யாழ்.வைத்தியசாலைக்கு சீன அரசின் நிதியுதவியில் ஐந்து மாடிக் கட்டடம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சீனாவின் நிதியுதிவியுடன் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அவசர சிகிச்சை, விபத்துச்சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு சீன அரசின் 775 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் இக்கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்ப்பிக்கப்பட உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தரஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.வைத்தியசாலையில் நவீன வசதிகளுடனான கட்டடம் ஒன்று அவசர சிக்கசசைப் பிரிவு விபத்துப் பிரிவுகளுக்கு இல்லாத நிலையால் நோயாளிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும், இது குறித்து சீன அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இச்சிகிச்சைப் பிரிவுகளுக்கு நவீன கட்டம் அமைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *