நேற்று மீள்குடியேறச் சென்ற யாழ்.கொழும்புத்துறை வலன்புரம் மக்களை படையினர் அனுமதிக்கவில்லை.

யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த வலன்புரம் பகுதி மக்கள் நேற்று சனிக்கழமை தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறச் சென்ற போது படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக சென்ற குறித்த பகுதி மக்கள் அப்பகுதிகளில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் அப்பகுதிகளில் குடியேற படையினர் அனுமதிக்கவில்லை.

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களில் குடியேறி வாழும் விருப்பத்துடன் அப்பகுதிகளில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். அப்பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அதன் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான ஒழங்குகளை ஏற்படுத்தித் தருவதாகவும் படைத்தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் திரும்பிச்சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *