யாழ். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உரிமையாளர்களில்லாத, பராமரிப்பற்ற காணிகளை நல்லூர் பிரதேசசபை கையேற்கவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான காணிகளின் முன்பாக ‘இக்காணி பிரதேச சபையினால் கையேற்றக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது’ என்ற வாசகங்களடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகன்றன.
இதேவேளை, டெங்கு ஒழிப்பைக் கவனத்தில் கொண்டு காணிகளிலுள்ள பற்றைகளை உரிமையாளர்கள் துப்புரவு செய்ய வேண்டும் எனவும் நல்லூர் பிரதேசசபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது,