வடக்கில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு.

வடக்கில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அதிகளவு மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்.குடா நாட்டிலும் வன்னிப் பகுதிகளிலும் தாழ்வான நிலப்பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையிலுள்ளனர். வடக்கில் பல வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கியிருப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *