‘வழித்தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்து’ மாதிரி கொரோனா நிவாரணமும் விளம்பரம் தேடும் அரசியல் பிரமுகர்களும்

கொரோணாவுக்கு நிவாரணம் வழங்கி வோட்டு வாங்கும் வேட்டையில் அரசியல் பிரமுகர்கள் பலர் குதித்துள்ளனர். பாராளுமன்ற அரசியலுக்குச் சென்று மக்களது பல்வேறு குறைகளையும் தீர்ப்பதற்குப் பதிலாக ‘வழித்தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்து’ தங்கள் வாக்கு வங்கியை நிரப்பலாம் என்ற கனவில் இவர்கள் திரிகின்றனர். இவர்கள் வழித் தேங்காயைக் கூட, அது தேவைப்படுபவர்களுக்கு வழங்குகிறார்கள் இல்லை. இந்த சாதிய பிரதேசமான்கள் தங்கள் வோட்டு வங்கியை நோக்கியே உதவி என்ற பெயரில் கிள்ளித் தெளிக்கின்றனர்.

இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை கொரோணாவை பரப்பாமல் இருந்தால் போதும் என்றும் பலர் முணுமுணுக்கின்றனர். நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரில் பாஸ் எடுத்து வைத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் உலாவரும் இவர்கள் கொரோணாவைப் பரப்பிவிடும் அபாயம் உள்ளது.

இதுக்குள்ள தாங்கள் வாங்குபவர்களின் முகத்தை காட்டவில்லையாம் என்று அவர்களின் முகத்தில் இமோஜி போடுகிறார்கள். இதென்ன சன் பேப்பரில பேஜ் திரியில போடுற மாதிரி. ஒரு பாசல் குடுக்க போன நீங்கள் முதல்ல உங்கள முக்கையும் வாயையும் மைத்து எதையாவது கட்டுங்கோ. பார்சலோட கொரோனாவையும் குடுத்திடுவியல்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *