யாழ்ப்பாணத்தில் காலம் கடந்த பிறப்புப் பதிவுகளுக்கு நடமாடும் சேவை.

யாழ்.மாவட்டத்தில் காலம் கடந்த பிறப்புகள் பதிவு தொடர்பாக நடமாடும் சேவை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த நடமாடும் சேவைகளுக்கு பிள்ளைகளுடன் தாய்மார்களே 95 சத வீதம் வருகை தருவதாகவும் தந்தைமார் வருவதில்லை எனவும் பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர் தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தையரின் விபரங்களைப் ஆவணங்கள் மூலமாகப் பெறுவதில் நேர விரயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தந்தைமார் பிள்ளைகளுடன் வரும்பொழுது அவர்களது கையெழுத்துடன் பதிவுகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும். காலம் கடந்த பிறப்புப் பதிவுகளை மேற்கொள்ளும் போது தந்தைமார் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *