கிளிநொச்சியில் வாகன சாரதிகளிடம் தீவிரமாக இலஞ்சம் பெறும் பொலிஸார்!

கிளிநொச்சியில் போக்குவரத்துக் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் பொலிஸார் சிலர் உள்@ர் வாகன ஓட்டுநர்களிடம் இலஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் கடந்த காலத்தின் யுத்தசூழல் காரணமாக வாகனங்களின் ஆவணங்களை பலர் தொலைத்துள்ளனர் அவற்றை மீளப்பெறும் நடவடிக்கைகளிலும் அவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் பலர் சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றிருக்கவில்லை. இறுதிக்கட்டப் போரின் போது கைவிடப்பட்டு, தற்போது மீட்கப்பட்டுள்ள பல வாகனங்கள் திருத்தியமைக்கப்பட்டு வரும் நிலையில். அவற்றில் ‘சிக்னல் லைற்’ போன்றவை இயங்காத நிலையில் பலர் பாவனைக்குட்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் ஏதோவொரு குறைப்பாட்டை அவதானித்து அவர்களிடம் இலஞ்சம் வாங்குவதில் குறித்த பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருதாக அவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பணமாக இலஞ்சம் பெறல், சம்பந்தப்பட்டவரை கடைகளுக்கு அழைத்துச்சென்று தாங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்துமாறு வற்புறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் குறித்த பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் கிளிநொச்சியில் இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *