வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவி.

வடமராட்சிக் கிழக்கில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், அப்பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உதவிபுரியம் என்றும், அதற்கு பல நிறுவனங்கள் முன்வந்தள்ளன எனவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே.தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கிலுள்ள பத்து கிராமசேவையாளர் பிரிவுகளிலுள்ள 915 குடும்பங்களுக்கு யு.என்.டி.பி, சோஆ, போரூட், பாஸிக், சேவ் த சில்ட்ரன் ஆகிய நிறுவனங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிறுவனங்களின் செயற்திட்டத்திற்கு ஜனாதிபதி விசேட செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஸிக் நிறுவனம் 202 மீன்பிடி வலைகளையும், 85 படகுகளையும், 85 வெளியிணைப்பு இயந்திரங்களையும், 70 கட்டுமரங்களையும் வழங்க முன்வந்துள்ளது. போரூட் நிறுவனம் 342 மீன்பிடி வலைகளை வழங்க முன்வந்துள்ளது. சோஆ நிறுவனம் 100 தெப்பங்களையும், அதற்கான மீன்பிடி வலைகளையும் வழங்க முன்வந்தள்ளது. இதே போன்று ஏனைய நிறுவனங்களும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *