும் பெரும் தமிழறிருமான எம். ஏ. நுஹ்மான் அவர்கள். இப்போது விசாகரூபனை பெரும்பாலும் துணை வேந்தரின் வீட்டில் அவரது குழந்தைக்கு உணவூட்டும் காட்சியை காண்பவர்கள் அநேகம். பதவி நிரந்தரமானவுடன் இனிமேல் பேராசிரியராகி விடவேண்டிய குறிக்கோளில் முழுமூச்சாக இயங்குகிறார். பல்கலைக் கழகத்தில் பிரசித்தமான இவருடைய கோட்டேசன்களில் ஒன்று: “ஆய்வு செய்து பட்டம் வாங்க வருபவர்கள் ஆய்வு சுப்பவைசருக்கு அரைப் பெண்டாட்டியாக நடந்து கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்”…
    பேராசிரியராவதற்கு காத்து நிற்கும் மற்றொருவர் முகாமைத்துறையைச் சேர்ந்த கலாநிதி. வேல் நம்பி. இவரும் இந்தியாவுக்குப் போய் கலாநிதிப் பட்டம் பெற்று வந்தவர். யாழ்ப்பாணம் திரும்பியபின் அவர் உலக பொருளாதார ஒழுங்கு பற்றியோ மாற்றமடையும் முகாமை முறைகள் பற்றியோ ஒரு வரிக் கட்டுரை கூட எழுதியது கிடையாது..அவர் தற்போது முற்றாக மறந்து போன விஷயம் முகாமைத்துவம் தான்… அவர் முக்கியமாக செய்யும் மற்ற விஷயங்கள்: புத்த்க மதிப்புரை வழங்குதல் மற்றும், பரிசளிப்பு விழாக்களில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதும் தான்..
    நான் சொல்ல வருவது என்னவெனில் பல்கலைக் கழத்தினுள்ளும், பொதுவாக யாழ்ப்பாண சமூகத்தினுள்ளும் ஒருவருடைய தராதரம் எவ்வாறு நிர்ணயிக்கப் பட்டு பதவிகளும் பட்டங்களும் வழங்கப் படுகின்றன என்பதற்கு இவர்கள் இருவரும் மிகச் சிறந்த உதாரணம். அடுத்த தலைமுறையிலும் இத்தகையவர்களே பல்கலைக் கழகத்தை வழி நடத்துவார்கள் என்றால் புலம் பெயர்ந்த நாம் என்ன செய்ய முடியும்?

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    மேற்குறித்த இந்த கட்டுரை கொழும்பில் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் சமூகத்துடன் நெருக்கமான தொடர்புடைய தேசம் வாசகர் ஒருவரால் இந்த புத்தக வெளியீட்டுக்கான நிதி வழங்கப்பட்டு பலருக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இதன் பிரதிகள் பலருக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டும் வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த பிரதியை பெற விரும்புவர்கள் தம்மிடம் தொடர்பு கொள்ளும்படியும் தங்களால் தரப்படும் விலாசங்களுக்கு கொழும்பிலிருந்து தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும் எனவும் தெரியப்படுத்தியுள்ளனர். இலங்கையில் பிரதியைப்பெற விரும்புபவர்கள் எனக்கு இம்மின் அஞ்சலுக்கு முகவரியை அனுப்பி வைக்கவும். தேசம்நெற் வாசகர்கள் இலங்கையில் உள்ள யாருக்காவது இப்பிரதியை அனுப்பி வைக்க விரும்பினால் அம்முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும். – sothi@btinternet.com

    Reply
  • Kusumpu
    Kusumpu

    கலாநிதிப்பட்டம் எல்லாக் கல்லா நிதிகளுக்கும் நிதியிருந்தால் கொடுக்கலாம் என்ற நிலை வந்துள்ளது. நடிகக் கோமாளி விஜய்க்கு டாக்டர் பட்டம் ஒரு பல்கலைக்கழகம் வளங்கியது. இவர் எந்தத்துறையில் டாக்டர் பட்டம் செய்தார். அவரது ஆய்வு நூல் என்ன? இதுகள் எதுவும் இல்லாமல் போனையும் பேப்பரும் இருந்தால் அல்லது பதிப்பதற்கு பிரசுரம் ஒன்றிருந்தால் பட்டம் விடலாம். எல்லோருக்கும் பட்டம் விடலாம். இந்த நிலை இலங்கையில் வந்திருப்பது மிக வேதனைக்குரியது. முக்கியமாக ஆயுதம் தாங்கிய குழுவுக்கு தலைமைவதித்தவர் அதுமட்டுமல்ல ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து விட்டோம் என்று அரசியல் நடத்தும் இவரின் பின்னால் சீறிக்கொண்டு இன்று துப்பாக்கிகளும் துர்பாக்கியங்களும் நிற்கின்றன. இவருக்கு அதுவும் பல்கலைக்கழகம் பட்டம் கொடுக்கிறது என்பதை விட பட்டம் விடுகிறது என்று சொல்லாம். காற்று இன்று அவர்பக்கம் தானே வீசுகிறது. நானும் கொஞ்சப்பட்டம் வைத்திருக்கிறேன் வேண்டியவர்கள் சொல்லுங்கள் பட்டம் விடலாம்.

    Reply
  • Ajith
    Ajith

    My dear readers,
    Did any one of you analysed recentarticle’s by Thesamnet Jeyapalan within few months. His current focus was towards Jaffna university. Do you all think he is genuinly interested in either welfare of tamil people or University of Jaffna. His interest is about mainly towards establishing Jaffna University with Professor Hoole and establishing a political leadership by EPDP minister Douglas Devananda in Jaffna. He is aiming to create an image that Professor Hoole is the only man who is capable to bring Jaffna University to a top university and Douglas is the only politician who can bring prosperity to tamils in Jaffna. There is no doubt that there are problems in Jaffna University since its inception. Unlike other Universities Jaffna has its unique problems associated with political, social, cultrual and economics. I do not understand why Jeyapalan chose few people to represent GBS and few people to represent without GPS. His GPS focus is now on former GA Ganesh, Skantha Principal Aru Thirumurugan and Prof Balasundrampillai. His without GPS group tops with Douglas, GA Imelda, EPDP Jaffna major Yogeswary and few ladies. He couldn’t find any other gentleman than Douglas.

    It is a well known fact Douglas and his party are responsible for white van abductions and murders happened in Jaffna since his political authority in 1994. He uses anonimity to those sources who provided the necessary information about these charters.
    One of the examples he used to attack Mr. Thirumurugan is the current status of Skantha in University admission in comparison with the period under Honourable Orator Subramaniam in 1961. There were number of Principals took over Skantha after Orator. Mr Aruthirumurugan did not take over Skantha straight away from the Orator. Skantha never achieved such performance before and after that year. The success of that year is not only Orator’s effort but many contributed to that. So, the reason’s for not getting that level of performance are many and it is not a valid comparison. Jeyapalan can cheat his circle using such comparison but he cannot fool all with his calculated political moves to establish a administarion with people like Douglas and Maheswary who has the real symptoms of GPS. Why cannot he present a table to show the University admission numbers and principals of all schools in Jaffna to validate his arguments. We all know that honest Judges like Pirabakaran (Chavakacheri)were transferred out of Jaffna influenced by EPDP leader to protect the murderers of a student.GBS is rare and has an incidence of 1 or 2 people per 100,000.

    Reply
  • அனுஷா.B
    அனுஷா.B

    //இதுகள் எதுவும் இல்லாமல் போனையும் பேப்பரும் இருந்தால் அல்லது பதிப்பதற்கு பிரசுரம் ஒன்றிருந்தால் பட்டம் விடலாம். எல்லோருக்கும் பட்டம் விடலாம். இந்த நிலை இலங்கையில் வந்திருப்பது மிக வேதனைக்குரியது.//

    மேற்படி குசும்புவால் சொல்லப்பட்ட கருத்துக்கு தலைசிறந்த உதாரணமாக விளங்குபவர் வுனியா வளாகத்தின் புவனேஸ்வரி லோகனாதன்.

    அவரைப் பொறுத்தவரையில் பேனை பேப்பர் கூடத் தேவையில்லை. “ஐசே நீர் உந்த விசயத்தை விளங்கிற்றீரா என்று செக் பண்ணிப் பார்க்கப் போறன். உதை கொஞ்சம் எழுதிக்காட்டும்” என்று தனது மாணவர்களை வெருட்டி – உருட்டி, ‘வீட்டுத் தோட்டம்’ எஙின்ற பெயரில் இவர் வெளியிட்ட நூலுக்கு ஆய்வுரை செய்தவர் பெளதிகவியல் நிபுணர் என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏய்க்கின்ற கலாநிதி ராசேந்திரா. In this book Puvaneswary’s name has been given as ‘புவனேஸ்வரி லோகனாதன’ on every page. What a disgrace – this woman does not even know how to write her very own name! This is the quality of publications and books churned out by the ‘so called’ academics of the UoJ.

    ராசேந்திராவின் பிலிப்பன்ஸ் நாட்டுப் பயணம் தொடர்பாக “Rajendra’s pervasive interests” என்ற பெயரில் ராசதுரை என்பவர் விளக்கமாகச் சொல்லி இருக்கின்றார் (ஏலவே).

    தான் வவுனியாவில் நீர்மாசடைதல் தொடர்பான நிபுணி (an important resource person) என்று தம்பட்டம் அடிக்கின்ற புவனேஸ்வரியின் ஒரு ஆய்வுக்கட்டுரைகளும் வவுனியாவைத் தாண்டிச் சென்றதில்லை. ஒருநாளுமே ஒரு முழு நீள ஆய்வுக் கட்டுரை எழுதாதவர். இவர் இன்னும் ஒரு சில மாதங்களில் சண்முகலிங்கன் ஆசி பெற்ற ஒரு பேராசிரியர். இந்த அநியாயத்தை எங்குதான் போய் முறையிட?

    Another important information: Puvaneswary’s appointment as a lecturer in the Vavuniya Campus was placed for USAB inception/investigation. But some how or the other it was ‘adjusted’ and altered to save Puvaneswary by R. Nanthakumaran (now the Rector of Vavuniya Campus) and his gang almost 7/8 years ago.

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    சமுதாயத்தில் முன்மாதிரியாக இருப்பவர்களும் சமுதாயத்திற்குப் பாரிய பொறுப்பேற்றிருக்கிற பல்கலைக்கழகமும் நேர்மையாகவும் ஊழல்கள் அற்றவர்களாகவும் இருத்தல் வேண்டுமென்று சமுதாயம் எதிர்பார்ப்பதை இவர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். யாழ் பல்கலைக்கழகம் தனது பாதையில் இருந்து விலகி பலகாலமாகி விட்டது. இதை இனி தூக்கி சரியான தண்டவாளத்தில் வைக்க வேண்டியது எல்லோருடைய பொறுப்பும். உதாரணத்திற்கு கலைஞர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு பிரபுதேவாவும் நயன்தராவும் நடனமாட ரசிகர்கள் விசிலடிக்க அங்கு பிரச்சனைகள் காணாமல் போய்விடுகிறது. இதற்குப் பணம் மேலிடத்துத் தொடர்புகள் என்ற காரணங்களினால் தவறுகள் மறைக்கப்படுகின்றன. இதே நிலைமைதான் யாழ் பல்கலைக்கழகத்திலும்.

    ஸ்ரீரங்கன் உங்கள் ஆத்ம தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். நீங்கள் சரவணப் பொய்கையில் நீராடி என்று சொல்வதை நாங்கள் கிணற்றிலை குளிச்சிட்டு வந்து என்று சொல்கின்றோம். பாலியல் சம்பந்தமான தவறுகளை சமுதாயத்துடன் ஒட்டிப்போன பிரச்சனை என்று பார்க்காமல் நீங்கள் எழுதும்போது உங்கள் எழுத்தின் பெறுமதி மேலும் கூடும். அது உங்கள் முடிவு.

    தோழர் கேட்டாரா கலாநிதிப்பட்டம் தாருங்கள் என்று. நீங்கள் கொடுக்க வெளிக்கிட்டு அதை வேண்டும்/ வேண்டாதே என்றால் பாவம் அந்த மனிசன் என்ன செய்வார்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    குசும்பு,
    பல்கலைக் கழகங்கள் இருவகையான கலாநிதி பட்டங்களை வழங்குகின்றன.. ஒரு பாடநெறியில் ஆய்வு செய்து புதிய கொள்கை அல்லது புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிறுவுபவர்களுக்கு வழங்கப் படும் கலாநிதிப் பட்டம்..(இது அனேகமாக Ph.D -Doctor of Philosophy- என்ற பட்டமாக இருக்கும்..அந்த ஆய்வாளர் ஆய்வை மேற்கொண்ட பல்கலைக் கழகமே இதனை வழங்கும்.இந்த ஆய்வு அநேக தருணங்களில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும்..ஆய்வினைக் கட்டுரையாக சமர்ப்பித்த பின்னர் ஆய்வாளர் தாம் செய்த ஆய்வின் மீது கேட்கப் படும் கேள்விகளுக்கு வாய் மூலமான பதிலையும் சொல்ல வேண்டும்.. சில பல்கலைக் கழகங்கள் கெளரவ கலாநிதிப் பட்டங்களையும் வழங்குகின்றன. (இவை அனேகமாக D.Litt- Doctor of Literature/Doctor of Letters என அழைக்கப் படுகின்றன. எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இந்த பட்டங்கள் வழங்கப் படுகின்றன. இந்த வகையான பட்டங்களை எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, மகிந்த ராஜபக்ச மேலும் நீங்கள் கூறிய நடிகர் எல்லோரும் பெற்றுள்ளனர். தமிழ் நாட்டில் சில பல்கலைக் கழகங்கள் உரியவருடன் பேரம் பேசி பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு இத்தகைய கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்குவது ஊரறிந்த ரகசியம்..). இந்த வருடம் அமைச்சர் டக்ளஸ் பெறப் போவதும் இவ்வகையான கலாநிதிப் பட்டத்தைத் தான்.. இதைப் பெறுவதற்கு ஆய்வு எதுவும் செய்ய வேண்டியதில்லை.. அவர்கள் தமது செயற்பாட்டுத்துறைகளில் செய்த சாதனைகளுக்காகவே இது வழங்கப் படுவது வழக்கம்..”எனக்குப் பட்டம் தருவதன் மூலம் சில பல்கலைக் கழகங்கள் தமது தரத்தை உயர்த்திக் கொள்கின்றன” எனக் கூறி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் கொடுக்க விழைந்த பட்டத்தை வேண்டாம் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் உதறித் தள்ளியதாக ஒரு ஞாபகம்.. சில தியாகிகள் பட்டங்கள் தந்து தம்மைக் கேவலப் படுத்த வேண்டாம் என்று மன்றாடி, அவற்றைப் பெற்றுக் கொள்ள மறுத்த காலமும் ஒன்று இருந்தது…

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    சோதிலிங்கம்
    இது வடக்கிலுள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பிரச்சனை. எனவே தயவு செய்து வடக்கிலுள்ள அனைத்து நூலகங்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலை நூலகங்கள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் அனைத்திற்கும் இப்பிரசுரம் கிடைக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். பல்கலைக் கழகத்தை சீர்படுத்த வேண்டிய பணி அங்கு வாழும் மக்களால்தான் செய்யப்பட வேண்டும். முதலில் மக்களிடமிருந்து பிறக்கும் எதிர்ப்புத்தான் படித்தவர்களாக வேஷமிடும் புல்லுருவிகளை விரட்டும்.. யாழ்ப்பாண பொதுசன நூலகத்தில் இருந்து தொடங்கட்டும் உங்கள் பணி..

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..தேசம்நெற் வாசகர்கள் இலங்கையில் உள்ள யாருக்காவது இப்பிரதியை அனுப்பி வைக்க விரும்பினால் அம்முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும்….//

    சோதிலிங்கம் நீங்கள் என்ன இடைத்தரகரா? அவர்கள்தானே தமக்குத் தெரியப்படுத்டும்படி கோரி இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் விலாசத்தை நீங்கள் பதிவிடலாமே?
    பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்த விரும்புவோர் ஏன் பயப்பட வேண்டும். பொல்லாத புலி அங்கில்லையே?
    (இந்த பிரதியை பெற விரும்புவர்கள் தம்மிடம் தொடர்பு கொள்ளும்படியும் தங்களால் தரப்படும் விலாசங்களுக்கு கொழும்பிலிருந்து தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும் எனவும் தெரியப்படுத்தியுள்ளனர்.)

    Reply
  • Kanthan
    Kanthan

    தாமிரா மீனாஷி on September 26, 2010 10:47 am

    “குட்டிச் சுவராகி விட்ட பல்கலைக்கழகத்தை மேலும் அதல பாதாளத்தில் தள்ளுவதெற்கென அடுத்த தலைமுறையும் தயாராகி வருகிறது என்பதை என்னால் அறியக் கூடியதாக உள்ளது. பல்கலக்கழகத்தில் விரைவில் பேராசிரியர் பதவியைப் பெறுவதற்காக இரு கலாநிதிகள் காத்திருக்கிறார்கள். ஒருவர் தமிழ் துறையை சேர்ந்த விசாகரூபன்.. ”

    He has been awarded with Associate Professorship in August Council meeting.

    Reply
  • Kanthan
    Kanthan

    “பேராசிரியராவதற்கு காத்து நிற்கும் மற்றொருவர் முகாமைத்துறையைச் சேர்ந்த கலாநிதி. வேல் நம்பி. இவரும் இந்தியாவுக்குப் போய் கலாநிதிப் பட்டம் பெற்று வந்தவர்.”

    He had been given chance (in commonwealth program) to Ph.d by the University of Jaffna (by University nomination) by undercutting one of the other eligible candidate in the Vavuniya Campus.

    Now he has been awarded with Associate Professorship in September 25, 2010 Council meeting.

    Reply
  • Tharmu
    Tharmu

    சாந்தன் on September 27, 2010 2:27 am:
    “பொல்லாத புலி அங்கில்லையே?”

    ஆனல் மிக பொல்லாத கிருமிகள் உள்ளனவே, என்ன செய்வது?

    Reply
  • Chandru. V
    Chandru. V

    Fundamentally the article is Jeyabalan’s second appreciable product in the series of articles appear in the tamil elctronic media in the recent past. This article’s only objective seems to attack the trio of the University.

    I could notice that, while facts placed in the article are to be seriously questioned, comments contain many incorrect information. For example someone comments that Prof. balasuntharampillai belongs to arrogant Vellala cast from Velanai and is a relative of K.P. Ratnam, former MP for Kayts. In fact Prof. Balasuntharampillai belongs to Koviyar cast and is from Velanai East which part is totally avoided by arrogant vellala people of Velanai West. K.P.ratnam also belongs to Koviyar cast. Cast difference is stronger in the islets than any other part of Jaffna Prof.Balasuntharampillai gave preference not to any people of the islets of Jaffna but to persons belonged to his cast and village (Velanai East).

    The muddy war in the arena of University of Jaffna is not between Vadamaradchi and Islets, but two dirty factions from these areas.

    Reply
  • Mahajanan
    Mahajanan

    மகாஜனாக்கல்லூரியின் நூற்றாண்டுக்காலத்தில் என்.சண்முகலிங்கன் மகத்தான நமது கல்லூரியின் மானத்தை வாங்குகிறார். மகாஜனாக்கல்லூரி இனிமேல் தனது விழாக்களில் சண்முகலிங்கத்தை தடை செய்யவேண்டும்.

    -வருத்தத்துடன் மகாஜனன்.

    Reply
  • Sri vaishnavi
    Sri vaishnavi

    ” In fact Prof. Balasuntharampillai belongs to Koviyar cast and is from Velanai East which part is totally avoided by arrogant vellala people of Velanai West. K.P.ratnam also belongs to Koviyar cast.” சந்திரன் .V

    நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் கோவியர் தமது ஊருக்குள்ளதான் கோவியர் வெளியால வந்த வெள்ளார். இது வழமையான விஷம் தீவகத்தில், என்னால் பல உதாரணகளை சொல்லமுடியும். KP ரத்தினம் குடும்பம்(அதாவது அவரது உறவினர்கள் ) தம்மை “உயர்” சைவ வேளாளர்கலாகவே காட்டிக் கொண்டார்கள். மேலும் கோவியர்கள் பெரும்பாலும் திருமான உறவுகள் மூலம் “வேளாளர் ஆகி விட்டனர். இது வல்ல இங்கு முக்கியம் .
    KP ரத்தினத்தின் செல்வாக்கில் தான் பாலசுந்தரம் பிள்ளையார் ஆரம்பகாலத்தில் பதவிகளை பெற்றுக் கொண்டவர் என்பது எனது கருத்து. அதேபோல் தொடந்தும் அதிகார வர்க்கத்துக்கு சேவை செய்வதன் மூலம் தனது பதவிகளையும் அந்தஸ்தையும் தங்க வைத்து கொண்டுள்ளார். இதை தாங்கள் மறுக்க முடியுமா? மேலும் அவர் இரண்டு வருடங்கள் எனது ஆசிரியராக பல்கலை கழகத்தில் இருந்தார். அவரை எனக்கு நன்றாக தெரியும் .
    இந்த விவாதத்தில் பல்கலை கழகத்தில் நடைபெரும் பாலியல் வன்முறைகளை சாதாரண பாலியல் நடத்தையாக சிலர் இங்கு வர்ணிகின்றனர். இது தவறாக பார்வை. பதவியையும், அதிகாரத்தையும் பாவித்து பாலுறவுக்கு உடன்படவைப்பது பாலியல் வன்முறையாகும்.
    இங்கு, இந்த விவாதத்தில் ஆணாதிக்க சிந்தனை தாராளமாக கோடி கட்டிப் பாரக்கிறது!! சிலரின் எழுத்துகள் அருவருப்பை தருகின்றது. வாழ்க உங்கள் சமூக ஜனநாயகம்!! வாழ்க உங்கள் தேசம் !

    Reply
  • sahabdeen nana
    sahabdeen nana

    புத்திசாதுரியத்திலும், திறமையிலும், ஒழித்துருந்து தாக்குகின்ற கொரில்லா தாக்குதலிலும்தான் வடக்கு சிறந்தது என கருதியிருந்தோம். மற்ற சமாச்சாரத்திலும் ரொம்ப வள்ளல்களாக இருக்கின்றார்களே என்பதை அறியும் போது, மனம் ஒரு டிக் அடிக்கின்றது. பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு சேர் பட்டம் தருகின்றோம் என்று சொன்ன போது, அது எங்கள் கால் செருப்புக்கு சமம் என தூக்கி எறிந்தார்கள் இந்தியர்கள். ஆனால் அதை நமது பொன் ராமநாதன்களும், அருணாச்சலங்களும் பெற்ற கதை நிறையவே இருக்கின்றது. அதனால் தேவா தோழர் பட்டத்தை பெற்று விடுவாரோ என்ற குட்டி ஆதங்கம் ஒன்று எம்மை அலைபாய வைக்கின்றது. ஆனால்.

    80/81களில் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி சந்திகளில் தோழர் தேவாவாக இருந்த அவர், 82/83 களில் மட்டக்களப்பு, கறுவாஞ்சிகுடி ,கல்லாறு, நற்பிட்டிமுனை, திருக்கோயில் பகுதிகளில், முழுநேர போராளியாக வலம் வந்த தோழர், 83 ஆகஸ்ட்/செப்டம்பர்களில், மட்டக்களப்பு சிறையில், பனாகொடையில் மற்ற தோழர்களை இழந்த கவலையில் இருந்த தோழர், 84/85 களில் கும்பகோணத்தில் ராணுவ தளபதியாக இருந்த தோழர் தேவானந்தா, பின்னர் ஈபிஆர்எல்எப் ஐ விட்டு விலகி, அண்ணா நகர், சூழைமேடு, சேத்துப்பட்டு, வடபழனி தெருக்களில் ஓட்டை சைக்கிளில் அல்லாடிய தோழர் டக்ளஸ் தேவானந்தா, 90/91 களில் பிரேமதாஸவின் ஆதரவுடன், நாரஹென்பிட்டி, 21 பார்க் ரோட்டில் வலம் வந்த
    தோழர் என பல வேடங்களில் அவரை கண்டிருக்கின்றோம். தரிசித்தும் இருக்கின்றோம்.

    அந்த தோழர் வேறு. இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேறு.வேறு முகம்.வேறு பார்வை. வேறு சிந்தனை உள்ளவர். நிச்சயம் அவர் இந்த வம்பில் மாட்டிக்க மாட்டார். மாட்டக் கூடாது என இறைவனை பிரார்த்திப்போம்.

    Reply
  • Kanthan
    Kanthan

    அனுஷா.B Your comment on September 26, 2010 9:45 pm

    “தான் வவுனியாவில் நீர்மாசடைதல் தொடர்பான நிபுணி என்று தம்பட்டம் அடிக்கின்ற புவனேஸ்வரியின் ஒரு ஆய்வுக்கட்டுரைகளும் வவுனியாவைத் தாண்டிச் சென்றதில்லை”

    Please, kindly note that she is triplicating others work, as such she is not able produce he research in International Forums. That fact has already discussed in the previous article by Jeyabalan as well. Actually, she is trying to show that she is doing some serious research, then based on these she would be able to claim points for her professorship.

    The important fact is that others also doing the same in the name of research. In fact these so called academics or researchers are not capable to identify the problems, then how do we expect them to find solutions to our problems.

    Reply
  • Chandru. V
    Chandru. V

    /T Sothilingam on September 26, 2010 1:32 pm
    மேற்குறித்த இந்த கட்டுரை கொழும்பில் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் சமூகத்துடன் நெருக்கமான தொடர்புடைய தேசம் வாசகர் ஒருவரால் இந்த புத்தக வெளியீட்டுக்கான நிதி வழங்கப்பட்டு பலருக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இதன் பிரதிகள் பலருக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டும் வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த பிரதியை பெற விரும்புவர்கள் தம்மிடம் தொடர்பு கொள்ளும்படியும் தங்களால் தரப்படும் விலாசங்களுக்கு கொழும்பிலிருந்து தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும் எனவும் தெரியப்படுத்தியுள்ளனர். இலங்கையில் பிரதியைப்பெற விரும்புபவர்கள் எனக்கு இம்மின் அஞ்சலுக்கு முகவரியை அனுப்பி வைக்கவும். தேசம்நெற் வாசகர்கள் இலங்கையில் உள்ள யாருக்காவது இப்பிரதியை அனுப்பி வைக்க விரும்பினால் அம்முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும்/

    Could you please make arrangements for the diaspora graduates have copies of the book? This article will reach everyone only when it is in paper.

    Reply
  • Chandru. V
    Chandru. V

    Sri vaishnavi, I am totally agreeing with you Sri vaishnavi. I am contradicting only in that particular fact about his cast background. I can understand your and other’s inner heat against these surpants.

    Reply
  • தேனியில்
    தேனியில்

    விலைபோகும் விருதுகள், பட்டங்கள் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும்– இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். -26.09.10

    அண்மையில்’ தேசம்” இணையத்தளத்தில் வந்த செய்தியின்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவாகளுக்குக் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கவிருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சமூகநலவாதிகள் அரசியலவாதிகள,; கலைஞர்கள் தத்துவஞானிகள்,ஆன்மீகவாதிகள் போன்றோருக்குப் பல்கலைக்கழகங்களால் கௌரவ பட்டங்கள் கொடுப்பது உலகில் பல நாடுகளிலும் பரவலாக நடக்கும் விடயமாகும்.

    பல்கலைக்கழகங்கள் என்பது ‘பல கலைகளயும் பயின்று அறிவு முதிர்ச்சி பெறும் இடமாகும்.’ சர்வகலாசாலை’யின் பாரம்பரியம், சமுதாயத்தின வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அந்தச் சமுதாயத்தின் அங்கத்தவனான தனி மனிதனின் வாழ்வின் வளத்துக்கும் கல்விமுறைகளைத் தரும் சர்வகலைகளையும் சமத்துவத்துடன் கற்பிப்பதாகும்.; இதில் பேராசிரியர்களாக இருப்பவர்கள் தாங்கள் படிப்புக்கும் பாடத்தில் பாண்டித்தியமும் ஆராய்ச்சித் திறனும் கொண்டவர்களாக மதிக்கப் படுவர். பல்லாண்டுப்படிப்பின் அறிவுத்திறனும் ஆராய்ச்சி வல்லமையால் விளக்கப்பட்டு எழுதப்பட்ட பல புத்தகங்கள் கட்டுரைகளும் அந்தப் பல்கலைக்கழகப்பேராசிரியராக வருவதற்கான வரைமுறைக்குப் படிவாசலாக அமைகின்றன.

    ஆனால் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ‘கூத்தை;ப்பார்க்கும்போது ஒருகாலத்தில் மிகப் படித்த மேதைகளைப் பெற்றெடுத்தாகப் பெருமை பேசும் யாழ் மக்கள் மட்டுமல்ல உலகம் பரந்து வாழும் ஒட்டுமொத்தத் தமிழ் இனமும் வெட்கப்பட வேண்டியிருக்கிறது

    யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் போராசிரியராகவிருந்த கைலாசபதி தமிழ்மொழிக்கும். துமிழ் உணர்வுக்கும் செய்த பணி உலகம் பரந்த பெருமையை யாழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்தது. இன்று அங்கிருந்த வெளிவரும் செய்திகளைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்திற்கு உன்ன சாபம் கிடைத்தது என்று சிந்திக்கத் தோன்றுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்ற முது மொழியைக் கொண்ட நாங்கள், சரியான அறிவுத் திறனற்ற, காமவெறி படித்த, வஞ்சகமும் சதிகளையும் கையாண்டு பதவிகளைப் பெறுபவர்களையும் அதைத் தக்க வைத்துக்கொள்ள ‘யார் காலிலும் விழும்’ முதகெலும்பற்றவர்களையுமா பிரமுகர்களாகப்போற்றகிறோம்?

    பல்கலைக்கழகமா அல்லது பாலியல் வன்முறைக் கழகமா?

    தேசம் கட்டுரையின்படி பல பேராசிரியர்கள் அங்கு படிக்கும் இளம் பெண்களைத் தங்களின் காமவெறிக்குப் பயன் படுத்துகிறார்கள்; என்ற உண்மையின் கடலளவு ஆழத்தின் ஒரு சிறு துளி வெளியிற் கொட்டப்படடிருக்கிறது.

    2005ம் ஆண்டு பொங்கு தமிழ் கணேசலிங்கம் தனது 13 வயது வேலைக்காரியை 40 தடவைகளுக்கு மேல்ப் பாலியற்கொடுமை செய்ததாக; என்ற குற்றச்சாட்டப் பட்டுக் கோர்ட்டுக்குப் போன விபரம் லண்டனை எட்டியபோது அதன் பின்னணி உண்மையை அறியத் தசவல்களைப் பெறமுயன்றபோது பாலியல் வன்முறைக்கு இளம் பெண்களைப் பலிகொள்ளும் பேராசிரியர்கள் பற்றிய பல விடயங்கள் வெளிவந்தன.

    விரிவுரையாளர்களுக்குப் பயந்து மாணவர்கள் தங்கள் ஆத்திரத்தை மொட்டைக் கடிதங்கள்மூலம் வெளிப்படுத்தியும் இவர்கள் அடங்குவதாகவில்லை. ”விரிவுரையாளர்களைத் தட்டிக்கேட்கும் மாணவர்கள் பழிவாங்கப் படுகிறார்கள்’ என்று வலம்புரி பத்திரிகை குமுறியது. தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் இணையத்தளம ஒன்று, விரிவுரையாளர்களால் விபச்சார விடுதியாக்கப்படும் யாழ் பல்கலைக்கழகம்’ என்று சாடியது.

    பல்கலைக்கழகத்தின ;பாலியக்கேவலங்கள் பரவலாகப் பேசப்பட்டாலும் அதைப்பற்றித் தட்டிக் கேட்கக்கூடிய அதிகாரத்திலுள்ள யாரும் பெரிதாக அலட்டிக் கொள்கிறார்களில்லை. சமதாயத்துக்கெதிரான வன்முறைகளைத் தட்டிக்கேட்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளான உதயனும் வலம்புரியும கூடப் பல்கலைக் கழகத்தைப்பற்றிக் கண்டித்தும் அவர்கள் மிகவும் தான்தோன்றித்தனமாக நடப்பதாக் தெரிகிறது. இவர்களை இப்படி சட்டத்துக்க அப்பாற்பட்டவர்களாக நடக்க உந்தும் காரணிகள் என்ன? இவர்களுக்கு முதுகு சொறியும் அரசியற்தலைவர்கள் யார் என்ற கேள்வியைப் பொது மக்கள் வாய் திறந்து கேட்காவிட்டால் இந்த அநியாயங்கள் தொடரத்தான்போகிறது. முக்களுக்காப் பலகலைக்கழகங்களும் அரசியலவாதிகளும் பணி புரிய வேண்டுமே தவிர, முறைகெட்ட பல்கலைக்கழகப்பேராசிரியர்களுக்கும் அவர்களைத் தாங்கிப் படிக்கும் அரசியலவாதிகளுக்குமாக மக்கள வாழக்கூடாது.

    அதிலும் முக்கியமாக , மக்களின் நம்பிக்கைக்கும் அவர்க்களின் எதிhகால வளர்ச்சிக்கும் பாதுகாவலான அரசியற் தலைவர்கள் இதில் முக்கிய கவனம் எடுக்க வெண்டும்

    இன்று, யாழ்பல்கலைக்கழக உபவேந்தராகவிருக்கும் (உம்மா???) சண்முகலிங்கம் அவர்கள் அன்று , 2005ம் ஆண்டில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட கணேசலிங்கத்தையும் பல்கலைக்கழகத்தில் உள்வாங்கியிருக்கிறார். பாலியல் கொடுமை செய்தது பற்றிக் கேள்வியே இல்லை. வேலியே பயிரை மேயும் கதைகள் யாழ்பல்கலைக்கழகத்தில் நடப்பதை, படிப்பையே தெய்வமென மதிக்கும் யாழ் மக்கள் மவுனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதும், இப்படியாவர்களை இன்னும் இன்னும் முதன்மைப்படுத்துவது வெட்கக்கேடான விடயம் மட்டுமல்ல எதிர்கால இளம் தலைமுறைக்குச்செய்யும் படு துரோகமுமாகும்.

    பல்கலைக்கழகத்தின் உயர்பதவிகளுக்கு அரசியல் உதவிகள் கொடுப்பது வளரும் நாடுகளில் நடக்கும் சாதாரணவிடயம் ஆனாலும் தராதரமற்ற, அரசியல் ஞானமற்ற, இராஜதந்திர நுணுக்கங்கள் தெரியாத தலைமைகளாhல் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் தமிழ் மக்களைத் தலை நிமிர வைக்கக்கூடிய தலைவர்களும் இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் தாங்க முடியாத வேதனையைத் தருகிறது..

    அப்படியான ஆழமற்ற நோக்கற்ற அரசியற் போக்கு ஒரு சில அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வின் முடிவின் ஆரம்பமாகவிருக்கும் என்பது தவிர்க்கப் படக்கூடியதொன்றாகும் . அரசியற்தலைவன் என்பவன் , இன்று தனக்குக் கிடைக்கும இலாபத்தை மட்டும் யோசிக்காமல், தன்னைத் தெரிவு செய்த மக்களுக்கு, இன்றைக்கு, நாளைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் எதிர்காலத்திலும் என்ன வேவை என்று சிந்திக்கும் ஆற்றலுடையவனாக இருக்கவேண்டும். மக்களாற் தெரிவு செய்யப்பட்ட அரசியற் தலைவன் என்பவன் ஒவ்வொரு வினாடியும் மக்களின் பார்வை என்ற பூதக்கண்ணாடியால் பரிசோதிக்கப்படுபவனாகும். அவன், அவனைத் தெரிவு செய்த மக்களால் எள்ளளவும் சந்தேகிக்க முடியாத வாழ்க்கையைக்கொண்டு நடத்த நிர்ணயிக்கப்பட்டிருக்கிறான். அரசியல் விளையாட்டின் ஒவ்வொரு சிக்கலையும் தெளிவாக முகம் கொடுக்கக்கூடியவனாக எதிர்பார்க்கப் படுகிறான். தனது தற்காலிக பெயருக்கும் புகழுக்கும் கேடு கெட்டவர்களின் முதுகு சொறியும் சின்னத்தனமான காரியங்களுக்கு அப்பாற்பட்டவனாக வாழ எதிர்பார்க்கப் படுகிறான்.

    பனைமரத்தில் ஏற்றி விளையாடுபவர்கள்.

    தங்கள் நலனுக்காகத் தலைவனைப் புகழ்பாடித் தலைவனை எமலோகம் அனுப்பிய பலரின் கதைகளைப் படித்தவர்கள் நாங்கள். பிரபாகரன் அவரைச் சுற்றியிருந்த சுயநலவாதிகளால் அழிந்து போனவர். அரசியல் சிந்தனையாளர்கள் பிரபாகரனை நெருங்கப் பிரபாகரனை வைத்துத் தமிழ் மக்களிடம்; பணவேட்டையாடிய குள்ள நரிகள் விடவில்லை.

    பிரபாகரன் ஒரு தங்கக்கோழி, அதன் முட்டைகளை மூட்டையாக்கட்டிக் கோடிகள் சேர்த்தார்கள் சூரியக்கடவுளின் அவதாரம் என்றும், கார்த்திகைபாலன் என்றும் பிரபாகரனைப் புகழ்ந்து பனைமரத்தில் ஏற்றினார்கள். கடவுள் அவதாரக் கார்த்திகை பாலனுக்கு மகிந்தாவின் அசுரர்கள் வந்தபோது என்னமாதிரி இராஜதந்திரம் செய்N;தா அல்லது இராஜதந்திரமாக பேசியோ தப்புவது என்று சொல்லிக்கொடுக்க யாருமில்லை. பிரபாகரானால் பிடிக்கபட்டிருந்த போர்க்கைதிகளை விடுவிககும் அக்கறையில்– (தமிழர்களில் அக்கறை, பிரபாகரனிலல்ல!) கொண்டவர்கள்(வெளிநாட்டுச்சக்திகள்) பிரபாகரனைக் காக்க முயன்றபோது தடைபோட்டவர்கள் இந்த சூனிய புத்திசாலிளே (இங்கே யாரைக்குறிப்பிடுகிறேன் என்று இதை வாசிப்பவர்களுக்குத் தெரியும்).

    கடந்த நூற்றாண்டின் முக்கிய விடுதலைப்போரானாகப் பெயர்பெற்ற பிரபாகரன் அனாதைப் பிணமாகக்; கிடந்தபோது, அந்தப் பிணத்தைப் புதைக்கக்கூடப் பிரபாகரனின் பெயரில் பணம்சேர்த்தவர்களோ, விடுதலைப் போரைச்சாட்டி புகலிடம் தேடியவர்களோ முன்வரவில்லை. புலிகளின் அரசியல் ஆலோசகரான நடேசனுடன் அடிக்கடி பேசுவதாகப் பெருமையடித்துக்காண்ட (லண்டன்வாசி) ஒருவரிடம் பிரபாகரனின் நான் போர்முறைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது, ஆனால் தமிழருக்காகப்போராடிய ஒரு தமிழனின் பிணம் அனாதையாகக் கிடக்கிறது, மனித உரிமையின்பேரில் பிரபாகரனுக்கு இறுதிச்சடங்கு செய்ய இலங்கை அரசுடன் தொடர்பு கொள்ளப்போகிறேன்; என்று நான் சொன்னபோது ‘பேசாமல் இருங்கோ அக்கா’ என்று சொல்லுமளவுக்கு ஒரு மனச்சாட்சி கெட்ட மனிதர்களதான் பிரபாகரனைத் தங்கள் தலைவனாகத் தூக்கிவைத்துக் கொண்டாடியவர்கள்.

    இவர்களில் பலர் பஞசோந்திகள் என்பதும் தங்கள ;தேவைக்கு எவர் காலிலும் விழும் சுய நலவாதிகள் என்பதும் தமிழ் மக்களுக்குத் தெரியும். இன்று இன்னுமொரு தலைவனைத் தங்கள் தேவைக்குத் தூக்கி வைத்துக்கொண்டாடித் தங்கள் காரியங்களைச்; சாதிக்க வலை பின்னுகிறார்கள் இந்த சந்தர்ப்ப வாதிகள்.

    பதின் மூன்று தடவைகள் புலிகளின் கொலை வெறியிலிருந்து தப்பிய டக்ளஸ் இன்று புலியுருவைக் களைந்து விட்டு பல உருவங்களில் பஞ்சோந்திகளாக வளையம் வரும் சிலரின் மாயாஜாலப் பேச்சுக்கு மயங்கி, அவர்கள் கொடுக்கும் கௌரவ பட்டத்தைப்பெற முன்வருவது, அவர் எவ்வளவு தூரம் தமிழ் மக்களின் உண்மையான வளர்சிசியில் அக்கறை வைத்திருக்கிறார் என்ற கேள்வியை எழுப்புகிறது.. அவர்;; இதுவரை பாதுகாத்து வைத்திருந்த ‘முற்போக்கான’ அரசியல் தமிழ் அமைச்சர்’ என்ற பெயரைக் காற்றில் விடுவது ஆச்சரியமாகவிருக்கிறது;.

    தேசம் கட்டுரையைப்படித்தபின் டக்ளஸைத் தொடர்பு கொள்ளப் பல தடவைகள் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. நீண்டகால அனுபவமும் அரசியல் முதிர்சிசியுமுள்ள டக்ளஸ் இப்படியான ‘பட்டங்களுக்கு’ அப்பாற்பட்டவர் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். யார் பட்டம் கொடுக்கிறார்கள் என்பதில் அந்தப் பட்டத்தின் கண்ணியம், பெருமை, கௌரவம் பிரதிபலிக்கிறது.

    மன்மத மகாராசாக்கள், பிராந்திய வெறிபிடித்தவர்கள், பதவிக்கு யார் காலிலும் விழும் முதுகெலும்பற்றவர்கள் சேர்ந்து கொடுக்கும் ‘கௌரவ காலாநிதி (??????) பட்டத்தில் தன் சுய மரியாதையைக் காற்றில் பறக்கவிடவேண்டியதை விட மிகவும் முக்கியமான சமுதாயக் கடமைகளைத் தமிழ் மக்கள் டக்ளஸிடம் எதிர்பார்க்கிறார்கள். இன்று தமிழ்ப்பகுதிகளில் பொதுவெலை செய்யும் உத்தியோகத்தர்களின் ஊழல்வேலைகளால் தமிழச்சமுதாயத்தின் வளர்ச்சியே ஊனமாகவிருக்கிறது.

    இதை நிவர்த்தி செய்யும் ஆற்றல் டக்ளசுக்கு உண்டு என்று ஒரு சாதாரண தமிழன் எதிர்பார்க்கிறான். ஊழல் நிறைந்தவர்கள் கொடுக்கும் எந்த விருதிலும் எந்த மதிப்பும் கிடைக்காது.

    டக்ளசுடன் வேலைசெய்த மகேஸ்வரியைப் புலிகள் படுகொலை செய்தபோது (2008), இன்று டக்ளசுக்கு பொன்னாடை போர்க்கக் காத்திருக்கும் கூட்டத்தின் வெளிநாட்டு அடிவருடிகள் மகேஸ்வரிக்கு ஒரு இரங்கல் கூட்டத்தை லண்டனில் வைக்க கோயிலில் (லுவி;ஷாம் சிவன் கோயில்) இடம் தரவில்லை என்பது மூலம் இவர்கள் யார் என்பது எதற்காகப் பட்டத்தைத் தந்து பாதாளத்தில் விழுத்த முயல்கிறார்கள் என்பதை டக்ளஸ் உணர்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

    பிரித்தானிய மகாராணியாரால் சமுதாயத்துக்கு நன்மை செய்தவர்களுக்குக் கௌரவ பட்டம் கொடுப்பதுண்டு. அந்தப் பட்டம் ஏகாதிபத்தியத்தின் சின்னமாகக் கருதப் படுகிறது. பலர் அதைப் பெருமையுடன் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அப்பட்டத்தைப் பல சிந்தனையாளர்கள் ஏற்க மறுத்திருக்கிறார்கள். பிரபல படத்தயாரிப்பாளரான் அல்பிரட் ஹிச்சொக அப்பரிசை ஏற்க மறுத்தார் (ஆனால் அவர் இறக்க முதல் ஏற்றுக்கொண்டார்) பரிசை வாங்கிய பீட்டல் பாடகர்களில் ஒருத்தரான ஜோன் லெனென் பரிசு வேண்டாம் என்று மகாராணியிடம் திருப்பிக்கொடுத்தார். தன்மானமும் சமுதாய உணர்வுக்கும் எந்தப் பரிசும் ஈடுதராது.

    யாழ்பல்கலைக்கழகம் கொடு;க்க முற்பட்ட கௌரவ பட்டத்தை இலங்கையின் முற்போக்கு எழுத்தாளரான டொமினிக் ஜீPவா உதறித் தள்ளினார். உண்மையான கலைஞர்கள் அரசியல்வாதிகளினதோ அல்லது போலிப் பட்டதாரிகளிடமிருந்தோ அங்கிகாரம் பெறுவதில்i, அவர்களைச் சட்டை செய்வதுமில்லை.

    எமது சமகால இருக்கையை நியாயப்படுத்த கடந்த கால வரலாற்றைக்கொச்சைப் படுத்த விரும்பவில்லை’ ‘கற்றுக்கொண’ட அனுபவங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத்தரும்’ .- டக்ளஸ் தேவானந்தா செப்டம்பர் 2010.

    டக்ளசில் நம்பிக்கையும் கொண்ட தமிழச்சமுதாயம் இந்த வாசகங்களைத் திருப்பிச் சொல்கிறது. மேதகு என்றும் கடவுள் அவதாரம் என்றும் புகழ்பாடிப் பிரபாகரனை அழித்த கூட்டம் இன்று யாரை அழிக்கக் கண் வைத்திருக்கிறது; என்பதைச் சொல்லத் தேவையிலலை; மக்கள் பண்pசெய்ய மாண்பு கெட்டோர் தரும் கௌரவப் பட்டம் தேவைதானா?

    வாழ்க்கை என்பது கடவுளின் அனுக்கிகத்தால் நிர்ணயிக்கப் படுவதில்லை. வாழ்க்கை என்பது தொடர்பான மாற்றங்கள். பழைய வாழ்க்கையின் அனுபவங்கள் அல்லது நடந்தவை புதிய எதிர்காலத்தை உருவாக்குகிறது. இன்று தூக்கி வைப்பவர்கள் தூக்கி வைக்கப் படுபவர்கள் அந்த உயரத்தில் வாழ்க்கை முழக்க பறக்க முடியாது. போலிக்காரணங்களால் மக்களின நன்மதிப்பைப் பெறவும் முடியாது. தனது கடைசிக்காலத்தில் தன்னைக் காப்பாற்றச் சாதாரண ஏழைத் தமிழனைப் போர்க்கைதியாக்கி வைத்துக்கொண்டு ‘எங்களைக் காப்பாற்ற அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா கப்பல் அனுப்புவார் பொறுத்திருங்கள் என்று புலிகள் சொன்னது போல் உயரப் பறக்க நினைத்து ஆழ்கடலில் விழும்போது தமிழ்ச்சமுதாயத்தின் தன்னலவாதிகளின் கூட்டம் ம் ஏறி மதிக்குமே தவிர எந்தக் கப்பலையும் கொண்டு வராது.

    சமுதாய நலத்தில் அக்கறை கொண்ட மாணவர்கள், ஊடகவாதிகள், பெற்றோர், பெண்ணிலைவாதிகள் என்போர் இந்தக் பல்கலைக்கழகக் கும்பலின் கேவலங்களை அம்பலப் படுத்தி அவர்களை வீதிக்கு விரட்டி அடிக்கவேண்டுமே தவிர அவர்களின் விருதுகளில் மயங்கக்கூடாது. ஆவர்களின் இருப்பை நியாயப் படுத்தக் கூடாது. நோய்க்கு மருந்து கொடுக்கும்போது மருந்து கசக்கும் என்ற காரணத்தால் நோயாளிகளாகவிருப்பது முட்டாள்த்தனம்.

    கடவுளுக்குததான் கோயில் கட்டுவது, கள்வர்களுக்கல்ல, பண்புக்கும் படிப்புக்கும்தான் பல்கலைக்கழகம் பாலியற் சேட்டைகளின் மேடையாகப் பாவிப்பதற்கல்ல. thanks-thenee

    Reply
  • Nathan
    Nathan

    அருமையான கட்டுரை ஜெயபாலன்.
    உண்மையில் தமிழ் கல்விச்சழூகமே வெட்கப்பட்டு அழவேண்டிய நிலை. 30 வருட போர் அழித்ததை 3 வருடங்களில் கலாச்சாரம் அழித்து தமிழனின் வாழ்வே மண்ணோடு போய்விடும் நிலை. இதற்கு அரசோ புலியோ காரணம் என்பதை விட தமிழனே சக தமிழனை அழிப்பதை பார்த்து சாட்சிசொல்ல வேண்டிய நிலை.

    எந்தவிதமான பாரபட்சமும்இன்றி தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.; பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை பலமாணவிகளுடன் நெருக்கத்தை கொண்டிருந்தது பகரகசியம். ஆனால் அது பாலியல் தொடர்புவரைக்கும் போனதா என்பது கொஞசக்காலம் பல்கலைக்கழகம் போன எனக்கு தெரியவில்லை. அதே நேரம் சில மாணவிகளும் அந்த நெருக்கத்தை பயன்படுத்தி எம்மைவிட கூட புள்ளிகளும் பெற்றுக்கொண்டனர். எது எப்படியானாலும் இவ்வாராண சழூக விரோதிகள் களை எடுக்கப்படவேண்டும்.

    இதில் முக்கியம் என்னவென்றால் ப வி ஸ்ரீ ரங்கன் போன்றோர். தாங்களுக்கு அனீதி நிகழ்ந்தது என்பதற்காக இதுதான் நியதி என்று நிறுவமுயலும் முட்டாள்த்தனம். அதற்கு ஆதாரத்திற்கு திருச்சபை வேறு. ஸ்ரீ ரங்கன்!! நேற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே. தங்களின் தேவைக்காக தங்கள் உடலை பாலியல் ரீதியக பாவிப்பது வேறு பிற அளுத்தங்கலால் பாலியல் வக்கிரங்களை தாங்குவது வேறு. உங்களிற்கு நடந்தது இரணடாவது அதற்காக நான் மனம் வருந்தும் அதே நேரம் உங்களுக்காக நான் பரிதாபப்பட போவதில்லை. ஏனெனில் ஒன்றில் உங்களுக்கு நடந்த அக்கிரமத்தை எதிர்த்து போராடியிருக்கவேண்டும் இல்லை விதியே என்று நொந்து பேசாமலிருக்கவேண்டும். மாறாக உங்களுக்கு நடந்ததால் மற்றவருக்கும் நடக்கலாம் என்பதும் அதன்ழூலம் பதவியும் அதிகாரமும் இருந்தால் இந்த பேராசிரியர்களைவிட காமுகனாக இருபேன் என்று சொல்வதன்ழூலம் நீங்கள் எவ்வளவு பெரிய சழூக கறையான் என்பதை நிறுவியுள்ளீர்கள். இதன்ழூலம் இன்று பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியாக பதிக்கப்படும் பெரும்பாலானேர் இந்த ஸ்ரீ ரங்கன் போல் நாம் பாதிக்கப்பட்டதால் எனக்கு பிறகு வரும் சந்ததியினரும் படட்டுமே என்ற நிலைதான் எஞ்சும். இது சழூகத்திற்கு பல நுறு பாலசுந்தரம்பள்ளைகளையும் சண்முகலிங்கன்களையும் பரிசலிக்கும்.

    பர்தா தொடர்பன உங்கள் கருத்திகு முக்தர் மாயீ என்ற பர்தா போட்ட பெண் அதே பர்தா போட்டுவித்தவர்களால் ஊர்நடுவே நிர்வாணமாக்கப்பட்டு பல பேரால் பாலியல் வல்லுறுவுக்குள்ளாக்கப்பட்டதும் நடந்தது இதே குர்ரானை படிக்கும் நாட்டிலேதான். ஆக இனமோ மதமோ சாதியோ அல்ல தடை. மனிதரின் மனம் தான் தடை. அதிகாரத்தை கொண்டு பெண்ணை சுரண்டுவேன் என்று மார்தட்டும் உங்களை பெணணுரிமை பேசுபவர்கள் தான் காக்கவேண்டும்.

    சழூகமட்டத்தில் இந்த விளைவை இப்போ கண்கிறோம். ரோட்டில் எறியப்படும் குழந்கைள் அனாதரவாக NGO முன்னால் விடப்படும் குழந்தைகள் தெடங்கி பெருகிவிட்ட விவாகரத்துகழுடன் பெருகிவிட்ட உல்லாச விடுதிகள்வரை மக்களின் சழூகத்தின் மாற்றத்தை செல்கிறது. போரிற்கு பிற்பட் சழூகமாற்றமாக இதை கருதினாலும் இது ஏதொ ஓரு உளவியல் மாற்றத்தால் உண்டாகிறது. இதை பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்லாமல் சழூகமட்டத்திலும் தடுக்க முயல்வோமா?

    Reply
  • அனுஷா. B
    அனுஷா. B

    அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்.

    சைவ வேளாண் ஆணாதிக்கத்துவம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற வகையறாக்களை இந்த விவாத மன்றம் நிறையவே அலசி ஆராய்ந்து விட்டது. இந்த விடயம் வாதிடுவதற்கு சுவையானதுதான்… ஆனால், இது மட்டும் தான் தமிழ் சமூகத்தில் உள்ள ஒரே ஒரு புற்று நோய் என்று கொள்தல் முடியாது.

    மேற்படி அழிவு+மனித உரிமை மீறல் செயற்பாடுகளை தாராளமாகக் கட்டவிழ்த்து விட்டு பதவி மற்றும் அதிகாரங்களின் பின்னால் மறைந்து நின்று குளிர்காயும் சண்முகலிங்கன் இத்தியாதிகள் ஏன் இந்தக் கல்விச் சமூகத்தினுள் நுழைந்தார்கள் என்பதனை சற்று உசாவியறிதல் நலம்.

    உண்மையான தேடலும், ஆக்கபூர்வமான கருத்தியல்வாதமும், நெஞ்சுரமும் கொண்ட ஒரு கல்வியாள சமூகம் ஏன் யாழ் மண்ணில் வேரூன்றி வளர முடியவில்லை?

    சமூக விரோதிகளை கல்விமான்கள் என்று போற்றி் கைகட்டி வாய்பொத்தி நின்று சலாம் போடும் சாதாரண பாமரர்களுக்கு விடிவுதான் எப்போது?

    மேற்படி கேள்விகளுக்கு எவராவது விடை சொல்வார்களா?

    Reply
  • Che. Yalpanan
    Che. Yalpanan

    //உண்மையான தேடலும், ஆக்கபூர்வமான கருத்தியல்வாதமும், நெஞ்சுரமும் கொண்ட ஒரு கல்வியாள சமூகம் ஏன் யாழ் மண்ணில் வேரூன்றி வளர முடியவில்லை?// அனுஷா. B on September 27, 2010 7:49 pm

    Dear Anusha.B,
    A very good question indeed. However, the answer is simple.

    “the Sri Lankan Tamil speaking people have never had the opportunity to move in a productive direction under good leadership… If there was good leadership that had fostered sustainable socio-economical growth and resource management… the University of Jaffna would have been a center for academic excellence and ground-breaking research by now… all in all a leader in science and arts.”

    Have we (the Tamil speaking peoples of Sri Lanka) so far had any opportunity to have a good leader so far? why?

    If you can answer these questions – then probably we can find solutions to many issues that are affecting us.

    Shanmugalingan & Co are managing to survive because there is no real awareness amongst the Tamil community. If there was awareness, these anomalies would have been eliminated from the social system easily. To create awareness (that is to open up minds and thoughts) – a visionary leadership is needed. Neither Douglas Devananda nor Prabakaran can be considered a good leader. They are (themselves) the products of the anomalous factors in the system. They never had/have vision or sustainable ideals.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..இதை நிவர்த்தி செய்யும் ஆற்றல் டக்ளசுக்கு உண்டு என்று ஒரு சாதாரண தமிழன் எதிர்பார்க்கிறான்…..//
    யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த ஸ்ரீலங்காவில் கூட டக்ளசில் இவ்வளவு எதிர்ப்பார்ப்பு இல்லை. ஆனால் ஏதோ சாதாரண தமிழன் என அடைமொழி கொடுத்து தன்னையும் ‘சாதாரண’ தமிழனையும் ஏமாற்ற விழைகிறார் இவர்

    //…ஊழல் நிறைந்தவர்கள் கொடுக்கும் எந்த விருதிலும் எந்த மதிப்பும் கிடைக்காது…..//
    அமைச்சர் ‘விருது’ உள்ளடக்கமா இதில்?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    தாமிரா மீனாஷி! டாக்டர் பட்டத்தக்கு விளக்கம் சொல்லியிருந்தீர்கள். நன்றி. தரமான மாணவர்களை பல்கலைக்கழகங்கள் தயாரித்த அனுப்பியபின் அச்சமூகத்தில் விளைந்த விளைச்சல்களை மதிப்பிட்டுப் பட்டம் கொடுப்பது தவறே இல்லை. பல்கலைக்கழக நிழலே படாத பண்டிதர்கள் பலருண்டு. அவர்கள் செய்த அரிய பெரிய சாதனைகளுக்குப் பட்டம் கொடுப்பது தகும். நடிக்கவே தெரியாத நடிகர்களும் அரசியலே அறியாத அரசியல்வாதிகளும் டாக்டர் பட்டம் பெறும் நிலை தவிர்க்கப்படவேண்டும். பெயருக்கா பஞ்சம். வேறு ஒரு பெயரில் பட்டங்கள் கொடுப்பதுவே சிறந்தது. படிப்புக்கான டாக்டர் பட்டம் என்பது ஒரு சிறப்பு நிலை: தகுதி இதை மாசுபடுத்துவது கல்வித்துறையை மட்டுமல்ல மாணவர்களின் உழைப்பை மாசுபடுத்துவதாகவே கருதுகிறேன். இந்தமோசமான நிலை எமதுகாலங்களில் இலங்கையில் இருக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.

    Reply
  • Kanthan
    Kanthan

    Dear Che. Yalpanan and others including Jeyabalan, for your comments please:

    Prof. (Dr.) Illangkumaran, Associate professor in Economic Statistics, in his appeal to the University Service Appeals Board (USAB) as follows

    “Prof. K.Kunaratnam, then VC, on the influence of colleagues and students who were supporters and part-time activist of the LTTE making false allegation on “Examination offenses and indecent behavior towards the students” during May – June 1994, served me a letter calling for explanation…”

    Further, he stated:

    “The terrain of terrorism and virtually prevented to before the USAB of his un-suitably and improperly disciplinary dealt in 1997, due to the direct and indirect threats of the LTTE in Jaffna region until the recent past….”

    Also he stated in that appeal, he filed his writ application in the Court of Appeal during the period of 1997. How is it?

    I humbly request all the commentators, especially politically motivated commentators, to make comments on the above facts.

    Reply
  • நந்தா
    நந்தா

    கெளரவ கலானிதிப் பட்டங்களை வைத்தே தமிழர்கள் தமிழர்களை ஏமாற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கவில் அமெரிக்க சர்வதேச பல்கலைக் கழகம் என்று ஒரு கடை இருக்கிறது. 300 டாலர்களுக்கு பிஏ இல் இருந்து பீ எச் டீ வரை விற்பனை செய்கிறார்கள்.

    கனடாவில் கந்தவனம் என்பவர் அப்படிப்பட்ட ஒன்றை வாங்கி விட்டு அதற்கு “விருந்தும்” கொடுத்தார். கருணானிதிக்கும் அப்படிப்பட்ட ஒன்றே முதலில் அமெரிக்காவிலிருந்து போனது. எம்ஜி ஆர் அப்படி வந்த பட்டத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டு தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களை மிரட்டி அவர்களிடமிருந்து ஒர் “டாக்டர்’ பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு “டாக்டர்” பட்டம் வழங்குவது பாரம்பரியமாகிவிட்டது.

    அந்த வழியில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகமும் “டக்ளசுக்கு” தூண்டில் போடுவதாகவே தெரிகிறது. அல்லது என்னுடைய முதுகை நீ சொறி, உன்னுடைய முதுகை நான் சொறிகிறேன் என்று அரசியல் வாதிகளுக்கும், பதவி மோகம் பிடித்தவர்களுக்கும் இடையில்நடை பெறும் “வர்த்தகமா” என்பது புரிந்துள்ளது.

    யாழ்ப்பாண பல்கலைக் கழகம் வருவதை எதிர்த்தவர்கள் இன்று அதன் மூலம் யாழ்ப்பாணத்து மக்களின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டு தமிழர்கள் அறிவறறவர்கள், போக்கிரிகள் என்பதை உலகமெங்கும் பறை சாற்றி நிற்கின்றனர்.

    சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்படின் இந்த “தனிக் காட்டு ராஜா” விளையாட்டுக்கள் நிறுத்தபடும் சாத்தியங்கள் உள்ளதாகவே நம்புகிறேன்!

    அடிப்படை நேர்மை இல்லாதவர்கள் பொது சேவைகளுக்கும் லாயக்கில்லாதவர்கள்.

    ஜெயபாலனுக்கு இந்த ஆய்வை செய்தமைக்கு நன்றிகள்!

    Reply
  • நந்தா
    நந்தா

    டக்ளசுக்கு அமைச்சர் பதவி என்பது அவருடைய அரசியல் மூலம் கிடைத்த பதவியே ஒழிய பட்டம் அல்ல!

    என்றாலும் புலிகள் கொடுத்த லெப்டினன் கேணல், மாமனிதர் விருதுகள் போல டக்ளஸ் அமைச்சர் பதவியை அடையவில்லை!

    Reply
  • kumar
    kumar

    யாழ்.பல்கழைக்கழகத்தில் மெய்யியல் துறை விரிவுரையாளர் தேர்வில் குளறுபடி!
    இவர்கள் திருந்துவார்களா? இவர்களை திருந்துவார்களா?
    யாழ்.பல்கழைக்கழகத்தில் 17.09.2010 நடந்து முடிந்த மெய்யியல்துறை விரிரையாளர் தேர்வில்“முனி”அழைக்கப்படும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளர். இதன் பின்னனிதான்என்ன? இதுவும் “புத்தூர்புனிதரின்” சித்து விளையாட்டா?

    Reply
  • palli
    palli

    //என்றாலும் புலிகள் கொடுத்த லெப்டினன் கேணல், மாமனிதர் விருதுகள் போல டக்ளஸ் அமைச்சர் பதவியை அடையவில்லை!/
    உன்மைதான் ஆனால் இந்த கலாநிதி விருது பெறுவாரேயானால் பெண்களின் அவல நிலையை புரிந்து கொள்ளாமல் பணத்துக்காய் ( கலா வை ஒதுக்கிவிட்டு நிதி யை ஏற்றுகொண்டு) அல்லது முகத்துக்காய் மேலே புலிகள் பெற்ற பட்டத்துக்கும் இதுக்கும் பெரிதாய் விதியாசம் இல்லை, தேசியம் தான் வாழ பல பட்டம் அறிமுகம் செய்தது அதேபோல் கல்விமான்கள் புள்ளிமானகளை அனைக்க மறைப்பாக இந்த பட்டத்தை அமூல்படுத்த முனைகின்றனர்,

    Reply
  • Mahajanan
    Mahajanan

    யாழ் பல்கலைக்கழக மாணவர்களே

    கிளர்ந்து எழுங்கள். அடுத்த துணைவேந்தருக்கான விண்ணப்பம் அறிவிக்கப்பட்டு விட்டது. சண்முகலிங்கமிடம் தொலைபேசியிலழைத்து சுகம் விசாரியுங்களா பசங்களா.

    Reply
  • selvam
    selvam

    புத்தூர்புனிதர் சித்து விளையாட்டடில் மட்டுமல்ல சொத்து விளையாட்டிலும் புலியாம்.

    Reply
  • Che. Yalpanan
    Che. Yalpanan

    //தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள் அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain-Barre’ Syndrome’ பற்றியது.//

    மேற்படி சிண்ட்றோமின் காவிகளான சண்முகலிங்கன், கந்தசாமி, ஞானகுமாரன், அன்பானந்தன், காண்டீபன் போன்றவர்கள் – தாங்கள் மிகவும் சிறந்த குடும்பஸ்தர்கள் என்றும் காட்டிக் கொள்ள விளைவார்கள்.

    உதாரணமாக சண்முகலிங்கன் தனது விரிவுரைகளின் பெரும்பகுதி நேரத்தை தனது மனைவி மற்றும் புதல்வி பற்றிய வர்ணனைகளிலேயே செலவிடுவார். உண்மையில், சண்முகலிங்கனது குடும்பத்தினரின் நிலை பரிதாபமானதே!

    மாணவிகளையும் இளம் விரிவுரையாளினிகளையும் தனது மோகவலையில் விழ வைப்பதனையே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள இவர் – அண்மையில் வேர்ல்ட் யூனிவெர்சிட்டி சேர்விசஸ் கன்டா ஒன்றியத்தின் ஆலோசகராக யாழ் வந்த கனடிய பேராசிரியப் பெண்மணிக்கு முத்தம் கொடுத்து பரபரப்பையும் ஏற்படுத்தியவர். இப்படியாக சண்முகலிங்கனது துஸ்பிரயோகங்கள் அவர் சர்வதேச ரீதியில் செயல்படுகின்ற ஒரு உரிமை மீறலாளர் என்பதனை கண்ணூடு காட்டுகின்றன.

    சர்வதேச ரீதியிலான விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் பெறுவதை தலையாய கடமையாகக் கொண்டிருக்க வேண்டிய பேராசிரியரான சண்முகலிங்கன் ஆய்வுகளை விடவும் விரும்பி ஈடுபடுவது அவருக்கு கிளுகிளுப்பூட்டக்கூடியபுறக்கிருத்திய செயற்பாடுகளில் தான்.

    இதே போல வவுனியா வளாகத்தின் புவனேஸ்வரி. அதாவது ஊருக்கு படம் காட்டிவிட. அவருக்கு இளம் பெண்களைத் பல விதங்களில் தன் கட்டுப்பாட்டில் ஆட்டிப் படைப்பது தான் மிகவும் விருப்பம்.

    மேற்படியோரின் கோர்மோன் (hormone) அசமநிலைகளின் (imbalances) வெளிப்படுகள்தான் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. இவர்கள் உண்மையில் சமூக சீர்த்திருத்த அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு சீர்த்திருத்தப் பட வேண்டிய குற்றவாளிகள். These people need psychological counseling and medical treatment, as well as rehabilitation in isolation. If not, this will be a disease that affects the whole of the society in a big way.

    Reply
  • Ilankumaran
    Ilankumaran

    சண்முகலிங்கம் எவ்வளவு காலத்துக்கு உப்பிடியே நிக்கப்போறியள். இறங்குங்கோ. உங்கட தரப்பு நியாயத்தை சொல்லுங்கோ. நீங்கள் குற்றவாளியா சுற்றவாளியா?

    இளங்குமரன்

    Reply
  • M.Vatsala
    M.Vatsala

    Mr.Yalpanan why you have mentioned only puvaneswary? pls. mentio about manobavan & krishnakumar.

    as one of his wanted person was not got through the selection examination the Head, Dept. of Physicalscience, vavuniya campus cancelled the interview for selection. Shanmugalingan also accepted the head’s request.

    Reply
  • Veluppillai
    Veluppillai

    பாதிக்கப்பட்ட மாணவர்களே
    அமைதியான முறையில் புரட்சி செய்யலாம்
    உங்கள் மீது கொடுமை செய்தவர்களின் குடும்பத்தினரிடமும் அவர்தம் மனைவியாரிடமும் நெருக்குவாரம் கொடுங்கள்.
    தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஈ.பி.டீ.பி போன்ற அரசியல் கட்சிகளிடமும் உதயன் போன்ற பத்திரிகைகளிடமும் முறையிடுங்கள். மாணவர் சக்தி மகத்தான சக்தி. வீதிக்கு இறங்கிடுவீர். இனியொரு விதிசெய்வோம்.

    -வேலுப்பிள்ளை.

    Reply
  • Pratheepan
    Pratheepan

    M.Vatsala on September 29, 2010 3:15 pm,
    //as one of his wanted person was not got through the selection examination the Head, Dept. of Physicalscience, vavuniya campus cancelled the interview for selection. Shanmugalingan also accepted the head’s request.//

    The Head, Dr Krishnakumar, also appointed as Lecturer with the same procedure of Shanmugalingan by Balasuntharamoillai (then VC) and Balakrishnan (then Rector), so that he maintain the same protocol as it was in his case. Also, I wish to point out an important fact that, Krishnakumar was a Ph.d student of Prof. Ratnajeevan Hoole, and also a close associate of him.

    Further, Krishnakumar (along with others) held an Interview for Lecturer (Probationary) for a single candidate whom he was with 2nd class upper division as Computer Science Specialization (not an Honors Degree) while other candidates with 1st class in Computer Science Honors were not called for the Interview. Can anybody justify this irregularity?

    At the Interview Board Shanmugalingan, Vice Chancellor, Nanthakumaran, Rector, Kuhanesan, Dean, Krisnakumar, Head, Puwaneswary Loganathan, Head Dept. of Biological Science and two Council Members were there.

    Because of Krishnakumar, Prof Hoole name is allergic for most of them in the Vavuniya Campus, the reason is Krishnakumar is highly corrupted than Shanmugalingan. At this juncture I wish to point out the following from

    //தாமிரா மீனாஷி on September 26, 2010 10:47 am

    குட்டிச் சுவராகி விட்ட பல்கலைக்கழகத்தை மேலும் அதல பாதாளத்தில் தள்ளுவதெற்கென அடுத்த தலைமுறையும் தயாராகி வருகிறது என்பதை என்னால் அறியக் கூடியதாக உள்ளது. //

    Prof Hoole should consider this situation in the Vavuniya Campus also.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    கட்டுரையாளர் ஜெயபாலன் தொடக்கம் பதிவுகளிட்ட அன்பர்கள் அனைவரும் தாம் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறை காரணமாகவே இதனைச் செய்கிறார்கள் என்பதும் தனிப்பட்ட விருப்பு அல்லது சில நபர்கள் மீதான காழ்ப்புணர்வு காரணமாக இதனை செய்யவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்..ஆனாலும் இந்தக் கட்டுரை மற்றும் பின்னூட்டங்களினூடாக நாம் சில சமூக ஆய்வுப் பொருள்களையும் இனம் காண வேண்டும்..யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இன்று பரவலாகக் காணப்படுவதாக நாம் உணரும் இப் (பாதகப்) போக்குகள் இன்று மட்டுமா உருவாகின? தமிழ் சமூகத்தின் மிகப் பெரும் கல்வித்தூண்களாகக் கருதப்பட்ட கைலாசபதி, வித்தியானந்தன், இந்திரபாலா, சிவத்தம்பி ஆகியோர் கோலோச்சிய காலங்களிலும் இந்த நிலைமைகள் காணப்பட்டன என்பதை மறுக்க முடியாது….( தற்போதைய துணைவேந்தர் சண்முகலிங்கம் அபிவிருத்திக் கல்வி ( Development Studies) யில் பட்டம் பெற்றிருந்த போதிலும் சமூகவியல் (sociology) விரிவுரையாளராக பதவி நியமனம் பெறக் காரணமாக இருந்தவர் பேராசிரியர். கைலாசபதி.பேராசிரியர் துரைராஜா இயக்க உறுப்பினர்களை பல்கலைக் கழக நிர்வாகத்திலும், நிதியிலும் தலையிட வைத்து அவர்கள் கேட்காத பெரும் தகுதியை அள்ளி வழங்கி அவர்களை தம் நிலை அறியாத மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களிடம் உதவி பெற்றவர்…

    அப்படியானால் தமிழ் சமூகத்தின் கற்றறிந்தவரிடையே காணப்படும் குறைபாடுதான் என்ன? நியாயத்தின் பால் எழுந்து நின்று நெற்றிக் கண்ணைக் காட்டினும் க்ற்றம் குற்றமே என்று இவர்களால் ஏன் சொல்ல முடியாமல் போயிற்று? மேலேயுள்ளவர்களின் முன்னிலையில் கைகட்டிக் கூனிக்குறுகி நின்று அவர்தம் வீடுகளுக்கு அன்பளிப்புக்களுடன் பின் கதவால் நுழைவதும், அவர்களது கால்களைக் கழுவித் தண்ணீர் குடிப்பதும் தமிழ் சமூகத்தின் இரத்ததில் ஊறிப் போன ஒரு நியதியா? இதை யாராவது ஒரு கலாநிதிப் பட்டத்திற்கு ஆய்வு செய்ய வேண்டும்…!
    நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்… பல்கலைக்கழகத்தினுள் இயங்கும் ஒரு சில புல்லுருவிகளால் அங்கு கடமையாற்றும் ஒரு சில நல்லவர்களின் ( அவர்கள் மிகச் சிறுபான்மையாக மாறுகின்ற போதிலும்) மீதும் ஒட்டுமொத்தமான பழி சுமத்தப் படாமலிருக்க வேண்டும்.. அநியாயம் செய்பவர்கள் அதிகாரத்தைக் கொண்டிருப்பதால் பல்கலைக் கழகம் மூடப்படாமல் பாதுகாக்கப் பட வேண்டும்.. அதன் நிமித்தம் பல்கலைக் கழகம் எவ்வாறு நிர்வகிக்கப் பட வேண்டும் என்பது குறித்து அறிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்கும் திறந்த விவாதம் ஒன்று தொடக்கி வைக்கப்பட வேண்டும். விவாததின் பரிந்துரைகள் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்..பதவிகள் தரும் அதிகாரம் காரணமாக அப்பாவி மாணவர் பழிவாங்கப் படுவதில் இருந்து காப்பாற்றப் படல் வேண்டும்…

    Reply
  • Che. Yalpanan
    Che. Yalpanan

    //பல்கலைக்கழகத்தினுள் இயங்கும் ஒரு சில புல்லுருவிகளால் அங்கு கடமையாற்றும் ஒரு சில நல்லவர்களின் ( அவர்கள் மிகச் சிறுபான்மையாக மாறுகின்ற போதிலும்) மீதும் ஒட்டுமொத்தமான பழி சுமத்தப் படாமலிருக்க வேண்டும்..// தாமிரா மீனாஷி on September 30, 2010 12:20 pm

    These words by Thamira Meenashi are very very true..

    It is always the ‘good people’ who get eradicated (wiped out) and chased-out, whereas the villains (and unqualified) stay within the system – and, continue to make it work for them for personal benefits.

    There are people who accuse Prof Hoole and praise Shamugalingan..

    But the world knows very well who is who and what is actually the truth. Can the lousy Shanmugalingan who plays third grade politics, be equated with Prof Hoole? Of course not!

    But the sad situation is – Shanmugalingan is the vice- chancellor, where as Prof Hoole is a nobody (a complete outsider) to the university system in the north.

    I wish to quote Thamira again to end my statement :-

    //அநியாயம் செய்பவர்கள் அதிகாரத்தைக் கொண்டிருப்பதால் பல்கலைக் கழகம் மூடப்படாமல் பாதுகாக்கப் பட வேண்டும்..//

    On a lighter perspective Shanmugalingan has all the qualities to be the ‘vice’chancellor or the chancellor of all the vices.. vice in English means ill-deeds, acts of crime and etc.. Therefore, it is obvious that shanmugalingan is the chancellor of all vices. That is something Prof. Hoole is incapable of.. is it not?

    Reply
  • rajan
    rajan

    It is a disaster of our Tamil society these tragedy will continue till Balasundarampillai’s death

    Murugan
    From London

    Reply
  • Che. Yalpanan
    Che. Yalpanan

    //It is a disaster of our Tamil society these tragedy will continue till Balasundarampillai’s death // rajan on October 1, 2010 3:42 am

    பாலசுந்தரம்பிள்ளையின் காலத்துக்குப் பிற்பாடும் கயமை வழியில் செல்வதற்கு, அடுத்த இதேபோன்றதொரு சந்ததியும் தயாராக இருக்கும் போது… தமிழ் கல்விச் சமூகம் ஒரு நாளும் மேம்படாது போலவே தோன்றுகின்றது…

    சைவ வேளாண் ஆணாதிக்கர்கள், அதன்பின் ‘பாவனை செய்பவர்கள்’, அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறைகள் என்று தொடர்சங்கிலித் தாக்கமாக அழிவுப்பாதை நீண்டுகொண்டே போகின்றது…

    இவ்வகையானவர்கள் மத்தியில் ஹூல், முருகேசம்பிள்ளை போன்ற நல்லவர்கள் எள்ளி நகையாடப்பட்டு ஓரங்கட்டப்பட்டு மனமுடைந்து தொலைந்து போன கதைகள் ஏராளம்…

    சண்முகலிங்கன் முதல் புவனேஸ்வரி வரை – தமது சுயலாபங்களுக்காக மற்றவர்களை ஏய்த்தும், பயமுறுத்தியும், ஈனத்தனமாக துன்புறுத்தியும் பழக்கப்பட்டுவிட்ட ஒரு நிர்வாக இயந்திரம் மிகவும் உறுதிப்பாடுடன் யாழ் பல்கலையில் உளது.

    ஜெயபாலனும் இன்னபிறரும் ஏறத்தாழ 3 மாதங்களாக எழுத்துருவில் நடத்துகின்ற இவ்விணையப் போராட்டத்தின் தாக்குதல்களுக்கும் வீழாது, கர்வத்துடன் மேற்படி கயவர்களின் நிர்வாக இயந்திரம் தொடர்ந்தும்… கல்லாநிதிகளையும், களவுப் பேராசிரியர்களையும் உருவாக்கிக் கொண்டே போகின்றதென்பதும் நிதர்சனமே.

    எது, எவ்வாறாக இருப்பினும்… ஜெயபாலனின் முயற்சி பாராட்டத்தக்கது…

    இறுதியாக… “சில கணங்கள் பிந்தினாலும், தாமதப்பட்டாலும்… சரித்திரம் தன் கடமையைச் செவ்வனே செய்யும்” அஃதாவது… உண்மை நிச்சயம் வெளிப்படும் என்பதனை நினைவு கூரல் நலமே!

    தேசத்தினதும் (அதன் எழுத்தாளர்களினதும்) போராட்டம் தொடரட்டும்… ஆக்கபூர்வமான முறையில் விழிப்புணர்வு கிட்டட்டும்… மறுமலர்ச்சிக்கான காலம் மலரும் போற்தான் தெரிகின்றது… அதற்கு தேவை அறிவார்த்தமான பாதையில், தொடர் போராட்டமே…

    எப்போதுமே சிப்பாயின் போர்வாளை விடவும் எழுத்தாளனின் எழுத்தாணி மிக்க கூரியதுதான்… ஜெயபாலன் எழுத்தாணியை மிகவும் லாகவமாக, சரியான வழியில்தான் கையாளுகின்றார். பாராட்டுக்கள் நண்பரே!

    நன்றிகள்.

    Reply
  • Nirosh
    Nirosh

    யாழ் பல்கலைக்கழக துனைவேந்தரே நீங்கள் இவ்வளவு காலமும் பதவியில் இருந்தது போதும். வெளியில் இருந்து புது முகங்கள் வருவது விரும்பத்தக்கது.இதை விடுத்து தாங்கள் தொடா;ந்து இருப்பது புத்திஜீவிகள் உருவாவதை தடுப்பதாக அமைகிறது.

    Reply
  • nila
    nila

    நீங்கள் எழுதுகின்ற விடயங்களையெல்லாம் பார்த்து போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அவருடன் நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் எந்த அணியுடன் சேர்ந்து போட்டியிட்டால் மாகாண அமைச்சாராகவாவது வரலாம் என்று ஆராய்ந்துவரும் பாலசுந்தரம் பிள்ளையாருக்கு நீங்கள் இலவச விளம்பரம் செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்பதே அவரது மகிழ்ச்சிக்கு காரணமாம். தான் உபவேந்தராக இருந்தபோது தீவுப்பகுதியாருக்கு எதுவுமே செய்யவில்லை. ஆனால் நீங்களோ அவர் தீவாருக்கு பதவிகளைக் கொடுத்ததாக எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள். அவருக்கு இதனால் தீவுப்பகுதியிலும் வாக்குகள் வந்து குவியப்போகின்றன.
    அதுமட்டுமல்ல, தன்னை மோசடிக்காரன், காமவெறியன் என்று எழுதினால் அதுவும் வாக்குகளை வாங்கித்தரும் என்கிறாராம். கடந்த தேர்தலில் யாழ்ப்பாண மக்களிடம் பகல்கொள்ளையடித்த சப்றா சரவணபவான் வெற்றிபெற்றதை உதாரணம் காட்டுகிறாராம். மண்டையன்குழு புகழ் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறித்து எதிரணியினர் எப்படியெலல்hம் பிரச்சாரம் செய்தபோதிலும் அவரைத்தானே தமிழ்மக்கள் தெரிவுசெய்தார்கள். எனவே தன்னைப்பற்றி இப்படிவருகின்ற எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் தனக்கு சாதகமாகத்தான் வரும் என்று பேராசிரியர் மகிழ்ந்துபோயிருக்கிறாராம்.

    Reply
  • Venu
    Venu

    நீங்கள் விடுக்கப்பட்ட தகவலில் கருத்து வேறானது கே.கணேஸ். அவர் கடமையுணர்வாகவே இருநதவர். அவரைப்பற்றி நீங்கள் குறை சொன்னாலும் யாழ்ப்பாண எம் மக்கள் குறை சொல்லமாட்டார்கள்.

    Reply
  • visakan
    visakan

    செஞ்சொற்செல்வர் என அழைக்கப்படும் ஆறு.திருமுருகன் தொடர்பாக நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் வரவேற்கத்தக்கது மேலும் அவர் செய்யும் ஊழல்களையும் (சிவபூமி அறக்கட்டளை தொடர்பான குறிப்பாக அது இயங்கும் ஊர் பெயரைக் கூட சரியாக போட விரும்பாதவர் சிலருக்காக கும்பிடு போடுபவர்) மக்களுக்கு வெளிக்கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்

    Reply
  • thamilan
    thamilan

    தற்போது யாழ் குடாநாட்டில் அதிபர் நியமனங்களில் பெரும் மோசடி இடம்பெற்று வருகிறது. அதாவது இன்று அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு புதிய அதிபர் நியமனங்களின் போது அதிபர் தரம் உள்ள எத்தனையோபேர் இருக்கும் போது அதிபர் தரத்திலேயே இல்லாத பலருக்கு பதவிகள் வழங்கப்படுகின்றதை காண்கிறோம். இதற்கு ஆன்மீகவாதி என்று அழைக்கப்படும் ஆறு.திருமுருகன் நியமனத்தை உதாரணமாக குறிப்பிடலாம். இதில் தற்போது பதவி உயர்வு பெற்றிருக்கும் ப.விக்கினேஸ்வரன் போன்ற மோசடிக்காரரே காரணமாகும். இவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு இடங்கொடுப்பதையும்(ஆன்மீகவாதி உட்பட) காணமுடிகிறது. இப்படியான சமுக விரோதிகளை தயவுசெய்து மக்களுக்கு வெளிக்கொணர்ந்து மக்களை விழிப்படையச் செய்யுமாறு ஆசிரியரை வேண்டுகின்றேன்.

    Reply
  • thayalan
    thayalan

    உங்கள் தகவல்களை பார்த்தால். எம்மவர்கள் யாரும் பதவிக்கு வரக்குடாது போல. நீங்கள் குறிப்பிட்வை பொய்யென கூறவில்லை தங்கள் கருத்துக்கு வரவேற்கிறேன். ஆறு.திருமுருகனை பற்றி வருவோம். இடம்பெயர்ந்து நாம் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது யாழ் பல்கழைக்கழக மாணவர் நிர்கதியாக்கப்பட்டபோது எம்மை அழைத்து உதவியவர். எமது நாட்டில் இப்போது எம்மால் எதுவுமே செய்யமுடியாது என்பது தங்களுக்கு நன்கு தொயும். எனவே நாடப்பவை எதிப்பதனால் பாதிக்கப்படபோவது ஈழத்து மக்கள் தான். எனவே இவர்களுக்கு மாற்றிடாக நீங்கள் யாரை இடலாம் என கூறுகின்றிர்கள். எனவே பிழையாகவிரந்தாலும் எமது இக்கட்டான நிலையை உணருங்கள். எமது வன்னியால் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு மாணவர் உதவிதொகை நீங்கள் வழங்குவீர்களாக விருந்தால் உதவிபெறு வதை ஆறு.திருமுருகனிடமிருந்து நிறுத்துகின்றோம். உறவுகளை இழந்து துடிக்கும் எங்களுக்கு விளக்கேற்ற வருவீர்களா?

    Reply