சரத் பொன்சேகாவிற்கு ‘மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை’ ஜனாதிபதி அங்கீகாரம்.

sf.jpgமுன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவிற்கெதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத்பொன்சேகாவின் வழக்கை விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத்பொன்சேகாவிற்கு ஆகக்கூடியது மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக தீhப்பளித்தது. இதனையே ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா.சபையின் 65வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று 29ம் திகதி காலை நாடு திரும்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments