காணாமற் போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் பிரதேசசெயலகங்கள் ஊடாக பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மேலதிக பதிவாளர் நாயகம் என். சதாசிவம் ஐயர் தெரிவித்துள்ளார்.
கடந்த போர்க்கால சம்பவங்களின் போது காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு நடாளுமன்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது சட்டநடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதும் அது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசு வெளியிடும். அதனைத் தொடர்ந்து விரைவில் காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்கள் பதிவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொள்வது பொருத்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.