யாழ்ப்பாணத்தில் டெங்குநுளம்பை ஒழிக்க ‘பக்றீரியா’

யாழ். குடாநாட்டில் டெங்கு நுளம்பை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக கழிவு நீர் அகற்ற முடியாத இடங்களில் டெங்கு நுளம்புகளுக்கெதிரான ‘பக்றீரியா’ பயன்படுத்தப்படவுள்ளது. கழிவு நீர் வாய்க்கால்களுக்கு தெளிப்பதற்கான இந்த ‘பக்றீரியா’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி. திருமகள் சிவசங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் டெங்கு நோயை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள போதும், அதனை முற்றாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதெனவும், அடுத்து வரப்போகும் மழைக்காலத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான ஆபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மத்தியில் டெங்கு நொய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *