நெல்லியடியில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரிப்பு. 15 சைக்கிள்கள் பொலிஸாரினால் மீட்பு!

யாழ்.வடமராட்சி நெல்லியடிப் பகுதிகளில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து வருவதாக பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தடுப்பதற்கு பொலிஸார் தற்போது துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் களவு போன 15 சைக்கிள்கள் மேற்படி பொலிஸ் குழுவினரால் மீடக்கப்பட்டுள்ளன. மீட்க்கப்பட்ட இந்த சைக்கிள்களை அதன் உரிமையாளர்கள் அடையாளம் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பாக அதிகளவிலான முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்தமையை அடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவினரே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *