குடாநாட்டில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு.

Muslim_IDPs_Get_Supportயாழ். குடாநாட்டில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி கிடைத்துள்ளதாக யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் மீள்குடியமர்ந்துள்ள 622 முஸ்லிம் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான உடனடிக் கொடுப்பனவாக இத்தொகை வழங்கப்படவுள்ளதாகவும். இதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு அவர்கள் முன்னர் வசித்து வந்த வெளி மாவட்டங்களிலுள்ள பதிவுகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *