மரணச் சான்றிதழ்களை வழங்கும் சட்டமூலம் நாளை பாராளுமன்றில்

Certificate_of_Deathயுத்தத்தி னாலும் ஏனைய பயங்கரவாத சம்பவங்களாலும் உயிரழிந்தவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான மரணப் பதிவுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மரணத்தைப் பதிவு செய்யும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின்படி யுத்தத்தினால் அல்லது, பயங்கரவாத நடவடிக்கைகளினால் உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் விண்ணப்பிக்க முடியும். ஒருவர் காணாமல் போய் ஒரு வருடம் கடந்த பின்னர் அவருக்கான மரணச் சான்றிதழுக்கு உறவினர் விண்ணப்பிக்கலாம்.

அத்துடன், கொல்லபட்ட, காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் உறவினர்களும் மரணச் சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன இச்சட்ட மூலத்தை நாளை செவ்வாய் கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இச்சட்டமூலம் நிறைவற்றப்பட்ட பின்னர் யுத்தம் மற்றும் காணமாமல் போன அரசாங்க ஊழியர்களின் பெற்றோர் உறவினர்கள் இழப்பீடுகள் மற்றும், அரசின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *