ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் பனை மரங்கள் வெட்டத் தடை.

Panai_Marangalஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பனை மரங்கள் வெட்டப்படுவதற்கும் அவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் பனை அபிவிருத்திச் சங்கத்திடம் அனுமதி பெற்றுக்கொள்வது அவசியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் 50 ஆயிரம் பனம் விதைகளை நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *