வவுனியாவில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வுவனியாவில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திலேயே இவ்விரு பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வுவனியா சேமமடுவைச் சேர்ந்த 22 வயதான பெண்ணொருவர் வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து காணமால் போயுள்ளதாகவும், நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் தொழில்புரியும் பெண்ணான ஜெயசீலன் ஜெயப்பிரவீனா (வயது 25) என்ற பெண்ணும் காலையில் தொழிலுக்குச் சென்ற வழியில் காணமால் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாத்தில் இடம்பெற்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ள சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *