வடமாராட்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்காதவர்கள் எழுத்து மூலம் சாட்சியங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிப்பு.

கடந்த 13ஆம் திகதி வடமராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக நடைபெற்ற சாட்சியங்களில் கலந்து கொள்ளாதவர்கள் தங்களது சட்சியங்களை எழுத்து மூலமாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்பிட்ட அமர்வில் சாட்சியமளிக்க முடியாமல் போனவர்கள் தங்களது சாட்சியங்களை எழுத்து மூலமாக தங்கள் பிரிவின் கிராமசேவையாளர் மூலம் உறுதிப்படுத்தி பிரதேசச் செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *