வன்னிப் பாடசாலைகளில் வளப்பற்றாக் குறைகள்.

வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் காணப்படுவதோடு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பற்றாக்குறையாகவுள்ளனர்.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் கல்வியை மேம்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகளில் கூட ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் தட்டுப்பாடாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போரின்பின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் நிலையில் வன்னிப்பகுதி பாடசாலைகளில் கற்பிக்கும் பல ஆசிரியர்கள் தினமும் யாழப்பாணத்திலிருந்தே வன்னிப்பகுதிக்கு கடமைக்கு பஸ்ஸில் வந்து செல்வதாகவும் இதனால் இவர்களின் கற்பித்தல் பங்களிப்பு குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *