யாழ். பல்கலைக்கழகத்தை விஸ்தரிக்க இந்திய உதவியை நாடும் அமைச்சர் எஸ். பி.

jaffna-university.jpgயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மொன்றை அமைக்கவும் விவசாய பீடத்தை விஸ்தரிக்கவும் இந்தியாவின் உதவியைப் பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமைச்சர் திஸாநாயக்க, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபிலை நேற்று முன் தினம் (28) சந்தித்தார். அப்போதே மேற்குறித்த விடயம் தொடர்பாக அவர் இந்திய அமைச்சருடன் பேசினார்.

அத்துடன் பிரபல இந்திய பேராசிரியர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவர்களது விடுமுறை நாட்களில் இலங்கை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றும் வாய்ப்பு பற்றியும் அமைச்சர் திஸாநாயக்க ஆராய்ந்து வருகிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப் பட்டால் தற்போது பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறும் வட மாகாணத்தை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பிரதேச அல்லது பிராந்திய அடிப்படையில் யாழ். பல்கலைக் கழக பொறியியல் பீடத்திற்கே அனுப்பப் படுவார்கள்..புதிதாக ஆரம்பிக்கப்படும் பொறியியல் பீடம் தரமான ஆசிரியர்களையும் ஆய்வு உபகரணங்களையும் கொண்டிராவிடின் அது ஒப்பீட்டளவில் அறிவுரீதியில் பின் தங்கிய பொறியியலாளர்களையே உருவாக்கும்.. எனவே இந்திய அரசின் உதவியைப் பெறும்போது இந்தியாவின் சிறந்த பொறியியல் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இந்த பொறியியல் பீடம் உருவாக்கப் பட வேண்டும்..அவர்கள் செயல்படுத்தும் ஆய்வு முறைகள், பாடத்திட்டங்கள் என்பனவும் யாழ். பொறியியல் பீட மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அறிமுகம் செய்யப்பட வேண்டும்.. முதன் முதலில் வெளியேறும் பொறியியல் பட்டதாரிகளின் அறிவும் ஆற்றலும் இலங்கையின் ஏனைய பல்கலைக் கழக பட்டதாரிகளுக்கு சமமானதாக அமையுமாறு கவனிக்கப் படல் வேண்டும்..இதன் மூலம் வெளிப்பார்வைக்கு நன்மையாக தெரியும் ஒரு விஷயம் தமிழ் சமூகத்திற்கு உண்மையில் நஷ்டம் தருவதாக அமையும் அபாயம் தடுக்கப் படல் வேண்டும்..யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ, விவசாய பீடங்களுக்கு ஏற்பட்ட அவலம் பொறியியல் பீடத்திற்கும் ஏற்படக் கூடாது..

    Reply