ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் நடவடிக்கைகளில் தாம் நம்பிக்கை கொள்ளவில்லை என என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இக்குழு உலகின் முக்கியமான நாடுகளின் முகவராகவே செய்படுவதாகவும் அவர் கூறினார். தற்போது மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கிலேயே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயங்கள் குறித்து தெரியாமல் விமல் வீரவன்ச போன்றவர்கள் இதற்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஐ.நா.செயலர் பான் கீ மூனுடன் இணைந்து இலங்கையில் இடம்பெற்ற போருக்கு ஆயுதங்களையும், நிதியுதிவிகளையும் வழங்கின எனவும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *